**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை? 'ஆரியர்கள் வருகை'. ' முகலாயர்களின் படையெடுப்பு'.

>> Saturday, September 27, 2008

'ஆரியர்கள் வருகை' 'முகலாயர்களின் படையெடுப்பு' என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள்.

இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது

யார் தீவிரவாதி? இஸ்லாமிய தீவிரவாதம்!

உலகம் முழுக்க உள்ள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இன்று அதிக பட்ச பயத்துடன் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவைதான். 'தீவிரவாதம்' 'வன்முறை' என்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன். 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று சொல்லுகிறார்களே அது என்ன?

இஸ்லாமியர் செய்கிற தீவிரவாதம் என்று பொருள் சொல்லலாமா? பழிக்குப்பழி; ரத்தத்துக்கு ரத்தம்' என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும் போது, தீவிரவாதத்திற்கு முன்னால் 'இஸ்லாமிய' என்கிற அடைமொழி ஒட்டிக்கொள்வதன் பின்னணி என்ன?

ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அவரை 'இந்து தீவிரவாதி' என்றோ, 'கிறிஸ்தவ தீவிரவாதி' என்றோ ஏன் அழைப்பதில்லை?

தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது' என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை?

இப்போது உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்?

'பழிக்குபழி ரத்தத்துக்கு ரத்தம்' என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும்போது, தீவிரவாதத்திற்கு முன்னால் 'இஸ்லாமிய' என்கிற அடைமொழி ஒட்டிக் கொள்வதன் பின்னணி என்ன?

சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதையும் முகலாயர்கள் ஆண்டதாக வரலாறு இருக்கிறது. அதிகாரமும் ஆட்சியும் இருந்தபோதே அவர்கள் நினைத்திருந்தால் மக்களை மிரட்டிப் பணிய வைத்து, இஸ்லாமிய மதத்தைப் பரப்பியிருக்கலாம்.

ஆனால் இன்றைய நடைமுறை உண்மை, முஸ்லிம்கள் இந்தியநாட்டில் வாழும் சிறுபான்மை மதத்தினர் என்பதுதான்!

அதேபோல் ஸ்பெயினிலும் சில நூறு வருடங்களுக்கு முன்பு ஆண்டிருக்கிறார்கள். இன்று ஸ்பெயினில் வாழக்கூடிய முஸ்லிம்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

எந்த முகலாய மன்னரும் இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் போனதாக ஒரு சிறிய தகவல் குறிப்பு கூட கிடையாது.

வெள்ளையர்கள் போல நாடு பிடிக்க வந்தவர்கள்தான் முகலாயர்கள். தாஜ்மஹாலையும் கோட்டைகளையும் கட்டினார்களே தவிர,

இஸ்லாமிய மதத்தைப் பரப்ப வந்தவர்கள் என்பதில் வரலாற்று ரீதியான சான்றுகள் எதுவும் இல்லை. அந்த வரலாற்றிலும் கூட, அவுரங்கசீப் ஒரு மோசமான முகலாய மன்னன்.

அவன் இந்துக்களை ஒடுக்கினான்' என்பது போன்ற முகலாய மன்னர்களுக்கு எதிர்மறையான சாயத்தை பூசும் வரலாற்றுத் உண்மையில் அவுரங்கசீப்பீன் அரசவையில் பல முக்கியமான பதவிகளை இந்துக்கள் வகுத்திருக்கிறார்கள்.
------------------------------------------
படிக்கவும்:

அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!
--------------------------------------------------------
எத்தனையோ இந்துக் கோயில்களுக்கு அவர் நன்கொடை கொடுத்திருக்கிறார். இதை வின்சென்ட் ஸ்மித் என்பவர், 'இந்தியன் ஹிஸ்டரி' என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு பிறகு இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் முகலாய மன்னர்கள்தான். 'ஒருங்கிணைந்த இந்தியா' என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியவர்களும் முகலாயர்கள்தான்!

'ஆரியர்கள் வருகை' என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் 'முகலாயர்களின் படையெடுப்பு' என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்கிற விஷமமும் இங்கே திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எத்தனை தூரம் மற்றவர்கள் பாடுபட்டிருக்கிறார்களோ

அதற்குக் கொஞ்சமும் குறையாமல் முஸ்லிம்களும் பாடுபட்டிருக்கிறார்கள். 'முஸ்லிம்கள் மதவெறி பிடித்தவர்கள், மதத்திற்காக எதையும் செய்வார்கள்' என்று சொல்லுபவர்கள், உண்மையான வரலாற்றை தயவு செய்து படித்து விட்டு பேச வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

'இஸ்லாம்' என்ற சொல்லின் அர்த்தமே, ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டு அமைதியை நிலை நாட்டுவது' என்பதுதான்.

'ஜிகாத்' என்று குறிப்பிடுவது நல்லதுக்கும் கெட்டதுக்குமான மனப்போராட்டத்தை.

அமைப்பு ரீதியிலான வன்முறையை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவிலை. ஆனாலும் வரலாற்று நெடுகிலும் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக்க் காட்டுவதன் அரசியல் என்ன?

இந்தியாவில் தலித்துகளை விட மோசமான நிலைமையில் முஸ்லிம்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது "சச்சார் கமிட்டி" அறிக்கை. அதிக அளவில் வசிக்கிறார்கள் என்று சொல்லப்படும் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சோற்றுக்கே வழியில்லாத பரம ஏழைகளாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்,

ஆம்பூர் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு, எட்டு மணிவரை உழைத்தாலும் அவர்களுடைய ஒருநாள் கூலி பதினைந்து ரூபாய்க்கு மேல் இன்னமும் உயர்ந்து விடவில்லை.

எவ்வளவு கடுமையான உடல் உழைப்புக்கும் இங்கே கிடைக்கக்கூடிய கூலி எந்த வகையிலும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிடப் போவதில்லை என்பதை அறிந்துதான், இதே உடல் உழைப்பை வெளிநாடுகளில் கொட்டினால் நிறைய சம்பாதிக்கலாமே என்று வெளிநாடுகளுக்கு போவதை பலர் விரும்புகிறார்கள்.

காலம்காலமாகப் பதவிகளில் இருந்து சுகம் கண்டவர்கள்தான் அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள்.

ஐஐடி ஒதுக்கீடு விஷயத்தில் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஷூ பாலீஷ் போட்டு போராட்டம் நடத்தியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.

'அவனவன் அவனவன் வேலை செய்தால் போதும்; பட்டத்தையும் பதவியையும் நாங்கள் மட்டுமே அனுபவிப்போம்' என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கம்.

எங்கே இவர்களும் மேலே வந்து விட்டால் நம் நிலைமை என்னவாகுமோ என்ற பயம் பீடிக்கத் தொடங்கியதன் விளைவே இந்த

போராட்டங்கள் அனைத்தும்! ஒடுக்கப்பட்ட தலித்துகளும் சிறுபான்மையினரும் நிர்வாகத்துக்கு வந்தால்தான், அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு விடிவுகாலம் பிறக்கும்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு தலித்தோ, முஸ்லிமோ பிரதமராக முடியுமா? எந்த காலத்திலும் முடியாது என்பது தான் உண்மை.

இப்படியொரு காலகட்டத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கும் 3.5 சத இடஒதுக்கீடு முக்கியமான முன்முயற்சியாக இருக்கிறது. அவசரச் சட்டத்தில் கொண்டு வர ப்பட்ட இந்த ஒதுக்கீட்டையும் கிடைக்காமல் செய்ய சில சக்திகள் முனைப்பாக இருக்கின்றன.

ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும்.

ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்... மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் போல நாமும் படிக்க வேண்டும், நிர்வாகத் துறைகளுக்கு வரவேண்டும் என்ற விருப்பமே பலருக்கு வரவில்லை.

தங்களுக்கு அடிப்படையான தகுதிகளை வளர்த்துக் கொண்ட பிறகு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுவது தானே சரியாக இருக்கும்? எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதில் என்ன நடந்துவிடப்போகிறது? குர்ஆனில் வாசகம் ஒன்று உண்டு.

'உங்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவராத வரையில் நாங்கள் கொடுக்கின்ற அருட்கொடைகளை மாற்றித்தரப் போவதில்லை'

இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தக்கூடிய வாசகம்!
ஆக்கம்: நாகூர் ரூமி (நன்றி: குங்குமம் 04-10-2007)
--------------------------------------------------------------
ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?

'ஏன் சார் இப்படி நடக்குது? உங்களோட நாங்க படிக்கறதுக்குப் போட்டி போடறோமோ? அரசாங்க வேலைக்கு மல்லுக்கு நிக்கறோமா? அப்புறம் ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?

''இந்தக் கேள்வியை நண்பர் அப்துல்லா என்னிடம் கேட்டார்.

ஏறத்தாழ 14 வருடங்கள் முடிந்தபிறகும் இன்னும் அந்தக் கேள்வியில் இருந்த வருத்தம் எனது நினைவில் உள்ளது.கேட்ட நாள் 1992, டிசம்பர் 6.அன்று மாலை இன்னும் சில இஸ்லாமிய நண்பர்களுடன் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரது உணர்வை என்னுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலுக்கு எனது பெயரில் 'ராம்' இருப்பதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தி கொடுத்த வருத்தத்தில் இப்படிப் பேசுகிறார் என்பதற்குமேல் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை அப்போது புரியவில்லை. இப்போது சச்சார் கமிட்டியின் ஆய்வு முடிவுகள், அந்த வார்த்தைகளின் முழு பரிமாணத்தைப் புரிய வைக்கின்றன.

சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதத்தினர் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு; இந்த வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் சிறப்பு என்று பல வருடங்களாக நாம் போதிக்கப்பட்டு வருகிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லும்போது வேறுபட்ட கருத்தும் வாழ்க்கை முறையும் கொண்டவர்கள் ஒன்றாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், இந்தியாவின் அடிப்படை ஆதாரங்களை ஒற்றுமையுடன் சமமாகப் பகிர்ந்து வாழ்கிறார்கள் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறோம்.

பெரும்பான்மையானவர்களின் அந்த எண்ணத்தில், சச்சார் கமிட்டி அறிக்கை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2005 ஆம் வருடம் மார்ச் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இந்தியாவில் இஸ்லாமியர்கள் கல்வி ரீதியாகவும், சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் எப்படி இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது.

இந்த அறிக்கை சென்ற வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரபூர்வமாக அந்த அறிக்கை பிரதமரிடம் கொடுக்கப்படுவதற்கு முன்பே ஊடகங்களில் அதன் முக்கிய அம்சங்கள் வெளியாகி விட்டன என்பது வேறு விஷயம்!

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்தில் 1870 களில் மியோ பிரபு உத்தரவின் பேரில் முஸ்லிம்கள் குறித்துக் கணக்கெடுப்பு தொடங்கியது. அதன்பிறகு 1978 இல் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி ஒரு சிறுபான்மை ஆணையத்தை நியமித்தது. மீண்டும் 1980 இல் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, டாக்டர் செய்யது முகமது தலைமையில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு கமிஷன் அமைத்தார்.

டாக்டர் செய்யது முகமது வேறு பணிக்காகச் சென்றதும், கோபால்சிங் தலைமையில் இயங்கிய அந்த கமிஷன் தனது அறிக்கையை 1983 இல் அளித்தது.

ஆனால், இதுவரை எந்த அரசும் இந்த அறிக்கை குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதில் வி.பி.சிங், தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜரால் அரசுகளும் அடக்கம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வரை எத்தனை ஆய்வுகள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் அறிக்கையாகக் கொடுத்திருக்கின்றன.

அதாவது கல்வி, அரசுப் பணி, ஆட்சிப் பணி, காவல்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை...

இஸ்லாமியர்களின் காவலராகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆட்சி நடத்துகிற மாநிலங்களும் இந்த நிலையில் இருந்து விதிவிலக்காக இல்லை என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது.

உண்மை நிலைமைகள் இப்படி இருக்கும்போது, இந்திய சமூகம் முழுவதிலும் ஆழமாக ஒரு கருத்து விதைக்கப்படுகிறது. இந்தியாவில் ஓரிரு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களை மனநிறைவடையச் செய்யும் அரசியலை நடத்தி வருகின்றன என்ற பிரசாரம் நடந்து வருகிறது.

ஆனால், உண்மை நிலையோ வேறுவிதமாக இருக்கிறது.

இந்தியா விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருந்த பிறகும் முஸ்லிம்களின் நிலை இதுதானா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால், அரசியல் கட்சிகள் எதுவும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த அவசியமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

சில தனிமனிதர்களுக்கும் சில பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் சில சலுகைகளைச் செய்துவிட்டு அவற்றை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத் துக்குச் செய்த பணிகளாக சிலர் சித்திரிக்கிறார்கள். அவற்றையே எதிர் முகாமும் முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளாகச் சுட்டிக் காட்டுகின்றன.

ஆனால், இந்த சில அடையாள நடவடிக்கைகளால் முழு இஸ்லாமிய சமூகமும் பயன்பெறவில்லை என்பதை சச்சார் கமிட்டி தெரிவிக்கும் தகவல் உறுதி செய்கிறது.

மற்ற காங்கிரஸ் அரசுகளைப் போல் இல்லாமல் டாக்டர் மன்மோகன் சிங் அரசு இந்த விஷயத்தில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஏனெனில் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அடிப்படையான சில மாறுதல்களில் அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.

அரசுப் பணிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல அங்கங்களிலும் முஸ்லிம்களுக்கு 'நியாயமான' பங்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதை இந்த அரசு உறுதி செய்யும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியிலும் பலர் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு குறித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள்.

மதரீதியிலான இட ஒதுக்கீடு செய்வதற்கு இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடமில்லை என்று எதிர்க்குரல்களும் கேட்கின்றன.

இஸ்லாமிய சமூகம் வளர்ச்சியடையாமல் பின்தங்கியதற்கு அந்த சமூகத்தின் அரசியல் தலைமைதான் காரணம் என்று குற்றம் சாட்டுபவர்களும் இருக்கிறார்கள். மைய நீரோட்டத்துடன் கலக்காமல் அவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இந்தத் தடைகளையும் தாண்டி முதலில் அவர்களுக்கு உரிய கல்வி வசதி மற்றும் பிற தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் ஜனநாயகப் பண்பையும் அளவிடுவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில் அங்கு சிறுபான்மையினர் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது முக்கியமானது.

இந்தியாவில் அந்தக் காரணி படிப்படியாக எதிர்மறையாகப் போய்க் கொண்டிருக்கிறது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசுப் பணிகளிலும் மக்கள்தொகைக்கு நிகரான இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்காத இந்திய அரசு,

அவர்களுக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிக சதவிகித இடங்களைக் கிடைக்கச் செய்திருக்கிறது.

ஆம்! சிறைச்சாலைகளில் மட்டுமே அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த அவலநிலையைப் போக்குவது அரசின் கடமை. இல்லையெனில் அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று அரசே நினைப்பதாக அவர்கள் கருதிவிடக் கூடும்! நன்றி: ஜென்ராம் ஜூனியர் விகடன் (03-12-2006)

------------------------------------

படிக்க:>>

இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம்
ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க
சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது - குரானா

>> Wednesday, September 24, 2008

1991 ல் அத்வானி ரதயாத்திரை நடத்தியது அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக அல்ல என நியூடெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் நியூடெல்லி முதல்வரும் பி.ஜே.பியின் மூத்த தலைவருமான திரு. மதன் லால் குரானா அறிவித்துள்ளார்.

தேச நலனை விட சுயலாபங்களுக்குத் தான் அத்வானி முக்கியத்துவம் அளித்ததாக மேலும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அத்வானி தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கம் செய்ய வைத்தார் எனவும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி அத்வானி தான், சுப்ரீம் கோர்ட் இதனை தெளிவு படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாபரி மஸ்ஜித்தைத் தகர்ப்பதற்காக அத்வானி நடத்திய ரகசிய ஆலோசனைக் கூட்டங்களைக் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு தான் எழுதிய கடிதத்தின் நகலை ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னர் குரானா மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் வழங்கினார்.

பாபரி மஸ்ஜித் தகர்த்த வழக்கில் இருந்து அத்வானியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டதைக் குறித்து விசாரிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

நாட்டில் இனக்கலவரம் உருவாக்குவதற்காகத் தான் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது எனவும் அக்கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

மஸ்ஜித் தகர்ப்பதற்கு அப்போது பிரதமராக இருந்த காங்கிரஸ் தலைவர் நரசிம்மராவ் உதவியதாகவும்,

இவ்வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த சிபிஐ டைரக்டருக்கு மனித உரிமை கழகத்தில் அங்கத்துவம் தருவதாக வாக்களித்தைத் தொடர்ந்து தான், பாபரிமஸ்ஜித் வழக்கிலிருந்து அத்வானியின் பெயர் நீக்கப்பட்டது என்றும் அக்கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

- சத்தியமார்க்கம்.காம் செய்திக்குழு, நன்றி: தேஜஸ் தினசரி (18-07-2006 இதழ்)
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=173&Itemid=51

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமியர்கள் ஏன் இப்படி அவலவாழ்வில் வீழ்ந்து கிடக்கிறார்கள்? தலித் - இஸ்லாமியர் ஒற்றுமை அவசியமாகிறது.

>> Tuesday, September 23, 2008

தன் தேசபக்தியை நிறுவித் தொலைத்தாக வேண்டிய கட்டாயம் ஏன் இஸ்லாமியர் மீது திணிக்கப்படுகிறது?

தலித் எழுச்சியும் தலித்-இஸ்லாமிய ஒற்றுமையும்!

திங்கள், 22 செப்டம்பர் 2008
எனது சிறுபிராய காலத்தில் எங்களது கமலை மாடுகளுக்கு லாடம் கட்ட ஒருவர் வருவார். அவரை பாய் என்று என் அப்பா அழைப்பது வழக்கம்.

அப்போது பாய் என்பதை அவருடைய பெயர் என்றுதான் நான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேனேயன்றி அது இஸ்லாமியரை விளிக்கும் ஒரு சொல் - அவர் ஓர் இஸ்லாமியர் - இஸ்லாம் ஒரு மதம் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் காலக்கிரமத்தில் எனக்குத் தெரிந்த முதல் இஸ்லாமியர் அவர்தான். ஆறாம் வகுப்பில் ஒரு மாணவர் சேர்ந்தார். அவர்தான் எனக்குத் தெரிந்த இரண்டாவது இஸ்லாமியர் என்று இப்போது கணக்கில் வைக்கிறேன். ஆனால் அப்போது தெரிந்திருக்கவில்லை.

யோசித்துப் பார்த்தால் எனக்கு அப்போது வேறுசில இஸ்லாமியர்களும் பரிச்சயமாகியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒருவர் சைக்கிள் ஷாப் வைத்திருந்தார். அவரிடம் வாடகைக்கு எடுத்துதான் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர் எங்களூர் சிறார்கள்.
மற்றவர் குடை ரிப்பேர் செய்கிறவர். இன்னாருவர் அங்கிருந்த கூட்டுரோட்டில் சின்னதாக ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் கறிபோடும் பாய் ஒருவர்.

இவர்களது பெயர்களெல்லாம் நினைவில் இல்லை. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு இஸ்லாமியர் அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக வரத் தொடங்கினார். மேல்நிலை வகுப்பில் ஒரு மாணவர் எனது பெஞ்ச்மேட்.

எனது பதினேழு வயது வரை என் வாழ்வில் குறுக்கிட்ட இஸ்லாமியர்கள் இவர்கள்தான். அதாவது ஒரு கை விரல்களுக்குள் முடிந்த போகிற அளவிலானதுதான் இந்த எண்ணிக்கை. அவர்களில் இஸ்லாமிய சகோதரி ஒருவருமில்லை. அப்போது என் வயதொத்த சிறுவர் சிறுமியர் இஸ்லாத்திலும் இருக்கத்தானே செய்திருப்பார்கள்?

அவர்களெல்லாம் எங்கே போனார்கள் படிக்க? அல்லது படிக்கவே வரவில்லையா? படிக்க வரவில்லையானால் அவர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

அன்று தொடங்கி இன்றுவரை கணக்கிட்டால் எனக்கு இப்போது அனேக இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு நண்பர்கள் என்பது உண்மைதான்.

ஆனால் அவர்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு நானே உதட்டைப் பிதுக்கி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை என்று ஒப்புக் கொள்வதே நேர்மையாக இருக்கும்.

கமலைகள் மறைந்து ஆயில் என்ஜின்களும் மின் மோட்டார்களுமாகிவிட்ட இக்காலத்தில் மாடுகளே தேவையற்றதாகிட்ட நிலையில், மாட்டுக்கு லாடமடிக்கிற அந்த பாய் எங்கே போயிருப்பார்?

யூஸ் அண்ட் த்ரோ நாகரீகம் உச்சத்திற்கு வந்துவிட்ட நிலையில் குடை ரிப்பேர் செய்கிற ஒருவர் இங்கு இன்னமும் தேவைப்படுகிறாரா?
அரூர் போன்ற சின்ன நகரங்களில் குதிரை வண்டி ஓட்டிக்கொண்டிருந்த அந்த பாய்களும் குதிரைகளும் எந்த இரு சக்கர வாகனத்தின் கீழ் அரைபட்டு மாண்டிருக்கக்கூடும்?

மோட்டார் வாகன ஒர்க்ஷாப்புகளில் ஆயிலும் கிரிசும் கரியும் படிந்து தன் சொந்த நிறத்தையும் முகத்தையும் இழந்துவிட்ட சிறுவர்களில் ஏன் பலரும் இஸ்லாமியராகவே இருக்கின்றனர்?

வெகு அரிதான சிலரே வணிகத்திலும் தொழில்களிலும் அரசுப்பணியிலும் இருக்கின்றார்கள் என்றால் மற்றவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக என்ன செய்கிறார்கள்?

ஆளுங்கட்சியில் ஒருமுறை ஒன்றியச் செயலாளராயிருந்தவன் வாரிசுகள் கூட ஒன்பது தலைமுறைகளுக்கு உட்கார்ந்து தின்னுமளவுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளும் ஒரு சமூகத்தில்,

ஆளுமையும் தேசபக்தியும் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகவும் திகழ்ந்து வீரமரணமடைந்த திப்புசுல்தானின் வாரிசுகள் வேலூரில் பீடி சுற்றிப் பிழைப்பதற்கு காரணமென்ன?

சுமார் 800 ஆண்டுகள் இந்த நாட்டை இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்திருந்த போதும் இஸ்லாமியர்கள் ஏன் இப்படி அவலவாழ்வில் வீழ்ந்து கிடக்கிறார்கள்?

அப்படியானால் ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்களும் இந்த அடித்தட்டு இஸ்லாமியரும் வெவ்வேறானவர்கள் தானே?

பின் ஏன் அந்த அரசர்கள் நிகழ்த்திவிட்டதாகக் கூறப்படும் 'வரலாற்றுத் தவறுகளுக்காக' இந்த அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்? கருவிலிருக்கிற இஸ்லாமியக் குழந்தைகூட கடப்பாரையால் குத்திக் கொல்லப்படுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

பாபர் மசூதி தகர்ப்புக்குப் பிறகு ஒவ்வொரு இஸ்லாமியரும் தேசவிரோதியாகவும் தீவிரவாதியாகவும் உருவகிக்கப்படுகிற அரச பயங்கரவாதத்திற்குள் இந்து பெரும்பான்மை மனோபாவம் வகிக்கும் பங்கு என்ன?
தன் தேசபக்தியை நிறுவித் தொலைத்தாக வேண்டிய கட்டாயம் ஏன் இஸ்லாமியர் மீது திணிக்கப்படுகிறது?

இந்த கேள்விகளுக்கெல்லாம் சச்சார் கமிட்டி அறிக்கையிலும்கூட நமக்கு போதிய பதில்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

அதன் பரிசீலனை வரம்புகளும் நோக்கங்களும் வேறாக இருப்பது மட்டுமே இதற்கான காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சச்சார் கமிட்டி ஒரு உண்மையை உணர்த்தியிருக்கிறது.

அதாவது இந்த நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களின் பல்வேறு முனைகளில் இஸ்லாமியர்களது நிலை தலித்துகளைப் போல அல்லது தலித்துகளைவிடவும் கீழ்நிலையில் இருக்கிறது என்பதே அது.

இங்கேதான் தலித்துகளையும் இஸ்லாமியரையும் இணைத்தும் பகுத்தும் பார்க்கும் தேவையேற்படுகிறது.

பார்ப்பனீய மேலாதிக்கவாதத்தின் வர்ணாசிரம - சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு வடிவமாக இஸ்லாத்தை தழுவியர்களே இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையோர்.

இந்த உண்மையை மறைத்து, இந்தியாவில் இருக்கிற எல்லா இஸ்லாமியரையும் வெளியே இருந்து படையெடுத்துவந்த இஸ்லாமிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கற்பிதம் செய்வித்தும்,
வாள்முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் என்று பாசாங்காய் கருணை காட்டியும் இந்துத்வவாதிகள் கிளப்பிவிடும் தேசியவெறி உலகப் பிரசித்தமானதுதான்.


இந்த பிரச்சாரத்தின் நோக்கம், எஞ்சியுள்ள தலித்துகளை தங்கள் பிடிக்குள்ளேயே நிறுத்திவைப்பதுதான்.

இந்துமதத்தின் பிடியிலிருந்து வெளியேறாதவரை சாதியிழிவும் தீண்டாமையும் தொடரவே செய்யும் என்பதால் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதையும் பிற மதங்களைத் தழுவுவதையும் ஒரு போராட்ட வடிவமாகவே தலித்துகள் கைக்கொண்டுள்ளனர்.

தலித்துகளின் மீதான தங்களது பிடி இறுகுவதை சகித்துக்கொள்ளாத இந்துத்வவாதிகள் - தலித்துகள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு உரிமையையே ஒரு துருப்புச்சீட்டாக வைத்து அச்சுறுத்துகின்றனர்.

பிறமதத்திற்கு செல்லும் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று இந்த அச்சுறுத்தல்களையும் மீறி மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

நேற்றுவரை டாய் என்றவர்கள், இன்று பாய் என்று அழைக்கிறார்கள் என்கிறபோது ஏற்படுகிற மனநிலை மிக முக்கியமானதாக தலித்துகளால் உணரப்படுகிறது.

ஆகவே இஸ்லாத்தின் மீது தலித்துகளுக்குள்ள ஈர்ப்பை தணிப்பது - முடிந்தால் ஒழித்துக்கட்டுவது என்பதில் இந்துத்துவம் கவனங் குவித்துள்ளது.
அதன்பொருட்டே இஸ்லாத்தை ஒரு பயங்கரவாதிகளின் தத்துவமாக முன்னிறுத்தும் அமெரிக்க பயங்கரவாத ஆட்சியாளர்களுடன் அது வெளிப்படையாகவே கைகோர்த்து நிற்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த 'புனிதக்கூட்டின் இளையப் பங்காளி'களான இந்துத்வாவினர் - ஏகாதிபத்தியம் முன்வைக்கிற உலாகளாவிய ஒற்றைப் பண்பாட்டைப் போலவே - இவர்களும் ஒரு ஒற்றைத் தேசிய பண்பாட்டை முன்வைக்கின்றனர்.

சமூகத்தின் பன்முகத்தன்மையை ஒழித்துக் கட்டுவதன் மூலம் ஏகத்துவமான ஒரு மதவாதத்தை இங்கே நிறுவும் அவர்களது கனவுகளைத் தகர்ப்பது தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் முதற்கடமையாகிறது.

தலித்துகள் தொடர்ந்து போராடி பல்வேறு உரிமைகளை அடைந்திருந்த போதிலும் அவர்கள் மீதான தீண்டாமை மற்றும் புறக்கணிப்பு, உரிமை மறுப்பு ஆகியவை தொடரத்தான் செய்கின்றன. அதை எதிர்த்த தலித்துகளின் போராட்டம் தொடர்கிறது.

சச்சார் கமிட்டி அறிக்கை இஸ்லாமியர்களின் நிலையும் தலித்துகளின் நிலையும் கிட்டதட்டட சமநிலையில் முடக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இவ்விரு சமூகங்களும் ஒன்றிணைவது அவசியமாகிறது.

இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், பார்ப்பனீய மேலாதிக்கக் கனவில் முன்வைக்கப்படும் இந்துத்வாவை எதிர்கொள்ளவும், பெரும்பான்மை மதவாதத்திற்குள் இந்திய அரசு எந்திரம் மூழ்கிப் போய்விடாமல் 'மதச்சார்பற்ற அரசு' என்ற அரசியல் சாசன வாசகங்கள் மெய்ப்பிக்கப்படவும் இந்த ஒற்றுமை அவசியமாகிறது. சரியான தலைமைகளால் அணிதிரட்டப்படாத போது தலித்துகளில் ஒருபகுதியினர் - தங்களைப்போலவே ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் இஸ்லாமியரைத் தாக்க மதவெறியர்களால் பயன்படுத்தப்பட்டதை குஜராத்தில் நேடிரயாகக் கண்டோம்.

எனவே இந்துத்துவத்திற்கு எதிராக - அதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வழங்குகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தலித் - இஸ்லாமியர் ஒற்றுமை அவசியமாகிறது.

('தலித் எழுச்சியும் தலித்-இஸ்லாமிய ஒற்றுமையும்' என்ற தலைப்பில் திரு. ஆதவன் தீட்சண்யா ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்).
நன்றி: கீற்று.

தொடர்புடையச் சுட்டிகள்:
1. இணையும் புதுக் கரங்கள்!
2. ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?
3. இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது - குரானா
4. யார் தீவிரவாதி?

நன்றி: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1037&Itemid=278

மேலும் படிக்க... Read more...

குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.

>> Monday, September 22, 2008

ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 .தெற்குக் கர்நாடகாவிலுள்ள புத்தூர் எனும் இடத்தில் செயல்படும் பாஜக தலைவர் சுரேஷ் காமத்துக்குச் சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து

397 ஜெலட்டின் குச்சிகள், 1200 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் அடங்கிய குவியல் குவியலான வெடி பொருட்களைக் கைப்பற்றி, சுரேஷ் காமத்தைக் காவல்துறை கைது செய்துள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இப்பகுதியில் 20.09.2009 காலை 11 மணியளவில் மாவட்ட குற்றவியல் துறை இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரசன்னாவின் தலைமையில் காவல்துறை ரெய்ட் நடத்திய பொழுது இவ்வெடிப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதி பயங்கர சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைத் தயார் செய்வதற்கு உதவும் வெடிமருந்துகள் சுரேஷ் காமத்தின் காம்ப்ளக்ஸில் இருந்ததாகவும் காவல்துறை கூறியது.

நாட்டின் பல பாகங்களுக்கும் இந்நபர் வழியாக வெடிபொருட்கள் அனுப்பிக் கொடுக்கப் பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை எங்கெங்கு பயன்படுத்தப்பட்டன என்பதும் இதுவரை பயன்படுத்தப்படாமல் பதுக்கி வைத்துள்ளவை எவ்வளவு என்பதும் அவை எங்கெல்லாம் பயன்படுத்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை.

டில்லி தொடர் குண்டு வெடிப்புகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் கர்நாடகாவிலிருந்து வந்தவை என, ஸ்பெஷல் செல்லிலுள்ள டில்லி காவல்துறை துணை கமிஷனர் கர்ணால் சிங் டில்லியில் அறிவித்திருந்தார்.

பஜ்ரங்தள் தலைவர் மஹேந்திர குமாரை மங்கலாபுரத்தில் வைத்துக் காவல்துறை கைது செய்ததற்குப் பிறகே இந்த வெடிப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.
THANKS TO :http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1035&Itemid=51

மேலும் படிக்க... Read more...

கொலைகளுக்குக் காரணம் சினிமா! தொலைக்காட்சி ஒரு வன்முறை ஆயுதம்.

>> Sunday, September 21, 2008

தொலைக்காட்சி பார்க்காதே என்றதால் சிறுவன் தற்கொலை.தொடர் கொலைகளுக்கு சினிமா காரணம் என பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது சென்னை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் கொடூரமான முறையில் கொலைகள் நடந்தேறி வருகின்றன. இந்தக் கொலைகள் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நுட்பமாகவும் ஆதாரம் இல்லாமலும் செய்யப்படுகின்றன.

தற்போது சென்னையில் நடைபெறும் `சைக்கோ கொலைகள், நொய்டாவில் நடைபெற்ற குழந்தை கொலைகள் மற்றும் பல்வேறு கொலைச் சம்பவங்கள் காவல்துறை மூளைக்கே போக்குகாட்டுவதாக உள்ளது. இந்த நிலையில் தொடர் மற்றும் நுட்பமான கொலைச் சம்பவங்களுக்கு சினிமாவும் காரணம் என்ற கருத்து எழுந்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 100-வது நாள் படம் இது சத்தியராஜ் நடித்தது. இதில் தொடர் கொலைச் சம்பவங்கள் காட்டப்பட்டன. இந்த படம் ஆட்டோ சங்கரால் நடத்தப்பட்ட கொலைக்கு வழி வகுத்தது.
இதுபோல் பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படமும் தொடர் கொலைச் சம்பவங்களை பின்னணியாக கொண்டது. இதில் கமல ஹாசன் ஸ்ரீதேவி நடித்தனர்.

இதுபோல் பாக்யராஜின் விடியும்வரை காத்திரு திரில்லர் படம் ரஜினிகாந்த் நடித்த நான் சிவப்பு மனிதன் ஆகியவையும் பல கொலைச் சம்பவங்களை பின்னணியாக கொண்டவை.

மேலும் சமீபத்தில் வெளியான அன்னியன், கமலஹாசனின் இந்தியன், வேட்டையாடு விளையாடு உள்பட பல 4 படங்களும் கொலை உள்பட வன்முறைச் சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை அமைப்பை கொண்டவை.

இதுபற்றி சென்னையை சேர்ந்த வேதநாயகம் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் கூறும் போது, திரைப்படங்களில் வசூலை மய்யமாகக் கொண்டு கிரைம் கதைகளை படமாக்குகிறார்கள். ஆனால் இந்த சினிமா படங்கள் பிஞ்சு உள்ளங்கள் முதல் பெரியவர்கள் வரை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பல கொலைச் சம்பவங்களுக்கு இதுவே வழிகாட்டியாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.(நன்றி: `மாலைமலர் 20.7.2008)

தொலைக்காட்சி ஒரு வன்முறை ஆயுதம்.

குழந்தைகளுக்குத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் அய்ந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்குத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் அதிகமாக வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

சனி, ஞாயிறுகளில் - 20 முதல் 25 வரை வன்முறைக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

8000 கொலைகளை - பள்ளிப் படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றனர்.

10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகளை ஒவ்வொரு ஆண்டும் பார்க்கின்றனர். அவற்றைப் பார்த்த பின்னர் அது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றனர்.

பள்ளியில் சேருமுன்னரே பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.
நினைப்பதை அடைய வன்முறைதான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச் சிகளுக்குத் தண்டனையே இல்லை என்பது போல் காண்பிக்கப்படுகின்றன. அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்படுகின்றன.

நல்லவர்கள் கெட்டவர்களை அடிப் பது நல்லது போலவும், அது சாதாரணமானது போலவும் சித்திரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.

தொலைக்காட்சியில் வரும் உணவு, இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே உடல் நலமும் சத்தும் இருப்பதுபோல் குழந்தைகள் நினைக்கின்றன.ஆனால், உண்மையில் அவ்வாறில்லை; வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே ஒளி பரப்பப்படுகின்றன

தொலைக்காட்சி பார்க்காதே என்றதால் சிறுவன் தற்கொலை.
தொலைக்காட்சியைப் பார்க்காதே என்று கூறியதால் 10 வயதுச் சிறுவன் வீட்டின் உத்திரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

நாக்பூர் அருகே உள்ள திம்கி தாலுகா பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் கமலேஷ் மகருர் கடந்த புதன்கிழமையன்று தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தான்.

படிப்பில் கவனம் செலுத்தாமல் தொலைக்காட்சி பார்க்கிறாயே என்று அவனது மாமா திட்டியதைத் தொடர்ந்து அந்தச் சிறுவன், திடீரென்று வீட்டின் உத்திரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டான்.

சிறுவனின் இந்த விபரீத முடிவுக்கு அவன் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே காரணம் என அவனது குடும்பத்தினர் கண்ணீருடன் கூறினார். சிறுவன் தூக்குப் போட்டுக் கொள்ளும் அளவுக்கு நான் தவறுதலாகத் திட்டவில்லை.

சம்பவத்தன்று நான் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, கமலேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது தாயார் பலமுறை கூறியும் அவர் நிறுத்தவில்லை. இதனால், நான் கோபமாகத் திட்ட தொலைக் காட்சிப் பெட்டியை அணைத்தேன் என்று அவனது மாமா ருபேஷ் கூறினார்.

தான் விரும்பும் நிகழ்ச்சிகளைப் பார்க்க விடாமல் செய்கிறார்களே என்று சிறுவன் கமலேஷ் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

இந்தத் தவறான முடிவை அவன் எடுப்பான் என யாரும் நினைக்கவில்லை. படிக்கும் வயதில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அவனது வாழ்வைப் பாழ் படுத்திவிட்டது என ரூபேஷ் காவல் துறையில் தெரிவித்தார்.

தொலைக்காட்சியில் உண்மையான வாழ்விற்கு முரணான சம்பவங்கள் தொடர்ந்து காட்டப் படுவதால் அதைப் பார்க்கும் சிறுவர்கள் - கமலேஷ் போன்று விபரீத முடிவை எடுக்கிறார்கள்.
-------------------------------------------------
வாஞ்ஜுர் தலைவாசல்

மேலும் படிக்க... Read more...

பாலஸ்தீனம் என்றொரு நாடு உருவாக்கப் போவதாக புஷ்ஷூம் பிளேய்ரும் கதைகள் சொல்லி வருவது வெறும் ஏட்டளவிலேயே இருக்கும்.

>> Saturday, September 20, 2008

இஸ்ரேலின் தொடரும் கபடம்!

இஸ்ரேல் தற்காப்பு என்ற போர்வையில் பாலஸ்தீனர்களின் மீது கொடுமையைக் கட்டவிழ்த்துவிட்டு வருவது தெரிந்ததே.

அது தற்போது கபளீகரம் செய்த பகுதிகளில் குடியேற்றங்களைத் தொடர்ந்து நடத்தியும் வருகிறது.

இதன் தற்போதைய நடவடிக்கையாக அது பாலஸ்தீனத்திற்கு நடுவே கட்டிவரும் தடுப்புச் சுவருக்கு அப்பால் இருக்கும் பகுதிகளையும் அபகரித்துள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த B'Tselem என்ற மனித உரிமைக் கழகம் இஸ்ரேலிய அரசு தனது இராணுவத்தின் உதவியுடன் இந்த அராஜகத்தை அரங்கேற்றி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் குடியேற்றம் நடக்க அனுமதிப்பது சர்வதேச விதிகளின் படி கடும் கண்டனத்துக்குரிய குற்றமாகும்.

ஆனாலும் இஸ்ரேல் முன்பு தனது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டது போலவே தற்போதும் தற்காப்புக் காரணங்களைச் சொல்லி இராணுவத்தின் மூலம் ஆக்கிரமித்து வருகிறது.

2004 ஆம் ஆண்டிலேயே இஸ்ரேலின் இது போன்ற நடவடிக்கைகளைப் பன்னாட்டு நீதிமன்றம் கண்டித்திருந்தது.

அபகரிப்பதோடு மட்டுமல்லாமல் தனது உரிமைகளைப் பறிக்கும் இஸ்ரேலிய இராணுவத்திடம் கேள்வி கேட்கும் பாலஸ்தீனர்கள் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் கைது செய்யப்படுவதும் மிகச் சாதாரணமாகக் கொல்லப்படுவதும் வாடிக்கையாகிவிட்டதாக B'Tselem மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது.

தற்கொலைத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை தான் இது என இஸ்ரேலிய அரசு இச்செயலுக்கு அற்பக் காரணம் காட்டியுள்ளது.

இஸ்ரேலின் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாலஸ்தீனம் என்றொரு நாடு உருவாக்கப் போவதாக அமெரிக்க அதிபர் புஷ்ஷூம் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் பிளேய்ரும் கதைகள் சொல்லி வருவது வெறும் ஏட்டளவிலேயே இருக்கும் என்றும் B'Tselem எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

மூலம்: http://news.bbc.co.uk/2/hi/middle_east/7609905.stm
nandri to : http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1030&Itemid=51

மேலும் படிக்க... Read more...

அடித்தா ? அடக்கியா ? அணைத்தா ?

>> Sunday, September 14, 2008

"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பது நம் நாட்டு முதுமொழிகளில் ஒன்று.

இதன் பொருள் - குழந்தைகளுக்குள்ளும் ஆற்றல்கள் புதைந்துள்ளன; அந்த ஆற்றல்கள் வாய்ப்புக் கதவுகள் திறக்கப்படும்போதும், தட்டிக் கொடுத்து ஊக்க மாத்திரைகளை ஊட்டச் சத்துகள்போல அவர்தம் பெற்றோர், குடும்பத்தினர் அவர்களுக்குத் தரும்போதும் அவை வெளிப்பட்டு வெற்றிக் கதிர்களாக ஒளிர்கின்றன!

பல பெற்றோர்கள் - குழந்தைகளை நல்ல முறையில் கட்டுப்பாட்டுடன் வளர்க்கவேண்டும் என்ற பேரவாவின் காரணமாக, அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டை அவர்கள்மீது திணித்து, இராணுவத்தில் கடைபிடிக்கும் ஒரு மூளைக் கட்டுப்பாட்டினைப் (Mental Regimentation) போதித்து அடக்கி ஆளவே நினைக்கின்றனர். அதைப் பெருமையாகவும் மற்ற பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்!

அச்சம்! அச்சம்!! அச்சம்!!! தான் அக்குழந்தைகளுக்கு அத்தகைய பெற்றோர்களைப் பார்த்தாலே! அன்பும், பாசமும் ஆளவேண்டிய இடத்தில் அச்சமும், அடக்குமுறைகளுமா அவர்களை ஆளுவது? இது தவறான அணுகுமுறை என்பதை வெகுகாலங் கழித்தே அத்தகைய பெற்றோர்கள் உணர்ந்து வருந்துவர்! பின்னர் வருந்திப் பயன் ஏதுமில்லையே!

குழந்தைகளிடம் பெற்றோர் பாசத்தைப் பொழியவேண்டும் என்னும்போது, அறவே கட்டுப்பாடின்றிக் கடிவாளம் இல்லாத குதிரைகள்போல ஓட - அவர்களை விட்டுவிட வேண்டும் என்று நாம் கூற விரும்பவில்லை!

Spartan Discipline- இராணுவக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்போம்; எதிர்த்தே பேசமாட்டான் என்பதைவிட, என் எதிரில்கூட வந்து நிற்கவே பயப்படுவான் என் மகன் என்பதைப் பெருமையாகக் கூறி, தம்பட்டம் அடிக்கும் பலரைக் காணும்போதெல்லாம் மிகவும் வருந்தவேண்டும் - அவர்களது தவறான அணுகுமுறைக்காக!

பெற்றோர்களைத் தம் முதல் நண்பர்களாகக் கருதி, மனந்திறந்து, பாசம் பொங்க, நகைச்சுவை கலந்த உரையாடல்களை நிகழ்த்த - பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் வாய்ப்புத் தருவதன்மூலமே, பிள்ளைகளை நல்வழியில் நடந்திடச் செய்ய முடியும்!

அடக்குமுறை - தண்டனை - இவை நாளடைவில் அவர்களது (பிள்ளைகளது) மனதில் ஒரு வகை வெறுப்பையும், குரோத உணர்வையும்தான் உருவாக்கிவரும். அது வைப்பு நிதி (Fixed Deposit) போல் வளர்ந்துவரும்; அவ்வப்போது ஏற்படும் விரிசல்கள், எதிர் நிலைப்பாடுகள், ஒத்துழையாமை இவை தொடர் வட்டிபோல் அத்துடன் வளரவே செய்யும்!

குடும்பத்தில் குழந்தைகளோடு குதூகலமாகச் செலவழித்தல்மூலம், அவர்களுக்குப் பெற்றோர்கள்மீது உண்மையான பாசத்தையும், நன்னம்பிக்கையையும் ஏற்படுத்திட இயலும்!

அடிக்கும் பழக்கம் - அடம் பிடிக்க அவர்களைத் தூண்டவே செய்யும்; எதிர்த்து அடிக்க முடியாதவாறு மனதில் கட்டியுள்ள சங்கிலியால் அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்; அது பிற்காலத்தில் அவர்களை வெறுப்பின் உச்சத்திற்குக் கொண்டு செலுத்தி, எதிரிகளைப்போல் பெற்றோர்களைக் கருதிடவே ஆக்கி விடுகின்றன - விரும்பத்தகாத நிலையை உருவாக்கி விடுகின்றன!

தோளுக்குமேல் உயர்ந்த பின் தோழன் என்ற பழமொழியும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று அல்லவா?

செய்யக்கூடாதவை, பழகக்கூடாதவர்கள் என்பவர்கள்பற்றி - அதற்குரிய காரணங்களை அன்புடனும், பொறுமையுடனும் நம் குழந்தைகள் - பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறினால், அவர்கள் கேட்டுச் சிந்தித்து, நமது பெற்றோர்கள் கூறுவது சரிதான் என்று ஏற்றுக்கொண்டு அதன்படி ஒழுகுவார்கள்!

அரவணைத்து அன்பு காட்டவேண்டிய பிஞ்சு நெஞ்சங்களை, அடக்குமுறை அம்புகளால் துளைக்காதீர்கள் பெற்றோர்களே!

உங்கள் வீரத்தை அவர்களிடம் அடித்தோ, அச்சுறுத்தியோ, அடக்குமுறைப் பாணங்களை வீசியோ காட்டுவதைவிட, அன்பாலும் பாசப் பொழிவாலும் அவர்களை வயப்படுத்துங்கள்!

அவர்களது கருத்துகள் என்னவென்பதைக் கூற, அவர்களுக்கும் வாய்ப்புத் தந்து, பிறகு உங்கள் தீர்ப்பை நடுநிலையோடு கூறுங்கள்!

ஒரு தலைப்பட்சமாகக் கூறாதீர்கள்!
உனக்கொன்றும் தெரியாது என்று எடுத்த எடுப்பிலேயே மட்டந்தட்டி மட்டந்தட்டி மட்டிகளாக்கி, மடச் சாம்பிராணி என்று வசை பொழிந்து, பயனற்ற சாவிப் பயிர்களாக அவர்களை ஆக்கிவிடாதீர்கள்!

அதனால் வரும் நட்டம் அவர்களுக்கு அல்ல; உங்களுக்குத்தான்!
மேற்கூறிய பல செய்திகள் வாழ்விணையர்களான இருபாலருக்கும் கூடப் பொருந்தும் என்பதையும் கவனத்தில் கொள்க! thanks to : viduthalai

மேலும் படிக்க... Read more...

திக்குவாயிலிருந்து மீளுதல் சில யோசனைகள்

>> Saturday, September 13, 2008

உலகில் இன்று மொத்தம் 45 மில்லியன் மக்கள் திக்குவாய் குறையுடன் இருக்கிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் இருக்கிறார்கள். இது குறிப்பாக ஆண்களுக்கே அதிகம் வருகிறது. திக்குவாய் உள்ளவர்களில் 80 சதவீதத்தினர் ஆண்களே.

இதில் 65 சதவீதத்தினருக்கு பரம்பரை மூலம் எற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெர்விக்கின்றன.

எது எப்படி இருப்பினும் 5 வயதுக்கு முன்னரே திக்குவாய் தொடங்கி விடுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்காதபோது 10 அல்லது 18 வயதில் இது உச்ச நிலையை அடைகிறது. இது பிற்பாடு நிலையாக இருந்து விடலாம் அல்லது மறைந்து விடலாம்.

திக்கிப் பேசுபவர்களுக்கு தான் என்ன பேச வேண்டும் என்று நன்றாக தெரியும். ஆனால் ஒரு சில கணத்திற்கு அவர்களால் வெளிப்படுத்த முடியாததற்கு காரணம் அறியாமல் திரும்பத் திரும்பக் கூறியதையே கூறுவது, நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது, பேச்சொலியில் நிறுத்தம் ஏற்படுதல். திக்குவாய் பொதுவாக நரம்பியல் நேரம் தவறுதலால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது பேசும்போது திக்குபவர்கள் எப்போது தான் நினைத்ததை கூறுவது என்பதில் - நரம்பியல் நேரம் தவறுகையால் குழப்பமடைகிறார்கள். பேச்சு என்பது வெறும் நாக்கின் சுழற்சி மட்டுமே அல்ல. பேசும்போது மனம், உடல் மற்றும் மூளை ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம்.

அனைத்து உடல் செயற்பாடுகள் போலவே பேச்சும் நரம்பு-தசை ஒருங்கிணைப்பால் நிகழ்வதே. மூளையின் மின் ரசாயன செய்திகளை குறிப்பிட்ட தசை குழுவிற்கு அனுப்புவதில் நரம்பு-தசை ஒருங்கிணைப்பு ஈடுபட்டுள்ளது. சில சமயங் களில் உணர்ச்சி நிலைகளில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியாத சூழ்நிலையில் நரம்பு-தசை அமைப்பு செயல் தடைப்படுகிறது.

இது சாதாரண பேச்சு உள்ளவர்களை விட திக்கு வாய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தடைப்படுகிறது. தனக்கு அச்சமூட்டுவதாக அவர் நினைக்கும் சூழலில் திக்குவாய் உள்ளவர்கள் ஏற் படுத்திக் கொள்ளும் மனத் தடையால் நரம்புகள் ஒத் துழைக்காமல் சுருங்குவதால் பேச்சுத் தடை ஏற்படுகிறது.
உணர்ச்சி நிலையில் ரிலாக்ஸாக இருக்கும்போது திக்குவாய் உள்ளவர்களும் சரளமாக பேசுவதை நாம் பார்க்க முடியும்.

மன அழுத்த சூழ்நிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. பள்ளியில் அட்டன்டன்ஸ் எடுக்கும்போது, தொலை பேசியில் பேசும் போது, சிலரிடம் அதிகாரமாக பேசும்போது, குழுவில் பேசும் போது, வேலை நேர்முகத் தேர்வின் போது, என்று இவர்களுக்கு நெருக்கடி நிலைகள் அதிகம்.

எனினும் திக்குவாய் குறித்த இன்னொரு அதிசயம் என்னவெனில் இவர்கள் தடையின்றி பாடுவதைக் கூட சில சமயங்களில் நாம் பார்க்கலாம். ஏனெனில் அடுத்த வார்த்தை என்னவென்று முன் கூட்டியே தெரிந்து விடுவதால், நரம்பியல் நேரம் தவறுகை பேச்சில் நிகழ்வது போல் இவர்களுக்கு பாட்டில் ஏற்படுவதில்லை.

உரையாடலின் போது இது போன்ற நன்மை இல்லையாதலால் அடுத்த வார்த்தையை யோசிக்கும் தருணத்தில் பேச்சு தடுமாற்றம் ஏற்படுகிறது, இது திரும்ப திரும்ப நடக்கும்போது பயம் தோன்றி மேலும் திக்குதலை அதிகமாக்குகிறது. மற்றபடி அவர்கள் மற்ற மனிதர்களை போல்தான். சிலர் அதி புத்திசாலிகளாகவும் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

சில மன நோய் நிபுணர்கள் தூக்க மாத்திரைகளை கொடுத்து மன அழுத்தத்தை குறைத்தால் பேச்சு சரளமாக வரும் என்று அத்தகைய மாத்திரைகளை தருகின்றனர். ஆனால் இது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதாக பேச்சுப் பயிற்சி சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

திக்குவாய்க்கு ஹிப்னாடிஸ சிகிச்சையும் பெரிய பலன் களை ஏற்படுத்தவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஹிப்னாடிச மயக்கத்தில் சரளமாக பேசும் திக்குவாய்காரர்கள் மயக்க நிலையில் இருந்து மீண்டதும் திக்கி பேசத் துவங்கிவிடுகின்றனர்.

யோகா மற்றும் தியானம் ஆகியவைகளில் உணர்வு மற்றும் புத்தி சார்ந்த நிலைகளில் மேலதிக சம நிலை ஏற்படுவதால் திக்கு வாய்க்கு இந்த பயிற்சிகளே சிறந்தது. பேச்சு எப்படி இயல் பானதோ திக்குவதும் இயல்பானதே இது பெரிய நோய் என்றெல்லாம் கூறமுடியாது, எனவே சில பல வாழ் முறை நடைமுறை அளவுகோல்களி லேயே இதை தீர்க்க முடியும்.
திக்குவாய் உள்ளவர்களிடம் பேசும்போது நாம் எந்த வித அணுகுமுறையைக் கொள்ள வேண்டும் என்பது கீழ்வருமாறு:

என்ன கூறுகிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எப்படி கூறுகிறார் என்பது முக்கியமல்ல.

பொறுமையாக கேட்க வேண்டும், அவர்களை அவசரப்படுத்துவது கூடாது.
பேசும்போது இயல்பாக அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்கவேண்டும்.

இவர்களுக்கு பேச்சில் தடையே தவிர சொல்ல வரும் விஷயத்தில் தடை எதுவும் கிடையாது. எனவே அவர்கள் குழப்பமுள்ளவர்கள் என்று கருதுவதை தவிர்க்கவேண்டும். தொலைபேசியில் இவர்கள் பேசும்போது நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் ஃபோன் லைனை துண்டித்து விட வேண்டாம்.

திக்குவாய் உள்ளவர்கள் தங்களை கேட்பவரிடமிருந்து தங்கள் திக்குவாய் கோளாரை மறைக்க விரும்புவது வழக்கம். ஆனால் இதனால் மேலும் பேச்சு தடைகள் அதிகரிக்கவே செய்யும்.

இறுதியாக கூறவேண்டுமானால் திக்குவாய் உள்ளவர்கள் பேச்சு பயிற்சியில் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஈடுபட்டால் சரளப் பேச்சு கைகூடிவிடும். பொறுமையாகவும் விஞ்ஞான முறைப்படியும் தொழில்பூர்வ மானவர்களின் வழிகாட்டு தலில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிச்சயம் இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வரமுடியும்.
viduthalai/20080804/news21.html

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்

>> Tuesday, September 9, 2008

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார்.

சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார்.

பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் படிக்க... Read more...

எங்கள் ஒரே குற்றம் நாங்கள் முஸ்லிமாக இருப்பது மட்டுமே..!

>> Wednesday, September 3, 2008

(அஹ்மதாபத்தில் சமீபத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர் என்று கூறி குஜராத் காவல்துறையினர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இளம் இஸ்லாமிய அறிஞரை கைது செய்துள்ளார்கள்.
இவர் சிமி அமைப்பின் முக்கியத் தலைவர்கüன் ஒருவர் என்றும் ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது.


இவரது பின்னணி என்னவென்பதை தெஹல்காவின் ஆசிரியர் அஜித் சாஹி புலனாய்வு செய்து தெஹல்கா ஆகஸ்ட் 30 தேதியிட்ட இதழில் எழுதியுள்ளதை நன்றியுடன் இங்கே தமிழாக்கம் செய்து தருகிறோம்)
முஃப்தி அபுல் பஷர் காசிமி குடும்பம்

கடந்த ஆகஸ்ட் 14 அன்று எனது இரண்டாவது மகனுக்கு மணமுடிப்பதற்காக ஒரு அழகான பெண் இருப்பதாகக் கூறி இருவர் தன்னை சந்திக்க வீட்டிற்கு வந்ததை நினைவு கூர்ந்தார் மவ்லானா அபூபக்கர் இஸ்லாஹி.

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தட்டுத்தடுமாறி இந்த வார்த்தைகளை என்னிடம் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட அபூபக்கர் இஸ்லாஹி ஐம்பது வயதைத் தாண்டிய மதரசா ஆசிரியர் ஆவார். வந்தவர்களை ஒரு தள்ளாடும் கட்டிலில் அமர வைத்தார். சிறிது நேரம் கழித்து அவரது மூத்த மகன் 23 வயதான முஃப்தி அபுல் பஷர் காசிமி அங்கு வந்து பேச்சு வார்த்தையில் சேர்ந்து கொண்டார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணமான முஃப்திக்கு மும்பையில் மருந்து கடையில் வேலை செய்யும் தனது தம்பிக்கும் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் சில நிமிடங்கüல் சம்பந்தம் பேசவந்த அந்த இருவர் முஃப்தியை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே அநேகமாக ஓடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சுமார் 100 மீட்டர் தாண்டி ஒரு ஸ்கார்பியோவும் மாருதியும் அங்கே திடீரென்று வந்தன. காவல்துறையினர் சூழ்ந்துகொள்ள, மாருதி வாகனம் முஃப்தியை ஏற்றிக் கொண்டு நொடிப் பொழுதில் பறந்து சென்றது. பறவை பறப்பது போன்று அவர்கள் பறந்து சென்று விட்டனர் என்கிறார் அபூபக்கர் இஸ்லாஹி. நொண்டி அடித்துக் கொண்டு தொடர்ந்து வந்த அவருக்கு இந்தக் காட்சிகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின.

இரண்டு நாட்கள் கழித்து அஹ்மதா பாதில் 55 நபர்களின் உயிரிழப்புக்கு காரணமான ஜூலை 26 தொடர் குண்டு வெடிப்புகüன் மூளையாக செயல் பட்டவர் முஃப்தி அபுல் பஷர் காசிமி தான் என்று குஜராத் காவல்துறை இயக்குனர் பி.சி.பாண்டே அறிவித்தார். (ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்./வி.ஹெச்.பி/பஜரங்தளம்/பா.ஜ.க தலைமையில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட குஜராத் கலவரத்தில் அந்த அமைப்புகளுக்கு உறுதுணையாக இருந்தார் என்று பலமுறை சுட்டிக்காட்டி குற்றஞ் சாட்டப்பட்டவர் தான் இந்த பி.சி. பாண்டே.

இந்தக் கலவரத்தில் பெரும் பகுதி பாண்டேயின் மேற்பார்வையில் அவர் அஹ்மதாபாத் காவல் ஆணை யாளராக இருந்தபோது நடைபெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. காவல் ஆணையாளராக இருந்த போது பலமுறை கடமை தவறிய அவர், முன்னாள் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரியிடமிருந்து, தன்னைக் காப்பாற்ற வருமாறு வந்த அவசரகால அழைப்பையும் புறக்கணித்தவர் இந்த பி.சி.பாண்டே.

இதன் காரணமாக ஜாஃப்ரியும் அவரது வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த 30 நபர்களும் இந்துத்துவ கும்பலால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட னர். பின்னர் பி.சி. பாண்டேவிற்கு பதவி உயர்வு அüக்கப்பட்டது.)

முஃப்தி அபுல் பஷர் மற்றும் அவரது கூட்டுச் சேர்ந்து சதி செய்தவர்கள் என்று அஹ்மதாபாத் மற்றும் வடோதராவில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி கடந்த ஆகஸ்ட் 16 அன்று தான் நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில் பி.சி. பாண்டே விவரித்தார்.

அப்போது அவர், ''அஹ்மதாபாத் குண்டுவெடிப்புகள் எங்கு, எப்படி, யாரால் திட்டமிடப்பட்டன என்பது குறித்த முழு விபரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன'' என்று முகமலர்ச்சியுடன் பாண்டே அறிவித்தார்.

கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஆஜம்கர் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது முஃப்தி காசிமி யின் கிராமம். இங்கு வாழும் மக்கüடம் அவரைப் பற்றி விசாரித்த போது, அவர் அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவர் என்றும், வெட்க சுபாவம் உடையவர் என்றும் அவரது கிராமத்தினர் குறிப்பிட்டார்கள்.

ஆனால் காவல் துறையினர் அவர் சிமியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்றும், குஜராத்தில் 2002ல் நடைபெற்ற படுகொலைகளுக்கு பழிவாங்கும் உணர்வு கொண்ட ஜிஹாதி என்றும் அவரை வர்ணித்தனர்

அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு களுக்கு இரண்டு மூன்று தினங்கள் கழித்து சூரத் நகரத்தில் மரங்கüலும், கடைகüன் ஷட்டர்கüலும், விளம்பரப் பலகைகüலும் தொங்கிய 29 குண்டுகளையும் வைத்தவர்கள் இவரது கும்பல் தான் என்றும் பாண்டே செய்தியாளர் கüடம் கூறினார். (ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இந்த குண்டுகளில் ஒன்றுகூட வெடிக்கவில்லை. இந்த குண்டுகள் வெடித்து எவருக்கும் காயம் ஏற்படுத்தவில்லை. தனி நபர்கள் இந்த குண்டுகள் அனைத்தையும் எதார்த்தமாக கண்டுபிடித்தார்களாம்.)

முஃப்தி காசிமி கைதான பிறகு செய்தி ஊடகங்கள் மிக வேகமாக, பெயர் வெüயிடப்படாத காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அவர் நாடு முழுவதும் பயங்கர வாத இணைப்பை உருவாக்குவதற்காக பயணம் மேற்கொண்டதாகவும், கேரளாவில் ஆட்களுக்கு பயிற்சி அüத்ததாக வும், குஜராத்தில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு குண்டுகளைத் தயாரித்த தாகவும் செய்திகளை வெüயிட்டன.

ஆதாரங்கள் எங்கே?
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே உள்ளது?

இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தை (சிமி) சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மீது நாடு முழுவதும் காவல்துறையினர் இது வரை போட்டுள்ள பொய் வழக்குகüன் வழியில் வழக்கம் போல் முஃப்தி காசிமி கைது செய்யப்பட்ட ஒருநாள் கழித்து அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. காவல்துறையினரிடம் இருக்கும் ஒரே ஆதாரம் கைது செய்யப்பட்ட பிறகு முஃப்தி காசிமி அளித்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே.

கடந்த 3 வாரங்களாக சிமி மீதான பொய் வழக்குகள் குறித்து தெஹல்கா அம்பலப் படுத்தி வந்தபோது குறிப்பிட்டது போல் கைது செய்யப்பட்ட நிலையில் காவல் துறை அதிகாரி முன்பு ஒருவர் அüக்கும் வாக்குமூலம், நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது தள்ளுபடி செய்யப்படும்.

ஏனெனில் இந்திய சாட்சியச் சட்டம் காவல்துறை அதிகாரியிடம் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிடுகின்றது. (மராட்டிய மாநிலத்தில் அமலில் இருக்கும் திட்டமிட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் (எம்.சி.ஒ.சி.ஏ.) மற்றும் காலாவதியான பொடா சட்டம் போன்றவை கொடூரமான சட்டம் என்பதால் அவை காவல்துறை அதிகாரி யிடம் அüக்கப்படும் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறுகின்றன. மராட்டிய சட்டம் போன்ற சட்டம் தனது மாநிலத்திற்கும் வேண்டும் என்று மோடி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

இதன் மூலமாக கைது செய்யப்பட்டவர் கள் அüக்கும் ஒப்புதல் வாக்குமூலங் களை வைத்து, அவர்கள் பிறகு இதனை வாபஸ் பெற்றுக் கொண்டாலும் சரியே... அவர்களைத் தண்டிக்க இயலும்)

சிமியைச் சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பிசுபிசுத்தது போல் காவல்துறை பின்வரும் ஆதாரங்களை எடுத்துரைக்காவிட்டால் முஃப்தி காசிமி மீது போடப்பட்ட வழக்குகளும் பிசுபிசுத்து விடும்,

*மார்ச் மாதம் முதல் சிறையில் இருக்கும் சஃப்தர் நாகூரிக்கு இவர் எழுதிய கடிதத்தைப் பற்றிய ஆதாரம்.

*பயங்கரவாத நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்காக நாடு முழுவதும் இவர் பயணம் செய்தார் என்பதை நிரூபிக்கும் பயணச் சீட்டுகள் மற்றும் வாடகை ரசீதுகள்.

*இவரது வீட்டிலிருந்து அல்லது வேறு இடத்திலிருந்து குண்டுகளைத் தயாரிப்பதற்காக இவர் பயன்படுத்திய கருவிகள். இவை இவருடன் தொடர்பு டையது என்பதை காவல்துறை சுயாட்சியான சாட்சிகளுடன் நிரூபிக்க வேண்டும். இல்லையெனின் நீதிமன்ற விசாரணையின் போது இந்த சாட்சியங்கள் நிராகரிக்கப்படும்.

*கேரளா மற்றும் குஜராத்தில் பயங்கரவாத முகாம்கள் நடைபெற்றன என்பதற்கான ஆதாரங்கள்.

கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது காவல் துறையினரால் தங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்க இயலாது, 14 நாள் விசாரணைக் கைதிகளாக காவல்துறை வசம் இருக்கும் காசிமியும் இன்னும் 9 பேரும் நீதிமன்றத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படும் போது தாங்கள் ஒப்புதல் வாக்குமூலம் அüத்ததை மறுப்பார்கள் அல்லது வற்புறுத்தி தங்கüடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டதாகச் சொல்வார்கள்.

காசிமி வீட்டில் நகைகளைத் திருடிய காவல்துகறை

காசிமியை பிடித்துச் சென்ற இரு தினங்கள் கழித்து ஆகஸ்ட் 16 அன்று வெறும் செங்கல்களுடன் சிதிலமடைந்த நிலையில், உடைந்த பாத்திரங்கள் உள்ள எவ்வித வருமானத்திற்கும் வழியின்றி இருக்கும் முஃப்தியின் வீட்டிற்கு காவல்துறையினர் வந்தனர்.

அப்போது என்ன நடந்தது என்பது குறித்து முஃப்தியின் ஐந்து தம்பிகளில் ஒருவ ரான, மதரசாவில் பயிலும் மாணவர் அபூ ஜைத் தெஹல்காவிடம்: '''30 காவலர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை வெüயேற்றினர்'' என்று தெரிவித்தார்.

சட்டப்படி சாட்சிகளாக உள்ளூர் மக்களை காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையின் போது வைத்திருக்க வேண்டும். ஆனால் துப்பாக்கி முனை யில் யாரையும் அவர்கள் நெருங்க விடவில்லை. முஃப்தியின் தந்தை தனது மருமகüன் தங்க நகைகளைக் காவல் துறையினர் எடுத்துச் சென்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

தனது வீட்டில் இருந்து பூச்சிக் கொல்லி மருந்தின் ஒரு பாக்கெட்டையும், இரும்பினால் செய்யப்பட்ட சுத்திகரிப்பு கருவியையும் காவல்துறையினர் எடுத்துச் சென்று விட்டதாகக் குறிப்பிட்டார்.

தனது மகனைக் குற்றவாüயாக ஆக்குவதற் காக இந்தப் பொருட்களெல்லாம் குண்டுகளைத் தயாரிக்க உதவக்கூடி யவை என்று காவல்துறையினர் பிரகடனம் செய்து விடுவார்களோ என்று காசிமியின் தந்தை தனது அச்சத்தைத் தெரிவித்தார்.

முஃப்தி காசிமியின் குடும்பத்தினரும் அவரது அண்டை வீட்டார்களும் அவர் சிமியின் உறுப்பினர் என்ற குற்றச் சாட்டை வலிமையாக மறுக்கின்றனர்.

மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள பிரபல இஸ்லாமிய சர்வ கலாசாலையான தாருல் உலூம் தேவ்பந்தில் கடந்த ஆண்டு 2 ஆண்டு மேற்பட்டபடிப்பான முஃப்தி பட்டத்தை காசிமி பெற்றார்.

இவர் மீது எந்தவொரு வழக்கும் முன்னெப்போதும் காவல்துறையில் பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் இவர் வீட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் இவரது குடும்பத்தினர் ஏதோ ஒரு வன்முறைக் கும்பல்தான் இவரைக் கடத்திச் செல்கின்றது என்று எண்ணியுள்ளனர்.

இதன் காரணமாக அவர்கள் நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். பிறகு முதல்வர் மாயாவதிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அவர்கள் மனுக்களை அனுப்பியுள்ளனர். ஆனால் இவர்கüடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

காவல்துறையின் அராஜகப் போக்கு
தெஹல்கா நடத்திய மூன்று மாத புலனாய்வு, ஒரு உண்மையைப் புலப் படுத்தியது. சில வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்ட முஸ்லிம்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடைய ஒரு முஸ்லிமை அவர் மீது முன்பு வழக்குகள் ஏதும் இல்லாவிட்டாலும் கூட அவர்களைக் குற்றவாளியாக்கும் போக்கு அதிகமாக இருப்பதை அறிய முடிந்தது.

முஃப்தியின் குடும்ப நண்பரான ஆஜம்கரைச் சேர்ந்த, தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் அப்துல் அலீம் இஸ்லாஹி நடத்தி வரும் மதரசாவில் கடந்த பிப்ரவரி மாதம் முஃப்தி காசிமி பாடம் நடத்தினார்.

ஹைதரபாத் காவல்துறையினரால் பல பொய் வழக்குகüல் கைது செய்யப்பட்ட முஹ்தசீம் பில்லாஹ்வின் தந்தைதான் அப்துல் அலீம் இஸ்லாஹி ஆவார்.

இந்த ஹைதராபாத் மதரசாவில் ஒரு மாதம் மட்டுமே முஃப்தி காசிமி பணியில் இருந்தார். பிறகு பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட தனது தந்தை மற்றும் மூட்டு வலியினால் அவதிப்பட்ட தனது தாயாரை கவனிப்பதற்காக அவர் ஊர் திரும்பிவிட்டார்.

முஃப்தியின் அண்டை வீட்டுக்காரர்கள் அவர் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளை நம்புவதற்கு மறுக்கின்றனர். அவர் ஓர் இஸ்லாமிய அறிஞர் என்றும், கடந்த ஏப்ரல் 2006ல் முதன்முறையாக அவர் ஒரு இஸ்லாமியக் கருத்தரங்கில் பங்குகொண்டு சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை பலராலும் பாராட்டப்பட்டதையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

ஹைதராபாத்தில் இருந்து திரும்பிய பிறகு முஃப்தி காசிமி வேலை தேடியதாகவும், தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாகவும் அவரது தம்பி கூறினார்.

அண்டை வீட்டார் தான் இந்தக் குடும்பத்தினருக்கு உணவüத்து வந்துள் ளனர். ''அல்லாஹ் எங்களுக்கு நீதியை அளிப்பான்'' என்று கோபத்தை தணித்துக் கொண்டு தழுதழுத்த குரலில் சொன்னார் அபூ ஜைத். ''எங்களது ஒரே குற்றம் நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதுதான்'' என்று முஃப்தியின் தந்தை முடித்துக் கொண்டார். தமிழாக்கம் ஜன்னா மைந்தன்
http://www.tmmk.info/news/999698.htm

மேலும் படிக்க... Read more...

தாஜ்மஹாலை குறிவைக்கும் 'சங்' பயங்கரவாதிகள்.

>> Monday, September 1, 2008


உலக அதிசயங்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் தாஜ்மஹாலை, பாபரி மஸ்ஜித் பாணியில் அபகரிக்க இந்துத்துவ பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி யுள்ளனர்.
இது அவர்களின் நெடுங்கால சதித்திட்டமும் கூட. பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும் காசி, மதுரா பள்ளிவாசல்களின் இடத்தில் கிருஷ்ணன் கோவில் இருந்ததாகவும், புளுகித் திரியும் இந்தப் போக்கிரிக் கும்பல், தாஜ்மஹால் இடத்தில் சிவன் கோவில் இருந்ததாகக் கண்டுபிடிததுள்ளது (?)

தேஜோ மஹால் என்ற சிவன் கோவிலைத்தான் ஷாஜஹான் தாஜ் மஹால் என்று மாற்றிவிட்டதாகவும், தாஜ்மஹாலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த பயங்கர வாதிகள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் 24.07.2008 வியாழன் அன்று 12 பேர் கொண்ட சிவசேனா பயங்கரக் கும்பல் புகுந்து, தாஜ்மஹாலில் 'ஆர்த்தி' என்னும் பூஜை நடத்த முயன்றுள்ளனர்.

தாஜ்மஹாலுக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்ய முயன்றோரை காவல்துறையினர் தடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சிவசேனாவின் ஆக்ரா தலைவர் விணுவால் வானியா, இது குறித்து கூறும் போது, 'தாஜ்மஹால், இதற்கு முன் தேஜோ மஹால் என்ற பெயரில் இருந்த சிவன் கோவில்தான்.

இது மதுரா கோவில் அறக்கட்டளையின் கீழுள்ள ரங்ஜி கோவிலுக்கு சொந்தமானது. எனவே, எங்கள் தொண்டர்கள் அதை மீட்க முயல்வதில் என்ன தவறு உள்ளது? என்று உளறியுள்ளார்
.
பாபரி மஸ்ஜிதை அபகரிக்கச் சென்றவர்கள், முதலில் ஆயுதங்களோடு செல்லவில்லை. பள்ளிவாசலுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து சிலைகளை வைத்தனர். பின்னர் மஸ்ஜிதே பறி போனது.

பாபரி மஸ்ஜிதைத் தகர்த்த பயங்கர வாதிகள் 'காசி மதுரா பாக்கி ஹை' என்று கோஷமிட்டனர்.

காசி, மதுரா பள்ளிவாசல்களையும் இடிப்போம் என்பது இதன் பொருள்.அவர்களின் அபரிக்க வேண்டிய பள்ளிவாசல்கள், வரலாற்றுச் சின்னங்களின் பட்டியலில், தாஜ்மஹாலும் இருக்கிறது.

தாஜ்மஹாலுக்கு அரசாங்கம் தரும் பாதுகாப்பு, மிகவும் கவலைக்கிடமானது என்பதை அங்கு சென்று வந்தவர்கள் அறிவர்.

உத்தரப்பிரதேச வக்ப் வாரியம் தாஜ்மஹாலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. தாஜ்மஹாலை தனது பொறுப்பில் வைத்துள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை, தாஜ்மஹாலை 'இல் பொருள் ஆக்கிவிடாமல், அதனை உடனடியாக வக்ப் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
தாஜ்மஹாலை அபகரிக்க முயலும் சங்பரிவார பயங்கர வாதிகளுக்கு எதிராக, உறுதிமிகு நடவடிக் கைகள் இதுவரை அரசு மேற்கொள்ளாதது கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது. இப்போதே அரசாங்கம் விழித்துக் கொண்டால், எதிர்கால விபரீதங்கள் தடுக்கப்படலாம்.
ஹாஜாகனி http://www.tmmk.info/news/999741.htm

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP