**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts
Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts

உடலையும் மனதையும்..ரெப்ரெஷ் REFRESH செய்யுங்கள்..

>> Thursday, March 26, 2009

கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் அவ்வப்போது ரெப்ரெஷ் செய்து டேட்டாவை அப்டேட் செய்கிறோம்.

அதே போல உங்கள் உடலையும் மனதையும் ரெப்ரெஷ் செய்தீர்களா?

இதென்ன புதுசா இருக்கு? இங்கு ரெப்ரெஷ் செய்திட எந்த மெனுவிற்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

கம்ப்யூட்டருடன் முறையாகச் செயல்படுகிறீர்களா? என்ன கேள்வி இது என்று எண்ணுகிறீர்களா?

ஆம் நாள் ஒன்றின் பல மணி நேரத்தை கம்ப்யூட்டருடன் தானே கழிக்கின்றீர்கள். வீட்டில் அலுவலகத்தில், கல்வி நிலையங்களில் என எங்கு சென்றாலும் கம்ப்யூட்டரை நம்பித்தான் பல வேலைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

காரில், ஸ்கூட்டரில் தினந்தோறும் செல்கையில் அதில் எப்படி அமர வேண்டும் என ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து பலரின் அறிவுரை கேட்டு நடக்கிறோம். ஆனால் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்கையில் நம் உடல்நிலையைக் கவனிப்பதே இல்லை.

இது தொடரும் நாட்களில் நிச்சயம் நமக்கு தீராத உடல் பிரச்னையைக் கொண்டு வந்து சேர்க்கும். எனவே அடிப்படையில் என்னவெல்லாம் நாம் கவனமாகக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

நிச்சயம் இதனை உணர்ந்திருப்பீர்கள். கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் உடலின் பின் பகுதியில் வலி இருக்கும். இது பஸ்ஸில் வந்ததனால், ஸ்கூட்டரில் சரியாக அமர்ந்து வராததால் என்று ஏதேனும் ஒரு காரணத்தை நமக்கு நாமே சொல்லி சமாதானப்படுத்திக் கொள்வோம். கண்கள் கொள்ளும் பார்வை சற்று வெளிறத் தொடங்கும்.

வயதாயிற்று அதனால் என்று எண்ணுவோமோ ஒழிய கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்ப்பதால் என்று எண்ண மாட்டோம்.

சரி, கம்ப்யூட்டரில் பணியாற்றுவதால் தான் இந்த வலிகள், பார்வைக் கோளாறு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கிறீர்களா?

இதோ மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் காணலாம்.

1.முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது உங்கள் கம்ப்யூட்டர் அதன் டேபிளில் எப்படி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தான்.

முதலில் உங்கள் நாற்காலி. உங்கள் பாதம் இரண்டும் தரையில் தட்டையாகப் பட்டு அமர வேண்டும். உங்கள் முழங்கால்கள் இரண்டும் 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறு நாற்காலியை அட்ஜஸ்ட் செய்து அமர வேன்டும்.

இந்த நிலையில் உங்கள் தொடைகள் இரண்டும் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இல்லையேல் மாற்றி இணையாக இருக்கும்படி நாற்காலையைச் சரி செய்து அமர வேண்டும். உங்களுடைய இடுப்பும் 90 டிகிரி கோணத்தில் மடங்கி நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

2. அடுத்ததாக உங்கள் மவுஸும் கீ போர்டும் எப்படி செட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பார்ப்போம். இவை இரண்டும் உங்கள் முழங்கைகள் இருக்கும் நிலைக்கு நேராக அமைந்திருக்க வேண்டும். சிறிது கீழாகக் கூட இருக்கலாம்.

இதனால் உங்கள் தோள்கள் சற்று தளர்வாக இருக்க முடியும். அடுத்ததாக மானிட்டர். மானிட்டரில் உள்ள வரிகள் உங்கள் கண்களின் நேர் பார்வைக்குச் சற்றுக் கீழாக அமையும்படி வைக்க வேண்டும். எப்போதும் மானிட்டரை நேர் கோணத்தில் பார்க்கும் நிலையில் இருக்க வேண்டும்.

மானிட்டரில் இருந்து குறைந்தது 16 அங்குல தூரத்தில் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் தலை நேராக இருக்க வேண்டும். சற்று குனிந்தவாறாகவோ அல்லது நிமிர்ந்த வாறாகவோ இருந்தால் கண் மற்றும் கழுத்துப் பகுதியில் வலி தொடங்கும்.

3. மேலே சொன்னபடி அனைத்தையும் செட் செய்துவிட்டீர்கள். இனி எப்படி பணியாற்றலாம் என்று பார்ப்போம். முதலில் மேலே குறிப்பிட்டுள்ளபடி அமர்ந்திடுங்கள். அந்த நிலையிலேயே உங்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மாறாக ஒரு நிலையை எடுத்தால் நிச்சயம் அது எதிர்காலத்தில் பிரச்சினையைத் தரும். கம்ப்யூட்டரில் டைப் செய்கையில் மிக மிகக் குறைந்த சக்தியைப் பயன்படுத்துவதை உறுதி செய்திடுங்கள்.

கீ போர்டினை பெரிய அளவில் முயற்சி எடுத்து இயக்குவதாக இருக்கக் கூடாது. மிகவும் எளிதாகவும் மெலியதாகவும் கீ களை இயக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கரங்களில் ஏற்படும் வலிகள் முழுமையும் போக்கலாம்.

4. கம்ப்யூட்டரில் தொடந்து செயல்படுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறீர்களா? கீ போர்டிலிருந்து எழாமல் வேலை பார்த்தேன் என்று மார் தட்டிக் கொள்கிறீர்களா?

இங்கு தான் தவறு செய்கிறீர்கள். கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் அதனை நிறுத்திவைத்து சற்று பிரேக் கொடுக்க வேண்டும்.

எழுந்து வெளியே வந்து நடக்கலாம்; கரங்களை எளிதாகச் சுழற்றிப் பார்க்கலாம். முக்கியமாக உங்கள் விரல்கள் அமைந்திருக்கும் பகுதியில் சிறிய அளவில் மசாஜ் கொடுத்துப் பார்க்கலாம். 30 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து வேலை செய்யக் கூடாது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே எழுந்து வந்து கைகள் மற்றும் கால்களை மடக்கி நீட்டிப் பார்க்கவும். கரங்களை நீட்டுகையில் மூச்சுக் காற்றினை ஆழமாக உள்ளிழுத்து விடவும். அலுவலகத்தில் கிடைக்கும் இடத்தில் ஒரு சுற்று நடந்து வந்து பின் பணியைத் தொடரலாம்.

இது நம் உடம்பிற்கும் சற்று உற்சாகத்தைத் தரும்.

அடுத்ததாகக் கவனம் செலுத்த வேண்டியது கம்ப்யூட்டரைச் சுற்றி அமைந்திருக்கும் வெளிச்சம். மிகவும் பிரகாசமான வெளிச்சம் உங்களைச் சுற்றி இருப்பதனைத் தவிர்க்கவும்.

ஏனென்றால் அது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.

ஆனால் நீங்கள் படிப்பதற்குத் தேவையான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

படிப்பதற்குச் சிரமப்படும் வகையில் வெளிச்சம் இருந்தால் அது கண்களுக்குப் பிரச்சினை அளிப்பதுடன் கம்ப்யூட்டர் பணியையும் பாதிக்கும்.

கம்ப்யூட்டரில் மட்டும் தானே வேலை பார்க்கிறோம். எந்த குறிப்பையும் படித்து அதனைப் பயன்படுத்தவில்லையே என்று எண்ணும் சிலர் மானிட்டர் வெளிச்சம் போதும் என்று முடிவு செய்து இருட்டில் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வார்கள்.

இது முழுக்க முழுக்க தவறு. இருட்டில் நிச்சயம் மானிட்டரின் ஒளி பிரகாசமாக இருக்கும். அதை மட்டுமே கண்கள் பார்த்து பணி செய்வது கூடாது.

தொடர்ந்து கம்ப்யூட்டர் கீ போர்டில் மட்டுமே பணியாற்றும் வகையில் உங்கள் வேலை இருக்கிறதா?

அப்படியானால் உங்கள் விரல்களுக்கு நீங்கள் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பணி புரிபவர்களுக்கு விரல்கள் அவ்வப்போது உணர்வற்று போவதை உணர்ந்திருப்பார்கள்.

இதற்கு அடிக்கடி சிறிய உடல் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

விரல்களை எவ்வளவு நீளம் நீட்ட முடியுமோ அந்த அளவிற்கு நீட்டி அப்படியே பத்து விநாடிகள் வைத்திருக்க வேண்டும்.

பின் விரல்களை மூடி மீண்டும் முன்பு போல நீட்ட வேண்டும். இதே போல உங்கள் தலையை இரண்டு பக்கமும் எவ்வளவு கோணத்தில் திருப்ப முடியுமோ அந்த அளவிற்கு திருப்பி 10 விநாடிகள் வைத்திருந்து பின் மீண்டும் நேராகக் கொண்டு வரும் பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

தோள்களில் வலி தொடங்குவதாகத் தெரிந்தால் அதனை ஒரு சுழற்சிக்குக் கொண்டுவரும் வகையில் எதிர் எதிர் திசைகளில் கொண்டு வரும் பயிற்சியை அவ்வப்போது செய்திட வேண்டும்.

இறுதியாக பின் இடுப்பு. தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்கள் அவ்வப்போது எழுந்து கைகளை இடுப்பின் இருபுறமும் வைத்து இடுப்பை முன்புறமாகவும் தோள்களை பின்புறமாகவும் கொண்டு செல்வது போல பயிற்சி செய்திட வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு முறை நீட்டுகையில் அதே நிலையில் பத்து விநாடிகள் வைத்திருந்து பின் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இதனால் இடுப்பு மட்டுமின்றி முழு உடம்பிற்கும் உற்சாகம் கிடைக்கும்.

வழக்கமான கம்ப்யூட்டர் டிப்ஸ்களுக்கு இடையில் இது என்ன உடற்பயிற்சி டிப்ஸ் என்று யோசிக்கிறீர்களா? உடல் வலி வருகையில் அது கம்ப்யூட்டர் பணியினால் அல்ல என்று எண்ணுபவர்களே ஏராளம்.

ஆனால் அது தான் அடிப்படைக் காரணம் என்று வலி அதிகமான பின்னர் தான் நாம் உணர்கிறோம். எனவே தான் பன்னாட்டு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களில் பணி புரிபவர்களுக்கு இது போல உடலையும் மனதையும் அவ்வப்போது உற்சாகப்படுத்த இடமும் வசதிகளும் நேரமும் தருகின்றனர்.

ஏனென்றால் சுவரை வைத்துத்தானே சித்திரம் வரைய முடியும்.

computermalar 03-10-09

மேலும் படிக்க... Read more...

மறைந்து போகும் இமெயில் கடிதங்கள்

>> Tuesday, February 27, 2007

மறைந்து போகும் இமெயில் கடிதங்கள்

கேள்வி: அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் என் மெயில்களைப் படித்தவுடன் அவை மறைந்து போகின்றன. திரும்ப கிடைக்க என்ன செய்திட வேண்டும். இவ்வாறு மறையாமல் இருக்க எப்படி செட் செய்திட வேண்டும்?

பதில் : இது என்னுடைய கம்ப்யூட்டரிலும் ஏற்பட்டது. இதில் இன்னும் என்ன அதிசயம் என்றால் ஒரு முறை சர்ச் மேற்கொள்கையில் இந்த மறைந்த அல்லது அழிக்கப் பட்டுவிட்டதாக எண்ணப்பட்ட அனைத்து மெயில்களும் காட்டப்பட்டன.

இது விநோதமாக இருந்தாலும் இதற்கான தீர்வு எளிதுதான்.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் முதலில் View/Current View செல்லவும். பின் "Show all messages" என்பதனை செலக்ட் செய்திடவும். அநேகமாக முதலில் "Hide Read Messages" என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். தண்டர்பேர்ட் தொகுப்பிலும் இந்த மறைக்கும் மற்றும் மறைக்காத வசதி உள்ளது.

படித்த மெயில்களை மறைப்பது ஒரு வகையில் நல்லதுதான். அப்போதுதான் நீங்கள் படிக்காத மெயில்கள் எவை என்று தெரியும்.

ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிப்பிட்டுள்ள படி செட் செய்துவிட வேண்டியதுதான்.

மேலும் படிக்க... Read more...

மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்.

மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்.

மின்னஞ்சல் கடிதங்கள் இன்று ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாத தேவையாய் மாறிவிட்டன. வெளியூரில் விருந்தினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்குச் சென்றால் உபசரிப்பதற்காக கொஞ்சம் காபி தரட்டுமா? என்று கேட்பது போல "உங்கள் இமெயில் பார்க்கணும்னா இங்கேயே எங்க கம்ப்யூட்டர்ல செக் பண்ணிக்கிறீங்களா?என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது.

அந்த அளவிற்கு அனைவருக்கும் அன்றாடம் இமெயில் பார்க்க வேண்டியது அவசியமாகிவிட்டது. கடிதங்களை பேப்பரில் எழுதி கவர் வாங்கி மூடி ஸ்டாம்ப் ஒட்டி தபால் அனுப்புவது இப்போது எவ்வளவோ குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் நாம் அனுப்பும் இமெயில் கடிதங்கள் நம்முடைய பண்பையும் காட்டுவதாக அமைய வேண்டாமா?

பேப்பரில் எழுதும்போது எத்தனை ஒழுக்க முறைகளைக் கடைப்பிடிக்கிறோம். சரியாக வரவில்லை என்றால் எத்தனை பேப்பரைக் கிழித்து எறிந்து விட்டு பின் எழுதுகிறோம். அதே போல இமெயில் கடிதங்களை அமைப்பதிலும் எழுதுவதிலும் பல நல்ல வழிகளைக் கடைப்பிடித்தால் நல்லது.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. ஒரே இமெயில் கடிதத்தினைப் பலருக்கும் அனுப்புகையில் பெறுபவர் முகவரியில் அனைத்து முகவரிகளையும் அமைக்க வேண்டாம். தங்களுடைய இமெயில் முகவரிகளைத் தேவையின்றி அடுத்தவர்கள் அறிவதனை யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே பெறுபவருக்கான இடத்தில் (To:) உங்கள் முகவரியினையும் BCC என்ற இடத்தில் அனைத்து முகவரிகளையும் அமைத்து அனுப்பவும். BCC என்பது Blind Carbon Copy ஆகும்.

அதாவது நீங்கள் யார் யாருக்கெல்லாம் இந்தக் கடிதத்தினை அனுப்பி உள்ளீர்கள் என்று யாருக்கும் தெரியாது. அதனைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அதனைக் கடிதத்திலேயே தெரிவித்து விடலாம். இதனால் நீங்கள் பலருக்கு அனுப்பி உள்ளது மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் இமெயில் முகவரி மற்றவருக்குத் தெரிய வாய்ப்பில்லை அல்லவா!

2. கடிதத்தின் Subject என்ற பிரிவில் உங்கள் கடிதம் எதனைக் குறித்துள்ளது என ரத்தினச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் குறிப்பிடவும். இது கடிதங்களின் பட்டியலை உங்கள் நண்பர் பெறுகையில் கடிதம் எது குறித்து என்று அறிந்து அதற்கேற்ற வகையில் முக்கியத்துவம் தருவார். எனவே "Hi" or "Hello" or "Help" என்ற சொற்களை Subject பிரிவில் அமைப்பதனை அறவே தவிர்க்கவும்.

3. மிகப் பெரிய பைல்களை இணைப்பாகத் தருவதனைத் தவிர்க்கவும். இவற்றை இறக்கிட அதிக நேரம் எடுக்கும் என்பதாலும் அதற்கு இன்டர்நெட் இணைப்பிற்கான பணம் கூடுதலாகச் செலவழியும் என்பதாலும் உங்கள் நண்பர் எரிச்சல் பட்டு அதனைப் படிக்காமலேயே இருந்து விடுவார்.

எளிதாகச் செலவின்றி இறக்கம் செய்யக் கூடிய பிராட் பேன்ட் இன்டர்நெட் இணைப்பை எல்லாரும் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்படியும் ஒரு பெரிய பைலை இணைக்க வேண்டும் என்றால் இதற்கெனவே உள்ள Yousendit போன்ற தளங்களில் உங்கள் பைல்களை அமைத்து அதற்கான தொடர்பினை உங்கள் கடிதத்தில் தந்துவிடவும்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை இணைப்பாகத் தர எண்ணினால் அவற்றை ஸிப் செய்து அனுப்பவும். அப்போது தான் கடிதத்தினைப் பெறுபவர் அனைத்து பைல்களையும் பெறுவது உறுதிப் படுத்தப்படும். இல்லை என்றால் ஒன்று கிடைத்து ஒன்று கிடைக்காமல் போகலாம்.

5. எந்த இமெயில் கடிதத்தினையும் ஒருவர் மீது கோபத்தில் இருக்கும்போதோ எழுத வேண்டாம். அப்படியே உங்கள் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ள எழுதினாலும் உடனே அதனை அனுப்ப வேண்டாம். சிறிது காலம் கழித்து அனுப்ப அதனைத் திறந்து படித்துப் பார்க்கவும். நீங்களாகவே அந்த கடிதத்தினை மாற்றி எழுத முடிவு செய்வீர்கள்.

6. மின்னஞ்சல் கடிதத்தினைப் பெறுபவர் படித்துவிட்டார் என்ற சான்றினை நீங்கள் பெறும் வகையில் ஒரு கடிதத்தினை அனுப்பலாம். ஆனால் இது போன்ற பெற்றதற்கான அஞ்சல் ஒன்றைப் பெறும் வசதியைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. பெறுபவர் இது குறித்த ஆப்ஷன் விண்டோ ஒன்றைப் பெறுவார். பின் அதற்கு நேரம் ஒதுக்கி பதில் அளிக்க வேண்டும். எனவே அவர் அதனை விரும்ப மாட்டார்.

7. உங்களுக்கென தனிப்பட்ட முறையில் வரும் கடிதங்களுக்கு உடனடியாகப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பவும். ஏனென்றால் உங்களுக்கு கடிதத்தினை அனுப்பியவர் பதிலுக்குக் காத்திருப்பார்.

8. எப்போதும் மின்னஞ்சல் கடிதங்களை சுருக்கமாகவும் நேரடியாக விஷயத்தைத் தெரிவிப்பதாகவும் அமைத்திடுங்கள். இந்தக் கடிதத்தைப் படிக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நல்ல சுகத்துடன் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் என்று எழுதுவதெல்லாம் பேப்பரில் எழுதுவதற்குத்தான் சரி. மின்னஞ்சல் கடிதங்களில் இருக்கக் கூடாது.

9. கடித்ததை அனுப்ப பட்டனை அழுத்தும் முன் எப்போதும் கடிதத்தில் பிழைகள், இலக்கண தவறுகள் இருக்கிறதா என ஒரு முறை சோதித்த பின்னர் அனுப்பவும். தவறுகள் இருந்தால் நீங்கள் சீரியசாக அந்தக் கடிதத்தை எழுதவில்லை என்று உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை அக்கடிதம் ஏற்படுத்திவிடும்.

10. நீங்கள் ஏதேனும் மெயிலிங் லிஸ்ட்டில் இருந்தால் உங்கள் முகவரி, மொபைல் போன் எண்கள் ஆகியவற்றை அனைவரும் அறியும் வண்ணம் தருவதனைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட நபர்களை உங்கள் தனி மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளச் சொல்லி பின் தெரிவிக்கவும். அல்லது அவர்களின் தனி மின்னஞ்சல் முகவரியினைப் பெற்று தொடர்பு கொள்ளவும். ஏனென்றால் மெயிலிங் லிஸ்ட்டில் உள்ள எல்லாரும் நல்லவர்கள் என்றும் உங்கள் நண்பர்கள் என்றும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP