**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சகோ: பீ. ஜே.அவர்களுக்காக துஆ செய்யுங்கள்.

>> Wednesday, October 10, 2012

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.

இப்படிக்கு
மாநில நிர்வாகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012

சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்

மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன்.

ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன்.

ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது.

ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.

ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை.

இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை.

என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல.

மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை.

நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும்.

எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை.

மறைக்கவும் முடியாது.

மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான்.

அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான்.

இதுதான் ஆச்சரியமானது.

இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல.

ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.

புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும்

மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும்

அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது.

எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும்.

அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.

அன்புடன் பி.ஜைனுல் ஆபிதீன்

10.10.2012

மேலும் படிக்க... Read more...

கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!!

>> Saturday, October 6, 2012

ஒரு பெண்ணுக்கு தன்னை கவனிக்கும் ஆணின் பார்வை எங்கே இருக்கிறது என்பது, அவள் அவனை பார்க்காவிட்டாலும் குறிப்பால் உணரும் திறன் உண்டு.

கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகளும், அந்த போதையின் விளைவும். அன்பின் சகோதர சகோதரிகளே!   உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

அழகு.. இன்று இது தான் பிரதானமாக பெண்களின் மீது ஆளுமை செழுத்தும் வார்த்தை.

முன்னெல்லாம் கொஞ்ச நேரம் கண்ணாடி முன்னாடி நிற்க முடியாது,   அம்மாகிட்ட இருந்து கடுகு வெடிக்கும் வார்த்தைகள் வந்து விழும்.   பதில் சொல்லமுடியாது.

ஆனால் இன்று அவர்களுக்கு பதில் தயாராகி வந்துவிட்டது.  

ஆம் “கான்ஃபிடண்ட்”. அதாவது தன்னம்பிக்கை.

அழகைக்கூட்டி, தன்னை பிறர்க்கு எழிலாய்க் காட்டி தன்னம்பிக்கையை மெருகேற்றுகிறார்களாம்.

இந்த அப்பாவி பெண்கள். எங்கிருந்து வந்தது இந்த வார்த்தை? சுயமாக சிந்தித்து பெண்கள் கையிலெடுத்துக் கொண்டார்களா?   இல்லவே இல்லை.

 . .இந்த வார்த்தை வந்து விழுந்ததே வர்த்தக விளம்பரங்கள் வாயிலாகத்தானே.

இன்னும் நாம் அனைவருமே, வாயில் எச்சில் சொட்ட ரசித்து ரசித்து அவர்களின் மொழியையும், கலாச்சாரத்தையும், உணவுகளையும், ஆடைமுறையையும், என கேவலம் கழிவறைக்காகிதம் வரை   அணுஅணுவாய் கடைப்பிடிக்க,  

அதன்மீதான நமது மோகத்தை தவிர ஒரு மண்ணும் இல்லை  

அதிலே... மேலைநாட்டு நாகரீகக்(?) கவர்ச்சியும், கலை(?) என்கிற பெயரில் கேடுகெட்ட சினிமாக் கூத்தாடிகள் காட்டிக்கொடுக்கும் வக்கிரங்களும் இன்று நமக்கு பிரதானமாகிப்போக, 

 ஊணும் உடையும், நடையும் பாவனையும் அவர்களின் கைகளில் விதையாகி நம்மில் வளர்கிறது விஷச்செடிகளாய்.  

மேலைநாட்டு நாகரீகம் - வெஸ்ட்டர்ன் கல்ச்சர்..என்ன கருமம் இருக்கிறது இதிலே...ச்சீ..  

இதை மெச்சிப்பேசும் மேதாவி ஒருவர் இப்படி சொல்கிறார்.   அவர் அந்நாட்டில் இருக்கும் போது, பெண் ஒருவர் நீச்சலுடையில் அவர்முன் வந்து, கரையில் யாரும் இல்லை, நான் குளிக்கிறேன், தனக்கு பயமாக இருப்பதால் நீங்கள் கொஞ்சம் பார்த்துகொள்ளுங்கள், என்றாராம்.

 எப்படிப்பட்ட கலாச்சாரம்?  

நம்நாட்டில் இப்படி முடியுமா?  

உடல் அவயங்கள் குறித்து அவர்களுக்கு எவ்வித சிந்தனையும் இல்லை.   இயல்பாக பழகுகிறார்கள் என வியந்தார்.  

இதில் வியக்க என்ன இருக்கிறது.  

தன்னை துடைப்பமாக மாற்றி குப்பையில் புரலுபவர்களுக்கு, அருவருப்பும் அசூசையும் பெரிதில்லைதானெ...பின் உடலென்ன பொருளென்ன???  

இதை தூக்கிப்பிடித்து கோஷம் போட வெக்கமாக இல்லையா?  

ஆணும் பெண்ணும் வகை தொகையின்றி கூடிக்குலாவ, கூத்தடிக்க கற்றுக்கொடுக்கிறது இந்த ஈனக் கலாச்சாரம்.  

ஆடைகளில் ஆபாசத்தை புகுத்தி,அதைத் தன் உரிமையென அலறி,

இன்று என்நாட்டு பெண்களும் அந்த மோகத்தில் தன்னை கவர்ச்சிப்பொருளாக்கி கான்ஃபிடண்ட்?? வளர்க்கிறார்கள்.  

ஆமாம் இப்போ இப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.  

தான் அழகா இருந்தால்த்தான் கான்ஃபிடண்ட்டா இருக்கிறார்களாம்.  

உங்களது பேச்சிலும், திறனிலும், ஒழுக்கத்திலும், தனித்துவத்திலும், ஆற்றலிலும் வெளிப்படாத கான்ஃபிடண்ட், அழகில் வந்துவிட்டது என்ற வர்த்தக விளம்பரங்களின் அற்ப கோஷங்களை, எப்படி அறிவில்லாமல் கையிலெடுத்து ஏந்துகிறீர்கள்?  

உங்களுக்காகவே காலத்திற்கேற்ப கோஷங்களை மாற்றி தன் வியாபாரத்தை நல்லபடியே நடத்திக்கொண்டிருக்கிறான் மேற்கத்திய வியாபாரி.  

உங்களுக்குத்தான் பொட்டில் அறைந்தாற்போல் சொன்னாலும் விளங்குவதில்லை.  

ஒருவர் தன்னை அழகுபடுத்திக் கொள்வதை யாரும் தடுக்கமுடியாது.  

அது அவரவர் உரிமையும் கூட.  

என்ன?... காலாகாலமாக நம் பெண்கள் அழகுபடுத்திக் கொள்ளாமாலா இருந்துவிட்டார்கள்.  

அது அவர்களை ஆடையிலும் அலங்காரத்திலும்,தன்னையும், தனது சுயத்தை இழந்துவிடாது பாதுகாத்தது..  

ஆனால் இன்று....அழகு அழகு என சொல்லி உங்கள் மாராப்பை உங்களுக்கே தெரியாமல் உருவிவிட்டானே!

இன்னமும் உணரவில்லையா நீங்கள்...முன்பு எதை மறைத்திருந்தீர்கள், இன்று எதை இழந்திருக்கிறீர்கள் என்று?  

மாராப்பில்லாத எந்த ஆடையும் அணியாத நாம் இன்று சேலை தவிர எதிலும் மாராப்பு போடுவதில்லை.    

சேலைக்கு வேறு வழியில்லை. ஆனால் அதற்கு வேறுவிதமாக ஜன்னல், ஸ்லீவ்லெஸ் என திறப்புகளை கொடுத்து அதையும் கவர்ச்சி ஆடைக்குச் சற்றும் குறைவில்லாமல் ஆக்கிவிட்டான் சினிமா கூத்தாடி.  

இன்னும் சேலையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. முறையாக அணியாவிட்டால் அதைவிட ஒரு அபாசமான ஆடை இல்லை...  

சரி விஷயத்துக்கு வருவோம்.  

எங்கு போனது இந்த மாராப்பு, இதற்கு ஏன் இப்போது தேவை இல்லாமல் போனது?  

ச்சே..இத்தனை காலமும் முட்டாள் தனமாய், இப்படி ஒரு ஆடைய அணிந்து அவயத்தை மறைத்து கான்ஃபிடண்டை தவறவிட்டோமெ(?) என அங்கலாய்த்து துறந்துவிட்டீர்களோ?..  

நீங்கள் எண்ணிக்கொள்ளலாம், நானாகத்தானெ என் மேலாடையை துறந்தேன் என்று?  

இல்லை..உங்களுக்கு ஒப்பீட்டளவில் காட்டப்பட்டது.  

உங்களது முந்தைய ஆடை, ஏதோ கேவலம் போலவும், அதை துறந்தமேனியுடைய பெண்,சினிமா நடிகை முகத்தில் காட்டும் நடிப்பை வெளிப்படுத்தி நடைபயில,.அதை கண்டு விழிவிரிந்த நிமிடம், உங்களது ஆடை காற்றில் பறந்திருக்கிறது. இல்லயா?.  

ஆனால் இதை யாரும் உணர்வதில்லை.

அப்படி ஆடை அணிந்து அவர்களை போல நடைபயின்றால் கான்ஃபிடண்ட்??  

உங்களையும் தொற்றிக்கொள்கிறதா?..  

ஹ்ம்ம் இப்படிப்பட்ட கான்ஃபிடண்ட் என்ன தெரியுமா?...  

வெளிப்படையாக சொல்வதானால் அப்பட்டமான இனக்கவர்ச்சியில் தொக்கிக்கொண்டு நிற்கும் அசிங்கம்.  

அழகு சாதனத்தை அள்ளி அப்பிக்கொண்டு, கவர்ச்சியாக உடையணிந்து ,ஊசிக்காலணியில் ஒய்யார நடைபோட்டால்,
ஊர்ல உள்ளவன் கண்ணு பூர உங்கமேலதான்.

 எதுனால அந்த வாய்பிளக்கும் பார்வை உங்கள் மீது?...என்றாவது சிந்தித்ததுண்டா?..

அவன் அந்த அழகிய?? ஆடையை பார்க்கிறானா? அதில் உள்ள வேலைப்பாட்டை பார்க்கிறானா?  

ம்ம்ஹும்... அது வெளிப்படுத்தியிருக்கும், இவன் பார்க்கத்துடிக்கும் உங்களின் அவயங்களைத் தானே பார்க்கிறான்.

அது உங்களுக்கு தெரியவில்லையா?  

இது வெறும் உடல் கவர்ச்சி, இனக்கவர்ச்சி என்று.

இதில் தான் உங்களது கான்ஃபிடண்ட்டுக்கு விதை தூவி விவசாயம் பார்க்கிறீர்கள்.  

ஆம் இதில் உங்களுக்கு மகசூலும் கிடைக்கலாம்.

எங்கும் உங்களது அங்கங்களுக்கு மதிப்பில்லாமல் இல்லைதானே.

அதனால் முதியவன் முதல் பெரிய அதிகாரி வரை, அத்துனை பேரும் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பான்.

உங்களிடம் நேரம் ஒதுக்கி பேச முயல்வான்.  

இது உடலை முறையாக மறைத்து தன்மானம் பேணும் ஒரு பெண்ணுக்கு கிடைக்காமல் போகலாம்.  

அவருக்கு அந்த இடத்தில் கிடைக்காத முக்கியத்துவம் உங்களுக்கு கிடைத்துவிட்டதாக உச்சி குளிர்ந்துவிடாதீர்கள்.  

இது உங்களுக்கான முக்கியத்துவம் எனக்கருதிவிடாதீர்கள்..

இன்றைய சினிமா வெற்றிக்கு ஒரு குத்துப்பாட்டு எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறதோ, அந்த ரீதியில் நீங்களும் முக்கியத்துவம் பெறுகிறீர்கள்.  

சிலர் சொல்கிறார்கள். சம அறிவுள்ள இருபெண்கள் இருந்தால், ஒருவர் இயல்பான முகத்துடனும், முழுமையான ஆடையுடனும், மற்றவர் முக உதட்டுப் பூச்சுடன் குட்டை பாவாடை, குறுஞ்சட்டை அணிந்துவந்தால், இருவரில் யாருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்?  

என்னதான் சம அறிவிருந்தாலும், இந்த அழகு(?) என்பது கேட்பாஸ் மாதிரி தங்களுக்கு பயன்படுகிறதாம்....   இப்படிப்பட்ட முக்கியத்துவத்தை, எங்கும் உறுதியாக பெற்றுத் தருவதால் தாங்கள் கான்ஃபிடண்ட்டுடன் இருக்கமுடிகிறதாம்..  

அதெல்லாம் சரி, உங்களுடன் மூனாமவராய் அதே சமஅறிவுள்ள ஒருவர், சினிமாவில் கூத்தாடும் கவர்ச்சி நடிகைபோல் ஆடை அணிந்துவந்தால் உங்களை காட்டிலும், அதே அதீத முக்கியத்துவம் பெற்றுவிடுவார்.  

அப்போ உங்கள் கான்ஃபிடண்டின் நிலை என்னவாக இருக்கும்?.  

காற்றுப்போன பலூன் தானா??  

மனசாட்சியோடு ஒரு நிமிடம் சிந்தித்தால்...ஹ்ம்ம்..இதுக்கு ஏன் இவ்ளோதூரம் போகனும்,

இயலபாகவே சிந்தித்தால், ஆண் பெண் இருவரில் அதிகம் மறைக்கவேண்டிய அவயங்களை கொண்டவர்கள் பெண்கள் என்பது அரைபைத்தியத்திற்கு கூட விளங்கும்.  

ஆனால் நிதர்சனத்தில் நடப்பதோ வேறு.!  

ஆண் முழுவதும் மறைத்த ஆடையை அணிகிறான். பெண் எங்கடா திறக்கலாம் என பார்க்கிறாள் (திறப்போர் மட்டும்). அல்லது எங்குதிறந்த ஆடைகளை வடிவமைத்து அவர்களின் அழகை கூ(கா)ட்டி, கான்ஃபிடண்ட் வளர்க்கலாம் என உங்களின் நலம்(உடல்) விரும்பும்?? நல்லவன் யோசிக்கிறான்.
ஒரு பெண்ணுக்கு தன்னை கவனிக்கும் ஆணின் பார்வை எங்கே இருக்கிறது என்பது, அவள் அவனை பார்க்காவிட்டாலும் குறிப்பால் உணரும் திறன் உண்டு.

ஒவ்வொரு பெண்ணும் அறிவாள், தன்னுடன் பேசும் ஆண்,தான் பார்க்கும் போது எங்கு பார்க்கிறான், தான் பார்க்காத போது எங்கு பார்க்கிறான் என்று.

இப்படித் தெரிந்தும் தன்னைத் திறந்து, இன்னும் உங்களது அசைவுகளில் வெளிப்படும் வண்ணம் மறைத்தும் மறைக்காமலும் என, அவயங்களை வெளிப்படுத்தி வெற்றிபெற(?) முனைகிறீர்களே எனதருமைத் தாய்குலமே!!!

இப்படி அடுத்தவன் பல்லிழிக்க வேண்டும் என்ற காரணத்திற்க்காய்.

முகத்திற்கு அரிதாரமிடுவதும், உடலுக்கு ஒவ்வாத அரைகுறை ஆடை அணிவதும், உயரக்காலணிகள் அணிந்து ஒய்யார நடைகட்டுவதும் நீங்களே!

பார்க்க அனுமதிக்கும் உடலை, அடுத்தகட்ட நடவடிக்கை மூலம் அதே மேலதிகாரி/பொருக்கி சீண்டினால் அதனால் பாதிக்கப்படுவதும் நீங்களே!.

தவறு செய்தவன் அவனாக இருந்தாலும் தவறை தூண்டியது நீங்களென்பதை, பட்டும் உணரமாட்டீர்கள்.

அழகும் அறிவும், உங்களது தோலில் ஒட்டிக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு, எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற ரீதியில் கவர்ச்சி ஆடைகளிலும்,

முகப்பூச்சுக் கலவைகளிலும் இப்படி மைய்யல் கொண்டு மயங்கிக் கிடப்பது அறிவார்ந்த செயலென்று ஆக்கிவிட்டீர்கள் போலும்.


இந்த போதையிலேயே உங்களை வைத்திருப்பதன் மூலமே மேலத்தேய பெருமுதலாளிகளின் வளர்ச்சி இருக்கிறது. இன்னும் அந்த போதையால் தான், அவன் உங்களை குறித்து என்னவிதமாக விளம்பரப்படுத்தினாலும், அவை உங்களின் சிந்தனை எல்லையை சீண்டுவதில்லை.

ஒருவன் பாடிஸ்ப்ரே பயன்படுத்தி வெளியே வந்தால், அவ்ளோதான் பெண்களெல்லாம் அப்படியே அவன் பின்னாடி ஓடி வந்திடுவார்களாம்.

குடும்பபெண் பக்கத்துவீட்டுக்காரனின் பாடிஸ்ப்ரேக்கு மயங்கிவிடுகிறாளாம்.

பாடிஸ்ப்ரே அடித்திருக்கும் கிழவன், அவனுடன் பொது இடத்தில் உறவுக்கு தயாராகிவிடுகிறாள் பெண்.
இதுமாதிரியான விளம்பரங்கள் கண்டிப்பாக வாய்பிளக்கும் ஆண்களை கவர்வதற்கு பயன்படுகிறதென்றாலும், அங்கு போகப்பொருள் பெண்தானே. ஆம், ஒரு பெண்ணை கவர வேண்டுமா?

இந்த ஸ்ப்ரே பயன்படுத்து,அவள் அவ்ளோதான்.. என்கிற ரீதியில்தான் விளம்பரம் செய்கிறான். இதில் கேவலப்படுத்தப்படுவது யார்? ச்சீ..இத்தனை கீழ்தரமா உங்களை படம்பிடித்து காட்டுகிறானே! என்றாவது உணர்ந்ததுண்டா? என்ன நாம் அவ்வளவு கேவலமாக போய்விட்டோமா?

நம்மையல்லவா இப்படி காட்டுகிறான் என எத்தனை பேர் கோவப்பட்டதுண்டு.குறைந்தபட்சம் சிந்தித்ததுண்டு..??

உங்களை உங்கள் வீட்டு அறைக்கே வந்து ஒருவன் கேவலப்படுத்தினாலும் உங்களால் உணரமுடியாது.

உண்மையை சொல்லப்போனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆண் உங்களை போகப்பொருளாகத்தான் பயன்படுத்த முயற்சிக்கிறான். அதை நடத்தியும் காட்டுகிறான்.

இந்த காலத்தில் என்னவோ கட்டுடைத்துவிட்டதாக காலரை தூக்கிக்கொண்டு பேசுகிறீர்களே!. அறிந்துகொள்ளுங்கள் உண்மையிலேயே முந்தைய காலங்களைவிட இப்போதுதான் இப்படிப்பட்டவர்களின் முழுமையான போகப்பொருளாகி இருக்கிறீர்கள்.

ஏத்திவிட்ட அழகு போதையில் அவன் போடும் தாளத்துக்கு அச்சுபிசகாமல் ஆட்டம் போடுகிறீர்கள்...

வசீகரிக்கும் உடையும், வாகான நடையும்,உங்களின் வெற்றியல்ல. வாய்பிளக்கும் ஆண்களிடம் மண்டியிடும் தோல்வி.

இதோ..அதன் நீட்சியாக, இந்த விளம்பரத்தின் வெற்றி சொல்லிக்காட்டுகிறது நீங்கள் இன்னும் வக்கிர ஆண்களின் போகப்பொருள்தான் என்று.

இது பானைச் சோற்றுப்பதம். எத்தனை எத்தனையோ முனை மழுங்கிய காரணங்களை முன்வைத்து போராட்டம் நடத்துகிறீர்களே!

இவைகளை எதிர்த்து போராட... ம்ம்ஹும், ஒரு கண்டனம் தெரிவிக்க ம்ம்ஹும்...எங்கும் கண்டதில்லை.


இன்று முகப்புத்தகத்திலும், இன்னும் பற்பல சமூக வலைதளங்களிலும், வலைப்பூக்களிலும் ஆளுமை செலுத்தும் நீங்கள் இதுபோன்ற கேவலங்களை என்றாவது கண்டித்ததுண்டா?.

இன்று இது போன்ற ஊடகத்திறனால் ஆட்சிகளே மாறும் காட்சிகளை காணமுடிகிறதே!...

இன்று உங்கள் கைகளில் இருக்கும் திறம்கொண்டு, தருணத்தில் உங்களது பாதையை சீர்செய்துகொள்ளுங்கள்.

இது நீடித்தால் நாளை உங்களை மேலைநாடுபோல ஒட்டுத்துணியில்லாமல் அலையவிட்டு பார்க்க முயற்சிகள் நடக்கும்...

அன்றும் நீங்கள் எதோஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு அவ்வாறே போகலாம்.

ஆனால் அந்த எல்லையை கடந்தபின் எப்போதும் உங்களது ஆடையை மீட்டுக் கொள்ளவேமாட்டீர்கள் என்பது திண்ணம்.

உடலைக்காட்டி உங்களை முக்கியத்துவப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் தாழ்ந்து போய்விடவில்லை.


முறையாக உடலை மறைத்து கண்ணியமாக நடைபோட்டு, வாய்பிளக்கும் ஆண்களின் முகத்தில் சேற்றை நிறப்புங்கள்.

இத்தகைய கேவலமான விளம்பரச் சித்தரிப்புகளுக்கு செருப்படி கொடுங்கள், ஆபாச ஆடைகளையும், கவர்ச்சி வேஷங்களையும் புறக்கணித்து வெற்றிபெறுங்கள்.

ஆண்கள் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக நிற்போம். அன்று இந்த வெற்றி ஆண்களின் உங்கள்மீதான பார்வையை மாற்றிப்போடும்.

உங்களின் மீதான ஆபாசப்பார்வை கண்ணியமான பார்வையாக மாறும். ஒருவர் உங்களை கண்ணியமாக பார்ப்பது, உங்களுக்கு கான்ஃபிடண்ட் தராதா?. .

கண்ணியம் கொடுக்கும் கான்ஃபிடண்ட்டும், அதைக்கடந்த தடையில்லாத ஊக்கமும்,எந்த அழகும் கவர்ச்சியும் தராது, வேறெதிலும் கிடைக்காது.

அப்படிப்பட்ட கன்ஃபிடண்ட்டை சுவைத்துப்பாருங்கள்.

பின் ஒருகாலமும் கைவிடமாட்டீர்கள்.

அதுவே எல்லாக் காலத்திலும்,எல்லா வயதிலும் துணையாய் நிலைத்திருக்கும் கான்ஃபிடண்ட்.

அதை கைகொள்ளுங்கள்.. வெற்றி பெறுங்கள்.. தலை நிமிர்ந்து நில்லுங்கள்... -

அன்புடன் ரஜின் பதிவர்: RAZIN ABDUL RAHMAN

தொட‌ர்ந்து ப‌டிக்க‌  பெண்களை விளம்பரப் பொருளாக ஏன் மாற்றுகிறீர்கள்?

மேலும் படிக்க... Read more...

இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா? கொடுமைப்படுத்துகிறதா? ஹிஜாப் (பர்தா)

>> Thursday, September 20, 2012

நீ ரதியாய் இருப்பதனால் நாலடியில் உடை உடுத்தி நடு வீதியிலே நடப்பதிலே இல்லையடி பெண்ணுரிமை !

அறியாமையின் காரணமாகவோ வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரியிறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகிவிட்டது.
தாங்கள் சார்ந்துள்ள மார்க்கங்களில், பின்பற்றக்கூடிய கொள்கைகளில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை?

மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை?

பெண்களுக்குரிய மரியாதை, கண்ணியம், கௌரவம் எவை?

அவை எவ்வாறு போற்றப்படுகின்றன என்பதைச் சிந்தித்து ஆராய்ந்து குறை நிறைகளைக் கண்டு நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக முஸ்லிம் பெண்களைப் பார்த்து விமர்சன அம்புகளை ஏவி விடுகிறார்கள்.

மீடியாக்களின் பொறுப்பற்ற தன்மையும் கருத்துக் குருடர்களின் நியாயமற்ற போக்கும் முஸ்லிம் பெண்கள் தவறாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

பொருத்தமான சில கட்டுப்பாடுகளுடன் முஸ்லிம் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள் என்பது உண்மை! அதற்காக அவர்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பது அபத்தம்.

இஸ்லாத்தில் சில சட்டங்கள் ஆண் பெண் இருபாலாரையும் கட்டுப்படுத்துகிறது.

இன்னும் சில சட்டங்கள் ஆண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.

வேறுசில சட்டங்களோ பெண்களின் உரிமைகளை உறுதிசெய்து ஆண்களை கட்டுப்படுத்துகிறது.

இஸ்லாத்திற்கும் மாற்றுமதக் கொள்கைகளுக்கு இடையிலுள்ள அடிப்படை வேறுபாடுகள் இவைதான்.

இந்த உலகின் முதன்மை மதம் என்று சொல்லப்படக் கூடிய யூத, கிறிஸ்தவ மதத்தின் வேதநூலான பைபிள் பெண்ணை இப்படித்தான் சித்தரிக்கிறது.

பெண்: •

ஆன்மா இல்லாதவள், • பிறப்பால் இழிவானவள், • ஆண்களை வஞ்சிக்கும் குணமுடையவள், • விவாகரத்து உரிமையற்றவள், • மறுமணத்திற்கு தகுதியற்றவள், • வாரிசு சொத்து தடுக்கப்பட்டவள், • வேதம் படிக்க அருகதையற்றவள், • மாதத்தீட்டால், பிரசவத்தீட்டால் அசிங்கமானவள், • ஆணின் அதிகாரங்களுக்குள் அடங்கப்பட்டவள்.
----------------
போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு,

இஸ்லாமியச் சட்டபுத்தகமான திருக்குர்ஆனையும், ரஸூல்(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன் பார்த்தார்கள் என்றால் 1428 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.

இஸ்லாத்தினைக் குறை கூற முற்படுமுன் தங்களது வழிபாட்டிற்குரிய மதங்கள் என்ன போதிக்கின்றன என்பதை இவர்கள் ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டு இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகள் யாவை? என்று கணக்கெடுத்துப் பார்த்தாரேயானால் தாங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து விடுவர்.

பிறப்பதில் உள்ள உரிமை! பெண்குழந்தை என்றால் சிசுவிலேயே அழித்துவிடுவதையோ அல்லது பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதையோ இஸ்லாம் மிக வன்மையாக எதிர்க்கிறது.

பெண்குழந்தை பிறந்தால் உண்மையான முஸ்லிம் அதனை ரஹ்மத் (அல்லாஹ்வின் அருட்கொடை) என்று சந்தோஷப்படுவர்.

பெண்ணுக்கு வயது வந்தவுடன் பொருத்தமான மணமகனைத் தேடித் திருமணம் செய்யும்போது பெண்களுக்குரிய மஹரைக் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள் என்பது இறைக்கட்டளையாகும் (காண்க அல்குர்ஆன் 4:4)

பெண்ணுரிமை பேசுபவர்களும் இஸ்லாமிய ஆர்வலர்களும் இஸ்லாத்தின் முழு பரிமாணத்தையும் விளங்காத முஸ்லிம்களும் உண்மையான பெண்ணுரிமை இஸ்லாத்தில் ஏற்கனவே தெளிவாக்கப் பட்டிருப்பதை உணர்ந்து தெளிந்திட வேண்டும்.

வல்ல ரஹ்மான் அதற்கு அருள் புரிவானாக! - ஆக்கம்: சகோதரி. ஜஸீலா

இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனமுள்ளது என்று முனகுவோர் ஏனோ கிறித்துவப் பெண்பாதிரிகளைக் கண்டு கொள்வதில்லை.

இஸ்லாம் ஏற்படுத்தித் தந்திருக்கும் அதே கண்ணியமிக்க உடையினைப் பிற மதப் பெண்கள் அணிந்திருந்தாலும் அவர்களது பார்வை இஸ்லாமிய உடைகளின் மீது மட்டும் திரும்புவது, இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

தடித்த கருப்புத் துணியால் உடலைப்போர்த்தச் சொல்லி பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகிறது இஸ்லாம் என்பவர்கள்,

சினிமா நடிகையரும் பிரபலமான பெண்களும் மோசடி, விபச்சாரம் போன்ற குற்றச்சாடுகளில் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் வரும்போது பர்தா அணிந்து முழுதும் மூடிக்கொண்டு வருவதை வேண்டுமென்றே விமர்சிப்பதில்லை.

சினிமா போஸ்டர்களில் நடிகைகளின் படங்கள் ஆபாசமாகக் காட்டப்பட்டிருந்தால் தார்பூசி அளிப்பதில் மட்டுமா பெண்மையின் கண்ணியம் காக்கப்படுகிறது?

இதுபோல், ஒருசமூகம் கண்ணியத்திற்காக பின்பற்றும் உடையைத் தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டிக்க முன்வர வேண்டும் இப்படியாக, வெவ்வேறு காரணங்களுக்காக பர்தா அணியும் பெண்கள் அதில் கண்ணியமும் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பாதுகாப்பும் கிடைப்பதாக உணரும்போது, பர்தாவை எதிர்ப்பவர்களுக்கு எதிர்மறையாகத் தெரிவது ஏன்?

ஐரோப்பிய நாடுகளில் பர்தாவுக்கு எதிரான கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதனைச் சொல்பவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவக் கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள்!

இவர்கள் பர்தாவின் முன்னோடி கிறிஸ்தவமதம் என்பதை அறியாமல் விமர்சிக்கிறார்கள்.

இயேசுவின் அன்னை மரியம் )அலை..அவர்களை சித்திரமாகக் காட்டும் போதும் (முஸ்லிம்கள் அவ்வாறு காட்டுவதில்லை) நாம் நன்கறிந்த அன்னை தெரஸா போன்ற கிறிஸ்தவ நானிகள் (NUN) பர்தா அணிந்திருப்பதையும் கண்டிருக்கிறோம்.

கடந்த 1960 ஆம் ஆண்டு வரையில் தேவாலயங்களிலுள்ள பெண்கள் தலையை முக்காடிட்டு மூட வேண்டுமென்பது கட்டாயமாக இருந்தது.

பெண்களை பர்தா அணியச் சொல்லும் இஸ்லாம் அதில் அவர்களுக்கு கண்ணியம் இருக்கிறது என்கிறது.

அந்நிய ஆடவர் முன்பு மட்டுமே பர்தா அணிந்து மறைக்கச் சொல்கிறது.

பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்பது குர்ஆனில் மட்டும் சொல்லப் படவில்லை;

பைபிளிலும் சொல்லப் பட்டிருக்கிறது.

I கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது,

தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. I

கொரிந்தியர் 11:6

ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப் படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள்.

I கொரிந்தியர் 11:7

புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

 I கொரிந்தியர் 11:10 ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

 I கொரிந்தியர் 11:13 ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள்.

இஸ்லாத்தில் பெண்கள் முக்காடிட்டு பர்தா அணிய வேண்டுமென்பது எல்லா சூழலிலும் கட்டாயமில்லை!

இஸ்லாம் சொல்லும் பர்தா பெண்கள் கண்ணியப்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவேயன்றி, பைபில் சொல்வதுபோல் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதற்காக அல்ல என்பதை அறிந்து கொண்டால், இஸ்லாமியப் பெண்களின் பர்தா, அடக்கு முறைச் சின்னமல்ல என்பது தெளிவாகும்.

புர்க்கா.. குறைந்துவிட்ட ஆடையால் கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு; மறைக்க வேண்டியவையை மறந்துவிட்டப் பரிதாபம்!

அரைகுறை ஆடையில் எல்லாமே விலகும்; முன்னேறிவிட்டோமென்று முரசுக் கொட்டும் உலகம்! போர்திக்கொண்டுப் போகும் எம் சகோதிரியைக் கண்டு பொறுக்கவில்லையோ பொருக்கி உனக்கு!

ஒழுங்கான ஆடையில் உலா வரும் ஒரேச் சமுதாயம்; படையுடன் வந்து தடைப்போட்டாலும் நடைப்போடமாட்டோம் வீதியிலே; மரணம் வந்தாலும் மானம் காப்போம் தரணியிலே!

வரமாட்டோம் ஒருநாளும் அரைகுறைக்கு

– காலமெல்லாம் கட்டுப்படுவோம் இறைமறைக்கு!! -யாசர் அரஃபாத்

நாங்கள் அணிந்தால் மட்டும்...?

உடையவர் காணும் உடல் உறுப்பை; அந்நியர் காண்பது சரியா; அரித்தெடுக்கும் பார்வைக்காகத் திரையிடச் சொல்வதுப் பிழையா!

விழிக் காணும் சருமம் விரல் தொடத் தூண்டாதா; உணர்ச்சிக்கு உரம் இட்டப் பின்னேப் படித்தாண்டத் தோன்றாதா! பார்வை மட்டும்தானே; அழகைப் பார்க்கட்டும்; என விழிகளுக்கு விருந்து வைப்பது முறையா; பசிக்கும் பார்வைக்கு அணைப்போடச் சொல்லித் திரைப்போடச் சொல்வது சிறையா! மரத்துப்போன மனதினால் மரித்துப்போன வெட்கம்; கறுத்துப் போன உள்ளத்தை மீட்டெடுப்பதில் என்ன தயக்கம்! மற்றவர் அணிந்தால் வாய் மணக்க உரைக்கும் ஒழுக்கமுறை என்று; நாங்கள் அணிந்தால் மட்டும் வாய் குரைக்கும் அடக்கு முறையென்று! கவிதை: யாசர் அரஃபாத்


பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா?


சுட்டிகளை சொடுக்கி படித்து சிந்திப்போமா?


1 இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! -சகுந்தலா நரசிம்ஹன்


2. புர்கா போட்டுண்டா என்ன? - செல்வி விதூஷ்


3. ; போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு சிந்தி . எது பெண்ணுரிமை?


6. பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம் 


7; இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?


8.ஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்!-ஜெஸிலா

ஆண் பெண் சமத்துவம்
பலதார மணம்
தலாக்
ஜீவனாம்சம்
ஹிஜாப் (பர்தா)
பாகப் பிரிவினை
சாட்சிகள்
அடிமைப் பெண்கள்

ஆகியவை குறித்து அறியாமையின் காரணமாகவோ, வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரி இறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது.

சில வகுப்புவாத அமைப்புகள் நடத்தும் பத்திரிகைகள் மட்டுமல்ல தேசிய நாளேடுகள் கூட இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாகவே விமர்சித்து வருகின்றன.

மேற்கண்ட விஷயங்களில் அவர்கள் சுமத்தும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு
இந்நூல் 'இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்புடுத்துகிறதா? ' \ பதில் தருகிறது.
Download this book in pdf. http://www.onlinepj.com/PDF/download.php?file=Islam-Pengal-Urimai.pdf

..

மேலும் படிக்க... Read more...

22. இதுதான் இந்தியா நம்ம நாட்டிலே என்னெவெல்லாம் நடக்குது. ! ! ??

>> Thursday, May 24, 2012


நம்ம நாட்டிலே என்னெவெல்லாம் நடக்குது. !! ?? வியக்க!! வியர்க்க !!! படங்கள் காணொளிகள் தொடர் ....



கரும்பு தொட்டில்


BUDGET


படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.



Katteri



வரதட்சினை கொடுமையினால் அன்றாடம் தீ க்கு இறையாகும் பெண்க‌ள்.
bride burning



அன்றாட‌ம் இந்தியாவில் கொலை, க‌ற்ப‌ழிப்பு ம‌ற்றும் வ‌ன்கொடுமைக‌ளுக்குள்ளாகும் தாழ்த்த‌ப்ப‌ட்டோர்.
treatments of dalits (untouchables) in india








இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க‌ இது பல பல பல பல‌ விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! - நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். அலசல் ரிப்போர்ட் மற்றும் ….. காணதவறாதீர்கள் !!!.

சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 8. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 9 . இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 10. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 11. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 12. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 13.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 14.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 15. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 16. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 17. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 18.. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 19. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 20. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 21. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்.


மேலும் படிக்க... Read more...

21 இதுதான் இந்தியா. ஜெயலலிதாவின் நடனம். தமிழனின் அவல நிலை. மற்றும் …..

>> Wednesday, May 23, 2012

அறிஞர் அண்ணா. FUNNY INDIA. இது தான் தமிழக காவல்துறை. தமிழனின் அவல நிலை. ஜெயலலிதாவின் நடனம். படங்கள். காணொளிகள்.

படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.



இது தான் தமிழக காவல்துறை.



malarum ninaivukal
ஜெயலலிதாவின் கேபெரே நடனம்



தமிழனின் அவல நிலை


சினிமா கேள்விக்கு பதில் தெரிந்த தமிழ் நாட்டுத் தமிழனுக்கு தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் எத்தனை என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் போனது ஏன்? இப்போதே இந்த நிலை என்றால் , ஹிந்தி மட்டுமே இரண்டாம் பாடமாக கற்கும் புதிய தலைமுறை தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என சற்றே சிந்திக்க வேண்டும். இன்னும் பத்து ஆண்டுகளில் இப்படிப் பட்ட தமிழர்கள் தான் அதிகம் தமிழ் நாட்டில் இருப்பார்கள். இந்த நிலை நீடித்தால் தமிழும் இருக்காது தமிழனும் இருக்க மாட்டன் நம் தமிழகத்தில் . பாருங்கள். பகிருங்கள்


மதுபான பூஜை


ஆயுத பூசை பற்றி அறிஞர் அண்ணா



FUNNY INDIA



படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.


INDIAN STREETS



INTERNET LOVE CHAT






இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க‌ இது பல பல பல பல‌ விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! - நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். அலசல் ரிப்போர்ட் மற்றும் ….. காணதவறாதீர்கள் !!!.

சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 8. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 9 . இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 10. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 11. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 12. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 13.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 14.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 15. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 16. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 17. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 18.. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 19. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 20. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்.


சொடுக்கி >>> PART 21. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 22. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்

மேலும் படிக்க... Read more...

20. இதுதான் இந்தியா. ஒவ்வொன்றும் ஒரு விதம். படங்கள் காணொளிகள்.

>> Tuesday, May 22, 2012

இதெல்லாம் நம்ம நாட்டிலே தான். பாருங்கள். இந்தியாவில் அரசியல் அமைதி நிலவ இப்படியான திருமணம் தேவை !!!

படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.

Holy Marijuana
கடவுளை தரிசிக்க போதை தான் சிறந்த படியாம்.


Indians saints used to take marijuana with different styles and believe that it is best way to worship Lord shiva, the video is shooted near Nigohi village in Kanpur Dehat where Rishi Durvasha use to live and worship Lord Shiva...


airplane-puja


சாதி தேவையா - கருத்துக் கணிப்பு

சாதி என்பது தமிழ் சமுதாயதிற்கு தேவைதானா என்ற கேள்வியை சென்னையில் வாழும் இந்த தம்பதியிடம் முன்வைத்தோம் . அவர்களின் துணிச்சலான பதிலை நீங்களே கேளுங்கள் ...


இஸ்லாத்தில் சாதி இல்லை

இஸ்லாத்தில் சாதி பாகுபாடு இல்லை என மாற்றுமத சகொதரரின் வாக்குமூலம்.



Mudhalvan Interview Remix - Semmaa Comedy !


வங்கியில் வாடிக்கையாளர்களை காத்து நிற்க, கணினியில் விளயாடிக்கொண்டிருக்கும் ...


பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா?

பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா ஒரு பொது மக்கள் ரிப்போர்ட்
நீதி செத்தது,தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா?



'மைல்கல்' சாமி.



school-rickshaw


பரீட்சையில் 'பிட்' அடிப்பது.



இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க‌ இது பல பல பல பல‌ விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! - நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். அலசல் ரிப்போர்ட் மற்றும் ….. காணதவறாதீர்கள் !!!.

சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 8. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 9 . இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 10. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 11. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 12. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 13.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 14.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 15. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 16. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 17. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 18.. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 19. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 20. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 21. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்.

மேலும் படிக்க... Read more...

19. இதுதான் இந்தியா. இது யார் தவறு.? இன்றைய இந்தியாவின் நிலை. படங்கள். காணொளிகள்

>> Monday, May 21, 2012

Real faces of our india. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை. படங்கள். காணொளிகள்.



படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.



இதுதான் இன்றைய இந்தியா.
Real faces of our india - YouTube.flv

இது யார் தவறு.?உழைக்காமல் பிச்சை எடுப்பவர் தவறா.?
இல்லை. சொந்த கால், அரை ஏக்கர் விளை நிலங்களில்
நன்றாக உழைத்து கொண்டு இருந்தவர்களை பிச்சை எடுக்க தள்ளிய அதிகாரவர்கத்தின் தவறா.?


பசு தெய்வம்.
மாட்டிறைச்சி ஏற்றுமதி இந்தியா முதலிடம் பிடிக்கும்.


உலகளவில், வரும் 2013ம் ஆண்டு, மாட்டிறைச்சி ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், நியாயமான விலையில், தரமான மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

அவற்றின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியா, தரமான மாட்டிறைச்சியை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது.

இதனால், அடுத்த ஆண்டில், இந்தியா, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

NEWS SOURCE: http://www.dinamalar.com/business/news_details.asp?News_id=20220&cat=7


Jayalalitha's security cavalcade holds up traffic



Kundalini by Nithyananda


Shilpa-and-Baba


புனித கங்கையில் பிணங்களை தின்னும் நாய்கள்


பெரிய தள்ளுபடி விற்பனை



கனவு காண்போம்



இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க‌. இது பல பல பல பல‌ விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! - நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். அலசல் ரிப்போர்ட் மற்றும் ….. காணதவறாதீர்கள் !!!.

சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 8. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 9 . இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 10. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 11. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 12. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 13.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 14.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 15. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 16. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 17. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 18.. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 19. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 20. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்.



மேலும் படிக்க... Read more...

PART 18 இதுதான் இந்தியா வியப்பு நகைச்சுவை சாதனை பட தொகுப்பு. மலர் 1

>> Thursday, May 17, 2012

இந்தியாவிலே வியப்பு! நகைச்சுவை!! சாதனை!!! பட தொகுப்பு மலர் 1.
கண்டு மகிழுங்கள் ,

அவசியம் படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்
















தொடரும் .... மீண்டும் வாருங்கள்
-----oooo----



இதுதான் இந்தியா!!!. இதெல்லாம் பாருங்க‌. இது பல பல பல பல‌ விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். ** அன்றாட வியப்போ வியப்பு!! !!! - நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். அலசல் ரிப்போர்ட் மற்றும் ….. காணதவறாதீர்கள் !!!.

சொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 8. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 9 . இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 10. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 11. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 12. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 13.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 14.இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 15. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 16. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 17. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும். சொடுக்கி >>> PART 18.. .இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 19. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்.



மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP