**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

உண்மையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒன்று இருக்கிறதா? ஸ்பெஷல் ரிப்போர்ட் !!

>> Thursday, February 28, 2013

இந்தியன் முஜாஹித் இயக்கத்துக்கு தலைவர் இந்திய உளவுத்துறையா? அல்லது ஊடக துறையா?

Indian Mujahideen created by Paid Indian Media - Justice Katju


எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் உடன் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பிடமிருந்து தகவல் வந்ததாக நமது காவல் துறையும், புலனாய்வு அமைப்புகளும், இந்துத்வாக்களும் செய்திகளை கசிய விடுவர். 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பை உருவாக்கியது யார் என்பதை நீதிபதி கட்ஜூ மிக அழகாக விளக்குகிறார். பார்த்து தெளிவு பெறுங்கள்.

இந்தியன் முஜாஹிதீன் மெயிலனுப்பியது, எஸ்.எம்,.எஸ் அனுப்பியது, கடிதம் அனுப்பியது எனக் கூறும் விசாரணை அமைப்பினர் எந்த அலைபேசியில் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது எந்த ஐ.பி அட்ரஸில் இருந்து மெயில் வந்தது என்பதைக் கண்டுபிடித்து தீவிரவாதிகளைக் கைது செய்யாதது ஏன்?

மேலும் படிக்க... Read more...

திணிக்கப்படும் அவமரியாதைகளை புறந்தள்ளுவோம்.

>> Wednesday, February 27, 2013

இஸ்லாமிய வழியில் அவமரியாதைகளை& போலிக்குற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும்.

"நமக்குப் புடிச்சமாதிரி மட்டும்தான் மத்தவங்க பேசனும்னு நாம எதிர்பார்க்க முடியுமா என்ன?! “

“எந்த விமர்சனங்களும் சீண்டல்களும் நம்மை பாதிக்காத வண்ணம் நம் மனசுக்குள்ளேயே ஒரு கவசத்தை உருவாக்கிக்கணும்... பின்னாளில் அந்த விமர்சனங்களே நம்மை இன்னும் இன்னும் பண்பட்டவங்களா மாற்ற உதவ ஆரம்பிச்சுடும்."

"இருளைத் துரத்தி வெளிச்சத்தை கொண்டுவர முடியாது. வெளிச்சத்தைப் பரப்பிதான் இருளைத் துரத்தனும்.”

"எத்தனை முறை பறந்த விமானமா இருந்தாலும், ஒவ்வொரு 'டேக் ஆப்' க்கு முன்னாலேயும் ஓடித்தானே பறக்கனும்."

“வாழ்க்கையோட சுவாராஸ்யமே அதோட சஸ்பென்ஸ்தான். நம்மை மீறி விஷயங்கள் நடக்கும்போது, அதை நமக்கு சாதகமா பயன்படுத் திக்கிறதிலேதான் வெற்றியின் சூட்சுமம் இருக்கு."- ஃபஜிலா ஆசாத்.M.C.S.E., M.CD.B.A., C.E.H., C.C.N.A., M.B.A.,

பகுதி 1. அவமரியாதையை & போலிகுற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும் – ஃபஜிலா ஆசாத்

மேலும் படிக்க... Read more...

உண்மை தீவிரவாதிகள் யார் !! (EXCLUSIVE REPORT) இது எத்தனை பேருக்கு தெரியும்..?

இஸ்லாத்தையும் தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம். இது எத்தனை பேருக்கு தெரியும்..?



தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே.

உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது.

அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை.

ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.


மேலும் படிக்க... Read more...

இந்தியாவில் இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள். பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்!

>> Tuesday, February 26, 2013

இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள் -

பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்! அநீதிகள். அநீதிகள்.

கீற்று இணைய தளத்தின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரியா அறிமுக உரையாற்றி "இஸ்லாமியர் மீதான சமூக அரசியல் ஒடுக்குமுறைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

காவல் துறையின் வழக்குகளினால் சிறை தண்டனை அனுபவித்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஹாரூண் பாஷா, அப்துர் ரஹீம், ஆயிஷா சித்தீக்கா, ஜக்கரியா ஆகியோர் சிறை அனுபவங்களை பதிவு செய்தனர்.

தலித் முரசு பத்திரிகை ஆசிரியர் புனிதப் பாண்டின் மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

"தாடி வைத்தவன் எப்படி நண்பனாக இருக்க முடியும்?''
- கீற்று பிரியா

மேலும் படிக்க... Read more...

குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!

>> Monday, February 25, 2013

ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது.

பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5 க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர்.

இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று தெரிந்த பின்னர் அரசு இவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலைச் செய்தது.

ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள மலக்பேட், முஸாரம்பாக், பந்தலகுடா ஆகிய பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது.

குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைக்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிவுறுத்திய பிறகும் அதனை புறக்கணித்துவிட்டு முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது போலீஸ்.

-----------
இதுதான் இந்தியா.

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில், இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...

விதிமுறை இதுதான், அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...

அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு

"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"

"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"

நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,

மேலும் படிக்க... Read more...

பயங்கரவாதத்துக்கு நிறம் உண்டா?

நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை.

சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை.

ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன.

இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று.

பயங்கரவாதத்துக்கு நிறம் உண்டா என்ற தலைப்பில் 
சன் நியூஸ் தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சி.

மேலும் படிக்க... Read more...

மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி!

>> Friday, February 22, 2013

இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டியுள்ளார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள்.

”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டு மக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு!

நீதியான, நேர்மையான அதே சமயம் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக சாட்டையடித் தீர்ப்பு வழங்கி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்சு.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய ஆட்சி என்பது என்ன ?

>> Thursday, February 21, 2013

இஸ்லாமிய ஆட்சி என்பது 
மதகுருமார்களுடைய‌ ஆட்சியா? 
மன்னராட்சியா? 
மக்களாட்சியா?

புலிகள் செய்த‌ சிசுக்களின் கோரப் படுகொலைகள்.

>> Wednesday, February 20, 2013

புலிகளின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாண்டவத்தில் சிசுக்களின் கோரப் படுகொலை.

இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள்

இந்த பதிவு தமிழருக்கு எதிரான பதிவல்ல.புலிகளின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத முஸ்லீம் இன ஒழிப்பு தாண்டவத்தில் சிசுக்களின் கோரப் படுகொலைக்கு எதிரான பதிவே.

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் நடுநிலைவாதியா? அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா? எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான்

ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.

காத்தான்குடி ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும், ஏறாவூர்  கிராமங்களுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் படுகொலை செய்த சிறுவர்களின் சில படங்கள் :
படங்கள் மீது கிளிக் செய்து பெரிதாக பார்க்க முடியும்:


அதேபோன்று 116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் இதில்  கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றோம்


ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்

ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்

எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்

ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்

எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்

எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்

ஏ. றிபாகா -(01 வயது) -பெண்

எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்

எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்

யூ. லாபிர் -(03 வயது)- ஆண்

எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்

ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்

எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்

எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்

எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்

எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்

எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்

எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்

எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்

எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்

எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )

எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)

எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)

ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்

ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்

எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)

எம். ஐ. ஜரூன் -(10 வயது)

எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)

எம். ஐ. அஸ்றப் -(11 வயது)

எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)

எம். கமர்தீன் -(12 வயது)

எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)

ஏ. எல். மக்கீன்-(12 வயது)

எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)

ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)

வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)

எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)

எம். எஸ். பைசல்-(13 வயது)

எம். பீ ஜவாத்- (13 வயது)

யூ. எல். எம். அனஸ்- (13 வயது)

ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)

எச். எம். பௌசர்-(14 வயது)

ஏ. ஜௌபர்- (14 வயது)

எம். எஸ். எம் சகூர் -(14 வயது)

ஏ. சமீம்- (14 வயது)

எம். இஸ்ஸதீன்- (15 வயது)

எம். எம். எம். பைசல் -(15 வயது)

எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்

எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்

எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்

எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்

எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்

எம். எல். சமீமா-(10 வயது)- பெண்

எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்

எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்

ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்

ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்

யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்

ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்

ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்



ஏ.அப்துல்லாஹ்

THANKS TO SOURCE: http://lankamuslim.org/2012/03/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/

THANKS TO SOURCE: http://muhasabanet.wordpress.com/2012/03/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/

சொடுக்கி பகுதி 1 புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. படியுங்கள்

சொடுக்கி  பாகம் 2. புலி பயங்கரவாதம். .புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம். படியுங்கள்

சொடுக்கி  பகுதி 3 புலி பயங்கரவாதம். .புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள்..  படியுங்கள்.
 
*************


மேலும் படிக்க... Read more...

எய்ட்ஸும், இஸ்லாமிய ஒழுக்கமும்

>> Tuesday, February 19, 2013


எய்ட்ஸை ஒழிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.


*********


கொதித்த குஷ்பு வினால் குமுதம் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு.

>> Friday, February 15, 2013

விஷ்வரூபத்திற்காக கருத்து சுதந்திரத்தை முழங்கிய குஷ்பு. இப்போது முழுங்குவதேன் கருத்து சுதந்திரத்தை ? 

அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக பார்க்கலாம்.


மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP