கண்ணீரில் முஸ்லீம் சமூகம். பிப்ரவரி 14 போராட்டம். ஏன்?
>> Sunday, February 12, 2012
இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
அப்பட்டமான உண்மைகள்.
“விடியுமா? தெரியல வேதனை தீரல”
இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்.
சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக ஏங்கி காத்து கொண்டிருக்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்
மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த
இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த
நாட்டிற்காக சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற
இந்திய முஸ்லீம் சமுதாயம்
உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த
நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்
வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்
முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த
இந்திய முஸ்லீம் சமுதாயம்
இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத
2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை
இந்திய முஸ்லீம் சமுதாயம் .
நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்.
அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும்
முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத
இந்திய முஸ்லீம் சமுதாயம்
இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்
இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில்
இந்திய முஸ்லீம் சமுதாயம்.
![]() |
| தயவு செய்து இந்த"கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள். |
இஸ்லாத்தில் ஜாதி, வர்ணாஸிரமம் இல்லையே !! ஏன்?
>> Thursday, February 9, 2012
கேட்பதற்கு இனிமையான, நடைமுறைப்படுத்த முடியாத வறட்டு தத்துவம் என்று இதை நினைத்து விடக் கூடாது.
ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஒழிந்து போய்விடும்.
இந்தக் கொள்கையை ஒருவன் ஏற்றுக் கொண்டால் அவனுடைய ஜாதி, கோத்திரம், பூர்வீகம் என்ன என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவே மாட்டார்கள். அவனை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய சகோதரன் என்று கருதி கண்ணியமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.
எவ்வளவு பெரிய மதகுருவானாலும், செல்வந்தரானாலும், செல்வாக்கு மிக்கவர்களானாலும் பள்ளிவாசல்களில் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முதல் மரியாதை செய்யப்படுவதில்லை.
எந்த வரவேற்பும் அளிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்வதானால் அவர்கள் பிரத்தியோகமாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை.
பள்ளிவாசல்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். பின்னால் வந்தால் நாட்டின் ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும்.
இந்தத் தெளிவைக் கொடுத்தது எது?
அவர்களை இப்படி உருவாக்கியது எது?
எவனுக்கும் தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தியது எது?
லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற கொள்கை தான் அவர்களை இப்படி மாற்றியது.
இஸ்லாத்தில் சாதி பாகுபாடு இல்லை - வங்கி அதிகாரி மோகன கிருஷ்ணன் சென்னை வாக்குமூலம்.
விடியோவை செவிமடுத்து விளக்கம் பெறுங்கள்.
| தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள். |
குரானில் புனைவுகள் இல்லை. குரான் காலச்சுவடுகள் - விடியோக்கள்.
>> Monday, January 30, 2012
குரான் வசனங்களில்
மேலும் படிக்க... Read more...
ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால சரித்திரம். .
>> Thursday, January 26, 2012
வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது.”
சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.
ஸ்பெயினில் இஸ்லாமிய சரித்திர விளக்க படதொகுப்பு.
இஸ்லாம் ஸ்பெயினில் பரவி 800 வருடங்கள் இஸ்லாமியஆட்சி
செய்து என்னென்ன சாதனைகள செய்தது?
இது ஒரு இஸ்லாமிய சரித்திர ஆவண விளக்க படதொகுப்பு.
அரேபிய மண்ணில் இஸ்லாம் தோன்றி
அது எவ்வாறு வையகமெங்கும்
எந்தெந்த காலகட்டங்களில் பரவியது.
ஐரோப்பியாவில் இஸ்லாம் எப்படி பரவியது.?
ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 1
ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 3
ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 4
Iஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 5
ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 6
ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 7
ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 8
ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 9
ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 10
=========
Muslims in Spain 2
=======================
The Cathedral and former Great Mosque of Córdoba, in ecclesiastical terms the Catedral de Nuestra Señora de la Asunción (English: Cathedral of Our Lady of the Assumption), and known by the inhabitants of Córdoba as the Mezquita-Catedral (English: Mosque--Cathedral), is today a World Heritage Site and the cathedral of the Diocese of Córdoba.
The site was originally a pagan temple, then a Visigothic Christian church, before the Umayyad Moors at first converted the building into a mosque and then built a new mosque on the site.
It is located in the Andalusian city of Córdoba, Spain. The Mezquita is regarded as perhaps the most accomplished monument of the Umayyad Caliphate of Córdoba. After the Spanish Reconquista, it once again became a Roman Catholic church, with a plateresque cathedral later inserted into the centre of the large Moorish building.
The Alhambra, Granada, Spain - BBC World Wonders
The Alhambra, the complete form of which was Calat Alhambra, is a palace and fortress complex constructed during the mid 14th century by the Moorish rulers of the Emirate of Granada in Al-Andalus, occupying the top of the hill of the Assabica on the southeastern border of the city of Granada in the Autonomous Community of Andalusia.
The Alhambra's Moorish palaces were built for the last Muslim Emirs in Spain and its court, of the Nasrid dynasty. After the Reconquista by the Reyes Católicos in 1492, some portions were used by the Christian rulers.
![]() |
| தயவு செய்து "கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள். |
விடியோ-பிணந்திண்ணி சாமியார்கள். தைரியமுள்ள ஆண்களுக்கு மட்டும்.
>> Monday, March 2, 2009
பிணம் தின்னும் அகோரி சாமியார்கள்.
>>> இங்கே<<<
சொடுக்கி காணுங்கள்
விடியோ-5 நிமிடம் 6 விநாடி நிறுத்தாமல் ஒரே முச்சில் "கவாலி" பாடுகிறார்
>> Wednesday, February 25, 2009
வியப்பாக உள்ளது.5 நிமிடம் 6 விநாடி நிறுத்தாமல் ஒரே முச்சில்(BREATHLESS)கவாலி பாடுகிறார்.
வீடியோ.- முஸ்லீம் அன்பர்களுக்கு. அல்லாஹ்வின் 99 பெயர்கள்.கேட்டு மகிழுங்கள்..
>> Sunday, February 22, 2009
அல்லாஹ்வின் 99 பெயர்கள். வீடியோ. கேட்டு மகிழுங்கள்.முஸ்லீம் அன்பர்களுக்கு. .
உங்கள் சிந்தனைக்கு 2 விடியோக் காட்சிகள். காணத் தவறாதீர்கள்.
>> Saturday, December 20, 2008
நேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.
இந்தியாவின் முதல் தீவிரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புதான்.
இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான்.
தீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.
மதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.
பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?
விடியோ.காணுங்கள். நேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.
span>
முஸ்லீம்களுடைய மெக்கா, மதீனாவையும் தங்களுடையதுதான் என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். விடியோ.காணுங்கள்
பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?
>> Friday, December 19, 2008
நேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.
இந்தியாவின் முதல் தீவிரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புதான்.
இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான்.
தீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.
மதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.
span>
வீடியோ பாருங்கள். -அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி.. பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு
>> Monday, December 15, 2008
செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.
அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார்.ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.
முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது.2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை.
இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.
பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
THANKS TO : http://thatstamil.oneindia.in/news/2008/12/15/world-bush-on-farewell-visit-to-iraq-dodges-flying.html#cmntTop
*************************************
CLICK
காலணி அடி வாங்கிய அதிபர் புஷ் ஷுக்கு கொல்லமாங்குடி குப்பாயி வாழ்த்துப் பாடல்
(வீடியோ) மாவீரன் ஹேமந்த் கர்கரே-- "பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியவர்.
>> Monday, December 1, 2008
அவரைக் கொன்றது தீவிரவாதிகளின் குண்டுதானா அல்லது அவரின் எதிரிகளால் இந்த சந்தர்ப்பம் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும்.
மாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்.
அப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் 'நாடகம்'

மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார்.
மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார்.
கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர் கைதாகக் காரணமாக இருந்தார்.
இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.
இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.
ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை.
அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்:
இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்.
தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார்.
மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த்.
சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்:
இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.
மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.
நன்றி: தட்ஸ் தமிழ்
நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார். ஹேமந்த் கர்கரேவின் மனைவி.
"ஞாநி" குமுதம்-பயங்கரவாதத்தின் நிறம் காவி!குமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.
VIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்
குண்டு வெடிப்பு பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! - இந்திய இராணுவ உயர் அதிகாரி ஒப்புதல்.
விடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-
விடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி
யோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீவிரவாதம்பற்றிப் பேசுகின்றனர்
அலறும் இந்துத்வ வெறிக் கட்சிகள். வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கின்றன.
*********************************************
குண்டுவெடிப்பில் இறப்பவர்கள்..அனைத்து ஜாதி..அனைத்து மதத்தினரும்தான்..
ஒரு சிலர் ,ஒரு சில இயக்கங்கள் ..செய்யும் செயல்களால்..குறிப்பிட்ட ஜாதி..குறிப்பிட்ட மதம்..ஆகியவை இழிவுபடுத்தப் படுகின்றன..இவை தவிர்க்கப்பட வேண்டும்..
எல்லா மதத்தினர்..ஜாதியினர்..இடையே..புல்லுருவிகள் உண்டு..அவர்களை கண்டுபிடித்து..அழிக்கப் பட வேண்டுமே அன்றி..நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக..ஒட்டு மொத்த சமுகத்தினரை குறை சொல்வதை தவிர்ப்போம். - வாஞ்ஜுர்
மேலும் படிக்க... Read more...VIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்
>> Wednesday, November 26, 2008
ஊடகங்களில் இதன் துணைத் தலைப்பு, வழக்கமான
பாகிஸ்த்தானின் ஐ.எஸ்.ஐ சதித் திட்டம் அம்பலம்" என்றோ நம் நாட்டின் காவல்துறை குற்றம் சுமத்தி விட்டு, ஆதாரங்களைத் தேடிப் பல்லாண்டு காலம் அல்லாடும் அமைப்பான "சிமியின் சதி தவிடுபொடி" என்றோ
அண்மையில் 'உருவாக்கப் பட்டு' அடிக்கடி ஊடகங்களில் உலா வரும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளின் கோரமுகம்" என்றோ இருக்கப் போவதில்லை.
************************************************************************************* நம்ம நட்டுல எங்க குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே காவல்துறையினர் இது இந்த தீவிரவாத அமைப்பின் வேலையாக இருக்கலாம். ( அவங்களுக்குத்தான் ஏகப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் மட்டும் தெரியுமே)
ஆனாலும் ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்திச்சு. அது இப்ப உண்மையாகி வருது. CARTOON - COMMENTS --நன்றி: குமுதம்.காம்
*******************************************************************************
"ஆர். எஸ். எஸின் பொதுச் செயலாளர் மோகன் பகவத்தையும் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரையும் ஒழித்துக் கட்டுவதற்குத் திட்டமிருந்தது.
அவ்விருவரையும் கொன்று விட்டு, முஸ்லிம் அமைப்புகள் ஆர். எஸ். எஸ். தலைவர்களைக் கொலை செய்து விட்டனர் என்று திசை திருப்புவதற்கும் திட்டம் வகுத்திருந்தோம்" என்று மலேகோன் குண்டு வெடிப்பை நடத்தி, தற்போது மகாராஷ்டிர அரசின் தீவிரவாதத் தடுப்புப் படை(ATS)யினரது விசாரணையின் கீழுள்ள பயங்கரவாதிகள் தெரிவித்தனர்.
கொலைச் சதித் திட்ட ஆதாரங்களை, கடந்த வெள்ளிக்கிழமை (21.11.2008) எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியைச் சத்தித்துப் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் M.K. நாராயணனும் நுட்புலத்துறை(ஐ.பி)த் தலைவர் P.C. ஹல்தாரும் அத்வானியிடம் காட்டியுள்ளனர்.
அதையடுத்து, கடந்த சனிக்கிழமை (22.11.2008) அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸின் இணைப் பொதுச் செயலாளர் மதன் தாஸ் தேவி, "இரு தலைவர்களைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப் பட்ட செய்தி உறுதியானதுதான்" என்று கூறியுள்ளார்.
"இந்துத் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸின் தலைவர்களை, இந்துத் தீவிரவாதிகளே கொல்ல முயன்ற காரணம் என்ன?" என்ற கேள்வி ஒன்று எழுவதைத் தவிர்க்கவியலாது.
இந்தக் கேள்விக்கு விடை ATS வசம் தற்போது தோண்டப் பட்டுக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்குச் சொந்தமான மடிக்கணினிகளில் இருக்கிறது.
ஆர். எஸ். எஸ். பொதுச் செயலாளர் மோகன் பகவத்தும் அதன் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரும் 'போதிய அளவு' தீவிரமாகச் செயல்படவில்லை என்ற ஒரு குற்றமும் முஸ்லிம்கள் விஷயத்தில் அவ்விருவரும் மென்மையாக நடந்து கொண்டதாக இன்னொரு குற்றமும் அதில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
தற்போது ATSயின் பிடியிலுள்ள சுதாகர் திவேதி (எ) தயானந்த் பாண்டே (எ) அம்ரிதானந்த் தேவ் தீர்த் மகாராஜுக்குச் சொந்தமான மடிக்கணினியில் காவல்துறைக்குத் தேவையான பாண்டேயின் 'இரகசிய சந்திப்புகள்' குறித்து நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் கடந்த ஜனவரி 26இல் ஃபரிதாபாத்தில் நடைபெற்ற ஆசிரமச் சந்திப்பும் போபாலில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற சத்திப்பும் மாலேகான் குண்டு வெடிப்புக்குச் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 'மிக முக்கிய'ச் சந்திப்பும் பாண்டேயின் மடிக்கணினியில் பதிவு செய்யப் பட்டுள்ளன.
மாலேகோன் குண்டுவெடிப்பில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், CLICK..ஒப்புக் கொண்ட போதேகுண்டு வெடிப்பின் பின்னணியில் வேறு சில முக்கியப் புள்ளிகள் இருக்கக் கூடும் என்ற ஐயம் எழுந்தது. மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்குக்காகத் தேடப் பட்டு வரும் இன்னொரு முக்கியக் குற்றவாளியான ராம்ஜி என்பவனைப் பற்றிய விபரங்களோடு இன்னும் சில முக்கியப் புள்ளிகளைப் பற்றிய விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கலாம்http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1105&Itemid=51
---------------------------------
குண்டு வெடிப்பில் தொகாடியாவுக்கு தொடர்பு!
சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!
இந்திய நாட்டின் இறையாண்மைக்கு கெடுதல் விளைவிக்கும் செயலை நாளும் இழைத்து வரும் சங் பரிவார் கும்பலின் சதிச் செயல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தாங்கள் சுத்த யோக்கியர்கள் போலும் தேசப் பற்றுக்கே நாங்கள்தான் சான்றி தழ் வழங்குவோம் என்றும் தருக்குடன் கூறிக் கொண்டிருந்தவர்கள், தங்களைத் தவிர மற்றவர்கள் மீது சந்தேகம் தோன்றும் வண்ணம் துவேஷக் கதைகளை பரப்பி வந்தனர்.
அப்பாவி இந்துக்களை ஏமாற்றுவதையே கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து வந்தனர். அதனால் நாடெங்கும் பெரும் வன்முறைகளை நிகழ்த்தினர். வன்முறைகளில் நாட்டின் பெரு மைக்கு சான்றாக விளங்கிய முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றிய அந்த சமூகம் குற்றப் பரம்பரையினர் போல் நடத்தப்பட்டனர்.
ஊடகங்களும் கூட இந்த பாரபட்ச போக்கை கவனம் பிசகாது கடைப்பிடித்தன.
சத்தியம் ஒருநாள் வென்றே தீரும் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப கால நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
செப்டம்பர் 29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு சதிச் செயல் தொடர்பாக சங் பரிவார் சதிகாரர்கள் வகையாய் மாட்டிக்கொண்டனர்.
பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்ற பழமொழிக்கேற்ப சங் பயங்கரவாதிகள் தொடர்ந்து சதிச் செயல் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில தீவிரவாத தடுப்புப் படையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.
காலகாலமாக பரப்பப்பட்ட கட்டுக் கதைகள் அம்பலமாயின.
சங் பரிவார் சதிகாரர்கள் இந்நாட்டையும் மக்களையும் எந்த அளவு ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெளிவானது. இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போனது.
இவர்கள் தங்களது பிற்போக்குத் தனமான மதவெறியை, இழிவான முறையில் பரப்பினர்.
சாமியார்கள் பயங்கரவாத சாமியார்களாக மாறினர். ராணுவத்திலும் கூட பயங்கரவாத நச்சு சிந்தனைகள் ஊடுருவின. உத்வேகம் பெற்றன. ஓய்வு பெற்ற உபாத்யாய்கள், சமீர் குல்கர்னிகள் போதாதென்று பணியிலிருக்கும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹிதுகள் அப்பாவிகளை குண்டு வைத்து கொலை செய்து நாட்டையே அவமானத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.
சங்பரிவார் சதிவலைகள் தொடர்ந்து வரும் நிலையில் விடிந்தால் எந்த சங் கும்பல் தலைவன் சிக்குவானோ என்று மக்கள் தினமும் ஆவலாய் எழுகின்றனர்.
பெண் சாமியார் பிரக்யாசிங் போன்றவர்கள் அப்பாவி மக்களின் ஆன்மீக பலவீனங்களை பயன்படுத்தி தீவிர வாதத்தை வளர்த்தனர்.
இந்நிலையில் இதுவரை பெரிய முதலைகள் சிக்காத நிலையே நீடித்தது. சில்லறை தேவதைகள் மட்டுமே பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஒரு காவி முதலை, திரிசூலம் தூக்கும் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனும் மாலேகான் சதி வழக்கில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.
மதவெறி கூட்டங்களில் திரிசூலங்களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றாவது முனை சமாதானம் பேசும் ஹிந்துக்களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!) தற்போது மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் என்றும் முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்ய கொள்ளை கொள்ளையாய் பணம் அள்ளிக் கொடுத்தவர் என்றும் தீவிரவாத தடுப்புப்படை இவரைப்பற்றி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து தொகாடியாவை தூக்கில் போடு என இந்தியாவெங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்http://www.tmmk.info/news/999564.htm
---------------------------------------
'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்?
விடியோ.“கோக்” கும் பன்றியின் இறைச்சியும்.
>> Tuesday, November 11, 2008
பன்றியின் மாமிசத்திற்குள் இருக்கும் உயிருக்கே உலை வைக்கும் புழுக்கள்.'கோக்' வகை பாணங்களில் இருக்கும் அமிலத்தன்மையின் வீரியம்
தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான் வரம்பு மீறாமலும், வழியச் செல்லாமலும், நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் திருக்குர்ஆன்.2:173
நோய் கிருமிகளை உருவாக்கும் கால்நடைகளின் மாமிசத்தில் உள்ள தீமைகள் மனிதர்கள் உண்டு புசித்து உடலில் ஆரோக்கியம் பெறுவதற்காக கால்நடைகளைப் படைத்து அதனுடைய பாலை அருந்துவதற்கும், அதனுடைய இறைச்சியை உணவாக உட்கொள்வதற்கும் அனுமதி அளித்தான்.
கால்நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம் அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன அவற்றை உண்ணுகின்றீர்கள். திருக்குர்ஆன் 23:21.
அதே கால்நடைகளில் மனிதனுடைய உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கிழைக்கக் கூடிய சில கால்நடைகளை அறிந்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தடைசெய்தான் அதில் முக்கியமாக பன்றியின் இறைச்சியைக் கூறி தடை செய்தான் பார்க்க திருமறை வசனங்கள். 4:3, 5:60, 6:145, 16:115 மனித சமுதாயத்திற்காக அல்லாஹ் தடைசெய்த ஒன்றில் நிச்சயமாக தீங்கு இருக்கவேச் செய்யும்.
இஸ்லாமிய எழுச்சியால் மற்ற எந்த மதத்தை விடவும் பெரும் வீழ்ச்சியை தழுவியது கிருஸ்தவ மதம் என்பதால் அதிகபட்சம் இஸ்லாமிய சட்டங்களுக்கு மாற்றமாக நடப்பதை அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் கொள்கை(?)யாகக் கொண்டுள்ளனர்.
அவர்களது கொள்கை(?)யின் அடிப்படையில் அல்லாஹ் தடுத்த விபச்சாரத்தை வெட்க உணர்வுகளை உதிர்த்து விட்டு பகிரங்கமாகச் செய்து அதைப்பார்த்து பிறரும் செய்வதற்காக உலகு முழுவதும் பல்கி பரவச்செய்வதற்கு ஊடகத் துறையை பயன்படுத்தினர்.
அல்லாஹ் தடுத்த பன்றியின் மாமிசத்தை உண்டு புசித்து அதன் மூலம் மூலைக் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை உலகுக்குப் பரவச் செய்ததிலும் பெரும் பங்கா(?)ற்றி சாதனை படைத்தவர்கள்.
1. மேல்படி கால்நடையின் மாமிசத்தில் புழுக்கள் உற்பத்தியாவதை அவர்களே கண்டுப் பிடித்து முதலில் அறிவித்தனர்.
மேல்படி புழுக்களைக் கொண்ட மாமிசம் மனித உடலுக்குள் சென்றதும் மாமிசம் முழுவதும் இரப்பைக்குள் சென்று செரிமானம் அடைந்து விடுகிறது ஆனால் அதனுள் இருக்கும் புழுக்கள் மட்டும் சாகாமல் தங்கி விடுகின்றது. அவ்வாறு தங்கிக் கொண்ட அந்த புழுக்கள் எண்ணற்ற நோய் கிருமிகளை உருவாக்குகிறது அதில் முக்கியமாக மூளை காய்ச்சலை ஏற்படுத்தி மரணத்தை தழுவச் செய்கிறது.
அதற்கடுத்து
1. மேல்படி மாமிசத்தை ஒரு பாத்திரத்திலிட்டு நன்றாக கொதிக்க விட்டு ஆய்வு செய்த வகையில் மொத்த மாமிசமும் கரைந்து பஸ்பமாகிய பின் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் மாமிசத்தில் இருக்கக்கூடிய புழுக்கள் மட்டும் வீரியமாக நெளிந்து கொண்டிருந்ததை இரண்டாவது கட்டமாக அவர்களே உலகுக்கு அறிவித்தார்கள்.
இன்றும் நமது நாடுகளில் பன்றிகள் வளர்க்கும் இடங்களைச் சுற்றியுள்ள மக்களை மூளை காய்ச்சல் தாக்கி அதிகமான பேர் இறப்பதை அவ்வப்பொழுது ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றோம்.
மூலைகாய்ச்சல் அதிகரிக்கும் பொழுது பன்றிகளை ஒழிக்க ஊராட்சி துறை உத்தரவு பிறப்பிக்கும், இன்றும் இந்தியாவில் ஊராட்சி துறை துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊரின் ஒதுங்குப் புறங்களில் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு முக்கிய காணரம் அவர்கள் பன்றிகளை வளர்ப்பதுவேயாகும்.
ஆசிய நாடுகளில் வளரும் பன்றிகள் மனித கழிவுகளை உண்பதாலும் சேறு, சகதிகளில் உருண்டுப் புரளுவதாலுமே மூளை காய்ச்சல் போன்ற நோய் கிருமிகளைப் பரப்புகிறது. ஆனால் மேலை நாடுகளில் பன்றிகளுக்கு தனி தொழுவம் அமைக்கப்பட்டு உயர்தர தீவணங்களிட்டு வளர்க்கப்படுவதால் அதனுடைய மாமிசத்தை உண்டு வருகின்றோம் என்றக் கருத்தை பன்றியின் மாமிசத்தை உண்ணும் சமுதாயத்தவர்கள் கூறுகிறார்கள்.
மேலை நாடுகளில் அவ்வாறு தனித்தொழுவம் அமைக்கப்பட்டு உயர்தர தீவணங்களிட்டு வளர்க்கப்படுவதை நாமும் ஊடகங்கள் வாயிலாக கண்டு வருகிறோம் மறுக்கவில்லை அவ்வாறு வளர்க்கப்படுவதால் மட்டும் அதனுடைய இறைச்சியில் வளரும் புழுக்களை ஒழித்து ப்யூர் மட்டனாக மாற்ற முடிந்ததா ? முடியவில்லை ! முடியாது !
என்ன தான் கழுவி குளிப்பாட்டினாலும் காகம் கொக்காகாது உயிரினங்களின் மீது இறைவனுடைய இயற்கை அமைப்பை இதுவரை எவர் மாற்றி அமைத்து சாதனைப படைத்தார்கள் ? கூற முடியுமா ?
2. சமீபத்தில் மேல்படி மாமிசத்தில் இரண்டு பீஸ்களை ஒரு தட்டிலிட்டு அதன் மேல் 'கோக்' பாணத்தை ஊற்றியதும் மாமிசத்தின் உள்ளே இருந்த புழுக்கள் நெளிந்து மேல் நோக்கி வருவதை வீடியோ மூலம் பதிவு செய்து மூன்றாம் கட்டமாக அதை உண்பவர்களே உலகுக்கு அறிவித்தள்ளார்கள்.
அதன் கிளிப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.
மேற்கானும் வீடியோ கிளிப்பின் மூலம் மனித சமுதாயத்திற்கு இரண்டு படிப்பினைகள் இருப்பதை கவனிக்கலாம்.
· பன்றியின் மாமிசத்திற்குள் இருக்கும் உயிருக்கே உலை வைக்கும் புழுக்கள்.
· நாம் தினந்தோறும் பருகும் 'கோக்' வகை பாணங்களில் இருக்கும் அமிலத்தன்மையின் வீரியம்.
மேல்படி மாமிசத்தின் மீது ஊற்றும் கோக் பாணத்தின் அமிலத் தன்மையில் எந்தளவுக்கு வீரியம் இருந்தால் உள்ளுக்குள் இருக்கும் புழுவால் நிலை கொள்ள முடியாமல் மேல் நோக்கி வந்திருக்கும் ?
அந்தளவுக்கு அதிகப்பவர் உள்ள அமிலம் கலந்த பெப்சி, கோக் போன்ற மனித வர்க்கத்தை அழித்து பணம் பண்ணும் யூத தயாரிப்புகள் உடல் நலத்திற்கு பெருங்கேடு விளைவிக்கக் கூடியது என்பதை அதனுடைய அமிலத் தன்மைகளின் அளவைக் கண்டு பிடித்து ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் இந்தியாவில் தடை செய்யபபடவிருந்ததை மேல்படி யூத கம்பெனிகள் அப்போதைய அமைச்சர் சுஷ்மிதா சுவராஜை முறையாக கவனித்து தடை உத்தரவை வாபஸ் பெறச் செய்தார்கள்.
மேல்படி கோக் தொழிற்சாலையை கேரளாவில் அமைக்கவிருந்ததை கேரள மக்கள் முணைப்புடன் எதிர்த்து ஓட ஓட விரட்டி அத்தார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.
இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் கோக் பாணங்களில் அமிலத்தன் அளவைக் குறைத்து தயாரிக்ப்படுவதையும் ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம்.
இதில் கொடுமை என்னவென்றால் இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பாவை விட அரபுநாடுகளில் கோக் வகை பாணங்கள் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர் அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. திருக்குர்ஆன் 5:79
அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக
***********************
படிக்க:>>
கிறிஸ்தவர்கள் முயல், பன்றி இறைச்சி உண்ணக்கூடாது.: :பைபிள். பன்றியை தொடவும் கூடாது.
THANKS TO : http://idhuthanunmai.blogspot.com/
***************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்
மேலும் படிக்க... Read more...




