**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

நீங்கள் நிறையப் பேசுகிறவரா? நீங்கள் அடிக்கடி குறை சொல்வீர்களா?

>> Wednesday, February 28, 2007

நீங்கள் நிறையப் பேசுகிறவரா? நீங்கள் அடிக்கடி குறை சொல்வீர்களா?

பொருளாதார நிபுணர் : இந்தியா! என்ன ஒரு முன்னேற்றம். பொருளாதாரம் என்னம்மா வளருது?

சாதாரண பொதுஜனம் :ஆமா! ஆமா! சுவர்க்கத்தை நோக்கிப் போய்க்கிட்டு இருக்கு. அதனால் கடவுள்தான் காப்பாத்தணும்.

இதுபோல், சம்பந்தமில்லாமல் எதையாவது பேசிக்கொண்டேயிருப்பது, ஒரு மனக்குறைபாடு. பேசுங்கள். நன்றாய்ப் பேசுங்கள். அது விழிப்புணர்வை அதிகப்படுத்தும். அதே நேரத்தில், சுயக்கட்டுப்பாடு இல்லாமல் வாயிலிருந்து வந்ததெல்லாம் அளந்து விட்டுக் கொண்டிருந்தால், அது உங்களை விழிப்புணர்வின்மையில் ஆழ்த்தும்.

நீங்கள் அடிக்கடி குறை சொல்வீர்களா?

அம்மா : ராஜி, பெரியவனானா என்ன ஆவே?
ராஜி : மிருகங்களுக்கு வைத்தியம் பார்ப்பேன்...
அம்மா: ஏன்?
ராஜி : ஏன்னா! மிருகங்கள்தான் டாக்டர் பற்றிக் குறை சொல்லாது.

நான்கு பேர் சொல்லும் குறைகளுக்குப் பயப்படுபவர்கள்... இந்த ஜென்மத்தில் ஜெயித்ததாக சரித்திரமில்லை.

மற்றவர்கள் குறை சொன்னால், நீங்கள் நிச்சயம் குறைந்து போக மாட்டீர்கள்.

குறை சொல்வதை மிகைப்படுத்திப் பார்க்கும் பலவீனப்பட்ட மனம், பலமானால் யாரும் உங்களைப் பாதிக்க முடியாது.

நேருக்கு நேர் அசிங்கமாய்ப் பேசினால்கூட, அழகாய் அந்தச் சூழ்நிலையைக் கையாண்டு, அதனால் எந்தப் பாதிப்பும் அடையாமல், ஆனந்தமாக இருப்பீர்கள்.

அரவிந்தன் மிகவும் நல்லவர், உண்மையப் பேசுபவர். ஆனால் கோபக்காரர்.கண்ணனோ பொய் சொல்வதில் வல்லவர். மக்களிடம் மிகவும் சாந்தமாய்ப் பேசுவார்.
இவ்விருவரையும் இந்த மாறுபட்ட குணங்களால் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளுவதைவிட, முதலாமவரிடம் இருக்கும் கோபத்தை விட்டுவிடுங்கள். இரண்டாமவரிடம் இருக்கும் பொய்யை விட்டுவிடுங்கள்.

முதலாம் நபரின் நல்ல குணத்தையும், இரண்டாம் நபரின் நல்ல குணத்தையும் எடுத்க்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்யும்போது, அன்னப் பறவையாவீர்கள். அன்னப்பறவை, எவ்வளவுதான் பாலில் தண்ணீர் கலந்திருந்தாலும், பாலை மட்டும் குடிக்கும்.

இதேபோன்று உலகில் மற்றவரின் நல்ல கருத்துகளை
மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஆனந்தப் பறவையாக மாறுவீர்கள். ஆனந்தமாய்ச் சிறகடிப்பீர்கள்.

எனக்கு சக்தி குறைபாடு. உடல் அடிக்கடி சோர்வு அடைந்துவிடுகிறது. நான் என்ன செய்ய?

நீங்கள் சுட்டிக்காட்டும் சக்திக்குறைவு நிஜமானதல்ல.
உடல் சோர்வு உங்களை விட்டு ஓடிப்போகும் அளவிற்கு, சுறுசுறுப்பு உள்ளே நுழைய அனுமதியுங்கள்.

ஏதாவதொரு வேலையைச் செய்துகொண்டே இருங்கள். ஆனந்தம் பிறக்கும். அதில் புதிய சக்தியும் தோன்றும்.

மேலும் படிக்க... Read more...

தமது விருப்பங்களைத் திணிக்கும் பெற்றோர்களால் குழந்தைகள் மரணம்!

தமது விருப்பங்களைத் திணிக்கும் பெற்றோர்களால் குழந்தைகள் மரணம்!

புதுடில்லி, பிப். 14- தங்களின் குழந்தைகள் படிப்பிலோ, விளையாட்டிலோ சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் வருத்துவது அதிகரித்துள்ளது.
டென்னிஸ் விளையாட்டில் உலக சாம்பியனாக தன் மகள் ஆக வேண்டும் என்ற ஆசையால் தந்தை படுத்திய கொடு-மைக்கு டில்லியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் மாரடைப்புக்கு உள்ளாகி பலியாகி உள்ளான்.

டில்லியில் வசித்து வந்த பிஸ்வதீப் பட்டாச்சார்யா, மேற்கு வங்க மாநில அளவில் டேபிள் டென்னிஸ் சப் ஜூனியர் பிரிவில் நான்காம் இடத்தில் இருந்தான். அவனை உலக அளவில் சாம்பியனாக ஆக்க வேண்டு மென்பது அவனது தந்தையின் ஆசை. இதனால் ஓய்வே இல்லாமல் அவனை தந்தை பயிற்சியில் ஈடுபடுத்தினார்.

விளையாட்டில் சிறுதவறு நேர்ந்தாலும் பிஸ்வதீப்பை தந்தை அடித்து உதைத்தார். ஓயாத உழைப்பு மற்றும் அடி உதையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக பிஸ்வதீப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இது பற்றி அவன்தாய் கூறியதாவது: “பிஸ்வதீப்பை என் கணவர் நாள்தோறும் கொன்று வந்தார். சிறு தவறு செய்தாலும், கம்பு, பிளாஸ்டிக் குழாய், ஆகியவற்றால் அடிப்பார். அதே வலியையும் வேதனையையும் அவரும் உணர வேண்டும். அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.” இவ்வாறு அச்சிறுவனின் தாய் கூறினார்.

இதே போல் படிப்பிலும், மற்ற விளையாட்டுகளிலும், பிற துறைகளிலும் தங்களின் சாதனை புரிய வேண்டும் என்பதற்காக அவர்களைப் பெற்றோர் தண்டிக்கும் போக்கு அதிகரித்து வந்துள்ளது.

“பள்ளியில் இருந்து திரும்பியதும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும்படி என் தந்தை கூறுவார். நான் பாடகனாக வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், என் தந்தை நான் டெண்டுல்கரைப் போல வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்” என்று டில்லியைச் சேர்ந்த ராகுல் என்ற மாணவன் கூறினார்.

குழந்தைகளின் மீது அதிக சுமையை சுமத்தி நமது விருப்பங்களை அவர்கள் மீது திணிப்பதன் மூலம் அவர்களது உடல்நலமும், மன நலமும் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பும் மற்றும் யுனிசிப் அமைப்பும் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க... Read more...

உயிர் காக்கும் பழக்கம்

>> Tuesday, February 27, 2007

உயிர் காக்கும் பழக்கம்.

சுன்னத், சின்னத், சுன்னத் கல்யாணம், கத்னா என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு பழக்கம் ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதாகும். இது யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமயம் சார்ந்த ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இதை சர்கம்சிஷன் (Circumcision) என்று சொல்கிறார்கள்.
ஆனால் யூதர்களும் முஸ்லிம்களுக்கும் மட்டும்தான் இந்த பழக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பயன் அல்லது அவசியம் கருதி இதை செய்துகொள்ளும் மற்ற மதத்தினரும் உண்டு.

ஆனால் இதுகாறும் சமயம் சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கப்பட்ட ஒன்றுக்கு இப்போது விஞ்ஞானத்தின் ஆதரவு கிடைத்துள்ளது. அதுவும் மனித உயிரைக் கொல்லும் எய்ட்ஸ் என்னும் நோயிலிருந்து காப்பாற்றும் ஆற்றல் கொண்ட செயலாக இந்த 'சர்கம்சிஷன்' உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பை இது குறைப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவின் டொராண்டோவில் (Toronto) நடந்த சர்வதேச எய்ட்ஸ் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஹெச்.ஐ.வி. தொற்றுவதிலிருந்து நம்மைத் தடுக்கும் மிகச்சிறந்த வழியாக சர்கம்சிஷன் இருப்பதாக தான் நம்புவதாக முன்னால் ஜனாதிபதி பில் கிளிண்டன் கூறினார். இதை மதரீதியானதாகப் பார்க்கக் கூடாது என்றும் அவர் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

"பரிசோதனைகளுக்கு நல்ல பயன்கள் கிடைத்திருக்கும் பட்சத்தில், இந்நோயைத் தடுக்கும், மனித உயிர்களைக் காக்கும் ஆற்றல் மிகுந்த வழி காணப்பட்டுவிட்டது என்றே பொருள். நாம் அனைவரும் இங்கிருந்து போகும்போது இந்த முறைக்கு பச்சைக்கொடி காட்டியவர்களாக வெளியே செல்ல வேண்டும்" என்று அவர் கூறினார்.

"சர்கம்சிஷன் செய்து கொள்வதனால் முறையற்ற பாலியல் உற்வுகளால் விளையும் பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. ஆண்களுக்கு ஆண்குறியைப் பாதிக்கும் புற்று நோயும் (penile cancer), பெண்களுக்கு கழுத்துப் பகுதியில் பாதிக்கும் புற்றுநோயும் (cervical cancer) வராமல் தடுக்கப்படுகிறது. ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பையும் எய்ட்ஸ் ஏற்படும் வாய்ப்பையும் இது கணிசமாக கட்டுப்படுத்துகிறது. ஆனால் இது எய்ட்ஸுக்கு எதிரான முழு பாதுகாப்புக் கேடயமல்ல" என்கிறார் இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் பிரபல டாக்டர் கம்பம்பட்டி ஸ்வயம் ப்ரகாஷ்.

தென்னாப்பிரிக்க மற்றும் ஃப்ரெஞ்சு நாட்டு விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவுகள்தான் இந்த விவாதத்தையே தொடங்கி வைத்தன என்று கூறலாம். சர்கம்சிஷன் செய்து கொண்ட ஆண்களில் 60 விழுக்காட்டுப் பேருக்கு ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயம் குறைவாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தார்கள்.

கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் இது தொடர்பான மூன்றுவிதமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருப்பதாக உலகளாவிய ஹெச்.ஐ.வி. தடுப்புக் குழு (Global HIV Prevention Working Group) சமர்ப்பித்த அறிக்கை கூறுகிறது. சர்கம்சிஷன் செய்து கொண்டவர்களோடு சேர்ந்து வாழும் 7000 பெண்களுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பு குறைந்துள்ளதா என்று ஒரு ஆராய்ச்சி உகாண்டாவில் நடக்கிறது. இதன் முடிவுகள் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப் படுகின்றன.

25-லிருந்து 50 பேர்களுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றுவதை சர்கம்சிஷன் தடுக்கிற்து என்று கூறுகிறார் பாலியல் மருத்துவர் ஜி.சாமரம். ஆரோக்கியமான உடலுறவே 60-லிருந்து 70 விழுக்காடு வரை இந்த நோய் பரவாமல் காப்பாற்றும் என்றும் அவர் கூறுகிறார்.

"ஒவ்வொரு உடலுறவுக்குப் பிறகும் மர்ம உறுப்புகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். நோய் பரப்பும் கிருமிகளிலிருந்து இது காப்பாற்றும். ஆண்குறியில் சர்கம்சிஷன் செய்துகொள்ளும்போது முன்தோல் வெட்டி எடுத்துவிடப்படுவதால், பாக்டீரியா,வைரஸ் போன்ற கிருமிகள் தொற்றுவதற்கு மிகக்குறைந்த வாய்ப்பே உள்ளது" என்றும் அவர் கூறினார்.

"சர்கம்சிஷன் இந்த நோயைக் குறைக்குமே தவிர, ஒழித்து விடும் என்ற் சொல்ல முடியாது. இதைச் செய்து கொண்டால் யாரிடம் வேண்டுமானாலும் (தகாத) உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் செய்து கொண்டவர்களுக்கு ஏற்படலாம். இது செக்ஸை சட்டபூர்வமாக்குவதைப் போன்றதாகிவிடும்" என்கிறார் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தவறான பாலியல் பயன்பாட்டுக்கு எதிரான குழுவுக்குத் தலைவராக இருக்கும் என்.வி.எஸ். ராம்மோகன்.

-- வெள்ளி, டெக்கன் க்ரானிக்கிள், ஆகஸ்ட் 18, 2006.
NANDRI: NAGORE RUMI.

மேலும் படிக்க... Read more...

மறைந்து போகும் இமெயில் கடிதங்கள்

மறைந்து போகும் இமெயில் கடிதங்கள்

கேள்வி: அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் என் மெயில்களைப் படித்தவுடன் அவை மறைந்து போகின்றன. திரும்ப கிடைக்க என்ன செய்திட வேண்டும். இவ்வாறு மறையாமல் இருக்க எப்படி செட் செய்திட வேண்டும்?

பதில் : இது என்னுடைய கம்ப்யூட்டரிலும் ஏற்பட்டது. இதில் இன்னும் என்ன அதிசயம் என்றால் ஒரு முறை சர்ச் மேற்கொள்கையில் இந்த மறைந்த அல்லது அழிக்கப் பட்டுவிட்டதாக எண்ணப்பட்ட அனைத்து மெயில்களும் காட்டப்பட்டன.

இது விநோதமாக இருந்தாலும் இதற்கான தீர்வு எளிதுதான்.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் முதலில் View/Current View செல்லவும். பின் "Show all messages" என்பதனை செலக்ட் செய்திடவும். அநேகமாக முதலில் "Hide Read Messages" என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். தண்டர்பேர்ட் தொகுப்பிலும் இந்த மறைக்கும் மற்றும் மறைக்காத வசதி உள்ளது.

படித்த மெயில்களை மறைப்பது ஒரு வகையில் நல்லதுதான். அப்போதுதான் நீங்கள் படிக்காத மெயில்கள் எவை என்று தெரியும்.

ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிப்பிட்டுள்ள படி செட் செய்துவிட வேண்டியதுதான்.

மேலும் படிக்க... Read more...

மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்.

மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்.

மின்னஞ்சல் கடிதங்கள் இன்று ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாத தேவையாய் மாறிவிட்டன. வெளியூரில் விருந்தினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்குச் சென்றால் உபசரிப்பதற்காக கொஞ்சம் காபி தரட்டுமா? என்று கேட்பது போல "உங்கள் இமெயில் பார்க்கணும்னா இங்கேயே எங்க கம்ப்யூட்டர்ல செக் பண்ணிக்கிறீங்களா?என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது.

அந்த அளவிற்கு அனைவருக்கும் அன்றாடம் இமெயில் பார்க்க வேண்டியது அவசியமாகிவிட்டது. கடிதங்களை பேப்பரில் எழுதி கவர் வாங்கி மூடி ஸ்டாம்ப் ஒட்டி தபால் அனுப்புவது இப்போது எவ்வளவோ குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் நாம் அனுப்பும் இமெயில் கடிதங்கள் நம்முடைய பண்பையும் காட்டுவதாக அமைய வேண்டாமா?

பேப்பரில் எழுதும்போது எத்தனை ஒழுக்க முறைகளைக் கடைப்பிடிக்கிறோம். சரியாக வரவில்லை என்றால் எத்தனை பேப்பரைக் கிழித்து எறிந்து விட்டு பின் எழுதுகிறோம். அதே போல இமெயில் கடிதங்களை அமைப்பதிலும் எழுதுவதிலும் பல நல்ல வழிகளைக் கடைப்பிடித்தால் நல்லது.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. ஒரே இமெயில் கடிதத்தினைப் பலருக்கும் அனுப்புகையில் பெறுபவர் முகவரியில் அனைத்து முகவரிகளையும் அமைக்க வேண்டாம். தங்களுடைய இமெயில் முகவரிகளைத் தேவையின்றி அடுத்தவர்கள் அறிவதனை யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே பெறுபவருக்கான இடத்தில் (To:) உங்கள் முகவரியினையும் BCC என்ற இடத்தில் அனைத்து முகவரிகளையும் அமைத்து அனுப்பவும். BCC என்பது Blind Carbon Copy ஆகும்.

அதாவது நீங்கள் யார் யாருக்கெல்லாம் இந்தக் கடிதத்தினை அனுப்பி உள்ளீர்கள் என்று யாருக்கும் தெரியாது. அதனைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அதனைக் கடிதத்திலேயே தெரிவித்து விடலாம். இதனால் நீங்கள் பலருக்கு அனுப்பி உள்ளது மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் இமெயில் முகவரி மற்றவருக்குத் தெரிய வாய்ப்பில்லை அல்லவா!

2. கடிதத்தின் Subject என்ற பிரிவில் உங்கள் கடிதம் எதனைக் குறித்துள்ளது என ரத்தினச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் குறிப்பிடவும். இது கடிதங்களின் பட்டியலை உங்கள் நண்பர் பெறுகையில் கடிதம் எது குறித்து என்று அறிந்து அதற்கேற்ற வகையில் முக்கியத்துவம் தருவார். எனவே "Hi" or "Hello" or "Help" என்ற சொற்களை Subject பிரிவில் அமைப்பதனை அறவே தவிர்க்கவும்.

3. மிகப் பெரிய பைல்களை இணைப்பாகத் தருவதனைத் தவிர்க்கவும். இவற்றை இறக்கிட அதிக நேரம் எடுக்கும் என்பதாலும் அதற்கு இன்டர்நெட் இணைப்பிற்கான பணம் கூடுதலாகச் செலவழியும் என்பதாலும் உங்கள் நண்பர் எரிச்சல் பட்டு அதனைப் படிக்காமலேயே இருந்து விடுவார்.

எளிதாகச் செலவின்றி இறக்கம் செய்யக் கூடிய பிராட் பேன்ட் இன்டர்நெட் இணைப்பை எல்லாரும் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்படியும் ஒரு பெரிய பைலை இணைக்க வேண்டும் என்றால் இதற்கெனவே உள்ள Yousendit போன்ற தளங்களில் உங்கள் பைல்களை அமைத்து அதற்கான தொடர்பினை உங்கள் கடிதத்தில் தந்துவிடவும்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை இணைப்பாகத் தர எண்ணினால் அவற்றை ஸிப் செய்து அனுப்பவும். அப்போது தான் கடிதத்தினைப் பெறுபவர் அனைத்து பைல்களையும் பெறுவது உறுதிப் படுத்தப்படும். இல்லை என்றால் ஒன்று கிடைத்து ஒன்று கிடைக்காமல் போகலாம்.

5. எந்த இமெயில் கடிதத்தினையும் ஒருவர் மீது கோபத்தில் இருக்கும்போதோ எழுத வேண்டாம். அப்படியே உங்கள் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ள எழுதினாலும் உடனே அதனை அனுப்ப வேண்டாம். சிறிது காலம் கழித்து அனுப்ப அதனைத் திறந்து படித்துப் பார்க்கவும். நீங்களாகவே அந்த கடிதத்தினை மாற்றி எழுத முடிவு செய்வீர்கள்.

6. மின்னஞ்சல் கடிதத்தினைப் பெறுபவர் படித்துவிட்டார் என்ற சான்றினை நீங்கள் பெறும் வகையில் ஒரு கடிதத்தினை அனுப்பலாம். ஆனால் இது போன்ற பெற்றதற்கான அஞ்சல் ஒன்றைப் பெறும் வசதியைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. பெறுபவர் இது குறித்த ஆப்ஷன் விண்டோ ஒன்றைப் பெறுவார். பின் அதற்கு நேரம் ஒதுக்கி பதில் அளிக்க வேண்டும். எனவே அவர் அதனை விரும்ப மாட்டார்.

7. உங்களுக்கென தனிப்பட்ட முறையில் வரும் கடிதங்களுக்கு உடனடியாகப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பவும். ஏனென்றால் உங்களுக்கு கடிதத்தினை அனுப்பியவர் பதிலுக்குக் காத்திருப்பார்.

8. எப்போதும் மின்னஞ்சல் கடிதங்களை சுருக்கமாகவும் நேரடியாக விஷயத்தைத் தெரிவிப்பதாகவும் அமைத்திடுங்கள். இந்தக் கடிதத்தைப் படிக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நல்ல சுகத்துடன் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் என்று எழுதுவதெல்லாம் பேப்பரில் எழுதுவதற்குத்தான் சரி. மின்னஞ்சல் கடிதங்களில் இருக்கக் கூடாது.

9. கடித்ததை அனுப்ப பட்டனை அழுத்தும் முன் எப்போதும் கடிதத்தில் பிழைகள், இலக்கண தவறுகள் இருக்கிறதா என ஒரு முறை சோதித்த பின்னர் அனுப்பவும். தவறுகள் இருந்தால் நீங்கள் சீரியசாக அந்தக் கடிதத்தை எழுதவில்லை என்று உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை அக்கடிதம் ஏற்படுத்திவிடும்.

10. நீங்கள் ஏதேனும் மெயிலிங் லிஸ்ட்டில் இருந்தால் உங்கள் முகவரி, மொபைல் போன் எண்கள் ஆகியவற்றை அனைவரும் அறியும் வண்ணம் தருவதனைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட நபர்களை உங்கள் தனி மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளச் சொல்லி பின் தெரிவிக்கவும். அல்லது அவர்களின் தனி மின்னஞ்சல் முகவரியினைப் பெற்று தொடர்பு கொள்ளவும். ஏனென்றால் மெயிலிங் லிஸ்ட்டில் உள்ள எல்லாரும் நல்லவர்கள் என்றும் உங்கள் நண்பர்கள் என்றும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

மேலும் படிக்க... Read more...

தவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல் பொறுமையிழந்து......

>> Friday, February 23, 2007

தவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல் பொறுமையிழந்து......

பல் மருத்துவரிடம் அந்தப் பெண் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். ''இன்னும் சரியாகப் பொருந்தவில்லை, இந்த செயற்கைப் பல்... நானும் எத்தனை முறைதான் வருவது'' என நொந்து கொண்டவள், தன் பல்லைச் சரிசெய்யும்படி கூறினாள்.

பல் மருத்துவர் மிதமான குரலில், ''இதோடு மூன்று முறை உங்கள் பல்லை ராவி விட்டேன். இனி ஒருமுறை ராவினால் கூட அது உங்களின் வாய்க்கு நிச்சயமாகப் பொருந்தாது'' என்றார்.

அந்தப் பெண், ''வாய்க்குப் பொருந்துவதைப் பற்றி யார் கவலைப்பட்டது? நீங்க செய்த செயற்கைப் பல் என் முகத்துக்குப் பொருத்தமாக இல்லை'' என்று எரிச்சலோடு சொன்னாள்.

கடைசிவரை பல் மருத்துவர் ,''என் தொழில்படி நான் செய்தது சரிதான்'' என்று வாதாட, அந்தப் பெண்மணி ''யாருக்கு வேண்டும் உமது உபதேசம், என் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாததற்கு நீங்க கூறும் சப்பைக் கட்டு இது'' என்று வெறுப்போடு கூறிவிட்டு வெளியேறினாள்.
மனித வாழ்வில் பொறுமையைக் கடைப் பிடிக்கும் கலை கலைந்து போனதே, இது போன்ற சச்சரவுகளுக்குக் காரணம்.

சாதாரணம் போன்று தெரியும் இந்த சச்சரவுகள் தான், மனித நேயத்தை மறையச் செய்து கொண்டிருக்கிறது.

தவறுகள் தன்னிடமிருப்பது தெரியாமல் பொறுமையிழந்து, அது சச்சரவுகளாக வெடித்து உறவுகள் சிதறக் காரணம், ஆழ் மனதின் மந்தத் தன்மைதான்.

மேல் மனம் மட்டும் கொஞ்சம் விழித்துக் கொண்டிருப்பதால், அதிகபட்சம் திறமையாக வாக்குவாதம் செய்ய முடியும். வாதத் திறமையால் ஜெயித்து விட்டதாக நம்ப முடியும்.

ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஜெயித்தாலும், அது பெருந் தோல்வியே.

வாக்குவாதம் என்ற ஒன்று ஆரம்பிக்கும்போதே, உங்களைச் சுற்றி ஒரு சுமுகமற்ற சூழ்நிலையை உருவாக்கி விடுகிறீர்கள். இன்றைய நண்பர்களை நாளைய எதிரிகளாக மாற்றும் நாசவேலையில், உங்களை அறியாமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

வாக்குவாதத்தில் காலடி எடுத்து வைத்த முதல் அடியே தோல்விதான். இவை அனைத்திற்கும் காரணம், அடிமன மயக்கம்தான்.

உடலில் சேர்ந்துவிட்ட மதுவுக்குச் சமம் அடி மனதைப் பற்றிக் கொண்ட விழிப்புணர்வின்மை.

மது குடித்தவனின் மயக்கம் தெளிவிக்கப்படாதவரை, அவனின் அரைகுறை புரிந்து கொள்ளுதல்கள்தான் சரியென வாதிடுவான்.

மன மயக்கம் தெளிவிக்கப்படாத வரை உறவுகளயும், உலகையும் எப்போதுமே தவறாகப் புரிந்கொள்வதைத் தவிர்க்க முடியாது. சுற்றியிருப்பவர்களும் இதே மனமயக்கத்தில் சிக்கித் தவிர்ப்பார்கள்தான். எனவே...

யாரும் யாருக்கும் உதவ முடியாது. பார்வையற்றவன் மற்றொரு பார்வையற்றவனுக்கு வழி காட்ட முடியாது. நீங்கள்தான் உங்களுக்கு உதவ வேண்டும். கொஞ்சம் விழித்துக்கொண்டுள்ள மேல் மனதிலிருந்து அடிமனதைத் தெளியச் செய்யுங்கள்.

உங்களுக்குள்ளேயே வெகு காலமாக உறங்கிக் கொண்டிருக்கும் அடி மனதைத் தட்டியெழுப்புங்கள். மனதின் மயக்கம் மறந்துவிடும்.

உள்ளேயும், வெளியேயும் சுமூகமான சூழல் உருவெடுக்கும்.

மேலும் படிக்க... Read more...

மற்றவரை எளிதில் வசீகரிக்க.....

மற்றவரை எளிதில் வசீகரிக்க......
முன்னேற ஆராய்ச்சி செய்யுங்கள்

சண்டை என்றாலே அலர்ஜி... நான் சும்மாயிருந்தாலும் சீண்டிவிட்டு சண்டை வளர்க்கிறார்கள் என்று எத்தனை முறை நினத்திருக்கிறீர்கள்?

ஒருவருடன் பேசத் துவங்கினாலே, அது வீண் விவாதத்தில் கொண்டுபோய் விடுகிறது என்று ஒதுங்கியே இருக்கிறீர்களா?

மற்றவரை எளிதில் வசீகரிக்க, சுலபமான வழி இதோ உங்களுக்காக :

ஆழமான இந்த இரண்டு கருத்துக்களயும் ஆழ்ந்து சிந்தியுங்கள்

1. பேசிக் கொண்டிருக்கும் போதும், பேச்சைத் துவங்குவதற்கு முன்னும் அவர் இப்படித்தான் சொல்வார் என்று எந்த எதிர்பார்ப்பும், கற்பனையும் இல்லாமல் திறந்த மனதோடு கவனியுங்கள்.

2. அவர் இப்படிப் பேசுவது சரி, தவறு என மனதில் பிரித்து பாகுபடுத்திக் கொண்டிருக்காமல் முழுமையாகக் கவனியுங்கள்.

''அவரைப் போல் வருமா? என்ன கரிசனமா கேட்பார் தெரியுமா?'' என்று கேட்பது என்றாலே, அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்வீர்கள்.

மேலும் படிக்க... Read more...

தோண்டித் தோண்டி?? நோண்டி, நோண்டி ??

>> Thursday, February 22, 2007

தோண்டித் தோண்டி?? நோண்டி, நோண்டி ??

வாழ்விணையர்களுக்குள் அன்றாடம் சிறுசிறு பிரச்சினைகள் முளைப்பதும், வெடிப்பதும், முடிவதும் இயல்பானதுதான். இல்லையானால் அறிவுக்கும், வேலை இராது. உணர்ச்சிக்கும் தீனி கிடைக்காது! உறவும் `சவுத்துப்’ போனதாகி விடுமே!

என்றாலும், அது அதன் எல்லையைத் தாண்டும்போது, ஊதப்பட்டு, உப்பும் பலூன் மகிழ்ச்சியைத் தருகிறது என்பதற்காக ஊதிக் கொண்டே போனால், அது `டப்’பென்று வெடித்து ஒரு நொடியில் நம் மகிழ்ச்சியைக் காணாமற் போகச் செய்துவிடுமே!

நம் வீட்டு மழலைச் செல்வங்கள் இந்தப் பாடத்தை நன்கு அறிந்தவர்கள். எனவேதான் பலூனை நாம் ஊதும்போது அது பெருக்க, பெருக்க மகிழும் அதே குழந்தைகள், `போதும், போதும்’ என்று நமக்கே எச்சரிக்கை விடுவர்!

வாழ்விணையர்களை நண்பர்களாகவே கருதி நடந்திட்டால்தான் வாழ்க்கையின் முழு இன்பத்தை அவர்கள் பெற்று சுகமான வாழ் வையும், சுயமரியாதை வாழ்வையும் ஒன்றாக அனுபவிக்க முடியும் .
பிறரது உறவைப் போற்றும் நாம், அவர்தம் உரிமையையும் மதிக்கத் தவறலாமா?


`தனித்திரு’ என்ற தத்துவத்தை ஒவ்வொரு வரும், நாளில் ஒரு சில மணித்துளிகளை ஒதுக்கியாவது கடைபிடிப்பது பயன் தருவதாகும்!

தனிமையும், இனிமை தரும் பற்பல நேரங்களில் தனித்துச் சிந்தித்து, வேதனைகளாலோ, துயரத்தாலோ பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டு மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாக இருப்பின், மகிழ்ச்சியின் அருமை பெருமை நமக்குப் புரியாமலேயே போய்விடக் கூடும். எனவேதான், துன்பத்தையும் நாம் அனுபவித்தல் இயற்கையின் நியதிப்படியே நமக்கும் தேவையானதுதான்!

தனித்திருப்பதே எப்போதும் நல்லது என்று நாம் கூறமாட்டோம். அது `தனித்திரு’ என்பதை `தவிர்த்திரு’ என்று உணர்ந்து துடிக்கும் நிலை யைத் தருவதாகவும் கூட ஆகிவிடக் கூடும்.

வாழ்விணையர்களிடையே கூட `ரகசியங்கள்’ என்பவை ஒவ்வொருவருக்கும் இருக்கும், தனி வாழ்க்கை கூட்டு வாழ்க்கையான பிறகும் கூட இது தேவையா என்று சிலர் கேட்கக் கூடும் தேவையே ஓரளவுக்கு.

என்னதான் வாழ்விணையர்கள் `ஈருடல் ஓருயிர்’ என்று ஆனாலும், அவர்களும் ஒரு சில செய்திகளை மறைத்து வைத்து, வெளியிட வேண்டிய தக்க நேரத்தில் வெளியிட வேண்டிய அளவே வெளியிடுவது வாழ்க்கையில் முக்கியம் ஆகும்!

இதில் நம்மவர்களைவிட மேலைநாட்டவர்கள் நனி நாகரிகம் படைத்தவர்கள் என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!

தனது வாழ்விணையராக (மனைவியாக) இருந்தாலும்கூட, அவருக்கு வரும் கடிதத்தினை இவர் பிரித்துப் படிக்கமாட்டார். அது மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் (Contents) என்னவென்று அறியும் ஆவலையும்கூட துணைவர் பெற்றவராக இருக்கமாட்டார், கேட்கவும் மாட்டார்.

அப்படிக் கேட்பது அநாகரிகம் ஆகும். ஆனால், இங்கோ... கடிதம் என்ன? தொலைப் பேசி வந்தால்கூட, அது நமக்குச் சம்பந்த மில்லாதது என்றாலோ, தவறான அழைப்பு என்றாலோ கூட பல `கணவன்மார்கள்’ (எஜமானர்கள் என்று கருதிக் கொண்டவர்களைக் குறிக்கவே இச்சொல்லை எழுதுகிறேன்) துளைத்து எடுத்து விடுவார்கள்! சண்டை, தகராறு எல்லாம் வெடித்து தேவையற்ற நிம்மதியின்மையை அது உருவாக்கும் பேரபாயத்தில் முடியும்.

ஒட்டுக்கேட்பது எவ்வளவு தவறோ, அதைவிட மோசமானது இன்னொருவருக்குத் தெரியாமல் அவருடைய கடிதத்தைப் படித்து விட்டு, பிறகு அதை மீண்டும் ஒட்டி, ஒன்றும் தெரியாததுபோல வைத்துவிடும் பழக்கமும் சிலருக்க உண்டு.

தனிமை (Privacy) பற்றிச் சொல்லும்போது ஒருமுறை வின்ஸ்டன் சர்ச்சில் எழுதினார்: 56 ஆண்டு குடும்ப வாழ்க்கையை நான் சுமுக உறவுடன் வாழ்ந்ததற்குக் காரணமே தனித்தனி குளியல் அறைகள்தான் என்றார்! மிகுந்த நகைச்சுவை உணர்வுடையவர் அவர்!

அவரவரது தனித்தன்மை என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவரவர் தனிமையின் பாதுகாப்பும் (Right of Privacy) என்பதை நண்பர்களிடம் கூட நாம் மதிக்கப் பழகுதல் அவசியம்.

எவரிடத்திலும் அவராகச் சொல்லாத செய்தியை நாம் அவசர ஆர்வத்துடன் அறிந்துகொள்ளத் துடிப்பது அநாகரிகமாகும்.

நம்மோடு அன்றாடம் பழகும் பல நண்பர்கள் சிலரிடம் இந்த எதையும் (தோண்டித் தோண்டி என்பதைவிட) நோண்டி, நோண்டித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் மூக்கை நுழைத்து, வெறும் வாய்க்கு அவல் தேடி, அதையே பிறருக்கு அவசரமாகச் சொல்லி, கலகம் ஏற்படுவதைக் கண்டு மகிழும் ``கடமையாளர்களும்’’ உண்டு. இவர்கள் ``கடமையாளர்கள்’’ அல்லர் ``கயமையாளர்கள்’’ - கடைத்தர மனிதர்கள்.

அந்த ரகத்தில் சேரமாட்டோம் என்ற உறுதியுடன் வாழ்பவர்களே உயர்ந்த மனிதர்கள்.

மேலும் படிக்க... Read more...

தானங்கள் செய்வது நல்லதா?

>> Wednesday, February 21, 2007

ஒரு சாதாரண மனிதனுக்கும், ஒரு ஞானிக்கும் நடந்த உரையாடலின் தொகுப்பு இதோ:

தானங்கள் செய்வது நல்லதா?

நல்லது. ஆனால், தானம் செய்பவருக்கு அந்த தானங்களே ஆபத்தாகவும் திரும்பலாம்.

எப்படி?

தானமளிக்கும்போது, மனதளவில் நீங்கள் சிம்மாசனமிட்டிருப்பீர்கள். தானம் பெறுபவர் உங்களிடம் கையேந்துவார். இதனால் அகங்காரத்தை வளர்க்கும் வாய்ப்புகள்தான் அதிகம்.

அப்படியென்றால் உண்மையாய் உதவ நினப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

தானம் செய்யக்கூடாது. சேவை செய்ய வேண்டும்.

தானம், சேவை என்ன வேறுபாடு?

தானம், 'நான் கொடுக்கிறேன்' என்ற மறைமுக கர்வத்தை அச்சாணியாய் கொண்டது.

சேவை, 'மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா' எனும் பண்பை அச்சாணியாகக் கொண்டு செயல்படுவது.

சேவையின் மகத்துவம்?

சேவை செய்யும் போது மனதளவில் நீங்கள் ஒரு சேவகராக மாறியிருப்பீர்கள். உங்களைமறியாமல் எளிமைத்துவத்தை கடைப்பிடிக்க ஆரம்பிப்பீர்கள்.

சேவையை யார் செய்யலாம்?

திமிர்பிடித்தவன்கூட பத்து பைசாவை பிச்சைக்காரனுக்கு தூக்கியெறிந்து விட்டு... 'நான் தானம் செய்தேன்!' என காலரை தூக்கிவிட்டுப் பேசலாம்.

சேவை, சேவகனால் மட்டுமே சாத்தியம்.

அன்பு என்பது?

வெறுப்பு கலக்காத நேசம். எதிர்பார்ப்பு இல்லாத ஊக்கம்.

காமம், காதல், அன்பு ஒப்பிடுங்கள்.

காமம் ஹார்மோன்களின் குட்டி கலாட்டா.

காதல் உணர்ச்சிகளின் குட்டி கலாட்டா.

அன்பு உணர்வுகளின் சங்கமம்.

சந்தர்ப்பவசத்திற்காக பொய் பேசினாலும் அது அநீதிதானே?

பொய் என்பதே பொய். இதில் அநீதி எனும் பேச்சுக்கு இடமேயில்லை.

பொய்யே பொய்யா?

குடித்ததால் அடித்து சித்ரவதைச் செய்யும் குடிகாரன், ''என் மகன் உள்ளே ஒளிந்திருக்கிறானா?'' என கேட்கும்போது ''அவன் இங்கில்லை. முதலில், நீ இங்கிருந்து இடத்தை காலி செய்'' எனச் சொல்வதை அநீதி என்பதான் அநீதி. இங்கு பொய்யே பொய்யாகிறது

இன்னும் கொஞ்சம் விளக்குங்கள்?

ஒரு பாவமும் செய்யாத ஒருவனை ஒரு துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு சின்ன பொய் சொல்லலாம் என்றால் அதை பொய் என்று சொல்லத் தேவையில்லை.

உண்மை பற்றி...

மற்றவரை நோகடித்து, நாசம் செய்யவல்லை, ஒரு கிராம் பொய்கூட கலக்காத உண்மை, பேசும் பொய்யைவிட மோசமான அது அநீதி. இது பொய் பேச போடப்படும் தூபம் அல்ல. நீதி நெறிகளால் நெறிக்கக் கூடாது. என உணர்ந்தும் ஒரு முயற்சி.

ஏன் மனிதன் மீண்டும் மீண்டும் துன்பப்படுகிறான்?

இன்பத்தின் உச்சத்தை ஒருமுறை கூட தொடாததாலும், தொடர்ந்து தவறாகவே அதைத் தொட முயற்சிப்பதாலும் துன்பங்களில் விழுகிறான்.

நடக்கும்போது தியானம் செய்யுங்கள். ரோட்டில் நடக்கும்போதும், கடற்கரையில் நடக்கும்போதும் விழிப்புணர்வோடு இருங்கள்.

பூமியை மிதித்து மிதித்து நடக்காமல் மதித்து மதித்து நடக்கத் துவங்குங்கள்.

மேலும் படிக்க... Read more...

நாம் நாமாகவே இருக்க முயற்சிப் போம்

நாம் நாமாகவே இருக்க முயற்சிப்போம்.

(20.2.2007) ஆங்கில ஏடு ஒன்றில் வெளிவந்த விளம்பரத்தையொட்டிய ஓர் கதை; இது பழைய காலத்துக் கதை என்ற அறிமுகத்துடன் தொடங்குகிறது.

ஒருவருக்கு இரண்டு மனைவிகள்; அவர்களில் மூத்தவர் கணவனையொத்து சற்றுக் குறைந்த வயதினர் - மற்றொரு மனைவி இளைய வயதுடையவர்.

ஆண்டுகள் ஆக, ஆக, கணவருக்குத் தலை முடி வெளுக்க ஆரம்பித்தது - இயற்கைதானே! அவருடைய இளையதாரத்திற்கோ இவரைத் தன் கணவர் என்று சொல்லிக் கொண்டால் - இவர் கிழவர் என்பதுபோல தோற்றத்தில் தெரிந்து விடுவாரே என்று கருதி, இவர் தம் தலைமுடியில் எவை எவையெல்லாம் வெளுத்தவையோ அவற்றில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளாகப் பிடுங்கி விடும் பழக்கத்தினைக் கையாண்டாராம்!

இவருடைய மூத்த மனைவியாருக்கு இவருக்கு கருப்பு முடிகள் மட்டும் தெரிந்த நிலையில், தன் தலையில் வெளுத்த நரை முடிகள் காணப்படும் நிலையினால் கவலை கொண்டு, இருவரும் வெளியே போகும்போது, இவருக்கு நாம் மனைவி என்று கருதாமல், நம்மை இவருடைய தமக்கை அல்லது தாய் என்று பார்ப்பவர் நினைத்துவிட்டால் என்னாவது? என்ற கவலையில் சிக்குண்டு மீள முடியாது தவித்தார்.

பிறகு ஒரு முடிவுக்கு வந்தாராம்; வெள்ளை முடி மட்டும் இவருக்கு இருக்கும் வகையில், வெள்ளையாகாத கருப்பு முடிகளை நாம் ஒவ்வொன்றாக, ஒவ்வொரு நாளும் பிடுங்கி விட்டால், பிரச்சினை தீர்ந்துவிடுமே என்று நினைத்து, கருப்பு முடி ஒவ்வொன்றையும், பிடுங்கி எறிந்தாராம்; தலையில் பெண்கள் பேனும், சிக்கும் பார்த்து முடியை ஒழுங்கு படுத்துவதுபோல இதைச் செய்தாராம்!

இருவரது போட்டியினால், கணவன் இருவரையும் தடுக்காது, அவர்களுக்கு தாட்சண்யத்திற்காக இசைந்து கொடுத்ததன் விளைவாக, தலைமொட்டையாகி விட்டது நாளடைவில்!வெள்ளை முடியும் இல்லை, கருப்பு முடியை யும் காணோம்; மொட்டைத் தலை மட்டுமே மிஞ்சியதாம்!

இப்படி ஆளாளுக்கு அனுமதி கொடுத்து, பலருக்கும் வாய்ப்பு அளிக்க அவர் ஒப்புக் கொண்டதால்தான் இந்த அவல நிலை. ஆகவே, அளவுக்கு அதிகமாக பலருக்கும் தலையாட்டாதீர்கள்!

மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பளித்து இசைவு தருவது என்பதற்கும் கூட ஓர் எல்லை உண்டு என்று முடித்து, எங்கள் வங்கியை மட்டும் தேர்ந்தெடுங்கள். பல சேமிப்பு நிதிகளிலும் நீங்கள் பல பக்கமும் இருந்தால் பலம் தானே அது என்று நினைத்து கடைசியில் மோசம் போய்விடாதீர்கள் என்று அந்த விளம்பரத்தின் இறுதியில் ஒரு படிப்பினை போலச் சொல்கிறார்கள்!

இதைப் பொறுத்தவரையில், தத்துவ ரீதியாக சிந்தனையாளர் கூறும்போது, ``எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்; மற்றவர்களாக மாற விரும்பாதீர்கள். உங்கள் தனித்தன்மை தான் உங்களை என்றென்றும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அதை மறந்தால் மானிட சமுதாயத்தில் நீங்கள் சரியான ஓர் உறுப்பினராக இருக்கவே முடியாது’’ என்கிறார்!

பல பேர் பிறரைப் பார்த்து `காப்பி அடித்து’ அதுபோல் தாங்கள் இருந்தால் சிறப்புக் கூடும் என்கிறார்கள். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இது சரியான கருத்தல்ல என்று புரியும்!

மனிதனுக்குக் குரங்கு போல மற்றவர்களைப் பார்த்து APE செய்து அவர்களைப் போல `இமிடேட்’ செய்ய விரும்பு கிறான்.

அது தேவையற்றது. ஒவ்வொருவரின் திறமையும், ஆற்றலும் எப்போதும் தனித்தனி தான்! அதை மற்றவர்களோடு இணைத்து விடும்போது (Merge) அவர்கள் தான் வெளியே தெரிவார்களே தவிர, இவர்கள் அழுந்திப் போய் காணாமற்போய்விடக் கூடும்!

ஒவ்வொரு மனிதனின் மூளையும் ஏராளமான ஆற்றல் வாய்ந்த ``செல்’’களைக் கொண்டது; உள்ளுக்குள் திறமை, ஆற்றல், தனித்த சிந்தனை ஊற்று ஊறிக் கொண்டே இருக்கும். அதனை அறிந்து நாம் நாமாக இருக்க நாளும் முயற்சிப்போம்!

என்னதான் `குளோனிங்’ வெற்றி பெற்றாலும், அசல் அசல்தான்; நகல் நகல்தானே! இல்லையா?

எனவே, நாம் நாமாகவே இருக்க முயற்சிப்போம்; ஒப்பனைகளால், சாயங்களால் `மாயங்கள்’ ஏற்பட்டுவிடும் என்று நினைத்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தேவையற்ற எல்லா வகை விரயமும் ஆகும் என்பதை நண்பர்கள் உணர்வார்களாக!.

மேலும் படிக்க... Read more...

மனித உடலில் கடிகாரம்...

>> Tuesday, February 20, 2007

மனித உடலில் கடிகாரம்...

குறிப்பிட்ட நேரத்தில் காபி, உணவு, தூக்கம் என நிறைய பேர் மூளையில் செட் ஆகியுள்ளது. இதில் ஏதேனும் மாறுபாடுகள் தோன் றினால் கூட அவர்கள் உடலாலும், உள்ளத்தாலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மனித உடலில் ஏற்படும் இந்த நிலைக்கு நம்முடைய உடலில் ஓடிக் கொண்டிருக்கும் `சர்கார்டியன் ரிதம்’ என்னும் கடிகாரமே காரணம் ஆகும்.

தற்போது பிசினஸ் பிராசசிங் கால் சென்டர்கள் இந்தியாவிலேயே இயங்குகின்றன. இந்த கால் சென்டர்களில் பணி புரிபவர்களை சர்கார்டியன் ரிதம் கடுமையாக பாதிக்கின்றது. எனவே, கால் சென்டர்களில் இரவு முழுவதும் பணி புரிபவர்களின் சர்கார்டியன் ரிதம் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானப் பயண ஜெட்லாக்கினாலும் சர்கார்டியன் ரிதம் பாதிக்கப்படுகின்றது.

அமெரிக்க அய்ரோப்பிய நாடுகளில் இரவு வாழ்க்கை என்பது கேளிக்கைகளோடு தொடர்புடையதாக இருக்கின்றது. ஆசிய நாடுகளில் இரவு வாழ்க்கை என்பது பணி சார்ந்து இருக்கின்றது. மாறுபட்ட சூழ்நிலைகளில் சர்கார்டியன் ரிதம் செயலாற்றும் விதம் குறித்து ஒப்பீடு ஆய்வுகள் நடைபெறுகின்றன.

மாறி வரும் பொருளா தார சமூக சூழ்நிலைகளில் கால் சென்டர்கள் ஆசிய நாடுகளின் அன்னிய செலாவணிக்கு உதவுவதால் இது குறித்த ஆராய்ச்சிகளில் அய்ரோப்பிய நாடுகளை விட ஆசிய நாடுகளுக்கே அதிகப் பொறுப்பு உள்ளது.

மதிய வேளையில் சிறிதுநேரம் தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவு!

`பகல்லே படுத்துத் தூங்காதே. கெட்ட பழக்கம், இதுவே பழக்கமாயிட்டா உடம்பு பெருத்துப் போகும்! இந்த வசனங்களை பல வீடுகளில் கேட்டிருப்பீர்கள். ஆனால், ஆஸ்திரியா நாட்டு வங்கிகளோ, தங்கள் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் குட்டித் தூக்கம் போடவேண்டும் என்று ஊக்கப்படுத்தி வருகின்றன. இதன்படி மதிய சாப்பாட்டு வேளைக்குப் பிறகு 20 நிமிட நேரம் தூங்குவதற்கு வாய்ப்பு கொடுக்கின்றனர்.

தூக்கமின்மையால் பல்வேறு தவறுகள் ஏற்பட காரணமாகிறது. எனவே, குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால் உற்சாகம் ஏற்பட்டு, சுறு சுறுப்புடன் பணி செய்ய முடியும் என்கிறது வங்கி நிருவாகம். இதற்கு நரம்பியல் துறை வல்லுநர்களும் முழு ஆதரவு தருகின்றனர்.

மதிய உணவுக்குப் பின் கொஞ்ச நேரம் உடலை சாய்த்து கண்ணை மூடி ஓய்வெடுக்கும், `கோழித் தூக்கம்’ நல்லதா, கெட்டதா? 10 முதல் 20 நிமிட நேரம் இப்படி தூங்கினால், நல்லதுதான் என்கின்றனர் இங்கிலாந்து, `லப்பரா’ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜிம்கார்ன். தூக்கம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இந்தப் பேராசிரியர் ஜிம்கார்ன், இதுவும் ஒரு விதத்தில் உடம்புக்கு அளிக்கும் சிகிச்சை மாதிரிதான் என்றார்.

குறைந்தபட்சம் 10 நிமிடம், அதிகபட்சம் 20 நிமிடத்துக்குள் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மறுபடி வேலையைத் தொடர்கிறவர்களால் உற் சாகமாக தங்கள் பணிகளை கவனிக்க முடிகிறது என்பது இவருடைய கண்டுபிடிப்பு. இந்தக் குட்டித் தூக்கம் அதிகபட்சம் 20 நிமிடம் வரை நீடிக்கலாம், அதற்கு மேல் போனால், இரவு வழக்கமாக நாம் தூங்குவதற்கு உடல் தயாராவதைப்போல, மதியமும் தயாராகி விடுமாம்.

அமெரிக்காவில், குட்டித் தூக்கம் போடுவதற்கென்றே தனி அறைகள் ஒதுக்கி, 10 நிமிடத்துக்கு ஒருமுறை அலாரம் அடிக்கும் வசதியை செய்திருக்கின்றன சில நிறுவனங்கள்.

மதிய உணவுக்குப் பிறகு, தொடர்ந்து வேலை பார்ப்பவரை விட சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு வேலை பார்ப்பவர்கள் அதிவேகமாகவும், சிறப்பாகவும் செயல்பட முடிந்தது என்று ஆய்வில் தெரிய வந்தது.

இவ்வாறு செய்வதன்மூலம் உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கிறது. உள் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. நரம்பு மண்டலம் அமைதி அடைகிறது. உடல்நலம் மேம்பட்டு மூளையும், மற்ற உறுப்புகளும் சுறுசுறுப்பு அடைகின்றன.

பகல் உணவு உண்ட பிறகு உங்களுக்கு பதை, பதைப்பாக இருக் கிறதா? எரிச்சல் வருகிறதா? ஞாபக மறதி ஏற்படுகிறதா? பெரியவர் களானாலும் பிற்பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுவது நல்லது என்கின்றனர் ஜெர்மனிய உறக்க ஆய்வாளர்கள். இதனால், உடலுக் கும், மனதுக்கும் தேவையான சக்தி புதுப்பிக்கப்படுகிறதாம்.

தினமும், மதிய வேளையில் 20 நிமிடம் குட்டித் தூக்கம் போட்டு, `ரிலாக்ஸ்’ செய்பவர்களுக்கு, மாரடைப்பு வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றனர். இது சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கு இந்தத் தூக்கம் நோயின் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறதாம்.
இத்தூக்கம், அதைத் தொடர்ந்து 10 மணிநேரம் நம்மைப் புத்துணர்வுடனும், புது உற்சாகத்துடனும் வைத்திருக்க உதவுகிறதாம். மனச்சோர்வு, வேலையில் எரிச்சல் போன்றவற்றையும் நீக்குகிறதாம்.

மேலும் படிக்க... Read more...

அனாதை ஆசிரமத்தில் .......

போர் முனையிலிருந்த மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

''அம்மா, போர் முனையிலிருந் வீடு திரும்புகிறேன்'' என்றான் மகன். பெற்றோருக்கு மகிழ்ச்சி.

''ஆனால் அம்மா, என்னுடன் என் நண்பன் ஒருவனையும் அழைத்து வருகிறேன். அவனுக்கு, போரில் ஒரு காலும், கையும் போய்விட்டது. அவனுக்கு உறவினர்கள் யாருமில்ல. அதனால், அவனை நம் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ளலாம் என்று நினக்கிறேன். மகன் சொன்னதைக் கேட்டு தாய்க்கு அதிர்ச்சி.

''வேண்டாம்ப்பா. கை, கால் இழந்த ஆளை வைத்து சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். நம்ம வாழ்க்கை ரொம்ப சிக்கலாகிவிடும். அதனால், நீ மட்டும் வா'' என்று சொன்னாள் தாய்.

மகன் பதிலேதும் பேசாமல் போனை வைத்துவிட்டான். வீடு திரும்பவும் இல்லை. பெற்றோருக்குக் குழப்பம். மகனுக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தார்கள். அவனும், அவன் நண்பனும் ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. பெற்றோர் அங்கே சென்றார்கள்.

அங்கே... மகனுக்கும் அதே நிலை. அவனுக்கும் ஒரு காலும், கையும் இல்ல.

''என் நண்பனைப் பராமரிக்க கஷ்டம் என்றீர்கள். நானும் அப்படித்தான் இருக்கிறேன். அதனால் என்னயும் பார்த்துக் கொள்வதற்கு கஷ்டப்படுவீர்கள். உங்களுக்கு ஏன் கஷ்டம் என்று அனாதை இல்லத்தில் சேர்ந்துவிட்டோம்'' என்றான் மகன்.

பெற்றோர் கலங்கிவிட்டார்கள்.

மேலும் படிக்க... Read more...

டாக்டர் - மெக்கானிக் பேரும், புகழும், பணமும்

ஒரு இதய அறுவை சிகிச்சை டாக்டரின் கார் ரிப்பேராகிவிட்டது. மெக்கானிக்கிடம் கொண்டு சென்றார்.

காரில் பெரிய பிரச்னை. மெக்கானிக் காரின் என்ஜினைப் பிரித்தார். அதன் வால்வுகளில் இருந்த சிக்கலை எல்லாம் சரி செய்தார். கார் மீண்டும் ஓடத் தொடங்கியது.

''டாக்டர் ஒரு விஷயத்தைப் பார்த்தீர்களா?'' என்றார் மெக்கானிக்.

''என்ன?'' என்றார் டாக்டர்.

''நீங்களும் நானும் ஒரே காரியத்தைத்தான் செய்கிறோம். நீங்கள் மனிதனுடய இதயத்தைச் சரி செய்கிறீர்கள். அதிலுள்ள வால்வுகளயெல்லாம் சரி பார்க்கிறீர்கள். நானும் அப்படித்தான். காரின் என்ஜினைப் பிரிக்கிறேன். அதிலுள்ள பிரச்னகளை சரி செய்கிறேன். ஆனால்...''

''ஆனால்...?''

''உங்களுக்குக் கிடைக்கும் பேரும், புகழும், பணமும் எனக்குக் கிடைப்பதில்லை.''

''உண்மைதான். ஆனால், நீ செய்யும் காரியத்துக்கும் நான் செய்யும் காரியத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே என்ஜினைப் பிரித்த ரிப்பேர் செய்து பார். அப்போத தெரியும். எங்கள் வேலையைப் பற்றி.''

மேலும் படிக்க... Read more...

முகமது அடில் ஷா மன்னரால் கட்டப்பட்ட கோல் கும்பாஸ்.

>> Sunday, February 18, 2007

முகமது அடில் ஷா மன்னரால் கட்டப்பட்ட கோல் கும்பாஸ்.

கருநாடகா மாநிலத்தில் பழங்காலச் சின்னங்கள் நிறைய உண்டு. மராட்டிய மாநில எல்லையில் உள்ள பிஜப்பூர் நகரில் மட்டும் இத்தகையச் சின்னங்கள் 70 உண்டு. இந்த மாவட்டத்தின் பிற பகுதிகளில் மத்திய தொல் பொருள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் 80 சின்னங்கள் உள்ளன.

இவை தவிர மாநில அரசின் தொல் பொருள் துறையில் 40 சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவையல்லாமலும் ஏராளமான சின்னங்கள் பரவிக் கிடக்கின்றன. இவை பெரும்பாலும் முகம்மதிய மன்னர்களால் கட்டப்பட்டவை.

இந்தச் சின்னங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்ற மகுடம் கோல் கும்பாஸ் எனப்படும் கட்டடம். முகமது அடில் ஷா எனும் மன்னரால் கட்டப்பட்டது. 1626ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த மன்னரின் அடக்கக் கட்டடம் ஆகும்.

தாஜ்மகால், ஹூமாயூன் கல்லறை, பாபர் கல்லறை போன்ற அழகிய கட்டடங்கள்.அந்த வகையில் அழகிய கட்டடம் கோல்கும்பாஸ். இந்தக் கட்டடத்தின் மேல் விதானம் உருண்டை வடிவிலானது. தாங்கும் தூண்கள் எதுவும் இல்லாமல் இந்த வடிவில் கட்டப்பட்டவற்றில் இது உலகிலேயே இரண்டாவது பெரிய கட்டடம்.

இந்தியாவில் இதுதான் மிகப் பெரியது. உலகின் பெரியது டமாஸ்கஸ் நகரிலுள்ள மசூதிக் கட்டடம்.

இந்தக் கட்டடத்தின் மிகப் பெரிய சிறப்பு என்ன தெரியுமா? இந்தக் கட்டடத்தின் எந்த மூலையில் இருந்தும் முனகல் போன்ற சிறிய ஒலி எழுப்பினாலும் கட்டடம் முழுவதும் மிகத் தெளிவாகக் கேட்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. எனவே இது (இரகசியம்) கமுக்கக் கட்டடம் அல்ல. ஒரு மூலையில் நின்று கையொலி எழுப்பினால் பலமுறை அந்த ஒலி எதிரொலிக்கும். எனவே இது எதிரொலிக் கட்டடம்.

205 அடி நீளமும் அகலமும்உள்ள சதுரக் கட்டடம். 100 அடி உயரம் உள்ள சுவர்கள் நான்கு பக்கங்களிலும் உள்ளன. மேற்கூரை, உருண்டை (குளோப்) வடிவில் உள்ளது. இதன் உள்பக்க விட்டம் 38 மீட்டர் ஆகும்.

இதைக் கட்டி முடிப்பதற்கு மத்திய ஆசியப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட கட்டடக் கலைஞர்கள் 30 ஆண்டுகள் உழைத்துள்ளனர். மய்ய மண்டபத்தைச் சுற்றி நான்கு புறமும் கூம்பு வடிவத்தில் நான்கு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றின் உச்சியையும் அடைவதற்கு 109 படிகள் உள்ளன. இவை ஏழு அடுக்குகளாக இருக்கின்றன.500 பேர் அமர்ந்திடும் மண்டபம் கட்டப்பட்டுள்ளது அடில்ஷாவும் அவரது மனைவியர் மகள்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவரைப்பற்றிய விவரங்கள் இந்தக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளஅருங்காட்சியகத்தில் உள்ளன.

மேலும் படிக்க... Read more...

கூடை கூடையாக குழந்தைகளைக் கடத்தும் பயங்கரம்

>> Friday, February 16, 2007

கூடை கூடையாக குழந்தைகளைக் கடத்தும் பயங்கரம்

இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் சென்னயில் சின்னஞ்சிறுவனாகக் காணாமல் போன தன் மகனை இப்போது
நெதர்லாந்து நாட்டில் கண்டு பிடித்திருக்கிறார் ஒரு தாய். நெகிழ வைக்கும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னணியில் பதற வைக்கும் பல சங்கதிகள் உள்ளன. தத்தெடுப்பு என்ற போர்வையில் பிள்ளை பிடிக்கும் தனியார் நிறுவனங்கள் சென்னயிலிருந்து ஐரோப்பா கண்டத்துக்கு கூடை கூடையாக குழந்தைகளைக் கடத்தும் பயங்கரம் தெரிய வந்ள்ளது.

அந்தப் பெண்ணின் பெயர் மேரி. சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் தெருவைச் சேர்ந்த அவருக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். கணவர் பிலிப் யாகப்பன். அவருக்கு மும்பை துறைமுகத்தில் தொழில் நுட்பப் பிரிவில் வேலை. 76ம் ஆண்டு மேரியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிலிப் யாகப்பன் குடும்பத்தைப் பிரிந்து விட்டார்.

ஏழு குழந்தைகளுடன் வாய்க்கும் கைக்கும் போதாமல் தவித்த மேரிஇரண்டு மகள்கள் உட்பட ஆறு குழந்தைகளை ஒரு ஹாஸ்டலில் சேர்த்தார். இரண்டு வயதான மகன் மாணிக்க ஏசுராஜை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டார்.

வாழ்க்கையை ஓட்ட வழி தேடிய அவருக்கு ஆறுதல் தர முன்வந்தவர் 'ஆறுதல்' மாதா தேவாலயத்தின் பாதிரியாரான பிரான்ஸிஸ் சுலூஸ். மூங்கில் கூடை பின்னும் வேலையை மேரிக்கு அவர் வாங்கித் தந்தார். வேலைக்குச் செல்லும்போது குழந்தை மாணிக்க ஏசுராஜை பாதிரியாரிடம் விட்டுவிட்டுச் செல்வார் மேரி.

இதற்குமேல் நடந்ததது இதோ மேரியே நம்மிடம் இப்படி விவரித்தார். 'அப்போது குழந்தை ஏசுராஜ் மிக அழகாக இருப்பான். அவனை பாதிரியார் பிரான்ஸிஸ் அடிக்கடி போட்டோ எடுப்பார். திடீர்னு ஒருநாள் குழந்தை காணாமல் போய் விட்டான். துடித்துப் போய் பாதிரியாரிடம் கேட்டேன். மழுப்பலாகப் பதில் சொன்னார்.

வியாசர்பாடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். இந்தப் புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் தினகரன் மாற்றலாக அவருக்குப் பிறகு வந்த இன்ஸ்பெக்டர் பாதிரியார் பக்கம் சேர்ந்து கொண்டு என்னை விரட்டியடித்தார். பைத்தியம் பிடித்தது போல மகனைத் தேடி அலைந்தேன்.

கடைசியாக இருபத்தொன்பது வருடங்கள் கழித்து அவன் நெதர்லாந்து நாட்டில் இருப்பதை இப்போது கண்டு பிடித்திருக்கிறோம். என் நிலைமை எந்தத் தாய்க்கும் வரக் கூடாது' என்று அந்த அறுபத்தாறு வயது மூதாட்டி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

'அதுசரி! மாணிக்க ஏசுராஜை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?' என்று கேட்டோம். இதற்குப் பதிலளித்தவர் மேரியின் மகள் லூர் மேரி. இவர் லண்டனில் நர்ஸாகப் பணிபுரிகிறார்.

'1988_ம் வருடத்திலிருந்தே தம்பியைத் தேடு தேடென்று தேடி வந்தோம். ஆறுதல் மாதா தேவாலய ஊழியர்கள் சிலரை நண்பர்களாக்கி பாதிரியாரின் தனியறையில் தேடச் செய்தோம். அதில் சில ஆதாரங்கள் கிடைத்தன.

அதில் தம்பி ஏசுராஜ் வெளிநாட்டுத் தம்பதிகளோடு இருக்கும் படமும் அடங்கும். 'இந்தக் குழந்தைக்கு உறவினர்கள் யாரும் இல்லை' என்று பாதிரியார் தயாரித்த கடித நகலும் கிடத்தது. போட்டோவின் பின்னால் புரியாத மொழியில் வாசகங்கள் இருந்தன. அது நெதர்லாந்து நாட்டு மொழி (டச்சு மொழி) எனக் கண்டு பிடித்தோம்.

நான் லண்டனில் இருந்தபடியே நெதர்லாந்து நாட்டுச் சேவை நிறுவனங்கள் தூதரகத்தில் உள்ள பழைய பைல்கள் மூலம் விசாரித்து தம்பியைக் கண்டுபிடித்தோம். அவன் டோனி பிளின் பெர்க் என்ற டீச்சர் வீட்டில் வளர்வது தெரிய வந்தது.

பாதிரியார் பிரான்ஸிஸ் என் தம்பியின் பாதுகாவலர் அவர்தான் என்பது போல கையெழுத்துப் போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க உதவியிருக்கிறார். நாங்கள் குடியிருப்பது வியாசர்பாடியில். ஆனால் பாஸ்போர்ட்டில் நுங்கம்பாக்கம் கிரீன்வேஸ் லேன் என போலியான முகவரி இருந்தது. அதுவே அப்பட்டமான மோசடி.

தம்பியை எங்களுடன் அனுப்பும்படி கேட்டபோது வெளிநாட்டுத் தம்பதியினர் மறுத்துவிட்டனர். இதனால் சட்டப்படி தம்பிய மீட்க மகாகவி பாரதியார் நகர் போலீஸ் உதவி கமிஷனர் விமலாவிடம் புகார் அளித்தோம். தம்பி இப்போது வணிகவியலில் பி.எச்.டி. முடித்து விட்டு வங்கியில் வேலை பார்க்கிறார். விரைவில் தம்பியை மீட்போம்' என்றார் அவர் நம்பிக்கையுடன்.

இதுபற்றி மாநகர போலீஸ் இணை கமிஷனர் ரவியிடமும் மேரி புகார் அளித்திருக்கிறார். 'இந்தப் பிரச்னையில் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன்' என அவர் வாக்குறுதியளித்திருக்கிறார்.

லூர்மேரியிடம் மேலும் பேசியபோது பல பகீர் தகவல்களை வெளியிட்டார். ''என் தம்பியைக் கடத்தியதுபோல தமிழ்நாடு கேரளா ஆந்திரா மாநிலங்களில் பிள்ள பிடிப்பதற்கென்றே ஆயிரக்கணக்கான தனியார் ஏஜென்ஸிகள் செயல்படுகின்றன. முக்கிய வி.ஐ.பி.களும் போலீஸ் அதிகாரிகளும் இதற்கு உடந்தை.

வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை இவர்கள் குறி வைப்பார்கள். அந்தக் குழந்தையை தங்கள் செலவில் படிக்க வைப்பதாகக் கூறி ஒரு பள்ளியில் சேர்ப்பார்கள்.

அந்தக் குழந்தையின் படத்தை இண்டர்நெட் மூலம் வெளியிடுவார்கள். இதைப் பார்க்கும் வெளிநாட்டினர் குழந்தையை வாங்க வருகின்றனர். பிரபல நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு ரூம் போட்டு குழந்தையின் நிறம் உருவம் அழகு வெளிநாட்டுக்காரரின் பாக்கெட் கனம் இவற்;றைப் பொறுத்து விலை தீர்மானிக்கப்படுகிறது.

அதன் பிறகு எமிக்ரேஷனில் பணத்தைக் கொடுத்து ஒரு வருட விசாவில் அந்தக் குழந்தையை நார்வே இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்புகின்றனர். விசா முடிந்ததும் குழந்தைக்கு ஒரு வழியாகக் குடியுரிமை கிடைத்துவிடும். தத்தெடுப்பு என்ற பெயரில் ஒரு வெளிநாட்டவரின் வீட்டில் குழந்தை தள்ளப்படும். இதற்காக ஏஜென்ஸிக்குக் கிடைக்கும் தொகை பத்து லட்ச ரூபாயிலிருந்து ஐம்பது லட்ச ரூபாய் வரை.

இப்படி குழந்தைகளைக் கடத்தி விற்பதற்காகவே சென்னயில் எழும்பூர் சேத்துப்பட்டு பரங்கிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் ஏஜென்ஸிகள் உள்ளன. பல ஆயிரம் குழந்தைத் தத்தெடுப்பு வெப்சைட்கள் உள்ளன. இதுகுறித்த ஆதாரங்களும் உள்ளன!' என்றவாறு போலிச் சான்றிதழ்களைக் காட்டி நம்ம வியப்பின் விளிம்புக்குத் தள்ளினார் லூர் மேரி.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலரிடம் விசாரித்தோம். 'மாணிக்கம் ஏசுராஜனைப்போல பலநூறு குழந்தைகள் இப்படி மாயமாகி ஐரோப்பிய நாடுகளில் தலைகாட்டும் அவலம் உள்ளது. உதாரணமாக மேயர் பெயரைக் கொண்ட தெருவில் வீட்டு வேலைக்குப் போகும் ஒரு பெண்ணின் குழந்தயை இதே ஸ்டலில் ஒரு பங்களா வி.ஐ.பி. கடத்தி வெளிநாட்டிற்கு விற்றிருக்கிறார். குறிப்பாக தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்குப் பிழைப்புத் தேடி வரும் பெற்றோர்களின் குழந்தைகள் குறிவைத்துக் கடத்தப்படுகின்றன.

பெற்ற குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு கதறும் தாய்மார்களை அடியாட்களை வைத்து மிரட்டி அவர்கதளை வாயை அடக்கும் அநியாயமும் நடந்து வருகிறது. குழந்தைகளை இழந்து தவிக்கும் ஏழைபாழைகளின் புகார்கள் காவல் நிலையங்களில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை!' என்று அங்கலாய்த்தார்கள் அவர்கள்.

சென்னையில் உள்ள சமூகசேவை அமைப்பின் நிர்வாகி ஒருவர் வேறொரு தகவலை நமக்குத் தெரிவித்தார். 'இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மக்கள் தொகை மளமளவெனக் குறைந்து போனது. அதை ஈடுகட்டத்தான் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார்கள்.

குழந்தைகளைக் கடத்தும்போது எமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு 'கட்டிங்' கொடுத்தால் அவர்கள் குடையமாட்டார்கள். இங்கிலாந்து நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் அதிக கெடுபிடி கிடையாது.

ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவசப் படிப்புதான். அவர்கள் படித்து முடித்ததும் வளர்ப்புத் தாய்க்கு. லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொடுக்கிறார்கள். ஏசுராஜ் விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது. இந்த மோசடி

ஏஜென்ஸிகளப் பிடித்துக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்!' என்று ஆவேசப்பட்டார் அவர்.

கடைசியாக நாம் பார்த்த புளியந்தோப்பு போலீஸ் துணகமிஷனர் சம்பத்குமார்.

'ஏசுராஜ் இப்போது மேஜர். அவர் இந்தியா வருவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். பாதிரியார் பிரான்ஸிஸ் இறந்து விட்டார். ஏசுராஜ் காணாமல் போனது பற்றி 76_ம் ஆண்டு வியாசர்பாடி ஸ்டேஷன்ல மேரி புகார் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. தவறு நடந்திருந்தால் நடவடிக்கை உறுதி!' என்றார்.

'தத்தெடுப்பு என்ற போர்வையில் சென்னை;யில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுகிறதே?' என்றோம்.

''உண்;மைதான். 2005_ம் ஆண்டு ஓட்டேரி பகுதியில் காணாமல்போன ஒரு குழந்தையைப் பற்றி விசாரித்தபோது 'மலேசியன் சோசியல் சர்வீஸ்' என்ற அமைப்பின்மேல் சந்தேகம் ஏற்பட்டது. ஏழு குழந்தைகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. சி.பி.சி.ஐ.டி. விசாரித்து குற்றவாளிகள் கைதானார்கள்.

'அடாப்ஷன்' விஷயத்தில் கடுமையான விதிமுறைகள் இருந்தாலும் யாரும் பின்பற்றுவதில்லை. தத்தெடுப்பு நடக்கும்போது உள்ளூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த விதியையும் யாரும் கடைப்பிடிப்பதில்லை.

குழந்தை காணாமல் போனாலோ தத்துக்கொடுக்க விரும்பினாலோ சாட்சிகள் சரியாக விசாரிக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் தனியார் ஏஜென்ஸிகளில் அடிக்கடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்!' என்றார் அவர் தெளிவாக.

மேரியைப் போல இன்னும் எத்தனை ஏழைத் தாய்மார்கள் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டுத் தேடுகிறார்களோ? அட தேவுடா!

படங்கள்: ஞானமணி
விஜயானந்த்
NANDRI: "REPORTER"

மேலும் படிக்க... Read more...

அட ஆன்டிபயாடிக்கில் இத்தனை பிரச்னை இருக்கிறதா?

>> Thursday, February 15, 2007

அட ஆன்டிபயாடிக்கில் இத்தனை பிரச்னை இருக்கிறதா?

நமக்கு என்ன பிரச்னை என்றாலும் சாப்பிடும் மருந்துகளின் லிஸ்டில் எப்படியும் ஒரு ஆன்டிபயாடிக் மருந்து வந்துவிடும்.

காய்ச்சல், மூக்குச்சளி, தொண்டைப்புண், லேசான வெட்டுக்காயம் என சின்ன விஷயங்களில் இருந்து பெரிய ஆபரேஷன், மூளைக் காய்ச்சல் என பெரிய பெரிய நோய்களுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சட் சட்டென்று பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுக்க நோய்க்கிருமிகளத் தாக்கி அழித்து பல மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்றி வைப்பதாகக் கருதப்படும்

இந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் பாகாப்பானதா? அபாயம் எதுவும் இல்லையா?

இந்த ஆன்டிபயாடிக் மருந்துகள், 1900லிருந்தான் மருத்துவ உலகை ஆட்சி செய்ய ஆரம்பித்தன. பல பெரிய பெரிய நோய்களில் உலக மக்கள் தத்தளித்தபோது, கடவுளின் கரம் போல் வந்து கண்ணீர் துடைத்த கதைகள் பல ஆன்டிபயாடிக் மருந்களுக்கு உண்டு. அப்போதிலிருந்து மருத்துவர்கள் இவற்றை எதற்கெடுத்தாலும் நம்ப ஆரம்பித்தார்கள்.

சாதாரண மூக்குச் சளி, FLU புளு போன்ற காய்ச்சல் வருவதற்குக் காரணம், வைரஸ்கள் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியாக்களை மட்டுமே தாக்கி அழிக்கக் கூடியவை. ஆனால், இந்த நிலைகளுக்குக் கூட மருத்துவர்கள் ஒரு ஆன்டிபயாடிக்கை எழுதி விடுகிறார்கள். காரணம், கூடவே என்ன இருந்தாலும் ஆன்டிபயாடிக் பார்த்துக்கொள்ளும் என்று ஏறக்குறைய அனைத்து மருத்துவர்களுமே நம்புகிறார்கள்.

ஆனால், இவை எந்தத் தேவையற்ற விளைவுகளயும் ஏற்படுத்துவது இல்லையா? என்றால், இல்லை. ஏற்படுத்துகின்றன என்பதுதான் உண்மை.

சிலருக்கு அலர்ஜி, நம் உடம்பில் நண்பனாக வாழுகிற பாக்டீரியாக்களயும் தாக்கி அழித்து வருகிறது கண்மூடித்தனம், அடிக்கடி பயன்படுத்துவதால் சில அடங்காத கிருமிகள் ஆன்டிபயாடிகால் சாகாமல் அதைச் சாப்பிட்டு உயிர் வாழத் தொடங்குகிற நிலை, தேவையில்லாமல் நம் உடலின் நோய் எதிர்க்கிற சிஸ்டத்தை இயங்கவிடாமல் தடுப்பது, இவை எல்லாம் தவிர மொத்தமாக உடலுக்குள் ஒரு சோர்வையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதை க்ரானிக் பெட்டிக் சின்ட்ரோம் என்கிறார்கள்.

அட ஆன்டிபயாடிக்கில் இத்தனை பிரச்னை இருக்கிறதா? என்ன செய்வது என்கிறீர்களா?

தடுப்பு நடவடிக்ககைளும், தேவையில்லாமல் எடுத்ததற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் தான் நல்ல வழி.

நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளே நுழையாமல் இருக்க உதவும் தடுப்பு நடவடிக்கைகள்.

சுத்தம்.

அடிக்கடி கைகள கழுவிக் கொள்வது.

நல்ல தண்ணீர்.

வைட்டமின்கள் நிறைந்த நல்ல உணவு (காய்கறிகள், பழங்கள்).

எளிய உடற்பயிற்சிகள்.

சரி. நோய் தொற்றி விட்ட. என்ன செய்வது?

சாப்பாட்டை குறையுங்கள்.

நிறைய திரவ உணவுகள எடுத்துக் கொள்ளுங்கள்.

நல்ல ஓய்வு.

வீட்டை நல்ல கிருமி நாசினி போட்டுத் துடைப்பது.

இதையெல்லாம் தாண்டிய பிறகுதான் ஆன்டிபயாடிக்கிற்குச் செல்லலாம்.

முதலில் கேட்க, பழக சிரமமாக இருக்கும். ஆனால், மருந்துகள் எப்போதுமே உடலுக்கு நஞ்சு, கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள்.

நோய்க் கிருமிகள் பற்றிய இரண்டு ஆய்வுக் கோட்பாடுகள்.

டாக்டர் பாஸ்டர்:

நோய்க்கு காரணம் கிருமிகள்.

டாக்டர் பாச்சம்ப்:

நோய்க்கு காரணம் உடல் எதிர்ப்பு சக்தி குறைவதுதான்.

அலோபதி முதல் கோட்பாட்டையும், மற்ற மருத்துவ முறைகள் இரண்டாவது கோட்பாட்டையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால், டாக்டர் பாஸ்டர் மரணமடையும் போது சொன்னார்.

எல்லாம் உடல் எதிர்ப்பு சக்திதான், கிருமிகள் NOTHING.

மேலும் படிக்க... Read more...

சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு நிறைய கேள்விகள் சந்தேகங்கள் - இன்சுலின்.

>> Wednesday, February 14, 2007

சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு நிறைய கேள்விகள் சந்தேகங்கள் எழும். அதை யாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தெரியாமல் பலர் தயங்கிக் கொள்ளக்கூடும். உங்கள் சார்பாக சில கேள்விகளுக்கு இராஷபாளையத்தைச் சேர்ந்த சிறப்பு நிபுணர் கு. கணேசன் பதிலளிக்கிறார்.

டாக்டர், சர்க்கரைநோய் மாத்திரகளை எப்போது சாப்பிட வேண்டும்? உணவுக்கு முன்பா? பின்பா? சில டாக்டர்கள் உணவுக்கு முன்பாகச் சாப்பிடச் சொல்கிறார்கள். வேறு சில டாக்டர்கள் உணவுக்குப் பின் சாப்பிடச் சொல்கிறார்கள். யார் சொல்வது சரி?

உங்கள் சந்தேகம் முற்றிலும் சரி. இதைப் படிக்கின்ற வாசகரும் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் அவருக்கும் இந்தச் சந்தேகம் வந்திருக்கும். வழக்கமாக சர்க்கரைநோய்க்குத் தரப்படும் மாத்திரைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையில் பணிபுரிந்து சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்கின்றன.

சில மாத்திரைகள் கணையத்திலுள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்து, ரத்தத்திலுள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். சில மாத்திரகள் உடல்தசைகளில் காணப்படும் இன்சுலின் எதிர்ப்புநிலை (Insulin Resistance )
யைச் சரிசெய்து நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இன்னும் சில மாத்திரகள் சிறுகுடலில் உணவு செரிமானமாவதைத் தாமதப்படுத்தும். அதன்மூலம் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் உடனே அதிகரித்து விடாமல் பார்த்துக்கொள்ளும்.

வேறு சில கல்லீரலிலிருந்து சர்க்கரை வெளியாகி ரத்தத்தில் கலப்பதைத் தாமதப்படுத்தும். ஆக, நீங்கள் சாப்பிடும் மாத்திரையைப் பொறுத்து அதை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை நாங்கள் கூறுகிறோம்.

பொதுவாக, கணையத்தைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்கின்ற கிளபென்கிளமட், கிளமிபிரட், கிளகிளசட், கிளபிசட் போன்றவற்றை உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டுவிட வேண்டும். காரணம், இவை ரத்தத்தில் கலந்து கணையத்தை அடைந்து இன்சுலினைச் சுரக்கச் செய்ய, குறைந்தது அரைமணி நேரம் ஆகும். மாத்திரை சாப்பிட்டு அரைமணி நேரம் ஆனபிறகு உணவு சாப்பிட்டால் உணவிலுள்ள சர்க்கரை, ரத்தத்தில் கலப்பதற்கும் இன்சுலின் சுரப்பதற்கும் சரியாக இருக்கும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கப்படும். இதன் விளைவாக சர்க்கரைநோய் கட்டுப்படும். இதேபோல் உணவு செரிமானமடைவதைத் தாமதப்படுத்கின்ற அகர்போஸ் மாத்திரைகள் மற்றும் மெக்ளிடினட் மாத்திரைகளயும் உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டும். இன்சுலின் எதிர்ப்புநிலையைச் சரிசெய்யும் மெட்பார்மின், பயோகிளிட்டசோன், ரோசிகிளிட்டசோன் போன்றவற்றை உணவுக்குப் பின்பு சாப்பிடலாம்.

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் தரப்படுகிறதே... வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டியது அவசியமா?

இயற்கை உணவுகளான பால், பழம், காய்கறிகளில் நமக்குத் தேவையான அளவுக்கு வைட்டமின்கள் உள்ளன. இவற்றைத் தினமும் சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் தேவையில்லை. வறுமை காரணமாக இந்த உணவுகளச் சாப்பிட இயலாதவர்களும் வயிற்றில் அஜீரணக் கோளாறு உள்ளவர்களும் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடவேண்டியது அவசியம்.

சில சர்க்கரை நோய் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது அவற்றின் பக்கவிளவாக, வைட்டமின் பி12 அளவு ரத்தத்தில் குறைவதுண்டு. அப்போது அந்த வைட்டமின் குறையை ஈடுகட்ட வைட்டமின் பி12 கலந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். பொவாகவே நமக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்கள் உடலில் சேரும் அளவு குறையும். வயிற்றில் செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கும் இதே பிரச்சினை ஏற்படும்.

சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இல்லாத நிலைமையில் இந்த வைட்டமின் குறைபாடு நரம்புகளை பாதித்து பாதங்களில் எரிச்சல், மதமதப்பு, தொடுவுணர்வின்மை போன்ற தொல்லைகளைத் தரும். இவற்றைத் தவிர்க்கவும் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டியது அவசியம்.

அறுபது வயதுக்கு மேல் சர்க்கரைநோய் வராது என்று கூறுவது உண்மையா?

அறுபது வயதுக்கு மேல் ஒருவருக்கு முதன்முதலாக சர்க்கரைநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்படுவது வெகு அரிது. பொவாக அதற்கு முன்பே சர்க்கரைநோய் வந்துவிடும். என்றாலும், வம்சாவழி காரணமாக வருகின்ற சர்க்கரைநோய் எந்த வயதிலும் வரலாம்.

எங்கள் வீட்டில் யாருக்கும் சர்க்கரைநோய் இல்லை. எனவே, எனக்கு சர்க்கரைநோய் வரவாய்ப்பில்லை என்று நம்புகிறேன். இது சரியா?

இப்படி நினப்பது சரியில்லை. ஒரு குடும்பத்தில் யாருக்குமே சர்க்கரைநோய் இல்லை என்றாலும், அவர்களின் உறவினர்கள் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால் இவர்களுக்கும் சர்க்கரைநோய் வர வாய்ப்புள்ளது. சர்க்கரைநோயை ஒரு பரம்பரை நோய் என்கிறோம். பரம்பரை அல்லது வம்சாவழி என்பது அப்பா அம்மா மற்றும் உடன்பிறந்தவர்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை.

முப்பாட்டன், முப்பாட்டி, தாத்தா, பாட்டி குடும்பத்தினர்கள் என்று பல தலைமுறைகளிலிருந்து ஒரு சங்கிலித் தொடர்போல் வருவது. இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு சர்க்கரைநோய் இருந்தால் போதும். அந்தப் பரம்பரையில் பிறப்போரில் யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரைநோய் வரலாம்.

இன்சுலின் ஊசி போடத் தொடங்கினால் ஆயுள் முழுவதும் அதைப் போட வேண்டிய வரும் என்கிறார்களே. இது உண்மையா, டாக்டர்?

இது முழு உண்மையில்லை. அறுவைச் சிகிச்சை, மாரடைப்பு, நோய்த்தொற்று, பெண்கள் கர்ப்பம் தரித்தல் போன்ற சில அவசர நேரங்களில் சர்க்கரைநோய் மாத்திரகளைவிட, இன்சுலின் ஊசிதான் உடனடி பலனத் தரும். அந்த அவசர நிலமை சரியானதும் இன்சுலின் ஊசியை நிறுத்திவிட்டு மாத்திரைக்கு மாறிக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயில் முதல்வகை சர்க்கரை நோயாளிகள் என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் உடலில் இன்சுலின் சிறிதளவும் சுரக்காது. இவர்கள் இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும்.

இன்சுலின் ஊசியைக் குளிர்சாதனப்பெட்டியில்தான் வைக்க வேண்டுமா? வீட்டில் குளிர்சாதனப்பெட்டி இல்லாதவர்கள் என்ன செய்வது?

இன்சுலின் ஊசிமருந்தைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப் பாகாப்பதுதான் நல்லது. என்றாலும், குளிர்சாதனப்பெட்டி இல்லாதவர்கள் கவலைப்படத்தேவையில்ல. இப்பொழுது வருகின்ற இன்சுலின் ஊசிமருந்கள் அறையில் உள்ள வெப்பநிலையில் (Room Temperature) வைத்திருந்தாலும் அவற்றின் செயல்திறன் குறையாத அளவிற்குத் தயாரிக்கப்படுகின்றன.

ஆகையால் மருந்துக்கடையில் இன்சுலின் ஊசிமருந்தை வாங்கியதிலிருந்து சுமார் 8 வாரங்களுக்கு வீட்டில் உள்ள சாதாரண வெப்பநிலையில் வைத்துக்கொள்ளலாம். அப்போதும் அதன் செயல்திறன் குறையாது. எட்டு வாரங்களுக்கு மேல் இன்சுலின் ஊசிமருந்தை அறைவெப்பநிலையில் வைத்திருக்க இயலாது. குளிர்சாதனப்பெட்டியில்தான் வைத்துப் பாதுகாக்கவேண்டும்.

சர்க்கரைநோயை நிரந்தரமாகக் குணமாக்க முடியுமா?

சர்க்கரைநோயை நிரந்தரமாகக் குணப்படுத்துவதற்கு மேல்நாடுகளில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் முக்கியமான. கணையமாற்று அறுவைச் சிகிச்சை. உடலில் கணையம் சரிவர வேலை செய்யாதபோது சர்க்கரைநோய் வருகிறது.

ஆகையால் உடலில் சரியாக இயங்காத கணையத்தை நீக்கிவிட்டு, மாற்றுக் கணையத்தைப் பொறுத்தும் இச்சிகிச்சை பல நாடுகளில் செய்யப்படுகிறது. மற்றொரு சிகிச்சைமுறை இது. கணையத்தில் உள்ள ஐலெட் திசுமாற்றுச் சிகிச்சையில் பீட்டா செல்களை மட்டும் மாற்றும் புதிய சிகிச்சையும் செய்யப்படுகிறது.

இந்த இரு சிகிச்சைமுறைகளும் இப்போது பரிசோதனை அளவில் உள்ளன. இன்னும் இந்தியாவில் செய்யும் நிலை வரவில்லை. மேலும் இச்சிகிச்சைகளுக்கு ஆகும் மருத்துவச்செலவு தற்போது மிகமிக அதிகம். இன்னும் சில ஆண்டுகளில் இவை நடைமுறைக்கு வரலாம். அப்போது சர்க்கரைநோய் நிரந்தரமாகக் குணமாகலாம்.

எனக்குச் சர்க்கரைநோய் ஏற்பட்டபின்பு உடல் மிகவும் இளைத்துவிட்டது. எடை குறைந்துவிட்டது. என் உடல் எடையை மீண்டும் அதிகரிக்க முடியுமா?

சர்க்கரைநோயின் பாதிப்பு அதிகமாக உள்ளபோது, உடலுக்குச் சேரவேண்டிய ஊட்டச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஆகியவை வெளியேறி விடுகின்றன. அதனால் உடல் எடை குறைந்துவிடுகிறது. இதற்கு முதலில் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு இன்சுலின் ஊசிமருந்து உதவும்.

இன்சுலின் என்பது ஒரு அனபாலிக் இயக்குநீர். இதை உடலில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் எடை தானாகவே அதிகரிக்கும். சர்க்கரைநோய் கட்டுப்பாட்டிற்கு வந்ததும் இன்சுலின் அளவைக் குறைத்துவிடலாம். நல்ல சத்துள்ள உணவை சரியான அளவில் நிறைய காய்கறிகளுடன் சாப்பிடுவதுடன், தேவையான அளவிற்கு இன்சுலினயும் போட்டுக் கொண்டால் உடல் இளைக்காது, எடை குறையாது.

சர்க்கரை நோயாளிகள் கண்தானம், இரத்ததானம் செய்யலாமா?

சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இரத்ததானம் செய்யலாம். பொதுவாக சர்க்கரைநோயாளிகளுக்கு விழித்திரையில்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆரம்பநிலையில் இதைக் குணப்படுத்திவிடலாம். அதைக் கவனிக்கவில்லயென்றால், விழித்திரையில் இரத்தம் கசிந்து, விழியில் நீர்த்தேக்கம் ஏற்படும்.

இப்போதும் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், இந்த நீர்த்தேக்கம் கண்ணின் மையப்பகுதியான நிறமிலி இழைமைத்தைப் பாதிக்கும். இத்தகைய பாதிப்புகள் ஏற்படாதபோது கண்ணையும் தானம் செய்யலாம்.

சர்க்கரை நோயினால் பாதிப்படைந்துள்ள பெண்களுக்குக் கருப்பை பாதிக்கப்படுமா?

சர்க்கரைநோயினால் பாதிப்படைந்துள்ள பெண்களுக்குப் பிறப்புறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. குறிப்பாக காளான் தொற்று ஏற்படும். அரிப்பு, தோல் சிவத்தல், வெள்ளைபடுதல் போன்ற தொல்லைகள் வரும். மற்றபடி கருப்பையை நேரடியாகப் பாதிக்காது.

நான் தினமும் யோகா செய்கிறேன். அத்தோடு நடைப்பயிற்சியும் செய்ய வேண்டுமா? வெறும் வயிற்றில் நடந்தால் எனக்குக் கிறக்கமாக வருகிறது. இதற்கு என்ன செய்வது?

முறைப்படி யோகாசனம் செய்தும் சர்க்கரைநோய் கட்டுப்படவில்லை என்றால் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். வெறும் வயிற்றில் நடப்பது சிரமமாக இருந்தால் பால், பிஸ்கட், காபி அல்லது தேநீர் சாப்பிட்டபின்னும் நடைப்பயிற்சி செய்யலாம். தவறில்லை.

நான் என் குடும்ப டாக்டர் சொல்கிறபடிதான் உணவு சாப்பிடுகிறேன். தினமும் அரைமணிநேரம் நடக்கிறேன். மாத்திரகளையும் மறக்காமல் சரியான வேளையில் சாப்பிட்டு விடுகிறேன். இருந்தாலும் எனக்கு சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில்தான் உள்ளதே தவிர, முழுமையாக குணமாகவில்லை. நேற்று என் பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரும் ஒரு சர்க்கரைநோயாளிதான். கேரளாவுக்குச் சென்று ஏதோ ஒரு மூலிகைமருந்து சாப்பிட்டாராம். ஒரு மாதத்தில் சர்க்கரைநோய் குணமாகிவிட்டதாம். அந்த மூலிகையை நானும் சாப்பிடலாமா?

சர்க்கரைநோய்க்கு அலோபதி மருந்தென்றாலும் சரி, ஆயுர்வேத சிகிச்சையென்றாலும் சரி, ஹோமியோபதி ஆனாலும் சரி நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மை. அதே நேரத்தில், எந்த மருத்துவத்திலும் இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த இயலாது என்பதுதான் தற்போதைய நிலமை.

நீங்கள் கூறுவதுபோல் கேரளாவில் தரப்படும் மூலிகை மருந்தால் சர்க்கரைநோய் நூற்றுக்குநூறு குணமாகிறது என்பது உண்மையாக இருந்தால் இந்நேரம் அந்த மருந்தைக் கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். ஆகவே மற்றவர்கள் கூறுவதை அப்படியே நம்பி ஏமாந்துவிடாதீர்கள். நீங்கள் சாப்பிடும் மருந்தைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். சந்தேகம் வரும்போது உங்கள் குடும்ப டாக்டரிடம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
----------------------------------
இன்சுலின்.
ஊசி மூலம் இனி வேண்டாம்...

இன்றுவரை நீரிழிவு நோய்க்கான இன்சுலின், ஊசிமூலம்தான் உடலில் செலுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது இன்சுலினை வாய் வழியாக உட்கொள்ளும் முறையை பெங்களூரைச் சேர்ந்த பயோகான் என்ற மருந்து ஆராய்ச்சி நிறுவனம் சோதித்து வருகிறது. இதில் பல சாதகமான விஷயங்களும் இருக்கின்றன. வாய் வழியாக இன்சுலினை உட்கொள்ளும்போது, நமது உடலில் இயற்கையாக இருக்கும் இன்சுலின், குளுகோஸை கட்டுப்படுத்த எப்படி செயல்படுகிறதோ அதே பயனை, வாய் வழியாக உட்கொள்ளும்போது அடையலாம்.

அவ்வாறு செல்லும் இன்சுலின், வயிறு மற்றும் குடல்களைத் தாண்டி கல்லீரலை அடைந்து பின்பு ரத்த நாளங்கள் வழியாக மண்ணீரல் தசைகளை அடைகிறது. இங்குதான் இயற்கையாக இன்சுலின் உருவாகிறது. கல்லீரலில் குளுகோஸ், குளு கோஜனாக சேமித்து வைக்கப்பட்டு, தேவையான நேரத்தில் குளு கோஸாக வெளியிடப்படுகிறது. ஊசி வழியாக செலுத்தப்படும் இன்சுலின் கடைசியில்தான் கல்லீரலை அடைகிறது. குளுகோஸ் உற்பத்தி கல்லீரலில் இருக்கும் இன்சுலின் அளவைப் பொறுத்து தான் அமையும்.

சாப்பிடாமல் இருக்கும்போது, கல்லீரல் குளுகோஸை அதிகமாக உற்பத்தி செய்கிறது. சாப்பிட்ட பிறகு இன்சுலின் தூண்டுதலின் பேரில் கல்லீரல் குளுகோஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. இன்சுலின் ஊசிமூலம் செலுத்தப்படுவதை விட, வாய் வழியாக உட்கொள்வதே ரத்தத்தில் குளுகோஸ் அளவை குறைக்கும் சரியான வழிமுறை யாகும்.

மேலும் படிக்க... Read more...

கடன்

காலையில் போன் அழைத்தது. கரீம்எடுத்தான். கும்பகோணத்தில் தாய்மாமா ஜாபர் ; இறந்துவிட்டதாகத் தகவல்!

முதலில் அதிர்ந்தவன், பிறகு மகிழ்ந்தான்.

காரணம் வீடு கட்டுவதற்காக மாமாவிடம் வாங்கியிருந்த ஒரு லட்ச ரூபாய் கடன். அவன் அவரிடம் கடன் வாங்கியிருந்த விஷயம் யாருக்கும் தெரியாது.

கும்பகோணம் சென்றான். மாமாவின் மனைவியோ மாமாவின் மகனோ இதுபற்றிக் கேட்கவில்ல. அவனுக்குள் சந்தோஷம் தாங்கவில்லை.

இது நடந்து இரண்டு வாரங்கள் கழிந்திருக்கும். கும்பகோணத்திலிருந் மாமா மகன் அப்துல் கையில் ஒரு மஞ்சள் பையோடு வந்திருந்தான்.

தந்தையின் மரணத்துக்காக தாடி வளர்த்திருந்தான். வாப்பாவின் சாவு மகன் அப்துல் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

அந்த ஒரு லட்ச ரூபாய்... என்று அப்துல் இழுத்தபோது, கரீம் துணுக்குற்றான்.

''வாப்பாவின் நாட்குறிப்பில் கரீம் ஒரு லட்ச ரூபாய் என்று எழுதியிருந்தது. வாப்பா பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும் அல்லவா? ஆகவே கொண்டு வந்துள்ளேன். பிடியுங்கள் என்று மஞ்சள் பையை நீட்டினான்.

அடுத்த நொடி... கூனிக்குறுகிப் போனான் கரீம் அப்துலின் நேர்மையின் முன்பு தான் ஒரு அருவருக்கத்தக்க ஜந்துவாக உணர்ந்தான்.

தன் மனசாட்சியின் குரலாகப் பேச ஆரம்பித்தான்
கரீம்

அப்துல் உங்க அப்பா என் தாய்மாமன். என்னிடம் அவர் கடன் வாங்கவில்லை. நான்தான் அவரிடம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கினேன்.கள்ளம் ஒழிந்து தெளிந்த மனதுடன் பேசிய கரீம், உள்ளே சென்றான் பணத்தை எடுப்பதற்காக.

மேலும் படிக்க... Read more...

தாழ்வு மனப்பான்மை வாட்டுகிறது!

மற்றவர்களை விட எனக்குத் திறமைகள் குறைவு என்கிற தாழ்வு மனப்பான்மை என்னை வாட்டுகிறது!

காம்ப்ளக்ஸ்களில் சுமார் நாற்பது வகைகள் உண்டு என்பார்கள். அவற்றில் ஒன்றுதான் தாழ்வு மனப்பான்மை.. அதன் சில அறிகுறிகளப் பார்ப்போமா?

தற்புகழ்ச்சி, மேலதிகாரிகளை இகழ்வது, யாராவது ஒருவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டு அவரைக் கொண்டாடுவது, ஒரு கலையில் தீவிரமாக ஈடுபடுவது, நையாண்டி செய்வது, சண்டையில் இறங்குவது, பழி வாங்குவது, பேராசைப்படுவது, கனவுகள் அதிகம் காண்பது, அவ்வளவு ஏன், சமூக அநீதிகளை எதிர்ப்பதும்கூட தாழ்வு மனப்பான்மையின் ஒரு அங்கம்தான் என்கிறது மனோதத்துவம் .

அந்தப் பெரிய லிஸ்ட்டைப் பார்க்கும்போது, காந்தி, லெனின், சார்லி சாப்ளின், நெப்போலியன், ஹிட்லர், பாரதி எல்லோருமே தாழ்வு மனப்பான்மை கேஸ்களாகத்தான் இருக்க வேண்டும். . கவலையை விடுங்கள். ஒரு ரகசியம் சொல்லட்டுமா? தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்தான் அதிகம் ஜெயிக்கிறார்கள்.

மேலும் படிக்க... Read more...

காந்தியார் கொலையில் பார்ப்பனர் பின்னணி!

>> Tuesday, February 13, 2007

காந்தியார் கொலையில் பார்ப்பனர் பின்னணி!
காந்தியாரின் பேரன் துஷார் காந்தி தரும் திடுக்கிடும் தகவல்கள்!!

புதுடில்லி, சன. 31- காந்தியார் படுகொலையின் பின்னணியில் பார்ப்பனர்கள் இருந்ததாக காந்தியாரின் பெயரன் துஷார் காந்தி, தனது புத்தக அறிமுக விழாவில், திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தேசப் பிரிவினைக்குக் காரணமாக இருந்ததால்தான் காந்தியைக் கொன்றதாகவும், பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடியை இந்தியா தர வேண்டும் என்று காந்தி வற்புறுத்தியதால்தான் காந்தியைக் கொன்றதாகவும் சங் பரிவார் அமைப்புகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தத் தத்துவம் கொலையை மறைப்பதற்காகக் கூறப்படும் சாக்குப் போக்குகள். அது உண்மையில்லை.

பார்ப்பனர்கள் இந்தியாவை இந்து தேசமாக மாற்ற விரும்பினர். அதன் பின்னணியில் தான் தேசத்தின் தந்தையை பலமுறை கொல்ல முயன்றனர். இறுதியில் படுகொலை செய்தனர்.

பார்ப்பனர்களின் திட்டம்!

காந்தியார் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார். பார்ப்பனர்கள் ஆதிக்கச் சக்திகளாக விளங்கவேண்டும் என்பதற்காகவே இந்தியாவை அவர்கள் இந்து தேசமாக மாற்ற விரும்பினர். அதனால்தான் காந்தியார் குறி வைக்கப்பட்டார்.

(கேள்வி: அன்று காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில் என்ற பச்சை குத்தப்பட்ட பெயர்; இது எதைக் காட்டுகிறது?

பதில்: ஆர்.எஸ்எஸ் பார்ப்பன புத்தி மோசடியைக் காட்டுகிறது! VIDUTHALAI )

1948 ஆம் ஆண்டு மகாராட்டிரா மாநிலம் சனவரி 30 ஆம் நாள் காந்தியார் கொலை செய்யப்படுவதற்கு முன்பே பலமுறை கொலை முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சிகளுக்கு பூனே மையமாகத் திகழ்ந்தது.

1935 ஆம் ஆண்டு பூனேயில் தாழ்த்தப்பட்டோர் பேரணி ஒன்றில் காந்தியார் கலந்துகொண்டபோது, அவரை நோக்கிக் குண்டுகளை வீசிக் கொல்ல முயன்றனர். அதில் காந்தியார் தப்பினார்.

காந்தியாரைக் கொல்ல மூன்று முறை முயற்சிகள்

மகாராஷ்டிராவில் வர்தா, பஞ்ச்கனி ஆகிய இடங்களில் காந்தியாரைக் கொல்ல முயற்சிகள் நடைபெற்றன. மேற்-கண்ட மூன்று கொலை முயற்சிகளிலும் நாதுராம் கோட்சே, நாராயண் அப்தே ஆகியோர் தலைமையிலான தீவிரவாதக் குழுவினர் ஈடுபட்டனர்.

காந்தியார் கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 1968 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 'கபூர் ஆணையம்'' காந்தியார் கொலையின் பின்னணியில் உள்ள சதி தொடர்பான ஏராளமான விவரங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.

நம் நாட்டில் தற்போதும் இந்து முஸ்லிம்கள் இடையே வெறுப்புணர்வு நீடித்து வருகிறது. அதைப் போக்கி இரண்டு மத மக்கள் இடையேயும் மனித நேய உறவுகளை மேம்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இந்து மக்களும், முஸ்லிம் மக்களும் பிளவுபட்டுள்ளனர். ஒன்றுபடுத்தத் தேவையான முயற்சிகளை எடுக்காவிட்டால், நாடு மற்றொரு பிரிவினையைச் சந்திக்க நேரிடும்.
இவ்வாறு துஷார் காந்தி பேசினார்.

COURTSEY: VIDUTHALAI 1.02.07

மேலும் படிக்க... Read more...

சிவப்பழகு பிரியர்களே உஷார், உஷார்...!

சிவப்பழகு பிரியர்களே உஷார், உஷார்...!

இரு இளம் பெண்கள் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ளும் போது சொந்த பந்தங்களைப்பற்றி விசாரிக்கிறார்களோ இல்லையோ அவரவர் அழகு பராமரிப்பு சம்மந்தமான விஷயங்களைப் பேச தவறுவதில்லை.

அதிலும் என்னடி இப்படி கறுத்துப் போயிட்டே ஏதாவது ஒரு கிரீம் யூஸ் பண்ண வேண்டியதுதானே என்று சில அட்வைஸ்களையும் பரிமாறிக் கொள்வதுண்டு.

இதற்கெல்லாம் காரணம் சிவப்புத்தோல் மட்டும்தான் அழகு என்ற மாயத்தோற்றம்; பரவிக் கிடப்பதுதான்.

ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய தென்னாப்பிரிக்க நாட்டு பெண்களிடம் சிவப்பழகு மோகம் அதிகமாக இருந்தது.

ஏராளமான இளம் பெண்கள் கீரீம்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தினர். ஆனால் இதைப் பயன்படுத்திய பலருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால் ஐரோப்பிய நாடுகள் கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

அரசு அதிகாரிகள் அந்த கிரீம்களை ஆய்வு செய்த போது அதில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாதரசம் சேர்க்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.

இதன் பிறகு 'ஹைட்ரோ குய்னோன்' எனும் ரசாயனம் கலந்த சிவப்பழகு கிரீம்கள் வந்தன.

நம் தோலில் உள்ள மெலனின் எனும் நிறமி தான் உடலின் நிறத்தை நிர்ணயிக்கிறது. தோல் புற்று நோயை உருவாக்கக் கூடிய அல்ட்ரா-வயலட் சூரியக்கதிர் வீச்சுகளில் இருந்து தோலைப் பாதுகாக்கும் வேலையையும் செய்கிறது இந்த மெலனின்!

சிவப்பழகு கிரீமில் உள்ள ஹைட்ரோ குய்னோன் இந்த மெரனின் ஒரு சதவிதத்தை நீக்குகிறது மெலனின் உற்பத்தியையும் மட்டுப்படுத்துகிறது.

இந்த கிரீம் தோலை வெளுக்கச் செய்து விடுகிறது. ஆனால் இதை அதிகமாகப் பயன்படுத்தினால் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.

முகத்தில் அடிக்கடி கீரீம் பூசினால் மேல் தோலைத்தாண்டி ரசாயணம் ரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது .

இதனால் கல்லீரல், சிறுநீரக பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

கிரீம்களால் நமது உடலின் நிறத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் ஒன்றை நன்றாகப்புரிந்து கொள்ளுங்கள். சிவப்பழகு கிரீமால் நம் இயல்பான நிறத்துக்கு மேல் வெளுக்க முடியாது.

பொதுவாக பயன்படுத்தும் அனைத்து ரசாயண கலவையையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

சிவப்புத்தோல் மட்டும்தான் அழகானது என்று நினைத்து தனக்கு கிடைக்காத நிறத்தை எப்படியும் பெற்றே தீருவேன் என்று ரசாயண கிரீம்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் சிவப்பழகுக்கு பதில் பலவித நோய்கள்தான் பரிசாக கிடைக்கும்.

மேலும் படிக்க... Read more...

குழந்தைகள்- அசுத்தப்படுத்தி அலங்கோலமாக்க

ரஹிமின் பாஸ் குத்புதின் புது வீட்டைப் பார்க்கிற ஆசையில் அக்தர் கரிம் இருவரையும் அழைத்து வந்துவிட்டாளே தவிர, ரமீஸாவுக்கு உள்ளூரபயம்.

இரண்டும்கெட்டான் குழந்தைகள். வீட்டிலே அடிக்கிற லூட்டி தாங்க முடியவில்லை. இங்கே வந்து...........

அன்புடன் வீட்டைச் சுற்றிக் காட்டினார்கள் குத்புதின் தம்பதிகள்.

சுவர்களில் அழகிய ஓவியங்கள். பூக்கிண்ணங்களில் அடுக்கப்பட்ட அன்றலர்ந்த மலர்கள், க்யூரியோக்கள், பளிச்சென்று சுத்தமாக இருந்தது வீடு.

'நம்ப வீடும் இருக்கே' என்று ரஹீம் தாழ்ந்த குரலில் அலுத்துக் கொண்டது நியாயமானதான் என்று ரமீஸா நினைத்தாள்.

கண்ணாடி டம்ளரில் ஐஸ் குலுங்க ஜூஸ் வந்தது. மறுநிமிடம் 'பணால்'...... அக்தர் டம்ளரைக் கீழே போட்டு உடைத்துவிட்டு திருதிருத்தான். கரீம் பூக்கிண்ணத்தைச் சாய்த்து தண்ணீரைக் கொட்டிவிட்டு பயத்துடன் பார்த்தான்.

'கிளம்பறோம்' பிள்ளைங்களுக்கு சுத்தம்னா என்னன்றதே தெரியாது' கோபத்துடன் எழுந்த ரஹீமை, குத்புதின் உட்காரச் சொன்னார்.

'குழந்தைங்க அப்படித்தான் இருக்கும். இந்த அறையை அசுத்தப்படுத்தி அலங்கோலமாக்க ஒரு குழந்தை இல்லயேன்னு நாங்க ஏங்கிக்கிட்டிருக்கோம்..' அவர் குரல் கனத்தது........

மேலும் படிக்க... Read more...

சிறுவர்கள்- சினிமாவும், சீரியலும்.

>> Monday, February 12, 2007

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

குழந்தைகளை அவர்களது குழந்தைப்பருவத்தில் அன்புடன் அரவனைத்துக் உச்சி முகர்ந்து கொள்ள வேண்டும், அவர்களுக்காக இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்பதுடன் அவர்களது 7 முதல் 10 வயது வரையிலான பிஞ்சுப் பருவத்தில் தொழுகையை எத்தி வைத்து விடவேண்டும், என்பதை அறிந்தோம் அடுத்து அவர்களுக்கு வீட்டில் நல்லொழுக்கப் பயிற்சி அளிக்க வேண்டும்.

உளூவும், தொழுகையும் .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நினைவு கூரப்படுகின்ற வீடு உயிருள்ள வீடாகும். அல்லாஹ்வை நினைவு கூறப்படாத வீடு இறந்த வீடாகும். அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) ஆதாரம்: முஸ்லிம்

குடும்பத் தலைவராகிய ( தாய், தந்தையர் ) நீங்கள் கடமையான தொழுகைகளைப் பள்ளியில் நிறைவேற்றி விட்டு சுன்னத்தான 12 ரக்அத்களையும் முடிந்தளவு வீட்டில் தொழ முயற்சிக்க வேண்டும், இந்த காலத்தில் தாய்மார்கள் தொழுவதற்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதால் ( தடுக்கப்பட்டிருப்பதால் ) தாயும் வக்து தவறாமல் வீட்டில் தொழுதிட வேண்டும்

அவ்வாறு செய்தால் இதைப் பார்க்கக் கூடிய சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு தாய், தந்தையைப் போல் நாமும் தொழ வேண்டும் என்கின்ற சிந்தனை வரும் அத்துடன் உளூச் செய்வதையும் கூடுமானவரை வீட்டில் செய்ய முயற்சிக்க வேண்டும் நீங்கள் உளூவை பரிபூரணப் படுத்துவதையும் நபிவழியில் தொழுவதையும் அவர்களை கவனிக்கச் சொல்லி அதன்படி தொழச் செய்ய வேண்டும்.

விளையாட்டு.

சிறுவர்கள் என்பதால் அதிகம் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள் அதனால் வீட்டில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உடற் பயிற்சி போன்ற விளையாட்டுக்களில் அவர்களை புகுத்தி விடவேண்டும்,

பொழுது போக்கு என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் சீட்டுக்கட்டு, கேரம், தாயம், பகடை, சதுரங்கம், இன்னும் உங்கள் ஊர்களிலுள்ள சூதுக்குப் பயன்படுத்தும் விளையாட்டுக்களையும் வீட்டிற்குள் பிள்ளைகளை வைத்துக்கொண்டு விளையாட முயற்சித்து விடாதீர்கள். இன்று பெரும்பாலும் இந்த விளையாட்டுக்களே பணம் வைத்து நடத்தப்படும் சூதுக்காக பயன்படுத்தப் படுகின்றன.

அவர்கள் வெளியில் சென்று பார்க்கும் போது வீட்டில் சாதாரணமாக விளையாடிய சீட்டு விளையாட்டை வெளியில் காசு வைத்து விளையாடுவதை கவனித்தால் அதுவும் இவனுக்கு அது விளையாடத் தெரியும் என்ற நிலையிருந்தால் காசு வைத்து விளையாடி விடுவான் ( சூது ஹராம் என்று அப்பொழுது அவனுக்குத் தெரியாது அதற்குள் வெறித்தனமாக நுழைந்தப் பின் அது ஹராம் என்றால் அவனுடைய மனநிலை அதை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மேலும் அவர்கள் வெளியிலிருந்து தாமதித்து வருவதை அறிந்தால் அவர்களை முன்விட்டுப் பின் தொடருங்கள் அவர்கள் வெளியில் சென்று என்ன செய்துவிட்டு வருகிறார்கள் என்று நோட்டமிடுங்கள். ஏன் தாமதம் என்றுக் கேட்டால் நன்பனுடைய வீட்டில் இருந்தேன் என்றுக் கூறுவான் ஆனால் கோலி விளையாடப் போயிருப்பான் இந்த கோலி விளையாட்டுத்தான் சூது விளையாட்டின் பேசிக் ( அடித்தளம் ) ஆகும்

மேலும் சிறுவயது பாலகர்கள் கோலி விளையாடும் இடத்திற்கு சென்றுப் பார்த்தால் நீங்களே வெட்கி தலைகுணியக்கூடிய அளவுக்கு அருவருப்பான தீய வார்த்தைகள் பேசப்படுவதைப் பார்க்கலாம்.

மேலும் அவர்கள் கோலி விளையாட்டிலிருந்து பரினாமம் பெற ஆசைப்படுவார்கள் கோலி ' யின் பரினாமம் ' கேரம் ' கேரத்தின் பரினாமம் ' சதுரங்கம் ' என்று அசுர வேகத்தில் பரினமித்துக் கொண்டிருப்பார்கள் இவைகளில் நின்று நிலையாக விளையாடுவதற்கு தெம்பாக ' கிக் ' ஏற்றிக் கொள்ள ஆசைப்படுவார்கள் ' கிக் ' உடலில் ஏறிவிட்டால் அது சூது விளையாட்டோடு நிருத்தி விடாது ' கிக் ' ' கிளு கிளுப்பை ' தேடிச் செல்லும் விபச்சாபரத்தில் வீழ்ந்து விடுவான் .

சினிமாவும், சீரியலும்

இதெல்லாம் சரிதான் என்று சினிமா எடுத்துச் சொல்லும் இவைகளை எல்லாம் செய்வதற்கு அதிகப்படியான பணம் தேவைப்படும் அவ்வளவு பணத்தையும் தாய், தந்தையர் கொடுக்க மாட்டீர்கள் ஆனால் அதற்கு தேவைப்படும் பணத்தை எவ்வாறு ஈட்டுவது என்பதை சினிமாவும், சீரியலும் எடுத்துக் கூறும்.

ஜேப்படி, வழிப்பறியிலிருந்து, கொலை செய்து கொள்ளையடிப்பது வரை சினிமாவும், சீரியலும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ' அடல்ட்ஸ் ஒன்லி ' என்று போட்டிருப்பார்கள் தியேட்டருக்குள் நுழைந்துப் பார்த்தால் பொடிசுகள் தான் சிகரெட்டை புகைத்துக் கொண்டிருப்பார்கள். அங்கு தான் அவர்களுக்கு மது, மாது, சூதுவில் மூழ்குவது எப்படி என்றும் அவற்றை அடைவதற்கு எவ்வாறு ஜேப்படியிலிருந்து, கொலை செய்து, கொள்ளையடிப்பது வரை லெக்சர் நடக்கும்.

தமிழகத்தைக் உலுக்கிய சிறுவர் கொலை
சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய சிறுவர்கள் கொலை இதற்கு பெரும் சான்றாகும் பதினெட்டு வயதிற்குட்பட்ட பாலகர்கள் போலீஸ் அதிகாரிகள் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு விழிப் பிதுங்கும் அளவுக்கு அவர்களது சேட்டைகள் இருந்திருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மது, மாது, சூது, கொலை, அனைத்தையும் பிஞ்சிலேயே செய்து முடித்து விட்டு வெம்பி வெதும்பி விட்டனர் இவைகளை எல்லாம் தாங்கள் கற்றுக்கொண்டது சினிமாவில் தான் என்பதுடன் பதினெட்டு வயதிற்குள் இவைகளை எல்லாம் செய்துவிட்டால் தண்டனை கிடையாது என்று சினிமாவில் கூறக் கேட்டுள்ளோம் என்றுக்கூறி இருக்கிறார்கள் என்றால் ? இந்த சினிமாவையும், சீரியலையும் தங்களது குழந்தைகளுடன் அமர்ந்து பார்த்து கை தட்டி, உச்சிக் கொட்டி ரசிக்கும் தாய், தந்தையரே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அதனால் அவர்களை அதிகம் வெளியில் சுற்றித் திரிய விடாமல் அவர்களுடைய பள்ளி நேரங்கள் போக எஞ்சி உள்ள நேரங்களை கூடுமானவரை ஹோம் ஒர்க் செய்ய ஆர்வம் ஊட்டுவதுடன், இஸ்லாமிய வரலாற்றுகளில் வீர சிறுவர்கள் பற்றி ஏராளமான பல குறிப்புகள் உள்ளன அவற்றை ஆய்வு செய்து தங்களது குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே இஸ்லாமிய போதனைகளை ஊட்டி வளர்ப்பதற்கு அவர்களுடைய பள்ளி நேரங்கள் போக மீதி நேரத்தை பயன்படுத்துங்கள். முதல் ஆசியரியர் தாய், தந்தையரும் முதல் பள்ளிக்கூடம் தங்களது வீடும் தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தாய்மார்களே! உங்களது வீட்டில் வக்து தவறாமல் தொழுகிறீர்களோ இல்லையோ வக்து தவறாமல் சீரியல் பார்க்கிறீர்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது சீரியல் முடிந்தப் பின்னரே தொழுகைகளை கோழி கொத்துவது போல் கொத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் மறுக்க முடியாது உங்களுடைய பச்சிளம் பாளகர்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவைகளைப் புறக்கனிக்க முயற்சி செய்யுங்கள். டிவியைப் புறக்கனித்து விடுங்கள் என்று நாம் கூற வரவில்லை அதில் வரும் தீமைகளைப் புறக்கனித்து விடு;ங்கள் என்றுக் கூறுகிறோம். )

ஒழுக்கத்தைப் பேனுதல்
தந்தையரே ! உங்கள் குழந்தைகளுக்கு முன்பாக நீங்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், என்ன இது அவர்கள் நமக்கு முன்பாக ஒழுக்கமாக நடந்து கொள்வதா ? நாம் அவர்களுக்கு முன்பாக ஒழுக்கமாக நடந்து கொள்வதா ? என்று நினைக்கக் கூடாது சிலப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு முன்பாக அமர்ந்து கொண்டு புகைப்பார்கள் அதுவும் ஈசிச் சேரில் சாய்ந்துகொண்டு மிக லாவகமாக புகையை ஆழமாக இழுத்து ரவுண்டு கட்டி விடுவார்கள், அதைப் பார்த்த கனமே இது போன்று நாமும் புகையை ரவுண்டு கட்டி விட்டால் எப்படி இருக்கும் என்ற சிந்தனை அவர்களுடைய பிஞ்சு மனதில் ஆழமாக வேரூன்றி விடும். ( சாதாரணமாக சுவைத்து புகைத்தாலும் )

வெளியில் போனதும் தருதலை ஒன்று பெட்டிக்கடை ஓரத்தில் 'தம்' அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுடன் இணைந்து மனதில் வேரூன்றிய ஆசையை தனித்துக்கொள்ள முற்படுவான் செயல் வடிவத்திற்கு கொண்டு வந்து விடுவான் அதனால் பிள்ளைகளுக்கு முன்பாக புகைப்பிடிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மொத்தத்திலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் சிகரெட் புகைப்பதெல்லாம் ஒன்றுமில்லை எனும் அளவுக்கு சமுதாயத்தில் கருதப் பட்டு விட்டதால் வீட்டிலும் தங்களது குழந்தைகளுக்கு முன்பதாக அமர்ந்து புகைப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது.

அதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும்போது ஒழுக்கத்தைப் பேணத் தவறாதீர்கள், தீய விஷயங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் அத்துடன் ஒவ்வொரு வக்து தொழுகைக்கும் ஜமாத்தை நோக்கிப் புறப்படுங்கள், குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள், பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிடுங்கள் வீட்டில் பேணவேண்டிய இஸ்லாமிய ஒழுங்கு முறைகளை பின்பற்றி நடக்கத் தவறாதீர்கள்.

சிறுவரான தமீம் இப்னு ஹத்லம், இப்னு மஸ்¥த் (ரலி) அவர்கள் முன்னிலையில் ஸஜ்தா வசனத்தை ஓதினார். அவரிடம் இப்னு மஸ்¥த் (ரலி) அவர்கள் 'நீர் ஸஜ்தாச் செய்வீராக! ஏனெனில் இந்த விஷயத்தில் நீரே நமக்கு இமாமாக இருக்கின்றீர்' என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர்(ரலி) நூல் புகாரி 1075.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடத்தில் குறைந்தது ... வருடங்கள் பணியாளராக பணியாற்றியவர்கள் போற்றுதலுக்குரிய நபித் தோழர் ஆனாலும் அவர்கள் சிறுவர் தமீம் அவர்களையே ஸஜ்தாவுக்கு முற்படுத்தினார்கள் அந்தளவுக்கு அந்த காலத்தில் சிறுவர்கள் மார்க்க அடிப்படையில் சிறந்து விளங்குபவர்களாகத் திகழ்ந்ததை மேற்கானும் நபிமொழி உணர்த்துகின்றது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

மேலும் படிக்க... Read more...

உபயோகமில்லாதவை வீட்டிலேயே இருக்கலாமா?

>> Sunday, February 11, 2007

உபயோகமில்லாதவை வீட்டிலேயே இருக்கலாமா?

மகாத்மா காந்தி வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள இங்கிலாந்து சென்றிருந்தார்.

மன்னரைச் சந்திக்க ஆடம்பர உடை அணிந்து வரவேண்டும் என்பது மரபு. ஆனால், காந்தி இடுப்பில் ஓர் வேஷ்டி, மேல் துண்டு என்று இருந்தார்.

காந்தியிடம், நிருபர்கள் இதுபற்றிக் கேட்டதற்கு...
'உங்கள் மன்னர் என்னைப் போன்று நான்குபேர் அணியக்கூடிய உடைகளை அணிந்திருக்கிறார். அதனால்தான் என் உடைகளை குறைத்துக் கொண்டேன்' என்றார்.

தேவைக்கு அதிகமாக உடுத்தும் உடையோ, உணவுப் பொருளோ கிட்டத்தட்ட திருட்டுத்தனம்தான்

ஏனென்றால், உங்களிடம் மிகுதியாக இருப்பது, இந்த உலகில் இருக்கும் இன்னொரு மனிதனுக்குக் கிடைக்க வேண்டியது.

ஆறு மாதங்களுக்கு மேல் எந்த ஒரு உபயோகமில்லாத பொருள் உங்கள் வீட்டில் இருந்தாலும், உடனே அந்தப் பொருளை ஏதாவது ஒரு சேவை நிறுவனத்திற்கு தானம் கொடுத்து விடுங்கள். யாராக இருந்தாலும், இந்த மனநிலைக்கு வருவது கொஞ்சம் கடினம்தான். அது வந்துவிட்டால் எதுவுமே நமக்குப் பெரிதாகப்படாத. எங்கும், எதிலும் சுகமாயிருக்கலாம்.

ஒரு பாரசீகக் கவிஞர், தான் வீட்டிலிருக்க நேர்ந்தால், வீட்டுக் கதவை மூடி, உட்புறம் தாளிட்டுக் கொள்வார்.வீட்டை விட்டு வெளியே புறப்பட்டால், கதவைத் திறந்து வைத்துவிட்டுச் செல்வார்.

காரணம் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்...

'மிகவும் விலை உயர்ந்த பொருளாக என்னை மட்டுமே நான் நினைத்துக் கொள்கிறேன். ஆகவே, விலையுயர்ந்த பொருள் வீட்டில் இருக்கும்போது, கதவைத் தாழ்பாள் இட்டு பாகாப்புச் செய்கிறேன்.'

அவர் சொன்ன பதில் கதையல்ல நிஜம். உலகம், பிரபஞ்சம் ஆகியன இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் இருக்கும் வரை மட்டுமே உங்களுக்கு அவை நிஜம்.

தன்னை உணர்ந்தவன் எங்கும், எதிலும் சுகமாக, சுதந்திரமாக இருக்கிறான். அந்த ஞானியைப் போல்!

தன்னை விட, சொத்து, சொந்தம், பதவி, புகழ் ஆகியவற்றை முக்கியமாகக் கருதுபவன் எங்கிருந்தாலும் சிறைப்பட்டு இருப்பான்! அவற்றை சுற்றிய எண்ணங்களாலேயே!
ரோஜாவுக்கு ஆசைப்படுகிறீர்களா?

பேரறிஞர் ஷிப்லிக்கு ஏராளமான ரசிகர்கள். ஒருமுறை, உடல்நலம் குறைவு காரணமாக படுத்திருக்கும்போது, ரசிகர் கூட்டம் அவரைப் பார்க்க வந்தது.

'நீங்கள் யார்?' எனக் கேட்டார் ஷிப்லி.
ரசிகர் கூட்டத்தினர் 'நாங்கள் உங்கள் ரசிகர்கள், உங்கள் அன்புக்கு உரியவர்கள்' என்றனர்.

ஷிப்லி உடனே தன் அருகே இருந்த பொருட்களை எடுத்து, அவர்கள் மீது வீசியெறிந்தார். அவர்கள் ஓடத் தொடங்கினர். உடனே அவர்...
'உங்கள் அன்புக்குரியவன் தந்த சிறு தண்டனையக்கூட, உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லயே!' என்றார் சிரிப்புடன்.

முட்கள் இல்லாத ரோஜாக்கள் உலகில் இல்லை. தவறுகள் செய்யாத மனிதன் உலகின் எந்த மூளையிலும் இல்ல.

ரோஜாவுக்கு ஆசைப்படுகிறீர்களா! முட்களைப் பிடிக்கத் தயாராகுங்கள். காதலிக்கிறீர்களா... காதலரின் சின்ன திட்டுக்கும் பெரிய திட்டுக்கும்கூட தயாராக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. தட்டும்போதும், திட்டும்போதும் அன்பு கலையாமல், ஆர்வம் குறையாமல் இருக்கப் பழகினால்...

மேலும் படிக்க... Read more...

நிஜநிலைமை தெரிந்தால்...

நிஜநிலைமை தெரிந்தால்...

நான் மேக்கப் போடவில்ல

1779_ம் ஆண்டுக்கும் 1837_ம் ஆண்டுக்கும் இடையில் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த ஜோ கிரிமால்டி என்பவர், ஒரு நகைச்சுவை சர்க்கஸ் கோமாளி.

1808_ம் ஆண்டில் ஒருநாள் மாலைப்பொழுதில் மான்செஸ்டர் நகரில் இருக்கும் டாக்டர் ஜேம்ஸ் ஹாமில்டனிடம், ஒரு நோயாளி மனது சரியில்ல என வந்தார்.

''சிரிக்கப் பழகுங்கள், வாழ்க்கை மீது உங்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடும்'' என்றார் டாக்டர்.

''எப்படிச் சிரிக்கப் பழகுவது?'' என்றார் நோயாளி. அதற்கு டாக்டர், ''இன்றிரவு நடைபெறும் சர்க்கஸ் காட்சிக்குப் போய், அங்கு கிரிமால்டி என்ற கோமாளியின் வேடிக்கயைப் பாருங்கள்'' என்றார்.

நோயாளி சிரித்துவிட்டு, ''டாக்டர்! மேக்கப் போடாமல் இருப்பதால் உங்களுக்கு அடையாளம் தெரியவில்ல. நான்தான் கிரிமால்டி'' என்றார்.

சாதனையின் உச்சியில் உட்கார்ந்திருக்கும் மனிதர்களைப் பார்த்து மனமொடிந்து போவீர்கள்.

அவர்களின் நிஜநிலைமை தெரிந்தால்... ஆச்சரியத்துக்குப் பதில் அழுகைதான் வரும்! உள்ளுலகம் முதிர்ச்சியில்லாமல், வெளி உலகில் சாதனையின் உச்சிவரை செல்வது..

புல் தரையில் சாவியை வைத்துவிட்டு, நூறாவது மாடியில் இருக்கும் தன் அறைக்கு நடந்தே செல்வதற்கு சமம்...

உள்ளுலகின் ஆழம் பார்க்காமல், வெளியுலகின் உயரம் பார்க்க முயற்சித்தவன் கதை. அது பாதகம்.

மேலும் படிக்க... Read more...

பிளாஸ்மா' டி.வி. 'எல்.சி.டி' டி.வி. ரெண்டுல எது நல்லது?

பிளாஸ்மா' டி.வி. 'எல்.சி.டி' டி.வி. ரெண்டுல எது நல்லது. பார்த்தால் ஒண்ணுபோலத்தான் தெரிகிறது. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே ஸ்லிம் அண்ட் ப்ளாட் ஸ்கிரீன் என்பதைத் தவிர வேறெந்த ஒற்றுமையும் இல்லை பிளாஸ்மா டி.வி.யில் ஜெனான் கேஸினால் ஆன லட்சக்கணக்கான பல்புகளை ஒளிரச் செய்து படம் உருவாகிறது. எல்.சி.டி.யில் வெண்ணிற ஒளிக்கதிரை லிக்விட் கிரஸ்டலின் வழியாகச் செலுத்தி நிறமாலையாகப் பிரித்துப் படம் உருவாகிறது. இரண்டுமே வளர்ந்து வரும் ஒரு தொழில் நுட்பம். எது நல்லது என்பது நமது தேவையைப் பொறுத்தது.

எல்.சி.டி. அடிப்படையில் டேட்டா டிஸ்ப்ளேவுக்காக உருவாக்கப்பட்டது. இப்பொழுது தொலைக்காட்சி தொழில் நுட்பத்தை அதில் புகுத்தி வருகிறார்கள். பலபேர் அமர்ந்து பார்க்கும் பொழுது, திரைக்கு நேராக இருப்பவர்களுக்கு துல்லியமாகவும் பக்க வாட்டில் மங்கலாகவும் தெரியும். இதைத்தான் வியூ ஆங்கிள் என்று சொல்வார்கள். அது எல்.சி.டி.யில் குறைவு. அதேபோல், கலர் நேச்சுரலாகத் தெரிவதற்கு கான்ட்ராஸ்ட் ரேஷியோ முக்கியம். அதுவும் எல்.சி.டி.யில் குறைவுதான். சாதகமான அம்சம், படங்கள் துடிக்காமல் சீராகத் தெரியும். ஷார்ப்னஸ் அதிகமாக இருக்கும். வெளிச்சமான இடத்திலும்கூட தெளிவாகப் பார்க்க முடியும்.

பிளாஸ்மா டி.வி.யைப் பொறுத்தவரை திரையின் அளவு பெரிதாக பெரிதாக படத்தின் குவாலிட்டியும் கூடும். குறையாது. கான்ட்ராஸ்ட் ரேஷியோ அதிகம் என்பதால் கலர் இயல்பாக இருக்கும். படத்தின் தரம் எல்லா இடத்திலும் ஒரே சீராக இருக்கும். வியூ ஆங்கிள் அதிகம். எங்கிருந்து வேண்டுமானாலும் நன்றாகப் பார்கக முடியும். குறைபாடு என்றால், எல்.சி.டியைவிட, விலை கூடுதல். வாழ்நாள் குறைவு. கரண்ட் செலவு அதிகம். மிக அருகில் இருந்து பார்க்க முடியாது.

முடிவாகச் சொல்வதென்றால் பெரிய வீடு, பெரிய திரை, பிளாஸ்மா பெஸ்ட். சின்ன வீடு. 30' குறைவான ஸ்கிரீன் என்றால் எல்.சி.டி. ஓ.கே. விலை அதிகம் என்பதால் ஆயுசுக்கும் ஓடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அதிக பட்சம் ஆறேழு வருடம். தவிர, இதற்கு மேலும் நீங்கள் ஆராய்ச்சி செய்தால் முன் வழுக்கைத் தவிர்க்க முடியாததாகிவிடும்.

மேலும் படிக்க... Read more...

சின்னவீடு

>> Saturday, February 10, 2007

சின்னவீடு

காலையிலிருந்தே படபடப்பாகத்தான் இருந்தது ஜரீனாவுக்கு.

'தேட் ஐ' டிடெக்டிவ் மகாதேவன் இன்றுதான் வரச் சொல்லியிருந்தார். நிச்சயமாய் ஏதோ விபரீதம் இருக்கிறது. இல்லையென்றால், சந்தேகப்பட ஒன்றுமில்லை. பி ஹேப்பி மேடம்! என்று போனிலேயே விஷயத்தை முடித்திருப்பார்.

பத்து வருஷம் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது. கணவன் ஊரில் இருக்கும் நாட்கள் குறைவுதான். பெங்களூர், கொச்சி என்று பல இடங்களில் சாஃப்ட்வேர் கம்பெனி வைத்திருப்பவருக்கு எப்போதும் சென்னையிலேயே இருக்க முடியுமா? திடீரென்றுதான் சந்தேகம் ஏற்பட்டது. எல்லாம் வீண் பிரமை என்று உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் டிடெக்டிவ் 'தேட் ஐ'யை அணுகியிருந்தாள்.

குழந்தைகள் பள்ளிக்குச் சென்றம் மாருதியைக் கிளப்பிக்கொண்டு விரைந்தாள் ஜரீனா. டிராபிக் நெரிசலில் அண்ணா சாலைய அடைவதற்குள் மணி 12 ஆகிவிட்டது.

பெரியதொரு கவரை நீட்டினார் டிடெக்டிவ் மகாதேவன். அவர் கண்களில் கனிவு...

'சார்...!' அவளுக்கு நடுக்கமாயிற்று.

'மேடம்! 16 வருஷம் முன்னாலேயே இக்பாலுக்கும் ; ஆமினாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்கிறது. ஸிக்ஸ் இயேர்ஸ் பிஃபோர் யுவர் மேரேஜ்... ஒரே மகள், . வய து 13.... கொச்சியில் அரண்மனைபோல் பங்களா....'

'ஓ!' விம்மலை அடக்கிக்கொண்டாள். வேதனை மேலிட முறுவலித்தாள்.

'சாரி, மேடம். இதோ படங்கள்...'

'பார்க்கத் தேவை இல்லை. அவருக்கு சின்னவீடு இருக்குமென்று சந்தேகப்பட்டேன். நான்தான் சின்ன வீடு என்று புரிகிறது. தேங்க் யு 'பார் த ட்ரூத்!' எழுந்தாள்.

மேலும் படிக்க... Read more...

எண்ணம் வலிமைப் பெற்றால் எல்லாம் கைகூடும்

எண்ணம் வலிமைப் பெற்றால் எல்லாம் கைகூடும்

எண்ணமே மொழியாகிறது
எண்ணமே செயல் வடிவம் பெறுகிறது.

நற்செயல்களையும், தீய செயல்களையும் உருவாக்கும் களமாக எண்ணம் திகழ்கிறது.

மனத்தில் தோன்றும் எண்ணம் மனக்காட்சியாகி உள்ளேயே ஒரு தோற்றமாக கட்டடமாக உருவாகிறது. அது தொடர்ந்து நிலைக்கும் போது செயல் வடிவம் பெறுகிறது என்பது அறிஞர்களின் கருத்து.

எண்ணம் எங்கும் ஊடுருவிச் செல்லும் வல்லமை வாய்ந்தது. எனவே இளைய பருவத்தில் எண்ணத்தை ஒழுங்கு செய்வது அவசியம்.

ஆற்றின் கரைகளுக்குள் நீர் ஒழுங்காகப் பாய்ந்தோடும் போது அதன் பயன் திட்டமிட்டவாறு மக்களைச் சென்றடைகிறது. ஆனால், கரைகளை மீறி காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போது அழிவை உண்டாக்குகிறது.

நமக்குத் தேவை ஆக்கமா? அழிவா?

இதன் கரு எண்ணத்தில் உருவாகிறது.
ஆக்கத்தை நோக்கி எண்ணத்தைச் செலுத்த ஒரே வழிதான் உண்டு. எனவே, இளைஞர்களே நல்ல எண்ணங்களை நாமே விரும்பி, முயன்று மனத்தில் இடைவிடாமல் இயங்கவிட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

விழிப்புடன் நல்ல எண்ணங்களை உள்ளே எப்போதும் உலவவிட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன் ஆகின்றான்.

பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் அறிவின் ஆழத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கலாம். இதற்கு பயிற்சியும், முயற்சியும் தான் தேவை.

தொடர்ந்து இவற்றை செய்து வந்தால் சில நாள்களுக்குள் உங்கள் அறிவும் பிரபஞ்ச அறிவும் ஒன்றாகச் சேரும். அப்போது நீங்களும் அறிஞராகவே ஆகலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவித்தால் இது சாத்தியமாகும்.

கண், காது, மூக்கு போன்ற அய்ம்புலன்கள் மூலமும் அன்றாடம் நம்மை நோக்கி பல காட்சிகளும், தகவல்களும் பாய்கின்றன.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் போன்ற பல ஊடகங்கள் நம்மில் ஊடுருவுகின்றன. அவற்றில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு.

நன்மையை தெரிவு செய்து தீமையை விலக்கும் தெளிவை நாம் பெறுவதற்கு எண்ணத் தூய்மை மிகவும் இன்றி யமையாதது.

தம் நினைவு அறிவில் தெளிவு பெற்றவைகளின் நினைவு ஆகியவற்றை எண்ணத்தில் நிலை பெறச் செய்து பழகினால் மனிதன் வாழ்வில் சிறப்புகளை அடைவான் என்பது உறுதி.

எண்ணத்தின் அளவையொட்டியே மனத்தின் தரமும், வாழ்வில் உயர்வும் அமைகின்றன.

குற்றம் குறையில்லாத மனத்தை உருவாக்கிக் கொள்ளுதல் தொடர்ந்த பழக்கத்தின் அடிப்படையிலேயே அமையப் பெறும். எனவே, எண்ணத்தை பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உரமூட்ட வேண்டும். எண்ணத்திற்கு உயிர் ஊட்ட வேண்டும்.

அது எப்படி?

குழியில் விழுந்த யானையை தூக்குவதற்கு மற்றொரு யானையை பயன்படுத்துவது போல எண்ணத்தைக் கொண்டுதான் எண்ணத்தை பண்படுத்த முடியும். எண்ணத்தின் தன்மையைத் பயன்படுத்தித்தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.

நாம் எண்ணுகிற செயல்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டு மென்றால், அதற்கு அடிப்படையாக எண்ணத்தை வலிமை பெறச் செய்ய வேண்டும்.

நன்றி: `வெப்-உலகம்’ .

மேலும் படிக்க... Read more...

இரத்தக் காய்ச்சல்

இரத்தக் காய்ச்சல்

அடிபட்டால் ஏற்படுகிற காயத்தின் வழியாக கிருமிகள் இரத்தத்தினுள் சென்று ஏற்படுகிற நோய். மனிதர்கள் அல்லது விலங்குகளின் மலத்தில் வளருகிற இக்கிருமி சாலை விபத்துகளின் போது மனிதர்களை எளிதில் பாதிக்கிறது.

கீழே விழுவதால் ஏற்படுகிற சிராய்ப்பு, காது குத்துதல் மற்றும் பச்சை குத்துதல், ஊசி மற்றும் கூரிய முனைகளால் ஏற்படுகிற காயம், காலில் முள் குத்துதல், சிறு குழந்தைகளுக்கு தொப்புள் கொடியை சுத்தமில்லாத கத்தியால் வெட்டுதல், காதில் சீழ் போன்றவைகளின் போது இந்நோய் ஏற்படுகிற வாய்ப்புகள் உள்ளன.

அறிகுறிகள்

சீழ் வடிகிற புண் (சில பொழுதுகளில் புண் ஆறியிருந்தாலும் இந்நோய் வரலாம்)
.
விழுங்குவதில் சிரமம், தாடை இறுக்கம், கழுத்து தசைகளின் இறுக்கம், கடுமையான வலியுடன் கூடிய வலிப்பு, உடல் முழுவதும் விரைப்பாகி கழுத்தும் முதுகும் பின்னோக்கி வளைந்து விடுதல், சத்தத்தைக் கேட்டால், வெளிச் சத்தைப் பார்த்தால் உடல் விரைப்பு மேலும் அதிகமாகுதல், சிறு குழந்தைகளுக்கு பிறந்த பத்து நாள்களில் தொடர்ந்து அழுதல், பால் உறிஞ்ச முடியாமை தொப்புளில் சீழ், தாடை இறுக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இதை எளிதில் உறுதிப்படுத்த முழங்காலுக்கு கீழ் லேசாக தட்டினால் பாதம் விசுக்கென்று தூக்கும் (இயல்பாக அப்படி இராது). இரத்தக் காய்ச்சல் உறுதிபடுத்தினால் தீவிர சிகிச்சையளித்து காப்பாற்ற முடியும். இதை எளிதில் தடுக்கலாம். இரத்தக் காய்ச்சல் தடுப்பு ஊசிகளை குழந்தைகளுக்கு முறையாக போடவேண்டும். பெரியவர்களுக்கும் காயம் பட்டால் போடுவது அவசியம்.

மேலும் படிக்க... Read more...

நிமோனியா

>> Friday, February 9, 2007

நிமோனியா

நிமோனியா என்ற நுரையீரல் பாதிப்பை வைரஸ், பாக்டீரியா, காளான் போன்ற பல்வேறு வகைக் கிருமிகள் உண்டாகுகின்றன. குறிப்பாக, புகை பிடிப்பவர்கள், மது விற்கு அடிமையானவரர்கள், உடலில் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்கள், சிறுவர்கள், வயதானவர்கள் எய்ட்ஸ் பாதிப்படைந்தவர்கள், சர்க்கரை நோயினர் போன்றவர்களுக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தும்.

எப்படி தாக்குகிறது?

கிருமிகளில் முக்கியமாக ஸ்ட்ரெப்டோ காக்கஸ், இன்புளுயன்சா, மைக்கோ பிளாஸ்மா, லெஜியோனெல்லா, ஸ்டைபிளோ காக்கஸ் ஆரியஸ், கிளப்சில்லா நீமோசிஸ் டைடிஸ் கேரினி போன்றவை காற்றின் வழியாக சுவாசப் பாதையில் நுழைந்து நுரையீரலைப் பாதிக்கிறது. அங் கிருந்து இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் கிருமி களில் நஞ்சு பரவிவிடும். கடுமையான நஞ்சுபாதிப்பினால் சுவாசம் பாதிக்கப்பட்டு செப்டிசீமியாவும் உண்டாகி உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகிவிடும்.

அறிகுறிகள்
திடீரென காய்ச்சல், கடுமையான இருமல், இருமலில் கோழை, கோழையில் இரத்தம், நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், குழப்பம், சாப்பிட இயலாமை, வலிப்பு (குறிப்பாக குழந்தை களுக்கு).
நுரையீரலிலிருந்து கிருமிகள் நுரையீரலின் சவ்வைத் தாக்கி அங்கு நீர் சேர்த்துவிடும். அந்நீர் நுரையீரலை அழுத்தி சுவாசத்தை சிக்கலாக்கும், இரத்தத்தில் கிருமி களின் பாதிப்பு ஏற்பட்டால் செப்டிசீமியா மற்றும் சுவாசச் செயலிழப்பு ஏற்படும்.

சிகிச்சை முறைகள்
பொதுவாக வைரஸ் பாதிப்பினால் ஏற்படுகிற நிமோனியா தாமாகவே குணமாகிவிடும், பாக்டீரியாக்களின் பாதிப்புகளும் ஆன்டிபயாட்டிக் கொடுத்தால் விரைவில் குணமாகி விடும், ஆனால் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு கொண்ட சில நிமோனி யாக்கள் மட்டுமே சிக்கலை உருவாக்கி விடும், காய்ச்சலுக்கு பாரா சிடமாலும் கிருமிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளும் பயனளிக்கும். மேலும் தேவை யான குளுக்கோஸ் கலந்த திரவங்களை இரத்தக் குழாய் மூலமாகச் செலுத்த வேண்டும். மூச்சுத் திணறல் வந்தால் ஆக்ஸிஜன் மற்றும் செயற்கைச் சுவாசமும் கொடுத்தல் அவசியம்.

மேலும் படிக்க... Read more...

துன்பங்கள் என்பவை?

துன்பங்கள் என்பவை?
பயிற்சிக் களங்கள்.

பயிற்சிக் களங்கள் என்றால்?
புத்திசாலிதனத்தை உங்களுக்குள் வலுக்கட்டாயமாகவாவது வளரச்செய்யும் வாழ்வின் பகுதிகளே இவை.

தோல்வி என்பது?
வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம்.

வெற்றியைத் தொட இன்னும் எவ்வளவு தூரம் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும் எனச் சொல்லும் அளவீடு தோல்விகள்.

சாதாரண மனிதர்களின் பாசமெல்லாம் வேஷம் என்பது சரிதானா?
நிச்சயம் தவறல்ல.

ஜாங்கிரி விரும்பிச் சாப்பிடப்படுவது. அதை
ஜாங்கிரி என்பதால் அல்ல. அதன் இனிய சுவையால்!

சாதாரண மனிதனின் பாசம் என்பது இன்னொரு மனிதர் என்பதால் அல்ல. அவரின் பொருள் சொல் உடல் குணம் ஆகியவற்றின் இனிய சுவைக்காகத் தரும் கூலி மட்டுமே.

காதலர்கள்?
அதிர்ஷ்டசாலிகள் என்று நம்பிக்கொண்டிருக்கும் துர்அதிர்ஷ்டசாலிகள்.

இன்றைய தம்பதியர்?
துர்அதிர்ஷ்டசாலிகள் என நம்பிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.

யார் நிஜமான அதிர்ஷ்டசாலிகள்?
எங்கிருந்தாலும் ஏங்காமல் இனிமையாய் இருக்கத் தெரிந்தவர்களே அந்த அதிர்ஷ்டசாலிகள்.

மரணம்?
முடிவல்ல. அடுத்த வாழ்க்கையின் துவக்கம்.

உடல்?
உயிர் மீது போடப்பட்ட சட்டை.

நாம் யார்?
இறைவனின் சொக்கட்டான் காய்கள்.
---------------------------

தன் மகன் பெரிய இசைக் கலைஞனாக்க வேண்டும் என்று அந்தப் பெற்றோருக்கு ஆசை. அவனுக்கு எந்த இசைக் கருவி பிடிக்கிறது என்பதற்காக ஒரு காரியம் செய்தார்கள்.

அவனுக்கு ஐந்து வயதாகும்போது ஒரு வயலினை பரிசளித்தார்கள். அந்த வயலினை வைத்து மகன் விளையாடுகிறானா என்று கவனித்தார்கள். முதல் இரண்டு நாட்கள் மகனுக்கு வயலின் மேல் பெரிய ஆர்வம் வரவில்லை. மூன்றாவது நாள் அவனது அறையைப் பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சி. வயலின் தனித்தனி பாகங்களாக கழற்றப்பட்டுக் கிடந்தது.

மகனுக்கு வயலின் பிடிக்கவில்ல என்ற முடிவுக்கு வந்த பெற்றோர் அவனுக்கு கிதாரை வாங்கிக் கொடுத்தார்கள். அதுவும் நான்காவது நாள் பிரித்துக் கிடந்தது.

அடுத்து ஒரு மௌத் ஆர்கனை வாங்கிக் கொடுத்தார்கள். அதற்கும் அதே கதி.

பெற்றோருக்குப் புரியவில்லை. ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து காரணம் கேட்டார்கள்.

'உங்கள் மகனை இசைக் கலைஞனாக மாற்ற முயலுவதைவிட ஒரு இன்ஜினீயராக உருவாக்க முயலுங்கள். அவனுக்கு அதில்தான் ஆர்வம் இருக்கிறது" என்றார் அவர்.

உண்மையில் பிற்காலத்தில் அப்படித்தான் நடந்தது.

மேலும் படிக்க... Read more...

பயத்தைப் போக்குவது....

>> Thursday, February 8, 2007

பயத்தைப் போக்குவது....

பயத்திற்குக் காரணம் :

ஒரு பொருளின் மீதோ அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையின் மீதோ தோன்றும் அர்த்தமில்லாத அச்சம், பீதிதான் பயத்திற்குக் காரணம்.

இந்த பொருளற்ற பயம், ஒரு சில நுண்ணிய பொருட்களாலோ, சில வியாதிகளாலோ, சிலருக்கு, பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி, பூனை போன்ற பிராணிகளைப் பார்ப்பதாலோ ஏற்படும். சிலருக்கு விமானப் பயணத்தின்போது இந்த பயம் தோன்றும். சிலருக்கு மூடிய அறைக்குள் இருக்கும்போது பயமாக இருக்கும். சிலருக்கு மக்கள் கூட்டத்தைக் கண்டால் பயந்து ஒதுங்கிப் போய்விடுவார்கள்.

அறிகுறிகள் : பயம்தான் மனநலக்குறைபாடுகளின் பொதுவான அறிகுறி. அச்சஉணர்வு, எரிச்சல், சோர்வு, தளர்ச்சி, மனக்குழப்பம், வேகமான இதயத்துடிப்பு, மூச்சுத்திணறல், விரல் நடுக்கம், கைகால்கள் வியர்த்தல் போன்ற அசாதாரண நிகழ்வுகள் பயத்திற்கு முன் நிகழும். தூக்கமின்மையும் அதனால் தலைவலியும் ஏற்படும்.

ஒரு சிலருக்கு உடல்ரீதியான அறிகுறிகள் தென்படும். கைகால்கள் இயங்க மறுத்தல், பேச நா எழாமை, பார்வைக் கோளாறு, காது கேளாமை, விஷக்காய்ச்சல், காக்காய் வலிப்பு போன்ற அறிகுறிகளால் இதனை உணரலாம். தன்னிலை மறந்த நிலை, ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்ட நிலை போன்ற வெளிப்பாடுகளயும் பயம் தோற்றுவிக்கும்.

பயத்தைப் போக்குவது எளிது?

பயம்தான் எல்லா மனநோய்களுக்கும் பொதுவான அறிகுறி என்பதால், அதை உடனே போக்கிவிடவேண்டும்.

1. எந்தவொரு பயத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நம் பயத்தைப் போக்கி உதவ ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமே பாதி பயத்தை நீக்கிவிடும்.

2. பூனை, பல்லியைக் கண்டு பயம் என்றால் அவற்றை விரட்டும் மார்க்கத்தை உங்களச் சுற்றியுள்ளவர்களக் கொண்டு செய்ய வைக்கவேண்டும்.

3. எதிர்காலம் பற்றிய அச்சம் தோன்றும்போதெல்லாம் அதை மறக்க உடனடியாக வேறொரு வேலையில் ஈடுபட்டு மனதை திசை திருப்ப வேண்டும். குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போடுவது, கிழிந்த துணிகளைத் தைப்பது,; படிப்பது என்று மனதை மாற்றலாம்.

4. பய உணர்வு எழும்போதெல்லாம் ஏதாவது ஒரு பெரியவரின் மேற்கோள்களை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். பயஉணர்விலிருந்து வெகுதூரத்திற்கு வந்துவிடுவீர்கள்.

5. நம் மூளையில் உள்ள ரசாயனப் பொருட்களின் அளவில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டாலும் இந்தப் பயஉணர்வு அதிகரிக்கலாம். உடற்பயிற்சியின் மூலம் அந்த ரசாயனத்தின் அளவுகளை சரி நிலைக்குக் கொண்டு வரமுடியும். அதிகாலை உடற்பயிற்சி, மாலை வாக்கிங், சைக்கிளிங், நீச்சல், ஸ்கிப்பிங் என்று ஏதாவது ஒரு பயிற்சியைத் தொடர்ந்து செய்து வரலாம்.

6. தொழுகையின் மூலம் இழந்த நம்பிக்கையை உங்களால் பெறமுடியும். நம்பிக்கை வந்துவிட்டாலே பயம் ஓடியே போய்விடும்.

7. தூங்கும்போதுதான் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். மனம் குழப்பமின்றி ஓய்வாக இருக்கும். அதனால் தூக்கத்தின் மூலம் உற்சாகத்தையும், பயத்தைப் போக்கும் திடத்தையும் அடைய முடியும்.

8. கட்டுப்பாடான உணவு அவசியம். காய்கறி, பால், அசைவம் எதுவானாலும் சமச்சீர் உணவாக இருக்கவேண்டும்.
--------------------------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

மேலும் படிக்க... Read more...

சிக்கனமா? - வரவு எட்டனா!! சிலவு பத்தனா!!! கடைசியில் தொந்தனாவா???

சிக்கனமா? - வரவு எட்டனா!! சிலவு பத்தனா!!! கடைசியில் தொந்தனாவா???

வாழ்க்கையில் சிக்கனம் என்பது எக் கணமும் கடைபிடிக்கவேண்டிய தங்க விதிகளில் தலையாய விதி ஆகும்!

வருவாய் என்ன, எவ்வளவு நாம் அதில் செலவு செய்தது போக, மிச்சப்படுத்தவேண்டும் என்று சிறு வயதிலிருந்தே பழகிட இளைஞர்களுக்கும் நாம் சொல்லிக் கொடுத்துப் பழக்குதல் மிகவும் தேவையான பணியாகும்!

பலருக்கு எப்போதும் பற்றாக்குறை `பட் ஜெட்’தான்; ஏன் அவர்களுக்கே புரிவதில்லை!

`பற்றாக்குறை பட்ஜெட்’ போடும் உரிமை அரசுகளுக்கு மட்டுமே இருக்கவேண்டிய உரிமையாகும்.

அதனைத் தனி மனிதர்கள் பயன்படுத் தினால், திக்குத் தெரியாத காட்டில், திசை மாறி அலைந்து கொண்டிருக்கும் நபர்களாகவே `அல்லாட’ வேண்டிவரும்.

``100 ரூபாய் வரவு என்றால், நீங்கள் அதில் 99 ரூபாய் செலவு செய்துவிட்டு, மிச்சமாக ஒரு ரூபாயை வைத்திடும் பழக்கத்தை - சிக்கனத்தின்மூலம் சேமிப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்; பிறகு உங்கள் குடும்ப நிலை, தானே உயர்ந்திடும்’’

உங்களுக்கு அதிக வருவாய் வராவிட் டாலும் பரவாயில்லை; வருகின்ற வருமானத்தில் பயனுள்ள செலவுகளுக்கு ஒதுக்கிவிட்டு, மற்ற வீண் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால், வருவாய் பெருகியதாகவே உணர முடியும்.

நம் வருவாய்க்குள்பட்டு செலவழிக்கப் பழகும் எவருக்கும் எப்போதும் நிம்மதி - மன நிறைவு உண்டு. கடன் தொல்லை என்ற கவலை அவர்தம் தூக்கத்தைக் கெடுத்து துக்கத்தைத் தராது!

வாழ்க்கையின் முதல் பொருளாதாரப் பாடமே, நாம் எவ்வளவு வருவாய் பெறுகிறோம்; அதை எப்படி நாளும் செலவழிக்கிறோம் என்று குறிப்புகளை ஒரு சிறு குறிப்பேடு போன்ற பையில் அடங்கும் சிறு `பாக்கெட் நோட்டை’ வைத்து அன்றாடம் செலவழிப்பதை அதில் ஒவ்வொரு முறையும் குறித்துக் கொண்டால் மறக்காமல் பதிவு ஆகும்.

ஒரு பெரு வணிகர். அவருடைய பழக்கம் எப்போதும் ஒரு சிறு தாளில் மடித்து சிறிதாக அதை வைத்துக் கொண்டு செலவு களை உடனுக்குடன் குறித்துக் கொள்வார்!

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத் தினைச் சேர்ந்த பெரும்பாலோருக்கு இத் தகைய பழக்கம் பிறவிப் பழக்கம்போல இருக்கும்!

நாம் செலவழிக்கும் தொகைகளை எழுதிப் பார்த்தால் தான் எது தேவையான செலவு, எது வீண் செலவு - என்று புரிந்துகொண்டு அதற்கேற்ப நம்மைத் திருத்திக் கொண்டு உயர்த்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படக் கூடும்.

சிலருக்கு வருகின்ற வருவாய் என்ன என்பதுபற்றியும் தெரியாமல், எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதுபற்றியும் தீர யோசியாமல் `டம்பாச்சாரித்தனம்’ செய்தால், பிறகு வாழ்வில் அவமானப்பட்டு தெருவில் நிற்கவேண்டியதாகி விடும் அவல நிலை ஏற் பட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எதற்கும் எல்லை உண்டு அல்லவா? அதுபோல, வருமானம் என்றாலும் அது அளவினைக் குறிப்பதுதான் என்பதை உணர்ந்தவர்கள், தேவையானவற்றிற்குச் செலவழித்து, மீதியை மிச்சப்படுத்துவர்.

சிக்கனத்தைப் பற்றி ஒரு தவறான கருத்துக் குழப்பம் பலரிடம் நிலவுகிறது!
`சிக்கனம்’ என்பதைக் `கருமித்தனம்’, `கஞ்சத்தனம்’ என்று குழப்பிக் கொள்கிறார்கள்.

`கருமித்தனம்’, `கஞ்சத்தனம்’ என்பது தேவையானவற்றிற்குக் கூட செலவழிக்காமல், தன்னிடம் உள்ள செல்வத்தை சேமித்து மகிழவேண்டும் என்பதற்காக பட்டினி கிடப்பவர் பணக்கார பாமரர்கள்!

தேவையானவற்றிற்குச் செலவழிப்பதும், ஆடம்பரத் தேவைகளை வெறுத்து ஒதுக்கி எளிமையும், ஏற்றமும் மிகும் வாழ்க்கை வாழ்வது சிக்கன வாழ்க்கையாகும்!

அள்ளிக் கொடுக்கவேண்டிய தேவை (தொண்டறப் பணிகளுக்கு) இருப்பின் அள்ளிக் கொடுத்தால் அது ஆடம்பரம், வீண் செலவு ஆகாது! அப்போது அள்ளிக் கொடுப்பதற்குப் பதில் கிள்ளிக் கொடுத்தால் அது கஞ்சத்தனம், கருமித்தனம்.

கிள்ளிக் கொடுக்கவேண்டியவர்களுக்கு அள்ளிக் கொடுத்தால், அது ஊதாரித்தனம்! உலகம் மெச்ச வேண்டும் என்பதற்காக விளம்பர வெளிச்ச வாணவேடிக்கையுங்கூட!

இவற்றைப் புரிந்து வாழ்ந்து காட்டுவோம் வெல்வோம்!
--------------------------------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

மேலும் படிக்க... Read more...

பேயடிக்கிறதா? சாக்லெட்டில் மனித ரோமம் ? கூனிக்குறுகி படுத்து தூங்கலாமா?++

>> Wednesday, February 7, 2007

கூனிக்குறுகி படுத்து தூங்கலாமா?

சிலர் கூனிக் குறுகி படுத்து தூங்குவார்கள். அவர்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் அப்படித்தூங்கக் கூடாது என்று அறிவுறுத்துவார்கள்;. அது எதற்காக என்றால் ரத்த ஓட்டம் எல்லா உறுப்புகளுக்கும் சீராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். கூனிக் குறுகி படுத்தால் அவ்வாறு சீராக ரத்தம் செல்லாது.

அதேபோல் சிலர் சாப்பிட்ட பிறகு குளிப்பார்கள். அது தவறு. அப்படி செய்யக் கூடாது
.
உணவருந்திய பிறகு குளித்தால் உணவு ஜீரணம் நடக்க கால தாமதம் ஆகும். மற்றும் வயிற்றில் இரைச்சல், உப்புசம் உண்டாகும்.

பேயடிக்கிறதா?
நுரையீரலில் ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தினால் நுரையீரலில் உள்ள அல்வியோல எனப்படும் காற்றுப்பைக்குள் ரத்தத்திலிருந்து நீர் சென்றுவிடும்.

இந்த நீர், காற்றுடன் கலக்கும்போது நுரை உண்டாகிறது. இருமும்போது, அதுதான் ரத்தத்துடன் வெளிவருகிறது.

இதைத்தான் பேயடிப்பதாகக் கூறுகிறார்கள். நுரையீரலில் ரத்த அழுத்தம் அதிகமாகும்போது, அங்கு ஆக்ஸிஜன் - கரியமிலவாயு மாற்றம் தடைபடுகிறது. நோயாளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட இதுதான் காரணம்.

கண்களின் சக்தி
கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும், மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை. பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும், குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள்; உணர்ந்து விடும்.

வழிகாட்டும் செடி...
தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும் ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும். கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும். இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப் பயணிகள்; திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்;.

பாக்டீரியா
பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி.
ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்துக்கோடி பாக்டீரியாக்கள்; இருப்பதாக விஞ்ஞானிகள்; ஆய்ந்துள்ளனர்.

புதிதாக வீடு கட்டும் பொழுது சுவற்றுக்கும் தளத்திற்கும் தண்ணீர் ஊற்றுகிறார்களே அது ஏன்? எவ்வளவு நாள் ஊற்ற வேண்டும்?

''சிமெண்ட்டுக்கு தண்ணீர் ஊற்றுவதை க்யூரிங் என்று சொல்வார்கள். கட்டிடத்தின் உறுதிக்காக நாம் உபயோகப்படுத்தும் சிமெண்ட், தன் முழு வலிமையயும் பெறுவதற்கு, இந்த க்யூரிங் மிக அவசியம். சுவற்றுப்பூச்சுக்கு உலர உலர ஊற்றலாம். பில்லர்களுக்கு, கோணியைக் கட்டி அது எப்பவும் ஈரமாக இருக்கும்படி தண்ணீர் ஊற்ற வேண்டும். மேல் தளத்தைப் பொறுத்த வரை பாத்தி மாதிரி கட்டி எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும்படி செய்ய வேண்டும். இதை 21 நாட்கள் செய்தால் கட்டிடம் உறுதியாகவும், விரிசல் வராமலும்இருக்கும்!''

கலோரின்னா என்ன? சராசரியா ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தன கலோரி தேவைப்படும்?

''நாம் சாப்பிடும் உணவு உடம்பில் எரிக்கப்பட்டு சக்தியாக மாறுவதைத்தான் கலோரியாகக் கணக்கிடுகிறார்கள். இது உணவுக்கு உணவு மாறுபடும். அதேபோல் நாம் செய்யும் வேலையப் பொறுத்து, தேவையான அளவும் வித்தியாசப்படும்.

உட்கார்ந்த இடத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 1200 கிலோ கலோரி தேவைப்படும் என்றால் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு 1500 வரை தேவைப்படும். ஆண்களுக்கு வேலையப் பொறுத்து 1800-லிருந் 2000 கிலோ கலோரி தேவைப்படும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், கலோரி என்பது தேவையான சக்தியின் அளவு. இதற்கும் சத்துக்கும் சம்மந்தமில்ல. ஒரு கப் ரைஸில் 400 கிலோ கலோரி இருக்கும். 4 கப் ரைஸ் சாப்பிட்டால் 1600 கிலோ கலோரி கிடைத்துவிடும். ஆனால் அதில் நமது உடம்புக்குத் தேவையான எல்லா சத்துக்களும் இருக்காது.

ஆரோக்கியமான உடம்புக்கு சக்தியுடன் சத்தும் தேவை. அதனால் கலோரியைப் பற்றி கவலைப்படாமல் அரிசி, காய்கறி, பழம், பால் என்று எல்லா விதமான உணவையும் ரெகுலராகச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதுதான் நல்லது''

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்!

குழந்தைகளுக்கு சாக்லெட் தரலாமா? அதில் மனித
ரோமம் கலக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே, உண்மையா?


''நம்ம முடியில நிறைய புரோட்டீன் இருக்கு. அதை பதப்படுத்தி சில வகை உணவுப் பொருட்களில் சேர்ப்பதுண்டு. உணவில் புரோட்டீன் அளவை அதிகப்படுத்த அப்படி செய்வார்கள். அந்த வகை உணவுகள் எல்லாமே பார்மாசூட்டிகல் பிராடக்ட், அதாவது மருத்துவ தயாரிப்பாகத்தான்

விற்பனக்கு அனுமதிக்கப்படும். அதைத் தவிர்த்து சாக்லெட் மாதிரி நாம் சாதாரணமாக சாப்பிடும் எந்த உணவிலும் மனித உரோமத்தை பயன்படுத்தக் கூடான்னு சட்டமே இருக்கு.

இப்போ சாக்லெட் மாதிரி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 'HACCP' ன்னு ஒரு சான்றிதழை அரசாங்கம் வழங்குகிறது இந்தக் குறியீடுள்ள எந்த சாக்லெட்டிலும் தவறிக் கூட ஒரு சின்ன முடி மட்டுமல்ல, கேடு விளவிக்கக் கூடிய எந்த அம்சமும் இருக்காது.
ஏன்னா கெடுதல் இல்லாமை தயாரிக்கத் தேவையான கருவிகள் முதல் அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கான சாஃப்ட்வேர் வரை இருந்தால்தான் 'HACCP' சான்றிதழ் கிடக்கும். அதனால சாக்லெட்டுல 'HACCP' குறியீடு இருக்கிறதான்னு பார்த்து வாங்கினா எந்த பயமும் இல்லாம சாப்பிடலாம். கலர் பேப்பர்ல சுத்தினதெல்லாம் சாக்லெட்டுன்னு வாங்கினா கொஞ்சம் ரிஸ்க்தான்!''

ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிச்சா ஸேஃப்?
அதிகமா குடிக்கறவங்க குறைச்சா போதுமா. கண்டிப்பா நிறுத்தணுமா? நிறுத்தின பின்னாடி பழைய பாதிப்பை எப்படி சரி பண்றது?

''நீங்க ஒரு தம் அடிச்சா போதும், அதுக்கு என்ன டேமேஜ் நுரையீரல்ல ஏற்படுமோ அது ஏற்பட்டே தீரும். சிகரெட் குடிக்கும்போது எந்த பாதிப்பும் இருப்பதுபோல் தெரியாது... ஆனால் இன்னிக்கு குடித்த சிகரெட்டுக்கு பலனை, இப்பொழுது நிறுத்தினாலும் இருபது வருடம் கழித்தாவது அனுபவித்தே தீரணும். பாதிக்கப்பட்ட நுரையீலை மருந்து சாப்பிட்டெல்லாம் பழய நிலைக்கு கொண்டு வர முடியாது.

சிலர் கேட்பார்கள். 'நான் ஒன்றிரண்டுதான் குடிக்கிறேன். அவர் ஆறேழு பாக்கெட் குடிக்கிறார். ஆனால் என்னை விட ஆரோக்யமாக இருக்கிறார்'ன்னு. குடிக்கின்ற சிகரெட்டில் உள்ள விஷத்தின் அளவு எல்லாருக்கும் ஒன்றுதான். ஆனால் அது சிலரை சீக்கிரம் கொன்றுவிடும். சிலரைக் கொல்வதற்கு கொஞ்ச நாட்கள் அதிகமாகும். அது அவரவரது மரபணுவின் தன்மையச் சார்ந்தது. ஆனால் யாராக இருந்தாலும் இயல்பான ஆயுட்காலம் சிகரெட்டால் குறைக்கப்படுவது தவிர்க்கவே முடியாதது.

பிடிச்சிருக்கிறது ஸ்டலா இருந்தாலும் அது புலி வாலு மாமு...

சோப்புல கூட ஆண்களுக்கு, பெண்களுக்குன்னு தனித் தனி சோப்பு இருப்பதாக சொல்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

''நமது சருமத்தை மூணு வகையா பிரிக்கலாம். நார்மல் ஸ்கின், ஆயில் ஸ்கின், ட்ரைஸ்கின்.

காரத்தன்மை அதிகமுள்ள சருமத்தை ட்ரை ஸ்கின் என்றும், அமிலத் தன்மை அதிகமுள்ள சருமத்தை ஆயில் ஸ்கின் என்றும், சம அளவில் உள்ளதை நார்மல் ஸ்கின் என்றும் சொல்கிறோம். இதற்கேற்றவாறு சோப்புகளிலும் அமிலத்தமை, காரத்தன்மை இரண்டையும் கூட்டிக் குறைத் தயாரிப்பார்கள். நமது சருமத்திற்கு எது பொருத்தமானதோ அதை வாங்கிப் போட்டுக் கொள்ளலாம்.

காலையில் தூங்கி எழுந்ததும் டிஷ்யூ பேப்பரால் முகத்தை ஒற்றி எடுங்கள். பேப்பரில் பிசுபிசுப்பே இல்லையென்றால் டிரை ஸ்கின். திட்டுத் திட்டாக சில இடத்தில் மட்டும் இருந்தால் நார்மல் ஸ்கின். முகம் முழுவம் பிசுபிசுப்பாக இருந்தால் ஆயில் ஸ்கின். இனி உங்கள் சருமத்திற்கேற்ற சோப்பை நீங்களே பார்த்து வாங்கிக் கொள்ளவும். ஆண், பெண் பாகுபாடெல்லாம் வியாபார நோக்கத்துக்குத்தான்.''

என்னதான் வெளியில மினுமினுப்பை ஏத்திக்கிட்டாலும் உள்ளுக்குள்ள பார்ட்ஸ் ஒழுங்கா இருக்கணுங்கண்ணா. இல்லைன்னா வண்டி உருளும்; ஊர்ப் போய்ச் சேராது 'ஸ்டேண்ட் போட்ட சைக்கிளை மிதிச்சு ஸ்டேட்சுக்கு போக முடியுமா?'. டேக் கேர் பிரதர்ஸ்... வரட்டுமா?


இருட்டில் (வெளிச்சம் இல்லாமல்) டி.வி. பார்ப்பது நல்லதா?

''இருட்டில் வெளிச்சம் இல்லாமல் டி.வி. பார்ப்பது நல்லதல்ல. தொலைக்காட்சியிலிருநது; கண்ணுக்குப் புலப்படாத சில கதிர்கள் வெளியேறுவதால், இருட்டில் டி.வி. பார்க்கக்கூடாது என்று சிலர் தவறாக நினக்கிறார்கள்.

உண்மையான காரணம் என்னவென்றால், இருட்டில் மிக அதிகமான வெளிச்சத்தோடு பளிச்சென்று தெரியும் டி.வி.யை நீண்டநேரம் பார்க்கும்போது, கண் எரிச்சல் அடைகிறது. இது நம் கண்களுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தச் சிக்கலைத் தவிர்க்க மங்கலான வெளிச்சம் கொண்ட ஒரு விளக்கை எரிய விட்டு, அந்த வெளிச்சத்தில் டி.வி. பார்த்தால் நல்லது''

ரெப்ரிஜிரேட்டரில் காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவுகள் எத்தனை மணி நேரம் வைத்திருந்தால் ருசி கெடாமல் இருக்கும்?
''என்னுடய தனிப்பட்ட கருத்து, சமைத்த எந்த உணவுப் பொருளயும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடக் கூடாது என்பதான். ஆனால், வேகமாக மாறி வரும் இந்த உலகில், சில விஷயங்களை தவிர்க்க முடியாமல் பலரும் செய்து வருகிறார்கள்.

சமைத்த உணவை எட்டு முதல் பத்து மணி நேரத்துக்கு மேல் வைக்கவே கூடாது. காய்கறிகளை மூன்று நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது. காய்கறிகளை கட்டாயம் வெட்டி வக்கக் கூடாது. பழங்களைக்கூட ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வைக்க வேண்டும்.''

காலில் கண்ணாடி குத்திவிட்டதா?
ஓமத்தை வெல்லத்டன் அரைத்துக் கிளறிக் கட்டுங்கள். எவ்வளவு சிறிய துண்டானாலும் வெளியே வந்விடும்.
கைகளில்-கால்களில் ஏற்படும் சுளுக்கு
வெள்;ளைப் பூண்டை நசுக்கிச் சாறு எடுத்துச் சிறிது உப்புத்தூளை அதில் சேர்த்துக் கையிலோ காலிலோ தடவினால் சுளுக்குப் போய்விடும்.

நல்ல ஆரோக்கியத்திற்குப் பச்சரிசி நல்லதா? அல்லது புழுங்கலரிசி நல்லதா?

பச்சரிசி பத்தியத்திற்கு விலக்கான. வாத, பித்த, கப நோய்கள உண்டாக்கும் தன்மை கொண்டது. பித்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது மிகுந்த பலத்தை அளிப்பது.
ஆனால் புழுங்கல் சிறுவர் முதல் அனைவருக்கும் நல்ல உணவாகும். வயிற்றுக்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது. பத்தியக்காரர்களுக்கு இந்த அரிசியில் சமைத்த உணவையே கொடுக்க வேண்டும். உடலுக்குப் போதிய வலிமையத்தராது என்றாலும் உடல் நலத்தைப் பொறுத்த வரையில் புழுங்கல் அரிசியே மிகவும் சிறப்புடையதாகும்.
எனவே, பச்சை அரிசியை விடவும் புழுங்கல் அரிசியில் தயாரித்த உணவையே உண்ணுவது சிறப்பானதாகும். வாத பித்த கப நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் புழுங்கல் அரிசிக்கே உண்டு. ஆதலால் நோயாளிகள் குறிப்பாக வாத நோயாளிகள் புழுங்கள் அரிசியில் செய்யப்பட்ட உணவையே உண்ண வேண்டும்.
------------------------------------
மற்ற பதிவுகளுக்கு கீழே அழுத்துங்கள்
VANJOOR

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP