**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சவூதி அரேபியாவில் 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்

>> Friday, March 29, 2013

பல்லாயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் வேலைக்கு அந்நாட்டில் கொண்டுவரப்பட்ட நிதாகத் என்ற சட்டத்தின் மூலம் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, 25 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பதால், அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக நிதாகத் சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்திருக்கிறது.

சவூதி அரேபியாவில் உள்ள சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளமானவற்றில் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர்.

எண்ணெய் வளநாடான சவுதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட மொத்தம் 90 லட்சம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமாகும்.

எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் அண்டை நாடுகளில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களைப் பார்த்து சவூதியில் உள்ள வேலையில்லா இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சவூதி அரேபிய குடிமகன்கள் ஏராளமானோர் வேலையின்றி இருக்கின்றனர். சவூதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறையின் ஆய்வில் நாட்டில் கடந்த ஆண்டில் 588,000 பேர் வேலையின்றி இருந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் 15 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களில் 39 சதவீதம் பேர் வேலையின்றி உள்ளனர். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவது தான் தற்போது அரசின் முதல் வேலையாக இருக்கிறது.

அச்சட்டத்தின்படி, சவுதி அரேபியாவில் 10 பேருக்கும் அதிகமானவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் குறைந்த பட்சம் 10% பணியிடங்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

2011ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் அம்சங்களை செயல்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடு நேற்று முன்னாள் புதன்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது.

சுமார் இரண்டரை லட்சம் நிறுவனங்களில் சவுதி அரேபியர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு வழங்கப்படாததை கண்டறிந்த சவுதி அரேபிய அரசு, அந்த நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் பணி உரிமங்களை புதுப்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளது.

அவ்வாறு பணி உரிமங்கள் முடிவடைந்த அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர் என்று சவுதி அரசு எச்சரித்துள்ளது. இதற்கான அதிரடி ஆய்வுகள் சவுதியின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியுள்ளன.

சவுதி அரசின் இந்த நடவடிக்கையால் மொத்தம் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும், அவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான இந்தியர்களும் அடக்கம் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஊதியத்தை நம்பியே வாழ்கின்றன.

அரேபிய அரசின் அதிரடி நடவடிக்கையால் தமிழ் தொழிலாளர்கள் வேலை இழந்து திரும்பினால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் அவலம் ஏற்படும். வறட்சி காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பலர் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில், லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கிக்கொண்டு சவுதி வேலைக்குச் சென்றோரும் திரும்பினால் அதனால் ஏற்படும் தாக்கம் மிகக் கடுமையானதாக இருக்கும்.

சவுதி அரேபிய மக்களின் வேலைவாய்ப்புக்காக அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை குறை கூற முடியாது.

மேலும் படிக்க... Read more...

அப்பாவி முஸ்லீம்களை சுட்டுக்கொன்ற போலீஸ்.

>> Tuesday, March 26, 2013

முஸ்லிம்களுக்கு எதிராக போலீஸ் ஒன்றுதிரண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், முஸ்லீம்களின் சொத்துக்களை கொள்ளையடித்தது.



துலே கலவரம்:நான்கு முஸ்லிம்கள் பின்னால் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர்! – போஸ்ட் மார்ட்டம் அறிக்கை!

புதுடெல்லி:கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் போலீஸ் சுட்டுக் கொலைச் செய்த 6 முஸ்லிம்களில் 4 பேர் பின்னால் இருந்து சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளனர் என்று போஸ்ட் மார்ட்டம் அறிக்கை கூறுகிறது.

மக்கள் தாக்கியபொழுது தற்காப்பிற்காக சுட்டதாக போலீஸ் கூறுவது வடிகட்டிய பொய் என்பது துலேயில் பி.ஹெச் அரசு மருத்துவக்கல்லூரியில் நடத்திய போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. கலைந்து சென்று கொண்டிருந்த மக்களை போலீஸ் பின்னால் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது என்பதற்கான ஆதாரம் இது என்று தடவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இம்ரான் கமர் அலி, ஷேக் அஸீம் ஷேக் நஸீர், ஸைத் பட்டேல் ரயீஸ் பட்டேல் ஆகிய 3 பேருக்கு தோளின் பின்பகுதியில் தோட்டா துளைத்து நெஞ்சு வழியாக வெளியேறியுள்ளது. ஆஸிஃப் இக்பால் நயீம் அன்ஸாரி என்ற இளைஞருக்கு முதுகெலும்பில் தோட்டா துளைத்துள்ளது. கழுத்தில் தோட்டா பாய்ந்து யூனுஸ் ஷா என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். தொடையில் தோட்டா பாய்ந்த பொழுது முஹம்மது ரிஸ்வான் ஷா என்ற இளைஞரும் மரணித்துவிட்டார்.

மக்கள் கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டும் என்ற சூழல் உருவானால் ஆபத்து ஏற்படாத வகையில் துப்பாக்கிச்சூட்டை நடத்தவேண்டும் என்று மஹராஷ்ட்ரா போலீஸ் கையேடு(மானுவல்) கூறுகிறது. அதுமட்டுமல்ல, மக்கள் கூட்டம் கலைந்து செல்ல துவங்கினால் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்றும் மானுவல் கூறுகிறது. இவையெல்லாம் மீறப்பட்டுள்ளன என்பதை போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறுகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக பதிலளிக்க டி.ஜி.பி சஞ்சீவ் தயாள் மறுத்துவிட்டார். அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு காசு செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு போலீஸ் தலையீட்டால் கலவரமாக மாறியது. ஆறு அப்பாவி முஸ்லிம்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர். கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக போலீஸ் ஒன்றுதிரண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், சொத்துக்களை கொள்ளையடித்தது. இதுத்தொடர்பாக பல்வேறு வீடியோ காட்சிகள் வெளியாகின. போலீஸில் உள்ள வகுப்புவாதிகள் தாம் கலவரத்திற்கு காரணம் என்று அரசு கருத்து தெரிவித்தது.





மேலும் படிக்க... Read more...

போலீசும் அரசும் பாசிசசக்திகளும் சேர்ந்து முஸ்லிம்கள் மீது அநியாயம்.

>> Monday, March 25, 2013

சிறையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு சித்திரவதை: ஹிந்துத்துவா தீவிரவாதி புரோகித்திற்கு ராணுவத்தின் சம்பளம்! தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம்.

சிறையில் முஸ்லிம் இளைஞர்களுக்கு சித்திரவதை: ஹிந்துத்துவா தீவிரவாதி புரோகித்திற்கு ராணுவத்தின் சம்பளம்!

குண்டுவெடிப்புகளின் பெயரால் ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு வாழ்க்கை சித்திரவதையாக மாறும் வேளையில் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு ராணுவம் தொடர்ந்து சம்பளமும், இதர படிகளையும் வழங்கி வருகிறது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்கள் துயரத்தில் வாடுகின்றன. பல்வேறு குண்டுவெடிப்புகளில் முக்கிய சூத்திரதாரி என்று என்.ஐ.ஏ கண்டுபிடித்த ஹிந்துத்துவா தீவிரவாதி புரோகித்திற்கு அரசு கஜானாவில் இருந்து சம்பளம் செல்லும் அவலம் இந்நாட்டில் தொடருகிறது.

புனேயில் டிஃபன்ஸ் அக்கவுண்ட்ஸ் கண்ட்ரோலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளித்துள்ளார். புரோகித்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.

புரோகித்தை கஸ்டடியில் பெற்று விசாரணைச் செய்யவேண்டும் என்று என்.ஐ.ஏ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு பரிசீலனையில் உள்ளது. ஆனால் இதுக்குறித்து எதுவும் தெரியாது என்று கண்ட்ரோலர் பதில் அளித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு புரோகித் கைதானதைத் தொடர்ந்து ஆயுதப்படை தீர்ப்பாயத்தின்(எ.எஃப்.டி) விசாரணை கமிஷன் இவரை ராணுவத்தில் இருந்து வெளியேற்றவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், தனது முன்னிலையில் முக்கிய சாட்சிகளை விசாரிக்கவில்லை என்றும், அவர்களிடம் விசாரணை நடத்த தனக்கு வாய்ப்பளிக்கவேண்டும் எனவும் புரோகித் கோரியதைத் தொடர்ந்து புதிய விசாரணை தேவை என்று எ.எஃப்.டி ராணுவத்திடம் அறிவுறுத்தியது. இவ்விசாரணை முடிவுற்று விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு நடந்த பிறகும் புரோகித்தை ராணுவத்தில் இருந்து வெளியேற்றவில்லை. இதன் காரணமாக புரோகித் சம்பளம் மற்றும் இதர படிகளை பெற தகுதியுள்ளவர் என்று உயர் ராணுவ அதிகாரியொருவர் கூறுகிறார்.

அதேவேளையில், மூத்த ஹிந்துத்துவா தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டி டிஃபன்ஸ் ரிசர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசனில்(டி.ஆர்.டி.ஓ) ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோவாக பணியாற்றிய அஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் நீக்கிவிட்டனர் என்று சிவில் உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது ஜாமீனில் விடுதலையான மிர்ஸா மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க கூட தேசிய புலனாய்வு ஏஜன்சியால் இயலவில்லை. இவ்வழக்கில் இதர இரண்டு நபர்கள் மீது ஆதாரங்களை சமர்ப்பிக்க கூட முடியவில்லை.

முஸ்லிம்கள் கைது செய்யப்பட்ட தீவிரவாத வழக்குகளில் விரைவில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றங்கள்!

25 Mar 2013 புதுடெல்லி:முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத வழக்குகளை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். நிரபராதிகளை தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கும் புலனாய்வு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.

முஸ்லிம்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட வழக்குகளை பரிசோதிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், குற்றவாளிகளாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஷிண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஷிண்டே கூறியது: நிரபராதிகளை காவலில் வைப்பது கடுமையான குற்றம். இத்தகைய சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இழப்பீடு வழங்க ஒவ்வொரு வழக்கையும் தனியாகபரிசோதிக்கவேண்டும். புலனாய்வு ஏஜன்சிகளின் திறமை குறைவும், ஆதாரங்கள் இல்லாமையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாக காரணமாகிறது. நிரபராதிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிடலாம்.

குற்றவாளிகளான அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 211-வது பிரிவின் படி நடவடிக்கை எடுக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள்கவனத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நிரபராதிகள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்தால் மாநில அரசுகள் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு ஷிண்டே கூறினார்.

முன்னர் அமைச்சர் ரஹ்மான் கான் எழுதிய கடிதத்தில், 10 மற்றும் 14 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக கண்டறிந்து நீதிமன்றங்கள் விடுவித்த சம்பவங்களை கான் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆகையால் வழக்குகளை ஒருவருடத்திற்குள் தீர்ப்பளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், சிறப்பு நீதிமன்றங்கள் எப்பொழுது அமலுக்கு வரும் என்பதை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தவில்லை. நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் காரியங்களில் தலையிடமுடியாது என்று ஊடகங்களிடம் கூறிய ரஹ்மான் கான், பாதுகாப்பின் பெயரால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்றார்.

தீவிரவாதம் தொடர்பான ஒவ்வொரு வழக்கையும் தனியாக ஆராயவேண்டும் என்று அவர் மேலும் கூறினார். ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். டெல்லி ஸ்பெஷல் போலீஸ் பதிவுச் செய்த 16 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கைதுச் செய்யப்பட்ட அப்பாவிகள் 10 வருடங்களுக்கும் அதிகமாக அநியாயமாக சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.அண்மையில் பெங்களூர் தீவிரவாத வழக்கில் கைதுச் செய்யப்பட்ட டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி இஜாஸ் செய்யத் மிர்ஸா மற்றும் டெக்கான் ஹெரால்டில் பத்திரிகையாளரான முதீவுற்றஹ்மான் சித்தீகி ஆகியோரை நீதிமன்றம் விடுவித்திருந்தது. மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவிகள் கைதுச் செய்யப்பட்டு பல மாதங்கள் சித்திரவதை அனுபவித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.இவ்வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் குற்றவாளிகள் என்பது பின்னர் நிரூபணமானது.

மேற்கண்ட சம்பவங்களைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் மீது அநியாயமாக தொடுக்கப்படும் தீவிரவாத வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. கடந்த மாதம் 2-ஆம் தேதி இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ரஹ்மான் கானை சந்தித்தனர்.

முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாதாம்! – மத்திய அரசு!

தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம் என்று முஸ்லிம் லீக் எம்.பி இ.டி.முஹம்மது பஷீர் தெரிவித்துள்ளார்.

நேற்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பசுதேவ் பட்டாச்சார்யா இதுக்குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், “மத்திய அரசுக்கு இக்காரியம் தெரியாது. உதாரணம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவேண்டும்” என்று தெரிவித்தார். இதுபோல ஏராளமானபுகார்கள் கிடைத்துள்ளன என்று பட்டாச்சார்யா பதிலளித்தார். இவ்விவகாரத்தில் தலையிட முஸ்லிம் லீக் எம்.பியான இ.டி.முஹம்மது பஷீர் சபாநாயகருக்கு குறிப்பை வழங்கினார்.

இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி இதுக்குறித்து கூறியது: “அப்பாவிகளான ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தெரியாது என்று மத்திய அரசு கூறுவது தேசத்திற்கே அவமானம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் குறித்து ஏராளமான சம்பவங்கள் தெரியும். 20 வயது முதல் 30 வயது வரையிலான ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய தீவிரமான பிரச்சனையில்பதில் அளித்த அமைச்சரின் அணுகுமுறை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எனது தொகுதியில் கூட ஸக்கரியா என்ற 28 வயது முஸ்லிம் இளைஞரை கர்நாடகா போலீஸ் பிடித்துச் சென்று சிறையில் அடைத்து 4 ஆண்டுகள் ஆகிறது. விசாரணை கைதிகளாக இந்திய சிறைகளில் வாடும் இத்தகைய நபர்களுக்கு 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் குற்றப்பத்திரிகை கூட அளிக்கப்படவில்லை. நிரபராதிகளின் விவகாரத்தில் அரசு என்னச் செய்யப் போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு சவால் விடுக்கும் பொடா, தடா போன்ற சட்டங்களில் உள்ள கடுமையான பிரிவுகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் உள்ளன என்று இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி கூறினார்.

இதனைத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், “ஆறுமாதத்திற்குள் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்காவிட்டால் ஜாமீன் வழங்க தகுதி உண்டு” என்று தெரிவித்தார்.

முஸ்லிம் இளைஞர்களை சிக்கவைக்க அரசு சதிச் செய்கிறது

பெங்களூர்:கல்வியாளர்களும், உயர் துறைகளில் பணியாற்றுவோருமான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்க அரசும், உளவுத்துறையும் சூழ்ச்சிச் செய்வதாக பெங்களூரில் நேற்று முன் தினம் விடுதலையான டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையாளர் முதீவுர் ரஹ்மான் சித்தீகி தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி கர்நாடகா பா.ஜ.க அரசு முதீவுர் ரஹ்மான் சித்தீகி உள்பட 12 பேரை கைதுச் செய்து சிறையில் அடைத்தது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சேல்ஸ்மான் முஹம்மது யூசுஃப் நல்பந்தியும் சித்தீக்குடன்விடுதலையாகியுள்ளார்.

நேற்று குடும்பத்தினருடன் பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதீவுர்ரஹ்மான் சித்தீகி கூறியது: என்னுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என்று நான் கருதுகிறேன்.

போலீஸ் கஸ்டடியில் கடுமையான மனோரீதியான சித்திரவதைகளை சந்திக்க நேர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி துப்பாக்கிகளுடன் எங்களை பிடித்ததாக போலீஸ் கூறியது. ஆனால், இரவில் அறைக்குள் நுழைந்து போலீஸ் என்னையும் இதர நான்குபேரையும் கடத்திச் சென்றது. சிறையில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தின. ஆனால், அவர்களின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தது.

பத்திரிகை துறையில் தொடருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதீவுர் ரஹ்மான் சித்தீகி கூறுகையில், “போலீசும், அரசும், பாசிச சக்திகளும் சேர்ந்து எங்களை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். தற்போது குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன். மனித உரிமை கமிஷனின் உதவியுடன் சட்டரீதியான போராட்டம் தொடரும். இவ்வாறு சித்தீகி கூறினார்.

லஷ்கர்-இ-தய்யிபா, ஹுஜி போன்ற போராளிக் குழுக்களின் தலைமையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம்சாட்டி போலீஸ் கைதுச் செய்த 2 பேர் ஆறு மாத சிறைக்குப் பிறகு ஆதாரங்கள் எதுவுமில்லை என்று என்.ஐ.ஏ கண்டறிந்த பிறகு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதான டி.ஆர்.டி.ஒ விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவுக்கு எதிராகவும் ஆதாரங்கள் எதனையும் கண்டுபிடிக்க என்.ஐ.ஏவால் இயலவில்லை.

THANKS TO : http://www.thoothuonline.com

மேலும் படிக்க... Read more...

5. அபுல்கலாம் ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர்.

>> Sunday, March 24, 2013

நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றுக்காக திரு.அபுல் கலாம் ஆசாதுக்கு இந்த தேசம் என்றைக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறது. இவர் ஆற்றிய செயல்பாடுகள் நம்முடைய விடுதலைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

காந்தி, நேரு உடன் ஆசாத்.


மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞருமான‌ ஆசாத் தான் இந்திய உயர்கல்வி நிலையமான ஐ.ஐ.டி. நிறுவியவர் என்பது பலரும் அறியாத அல்லது பொதுவில் சொல்லப்படாத செய்தி.

ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும்.

இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள‌ மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.

ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும், 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.

கடைசி வரை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது என மிகவும் பாடுபட்டவர் திரு.ஆசாத் அவர்கள். திரு.ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக திரு.ஆசாத் பலமுறை வலியுறுத்திப்பேசி பிறகு ஜின்னாவின் மனதையும் மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டபோதிலும், திரு.நேரு அவசரப்பட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக ஜின்னா மீண்டும் மனம் மாற நேரிட்டது.

தோற்றம் 11.11. 1888 - மறைவு 22.2.1958. 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (அபுல் கலாம் ஆசாத்) பிறந்தார். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். பரவலாக இவர் மௌலானா ஆசாத் (விடுதலை) என அறியப்படுகிறார்.

10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர்.

இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.

()()()()()()()()()
தேசபக்தி திருத்தொண்டர்!

இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் மௌலானா அபுல் கலாம் ஆசாத் . அவரது சண்டமாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு "அபுல்கலாம் " என்று அழைத்தனர். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது.

வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். 'கர்மயோகின்' என்ற வார ஏட்டைத் தொடங்கினார். "துணிந்த வாலிப உள்ளங்களே காரியமாற்றக் கனிந்த உள்ளத்தோடு வருக!" என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்தது. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை.

"ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும்தானே நிறுவி இருக்கிறோம்? இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா?" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார்.

"அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா?"

"தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக் கொள்வோம்"- இது அபுல்கலாம் அளித்த பதில். அவர் ஒருவழியாகத் தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து, இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்று தடைவிதித்தன.

1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.

புரட்சி உலகக் கூடங்களில் புடம்போட்ட வீரராக, அனுபவக் களஞ்சியமாக 1912ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர். "அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்?" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான்.

அதற்காக அவர் 'அல்ஹிலால்' என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. அந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது. மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும்.

இந்த ஏட்டில் ஆசாத் என்ற புனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது. ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் 'அல்பலாக்' என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார். ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார்.

1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது.

1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 'வெள்ளையனே வெளியேறு' என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின் தலைமையில்தான் நிறைவேற்றப்பட்டது. பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார்.

1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார். அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது. 1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது.

ஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது? அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே? இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே.

ஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது. கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார்."அவரைக் கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார். சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)

மேலும் படிக்க... Read more...

தெருவில் நிற்கும் மாவீரன் திப்புவின் வாரிசுகள்.

>> Friday, March 22, 2013

இதை துரோகத்தின் வெற்றி என்பீரா? அல்லது தியாகத்தின் தோல்வி என்பீரா? ஒரு மாவீரனின் வாரிசுகள் அனைத்தும் பிடுங்கப்பட்டு வறுமையின் கோரபிடியில் அநாதைகளாக‌ விடப்பட்டிருக்கிறார்கள்.

>>>> மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி .<<<<


1757 க்குப் பிறகு இந்தியாவின் மேற்குப் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி தென்னிந்தியாவின் பகுதியை நோக்கி ஆங்கிலேயர்கள் முன்னேறிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு எதிராகச் சிங்கமென சீறிச் சிலிர்த்தெழுந்தார் மாவீரன் திப்புசுல்தான். இரண்டு சுற்றுப் போர்களில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து அவர்களைக் கதிகலங்க வைத்தது மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பெருங் கூட்டணியொன்றை அமைத்து ஆங்கிலேயரின் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யக் கனவுக்கு மரண அடி கொடுக்க முயன்றார்.

அதற்காக இந்தியாவின் வடக்குப் பகுதிகளிலும் தெற்குப் பகுதிகளிலும் ஆட்சி புரிந்துகொண்டிருந்த மன்னர்களையும் பாளையக்காரர்களையும் புரட்சியாளர்களையும் ஒருங்கிணைக்கப் பெரும் முயற்சி எடுத்தார். பிரெஞ்சுக்காரர்களோடும் கூட்டணி அமைத்தார். அனால் பெரும்பாலான மன்னர்களும் சில பாளையக்காரர்களும் திப்புவுடன் இருந்த சிலரும் துரோகமிழைத்துக் காட்டிக் கொடுத்ததால் வரலாறு எதிர்த்திசையில் சுழன்றது. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையிலும் அஞ்சாது நின்று எதிரியை நேருக்கு நேராய்ப் போர்க்களத்தில் சந்தித்து வீரமரணம் அடைந்தார்.

அவரது மரணத்துக்குப் பின் 1799அம் ஆண்டில் அவரது 12 ஆண் மக்களும் இதர குடும்ப உறுப்பினர்களும் திப்புவின் தளபதிகளில் சிலரும் கைது செய்யப்பட்டு வேலுர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதே சமயம் திப்புவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்த வீரர்களும் பக்கீர்களும் குடிமக்களும் மைசூரில் இருந்து ஆரவாரமில்லாமல் புலம் பெயர்ந்து வேலுரைச் சுற்றி முகாமிட்டனர்.

சிறையில் அடைபட்டிருந்த திப்புவின் மைந்தர்களோடு இரகசியத் தொடர்பை எற்படுத்திக்கொண்டு, ஆலோசனை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரெனப் புரட்சி செய்வது என்று முடிவு செய்தனர். அனால் அந்தப் புரட்சித் திட்டம் ஒற்றர்கள் மூலமாகக் கசிந்து ஆங்கிலேயருக்குத் தெரியவந்ததால் வேலுர் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.

இறுதியாக திப்புவின் வாரிசுகளும் அவரது பற்றாளர்களும் 1806அம் அண்டில் அந்தக் குறிப்பிட்ட நாளில் அதிரடியாகப் புரட்சியில் இறங்கினார்கள். சில ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்றொழித்து கோட்டையின்மேல் திப்புசுல்தானின் கொடியையும் பறக்கவிட்டார்கள். ஆனாலும் ஆங்கிலேயர்கள் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கி ரவைகளாலும் பீரங்கிக் குண்டுகளாலும் புரட்சியை நசுக்கினார்கள். அதில் திப்புவின் வாரிசுகளில் சிலரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள். ஆந்தப் புரட்சியைச் சிப்பாய் கலகம் என்று அங்கிலேயர்கள் திரித்து பழித்து கூறினாலும் இதுதான் இந்திய விடுதலைப் போரின் முதல் தீப்பொறி உண்டான நாள் என்று வரலாற்று ஆசிரியர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.

அந்தப் புரட்சிக்குப் பிறகு திப்புவின் குடும்பத்தினர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் மைசூருக்கும் மற்றொரு பிரிவினர் வங்கத்திற்கும் அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து திப்புவின் வாரிசுகளுக்கு மானியம் வழங்குவோம் என்று அங்கிலேய அரசு அறிவித்தது. ஆனால் அது நம்ம ஊர் அரசியல்வாதிகளின் வாக்குறுதியைப்போலவே காற்றில் கரைந்து போனது.

அதன் காரணமாக வறுமையின் கோரபிடியில் சிக்கிய அந்த மாவீரனின் வாரிசுகள் அனைவராலும் கைவிடப்பட்டுத் தெருவில் நிற்கிறார்கள் கூலித் தொழிலாளர்களாக!

திப்புவின் பேரக் குழந்தைகளில் ஒருவரான அன்வர்ஷாவின் வாரிசுகளான சன்வர், அன்வர், திலாவர், ஹஸன் ஆகிய நால்வரும் அவர்களின் குடும்பத்தினரும் இன்று கல்கத்தாவிலுள்ள இளவரசர் அன்வர்ஷா தெரு இன்று திப்புவின் பேரக்குழந்தையின் பெயராலேயே அழைக்கப்படும் தெருவில் உள்ள ஒரு சிறிய குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். இதில் சன்வரும், அன்வரும் சைக்கிள் ரிக்சா இழுத்துப் பிழைக்கிறார்கள். திலாவரும் ஒரு சிறிய தேனீர்க்கடை நடத்தி வருகிறார், ஹஸன் ஸ்கூட்டர்கள் மற்றும் ஆட்டோரிக்சாக்களுக்கு சீட் கவர் தைத்து கொண்டும் பிழைத்துக் நடத்திப் கொண்டிருக்கிறார்கள்.

திப்புவின் காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் ஆங்கிலேயருக்கு ஆள் காட்டிகளாகவும் நாட்டை வெள்ளையரிடம் அடகுவைத்த கோழைகளாகவும் விடுதலைப் போரின் காலைவாரிய துரோகிகளாகவும் எனக்கும் விடுதலைப் போருக்கும் சம்பந்தமில்லை என்று வெள்ளையரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த கடைந்தெடுத்த சுயநலப் பேர்வழிகளாகவும் எராளமானோர் இருந்தார்கள். இன்று அவர்களின் வாரிசுகள் ராஜ மரியாதையோடு நடத்தப்படுகிறார்கள். கொடியேற்றும் விழாவிலிருந்து கொடியிறக்கும் விழாவரை அனைத்துக்கும் தலைமையேற்றுத் துவக்கி வைக்க முறையாக அழைக்கப்பட்டுக் கவுரவிக்கப்படுகிறார்கள். அவர்களில் சிலர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகவும்

அமைச்சர்களாகவும் மேயர்களாகவும் பெரும் சொத்துக்களைக் கொண்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்களாகவும் பவனி வருகிறார்கள். அவர்களுக்கு பல இலட்சக்கணக்கான ரூபாய்களை மானியமாக வழங்குகிறது அரசு. மேலும் இவர்களின் முன்னோர்களான நாட்டைக் காட்டிக்கொடுத்த தேசத் துரோகிகளை மாவீரர்களாகச் சித்தரித்தும் அவர்களைப் பாடப் புத்தகங்களில் ஏற்றியும் வரலாற்றையே புரட்டும் கொடுமையும் நடக்கிறது. அந்தத் துரோகிகளில் சிலர் பல்லிளித்துக் கொண்டிருக்கும் படங்களை நாடாளுமன்ற வளாகத்தில் திறந்து வைக்கும் கேலிக்கூத்துகளும் நடைபெறுகின்றன.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் ஆங்கிலேயரின் காலத்திலேயே அனைவராலும் கைவிடப்பட்ட திப்புவின் வாரிசுகள் மீது பரிதாபப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வசதி படைத்த முஸ்லிம்களில் சிலர் மரியாதை நிமித்தமாகவும் கடமை என்று உணர்ந்தும் தங்களுக்குச் சொந்தமான இன்றைய மதிப்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமான சொத்துக்களை வக்ஃபு செய்தனர். மேற்குவங்க வக்ஃபு வாரியத்தின் பராமரிப்பில் இருந்த அந்தச் சொத்துக்களில் பெரும்பகுதி இன்று மேற்குவங்க அரசாலும் சமூக விரோதிகளாலும் சில தனியார் நிறுவனங்களாலும் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது.

கல்கத்தா நகரின் இதயப் பகுதி என்று அழைக்கப்படும் இளவரசர் அன்வர்ஷா தெருவில் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் உள்ளது. இது திப்புவின் வாரிசுகளுக்கு அன்பளிப்பாகக் கிடைத்த சொத்து. அது முழுவதும் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சூதாட்டக் கிளப்புகளும் விபச்சார விடுதிகளும் நடக்கும் இடமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.

கல்கத்தாவில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள திப்புவின் வாரிசுகளுக்குச் சொந்தமான நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்தை ஷாவாலஸ் என்ற மதுபானம் தயாரிக்கும் நிறுவனமும் கல்கத்தா கோல்ஃப் கிளப்பும் ஆக்கிரமித்துள்ளன. இதற்காக மேற்குவங்க வக்ஃபு வாரிய அதிகாரிகளுக்கு பல லட்சம் இலஞ்சம் கொடுத்து சரிசெய்துள்ளனர்.

இது தவிர பல நுறு எக்கர் நிலங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கனவான்களும் மேற்குவங்க அரசும் ஆக்கிரமித்துள்ளன. அதை எதிர்த்து அன்வர்அலம்கான் என்ற சமூக சிந்தனையுள்ள வழக்கறிஞர் நீண்டகாலமாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார். மேற்குவங்க அரசின் ஒத்துழைப்பில்லாத காரணத்தால் வழக்குகளும் தீர்க்கப்படாமல் பலஅண்டுகளாக தொடர்கிறது.

இத்தனைக்குப் பிறகும் திப்புவின் வாரிசுகளுக்கு யார் மீதும் கோபமில்லை; தங்களை அரச பரம்பரையாக நடத்த வேண்டும் என்றோ, தங்களுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற, அமைச்சர் பதவிகள் தரப்படவேண்டும் என்றோ அவர்கள் கோரிக்கை எழுப்பிடவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் திருப்பித் தரப்பட வேண்டும் என்று கூட அவர்கள் கோரவில்லை. ஒரேயொரு கோரிக்கைதான்! ஒவ்வொரு சராசரி மனிதனும் விரும்புகிற, எதிர்பார்க்கிற ஒரேயொரு எதிர்பார்ப்புதான்! ஆம்! அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் குடும்பத்தோடு வாழ்வதற்கு குடியிருக்க வீடு வாழ்வாதாரத்திற்கு ஒரு சிறு தொழில்! அவ்வளவுதான் அவர்களின் எதிர்பார்ப்பு கோரிக்கை எல்லாம். ஆனால் அதற்குக் கூட வழியில்லை.

சர்வதேச அளவில் ஒரு கூட்டணியை அமைத்து வெள்ளையரின் அதிக்கத்தை அடியோடு அறுத்து வீசவேண்டும் என்று ஆவேசமாய்க் களத்தில் இறங்கிய மாவீரன் திப்புவின் திட்டத்திற்கு முதல் இசைந்து, அவருக்கு உதவுவதாக நடித்துப் பிறகு காலை வாரிய துரோகிகளின் வாரிசுகள் அரசின் செல்லப்பிள்ளைகளாக சைரன் வைத்த காரில் உலா வருகிறார்கள்.

ஒருபுறம் தேசத்தின் விடுதலைக்காகத் தன்னையும் தனது நாட்டையும் தனது குடும்பத்தையும் தனது ஆற்றல்கள் அனைத்தையும் களத்தில் இறக்கிப் போராடி மாண்ட ஒரு மாவீரனின் வாரிசுகள் அனைத்தும் பிடுங்கப்பட்டு அனாதையாக விடப்பட்டிருக்கிறார்கள் மறுபுறம் இதை துரோகத்தின் வெற்றி என்பீரா? அல்லது தியாகத்தின் தோல்வி என்பீரா?

நன்றி : CMN சலீம்

***********
லண்டனில் திப்பு சுல்தானின் வாரிசு இளவரசி நூர் இனயத்கான் சிலை திறப்பு

18ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மைசூர் பகுதியை மன்னர் திப்பு சுல்தான் ஆண்டு வந்தார். அவரின் நேரடி வாரிசான நூர் இனயத்கான் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரிட்டனுக்காக பிரான்சில் இருந்து உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்தார். உளவு இளவரசி என்று அழைக்கப்பட்ட 30 வயதான நூர் இனயத்கான் ஜெர்மனியின் நாசிப் படையினரால் அப்போது பிடிக்கப்பட்டார்.

பின்னர் 1944ஆம் ஆண்டு அவர் கொடுமைபடுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். உளவு இளவரசி நூரின் தியாகத்தை நினைவு படுத்தும் விதமாக லண்டனில் உள்ள கோர்டன் ஸ்குயர் கார்டன் பகுதியில் அவருக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டது. அவரின் தைரியத்தையும் தியாகத்தையும் புகழ்ந்து, பாராட்டி ராணி எலிசபெத்தின் மகள் இளவரசி அன்னே இந்த சிலையை திறந்து வைத்தார்.

பிரிட்டனில் திறக்கப்பட்ட முதல் முஸ்லிம் சிலை இதுவாகும். மேலும் ஆசியாவின் முதல் பெண் சிலையும் இதுவே என்றும் கூறப்படுகிறது. 60 வருடங்களுக்கு பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த கவுரவம் பத்துமாதம் கொடுமைபடுத்தப்பட்ட அவரின் தியாகத்திற்கு இணையானது அல்ல என்றும் கூறப்படுகிறது.

She was only 30. She was posthumously awarded the George Cross by Britain and the Croix du Guerre by France, the highest civilian honours of both countries.

In September 2006, Indian Finance Minister Pranab Mukherjee visited her family house in Suresnes in Paris and honoured her memory.

In France, Noor is known as the 'Resistance heroine'. In Paris a featy square has been named after Noor. There is a plaque outside her house in Paris and every year a military band plays outside it on Bastile Day to honour her memory.

மேலும் தகவல்கள்.

Princess Spy Noor Inayat Khan. http://www.youtube.com/embed/vA_abOR57xg?rel=0

Noor Inayat Khan -- A Life of Bravery http://www.youtube.com/embed/6Kx0yNu-aa8?rel=0

Noor Inayat Khan Biography. http://www.spartacus.schoolnet.co.uk/SOEnoor.htm

மேலும் படிக்க... Read more...

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…! - முனைவர் வசந்திதேவி.

>> Thursday, March 21, 2013

எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.

வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல.

‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப்படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.

இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன் விபரீத விளைவுகள் தாம்.

முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது.

பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளை விடக் கோயில்கள் தான் அதிகம்.

ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில் பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார்.

ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா.

தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார்.

டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.

முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.

இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.

சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.

நாம் நினைவில்கொள்ள வேண்டியது இன்னொன்று.

கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன. ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம்.

இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!

நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு. அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.

மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.

கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார்.

இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு.

இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.

நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞான ரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது. - முனைவர் வசந்திதேவி

***********


தொடர்புள்ள பதிவு. சொடுக்கி படிக்கவும்.

இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.-ஆ. சிவசுப்பிரமணியன்,

மேலும் படிக்க... Read more...

பழைய கணக்கடா பேராண்டி.!! மோசம் போகாமலிருக்க தெரிந்து கொள்ளப்பா !!!

>> Wednesday, March 20, 2013

வீட்டுமனை, நிலம் வாங்கும் பொழுது பத்திரங்களில் நமக்கு புரியாத வகையில் இருக்கும் அளவுகளை தெரிந்து மோசடிக்கு ஆளாகாமல் இருக்க இது உதவும்.

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.
நன்றி: http://www.viduthalai.in

மேலும் படிக்க... Read more...

முஸ்லிம்களின் தொழுகைக்காக கதவுதிறக்கும் தேவாலயங்கள் !!

Muslims pray in a Church, USA.


ஸ்காட்லாண்டு நாட்டின் அபர்டீன் நகரில் செயின்ட் ஜான் குருபரிபாலன தேவாலயம் இயங்கி வருகிறது. இதனை நிர்வகிப்பவர் தமிழகத்தில் வேலூரில் வளர்ந்த ஐசக் பூபாலன் என்ற பாதிரியார் ஆவார்.

இந்தத் தேவாலயம் அருகில் சையித் ஷா முஸ்தபா ஜமி மஸ்ஜித் மசூதி உள்ளது. அங்குள்ள முஸ்லிம் மக்கள் தினமும் 5 வேளையும் இந்த மசூதிக்கு வந்து தொழுவது வழக்கம். இடப் பற்றாக்குறை காரணமாக அவர்களில் பலரும் வீதியில் மண்டியிட்டு அமர்ந்து தொழுகை நடத்தியுள்ளனர். மிகக் குளிரான காலங்களிலும் அவ்வாறே செய்ய முடிந்தது.

இதனைக் கவனித்த பாதிரியார் பூபாலன் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தார். முதலில் தயங்கிய திருச்சபை பின்னர் மறுப்பேதும் சொல்லவில்லை.

பாதிரியார் முஸ்லிம் பெருமக்களை அழைத்து தங்களது தேவாலயத்தின் உள்ளே தொழுகையை நடத்திக் கொள்ளுமாறு கூறினார். தேவாலயத்தின் பிரார்த்தனைக் கூடத்தின் ஒரு பகுதியை முஸ்லிம் மதகுருவான அஹமத் மெகர்பி வசம் ஒப்படைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட அம்மக்களும் அங்கேயே தொடர்ந்து தொழுகை செய்ய ஆரம்பித்தனர். இதன்மூலம் முதன்முதலாக முஸ்லிம் மக்களுக்காக திறந்த தேவாலயம் என்ற பெருமையை இந்தத் தேவாலயம் பெற்றுள்ளது.

இந்த உதவியை செய்யாவிட்டால் நான் என்னுடைய மதத்திற்கு உண்மையுள்ளவனாக இருக்கமாட்டேன் என்று பாதிரியார் பூபாலன் கூறுகிறார்.

மேல் விபரங்கள் இங்கே : Reverend opens church doors for Muslims.

*****************
முஸ்லிம் மக்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தேவாலயங்களில் சிலவற்றின் காணொளிகள்.

Synagogue in US opens doors to Muslims

முஸ்லிம் மக்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட யூதர்களின் ஆலயம்.


Muslims Praying in Christian Church


A ceremony church became Mosque


Church Converted to a Mosque - Green Lane Mosque


சொடுக்குக >>> ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். இங்கே <<<< சொடுக்குக


மேலும் படிக்க... Read more...

இந்தியா இலங்கைக்கு செய்த ‘கட்டிப்புடி’ வைத்தியம்!

>> Monday, March 18, 2013

ஜெனீவாவில் நன்றி.. பாராட்டு.. வாழ்த்து.. வரவேற்பு.. என்று தெரிவித்து இலங்கையை அசத்தியிருக்கிறது இந்தியா!

தற்போது ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடுகள், பாகிஸ்தான், சீனா மட்டுமல்ல… மிகப்பெரிய பாராட்டு இந்தியாவிடம் இருந்து கிடைத்துள்ளது.

இலங்கைக்கு நன்றி, பாராட்டு, வாழ்த்து மற்றும் வரவேற்பு தெரிவித்து இந்தியா ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கை, இலங்கையை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையின் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இந்திய அரசு ஐ.நா.வில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், எந்த வலியுறுத்தலும் கிடையாது!

ஒரே ‘கட்டிப்புடி’ வைத்தியம்தான்!

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. இலங்கையின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கை சார்பிலான அறிக்கையை தாக்கல் செய்து பேசினார்.

அதையடுத்து, இலங்கையின் அந்த அறிக்கைக்கு சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து பேசினர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பொது மன்னிப்பு சபை பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

இந்தியா எதுவும் பேசவில்லை.

இலங்கையின் அறிக்கை தொடர்பான இந்தியாவின் கருத்துக்களை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில்தான், நன்றி.. பாராட்டு.. வாழ்த்து.. வரவேற்பு.. என்று தெரிவித்து இலங்கையை அசத்தியிருக்கிறது, இந்தியா!

இலங்கை அரசையே திகைக்க வைத்த இந்திய அறிக்கையை பார்க்க

இலங்கைக்கே தமது காதுகளை நம்ப முடியாமல் இருந்திருக்கும் இந்த அறிக்கையின் வாசகங்கள். அப்படி என்னதான் சொல்கிறது இந்திய அறிக்கை? அதோ, நீங்களே படித்துப் பாருங்கள்:

நன்றி: 2-வது சுற்று காலமுறை ஆய்வறிக்கை தாக்கல் செய்ததற்காக இலங்கைக்கு நன்றி.

பாராட்டு: யுத்தம் தொடர்பாக இலங்கை அரசே மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் (எல்எல்ஆர்சி) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை இலங்கை ஏற்றதை பாராட்டுகிறோம்.

சிறப்பு செயல்பாடு: அத்துடன் மறுவாழ்வு பணிகள், வடக்கு மாகாணத்தில் படைகளை குறைத்தல் போன்றவற்றையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

எதிர்பார்ப்பு: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து சுதந்திரமாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

வலியுறுத்தல்: தமிழர்கள் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகள் வேகமாக நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வரவேற்பு: வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற இலங்கையின் உறுதிமொழியை வரவேற்கிறோம்.

வாழ்த்து: மறுவாழ்வு பணிகள் தொடர்பான பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

இதுதான் இந்தியா தாக்கல் செய்துள்ள அறிக்கையின் ஹைலைட்டுகள்.

போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென எந்த கோரிக்கையும் அறிக்கையில் இடம்பெறவில்லை.

இலங்கை அரசுத் தரப்பில், “எமது மூத்த சகோதரன் இந்தியா எம்மை கைவிடாது” என்று கூறப்பட்டதன் அர்த்தம், இதுதான்!

இந்நிலையில், வரும் 20, 21-ம் தேதிகளில் அமெரிக்காவின் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்றும், அதை இந்தியா ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் இலங்கையை நிர்ப்பந்திக்கும், அல்லது இலங்கைக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் எதுவும் அந்த தீர்மானத்தில் இடம்பெற சான்ஸ் மிக குறைவு.

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதை விடுங்கள்… போகிற போக்கில், இலங்கையேகூட “அண்ணே.. நீங்க ஆதரிச்சா, நானும் ஆதரிக்கிறேன்” என்று ஆதரித்துவிட்டு ஹாயாக அண்ணனுடன் திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி: விறுவிறுப்பு டாட் காம்.

மேலும் படிக்க... Read more...

இலங்கை : முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்.

>> Sunday, March 17, 2013

தமிழர்களை அடக்கிவிட்டோம் முஸ்லிம்களையும் அடக்க வேண்டும். இந்த நாட்டை பௌத்த ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும்.

சிங்கள பேரினவாதம் இலங்கை முஸ்லிம்களைக் காவு கொண்டு வருகின்றது. இலங்கை தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளை இலங்கை அரசுகளே முன்னெடுத்த போது சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பெரும் போராக வெடித்து பெரும் மனித அவலங்களுக்குப் பின்னர் ஓய்ந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசும் பேரினவாதிகளும் படிப்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக இப்போது முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் நோக்குடன் பேரினவாதிகளும் இலங்கை அரசும் செயல்பட்டு வருவது ஆச்சரியமானதாகும்.

பர்மா பாணியில் முஸ்லிம் படுகொலைக்களமாக இலங்கையை மாற்ற இனவாதிகள் துடிக்கின்றனர். முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்கவும் அவர்களது அரசியல், ஆன்மீகத் தளங்களைத் தகர்க்கவும் திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். சட்டத்தின் கைகளை இலங்கை அரசு கட்டிப் போட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தடயங்களை அழிக்கும் நடவடிக்கையாக 450 வருடம் பழமை வாய்ந்த தர்கா ஒன்று சிங்களத் துறவிகளாலும் இனவெறி கொண்ட இளைஞர்களாலும் தகர்த்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. அப்போது காவல்துறை கையை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது.

இனவெறி வானொலி எப்.எம். அலைவரிசையினூடாக பகிரங்கமாக அழைப்பு விடுக்கப் பட்டு தம்புள்ளை எனும் பகுதியில் இருக்கும் மஸ்ஜித் சேதமாக்கப்பட்டது. மஸ்ஜிதை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் சிங்கள மக்கள் அணிதிரண்டு சென்று இதைச் செய்தபோதிலும், பௌத்த துறவிகள் அதிகாரத் தோரணையில் செயற்பட்ட போதும் இலங்கை பாதுகாப்புப் படைகள் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தனர். எவர் மீதும் சட்டத்தின் எந்த அதிகாரமும் பாயவில்லை.

குருநாகலை எனும் பகுதியில் இருக்கும் இரு சின்ன பள்ளிவாசலுக்கு எதிராக பௌத்த துறவிகள் கிளர்ச்சி செய்தனர். பள்ளியைச் சூழ இருந்து பௌத்த மதக் கிரிகையைச் செய்தனர்.

தெஹிவளை எனும் பகுதியில் இருக்கும் மஸ்ஜிதில் தொழுகை நடத்தக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

குர்நாகலில் குளியாப்பிடி எனும் பிரதேசத்தில் பௌத்தத் துறவிகளும் இனவாதிகளும் இணைந்து நடத்திய ஊர்வலத்தில் பன்றியின் படம் வரையப்பட்டு அதில் ‘அல்லாஹ்’ என எழுதப்பட்ட படம் எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு பொம்மை செய்து அதில் அல்லாஹ் என எழுதி கொடும் பாவி எரித்தனர். இருந்த போதும் இதில் ஈடுபட்ட எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அநுராதபுரத்தில் ஒரு பகுதியில் குடியிருக்கும் முஸ்லிம்கள் அந்தப் பகுதியை விட்டு வேறு இடம் செல்ல வேண்டும் என்றும் அங்கு அமைந்துள்ள பள்ளியை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சிங்கள இனவாதிகள் எச்சரிக்கை விட்டனர். அப்பகுதி மக்கள் போலிசில் முறையிட்டனர். அதற்கு பின்னரும் சென்ற ஹஜ்ஜுப் பெருநாள் இரவு நேரத்தில் அந்தப் பள்ளிவாசல் இனவாதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. பெருநாள் தினத்தில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சிக்குப் பின்னர் கூட சட்டத்தின் கண்கள் இறுக மூடிக்கொண்டே இருந்தது.

காலி, கேகாலை உள்ளிட்ட நான்கு பிரதேசங் களில் உள்ள மஸ்ஜிதுகள் மீது இரவு நேரத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டு ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டன. எனினும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

மாலை வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் மூன்று முஸ்லிம் மாணவிகளை ஒருவர் ‘ஹிஜாப் அணியக் கூடாது’ எனக் கூறி தடியால் அடித்து எச்சரித்துள்ளார். அதுகுறித்து போலீசில் புகார் செய்து சம்பவ இடத்திற்குச் சென்ற போது; அங்கு ஒருவர் நின்றுள்ளார். அவர் ஒரு மன நோயாளி எனக் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் எம்மை அடித்தவர் இவர் இல்லையென்று கூறியபோதிலும் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களை எச்சரிக்கும் இந்த நடவடிக்கை மனநோயாளியின் செயல்பாடு எனக்கூறி மூடி மறைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கொழும்பு, தர்காநகர் போன்ற பிரதேசங்களில் மாடு அறுக்கும் இடங்களுக்குச் சென்ற பௌத்த துறவிகளும் இனவாதிகளும் குழப்பம் விளைவித்துள்ளனர்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்து கொண்டே இருக்கின்றது. ‘முஸ்லிம் கடைகளில் பொருள்கள் வாங்க வேண்டாம்’ எனப் பிரச்சாரம் செய்து ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடராக நடைபெற்று வருகின்றது. சிங்கள மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்குச் சென்று முஸ்லிம் விரோத மனப்பான்மையை ஊட்டும் விதமாக பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. ‘முஸ்லிம் ஹோட்டல்களில் உண்ண வேண்டாம். அவர்கள் உணவில் மலட்டுத் தன்மை ஏற்படுத்தக் கூடிய மருந்துப் பொருள் போட்டுத் தருகின்றனர்’ என்ற பிரச்சாரத்தால் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களது ‘வட்டிலப்பத்தை’ சிங்கள சகோதரர்கள் விரும்பி உண்பார்கள். பெருநாள் என்றாலே வட்டிலப்பம் வேண்டும் என்று கேட்பார்கள். இந்த நட்புறவை சிதைக்கும் விதத்தில் உங்களுக்குத் தரும் வட்டிலப்பத்தில் முஸ்லிம்கள் எச்சில் துப்பித் தருகின்றனர் எனப் பிரச்சாரம் செய்து வெறுப்பை ஏற்றி வருகின்றனர்.

இலங்கை ஜம்இய்யத்ததுல் உலமா வழங்கும் ஹலால் சான்றிதழ் மூலம் இலங்கை உற்பத்திகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறைந்த தொகையையே பெறுகிறது. இருப்பினும் இதனால் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோடிக்கணக்கில் நிதி சேர்த்து அல்காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கி வருவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு வளர்க்கப் பட்டு வருகின்றது.

மஹர சிறைச்சாலைக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் 100 வருடங்களாக இருந்து வருகின்றது. அந்தப் பள்ளியை அகற்றக் கோருகின்ற அதே வேளை அந்தப் பள்ளியின் சுவரில் பன்றி உருவத்தை வரைந்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியுள்ளனர். அவர்கள் வெளியே இருக்கும் துண்டுப் பிரசுரங்களில் ‘அல்லாஹ் - பல்லா’ (சிங்களத்தில் நாய் என்பது இதன் அர்த்தமாகும்)

‘பொது பல சேனா’ என்ற ஒரு அமைப்பே இந்த தீவிரப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றது. அவ்வப்போது வேறு வேறு பெயர்களில் சில இனவாத செயல்களையும் செய்து வருகின்றனர். இவ்வாறு பகிரங்கமாக இனவாத செயல்பாடுகள் முன்னெடுக்கப் பட்டும் கூட இலங்கை அரசு இதனைக் கட்டுப் படுத்த எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்த பாயாவையும் சந்தித்துப் பேசிய பின்னரும் கூட எந்த தங்கு தடையுமின்றி ஜனாதிபதியின் சொந்த ஊரில்கூட முஸ்லிம் எதிர்ப்பு ஊர்வலத்தை அவர்கள் நடத்தி விட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத செயல்பாடுகள் அனைத்தும் இலங்கை அரசின் ஆசியுடனும் அனுசரணையுடனுமே முன்னெடுக்கப்படுகின்றன என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதை மறுக்கும் விதத்தில் எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.

தமிழர்களை அடக்கிவிட்டோம் முஸ்லிம்களையும் அடக்க வேண்டும். இந்த நாட்டை பௌத்த ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவ அடையாளங்களை இழந்து பௌத்த சிங்களக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இனவாதிகளின் எண்ணமாகும்.

இந்த பௌத்த மயமாக்கல்கள்; சிங்கள மேலாதிக்கத்திற்கு இன்று முஸ்லிம்கள் இரையானபோதும் அது அத்துடன் நிற்கப் போவதில்லை. தொடர்ந்து ஏனைய சமுதாயங் களையும் காவு கொள்ளவே முயற்சிக்கும். எனவே, இந்த இனவாதம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தமிழர்களின் வாழ்வுரிமையை நசுக்கிவிட்டு தற்போது முஸ்லிம்களைக் குறிவைத்து சிங்கள மேலாதிக்கம் காய் நகர்த்தி வருவதை சர்வதேச உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Thanks to: TMMK

மேலும் படிக்க... Read more...

ஆசைஆசை! பொல்லாத ஆசை! தூக்கம் விற்றுத்தானே ஒரு கட்டில் வாங்க ஆசை.

>> Saturday, March 16, 2013

தூண்டில் விற்றுத்தானே அட மீன்கள் வாங்க ஆசை. நாக்கை விற்று தேனை வாங்கி நீரை விற்று தாகம் வாங்கி பூவை விற்று வாசம் வாங்கி தாயை விற்று பாசம் வாங்கி பூட்டை விற்று சாவி வாங்கும் பொல்லாத ஆசை.

மேலும் படிக்க... Read more...

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்.

>> Friday, March 15, 2013

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே!

மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்? அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது.

அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் ‘ஹாட்ரிக்’ சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை ‘சூசகமாக’ தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!

"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளையவர் ராகுல் காந்திதான் பிரதமருக்குரிய அனைத்துத் தகுதிகளோடும் அதற்கான அங்க அடையாளங்களோடும் தென்படுவதால் அவரை முன்னிறுத்துகிறார்கள். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏழைகளின் தலையில் விலைவாசி உயர்வும் பிரதமர் பற்றாக் குறையைத் தவிர்க்க நேரு குடும்பத்தின் வாரிசுகளில் யாராவது ஒருவரும் தேர்ந்தெடுக்கப் படலாம். அது அக்கட்சியின் மரபுரீதியிலான ஜனநாயகம்!

எரிக்கும் பூ! இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும் பி.ஜே.பி.யால்தான் முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், ஏற்கெனவே பி.ஜே.பி.யின் ஆட்சியில் நடந்தேறிய ஊழல்களும் பயங்கரவாத சம்பவங்களும் அவர்களிடத்தில் அனுபவமாக நிறைய இருக்கிறது. அதை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர, பி.ஜே.பி.யின் கண்களுக்கு மோடி இன்னொரு ராமராக காட்சி தருகிறார்.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக்கலவரங்களை மிகத் தேர்ந்த முறையில் "கையாண்டு" வெற்றி பெற்ற மோடி போன்ற ஒரு முதலமைச்சரை ராஜ்நாத்சிங் பார்த்திருக்க முடியாதுதான். பவர்கட் இல்லாத மாநிலம், மது இல்லாத மாநிலம், என இந்தியாவில் குஜராத் ஒரு மாடல் மாநிலமாக ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டதால் நடந்து முடிந்த வகுப்புக் கலவரங்கள் வெற்றியின் மூலம் மறந்தே போனது அல்லது மறைக்கப்பட்டது.

மசூதி இடிக்கப்படுவதற்கு முன்புவரை அங்குள்ள இடத்தைச் சுத்தப்படுத்தி, சமதளமாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவே நீதிமன்றத்தின் முன்னால் கூறிக்கொண்டிருந்தார்கள். இடித்த பிறகும் ‘அதுவாக இடிந்துவிட்டது’ என்றும் "கரசேவையின் வெற்றி" என்றும் "பூகம்பம் ஏற்பட்டால் சில அதிர்வுகள் இருக்கத்தானே செய்யும்" என்றும் கூறிக்கொண்டார்கள்.

ஆயிரம் முகமூடிகளை அணியும் அபூர்வ சிந்தாமணிகளான சங்பரிவார் அமைப்பினருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற முகமூடி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், குஜராத் அல்ல இந்தியா! எத்தனை முறை கோட்சே அவதாரம் எடுத்து மகாத்மாவைக் கொன்றாலும் மதச்சார்பற்ற இந்திய மக்களின் நல்லிணக்கத்தை அவர்களால் வீழ்த்த முடியாது.

பிரித்தாளும் முறையை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவதில் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது. ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.

இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின் கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது. அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களைப் பயன்படுத்துகிறது. ஜனநாயக நிர்வாக அமைப்புகளுக்குள் ஊடுருவுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தேர்தலில் ஆதாயம் பெறுவதே சங்பரிவாரத்தின் சூழ்ச்சியாகும்.

பசு வதை தடைச் சட்டம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது. குஜராத்தில் இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு இந்துத்துவாவின் முக்கிய கொள்கையாகும். அதை மோடி அரசு உயர்த்திப் பிடித்துள்ளது.

முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சேர்க்கைக்கான அனுமதி கிடைப்பதில்லை. இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் நகர்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. வீட்டுக் கடன், வங்கிக் கடன், மாணவர்களுக்கான உதவித்தொகை இவற்றில் தலித், கிறிஸ்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அமைதியான முறையில் பிரித்தாளும் தந்திரங்கள் அங்கே நிறைவேற்றப்படுகின்றன.

இச்சாதனை இந்தியா முழுமைக்கும் தொடர நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு முன்னால் மோடி அணிந்திருந்த மதச்சார்பற்ற முகமூடி, அதன் பின்னால் தொடர்ந்த கலவரங்களின்போது கழன்று விழுந்தது. இஸ்லாமிய மக்களும் பெண்களும் குழந்தைகளும் கூட அடித்தும் உயிரோடு எரித்தும் கொல்லப் பட்டார்கள். வீடுகளும் கட்டடங்களும் எரித்து சாம்பலாக்கப் பட்டன.

கர்ப்பிணிப் பெண்ணைக் கொல்ல மனமில்லாமல் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவினை எடுத்து தன் காதில் அணிந்தபடி அசுரப் பெண்ணை போரில் அழித்ததாக தமிழக கிராமத்தின் வக்கிரகாளியம்மன் வழிபாட்டு புராணக்கதை கூறுகிறது.

ஆனால், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி.யின் பெண் அமைச்சர் மாயா முன்னிலையில் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பிலே எரித்துக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் 28 ஆண்டு கால சிறைத் தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இச்சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கி எடுத்தன.

பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புக் கலவரங்கள் நிறைந்த நகரமாக கொல்கத்தா விளங்கியது. ஆனால், கடந்த 34 ஆண்டுகால இடதுமுன்னணி ஆட்சியில் ஒரு வகுப்புக் கலவரச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது அந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். 5 முறை தொடர்ச்சியாகவும் 7 முறை ஆட்சியிலும் இடது முன்னணியே வெற்றிபெற்ற திரிபுராவில் எந்த கலவரச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு இது ஒரு சாதனையாகத் தெரிவதும் இல்லை.

தொழில் வளர்ச்சியில் குஜராத் சாதனை என்று புகழப்படுகிறது. ஆனால், அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வரும். 3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி 12.65% ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவிலோ 6.04% ஆக இருந்த தொழில் வளர்ச்சி 17.53% ஆக உயர்ந்துள்ளதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வங்கியின் வர்த்தக முதலீட்டில் குஜராத் முழுவதும் 4.7 % தான். ஆனால், ஆந்திராவில் 5.2 %, தமிழ்நாடு 6.2%. வங்கிக் கடன் வழங்கலில் குஜராத் 4.22 % ஆகவும், மகாராஷ்டிரா 26.6% ஆக கடன் வழங்கியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மா பயிரிட்டுள்ளது. ரிலையன்ஸ் மேங்கோஸ் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பருத்தி, எள், வெங்காயம், மாம்பழம் போன்ற பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள விவசாயிகள் இதைச் செய்யவில்லை. அக்ரோசெல், மெக்டொனால்ட், ஜெயின் போன்ற நிறுவனங்களே செய்கிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . விவசாயத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளார்கள். பட்டினியால் 166 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என குஜராத் முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

வறுமை, பட்டினி, ஊட்டச்சத்தின்மை, பெண்கள், குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் பீடித்துள்ளது. இவைதான் குஜராத்தின் மறைக்கப்பட்ட சாதனைகளாக விளங்குகிறது. கள்ளச்சாராய சாவுகள் அங்கே நிகழ்ந்தபோது மோடி அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. காந்தியின் கொள்கையை இம்மாநில அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது எனவும் மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே! மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்?

பாலபாரதி , MLA

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (14-03-2013)


THANKS: Satyamargam.com

மேலும் படிக்க... Read more...

இந்திபேசத் தெரியாவிட்டால் இந்தியர் இல்லையா?

>> Thursday, March 14, 2013

ஒரு மொழி தெரியாத காரணத்தால் நான் இந்தியன் இல்லை என்று ஆகி விடுமா என்ன? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா?

பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல என்று கூறியுள்ளார் திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி.

இதுதொடர்பாக அவர் ராஜ்யசபாவில் கூறுகையில், நான் இந்த அவையில் எனது மொழியில் பேச வேண்டுமென்றால் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டும். எனது மொழியில், எனது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது.

என்றாவது ஒரு நாள், இப்போது உள்ள இந்த நடைமுறைகள் இல்லாமல் போகும் நிலை வரும் என்று நம்புகிறேன். இங்கே பேசிய ஒரு உறுப்பினர் மொழிக்கான போராட்டங்கள் அரசியல் தந்திரம் என்றும், பிரபலமாகுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்றும் பேசினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி நான் பேசுகையில் இது எந்த மொழிக்கும் எதிரானது அல்ல என்பதையும் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற்சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும், தங்கள் அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உயிரை மாய்த்துக்கொண்டார்கள்.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது. ஒரு சாதாரண மாணவன். தனக்கு ஒரு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதல்வர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கப் போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது.

அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் அவமானப்படுத்தக்கூடாது. இது போன்ற போராட்டங்களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப்பட்ட தலைவர்களின் போராட்டங்களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது.

இங்கே பேசியவர்கள் இந்தி பெருபான்மையானவர்கள் பேசும் மொழி ஆனால் சிறுபான்மையினர் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்கள்.

எங்களுக்கு இந்நாட்டில், இவ்வுலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் எங்களுக்கு சம்மதமே ஆனால் இங்கே பேசியவர், இந்தி கற்காததால் நீங்கள் எதையோ இழந்து விட்டதாக உணரவில்லையா என்று கேட்டார்.

நான் இந்தி கற்கவில்லை. சிவா இந்தி கற்கவில்லை, இது போல பலர் இந்தி கற்கவில்லை. இதனால்தான் நான் இந்த விவகாரத்தில் நிதி அமைச்சரைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இந்தி கற்காமல் ஒருவர் இந்நாட்டின் நிதி அமைச்சராகி சிறப்பாக செயல்பட முடியும்போது நாங்கள் எதை இழந்து விட்டோம்.

பெருந்தலைவர் காமராஜரையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். காமராஜரும் இந்தி அறிந்தவர் அல்ல. இப்படி இருக்கையில் இந்தி கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்?

இந்தி பேசத் தெரியாவிட்டால் அவர் இந்தியர் இல்லையா?

உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு மொழிகள்தான் தெரியும். இதனால் நான் என்ன இழந்து விட்டேன்?

ஒரு மொழி தெரியாத காரணத்தால் நான் இந்தியன் இல்லை என்று ஆகி விடுமா என்ன? இங்கே இந்தி தெரியாமல் இருப்பவர்களும் இந்தியர்கள் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா?

பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல. இந்தியா என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. அதன் கலாச்சாரம், விழுமியங்கள், பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவை இணைத்து வைத்துள்ளது.

ஒரு மொழி மட்டுமே அல்ல. திமுக சார்பாக இந்த அவைக்கு ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்கள் மீது மொழி திணிக்கப்பட்டால் அதை எதிர்ப்போம் என்றார் கனிமொழி.

மேலும் படிக்க... Read more...

கருணாநிதிபேரன் கொழும்பில் கட்டும் பிரமாண்டமான காம்ப்ளெக்ஸ்!

இலங்கையில் இறுதிகட்டப் போரின் போது தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் கொத்துக் குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசியது. போர் நடந்தபோது இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசினார். இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். அப்போது அவரது குரல் கம்மியது. அவரது பேச்சுக்கு அனைத்து திமுக உறுப்பினர்களும் கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.



ஆனால் போருக்கு பின்பு தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வாரம் 4 முறை ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நடைபெறுகின்றதாம்.

இலங்கையில் மிக பிரமாண்ட அளவில் தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகம் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஸ்பைஸ்ஜெட் நடைமுறைகள் கொழும்புவில் வொக்ஸ்ஹால் வீதியில் உள்ள ஜெட்விங் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன. புதிய அலுவலக காம்ப்ளெக்ஸ் தயாரானதும், ஸ்பைஸ்ஜெட் சேல்ஸ் அன்டு மார்க்கெட்டிங் நடைமுறைகள் அங்கிருந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ், இலங்கை கொழும்புவில் இருந்து 5th freedom (FOA) லேன்டிங் ரைட்ஸூக்காக விண்ணப்பம் செய்துள்ளது. அதன் அர்த்தம், கொழும்புவில் இருந்து பயணிகளை இந்தியாவுக்கு கொண்டுவராமல், மூன்றாவது நாடு ஒன்றுக்கு கொண்டு செல்ல முடியும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூக்கு 5th freedom (FOA) லேன்டிங் ரைட்ஸ், இந்தியாவில் உள்ளது. ஒரு பைலாட்ரல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதே லேன்டிங் ரைட்ஸை தமக்கும் கொடுக்குமாறு விண்ணப்பித்துள்ளது கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம். இலங்கை அரசு, கலாநிதி மாறனுக்கு சாதகமான முடிவை எடுக்கலாம் என்பதே தற்போதுள்ள நிலை.

ஸ்பைஸ் ஜெட், கொழும்புவில் இந்த ரைட்ஸை பெற்றால், அதன் மிடில்-ஈஸ்ட் (சார்ஜா) ஆபரேஷன் தூள் கிளப்பும்.

சிங்கள வியாபாரிகள் தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு வந்து போக ஸ்பைஸ்ஜெட் விமானம் தங்களுக்கு ஏதுவாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்களாம்.

ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகம் செயல்பட கொழும்பில் பிரமாண்டமான கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

இதற்கு மேல் உண்மைகளை மக்கள் முன்பு விளக்க வேண்டியது தயாநிதி மாறனின் கடமையாகும்.



மேலும் படிக்க... Read more...

இன்றைய கார்ட்டூன்கள். சிரிக்க சிந்திக்க காரித்துப்ப‌...

>> Wednesday, March 13, 2013

படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்.
நன்றி : இந்நேரம்.காம்

மேலும் படிக்க... Read more...

இது நிஜமா? ஜெயலலிதாவை பாராட்ட‌ விவசாயிகள் ஐம்பதுகோடிரூபாயை தண்ணீர் போல செலவிட்டார்களா?

>> Monday, March 11, 2013

புரட்சிதலைவி விழாவில் கோடிகளில் புரண்ட ‘விவசாயிகள்’ குவாட்டரில் புரண்டனர்!

தஞ்சை விவசாயிகளின் செல்வச் செழிப்பு தெரியவந்துள்ளது. வறட்சி நிவாரணம் கேட்டு போராடிய விவசாயிகள் கோடிகளில் புரள்கிறார்கள் என்ற ரகசியமும் வெளியாகியுள்ளது.

தஞ்சையில் நேற்று நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் விவசாயிகள் (!) ஐம்பது கோடி ரூபாயை தண்ணீர் போல செலவிட்டார்கள்!

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தஞ்சையில் நேற்று நடைபெற்றது. வறட்சி நிவாரணம் கேட்டு போராடிய விவசாய சங்கங்களால் எப்படி இந்தனை கோடிகளை செலவளித்து பாராட்டு விழா நடத்த முடிந்தது என ஆச்சரியப்பட்டு போனார்கள் அப்பாவி பொதுமக்கள்.

“விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு” என்று மற்றைய அரசியல்வாதிகள் சும்மா பேச்சுக்கு சொல்வார்கள். ஆனால், விவசாயிகளை கோடிகளில் புரளவிடும் சாதனையை ஓசைப்படாமல் செய்து காட்டியிருக்கிறார், புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இனி, தஞ்சை விவசாயிகளும், நாஞ்சில் சம்பத் போல இன்னோவா காரில் பறந்து திரிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடந்த மாதம் 27-ம் தேதி தான், தமிழ்நாடு காவேரி நீர்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன் உள்ளிட்ட 14 பேர் தமிழக முதல்வரை சந்தித்தனர். அன்றே பாராட்டு விழா அறிவிப்பு வெளியானது.

மிக குறுகிய நாட்களில், வியக்க வைக்கும் அளவுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் உயரதிகாரியாக உள்ள ‘விவசாயி’ ஒருவர் தங்சாவூருக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டார். மன்னார்குடி ட்ரவல்லர்ஸ் பங்களாவில் தங்கியிருந்த அந்த விவசாயி, தனது டொயோட்டா இன்னோவா காரில் பறந்து பறந்து ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தார்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரிக்கு சொந்தமான சுமார் 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட, முட்புதர்களும் குப்பைகளும் நிறைந்த இடம் தடாலடியாக சுத்தம் செய்யப்பட்டு, விழாவுக்காக தயாரானது.

முதல்வர் வழி நெடுகிலும் வைத்திருந்த ஃபிளக்ஸ்களில், “உழவர்களின் உயிரே… விவசாயிகளின் வாழ்வாதாரமே… காவிரி தாயே… இனி யானை கட்டி போரடிப்போம்” என்று விவசாயிகள் முதல்வருக்கு ஓவர் டோஸ் பாராட்டு மழை பொழிந்திருந்தார்கள்.

இந்த விழாவிற்கு மக்களை அழைத்து வருவதற்கான வாகன செலவை அ.தி.மு.க மாவட்ட கழகம் ஏற்றுக் கொண்டது. மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து எல்லாம் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆட்களை திரட்டி வந்திருந்தார்கள்.

விழாவுக்கு வரும் கட்சி விவசாயிகளுக்கு தலைக்கு 200 முதல் 500 ரூபாய் ரேட் பேசப்பட்டிருந்தது. தவிர, இரண்டு வேளை சாப்பாடு பிளஸ் ஒரு குவாட்டர் செலவை உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய அளவிலான அ.தி.மு.க நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவு!

கழக கண்மணிகள் விழாவுக்கு வரும்போது கட்சிக்காரர்கள் போல வரலாமா? இதனால், கழக கண்மணிகள் கழனிவாழ் விவசாயிகள் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, ஈரோடு, திருப்பூரில் இருந்து பண்டல் பண்டலாக பச்சை துண்டு வரவழைக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

விழாவுக்கு வந்தவர்களுக்கு இந்தத் துண்டுகளையும் போட்டு பந்தலுக்கு வழியனுப்பி வைத்தார்கள்.

பச்சைத் துண்டு போட்ட கழக விவசாயிகள், மதிய உணவுடன் வழங்கப்பட்ட குவாட்டர் தள்ளாட்டத்துடன் விழா பந்தலுக்குள் தடவிதடவி சேர் தேடிய காட்சி, விவசாயிகளுக்கே பெருமை சேர்க்கும் காட்சியாக அமைந்திருந்தது

விழா பந்தலில் போடப்பட்டிருந்த சேர்களின் எண்ணிக்கை 29,000 தான். ஆனால், திரட்டப்பட்ட விவசாயிகள் கூட்டமோ ஒன்றரை லட்சம் பேரை தாண்டும்.

மாலை 5 மணிக்கு தொடங்கி 7 வரை விழா நடைபெறும் என்றுதான் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் கூட்டத்தைப் பார்த்து உற்சாகம் அடைந்த முதல்வர், மற்றவர்களை நீண்ட நேரம் பேச அனுமதித்ததோடு, அழைப்பிதழில் இடம்பெறாத தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.கோவிந்தராஜன், கு. தங்கமுத்து உள்ளிட்டவர்களையும் பேச சொன்னார்.

இதனால் இரவு 7.50 வரை விழா இழுத்தது. நேரம் ஆக, ஆக விவசாயிகள், “இரவு டிபனுடனும் குவாட்டர் உண்டுதானே?” என நிகழ்ச்சி அமைப்பார்களிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அ.தி.மு.க.-வின் கிளை அமைப்பான (தமிழக) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேச்சைக் கேட்டு பலமுறை குலுங்கிச் சிரித்தார் முதல்வர். “கிரிக்கெட் விளையாட்டில் சதம் அடித்தவர்களை மேன் ஆஃப் த மேட்ச் என்பார்கள். அந்த தொடர் முழுக்க தொடர்ச்சியாக சதம் அடித்தால் மேன் ஆஃப் த சீரிஸ் என்பார்கள். நம்முடைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் மேன் ஆஃப் த சீரிஸாக திகழ்கிறார்” என்றார் தா.பா. சீரியசாக!

யாராவது விவசாயிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தால், அவர்கள் கட்சிக்கே கும்பிடு போட்டுவிட்டு ஓடியிருப்பார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காவிரித் தாய்க்கு அலங்கார வளைவுகள், தஞ்சை முழுவதும் குழல் விளக்குகள், திருச்சி முதல் தஞ்சை வரை இருபுறமும் அ.தி.மு.க கொடிகள், ‘வரவேற்பு பதாதைகள், சுவரொட்டிகள், தஞ்சையில் இதற்காகவே புதிதாக உருவாக்கப்பட்ட ஹெலிபேடு, மிக பிரமாண்டமான விழா அரங்கம், மேடைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கரும்பால் இருபுறமும் தோரணம்.

பத்தடிக்கு ஒரு வாழைமர வளைவு, என்று உச்சபட்ச ஆடம்பரமாக நடந்து முடிந்திருக்கிறது தஞ்சை விவசாயிகளால் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டுவிழா.

இதற்கான மொத்த செலவு ஐம்பது கோடி ரூபாயை தாண்டி விட்டதாக சொல்கிறார்கள்.

கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்டு கையேந்தி கிடைக்காமல் வறுமையில் உழன்று தற்போது மாநில அரசிடம் நிவாரணம் கேட்டு கையேந்தி நிற்கும் விவசாயிகளுக்கு ஏது இந்தளவுக்கு பணம்? விவசாயிகள் செலவு செய்ய வேண்டுமென்றால் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த (அரசு நிவாரணம் பெற்றுள்ள மற்றும் பெறப்போகும்) அனைத்து விவசாயிகளும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட இந்த நிதி சேராது.

விசாரித்தால், ஒரு ரூபாயை கூட நிஜ விவசாயிகள் செலவு செய்ய வில்லையாம். எல்லாம் ஆளும் கட்சி விவசாயிகளின் உபயம்தானாம்.

நிவாரணம் போதாது என்று சொல்லி விவசாயிகள் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், இந்த பாராட்டு விழாவை சிறப்பாக நடத்தவில்லை என்றால் முதல்வரிடம் டோஸ் வாங்க வேண்டும் என்று நினைத்த அ.தி.மு.க.வினரும், அமைச்சர்களும் தங்களுக்குள் வேலைகளை பிரித்துக் கொண்டு, ‘கணக்காக’ செய்து முடித்திருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு செலவை ஏற்றுக் கொண்டார்கள்.

எல்லாம் ஒரு இன்வெஸ்ட்மென்ட்தானே.. போட்ட காசை ஒரு கான்ட்ராக்ட்டில் பிடித்து விடலாம்!

விவசாய சங்க பிரமுகர்களை வெறும் அலங்கார பொம்மைகளாக மட்டும் மேடையேற்றினார்கள். விழாவுக்கு வந்திருந்தவர்களில் உண்மையான விவசாயிகள் பத்து சதவிகிதத்தை தாண்டாது.

நிஜ விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்? “முதல்வர் விழாவிற்கு கூட்டம் சேர்ப்பதற்காக மறைமுகமாக செலவிடப்பட்ட கோடிகளை நிவாரண நிதியில் சேர்த்திருந்தால் தற்போது வெறும் ஐந்நூறும் ஆயிரமும் பெறும் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாகவாவது நிவாரணம் கிடைத்திருக்குமே” என்று ஆதங்கப்படுகிறார்கள்.

“ஆடம்பரத்தை வெறுத்து விட்டேன் தமிழக மக்களுக்காக வாழ்கிறேன்” என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் முதல்வர் எப்படி இத்தனை ஆடம்பரமான ஒரு விழாவுக்கு சம்மதித்தார்? ஒருவேளை மம்மி ரிட்டர்னா?

Viruvirupu, Monday 11 March 2013, 04:51 GMT

SOURCE: http://viruvirupu.com/2013/03/11/49523/

மேலும் படிக்க... Read more...

தோலுரிக்கப்படும் அரசும் நீதிதுறையும். நவீன காந்தியம் தூக்குய்யா அவன‌.

இந்தியர்களே உளுத்துவிட்டதா உங்கள் மனச்சாட்சி? நீதிக்கு ஆப்பு அடித்த உண்மை. அறிந்தால் உலகமே காரித்துப்புமே. இதுதான் ஜனநாயகமா?


நவீன காந்தியம் தூக்குய்யா அவன‌.
Cartoon courtesy to:Inneram.com


அதிர்ச்சி அளிக்கும் காணோளிகள்.


தோலுரிக்கப்படும் அரசும் நீதித்துறையும்.

அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா? - பாகம் 1


தோலுரிக்கப்படும் அரசும் நீதித்துறையும்.

அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா? - பாகம் 2)


தோலுரிக்கப்படும் அரசும் நீதித்துறையும்.

அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா? - பாகம் 3


மேலும் படிக்க... Read more...

வெளிநாட்டு நிதியைப் பெறுவது இடிந்தகரை மக்களா? இந்துத்துவ கும்பலா?

>> Sunday, March 10, 2013

கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்களை இழிவு படுத்துவதற்கும்,போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மத்திய அரசு எந்த எல்லைக்கும் செல்லும்போல் தெரிகிறது.

அணு உலை எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு வரும் குமார், கூடங்குளம் பஞ்சாயத்தின் 14 வது வார்டு உறுப்பினராக உள்ளார். அவரது மனைவி அம்பிகாவின் வங்கிக் கணக்கிற்கு லண்டனில் இருந்து சில நாட்களுக்கு முன் 30 லட்சம் ரூபாய் வந்துள்ளது. குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால், நிலம் வாங்குவதற்காக அவரது நண்பர் ஆனந்த் என்பவர் அனுப்பிய பணம் அது. எனினும், வங்கி அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், உள்துறை அமைச்சக அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையத்தினர் என பலரும் வரிசைகட்டி நின்று விசாரணையில் இறங்கியுள்ளனர். பணத்தை அம்பிகா எடுக்க முடியாத அளவுக்கு முடக்கியும் வைத்து விட்டனர். அரசின் இந்த நடவடிக்கையை குமாரும், உதயகுமாரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

கூடங்குளம் போராட்டத்திற்கு அங்கிருந்து பணம் வருகிறது; இங்கிருந்து பணம் வருகிறது; அந்த நாட்டின் கைக்கூலி; இந்த நாட்டின் அடிவருடி என்றெல்லாம் என்னென்னவோ சொல்லிப் பார்த்த பின்னரும், எத்தனை அவதூறுகளை அள்ளி வீசிய பிறகும், இடிந்தகரையின் வீச்சில் எந்த மாற்றமும் இல்லை.

மக்களின் அறப்போர் ஆண்டுக்கணக்கில் நீடிப்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசு, இத்தகைய மலிவான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

தென்மாவட்ட மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் அதிக அளவில் அயல்நாடுகளுக்குச் சென்றே பொருளீட்டி வருகின்றனர். அவர்கள் பாடுபட்டுச் சேர்த்த பொருளாதாரத்தை சொந்த ஊரில் முதலீடு செய்து, இந்தியாவுக்கு அந்நிய செலாவணியின் மூலம் பெரும் நன்மை புரிகின்றனர். அப்படி நாட்டுக்கு நன்மை செய்பவர்களைத்தான் இப்படி இழிவு படுத்துகிறது இந்திய அரசு.

நாட்டுக்கு நன்மை செய்யும் அப்பாவிகளை சோதிப்பதில் ஆர்வம் காட்டும் காங்கிரஸ் அரசு, நாட்டில் வகுப்பு வெறியை விதைப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறும் ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டும் கண்டு கொள்வதே இல்லை

இந்தியாவில் செயல்படும் அமைப்புகளில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறுபவை இந்துத்துவ அமைப்புகள்தான் என்று, பல புள்ளிவிபரச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன.

1973 முதல் 1993 வரையிலான காலகட்டத்தில் மட்டும்அமெரிக்காவில் செயல்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் 5300 கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு அனுப்பியதாக அமிர்தா பாசு என்கிற அமெரிக்க ஆய்வாளர் அம்பலப்படுத்தி உள்ளார். இந்தக் காலகட்டத்தில்தான் ராமர் கோவிலை முன்னிறுத்தி இந்தியாவில் விஹெச்பி கோரத்தாண்டவம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

விஹெச்பி மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு வரும் பணம் குறித்து இந்தியாவில் சரியான தணிக்கை நடைபெறுவதில்லை.

தணிக்கைத் துறையில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் பார்ப்பனர்களாக இருப்பதும், அமெரிக்காவில் செட்டிலானவர்கள் ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படித்து விட்டுச் சென்ற பார்ப்பனக் குஞ்சுகள் என்பதும் தான், இந்துத்துவ சக்திகளின் கட்டற்ற பொருளாதார பலத்திற்கு காரணமாகும்.

கூடங்குளம் போராட்டத்தைக் காரணம் காட்டி, ஏராளமான கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை செய்தும், அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்தும் நெருக்கடி கொடுத்துவரும் மத்திய அரசு, முடிந்தால் ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலகத்தை சோதனை செய்து பார்க்கட்டும்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் என்று பகிரங்கமாக கருத்துச் சொல்லிவிட்டு, பின்னர் அவாள்கள் எதிர்த்தார்கள் என்பதற்காக பம்மிப் பதுங்கிய காங்கிரசுக்கு அத்தகைய துணிவு நிச்சயம் இருக்காது. எளிய மக்களிடம் வீரம் காட்டுவதுதானே காங்கிரசின் வரலாறு. .


கட்டுரையாளர்: ஆளூர் ஷாநவாஸ். Aloor Shanavas

மேலும் படிக்க... Read more...

4. வீரத் தமிழன் மருத நாயகம். தமிழக வரலாறு. PART 4.

ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! கட்டபொம்மனை போற்றியவர்கள் மறந்த மாவீரன் மருத நாயகம்.

தமிழக வரலாற்றில் மறந்த மாவீரன் மருத நாயகம். அவரது போராட்ட வரலாறு என்ன?

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.

ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை.

இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!

ஊரும், பெயரும்

மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.

இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.

இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.

1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.

வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும் சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.

மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.

தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!

பிரெஞ்சுப் படையின் ஆயுதம் பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.

இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.

ஆற்காடு நவாப் ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னர் பலமிழந்த முகலாய பேரரசு, தென்னிந்தியாவில் சிதறியதால், கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள் தோன்றின.

அப்போது ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டி எழுந்தது. ஒரே ரத்த உறவுகளை சேர்ந்த சாந்தா சாஹிபும், முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர்.

சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அது வசதியாய் போயிற்று. சாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர்.

இதன் நோக்கம், ஆதிக்க போட்டியும், போரின் வெற்றிக்கு பிந்தைய வணிக நோக்கமும்தான். இன்று அன்னிய நிறுவனங்களான கோகோ கோலாவும், பெப்ஸியும் ஆளுக்கொரு அரசியல் கட்சிக்கும் அல்லது பெரிய கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்து, தங்கள் வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் அல்லவா- அதுபோல்தான் அன்றும் இருந்தது.

ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் சொந்தங்களான சாந்தா சாஹிபுக்கும், முஹம்மது அலிக்கும் மோதல் ஏற்பட்டது. திருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.

திறமை, குணம், தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபே தகுதியானவர் ஆயினும் பதவி வெறி பிடித்த முகம்மது அலியால் தேவையற்ற பல போர்கள் நடந்தன.

மருதநாயகம் பங்கேற்ற பிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்ற சாந்தா சாஹிப் இறுதியில் ஆற்காட்டில் 1751ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார்.

மருதநாயகம் வீர தீரத்தோடு போரிட்டாலும், மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்ட ஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லை. பிறகு துரோகங்களால் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிபின் உடல், திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே அடக்கப்பட்டது.

நிஜாம் – நவாப் ? இன்று கவர்னர் பதவிகளை மத்திய அரசு நியமிப்பது போல் அன்றைய முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். ஆனால், இன்றைய கவர்னர்களைப் போல ஜாலியாக ஓய்வெடுக்க முடியாது. போர்க்களம் செல்ல வேண்டும், தினமும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும். இவருக்கு மேல் நிஜாம் என்பவர் இருப்பார். நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.

யார் ஆற்காடு நவாப் ? ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும், பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.

ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப் ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது. கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார்.

தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை. வீரமும் – பரிசும் மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!

அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம் தான் பின்னணியாக இருந்தது.

நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால், புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.

1752ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.

ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.

இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.

பொறாமை இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர். அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்ததால்தான், அன்று பெற்ற அதே சலுகைகளில் சில இன்றும் தொடர்கிறது. துரோகமும் கூட!

இன்று இந்தியாவின் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும், ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும் ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான்! இருவரின் பெயரும் ஒன்று என்பதும் ஒரு ஒற்றுமைதான்.

சரி. மீண்டும் மருதநாயகம் காலத்துக்குப் போவோம்!

கான்சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்.

திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்!

இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-? இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை, சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!

இங்கிலாந்து பிரான்ஸ் வரலாற்றை மாற்றிய மருதநாயகம்


இந்தியாவுக்கு முதலில் படையெடுத்து வந்தது ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த போர்ச்சுக்கீசியர்கள் தான். அவர்கள் கேரளாவின் கோழிக்கோட்டுக்கு வந்தார்கள். பின்னர் கோவாவை மட்டும் முழுமையாக ஆண்டார்கள்.


டேனிஷ்காரர்கள் இன்றைய நாகை மாவட்டம் தரங்கம்பாடியை மட்டும் ஆண்டார்கள். டச்சுக்காரர்கள் இன்றைய நாகப்பட்டினத்தையும், து£த்துக்குடியையும் கைப்பற்றினார்கள். நன்றாக ஆய்வு செய்தால் துறைமுக நகரங்களை மட்டுமே இவர்கள் விரும்பியிருக்கிறார்கள்.


வணிகம் தான் இவர்களது பிரதான ஆசையாக இருந்திருக்கிறது. ஆட்சி அல்ல எனலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டவரான ஆங்கிலேயர்க ளும், பிரான்ஸ் நாட்டவரான பிரெஞ்சுக்காரர்களும்தான் தொழில் மற்றும் வணிகத்தைத் தாண்டி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் தீவிரம் காட்டினார்கள்.


அதனாலேயே தமிழ் மண்ணில் அவர்களுக்குள் பல போர்கள் நடந்தன. அல்லது சண்டையிடும் இரு இந்திய அரசர்களுக்கு ஒருவருக்கொருவர் எதிர் அணியில் நின்று ஆதரவளித்தனர். இறுதியில் ஆங்கிலேயரே வென்றாலும், அதற்குக் காரணம் மருதநாயகம்தான். மருதநாயகம் பிரெஞ்சுப் படையிலேயே நீடித்திருந்தால் ஆங்கிலேயர்கள் பல போர்களில் தோல்வியடைந்திருப்பார்கள்.


மருதநாயகம் பிரெஞ்சுக்காரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆங்கிலேயர்களுடன் இணைந்ததால்தான், பல இடங்களில் மருதநாயகமே பிரெஞ்சுப் படைகளை தோல்வியடையச் செய்தார். அதனாலேயே பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலோடு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி சுருண்டது.


மருதநாயகம் அணி மாறாமல் இருந்திருந்தால் தமிழ் மண்ணில் பெரும் பகுதி பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும். இந்தியாவின் ஒரு பெரும் பகுதியை ஆண்ட பெருமை அவர்களுக்கும் கிடைத்திருக்கும். தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இல்லாமல், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மாறிப் போயிருக்கும்.


வரலாறு மாறியதற்குக் காரணம், மருதநாயகம் அணிமாறியதுதான் என்பது ஒரு வியப்பான செய்தியாகும்.


அன்றைய ஐரோப்பிய அரசியல்


மருதநாயகத்தின் வரலாறை பார்ப்பதற்கு முன்பு அன்றைய சர்வதேச அரசியலையும், அதன் இந்திய விளைவுகளையும் அறிந்து கொள்வது நல்லது.


ஐரோப்பாவிலிருந்து வருகை தந்த வெவ்வேறு நாட்டவர்களான ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்களுக்கு மத்தியில் இந்தியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்று ஏகாதிபத்திய போட்டி நடைபெற்றது.


இன்று வெளிநாட்டு கம்பெனிகள் சந்தை பொருளாதாரம், உலக மயமாக்கல் போன்ற குறுக்கு வழிகளில் இந்திய பொருளாதாரத்தையும், மறைமுகமாக இந்திய அரசியலையும் தங்கள் விருப்பங்களுக்கு வளைப்பது போலத்தான் அன்றைய அரசியல் நிலையும் இருந்தது.


18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி ஏற்பட்டு, நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் கரணமாக அனைத்துப் பொருள்களும் வேகமாகவும், தரமாகவும் உற்பத்தி செய்யப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகள் போட்டிப் போட்டு முன்னேறின.


அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பதற்கு உலகம் முழுக்க ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று இந்தியாவை உலக நாடுகள் மிகப் பெரிய வியாபார சந்தையாக பார்ப்பது போல் அன்றும் பார்த்தன. அதன் விளைவு வியாபாரக் கம்பெனிகள் என்ற போர்வையில், இந்தியாவில் தங்கள் கவனத்தை தீட்டின.
ஒளரங்கசீப் 1707ல் இறந்த பிறகு முகலாயப் பேரரசு பலம் குன்றியதும், குறிப்பாக தென்னிந்தியாவின் ஒன்றுபட்ட ஆட்சி இல்லாமல், குறுநில மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதும், ஒரே ஆட்சியில் கூட வாரிசுரிமை சண்டைகள் நடந்ததும், அவர்களுக்கு வசதியாய் போயிற்று.


சென்னையில் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவிய ஆங்கிலேயரான இராபர்ட் கிளைவ் வணிகராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது கம்பெனிக்கு பாதுகாப்பாக இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட படையையும் வைத்திருந்தார்.


இதே போல் ஐரோப்பாவில் அவர்களுக்கு சவாலாக இருந்த பிரெஞ்சு கம்பெனிகளும் தங்களுக்கென பிரெஞ்சுப்படையை வைத்திருந்தன. இதற்கு தாங்கள் ஒருவருக்கொருவர் கொண்ட பகை காரணமாக, எங்களுக்கு ஒரு படை தேவை என அன்றைய ஆட்சியாளரான ஆற்காடு நவாபிடம் கூறினர்.


காரணம், அப்போது இந்தியாவை ஆக்கிரமிப்பதில் இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் கடும் போட்டி நிலவியது. உலக அளவிலும் இவ்விரு நாடுகளுக்கிடையே மோதல் இருந்து வந்தது. ஆனால், அது இந்தியாவையே ஆக்கிரமிக்கப் போகிறது என்பது அப்போது ஆற்காடு நவாபுக்குத் தெரியவில்லை.


இப்படி நடந்திருந்தால்?


மருதநாயகம், ஹைதர் அலி, பூலித்தேவன் ஆகியோர் சமகாலத்தவர்கள். சமமான வீரர்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் போரிடாமல் ஒன்றுபட்டிருந்தால் அன்றைய தமிழ் மண்ணில் ஆங்கிலேயர் சாம்ராஜ்யம் நிலைகுலைந்திருக்கும். ஹைதர் அலியும், பூலித்தேவனும் ஆரம்பம் முதலே ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள். ஆனால் மருதநாயகம் வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.


ராணுவ அறிவு இருந்த அளவுக்கு, அரசியல் அறிவிலும், தாயகத்தின் வரலாற்று அறிவிலும் மருதநாயகம் மற்ற இருவரையும் விட, தெளிவற்றவராக இருந்தது தான் அதற்குக் காரணம் எனலாம். எனினும் கடைசியில் அந்தக் குறையை நிவர்த்தி செய்து தன்னை விடுதலைப் போராட்ட வீரராக அடையாளப் படுத்தினார் மருதநாயகம்.


ஆரம்ப நாட்களிலேயே ஹைதர் அலி, மருதநாயகம், பூலித்தேவன் ஆகியோரிடையே புரிந்துணர்வு ஏற்பட்டிருந்தால் தமிழக வரலாறு திசைமாறியிருக்கும்.


மருதநாயகம் மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தில் பெரும் பகுதியை சுமார் 71/2 ஏழரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார். நான் போர்வீரன் மட்டுமல்ல…

மிகச்சிறந்த ஆட்சியாளன் என்பதையும் தனது செயல்பாடுகளால் பதிவு செய்தார். அவரது ஆட்சியில்தான் தென்தமிழகம் பொதுப்பணித் துறையில் சிறப்பாக உருவாகியது.

ஆற்காடு நவாபின் கடும் எதிர்ப்பையும் மீறி 6.4.1756ல் மதுரை மண்டலத்தின் ஆட்சி நிர்வாகத்தை, ஆங்கிலேயர்கள் மருதநாயகத்திடம் வழங்கினார்கள். 1759ல் கவர்னர் பதவியை வழங்கினார்கள். தன்னம்பிக்கை இல்லாத ஆற்காடு நவாபை புறக்கணித்து, தன் மீது நம்பிக்கை வைத்த ஆங்கிலேயர்களை; தன் நிர்வாகத்திறனால் வியப்பில் ஆழ்த்தினார் மருதநாயகம்!

காவிரி காவலன்! மக்களை காப்பதிலும் சரி, அவர்களின் எழிலார்ந்த வாழ்வை உயர்த்துவதிலும் சரி, மருதநாயகம் தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார்.

ஒருமுறை பிரெஞ்சுப் படைக்கு எதிராக போர் நடத்திக் கொண்டிருந்த போது, போரின் ஒரு திட்டமாக காவிரியாற்றின் கால்வாய்களையும், தடுப்பணைகளையும் உடைக்கும் பணியை பிரெஞ்சுப் படை செய்யத் துணிந்தது. இதன் மூலம் மருதநாயத்தின் படையை வெள்ளத்தில் மூழ்க செய்வது அவர்களின் திட்டம். இதை உளவு மூலம் அறிந்த மருதநாயகம், பிரெஞ்சுப் படையின் திட்டத்தை தவிடுபொடியாக்கினார். இதன் மூலம் தஞ்சை மண்டலத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றினார்.

பொதுப்பணித்துறை

நாட்டின் வளத்தை பெருக்குவதிலும், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அன்றைய கால கட்டத்தில் மருதநாயகம் மிகச் சிறந்த முன்மாதிரி ஆட்சியாளராக திகழ்ந்தார். இன்று மதுரையில் இருக்கும் கான்சா மேட்டுத் தெரு, கான்சாபுரம், கான்பாளையம் போன்ற பகுதிகள் அவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள கான்சாஹிபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மற்றும் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகிலுள்ள கான்சாஹிப்புரம் அல்லது மம்சாபுரம் ஆகியன அவரது புகழை கூறிக்கொண்டிருக்கின்றன.

முல்லைப் பெரியாறு இன்று பரபரப்பாக பேசப்படும் சர்ச்சைக்குரிய பெரியாறு அணைக்கட்டிலிருந்து, பாசன நீரை மதுரைக்கு கொண்டு வர அன்றைக்கு திட்டமிட்டவர் இவர்தான்.

தமிழகத்தில் உருவாகி,தமிழகத்தை செழிக்க வைக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், அணைக்கட்டு ஒன்றை கட்டினார். திருநெல்வேலியில் உள்ள மேட்டுக் கால்வாய் திட்டத்தை உருவாக்கி அதை வடிவமைத்தார்.

விவசாயம்தான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உணர்ந்த மருதநாயகம், அதற்காக எல்லா வகையிலும் பாடுபட்டார். விவசாயத்திற்கு அடுத்த தொழிலான நெசவுத் தொழிலையும் ஊக்குவித்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில்தான் வட இந்தியாவிலிருந்து சௌராஷ்டிர மக்கள் அதிகமாக மதுரைக்கு வருகை தந்தனர். அவர்களின் உழைப்புக்கு உறுதுணையாக திட்டங்களை வகுத்து நிதியுதவியும் செய்தார். இதனால் உழவுத்தொழிலுடன், நெசவுத்தொழிலும் செழித்தது.

போக்குவரத்துத் துறை நாட்டின் வணிகத்துக்கு துறை முகங்களும், நல்ல சாலைகளும் முக்கியம் என்பதை அறிந்து தரமான சாலைகளை அமைத்தார். அன்று ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழும் கொடைக்கானலுக்கு முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயத்தின் ஆட்சியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் கொடைக்கானல் மலையடிவார பாதைகளை சிறப்பாக அமைத்து ஆங்கிலேயர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

அக்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தொண்டி துறைமுகத்தையும், தூத்துக்குடி துறைமுகத்தையும் மதுரையுடன் இணைக்கும் வகையில் தேசிய வர்த்தக சாலைகளை உருவாக்கினார்.

தனது ஆட்சிப்பகுதியின் முக்கிய நகரங்களாக திகழ்ந்த திருநெல்வேலி, கம்பம் போன்ற தொலைதூர ஊர்களுக்கும் மதுரையிலிருந்து எளிதாக செல்ல சாலைகளை அமைத்ததால் மக்களின் ஆதரவும், அன்பும் பெருகியது.

இதைப்பற்றி “A VIEW OF THE ENGLISH INTERESTS IN INDIA” என்ற நூலில் கர்னல் வில்லியம் புல்லர்டன் என்ற ஆங்கிலேயர் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்.

“மருதநாயகத்தின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பலன் தரத்தக்கதாகவும் செயல்பட்டது. அவரது நீதி சார்பற்று இருந்தது. அவரது செயல்பாடுகளை, நடவடிக்கைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று பின்பற்றினார்கள்” இவ்வாறு மருதநாயகத்தின் ஆட்சியை அந்த ஆங்கிலேயர் புகழ்கிறார்.

மதுரை மாநகரின் நிர்வாகம் அவரது ஆட்சியில் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நாட்டுப்புறப் பாடல்களும் விளக்குகின்றன.

காணு வழி மீதில் பதின்மூன்று வராகனை எறிந்தான். (யாரும்) எட்டி அதை பார்க்க முடியாது. அதிலே, ஈ – எறும்பு மொய்க்காமல் இருந்ததடா பணமும் என்றும், கட்டேது காவலறியர்கள் & தேசம் கறந்து பால் வெளிவைத்தால் காகம் அனுகாது என்றும் அவன் சிறப்பை பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. (நன்றி : மதுரை நாயகன் மாவீரன் கான்சாஹிபு – நந்தர்ஷா)

அதாவது அவரது ஆட்சியில் செல்வம் சாலையில் கொட்டிக் கிடந்தால், அதில் ஈ & எறும்பு கூட அணுக அஞ்சும் என்பதும், கறந்த பாலை சொம்பில் வைத்துவிட்டு சென்றால் காக்கா கூட நெருங்க அஞ்சும் என்பதும் அதன் அர்த்தமாகும்.

அவரது ஆட்சியில் திருட்டு பயம் இல்லை என் பதையும், குற்றங்கள் குறைவு என்பதையும்தான் இதன் மூலம் விளங்க முடிகிறது.

மனிதநேய கொள்கை அவரது மனைவி மாசா போர்ச்சுகீசிய ஆணுக்கும், தலித் பெண்ணுக்கும் பிறந்தவள் என்றும் கூறப்படுகிறது.

ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் அவர் கெட்டிக்காரராக திகழ்ந்தார்.

மருதநாயகம் சிறந்த முஸ்லிமாக தனது வாழ்நாளை கழித்திருக்கிறார். தொழுகையை தவறாது கடைப் பிடித்திருக்கிறார். இதை “ஆலிம் குலம் விளங்க வரும் தீரன்” எனும் அவர் புகழ்பாடும் நாட்டுப்புற பாடல் வழியாக அறிய முடிகிறது.

அவர் எல்லா மதங்களையும் சமமாக மதித்தார்.

முந்தைய ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டமதுரை அழகர் கோவிலின் நிலங்களை மீட்டு, கோயிலுக்கு திரும்பவும் ஒப்படைத்தார். மருதநாயகம் இந்து சமுதாய மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு செயல்பட்டார்.

அம்மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சீர் செய்து கொடுத்ததால் மக்கள் இவரது ஆட்சியை போற்றினர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள செப்பேடுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.

தொடங்கியது மோதல் இவ்வாறக, மதுரையில் கொடிகட்டிப் பறந்தது அவரது புகழ்! இதை ஆற்காடு நவாப் முகம்மது அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூக்கு சிவந்தது! உள்ளம் வெந்தது!

விளைவு, திருச்சி பகுதியில் இனி மருதநாயகம் கப்பம் வசூலிக்கக் கூடாது என்று தடை விதித்தார் ஆற்காடு நவாப்! இதை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம். ஆங்கிலேயர்கள் கூறியும் ஆற்காடு நவாப் மசியவில்லை! பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள், மருதநாயகத்திடம் திருச்சிதானே.. போனால் போகட்டும் உனக்கு மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கப்பம் வசூலிக்கும் உரிமையை தருகிறோம் என்றனர்.

அதிலும் திருப்தியடையாத ஆற்காடு நவாப், வரவு & செலவுகளை மருதநாயகம் ஒழுங்காக சமர்ப்பதில்லை என்று அடுத்த குண்டை வீசினார். அவரது பொறாமை எந்தளவுக்கு இருந்தது என்றால், தன்னை நலன் விசாரிக்க வந்த மருதநாயகத்தை, “என்னை கொல்ல சதி செய்தார்” என்று அதிரடியாக புகார் கூறி பரபரப்பூட்டினார். இக்கால அரசியல்வாதிகளையே தூக்கி சாப்பிட்டார் நவாப்! ஆடிப் போய்விட்டார் மருதநாயகம்!

ஒரு கட்டத்தில் ஆற்காடு நவாபா? மருதநாயகமா? யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? யாருக்கு பணிவது? என முடிவெடுக்க வேண்டிய தருணம் ஆங்கிலேயர்களுக்கு வந்தது.

திறமையற்றவராக இருந்தாலும் ‘நவாப்’ அந்தஸ்த்தில் இருப்பதால் ஆற்காடு நவாபுக்கே முன்னுரிமை கொடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

அது தங்கள் நிம்மதிக்கு கேடாக வந்த முடிவு என்பது அப்போது தெரியவில்லை!

உத்தரவு பறந்தது! மிஸ்டர் மருதநாயகம்… இனி நீங்கள் வசூலித்த கப்பத்தை ஆற்காடு நாவாபிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றார்கள்! அதுவரை ஆங்கிலேயர்களிடம் நேரிடையாக கப்பத்தை செலுத்திக் கொண்டிருந்த மருதநாயகத்துக்கு கோபம் பீறிட்டது, கொதித்து எழுந்தார்.

தன் ஆற்றலையும், தியாகங்களையும் மறந்து விட்டு ஓர் அடிமைக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை. சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?

மதுரைப் போர்! முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!

1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது!

போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு, பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.

தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி, தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.

சிவகங்கை சிக்கல் ஆங்கிலேயர்களுக்கும் , மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது, இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்தை பெருக்க திட்டங்களை வகுத்தார்கள்.

குறுநில மன்னர்களை வளைத்தார்கள். அப்போது மருதநாயகத்துக்கு சவால் சிவகங்கையிலிருந்து உருவானது. மருதநாயகத்திற்கு கட்டுப்பட சிவகங்கை சமஸ்தானம் மறுத்தது.

சிவகங்கை, திருபுவனம், பார்த்திபனூர் ஆகியவை தனக்குட்பட்டவை என்ற மருதநாயகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது, சிவகங்கையின் மன்னராக முத்து வடுகையர் இருந்தாலும், அவரை இயக்கி மறைமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்டவராயன் என்பவன்! அவன், ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இடையேயிருந்த பூசலை பயன்படுத்திக் கொண்டு, ஆற்காடு நவாபின் உதவியை பெற்றான்.

அவன் தந்திரத்தில் கெட்டிக்காரன். மருதநாயகத்தின் மனைவிக்கு பொன்னும் பொருளும் அனுப்புவதாக ஆசை வார்த்தை காட்டி, மருதநாயகத்தை சரிப்படுத்துமாறு தூதுவிட்டான். அரண்மனை வழியாக நுழைய முடியாதவன், அடுப்பங்கரை வழியாக நுழைய முயற்சித்தான். அதையும் மருதநாயகம் முறியடித்தார்.

சிவகங்கை மன்னர் முத்துவடுகையர், தனது தளபதியான தாண்டவராயனிடம், எதற்கப்பா… வம்பு! பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம்! என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர்! ஆனால் தாண்டவராயன் திருபுவனத்தில் ஆட்சியாளராக இருந்த தாமோதரனையும் அழைத்துக் கொண்டு ஆற்காடு நவாபுடன் கூட்டணி சேர்ந்தார்.

கோபம் கொண்ட மருதநாயகம் திருபுவனத்தையும், பார்த்திபனூரையும் தாக்கினார். சிவகங்கை அரண்மனைக்கு தீவைத்தார். நிலைமை முற்றுவதை அறிந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகையர் குலை நடுங்கி போனார். தன் தளபதியின் தேவையற்ற வம்பால் தன் ஆட்சிக்கே ஆபத்து வந்து விட்டதே என நடுங்கினார்.

முத்துவடுகையர் ஆற்காடு நவாபிடம் உதவி கோரினார். ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.

ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும், கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.

பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.

தந்திரம்! வஞ்சகம்! ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க” என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!

இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது.

தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன.

1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

தொடங்கியது ‘மதுரை போர்’! மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு, ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர்.

மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!

நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை, இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.

அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.

போரில் உறுதி கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.

ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில், தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.

இறுதி யுத்தம் ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர். 31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.

ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.

ஹைதர் அலியின் உதவி முன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந்தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.

“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)

பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு 19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.

சீறினார்… மோதினார்! உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!

அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.

தந்திரம் போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர்.

இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.

மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாயகத்தை பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.

சூழ்ச்சி வென்றது…

மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!

அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். 13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்தபோது துரோகிகள் நுழைந்திருக்கிறார்கள்.

தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.

அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார்.

எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை

! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.

விசாரணை

சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.

மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார்.

ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.

தூக்கு 15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!

அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை.

அந்த காட்சிகளை வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும்போது, 2007ல் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட காட்சிகள் நம் மனதில் நிழலாடுகின்றன.

மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.

தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும், வீரத்தனமும் அல்லவா கலந்திருந்தது! எனவே, எடை தாங்கவில்லை!

புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.

இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது!

அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது.

அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.

தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.

ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!

அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும், உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன், ஷஹீதாகி மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…!

தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?


மதுரை விமான நிலையத்திற்கு மருதநாயகம் பெயர்!

மருதநாயகத்தின் வீரம் இந்திய வரலாற்றில் போற்றத்தக்கது மட்டு மின்றி நிகரற்றதுமாகும். இந்தியாவில் வேறு யாரையும் கண்டு இந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் நடுங்கியதில்லை. திப்பு சுல்தானை மட்டுமே இவரோடு ஒப்பிட முடியும்.

இவரது வீர மரணத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதுமாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர் களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை நிறுத்திக் கொண்டு, எஞ்சிய பகுதிகளை மட்டுமே, ஆள முடிவு செய்தனர். மருதநாயகத்தின் படை வீரர்களில் பெரும்பாலோர் சரணடைய மறுத்து மைசூர் சென்று ஹைதர் அலியுடன் சேர்ந்து கொண்டனர். 16 ஆண்டுகள் கழித்து அவரது மகன் சுல்தான் திண்டுக்கல்லில் இருந்தவாறு, படை திரட்டி போராட முயன்றதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. (நன்றி : இந்திய விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள் செ.திவான்)

ஹிஜ்ரி 1222, (கிபி 1808) ல் கான்சாஹிப் பெயரில் சம்மட்டிபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. இது தமிழிலும், பார்ஸி மொழியிலும் அங்குள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

அந்த மாவீரனை போற்றும் வகையில் தமிழக அரசு காவல்துறைக்கு வழங்கும் விருதுகளில் ஒன்றுக்கு மருதநாயகத்தின் பெயரை சூட்ட வேண்டும். மதுரையில் உருவாகி வரும் சர்வதேச விமான நிலையத்திற்கும் அவர் பெயரை சூட்டி அந்த வீரத்தமிழனை கண்ணியப்படுத்த வேண்டும்! முயற்சிப்பார்களா?


கட்டுரை ஆக்கம் : எம். தமீமுன் அன்சாரி

SOURCE: http://www.samuthayaotrumai.com/?p=439

**************


கீழ் கண்ட சுட்டிகளை சொடுக்கி படியுங்கள்.


முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். PART 1.

இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்திய சுதந்திரம். PART 2

3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? PART 3. -


மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP