**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக

>> Monday, April 30, 2007

தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் முன்னாள் தலைவரான ஜார்ஜ் டெனட் (George Tenet) குற்றம் சாட்டியுள்ளார்.

ஞாயிறு, 29 ஏப்ரல் 2007--- புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு ஐநா ஒப்புதல் இல்லாமலேயே தான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப் பழியைத் தன் மீது போடுவதாக அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் முன்னாள் தலைவரான ஜார்ஜ் டெனட் (George Tenet) குற்றம் சாட்டியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திரு டெனட், அமெரிக்க துணை அதிபர் டிக் செனியையும் வெளியுறவு அமைச்சரான கொன்ண்டலீசா ரைசையும் வெளிப்படையாகவே சாடினார்.

இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாகக் கற்பனையான காரணம் கூறி அதன் மீது போர் தொடுத்த புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு திரு டெனட் CIA தலைவராக இருந்த போது அவர் அளித்த உளவு அறிக்கையின் அடிப்படையிலேயே போர் தொடுத்ததாக அறிவித்தது.

இதைத் தற்போது வன்மையாக மறுத்துள்ள திரு டெனட், புஷ், செனி மற்றும் ரைஸ் ஆகிய மூவரும் நம்பிக்கைத் துரோகிகள் என்று சாடியுள்ளார். தான் சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை என்றும், உண்மையில் அதற்கு மாற்றமான அறிக்கையே அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இராக் மீதான தாக்குதல் அட்டவணை குறித்த செய்தி தமக்குக் கிடைத்ததும் இது தவறான தகவலின் பேரில் தொடுக்கப்பட்ட போர் என்று தாம் வலியுறுத்தியதாகவும், அப்போது புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ரைஸ், காலம் கடந்துவிட்டதாகக் கூறி தனது அறிக்கையை நிராகரித்ததாகவும் குற்றம் சாட்டினார்.

பொய்யான தகவல்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட இராக் போரில் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்து வரும் புஷ் அரசு தன்னை பதவிவிலகச் செய்து பலிகடா ஆக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க செனட் விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.-------NANDRI: SATYAMARGAM
--------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஷியா-சன்னி முஸ்லீம்களின் கருத்து வேறுபாடுகள் விளக்கம்

>> Saturday, April 28, 2007

ஷியா-சன்னி முஸ்லீம்களின் கருத்து வேறுபாடுகள் விளக்கம்.

எத்தனை சியா சுன்னிகள் சண்டை வந்தாலும் இஸ்லாத்தின்அடிப்படையை யாராலும் மாற்ற முடியாது. இதுதான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு. இந்த அடிப்படையிலிருந்து சிலர் மாறுபடுவதால் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது.
What's the Difference Between Shia and Sunni Muslims?

A. Both Sunni and Shia Muslims share the most fundamental Islamic beliefs and articles of faith.

The differences between these two main sub-groups within Islam initially stemmed not from spiritual differences, but political ones.

Over the centuries, however, these political differences have spawned a number of varying practices and positions which have come to carry a spiritual significance.

The division between Shia and Sunni dates back to the death of the Prophet Muhammad, and the question of who was to take over the leadership of the Muslim nation.

Sunni Muslims agree with the position taken by many of the Prophet's companions, that the new leader should be elected from among those capable of the job. This is what was done, and the Prophet Muhammad's close friend and advisor, Abu Bakr, became the first Caliph of the Islamic nation.

The word "Sunni" in Arabic comes from a word meaning "one who follows the traditions of the Prophet."

On the other hand, some Muslims share the belief that leadership should have stayed within the Prophet's own family, among those specifically appointed by him, or among Imams appointed by God Himself.

The Shia Muslims believe that following the Prophet Muhammad's death, leadership should have passed directly to his cousin/son-in-law, Ali. Throughout history, Shia Muslims have not recognized the authority of elected Muslim leaders, choosing instead to follow a line of Imams which they believe have been appointed by the Prophet Muhammad or God Himself.

The word "Shia" in Arabic means a group or supportive party of people.

The commonly-known term is shortened from the historical "Shia-t-Ali," or "the Party of Ali." They are also known as followers of "Ahl-al-Bayt" or "People of the Household" (of the Prophet).

From this initial question of political leadership, some aspects of spiritual life have been affected and now differ between the two groups of Muslims.

Shia Muslims believe that the Imam is sinless by nature, and that his authority is infallible as it comes directly from God. Therefore, Shia Muslims often venerate the Imams as saints and perform pilgrimages to their tombs and shrines in the hopes of divine intercession.

Sunni Muslims counter that there is no basis in Islam for a hereditary privileged class of spiritual leaders, and certainly no basis for the veneration or intercession of saints. Sunni Muslims contend that leadership of the community is not a birthright, but a trust that is earned and which may be given or taken away by the people themselves.

Shia Muslims also feel animosity towards some of the companions of the Prophet Muhammad, based on their positions and actions during the early years of discord about leadership in the community. Many of these companions (Abu Bakr, Umar, Aisha, etc.) have narrated traditions about the Prophet's life and spiritual practice. Shia Muslims reject these traditions (hadith) and do not base any of their religious practices on the testimony of these individuals.

This naturally gives rise to some differences in religious practice between the two groups. These differences touch all detailed aspects of religious life: prayer, fasting, pilgrimage, etc.

Sunni Muslims make up the majority (85%) of Muslims all over the world. Significant populations of Shia Muslims can be found in Iran and Iraq, and large minority communities in Yemen, Bahrain, Syria, and Lebanon.

It is important to remember that despite all of these differences in opinion and practice, Shia and Sunni Muslims share the main articles of Islamic belief and are considered by most to be brethren in faith.

In fact, most Muslims do not distinguish themselves by claiming membership in any particular group, but prefer to call themselves simply, "Muslims."

மேலும் படிக்க... Read more...

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

>> Friday, April 27, 2007

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர்.

வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர். உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.

செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன.

அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை.

இன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன.

ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில்
இன இழிவு நீங்கியதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

டாக்டர் பாப சாஹிப் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா? அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பெளத்த மதத்திற்கு போயிருப்பாரா? அங்கேயாவது அவருக்கும் அவருடன் பெளத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா? இல்லையே! நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது
இன இழிவு நீங்கியபாடில்லை.

அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா? அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித? படுத்தியக் கொடுமையை நாடே அறியும்.

MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.

இந்த நிலையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார். அதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா? இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல; இன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.

ஆதி காலத்தில் தமிழக மக்கள் "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற ஏகத்துவ அடிப்படையில் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் ஒரே உண்மையான இறைவனை மட்டும் நம்பிச் செயல்பட்டு வந்தனர்; வணங்கி வந்தனர். ஆரியரின் படயெடுப்பிற்குப் பின்னரே விதவிதமான கற்பனை பொய்க் கடவுளர்களும், அவர்களுக்கென விதவிதமான கோவில்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டன.

இன்று ஆங்காங்கே கற்பனை தர்கா - சமாதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவது போல் இந்த சமாதிக் கடவுளர்களின் பரிணாம வளார்ச்சிதான் சிலை வடிவிலான பொய்க்கடவுள்கள்.

இந்த ஆரியப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான பொய்க்கடவுளர்களின் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் அவர்களுக்கென்ன இலாபம்! இன இழிவு நீங்கி விடுமா? அல்லது அதற்கு மாறாக இன இழிவு மேலும் வலுப்படுமா? அறிவு ஜீவிகள் பகுத்தறிவுக்கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி மனுதர்மத்தை நிலை நாட்டி ஜாதிகளாகப் பிரித்து மக்களில் பெருந்தொகையினரை அடிமைகளாக்கி அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக இழி ஜாதியினராகக் கற்பித்து, அதன் மூலம் ஆதாயம் அடையத்தான், ஆரியர்கள் பொய்க்கடவுள்களை கற்பனை செய்து அந்தப் பொய்க்கடவுள்களுக்காக கோவில்களை இந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே கட்ட வைத்தனர்.

அந்த கற்பனைக் கோவில்களில் இந்த தாழ்த்தப்பட்ட மக்களாக சிறுமைப்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் இன இழிவு மேலும் வலுப்படுத்துவதாக ஆகுமா? அல்லது இந்த இன இழிவு போக்கவழிவகுக்குமா?

அன்று இந்த ஆரியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே பொய்க்கடவுளர்களின்கோவில்களைக் கட்ட வைத்ததற்கும் இன்று தமிழக அரசு அதே தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்குவதற்கும் வேறுபாடு உண்டா?

ஏக இறைவனை மறுக்கும் டாக்டர் கலைஞர், கி.வீரமணி போன்றோர் இந்தப் பொய்க் கடவுள்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகர்கள் ஆக்குவது கொண்டு எங்கனம் நியாயம்? பொய்க்கடவுள்களை உண்மைக் கடவுள்களாக நம்பி மக்கள் மேலும் வழிகேட்டிலும் அடிமைத்தனத்திலும் சிக்குவது ஆகாதா? அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா? நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால் அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும். இன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை.

இதை நாம் சொல்லவில்லை, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், கி.வீரமணி மற்றும் தமிழகத்தின் பெரும்பான்மையினர் மதித்துப் போற்றும் ஈ.வெ.ரா பெரியாரே 18.03.1947ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில் அப்பட்டமாக அறிவித்துள்ளார். இதை 1947ல் குடி அரசு பதிப்பகம். ஈரோடு பதிப்பகத்திலிருந்து, ஈரோடு தமிழன் பிரஸில் அச்சிட்டு 2 அணாவுக்கு விறபனையான "இன இழிவு இஸ்லாமே நன் மருந்து" ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்? சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார்.

பெரியாரின் இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக எதித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அன்றும் இன்றும் முஸ்லிம்களும் சமாதிகள் - தர்காக்கள் என்று என்று வழிபடுவதும் முஸ்லிம்களின் முடச்சடங்கு சம்பிரதாயங்களையும் மற்றும் பல மூட நம்பிக்கைளையும் எடுத்துக்காட்டியதின் மூலம் அன்று பெரியார் முஸ்லிமாவது தடைப்பட்டது. 1919லிருந்து பெரியாரின் நெஞ்சில் ஆழமாக தைத்த முள் இன்றளவும் அகற்றப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இஸ்லாம் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. என்று மனிதன் படைக்கப்பட்டானோ அந்த முதல் மனிதர் ஆதத்திற்கு ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி. அந்த தூய வாழ்க்கை நெறி நேர்வழி காலத்திற்கு காலம் வயிறு வளர்க்கும் புரோகிதரர்களால் கோணல் வழிகளாக ஆக்கப்படும்போதெல்லாம் ஏகன் இறைவன் மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பி மீண்டும் தூய வாழ்க்கை நெறியை நிலை நாட்டினான்.

இறுதி இறைத்தூதரான முஹம்மதுக்கு (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அருளப்பட்ட நூல் புரோகிதரர்களால் மாசுபடுத்த முடியாத அளவில் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின்னர் இறைத்தூதரோ வழிகாட்டல் நூலோ வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அறிவு ஜீவிகளே, முற்போக்கு சிந்தனையாளர்களே! உங்கள் உள்ளங்களில் ஏற்கனவே படிந்திருக்கும் சிந்தனையை சிறிது நேரம் தூர எடுத்து வைத்து விட்டு நடுநிலையோடு இப்போது சொல்வதை ஆராய்ந்து பாருங்கள்.

இன்றைய தமிழக முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் 5 சதவிகிதத்தினர் கூட அரபு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் சந்ததிகளாக இருக்க மாட்டார்கள்.

எஞ்சிய 95 சதவிகித முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்களே. சில தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணர்களாக, செட்டியாளர்களாக, முதலியார்களாக, நாயுடுகளாக, தேவர்களாக, நாடார்களாக, கள்ளர்களாக, முத்துராஜாக்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக இப்படி எண்ணற்ற ஜாதியினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே!

அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்களே! தாங்கள் இருந்து கொண்டிருந்த மதத்தில் தாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை.
தாழ்த்தப்பட்டவர்களாக இழிவு படுத்தப்பட்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் அதனை வெறுத்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிம் ஆனவர்களே!

ஆயினும் அவர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தினுள் நுழையவில்லை. பெயரளவில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அல்லாமல்உண்மையான ஓரிறை விசுவாசிகளாகவில்லை.

அவர்களின் பழைய மதத்திலுள்ள ஆச்சாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை, பெயர் மாற்றத்தோடு இங்கும் நடைமுறைப்படுத்தினார்கள். அங்கு கோயில்களில் பூஜை புணஸ்காரம், நெய் பால் அபிஷேகம் என சடங்கு செய்தவர்கள், இங்கு தர்கா சமாதிகளில் ஃபாத்திஹா, சந்தனம், பூ, அபிஷேகம் என சடங்கு செய்கிறார்கள். அங்கு கோவில்களில் சடங்குகள் செய்து தேர் இழுத்தார்கள். இங்கு தர்காக்களில் கொடியேற்றி சடங்குகள் செய்து கூடு இழுக்கின்றனர். அங்கு பஜனை பாடியவர்கள் இங்கு மவ்லூது என்ற பஜனை பாடுகிறார்கள். அங்கு திதி கர்மாதி என இறந்தவர்களுக்காக சடங்கு செய்தவர்கள், 3ம்,7ம்,40ம், வருஷ ஃபாத்திஹா என இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்கிறார்கள். அங்கே கோவில்களில் உண்டியல்கள், இங்கே தர்காக்களில் உண்டியல்கள்; அங்கு வரதட்சனை வாங்குகிறார்கள்.

இப்படி இங்கும் இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் துணையுடன் அனைத்து மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து வருகின்றனர்.

ஆயினும் பெரியதொரு ஆச்சரியம்; தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அப்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை பிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த
இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது.

மக்களுக்கு முன்னின்று தொழ வைப்பதிலிருந்து ஒரு பரம்பரை முஸ்லிம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு முஸ்லிமுக்கு கிடைத்து விடுகிறது.

நாம் முன்னர் விவரித்த 95 சதவிகித முஸ்லிம்களில் யாராவது அவர்களின் முன்னைய ஜாதியை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்களா? ஒரு போதும் இல்லை.

அதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக்கொண்டிருந்த இன இழிவு கிறிஸ்தவனாகியும் தொடர்கிறது. நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்றே அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

அம்பேத்கார் தழுவிய பெளத்த புத்த மதத்திலும் (நியோ புத்திஸ்ட்) என அடையாளம் காட்டப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தை தழுவி யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களிலுருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனின் நேரடி கட்டளைப்படி நடக்காமல் முன்னைய மதத்தில் கடை பிடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய செயல்கள் இபோதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படி இருந்தும் அதிசயதக்க வகையில் அவர்களின் பிறப்போடு இணைக்கப்பட்டிருந்த இன இழிவு இல்லாமலேயே போய்விட்டது. அவர்கள் பெயர் அளவில் மட்டும் முஸ்லிமாக ஆனவுடன் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டு விட்டது.

அன்று பள்ளரிலிருந்து பறையரிலிருந்து சக்கிலியலிருந்து முஸ்லிமானவர்களை இன்று யாரும் பள்ளவ முஸ்லிம், பறை முஸ்லிம், சக்கிலிய முஸ்லிம் என்று சொல்லுவதே இல்லை. பிராமணரிலிருந்து முஸ்லிமானவரும், பள்ளர் பறையர், சக்கிலியலிருந்து முஸ்லிமானவரும் சரி சமமானவர்களாகவே மதிக்கப்படுகிறார்கள். தோளோடுதான், காலோடுகால் ஒட்டி நின்று ஒரே வரிசையில் இறைவனைத் தொழுகிறார்கள். தகுதி இருந்தால் முன் நின்று இமாமாக தலைவராக நின்று தொழ வைக்கவும் செய்கிறார்கள்.

இறை மறுப்புக் கொள்கையுடையோரே நீங்கள் அனைவரும் மகத்துவமிக்க ஓரிறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் புகுந்துக்கொண்டு புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்துள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்கள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் இவற்றைக் காரணமாக காட்டி, என்றும் நிலைத்திருக்கும் ஓரிறைவனைக் எப்படி மறுக்கத் துணிகிறீர்கள்?

இதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த நாஸ்திக சிந்தனையாளர்கள் அண்ணா, பெரியார், ரஸ்ஸல், பெர்னாட்ஷா போன்றோரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உண்மையான ஓரிறைவனை அவர்கள் மறுத்ததாக இல்லை.

அதற்கு மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க் கடவுள்களையும், மூடச்சடங்குகளையும், சம்பிராதயங்ளையும், அனாச்சரங்களையும், முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ள கற்பனைகளையும் மறுத்துள்ளனரே அல்லாமல், அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் சக்திமிக்க இணையோ, துணையோ, தேவையோ இல்லாத ஓரிறைவனை மறுத்ததாகப் பார்க்க முடியவில்லை. புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும்தான் கடுமையாகச் சாடியுள்ளனர்.

அல்குர்ஆனை பொறுமையோடு, ஏற்கனவே உள்ளங்களில் பதிந்து போயுள்ள எண்ணங்களை அகற்றிவிட்டு நடுநிலையோடு படித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும், மூடநம்பிக்கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும் இவற்றைக் கற்பனை செய்து மக்களை வழிகெடுப்பவர்களான இடைத்தரகர்களான புரோகிதரர்களையும் நீங்கள் அனைவரும் சாடுவதைவிட ஆயிரம மடங்கு அதிகமாகச் சாடியுள்ளதை பார்ப்பீர்கள்.

இப்படிப் பொய்த் தெய்வங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். என்று இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில்
"எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. "

"மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு." அல்குர்ஆன் அத்தியாயம் 2:174

ஆயினும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளை முதுகுக்குப் பின்னால் எறிந்து புரோகிதரர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வழ்வுக்காகப் பெருங்கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள்.

ஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு தன்னை அறுத்துக்கூறு போடும் கசாப்புக்கடைகாரர்களை நம்பும் ஆட்டு மந்தைகள் போல் தங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதப்புரோகிதரர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மனித மந்தைகளாகவே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஆயினும் எல்லா மதங்களிலுமுள்ள வெகு சொற்பமான மனிதர்கள் தங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பயன்படுத்தி இந்த மதப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை விளங்கியதாலும் கடவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதாலும், உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் நாஸ்திகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர்.
இப்படிப்பட்டவர்களே மனிதர்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிப் பிரிவினைகள், இன இழிவு, மனிதனே மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகள் இவற்றைப் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்தாலும் அவற்றை போக்கி சகோதரத்துவ சமத்துவ சமநிலை சமுதாயத்தைச் அமைக்க அவர்களின் பகுத்தறிவில் படும் திட்டங்களைத் தருகின்றனர்.

தனித்தொகுதிகள், இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற திட்டங்கள் அனைத்தும் இத்தரத்தை உடையவையே. இப்படிப்பட்ட மனித பகுத்தறிவுத் திட்டங்களால் ஏழு தலைமுறை என்ன? எழுபது தலைமுறை ஆனாலும் இன இழிவு நீங்காது. சகோதரத்துவ சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாது.

அனைத்து மதங்களிலும் புரோகிதர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டு எவ்வித சீர்த்திருத்தமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அனைத்து மதங்களிலும் இந்தப் புரோகிதரகளின் வஸீகரப் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாகச் சிந்திக்கும் மக்களும் இருக்கிறார்கள்.

எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சுயசிந்தனையாளர்கள் ஒன்று திரட்டப்பட்டால் அவர்களின் சுய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி முறையான முழுமையான பகுத்தறிவாளர்களாக அவர்களைச் செம்மைப்படுத்தினால் உலகில் மாபெறும் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும்.

இன்று தெளிவான ஆதாரங்களுடைய அதன் பரிசுத்த நிலை இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்கள், இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பது போல் "என்னுடைய இறைவா நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டனர்." (25:30 அல்குர்ஆன்) என்று இறைத்தூதர் மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கொப்ப இறுதி வழிகாட்டல் நூலைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிமகளும் மதப்புரோகிதரர்கள் பின்னால் செல்வதால் அவர்களைக் கொண்டு மறுமலர்ச்சி ஏற்படும் வாய்ப்பே இல்லை.

எனவே அல்குர்ஆனின் முஹம்மது அத்தியாயம் 47:38ல்
"எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். " என்று இறைவன் கூறியிருப்பதை இன்று அனுபவத்திலேயே பார்க்கிறோம்.

மற்ற மதங்களிலுள்ள சிந்தனையுள்ள சகோதரர்கள் அங்குள்ள மதப்புரோகிதரர்களின் தில்லுமுல்லுகளை விளங்கிச் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து அதன் விளைவாக நேரடியாக அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து, சிந்தித்து விளங்கி இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.

அவர்கள் புரோகிதரர்கள் பிடியில் சிக்காமல் சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இன்றைய பரம்பரை முஸ்லிம்களைவிட மிகச் சிறந்தவர்களாக, சிந்தித்து விளங்கிச் செயல்பட்ட அந்த நபித்தோழர்களைப் போல் பார்க்க முடிகிறது.

எனவே பகுத்தறிவு சிந்தனையாளர்களே நீங்கள் அனைவரும் மதப்புரோகிதர்கள் பிடியிலிருந்தும், அவர்களின் கற்பனைகளில் உருவான பொய்க்கடவுளர்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். மீண்டும் அந்தப் புரோகிதரர்கள் பிடியில் சிக்கப்போவதில்லை. எனவே அதற்கு மேலே ஒரு படி உயர்ந்து இதற்கு முன்னர் பகுத்தறிவு வாதம் புரிந்த அனைத்துப் அறிஞர்களும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டும், நடைமுறைப்படுத்த இயலாமல் தவறிய கொள்கையும், நமது இந்திய மக்களின் ஆதிக் கொள்கையுமான "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற அடிப்படையில் அந்த ஓரிறைவன் மனித இனத்திற்கு வகுத்தளித்த இயற்கை நெறியான வாழ்க்கை நெறியான சாந்தி, அமைதி மயமான இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சகோதரத்துவ, சமத்துவ சமநிலை சாந்தி சமுதாயம் சமைய ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம், குறைந்த பட்சம் தெய்வமில்லையா?

(நாஸ்திகம்) ஒரு தெய்வமா? (ஏகத்துவம்) என்ற அடிப்படையில் முதலில் விதண்டாவாதம் இல்லாமல், அழகிய முறையில் ஊடகங்களில் விவாதித்து உண்மையை கண்டறிய வேண்டுகிறோம்.

தமிழக மக்களின் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் உடல் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் மற்றும் பொழுது போக்கு இவற்றை மட்டும் நிறைவுபடுத்தி கொடுப்பது மட்டும் சீரீய பணியல்ல. அவர்கள் மனிதர்களாக, மனிதப் புனிதர்களாக நீதி, நேர்மை, தர்மம், மனித நேயம், சத்தியம் நேர்வழி இவற்றையும் சிந்தித்து விளங்கி, திருந்தி செம்மையுற பாடுபடுவதுதான் சிறந்த பணியாக இருக்க முடியும்.

பெரியாரின் நீண்ட உரைகளால், எழுத்துக்களால் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்களும், அவர்களின் சந்ததிகளும் மீண்டும் அந்தப் புரோகிதரர்களின் பிடியில் போய் சிக்கும் மிகப்பரிதாபமான, அபாயமான நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் நாட்டை சீர்படுத்தி விடலாம் என்று முயன்றால் அது ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
NANDRI: http://www.readislam.net/untouchable.htm
------------------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

துக்கம் பொங்கப் பேச நீங்கள் புதிதாய் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்.

துக்கம் பொங்கப் பேச நீங்கள் புதிதாய் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்.

மேடைப் பேச்சு பயிற்சியின் நிறைவு விழாவில் பேசிய பாதிரியார் போஸ்கா.... ஒரு மணி நேரத்திற்கு சந்தோஷமாய் உணர்ச்சி பொங்கப் பேசுவது எப்படி? அப்போது உங்களின் முகபாவனைகள், உடல் மொழிகள் எப்படியிருக்க வேண்டும்? என விரிவாய் பேசினார்.

ஆனால், கடைசி சில நொடிகளுக்குள் மன வேதனையடந்து துக்கம் பொங்கப் பேசுவது எப்படி? என்பதை இப்படிச் சொன்னார்.

''ஒரு மணி நேரம் நான் சொன்னபடியெல்லாம் செய்தால் போதும். சந்தோஷம் பொங்கப் பேசலாம்... ஆனால், துக்கம் பொங்கப் பேச நீங்கள் புதிதாய் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்.

நீங்கள் எப்போதும் பேசுவதை போல் பேசினாலே போதுமானது''

பேச்சில், மூச்சில்... நடையில், நடத்தையில்...

நம் துக்கங்கள் இறுக்கம்மிகு முகங்களாக வெளிப்படுகிறது.

உங்களின் போக்கை ஆராயுங்கள். உங்களை உங்களுக்கே படம் பிடித்துக் காட்டும்
------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

''அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும்போது"

>> Thursday, April 26, 2007

சங்கரன் முடிவெட்டிக்கொள்ள சலூனுக்குப் போக ஆயத்தமானான்.

போட்டிருந்த சலவை சர்ட்டையும், பாண்ட்டையும் கழற்றிவிட்டு சலவைக்குப் போடவேண்டிய அழுக்குத் துணியிலிருந்து பழைய சட்டையயும், வேட்டியையும் அணிந்து கொண்டுபோனான். அவன் அப்பா, சித்தப்பா, அண்ணன் உள்பட சலூனுக்கு வரும் எல்லாரும் அப்படிச் செய்வதான் வழக்கம்.

சலூனில் ஆட்கள் நிரம்பியிருந்தனர். ஆனால், முடிவெட்டுபவர் குளித்துவெள்ளை வெளேர் சலவை ஆடைகளுடன் 'பளிச்' சென்று இருந்தது கண்ணைப் பறித்தது.

முடிவெட்டும் தொழிலாளி சங்கடத்துடன் அருவருப்பால் அடிக்கடி முகம் சுளித்ததை சங்கரன் கவனிக்கத் தவறவில்லை.

''அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும்போது, நாமும் சுத்தமாக வரவேண்டும் என்பதானே அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்''_என்ற நியாயம் அவனுக்கு மனதில் உறைத்தது.

சங்கரன் எழுந்து வீட்டுக்குக் கிளம்பினான்_நன்றாக டிரஸ் செய்து கொண்டு மீண்டும் வருவதற்கு! ---SOURCE: INTERNET.
-----------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

அஜினோமோட்டாவை உணவில் சேர்ப்பது சுகாதாரக் கேடு

>> Tuesday, April 24, 2007

. Ajinomoto food taste enhancers contain "frocine" - an enzyme extracted from pork.

அஜினோமோட்டாவை உணவில் சேர்ப்பது சுகாதாரக் கேடு
மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை, ஏப். 23- அஜினோ-மோட்டாவை உணவில் சேர்ப்-பது சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உணவுக்கு சுவையூட்ட அஜனோமோட்டா சேர்க்கப்-படுகிறது. இது கரும்பு, மரவள்ளிக் கிழங்கு சேர்ந்த ஊறல்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காளான், சோளம், பட்டாணி, மாமிச வகைகள், சோயா போன்ற உணவுப் பொருள்களில் இயற்கையாகவே சிறிதளவு அஜினோ-மோட்டோ கலந்துள்ளது.

உணவு கலப்படத் தடுப்பு சட்ட விதிகளில், வரையறுக்கப்பட்ட உணவுப் பொருள்களில் இயற்கையாகவே அஜினோ-மோட்டோ கலப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

ஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு அளிக்கப்-படும் உணவுகளில் அஜினோ-மோட்டோ பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்று அஜினோ மோட்டோ குறித்த விளம்பரத்தில் தகவல் இடம் பெறவேண்டும்.

51 உணவு வகையில் அஜினோமோட்டோ சேர்க்கக் கூடாது என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவில் மூன்று கிராமுக்கு அதிகமாக அஜினோமோட்டோ சேர்த்தால் தலைவலி, குமட்டல், நெஞ்சுவலி, கைகால் மரத்துப் போவது போன்ற பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது பொதுமக்கள் சுகாதாரம் கருதி, அஜினோ மோட்டோவை உணவில் சேர்ப்பது சுகாதாரக்கேட்டை உண்டாக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
--------------------
IT IS MONO SODIUM GLUTAMATE , NOT GOOD FOR HEALTH
Ajinomoto is the name of a company which discovered Mono-sodium glutamte. So Ajinomoto and MSG are same products. * A 1995 FDA-commissioned report acknowledged that "An unknown percentage of the population may react to MSG and develop MSG symptom complex, a condition characterized by one or more of the following symptoms:
of burning sensation in the back of the neck, forearms and chesto numbness in the back of the neck, radiating to the arms and backo tingling, warmth and weakness in the face, temples, upper back, neck and armso facial pressure or tightnesso chest paino headacheo nauseao rapid heartbeato bronchospasm (difficulty breathing) in MSG-intolerant people with asthmao drowsinesso weakness."[4]

Ajinomoto food taste enhancers contain "frocine" - an enzyme extracted from pork

INDONESIA: International outrage over Ajinomoto's use of pork enzyme in halal food escalates
9 January 2001 Source: just-food.com editorial team
Article summary:As three Japanese and four Indonesian officials from PT Ajinomoto Indonesia were arrested by local police, the largest Islamic body in the country admitted that it knew months ago that pork enzymes were being used in the production of the widely used flavour enhancer, monosodium glutamate (MSG). The Indonesian Ulemas Council (MUI) uncovered the illegal use of bactosoytone when it began an audit of the company in September 2000.
http://www.just-food.com/article.aspx?ID=87474

INDONESIA/JAPAN: Ajinomoto reels from seasoning scandal
8 January 2001 Source: just-food.com editorial team
Article summary:Japanese-owned PT Ajinamoto Indonesia announced plans to buy back about 3,000 tons of its Ajinomoto seasoning product worth Rp30bn (US$3.35m) after it was banned from sale in the country for religious reasons. The Japanese company has acknowledged the use of an enzyme extracted from pork in the process of producing the seasoning product but have denied that the end-product contains pig meat, which Moslems are forbidden to consume. The enzyme was used only in the process of production, a company official said. Ajinomoto food taste enhancers contain "frocine" - an enzyme extracted from pork.
http://www.just-food.com/article.aspx?ID=87460
--------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

தரையில் உட்கார வழி செய்யும் நவீன முறை முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை

>> Monday, April 23, 2007

தரையில் உட்கார வழி செய்யும்
நவீன முறை முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை


சென்னை, ஏப்.22- நவீன முறையில் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம், நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு தரையில் உட்காருவது, மாடிப்படிகளில் ஏறுவது ஆகியவை சாத்தியமாகும் என்றார் முட நீக்கியல்அறுவை சிகிச்சை நிபுணர் எஸ். சிவமுருகன்.

சென்னை அண்ணாநகர் சவுந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனையில் இயக்குநராக உள்ள அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மூட்டு வலி காரணமாக ஒருவர் பாதிக்கப்படும் நிலையில், நடக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பிற நோய்களும், அந்த நோயாளிக்கு தீவிரமடைய வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே ஒருவரை முடக்கும் மூட்டு வலிக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறும் நிலையில் அறுவை சிகிச்சையை எளிதாகத் தவிர்க்க முடியும்.

மூட்டு நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறும் நிலையில், நோயின் தன்மைக்கு ஏற்ப உடலின் எடையைக் குறைத்தல், உணவுக் கட்டுப்பாடு, பிஸியோ-தரப்பி உள்ளிட்ட உடற்பயிற்சிகள் மூலம் நிவாரணம் கிடைத்து விடும்.

நோய் முற்றி விட்டால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு. முழங்கால் மூட்டு தீவிர மாக பாதிக்கப்படும் நிலையில் அறுவை சிகிச்சை மூலம், காலே அகற்றப்படும் என்ற பயம் வேண்டாம். மாறாக பாதிக்கப்பட்ட எலும்பு மட்டும் நீக்கப்பட்டு, செயற்கை மூட்டு பொருத்தப்படும்.

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இரண்டு மணி நேரம் ஆகும். பாதிக்கப்பட்ட எலும்பு உள்ள இடத்தில் மட்டும் கீறல் செய்யப்பட்டு நவீன முறையில் `ஹைபிளக்ஸியான்’ மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்படும். இந்த நவீன சிகிச்சை காரணமாக 155 டிகிரி அளவுக்கு செயற்கை மூட்டை நோயாளியால் அசைக்க முடியும். சிகிச்சைக்குப் பிறகு தரையில் உட்காருவது, மாடிப்படிகளில் ஏறுவது ஆகியவை சாத்தியமாகும். இந்த சிகிச்சைக்கு ரூ.1.5 லட்சம் செலவாகும் என்றார் டாக்டர் சிவமுருகன்.
----------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

பாகிஸ்தானை நிறுவியவர் ஜின்னா.அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.-நான்கு ஆண் குதிரை ஒரு பெண் குதிரை

>> Saturday, April 21, 2007

பாகிஸ்தானை நிறுவியவர் ஜின்னா.அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.-நான்கு ஆண் குதிரை ஒரு பெண் குதிரை.
சென்னை பார் கவுன்சில் வழக்கறிஞர் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உற்சாகப் பேச்சு


பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா அவர்கள் பிரபலமான வழக்கறிஞர். அவர் வெளிநாட்டிற்குச் சென்று படித்த பிரபலமான வழக்கறிஞர். அம்பேத்கர் அவர்கள் எப்படி மிகப் பெரிய வழக்கறிஞரோ அதுபோல ஜின்னா அவர்கள்.

ஜின்னா அவர்கள் லண்டனிலேயே வழக்கறிஞர் தொழிலை நடத்திக் கொண்டு இருந்தவர். அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.இதை உங்களுக்கு நினைவூட்டினாலே போதும். நீங்கள் சிந்தித்துக் கொள்ளலாம்.

லண்டனிலே லார்ட்ஸ் (Lords) என்று சொல்லக்கூடிய பிரபுக்கள் உண்டு. அந்தப் பிரபுக்களில் ஒவ்வொருவருக்கும் அரண்மனை மாதிரி இடங்கள் இருக்கும். அந்த அரண்மனைகளுக்கு `சாரட்’ வண்டிகள் உண்டு.

ஒவ்வொரு பிரபுவுக்கும் ஒவ்வோர் அந்தஸ்து
அதிலேயும் ஒவ்வொரு பிரபுவுக்கும் ஒவ்வோர் அந்தஸ்து உண்டு. ஏழு குதிரைகளை இந்த பிரபு மட்டும் பூட்டிக் கொண்டு வண்டியில் செல்லலாம். அய்ந்து குதிரைகள் பூட்டிய வண்டியை இவர் மட்டும்தான் பயன்படுத்தலாம்.

இவர் மூன்று குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வரலாம். மற்றவர்கள் இதுபோன்று செய்தால் இவருடைய உரிமையை மீறியதாக ஆகும். இதெல்லாம் பழைய காலத்து சம்பிரதாய முறை. நடைமுறை சட்டங்கள் இங்கிலாந்து நாட்டிலே.

புதிய பணக்காரர் அய்ந்து குதிரைகள் பூட்டிய வண்டியில்
இங்கிலாந்து நாட்டிலே புதிதாகப் பணக்காரரான ஒருவர். அவர் பிரபு இல்லையென்றாலும்கூட பெரிய தொழிலதிபராக வந்திருக்கின்ற காரணத்தால் யார் அய்ந்து குதிரைகளைப் பூட்டிக் கொண்டு அந்தப் பகுதியிலே செல்ல முடியுமோ அப்படிப்பட்ட பகுதியிலே இந்த புதிய பணக்காரர் அய்ந்து குதிரைகளைப் பூட்டிக்கொண்டு, நான் பிரபல பணக்காரனாகிவிட்டேன் என்ற அந்த பெருமையோடு அந்த வழியே சென்ற நேரத்திலே இதைக் கண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவிலே இவர்மீது நஷ்ட ஈடு கோரி சடடப்படி என்னுடைய உரிமையை அவர்கள் மறுத்திருக்கிறார்கள். சட்டத்தை அவர் மீறியிருக்கின்றார்.

பாரம்பரிய பிரபுத்துவ உரிமை
அய்ந்து குதிரைகளைப் பூட்டக்கூடிய உரிமை எனக்கு மட்டும்தான் உண்டு. பாரம்பரியமாக உள்ள எங்களுடைய பிரபுத்துவ செயலை இது அவமானப்படுத்துவதாகும் என்று வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் நஷ்ட ஈடு என்று கேட்கும்பொழுது, மில்லியன்ஸ் பவுண்டு அளவுக்கு அவர்கள் நஷ்ட ஈடு கேட்பார்கள்.

ஒவ்வொரு வழக்கறிஞரிடமும் கேட்டார்
அந்த புதியப் பணக்காரர் ஒவ்வொரு பிரபலமான வழக்கறிஞரைப் போய்ப் பார்த்தாராம். அந்த வழக்கறிஞர் ஒவ்வொருவருமே நீங்கள் அய்ந்து குதிரையைப் பூட்டினாயா? அதற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்கள்

இவரும் `ஆம்’ பூட்டினேன், அவர்கள் படம் எடுத்திருக்கிறார்கள். ஆதாரத்தை நிரூபித்திருக்கிறார்கள் என்று இவர் சொல்லியிருக்கிறார். எனவே, இந்த வழக்கிலே நாம் வெற்றி-பெறமுடியாது. எனவே நாங்கள் இந்த வழக்கை எடுத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேறு வழக்கறிஞரிடம் சென்று விடுங்கள் என்று ஒவ்வொரு பிரபல வழக்கறிஞரும் இவரைத் தள்ளிவிட்டார்களாம்.

ஜின்னா மட்டுமே வழக்கை எடுத்துக் கொண்டார்
மகமதலி ஜின்னா அவர்கள் பாரிஸ்டராக இருந்தார். மற்றவர்களைப் போல இவர் ஒன்றும் மூத்த வழக்கறிஞர் அல்ல. இந்த வழக்கைப்பற்றி ஜின்னா அவர்கள் கேட்டுவிட்டு நான் இந்த வழக்கை எடுத்து நடத்துகிறேன் என்று சொன்னார்.

எல்லோருக்கும் இது ஆச்சரியம். தோற்றுப் போகிற வழக்கை ஜின்னா அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார் என்று.

ஜின்னா வாதாடுவதைப் பார்க்கக் கூட்டம்
நீதிமன்றத்தில் ஜின்னா அவர்கள் எப்படி வாதாடப் போகிறார் என்பதைப் பார்க்க ஏராளமான கூட்டம். அய்ந்து குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி எது? எந்தெந்த குதிரைகள் எல்லாம் வண்டியில் கட்டப்பட்டன என்பதை எல்லாம் நேரில் பார்த்து ஜின்னா விசாரித்துவிட்டார்.

வெட்னரி சர்ஜன் என்று சொல்லக்கூடிய மிருக வைத்-தியர் ஒருவரையும் பக்கத்திலே வைத்துக் கொண்டார் ஜின்னா. நீதிமன்றத்திலே வாதாட ஆரம்பித்தார்.

ஃபோட்டோ ஆதாரம் உள்ளது
நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. யார் வழக்கு போட்டாரோ அவருடைய வழக்கறிஞர் வாதாடினார். பிரபுகளாகிய எங்களுக்கு அய்ந்து குதிரைகளை வைத்து ஓட்டக்கூடிய உரிமைச் சட்டம் எங்களுக்கு இருக்கிறது என்பவைகளை எடுத்துச் சொல்லி விவாதம் செய்தார்.நீங்கள் வண்டி ஓட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது. ஃபோட்டோக்கள் எல்லாம் இருக்கின்றன என்று சொன்னார்.

நீதிபதிகள் கேள்வி
இதிலே நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பிரிவிகவுன்சில் நீதிபதிகள் கேட்டார்கள்.
குதிரைகளை ஆங்கிலத்தில் Horses என்று சொல்லுகின்றோம். ஆனால், ஜின்னா அவர்கள் வாதாடும்பொழுது சொன்னார். எதிர்க்கட்சிகாரர் அய்ந்து குதிரைகளை ஓட்டி வந்தார் என்று சொல்லுகிறார். நான் சொல்லுகிறேன் Four Horses and one Mare (பெண் குதிரை) என்று சொன்னார்.

நான்கு ஆண் குதிரை ஒரு பெண் குதிரை
என்னுடைய கட்சிக்காரர் நான்கு ஆண் குதிரைகளோடும், ஒரு பெண் குதிரையோடும் சேர்த்து வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார். பெண் குதிரைக்குரிய பலம் ஆண் குதிரைக்கு இல்லை. எனவே அதை ஒரு குதிரையாகக் கருத முடியாது. சந்தேகம் இருந்தால் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

வழக்கையே தள்ளுபடி செய்யுங்கள்
எனவே இந்த வழக்கையே தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஜின்னா இப்படி வாதாடினார் என்று எங்களுடைய மூத்த வழக்கறிஞர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம் அது. இன்னமும் எனக்கு அது நினைவிருக்கிறது.

ஜின்னா அகராதியைப் பார்த்தார்
நுண் மான் நுழைபுலத்தோடு ஜின்னா அவர்கள் Horse என்றால் என்ன போடப்பட்டிருக்கிறது? அதற்கு உரிய பொருள் என்ன என்று பார்த்தார். ஆண் குதிரைக்கு என்ன பெயர், பெண் குதிரைக்கு என்ன பெயர் என்று பார்த்தார். இந்த வழக்கிலே அவருடைய அறிவைப் பயன்படுத்தினார்.

வழக்கில் ஒவ்வொரு சொல்லும் முக்கியம்
பிறகு அந்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே வழக்கில் ஒவ்வொரு சொல்லும் ரொம்ப மிக முக்கியமானது.
வழக்கறிஞர் தொழிலிலே திரும்பத் திரும்ப சட்டத்தைப் படிக்கவேண்டும். திரும்பத் திரும்ப ஆய்வு செய்யவேண்டும் அதுதான் மிக முக்கியமானது.---------

கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது.முழுமையாக படிக்க-- http://viduthalai.com/20070420/news15.htm
-------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? கண்டறியும் கருவி விற்பனை

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா? கண்டறியும் கருவி விற்பனை இணையதளம் மூலம் மோசடி - மருத்துவர்கள் எச்சரிக்கை

புதுடில்லி, ஏப். 20- கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு பெண் சிசுவாக இருந்தால் பலர் அதனை அழிக்க தொடங்கினர். நாடு முழுவதிலும் இப் பிரச்சினை அதிகரித்த நிலையில் , மத்திய அரசு இதற்கு தடை விதித்தது.

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டுபிடித்து சொல்லும் ஸ்கேன் நிறுவனங்களுக்கு பெரும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று 1994 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனால் ஸ்கேன் மூலம் அறிந்து கொண்டு பெண் சிசுவை அழிக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டன.

ஆனால், தற்போது புதிய வடிவில் ஒரு பிரச்சினை புறப்பட்டுள்ளது. ‘உங்கள் கருவில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை அறிய வேண்டுமா? எங்களுடைய கருவியை வாங்கி பரிசோதனை செய்யுங் கள். உங்களுக்கு 99 . 9 சதவீதம் துல்லியமாக முடிவு கிடைக்கும். எங்களுடைய முடிவு தவறு என்றால், நீங்கள் கருவிக்காக கட்டிய பணத்தைத் திருப்பித் தருகிறோம். உலகின் எந்த மூலைக்கும் இக்கருவியை அனுப்பி வைக்க நாங்கள் தயார்’ என்ற அறிவிப்புடன் இணையதளத்தில் இரத்த சோதனைக்கு பயன்படும் சிறிய கருவி கூவிகூவி விற்பனை செய்யப்படுகிறது.

இக்கருவியை வாங்கும் பெண்கள் தாங்கள் கருத்தரித்த எட்டு வாரங்களுக்குள் ரத்தத்தை சோதனை செய்து அதை வெளிநாட்டில் உள்ள நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தால், அங்கிருந்து இ-மெயில் மூலம் வயிற்றில் இருக்கும் கரு ஆணா, பெண்ணா என்பதைக் கண்டு பிடித்துச் சொல்கிறார்கள்.

இந்த விளம்பரங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து, மத்திய அரசு எடுத்த நடவடிக் கையைத் தொடர்ந்து இணைய தளத்தில் இப்போது இக்கருவி அனுப்பப்படும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களிலிருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது
.
இது ஒருபுறமிருக்க, இக் கருவியினால் பயன் ஏதும் அல்லை. இது மோசடி நடவடிக்கை என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
-----------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

''என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது''

>> Friday, April 20, 2007

''என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது'' என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் .

''என்ன பழக்கம், சொல்லு'' என்றார்.

''அடிக்கடி கோபம் வருகிறது. எனக்குப் பிடிக்காத காரியங்கள் நடக்கும்போது கோபம் வந்துவிடுகிறது. அந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது?''

''சொல்கிறேன். முதலில் நீ எப்படி கோபப்படுவாய்? கொஞ்சம் காட்டு'' என்றார் .

''என்ன சொல்கிறீர்கள். எனக்குப் புரியவில்லயே?''

''உன்னிடம் கோபம் இருக்கிறது என்றாயே... அதைக் காட்டு என்றேன்''

''கோபம் வந்தால்தானே காட்ட முடியும். இப்போ கோபம் இல்லையே!''

''அப்படியானால் கோபம் உன்னுடய குணம் அல்ல. உன்னுடயது என்றால் எப்போம் உன்னிடமே இருக்குமே. அதனால் அடுத்த முறை கோபம் வரும்போது, இது எனக்குச் சொந்தமானதல்ல என்று மறுத்துவிடு. கோபம் திரும்பி ஓடிவிடும்'' என்றார் .

அவனும் செய்தான். சில வாரங்களிலே கோபம் அவனிடம் வரவை நிறுத்திக் கொண்டது. SOURCE: INTERNET.
-------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

வாழ்க இஸ்லாமிய மதம்! --கவிதை--ஏ. சந்திரசேகர்

>> Thursday, April 19, 2007

வாழ்க இஸ்லாமிய மதம்! --கவிதை--ஏ. சந்திரசேகர்
சுனாமி தாக்கி முடிந்த நிலையில் முஸ்லிம்களின் சேவைகளை நினைவு கூர்ந்து நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் பஞ்சாயத்தார்கள் இயற்றியுள்ள நன்றிக் கவிதை மடல்.


மனிதன் பிறந்து குறை எல்லாம் களைந்து
குறை இல்லா வாழ்க்கை வாழ்ந்து
ராக்கெட் செய்து பறந்து ராப்பகலாய் விண்ணில் திரிந்து
ரகரகமாய் வாழ்ந்தாலும் ராவுகாலம் வரும் என்று யார்சொன்னார்

சாவு காலம் வந்தது பார் ரகளை பண்ண
கடலோரமாய் காலையில் 9.20க்கு கடலுக்குச் சென்ற பின்னே
கடல் அலை ரூபத்திலே காத்து இருந்தது மரணம்
கணை தொடுத்த அம்பைப்போல் கடல் அலையோடு கலந்ததம்மா மனிதஉயிர்


கடல்அலைஓய்ந்தாலும் கதறலும் கண்ணீரும் ஓயவில்லை
டிசம்பர்26 2004 ல்தொடரான கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து அணையவில்லை அழுகுரல்தான்


ஓடி ஓடி ஒளிந்தாலும் ஒருநாள் உயிர்பிரியும்
உண்ண உணவில்லை பசிமயக்கம்
உறங்க இடமில்லை உயிர்மயக்கம்
உடுத்த துணி இல்லை வழிமயக்கம்
உற்றாரைத் தேடவில்லை உறவும் வந்து நாடவில்லை
உயிர் பிழைத்தது அறிதென்று உபத்திரத்தோடு ஓடிவந்தோம்


ஊரை விட்டு ஓய்வு இடத்தை நாடி ஒரு பாக்கெட் சோறு கிடைக்காதா என்று உபத்திரப் பசியோடு மூன்றுநாள் பட்டினி
உறுத்தியது மனிதஉயிர் மீனவமக்களுக்கு மக்களின் மனித நேயம் பாக்கெட் சோறு கொண்டு பத்திரமாய்த் தந்தாலும் சோறு நொந்து போய்தூக்கி எறிந்தவரும் வுண்டு


சோற்றுக்குத் தவிக்கும் மக்களை உற்று நோக்கி சோதனையா வேதனையா என்று சிந்தித்து சேர்ந்து வந்தனர் இஸ்லாமிய இளைஞர்கள்

நாளை முதல் நாள் கணக்கில் நாங்கள் தருவோம் சமையல் செய்து சமபந்தி இலை போட்டு சத்தான உணவு தந்து
அன்பு அல்லாவின் செயல் வடிவே
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்


மீனவருக்குத்தந்தை,தாய்,அண்ணன்அல்ல
மனிதருக்கு மனித நேய பொறுப்போடு
மனிதனுக்கு உதவி செய்ய கீச்சாங்குப்பம்
மண்ணில் நின்று செய்த தொண்டுகள் மறக்கவில்லை


உயிர் உள்ள மக்கள் மாண்டவரை தொட்டு தூக்கி மண்ணிலே அடக்கம் செய்த மறக்காத சேவைகளை பாராட்டும் மீனவர்கள்

மாண்டஉயிர் 8நாள் ஆகி மடிந்து போன உடல் அழுகி
மறக்காத ஊன் நாற்றம் மறைக்க வாயில் துணிகட்டி
மண்டி இட்டு பிணம் தூக்கி மகத்துவமாய் சேவைசெய்தார்
இஸ்லாமிய நாகை இளைஞர்கள்


இறைவனின் அருளோடு எந்நாளும் இணை பிரியா மீனவர்கள் இனம் எல்லாம் சேர்ந்து இன்புற்று வாழ்த்துகிறோம்
வாழ்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் சேவைகள்
வளர்க நாகை இஸ்லாமிய மக்கள் சேவைகள்
சாதி மதம் தேவை இல்லை சாதித்த இஸ்லாமிய இனமக்கள் சந்திப்போம் கைகொடுப்போம்


சவக்குழியை அடையும் வரை சவம் தூக்கி உணவு தந்த
சலாம், அல்லாவின் அடியார்களை சகோதரனாய் அன்பு கொண்டு சந்திப்போம் சேர்ந்து நின்று சாதிப்போம் வாழ்க்கையை
என்றும் வாழ்க இஸ்லாமிய மதம் வளர்க மீனவர் நட்பு .


இப்படிக்கு-பஞ்சாயத்தார்கள்-கீச்சாங்குப்பம் மீனவர்கள்.
கவிதை இயற்றியவர் ஏ. சந்திரசேகர் -கீச்சாங்குப்பம்
---------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

முகம்மது கேலிச்சித்திரத்திற்குப் பின்னால் இருக்கும் சதி பற்றிய குறிப்பு இது. - AMALASINGH.

முகம்மது கேலிச்சித்திரத்திற்குப் பின்னால் இருக்கும் சதி பற்றிய குறிப்பு இது. - AMALASINGH.

அதாவது முசுலிம்களுக்கு ஒரு அல் (தலை) கொய்துதா மாதிரி, ஐரோப்பிய நாடுகளிலும் ரைட்விங், லெப்ட்விங் எனப்படும் இனவாதக்குழுக்கள் எப்போதுமே கொஞ்சம் இருக்கும். அப்ப, அப்ப வந்து தலைகாட்டி விட்டுப் போவார்கள்.

ஆனால் அவர்கள் இப்போ ஒரு மிகப்பெரிய உள்நோக்கோடு செய்திருக்கும் காரியம் தான் இந்த கேலிச்சித்திரம்.

அதாவது முசுலிம்கள் ஐரோப்பாவிற்குக் காலடி எடுத்து வைப்பதை நிறுத்துவதே அது. அந்த நோக்கத்தில் அவர்கள் பகுதி வெற்றி பெற்றுவிட்டார்கள் எனலாம். ஏனென்று சொன்னால் கீழ்க்கண்ட இணைப்பைப்பாருங்கள்.

இது ஏதோ சிறு பிள்ளைத்தனமாகச் செய்த செயல் அல்ல. அவ்வாறு கேலிச்சித்திரம் வெளியிட்டால், இசுலாமிய தேசங்களில் உள்ள நாயும் குரைக்கும், கோழியும் கூவும், புழுவும் பாம்பாகும் என்பது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள பாக்டீரியாக்களுக்குக் கூடத் தெரிந்த ஒன்று. அப்படியிருக்க இப்படி ஒரு விசமத்தை எப்படி பத்திரிக்கை தர்மம் என்ற பெயரில் துணிந்து செய்தார்கள்? அது தான் உள்நோக்கம். -AMALASINGH.
---------------------------------------------------
The Truth Behind the Cartoon News

We’re starting to see the details of the conspiracy behind the Danish cartoon scandal. The Danish newspaper Jyllands-Posten, which started the problem by actually commissioning cartoons that would make Muslims furious as an experiment to see if political correctness would prevent the cartoons from being published – you can’t make this stuff up! - supports the anti-immigration Danish governing coalition, and has historic ties going back to the 1920s and 1930s to European fascism.

The editor in question, Flemming Rose, apparently has ties to Daniel Pipes (as if we couldn’t see that coming!). The point was clearly to incite Muslim riots to enforce the idea that the ‘clash of civilizations’ means that immigration to Europe - particularly Muslim immigration - must be stopped, and to lead credence to the idea that Muslims are all irrational and violent, and can’t be dealt with except through violence. "
http://www.nowpublic.com/node/29201
--------------------------------------------------------
Danish cartoon conspiracy
We’re starting to see the details of the conspiracy behind the Danish cartoon scandal. The Danish newspaper Jyllands-Posten, which started the problem by actually commissioning cartoons that would make Muslims furious as an experiment to see if political correctness would prevent the cartoons from being published – you can’t make this stuff up! - supports the anti-immigration Danish governing coalition, and has historic ties going back to the 1920s and 1930s to European fascism.

The editor in question, Flemming Rose, apparently has ties to Daniel Pipes (as if we couldn’t see that coming!). The point was clearly to incite Muslim riots to enforce the idea that the ‘clash of civilizations’ means that immigration to Europe - particularly Muslim immigration - must be stopped, and to lead credence to the idea that Muslims are all irrational and violent, and can’t be dealt with except through violence.

Although they deny it, the conspiracy clearly flows through a whole series of like-minded European editors, all of whom should be given a blood test to check for Zionism.

The BBC actually had the audacity to carry the cartoons “
to give audiences an understanding of the strong feelings evoked by the story”.

As we dig further, I am sure we’ll find that all the people involved in this story have strong connections to either or both of Zionism and far-right European fascism.

The people of Denmark, in particular, ought to be thinking about sending a bill to Jyllands-Posten for the damage done to the embassies, not to mention the fact that Danish firms will never again be able to do business in the Middle East or any place where there is a substantial Muslim population. Denmark just lost a billion customers.

http://xymphora.blogspot.com/2006/02/danish-cartoon-conspiracy.html
NANDRI TO:amalasingh.blogspot.com
---------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

அந்த 526 பள்ளிவாசல்கள்?

>> Wednesday, April 18, 2007

அந்த 526 பள்ளிவாசல்கள்?
குஜராத் கோர படுகொலைகளை யாராலும் மறக்க இயலாது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள்.

இழப்பீடுகள், நிவாரண உதவிகள் அந்த அப்பாவிகளுக்கு மறுக்கப்பட்டன. முறையான நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை. நரேந்திர மோடி அரசு முன்நின்று நடத்திய வெறியாட்டங்கள் ஓர் தேசிய அவமானமாக கருதப்பட்டது.

இனப்படுகொலையின் சூத்திரதாயான நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். அமெக்காவுக்கும் பிரிட்டனுக்கும் செல்ல விசா மறுக்கப்பட்டது. அந்த வகையில் மோடி உலகப் புகழ்(!) பெற்று விட்டார்.

2002ல் நிகழ்ந்த குஜராத் கோரக் கலவரத்தில் 526 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்ததை எண்ணி முஸ்லிம்களும், நடுநிலையாளர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.

அன்றிருந்து முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசல்களை மீண்டும் கட்ட, புனர மைக்க மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். இடிப்பதற்கு பேர் போண அவர்கள் கட்டுவதற்கு உதவுவார்களா என்ன?

கேளாக் காதினராய் மோடி அரசு இருந்து விட்டது. இதுகுறித்து தேசிய சிறுபான்மை ஆணையம் 2002 ஏப்ரல் இரண்டாம் தேதி கடிதம் ஒன்றை குஜராத் முதல்வர் மோடிக்கு எழுதியது. இக்கடிதம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு, அந்தக் கடிதம் வந்ததாகவே மோடி அரசு காட்டிக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 294 பள்ளிவாசல் கட்டிடங்கள் ஓரளவு பழுது பார்க்கப் பட்டன. இதற்கு எந்த அரசும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தேசிய சிறுபான்மை ஆணையம் மோடி
அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தது. அண்மையில் கடந்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் கடிதத்திற்கு சுருக்கமான பதில் ஒன்றை குஜராத் அரசு அனுப்பியது.

அதில் நிவாரண உதவிகள் குறித்து எவ்வித விளக்கங்களும் குறிப்பிடப்பட வில்லை. மாறாக தேசிய சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் உள் நோக்கம் கொண்டது என்றும், தவறான வழிகாட்டுதல் எழுதப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் தெளிவான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

மீதமுள்ள 232 பள்ளிவாசல் கட்டிடங்களை மறுகட்டமைக்க போதிய நிதி உதவியை வழங்குமாறு மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேவையான பொருளாதார உதவியை வழங்கி குஜராத்தில் சிதிலமடைந்து கிடக்கும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை புதுப்பிக்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
----------------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

விடுதலைப் போரின் முன்னோடிகள் முஸ்லீம்கள்...பிரிட்டிஷ் காலனியத்துக்கு எதிராக முதன்முதலாக மக்கள் இயக்கம் ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள்.

>> Tuesday, April 17, 2007

விடுதலைப் போரின் முன்னோடிகள் முஸ்லீம்கள்...
தேசிய எழுச்சியில் முஸ்லீம்களின் பங்களிப்பு சிறப்பானது என சுபாஷ் சந்திரபோஸ் கூறியுள்ளார்


இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முதலில் முன்வந்தவர்கள் முஸ்லீம்கள். இந்த உண்மையை மறக்கவும் மறைக்கவும் செய்வதற்கு வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் அர்.சி. மஜும்தார் போன்ற வரலாற்றாசிரியர்கள் ஈடுபட்டார்கள்.

பிரிட்டிஷ் பிரச்சாரம் மூலமாக இந்திய முகமதியர்கள் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கு எதிரானவர்கள் என்ற கருத்து பரப்பப்பட்டது. ஆனால் தேசிய எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு சிறப்பானது என சுபாஷ் சந்திரபோஸ் கூறியுள்ளார்.

பாரம்பரிய வரலாற்றாசிரியர்கள், நானா சாகிபையும், தாந்தியா தோப்பியையும், ஜான்சி ராணியையும், கன்வர் சிங்கையும் வீர நாயகர்களாக வாழ்த்துவார்கள். இவர்கள் கண்டுகொள்ளாத பல உண்மைகள் உள்ளன.

1857ல் முதல் சுதந்திரப் போராட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பைசாபாத்தின் மௌலவி அகமதுல்லா ஷாவை யார் நினைத்துப் பார்க்கிறார்கள். அவரை உயிருடனோ பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பிட்டிஷ் அரசு 50,000 ரூபாய் இனாம் அறிவித்தது.

பிரிட்டிஷ் காலனியத்துக்கு எதிராக முதன்முதலாக மக்கள் இயக்கம் ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள்.

முகலாய ஆட்சியாளர்களை தோற்கடித்துதான் ஆங்கிலேயர்கள் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தினார்கள். சமூகப் பண்பாட்டு தளங்களில் முஸ்லிம்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

கான்வாலிஸ் பிரபுவின் நிலவரிச் சட்டத்தால் முஸ்லிம் மன்னர்கள் அளித்த வக்ப் சொத்துக்கள் பல இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டது.

பாரசீக மொழிக்கு கிடைத்து வந்த சலுகைகள் நிறுத்தப்பட்டது. முஸ்லிம் பண்டிதர்கள் பலர் வேலை இழந்தனர்.

பிட்டிஷ் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்த நெசவுத் தொழில் நசிந்தது.

கிறித்தவ மிஷினரிகளுக்கு பல சலுகைகளும் முன்னுமைகளும் அளிக்க கவர்னர் ஜெனரலின் தூதுவரான ஹெர்பர்ட் எட்வேட்ஸ் 1853ல் உத்தரவிட்டார். அதற்கெல்லாம் பிறகு தான் டெல்ஹவுசியின் சீர்திருத்தங்கள் சதி, குழந்தைத் திருமணம் போன்ற அனாச்சாரங்கள் தடை செய்யப்பட்டன.

ஹென்றிக் பிரபு எற்படுத்திய சீர்திருத்தங்களால் உயர்சாதி இந்துக்கள் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களுடன் இணைய முன்வந்தனர்.

பிட்டிஷ்காரர்களின் முக்கிய எதிரி முஸ்லிம்கள்தான் என 1843ல் கவர்னர் ஜெனரல் எலன்பரோ வெலிங்டனில் ட்யூக்சிற்கு எழுதிய கடிதம் பறைசாற்றுகிறது. (W.C. Smith, Modern Islam in India - Lahore p.179)

அந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் உலமாக்கள், பண்டிதர்கள் அகிய ஆன்மீக அரசியல் தலைமையில் அணி திரண்டனர்.

1703ல் பிறந்த ஷா வலியுல்லா அந்த மறுமலர்ச்சிக்கு ஏற்கனவே வித்திட்டார். அவருக்குப் பிறகு இமாமுல் ஹிந்த் ஷா அப்துல் அஜீஸ் தஹ்லவி இந்தியா போர் பூமி (தாருல் ஹர்ப்) என பிரகடனம் செய்தார்.

அவரது பத்வா, ஒரு புனிதப்போருக்கு முஸ்லிம்களை ஆயத்தமாக்கியது. இவருக்குப் பிறகு இனாயத் அலி பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்றிணையாதவர்கள் வெளியேறட்டும் என கூக்குரலிட்டார்.

சய்யத் அஹ்மத் நிறுவிய முஜாதீன் இயக்கம் வங்காள தலைமை நீதிபதி நோர்மனையும், வைஸ்ராய் மேயோவையும் கொலை செய்தது.

வங்காளத்தில் மௌலவி சரீஅதுல்லா மகன் தாதுமியான் தலைமை தாங்கிய ஓபராஇஸி இயக்கம் பிட்டிஷ்காரர்களுக்கு எதிராக கலகம் செய்தது.

கிழக்கு வங்காளத்தில் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய நாசிர் அலி(டிட்டுமீர்) முதலில் நில உடைமைக்கு எதிராகக் கலவரம் செய்தார்.

1857ல் முதல் இந்திய விடுதலைப் போராட்டம் முஸ்லிம்களின் முக்கிய பங்கேற்புடன் நடந்தது. பண்டிதர்களும், சூபிகளும் அவர்களுடன் பெரும்பாலும் முஸ்லிம் ஆட்சியாளர்களும் ஒன்றி ணைந்து பகதூர்ஷா தலைமையில் நடந்தது.

கலவரத்தில் முஸ்லிம் சிப்பாய்களையும், பொது மக்களையும் அணி திரட்டினர் பைசாபாத் மௌலவி அகமதுல்லா, தில்லி பண்டிதர் பஸ்லுல் ஹக் கைராபாத் ஆகியோரின் பத்வாக்கள்தான் அதற்கு தூண்டுகோலாக இருந்தது.

ஒரு இந்து சமீன்தார் சதி செய்து, அவரது உதவியால் அகமதுல்லா பிடிக்கப்பட்டார். மௌலவியின் தலை வெட்டப்பட்டது. பிரிட்டிஷ் மாஜிஸ்டிரேட் இனாமாக 50,000 ரூபாய் பரிசளித்தார்.

தீன் தீன், பிஸ்மில்லா என்று முழக்கமிட்டு முஸ்லிம் சிப்பாய்கள் பிரிட்டிஷ் தோட்டாக்களுக்கும் பீரங்கி களுக்கும் முன்னால் வந்து விழுந்தனர் என Trotter என்பவர் கூறுகிறார்.
(History of British Empire in India Vol II p.335)

மௌலானா இமாதுல்லா, அப்துல் ஜலீல், லியாகத் அலி, பீர் அலி, குலாம் ஹுசேன் ஆகியோர் 1857 கலவரத்துக்குத் தலைமை தாங்கினர்.

20ம் நூற்றாண்டில் விடுதலைக்காக நடந்த மிகப்பெரிய மக்கள் இயக்கமாக இருந்தது கிலாபத் ஒத்துழையாமை இயக்கம். இதன்மூலம் இந்து - முஸ்லிம் ஒற்றுமை ஒங்கியது.

மௌலானா அப்துல் பாரி, மௌலானா மஹ்மூத் ஹுசேன் ஆகியோர் தலைமையில் அலி சகோதரர்கள் நடத்திய கிலாபத், காந்தியின் வருகையுடன் ஒரு தேசியப் போராட்டமாக உருவெடுத்தது.

மஹ்மூத் ஹசனும் அவரது சிஷ்யன் உபைதுல்லா சிந்தியும் உருவாக்கிய ஜம்ஆயத்துல் அன்சாரும் அப்துல் பாரி, மௌலானா இனாயத்துல்லா, டாக்டர் எம்.எ. அன்சாரி, அலி சகோதரர்கள் உருவாக்கிய அஞ்சுமன் குத்தாமே கஅபா ல இவைதான் முதலில் கிலாபத்துக்கு தொடக்கமாக அமைந்தது.

கிலாபத்துக்கான பண்டித தலைமையை உறுதிப்படுத்த தேவ்பந்த், பிரங்கி மஹல் உலமாக்களை ஒன்றிணைந்து அப்துல் பாரி தலைமையில் 1919ல் ஜம்இய்யத்துல் உலமா ஹிந்த் உருவாக்கப்பட்டது.

இத்துடன் உருது ஊடகங்கள் உருவாக்கிய பேரலையில் பிரிட்டிஷ் கோட்டைகள் நடுங்கின. மௌலானா சபர் அலிகானின் சமீந்தார், முகம்மதலியின் ஹம்தர்த், ஆசாத்தின் லால் ஆகிய இதழ்கள் முஸ்லிம் எழுச்சிக்கு உயிர் கொடுத்தன.

அலியின் ஆங்கிலப் பத்திரிகையான காம்ரேட்ன் தீ துப்பிய எழுத்துக்கள் பிட்டிஷ்காரர்களின் தூக்கத்தைக் கலைத்தது.

கிலாபத்தின் முதற்கட்டத்திலேயே பல முஸ்லிம் தலைவர்கள் சிறையில் அடைக் கப்பட்டனர். பலர் நாடு கடத்தப் பட்டனர். அலி சகோதரர்கள் சிறைவாசம் அனுபவித்தனர்.

இதற்குப் பிறகுதான் ஒத்துழையாமை எனும் கருத்துடன் காந்தி யும் காங்கிரசும் முன்வந்தன. சிறையிலிருந்த அலிக்கு காந்தி கடிதம் எழுதினார்.

"உங்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டியது எனது சுயநலம். நாமிருவருக்கும் பொதுவான லட்சியம் உண்டு. அதை அடைவதற்காக எங்களது சேவையைப் பயன்படுத்த நான் ஆசைப்படுகிறேன்" (Gandhi to Mohamed Ali Nov 1918 Gail Minault The Khilafat Movement p.68)


பிரிட்டிஷ் ஒத்துழைப்பு ஹராம் என ஒன்றிணைந்த (முத்தபிக்) பத்வா வெளியிட் டனர். இந்தியா முழுவதும் இந்த பத்வாவின் பிரதிகள் அனுப்பப்பட்டன. கிலாபத் இயக்கம்தான் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் (பூர்ண சுவராஜ்) வேண்டுமென்ற முழக்கத்தை முதலில் முன்வைத்தது.

அஹமதாபாத் காங்கிரசில் இதற்கான அறிக்கையை மௌலானா ஹஸ்ரத் மொஹானி கொண்டு வந்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்த தீர்மானத்தை காந்தி எதிர்த்தார். (The Indian Struggle 1920-42 p.69)

பூர்ண ஸ்வராஜுக்கான முஸ்லிம் முழக்கம் உயர்சாதி முணுமுணுப்பை ஏற்படுத்தியது. மாளவ்யா, லஜ்பத்ராய், அரோபிந்தோ, பிபின் சந்திரபால் போன்றோர் காந்திக்கு எதிரானவர்கள். அத்துடன் காங்கிரசுக்கு உயர்சாதி கட்சி எனும் முகம் வந்தது. முகமதலி உட்பட்ட முஸ்லிம் தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். ஆசாத் உள்ளிட்ட சிலர்தான் அங்கு இருக்க முடிந்தது.

1937ல் அஹமதாபாத்தில் கூடிய இந்து மகாசபை மாநாட்டில் தலைமை வகித்துக் கொண்டு சவார்கர் அறிவித்தார் இந்தியா ஒருபோதும் ஒரே நாடாக இருக்க முடியாது. அது இரண்டு நாடு. இந்துவும் முஸ்லிமும் என்றார்.

சவார்க்கரின் இந்த கடுஞ் சொற்பொழிவிலிருந்துதான் பாகிஸ்தான் என்ற கருத்தியல் முஹம்மதலி ஜின்னாவுக்குக் கிடைத்தது.

------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

பொதுவாக பப்பாளி சூடு என்று சொல்லப்படுகிறது. வெயிலுக்கு பப்பாளி நல்லதா?

சம்மர்ல பல இடங்களில் பப்பாளிப் பழத்தை துண்டுகளாக வெட்டி வண்டியில் வைதது விற்கிறார்கள். ஆனால் பொதுவாக பப்பாளி சூடு என்று சொல்லப்படுகிறது. வெயிலுக்கு பப்பாளி நல்லதா?

''பப்பாளியை நாம் எந்தக் காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது ஒரு திகட்டாத பழம் என்பதால், நாம் அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடுவோம். அப்பொழுதுதான் பிரச்னை. அளவோடு சாப்பிடும் வரை இது அபூர்வமான பழம்.

பெண்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். அதுவும் தவறு. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றபின் எடை கூடி, இரத்த அழுத்தம், முதுகு, இடுப்பு, மூட்டுகளில் வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுவர். அவர்கள் தினசரி இரண்டு கீற்று பப்பாளி சாப்பிட்டால் எடை சடசடவென குறயும். மூட்டு வலி குறையும்.

முகெலும்பு பிதுக்கம் அல்ல நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளியை நாம் தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான் அர்த்தம்.''

SOURCE:> KUMUDAM.
--------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இலங்கை-மலையாள-தமிழக முஸ்லீம்களின் வரலாற்றின் சில பகுதி.

>> Monday, April 16, 2007

போர்த்துகீஸியர்-டச்சு-ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இலங்கை-மலையாள-தமிழக முஸ்லீம்களின் வரலாற்றின் சில பகுதி.

http://www.indianmuslims.info/history_of_muslims_in_india/coromandel_muslims.html

Coromandel Muslims-Posted January 17th, 2006 by kashif
Rise and fall of Coromandel MuslimsCOLOMBO DIARY PK Balachandran
January 16, 2006

Before the Portuguese, the Dutch and the English established themselves on the Coromandel or East Tamil Nadu coastline, maritime trade was entirely in the hands of Tamil-speaking Muslims of Arab-Tamil ancestry.

But once the pushy, ruthless, cunning and better organised European merchants entered the arena, the Coromandel Muslims began to lose ground rapidly.

And in their fight for survival, they got no help from the Indian rulers, writes Dr J Raja Mohamad, in his fascinating book entitled: Maritime History of the Coromandel Muslims (published by the Government Museum, Chennai, India, in 2004).

The local rulers were indifferent to the Muslims' plight because they were not interested in maritime trade and the Muslims had not cultivated them.

In the new era, when trade was inextricably tied to political and military power, the apolitical Coromandel Muslims found themselves completely outplayed by the more savvy Europeans, Raja Mohamad says.

The dominant Muslim communities on the Coromandel coast were the Marakkayars, also known as Maraikars, Marikkars or Marcars, and the Labbais, also known as Lebbe or Coromandel Moplahs. Maraikars and Labbais were found in Ceylon too.

These communities dominated trade with Ceylon and South East Asia. So much so, that English records describe the ports on the Coromandel coast as "Moor ports".

Cuddalore was known as Islamabad and Porto Novo or Parangipettai, as Mohammad Bandar.

The Tamil-speaking Muslims of Arab-Tamil ancestry had inherited their dominant position in South and South East Asian trade from the Arabs, who had acquired a virtual monopoly of Indian maritime commerce by 3rd Century BC.

The Arab and Tamil-speaking Muslim traders brought much prosperity to India. The 14th century Arab writer Ibn Fadbullah ul-Omari had written that in India the seas were pearls and the trees were perfumes!

According to Raja Mohamad, Arab contact with Tamil Nadu is mentioned in the Tamil Sangam literature of 2nd Century AD.

He says that the "Yavana" in Sangam literature are not Greeks, as generally presumed, but Muslims from what is now Yemen.

He also says that the term "Sonaka" used to identify Coromandel and Ceylon Muslims of Indo-Arab descent is but a corruption of Yavana. He also points out that the Mapilla or Moplah Muslims of Kerala were known as Sonaka Mapillas.

The Arabs came to the Coromandel coast not as conquerors, but as traders.

Conversions to Islam took place through preaching to the under-privileged sections of the caste-ridden Hindu society, and marriage to Tamil women. Islam came to the Coromandel coast in its earliest days.

The oldest mosque in Tamil Nadu which is near the Kottai (Fort) Railway station in Tiruchi is dated 743 AD.

The native Hindu rulers of what is now Tamil Nadu and Kerala, encouraged the Arab-Muslims to settle down and trade.

The Zamorin of Calicut in Kerala needed Muslims to man his ships. He even decreed that the Arab traders should marry Malayali women and bring up at least one of their children as a Muslim.

The Rowthers, as the name suggests, had made a name for themselves as traders in Arab horses.

The Marakkayars (boat people) and Lebbais were expert mariners and traders. The Marakkayars claimed a higher social and economic status.

Arrival of Portuguese and end of free trade

Prior to the advent of the Portuguese in the early part of the 16th. Century, trade in South and South East Asia was free.

It was the Portuguese (followed by the Dutch and the English) who introduced the system of monopolies and unfair trade regimes based on military might and political clout, Raja Mohamad says.

Cooperation and peace were replaced by discord and war, he comments.
In bringing about this iniquitous system, the Indian rulers had a hand. Indian rulers at that time did not enter trade.

So they did not pitch for monopoly over trade in the Indian Ocean. They extended all facilities to the Portuguese to attract them to their ports, Raja Mohamad says.

He laments that the Indian rulers did nothing to protect the Muslims, who were the only Indian maritime traders operating shipping services to far-flung areas.

The Indian rulers declared that trade in spices, gold and silver were a Portuguese monopoly.

Being virulently anti- Muslim, the Portuguese told the Christians of Kerala not to sell their pepper to the Muslims.

By 1530, the Arabs lost their monopoly over trading in horses. This passed entirely into the hands of the Portuguese.

By 1537 they had converted to Christianity an oppressed fishing community on the Tamil Nadu coast called Paravas.

The rejuvenated Paravas were set up to compete with the Muslims in trade and pearl fishing.

Pearl fishing, which was entirely in the hands of the Muslims for a long time, went into the hands of the Paravas.

To control trade in the entire region, the Portuguese established their power over key points like Hormuz in the Persian Gulf, and Malacca in South East Asia. Ceylon passed into their hands.

Under the Cartaz system, only those ships with a Portuguese Cartaz (document or permit) could trade and enter ports in this region.

Indian rulers favoured Portuguese

To the misfortune of the Coromandel Muslims, the Nayak rulers of Thanjavur favoured the Portuguese, and the latter in turn favoured the Hindu Chettiar merchants, who were taken as local partners.

This affected the Muslims badly because their trade centre was the port of Nagapattinam in Thanjavur.

In Madurai too, the Nayak rulers favoured the Portuguese. This was because the Portuguese helped Thirumalai Nayak in a succession dispute.

Taking advantage of the Nayaks' lack of interest in seafaring and sea trading, the Portuguese took control of the Madurai Nayakdom's ports.

But the Portuguese ran into trouble with the Sethupathi Rajas of Ramanathapuram, who formed an alliance with the Dutch against the Portuguese.

As the Muslims too had complaints against the Portuguese, the Ramanathapuram Rajas helped the Muslims establish themselves on the Ramanathapuram coastline facing Ceylon.

With the local Rajas being generally indifferent, if not hostile, to the Muslims, the Portuguese were able to persecute the Muslim traders with impunity.

Their ships used to be disallowed in harbours even if they had the Cartaz and heavy bribes were demanded. It cost the Muslims a great deal more to get a Cartaz.

When the Portuguese acquired Colombo in Ceylon, they found a strong Muslim population there dominating trade.

Persecution was set in motion immediately. They were driven out of the maritime regions into the Kandyan region at the Centre.From there they had to go to the Eastern and South Eastern Coast, where they became rice cultivators.

Dutch displace Portuguese

The Dutch set up their first factory in India in 1605, and by 1658, they had displaced the Portuguese from most places on the Coromandel coast.The Indian princes welcomed the Dutch because they needed help to counter the Portuguese who had become rapacious.

The Dutch were given trade concessions in return for help to counter the Portuguese.

The Sethupathi of Ramanathapuram had borrowed money from the Dutch, and as repayment, he had to mortgage all his ports to them.In Ceylon, the Dutch confiscated the vessels of the Sethupathi and his allies, the Muslims.

Heavy restrictions were put on the Muslims both in India and Ceylon. In Ceylon, after the Dutch had established themselves, government lands were not rented out to the Muslims and no government work was entrusted to them.

But the Dutch could not stand the pressure from the English who had also started forming alliances with native princes by exploiting differences between them.

By 1783-84, the Dutch East India Company was virtually bankrupt and before long, the Dutch had to quit India.

Muslims turn to smuggling

Raja Mohammad says that because of the restrictions put on them by the Portuguese and the Dutch, Muslim traders and mariners took to smuggling in a big way in the 17th and 18th centuries. Records tended to describe them as smugglers.

The French, who followed the Dutch, were more favourable to the Muslims. The French used Muslim mariners in their trade with Burma.The Muslims began to operate from Pondicherry, where the customs rates were lower.

Impact of the British

The British changed the character of trade in peninsular India. They entered into deals with weavers and financed their production for export. Many of the weavers were Muslims from the Lebbe community.

But by the first half of the 19th century, all this changed, Raja Mohamad observes. The British began to export cotton from South India and import finished cloth made in Lancashire, England. South Indian cloth lost its market in England.

Muslim traders were disadvantaged by the growth of British Joint Stock Companies in the trading sector.

The system of advancing money to weavers had broken the back of the Muslim trader and exporter.

Local weavers sold their products to the British merchants not the Muslims. The British Indian government favoured British companies and discriminated against Muslim merchants.

Muslims who were in shipping and ship building were badly hit when the British restricted Indian shipping and ships having Indian crew.

A ship entering English waters had to have a White captain and at least 75 per cent of the crew had to be White, Raja Mohamad writes.

The British also preferred to work with the docile Hindu Chettiars rather than the Muslims, he says.

Muslim traders lost out to the Chettiars also because the financial clout of the latter was much greater.

After the revolt of 1857 in North India, British attitude towards the Muslims in general hardened.


Southern Tamil Nadu was the home ground of the Tamil Muslim trader and mariner.

When the British started developing Madras as the main port of the Coromandel coast, the Muslims were highly disadvantaged.Ports on the southern coast like Kayal, Kilakarai, Devipattinam, Thondi, Adiramapattinam, Porto Novo, and Nagapattinam began to lose their importance.

These remained dominant only in Indo-Ceylon trade, in which of course, the Tamil Muslims had a big role to play till quite recently.


The heavy restrictions on Muslim maritime trade forced the Coromandel Muslims to leave this line and look for other trading opportunities further inland in India and abroad.

Migration to Ceylon, Malaya and other parts of British-held South East Asia began in a big way.

Muslim-owned ships began to take passengers rather than cargo. Many Muslims became traders, peddlers and contractors in South East Asia.

Reasons for the decline of the Coromandel MuslimsRaja Mohamad has identified several reasons for the decline of the Tamil-speaking Muslims of the Coromandel coast:

1) There was a sharp religious and economic conflict between the Portuguese and the Dutch on the one hand, and the Muslims on the other.
2) The Portuguese and the Dutch and later the British preferred to work with the Hindu Chettiar merchants rather than the Muslims.
3) Native Indian rulers, whether Hindu or Muslim, barring the Sethupathis of Ramnad, had no interest in maritime trade and therefore gave away their ports and maritime trading rights to the European powers in return for financial/political/ military help against their rivals.
In the process, the interest of the indigenous maritime trader, the Muslim, was sacrificed.
4) Unlike the Europeans, the Muslims showed no interest in the politics or political conflicts in the areas in which they lived, and therefore failed to take advantage of political currents.
5) Muslims did not modernise their business styles and practices. The British were more innovative and reaped huge benefits as a result.
6) Muslims did not have the financial resources of the Hindu Chettiars or the British merchants. They had to borrow from the Chettiars at high rates of interest.
7) Unlike the Chettiars, the Muslims were not united. And unlike the British merchants, they did not have the backing of the British Indian government.
The British Indian government placed such restrictions on overseas shipping and trade that it was impossible for Muslim overseas traders and shipping interests to survive.
Raja Mohamad ends his book on a somber note. He says that the Muslims of Coromandel, who were the "rulers of the waves, merchant princes at home and king makers and economic builders in far off countries", disappeared from the scene rapidly, because they could not match the strength and guile of the Europeans.
Sadly, the short-sighted Indian rulers had no use for the Muslims and ignored them.

Today, the Coromandel Muslims are a pale shadow of what they were even 200 years ago.Though their deeds "glitter in the pages of history," they do not remember their past, Raja Mohamad observes.
(PK Balachandran is Special Correspondent of Hindustan Times in Sri Lanka)
source :http://www.hindustantimes.com/news/7752_1599649,004100180006.htm
------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

ஜப்பானியப் பெண்மணியான கவுலா சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தைத் தழுவிய சம்பவம்

>> Saturday, April 14, 2007

ஜப்பானியப் பெண்மணியான கவுலா
சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தைத் தழுவிய சம்பவம் .

(ஜப்பானியப் பெண்மணியான கவுலா அவர்கள் தன்னுடைய அனுபவத்தை விவரிக்கின்றார்கள்)

பிரான்ஸில் நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் பெரும்பாலான ஜப்பானியர்களைப் போலவே நானும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. நான் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.

சார்ட்டர், நீச்சஸ், காமஸ் போன்ற நாத்திகவாதிகளே எனக்கு மிகவும் பிடித்த சிந்தனையாளர்களாயிருந்தனர். ஆனால் அதே நேரத்தில் நான் மதத்தைப் பற்றிப் படிப்பதிலும் மிகவும் ஆர்வமுடையவளாக இருந்தேன். அது ஏதோ தேவைக்காக அல்ல. ஆனால் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தினால் தான். மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தெரிய நான் விரும்பவில்லை.

ஆனால் எப்படி வாழ்வது என்பதே என்னடைய அக்கறையாக இருந்து வந்தது. நான் என்னொரு உணர்வு வெகு காலமாகவே எனக்கு இருந்து வந்தது. கடவுள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் எனக்கு ஒன்றாகவே இருந்தது. நான் உண்மையைத் தெரிந்து என்னுடைய வாழ்க்கைப் பாதையை, கடவுளுடனோ அல்லது கடவுள் இல்லாமலோ, தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

இஸ்லாத்தைத் தவிர உள்ள எல்லா மதப் புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். படிப்பதற்குத் தகுதியான ஒரு மதமாக இஸ்லாம் இருக்கும் என்று நான் ஒரு போதும் எண்ணியதில்லை. என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்களின் ஒருவகையான பழங்காலத்திய சிலை வணக்கமே என்று எண்ணியிருந்தேன். (நான் எவ்வளவு அறியாதவளாகயிருந்திருக்கிறேன்).

நான் கிறிஸ்தவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு பைபிளைப் படித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு கடவுள் இருக்கிறார் என நம்பினேன். இறைவன் இருக்கத் தான் வேண்டும் என நான் நம்பினாலும் அவன் இருப்பதை நான் உணர முடியவில்லை. நான் சர்ச்சில் தொழுது பார்த்தேன். ஆனால் அது வீணில் தான் முடிந்தது. இறைவன் இல்லாமலிருப்பதைத் தவிர வேறு எதையும் நான் உணரவில்லை.

ஜென் அல்லது யோகா மூலமாக இறைவனை உணரலாம் என்று நினைத்துக் கொண்டு நான் புத்த மதத்தைப் படித்தேன். கிறிஸ்தவ மதத்தில் இருந்ததைப் போலவே பல உண்மையான விசயங்கள் அதிலும் இருந்ததைக் கண்டேன்.

ஆனாலும் நான் புரிந்து கொள்ளவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முடியாத ஏராளமான விசயங்கள் அதில் இருந்தன. என்னைப் பொறுத்தவரையில், இறைவன் இருந்தால் அவன் எல்லோருக்குமுள்ள இறைவனாக இருக்க வேண்டும்.

மேலும் சத்தியம் என்பது எளிமையானதாகவும் எல்லோராலும் புரிந்து கொள்ளப்படக் கூடியதாக இருக்க வேண்டும். ஏன் மக்கள் தங்களுடைய வழமையான வாழ்க்கையைத் துறந்து விட்டு இறைவனுக்கே தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இறைவனைத் தேடும் கடும் முயற்சியின் இறுதியை அடைய என்ன செய்வது என எனக்கு தெரியாமலிருந்தது. அப்பொழுது தான் நான் ஒரு அல்ஜீரிய முஸ்லிமைச் சந்தித்தேன். பிரான்ஸிலேயே பிறந்து வளர்ந்த அவனுக்கு எப்படித் தொழுவது என்று கூடத் தெரியவில்லை.

அவனுடைய வாழ்க்கை ஒரு சரியான முஸ்லிமின் வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தது. ஆயினும் அவன் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்.

ஆனால் எந்தவொரு அறிவுமேயில்லாமல் இறைவனை நம்புவதென்பது என்னை எரிச்சல்படுத்தி இஸ்லாத்தைக் கற்கத் தூண்டியது. ஆரம்பமாக பிரஞ்சு மொழியிலுள்ள திருக்குர்ஆனை வாங்கிப் படித்தேன். ஆனால் என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அது மிகவும் விநோதமாகவும் போரடிப்பதாகவும் இருந்தது.

தனியாக அதைப் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு விட்டு எனக்கு உதவி செய்யும்படி யாரையாவது கேட்பதற்காக பாரீசிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்றேன். சகோதரிகள் என்னை நன்றாக வரவேற்றனர். இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்களை நான் சந்திப்பது அதுவே முதல் முறை.

கிறிஸ்தவ பெண்களுடன் இருக்கும் போது மிகவும் அந்நியத்தை உணர்ந்த நான், வியக்கும் வகையில் முஸ்லிம் சகோதரிகளோடு மிகவும் அன்னியோன்யமாக இருப்பதாக உணர்ந்தேன். ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் சொற்பொழிவில் கலந்து கொள்ளத் தொடங்கினேன்.

முஸ்லிம் சகோதரி ஒருவரால் கொடுக்கப்பட்ட பத்தகம் ஒன்றை படித்தும் வந்தேன். சொற்பொழிவின் ஒவ்வொரு வாக்கியமும், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் நான் முன்னர் ஒரு போதும் அறியாத ஆத்மீக திருப்தியை தரும் இறை வெளிப்பாடாகவே எனக்கு இருந்தது.

சத்திய ஊற்றில் மூழ்கிய உணர்வு என்னுள் பொங்கியது. அதிசயமானது என்னவெனில், ஸுப்ஹானல்லாஹ்..! நான் ஸஜ்தாவிலிருக்கும் போது இறைவன் எனக்கு மிக அருகிலிருக்கும் உணர்வைப் பெற்றேன்.

ஹிஜாப் பற்றி கவுலாவின் கருத்தும் அனுபவமும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவிய போது பள்ளிக் கூடத்திற்குள் ஹிஜாப் அணிவதைப் பற்றி மிகவும் சூடான சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. மதங்களோடு சரிசம நிலையில் இருக்க வேண்டிய பள்ளியின் கொள்கைக்கு அது எதிரானது என பெரும்பாலோர் கருதினர்.

முஸ்லிம் மாணவிகள் தங்கள் தலையை ஸ்கார்ப்பினால் மறைப்பது போன்ற சிறிய விசயத்திற்காக அவர்கள் ஏன் அவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என அப்பொழுது முஸ்லிமாகாதிருந்த எனக்குப் புரியவில்லை.

ஆனால் வேலை இல்லாத் திண்டாட்டம், பெரிய நகரங்களில் நிலவிய பாதுகாப்பின்மை போன்ற மிகவும் மோசமான பிரச்னைகளை எதிர் கொள்ள நேரிட்ட பிரஞ்சு மக்கள் அரபு நாடுகளிலிருந்து பணி புரிவதற்காக ஆட்கள் வருவதை எண்ணி மிகவும் எரிச்சல்பட்டார்கள். அவர்கள் தங்களின் நகரங்களிலிருந்து பள்ளிகளிலும் ஹிஜாபை கண்டு மிகவம் மனக் கிலேசத்திற்குள்ளானார்கள்.

மறுபுறம் அரபு நாடுகளில், மேற்கத்திய கலாச்சாரம் வேர்விட்டதால் பர்தா மறைந்து போவதற்குப் பதிலாக, மிகப் பெரும்பான்மையான மேற்கத்தியர்களும் மற்றும் சில அரபியர்களும் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருந்ததற்கு மாற்றமாக, ஹிஜாபிற்கு, குறிப்பாக இளம் பெண்கள், ஏராளமாக திரும்பி வருவது காணப்பட்டுக் கொண்டிருந்தது.

தற்பொழுது ஹிஜாபின் மறுமலர்ச்சியால் பிரதிபலிக்கப்பட்ட இஸ்லாமிய எழுச்சி காலனித்துவம் மற்றும் பொருளதாரப் பின்னடைவுகளால் அடிக்கடி பாதிக்கப்பட்ட அரபு முஸ்லிம்கள் தங்களுடைய கௌரவம், மற்றும் தனித்தன்மை ஆகியவற்றை காப்பாற்றிக் கொள்ள செய்யும் முயற்சியே என்று கருதப்படுகிறது.

அரபுகள் இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றி வாழ்வது தொன்று தொட்டு வரும் நடைமுறைகளைப் பின்பற்றுவதாலோ அல்லது மேற்கத்திய எதிர்ப்பு மனப்பான்மையாலே ஏற்பட்டிருக்கலாம் என்று ஜப்பானியர்களுக்கு தோன்றலாம்.

ஏனெனில் மேற்கத்தியவர்களுடன் தொடர்ப கொண்ட பிஜீ காலத்தில் அவர்களும் இத்தகைய எதிர்ப்புணர்ச்சியை உணர்ந்திருக்கின்றனர். அதனால் தான் மேற்கத்திய வாழ்க்கை முறை, உடை ஆகியவற்றிற்கு எதிர்ப்பாகச் செயல்படுகின்றனர். மனிதன் எப்போதுமே பழமைவாத உணர்வுகளைக் கொண்டவனாக இருக்கிறான்.

ஆகவே தான் புதிய அல்ல தெரியாத எதுவாக இருந்தாலும் அது அவனுக்கு நன்னமை பயக்கக் கூடியதா அல்லது தீமை பயக்கக் கூடியதா என்று உணராமல் எதிர்க்கிறான்.

தங்களுடைய பரம்பரை பழக்க வழக்கத்திற்கு அடிமையானதாலும் தங்களுடைய துயரமிக்க நிலையை சரிவர தெரிந்து கொள்ளாததாலுமே முஸ்லிம் பெண்கள் ''நசுக்கப்பட்ட சூழ்நிலை"" யின் சின்னமாக ஹிஜாபை அணிய வேண்டுமென வற்புறுத்துகின்றனர் என சிலர் இன்னும் நினைக்கின்றனர்.

பெண் விடுதலை மற்றும் சுதந்திர இயக்கம் அவர்களின் சிந்தனையை தட்டி எழுப்பினால் அவர்கள் ஹிஜாபை தூர எறிந்து விடுவார்கள் எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.

இஸ்லாத்தைப் பற்றி சொற்ப அறிவே உள்ள சிலர் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். உலகாதாய மற்றும் பல்வேறு மதக் கொள்கைகளைப் பின்பற்றும் மனோப்பாங்குள்ளவர்கள் இஸ்லாத்தின் போதனைகளை உலகளாவியவை, எக்காலத்திற்கும் ஏற்றவை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

எவ்வாராயினும், ஏராளமான அரபுகளல்லாத பெண்களும் இஸ்லாத்தை சத்திய மார்க்கமென ஏற்று அதைத் தழுவி தங்களுடைய தலையை மறைத்து வருகின்றனர். அது போன்ற பெண்களில் நானும் ஒருத்தி.

நன்றி: தமிழ் இஸ்லாம்.காம் ----posted by அபூ ஸாலிஹா.

மேலும் படிக்க... Read more...

விரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்

>> Thursday, April 12, 2007


விரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்!

செவ்வாய், 06 பெப்ரவரி 2007

அருள்மறை குர்ஆனைத் தாம் பல வருடங்களாகப் பொருளறிந்து படித்ததன் விளைவாக ஏற்பட்ட ஈர்ப்பினாலேயே 61 வயதான அமெரிக்காவின் மேகான் நகர மேயர் ஜாக் எல்லிஸ் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துள்ளாக அறிவித்துள்ளார்.

இறைவனின் புறத்திலிருந்து உதவி செய்யப்பட்ட விவேகம் மிக்கவர் என்ற பொருள்படும் "ஹக்கிம் மன்சூர்" என்ற அழகிய பெயரை மேகான் நகர இஸ்லாமிய மையத்தின் இமாம் ஆதம் ஃபோபனா அவர்கள் தேர்ந்தெடுத்து இவருக்குச் சூட்டியுள்ளார்.

வாழ்க்கையின் அனுபவ அறிவுபெற்றவர் என்றும் நல்லவை தீயவைகளைப் பிரித்தறிபவர் என்றும் பொருள்படும் ஹக்கிம் என்ற பெயரையும், இறைவனின் புறத்திலிருந்து உதவியை எதிர்பார்த்து செயல்படுபவர் என்று பொருள்படும் மன்சூர் என்ற பெயரையும் இணைத்து இவர் வைத்துள்ளது ஓர் அழகிய ஒருங்கிணைப்பு எனத் தெரிவித்துள்ள இமாம் ஆதம் போபனா அவர்கள் மலேசியப் பல்கலைக் கழகத்திலிருந்து வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்ரிக்க மேற்குக்கரையிலுள்ள செனேகல் நாட்டில் கடந்த டிசம்பரில் நடந்த ஓர் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கையில், இஸ்லாம் போதிக்கும் அழகிய நபிவழியிலான வாழ்க்கையைத் தான் விரும்பி தேர்ந்தெடுத்துத் தழுவியதாகக் கூறும் ஜாக் எல்லிஸ் அடிப்படையில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராவார்.

உள்நாட்டு சட்டப்படி தன் புதிய இஸ்லாமிய பெயரைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவர், தன் இரு மகள்களின் விருப்பத்திற்கேற்ப எல்லிஸ் என்ற தன் குடும்பப்பெயரையும் புதிய பெயருடன் இணைத்து வைத்துள்ளார்.

90 சதவீதம் முஸ்லிம்களையும், கிறித்துவ ஆட்சியாளர்களயும் கொண்ட செனகல் நாட்டில் மத ரீதியாகப் பிரிந்து கிடக்கும் சமூகங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு பாலமாக ஜாக் எல்லிஸ் அவர்களின் மனமாற்றம் அமையும் என்று இமாம் போபனா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களால் பெருவாரியான வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருப்பினும், இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பே தன் மதமாற்றத்திற்குக் காரணம் என்று ஜாக் எல்லிஸ் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மையத்தின் மத்திய வாரிய இயக்குனரான முஹம்மத் ஸ்க்ராஃப் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், ஜாக் எல்லிஸின் மன மாற்றம் தனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என்றும் கடந்த சில வருடங்களில் மத்திய ஜார்ஜியா பகுதியில் இஸ்லாத்தைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதையும் சுட்டிக்காட்டினார்.

ஜாக் எல்லிஸ் இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை முதன் முதலில் அஸோஸியேட்டட் பிரஸ் ஊடகத்தின் மூலம் வெளியுலகத்திற்கு அறிமுகமானதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களான வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், அட்லாண்டா பத்திரிகை நிறுவனம் CNN, Fox News மற்றும் டைம்ஸ் பத்திரிகை உள்பட பல்வேறு இணைய தளங்களில் தலைப்புச் செய்தியாக இவரது செய்தி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல டெலிகிராப் இணைய தளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாளைக்குள் இச்செய்தி 10 ஆயிரம் பேரால் படிக்கப்படுள்ளது

மேகான் நகர 176 ஆண்டுகால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கக் கறுப்பின மேயரான எல்லிஸ், 1999 முதல் பதவி வகித்து வருகிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய பெருமிதத்தை வெளிப்படுத்தும் போது அவர், அமெரிக்கர்களுக்கு ஊடகங்கள் வழியே சொல்லப்படும் இஸ்லாம் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் இஸ்லாம் குறித்து தான் அறிந்து கொண்ட அளவை வைத்தே தன்னால் இஸ்லாத்தைக் குறை சொல்வோருடன் அழகிய விவாதம் புரிய இயலும் என்றும் கூறினார்.

அமெரிக்க நகரத்தின் மேயரான ஹக்கிம் மன்சூர் எல்லிஸ் (ஜாக் எல்லிஸ்) விரும்பி, இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வு அவரது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பரவலாக பெற்றிருக்கும் சூழலில், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட அமெரிக்காவின் ஆளும் தலைமை உள்பட பல்வேறு நகரங்களில் அதிர்ச்சி அலைகள் எழுந்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.

மேலும் படிக்க... Read more...

மனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனுக்கு உள்ளேயே தான் இருக்கிறது.

>> Tuesday, April 10, 2007

மனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனுக்கு உள்ளேயே தான் இருக்கிறது.

ஜு_மல்கி வந்து சில மாதங்களே ஆனது அந்தப் புதிய ஊரில் முரடன் ஒருவன் அவரை வம்பு செய்யும் நோக்கோடு வந்திருந்தான்.

ஜு_மல்கியின் குடிசைக்கு வெளியில் கரகரப்பான குரலில் முரடன், ''ஏய்! யார்ரா அது வீட்டுக்குள்ளே! இங்கே எவனோ ஞானின்னு புதுசா ஒருத்தன் வந்திருக்கானாம்ல, அவனை வெளில வரச்சொல்... அவனா நானா?ன்னு பார்த்துடலாம்!'' என்று கத்திவிட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

ஜு_மல்கி மெதுவாக வெளியே வந்து, ''அப்படி யாரும் இங்கே இல்லீங்களே!''

முரடன், ''என்ன ஏமாற்ற முயற்சிக்காதே! நீதான் அது. மக்கள் சொன்ன எல்லா அடையாளமும் உன்கிட்ட இருக்கு... நீ ஞானிதான்.''

ஜு_மல்கிக்கு வந்த சிரிப்பை தவிர்த்துவிட்டு, ''இல்லீங்க. நான் என்ன ஞானின்னு ஒருபோதும் சொன்னதே இல்லை. நான் சாதாரண மனுஷன். மக்கள்தான் அப்படி சொல்றாங்க'' என்றார்.

முரடன், ''அதிருக்கட்டும்.... உனக்கு எல்லாமே தெரியுமாமே! நான் இரவு முழுவதும் வேட்டையாடுவேன். உன்னால் முடியுமா?'' என்று பெருமை பொங்க கேட்டான்.

ஜு_மல்கி, ''இதுக்கு சிங்கமாவோ, புலியாகவோ பிறந்தா போதுங்களே! அதுக்காக மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமில்லயே...''

ஞானியின் இந்த பதிலடிக் கேள்வியால் உள்ளுக்குள் கொஞ்சம் தடுமாறினான். முரடன். இதுநாள் வரை எதைப் பெரிய சாதனயென்று நினத்திருந்தானோ அதை சாதாரண மிருக குணமென ஞானி கூறியதில் மனதளவில் பெரிய அடிவாங்கியதைப் போன்று உணர்ந்தான்.

முரடன், ''அதிருக்கட்டும், என்னைக் கண்டால் இந்த ஊரே கட்டுப்படும். எல்லோரும் எனக்கு பயப்படுவார்கள்.''

ஜு_மல்கி, ''இந்த ஊரில் யாராவது உனக்கு மரியாதை தருகிறர்களா... வெறும் பயத்தால் மக்களைக் கட்டுப்படுத்த அரக்கன் போதுமே... மனிதனாகப் பிறக்கணும்னு அவசியமே இல்ல.''

சாதனை என்று முரடன் நினத்திருந்த மனத்தூண்கள் ஞானியின் சோதனயில் ஆட்டம் கண்டுவிட்டன. ''எல்லோரும் பயப்படறாங்களா? மதிக்கறாங்களா?...'' என்ற கேள்விகள் முரடன் மனதில் மீண்டும் மீண்டும் வர ஆரம்பிக்க... ஜு_மல்கி தொடர்ந்து, ''மனசு கெட்டுப் போய் கிடக்கு. அதனால தூங்க முடியல. தூக்கம் வரல. மனசுல கொஞ்சங் கூட ஈரமில்லாமல் மிரட்டினால் அப்பாவி மக்கள் பயப்படுவாங்கதான். இதுல பெருமப்படும் அளவுக்கு சாதனை எங்க இருக்கு? உனக்குள்ளே வேதனை இருக்கு. அவ்வளவுதான்'' என்று கூறிவிட்டு ஜு_மல்கி குடிசைக்குள் சென்றுவிட்டார்.

பதில் பேச முடியாமல் சிந்தனையில் இருந்த முரடன் அப்படியே வீடு சென்றான். கிட்டத்தட்ட மூன்று நாட்களாக வெளியே வரவில்ல. மக்களைப் பார்க்கவில்ல. முரடன் மூன்று நாட்களாக எவ்வளவு முயன்றும் இரவு அவனால் தூங்க முடியவில்ல. விஷயம் தெரிந்து மக்கள் நிம்மதி அடந்தனர்.

மனம் சோர்ந்துபோய் வெளியே வந்த முரடனின் நடை மாறிவிட்டது. யாரயும் மிரட்டத் தோன்றாமல் நடந்தான்.

இதுவரை பயந்து ஒதுங்கியவர்கள் இன்று கண்டுகொள்ளாமல் போவதைப் பார்த்த முரடன்.... ஒருவேளை! ஞானி கூறியபோல் நான் மனுஷனாக வாழவே இல்லை என்று யோசிக்க யோசிக்க துக்கம் தாளாமல் ஓடிவந்து ஞானி ஜு_மல்கியின் குடிசை வாசலில் விழுந்தான்.

முரடன் முதுகில் தட்டிக் கொடுத்த ஜு_மல்கி, ''தகுதி பெற்றுவிட்டாய்! அழாதே. மனிதனாக பிறந்ததின் நோக்கத்தை அனுபவமாக உணர அடிப்படைத் தகுதி பெற்றுவிட்டாய். எழு!'' என்று ஆரத் தழுவிக் கொண்டார். முரடனைக் கூட முல்லை மலர் போல் மாற்றுவது இதுபோன்ற ஞானிகளுக்கு எளிது. ''ஏன் பிறந்தோம்?'' என்ற கேள்வி உணர்வுபூர்வமாக உள்ளத்திலிருந்து எழுவதுதான் பதில் அறிந்து கொள்ள அடிப்படைத் தகுதி.

இதுநாள் வரைக்கும் அந்த மனிதன் அடைந்ததாக நினைத்த இன்பமெல்லாம் உண்மையல்ல என்பதைத் தெரிந்து சொன்னபோதே ஞானம் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.

நம்மிடம் இருக்கும் புத்தம் புதிய கார், சலவைக் கல்லால் கட்டிய பங்களா, பட்டங்கள், வேலையாட்கள் என்று எதுவுமே நிரந்தரமான ஆனந்தத்தை அளிப்பதல்ல. உண்மையான ஆனந்தம் நிலையான நிம்மதியானது எப்போதும், எதனாலும் அசைக்க முடியாதது.

மனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனுக்கு உள்ளேயே தான் இருக்கிறது. ---SOURCE:> INTERNET.
------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP