**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

காஷ்மீர். காஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. காஷ்மீரிகளின் வார்த்தைகளில்….

>> Tuesday, February 12, 2013

தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம்.

யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் .



கஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. கஷ்மீரிகளின் வார்த்தைகளில்….

மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம் .

தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் .

பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம் .

யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம் .

விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம்

தேவையான போது கொன்று புதைக்கலாம் .

பெண்களை கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம் .

புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம் .

இன்னும், இன்னும் எது வேண்டுமானாலும் செய்யலாம் .

யாரும் கேட்க மாட்டார்கள் .

இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது .

திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள்.

ஒருவர் பின் ஒருவராக எங்கள் பெண்களை சூரையாடுவார்கள். அவர்களது கால்களையும், கைகளையும் பிடித்து எங்கள் பெண்கள் அழுவார்கள்.

போதையில் வெறிப்பிடித்திருக்கும் ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பொழுது

வெளியே துப்பாக்கி முனையில் துடிக்கும் அக்குடும்பத்தின் ஆண் மக்களின் நிலை உங்களுக்கு தெரியுமா?

ராணுவத்தினர் எல்லா அநியாயங்களையும் செய்து முடித்து நகர்ந்த பிறகு அக்குடும்பத்தின் ஆண்களும், பெண்களும் கட்டிப்பிடித்து அழும் சோகத்தை எப்படி எங்களால் சொல்ல முடியும்?

அந்த நள்ளிரவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தூக்கத்தை தொலைத்து விட்டு அழும் குழந்தைகளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் எத்தனையோ இரவுகள் கழிகிறது.



ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் இதை செய்யும் துணிச்சல் இந்திய ராணுவத்திற்கு இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் இது தினமும் நடக்கிறது. துணிச்சல் மிக்க சில குடும்பத்தினர் அதை வெளியே கொண்டு வரும் போது அவை பரபரப்பு செய்தியாகின்றன.

ஆனால் நூற்றுக்கணக்கான காஷ்மீரி பெண்கள் தங்கள் கற்பை இழந்தும் கூட தங்கள் பிள்ளைகளுக்காக உயிருள்ள பிணங்களாய் துயரங்களை மூடிமறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?



நீங்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றதாக செய்தி ஊடகங்களில் அறிவீர்கள். உங்களுக்கு தெரியுமா? அவர்களில் 95 சதவிகிதம் பேர் அப்பாவிகள் என்று?



ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை பெறும்பாலும் ராணுவம் நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டைகள் நடக்கும். அதில் இறப்பவர்கள் தான் ஆயுதங்களோடு போராடுபவர்களாக இருப்பார்கள். மற்றபடி அரசு படைகள் சுட்டுக்கொண்டதாக அடிக்கி வைக்கப்படும் இளைஞர்களின் பிணங்களெல்லாம் போலி எண்கவுண்டர் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.



அதிகமானோரை சுட்டுக்கொன்ற வீரர் என்று விருதுகளையும், பதக்கங்களையும் பெறுவதற்காக இப்படி எங்கள் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொன்று கணக்கு காண்பிக்கிறார்கள். இப்படி விருதுளை பெற்ற அதிகாரிகளின் எண்ணிக்கை ஏராளம்.

இவ்வளவு அநீதிகளையும், துயரங்களையும் நாங்கள் காஷ்மீரில் சுமக்கிறோம்.

குறைந்த பட்சம் எங்களின் நியாயங்களை, எங்கள் தரப்பு வாதங்களை இந்திய ஊடகங்கள் பேசாதது எங்களை மேலும் அந்நியப்படுத்துகிறது. அருந்ததிராய் போன்ற ஒரு சிலர் மட்டுமே எங்களுக்கு ஆறுதலாக பேசுகிறார்கள்.

நாங்கள் பாகிஸ்தானை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், எங்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இந்தியாவில் பா.ஜ.க சார்பு அமைப்புகள் சித்தரிக்கின்றன.

உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அரசியல் விளையாட்டுகளிலிருந்து விடுதலை கேட்கிறோம்.

இங்கு நடப்பது மத போராட்டம் அல்ல.

எங்கள் மண்ணின் விடுதலைக்காக மக்களே நடத்தும் போராட்டம். இதை காஷ்மீரில் உள்ள சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை மக்களும் புரிந்திருக்கிறார்கள்.

--நேரடி களத்தொகுப்பு – தமீமுன் அன்சாரி.

மேலும் பல நூற்றுக்கணக்கான விடியோ ஆதாரங்களை யூட்யூப் இணையதளத்தில் காணலாம்.

1 comments:

UNMAIKAL February 12, 2013 at 3:56 PM  

காங்கிரஸ் கயவர்களுக்கு சமாதி கட்டும் நேரம் நெருங்கிவிட்டது :

மீடியா - மறுப்பு செய்திகள்

Feb11, அப்சல் குருவை தூக்கில் போட்ட காங்கிரஸ் கயவர்களுக்கு சமாதி கட்டும் நேரம் நெருங்கிவிட்டது, தொடர்ந்து முஸ்லிம் விரோதப்போக்கை கடைப்பிடிக்கும் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் தக்க பாடம் கற்பிப்பது நிச்சயம், என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது.

அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பின் மூலம் நீதி சாகடிக்கப்பட்டுள்ளது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டில், அடுத்தடுத்து தொடர் சமபவங்கள் அரங்கேறி வருகின்றன.

முஸ்லிம்கள் என்றால் ஒரு நீதியும், முஸ்லிம் அல்லாதவர்கள் என்றால் ஒரு நீதியும் வழங்கும் அரசுகளும், நீதிமன்றங்களும் சிறுகச்சிறுக நீதி நியாயங்களை சாகடித்து வருகின்றனர்.

அப்சல் குருவிற்காக கருணை மனு தாக்கல் செய்த அவரது மனைவி தபசுமுக்கு கூட, தூக்கு பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை.

பிப்ரவரி 4ஆம் தேதியே தூக்கு உறுதி செய்யப்பட்டது என்றால் ஏன் அவரது மனைவியிடம் தெரிவிக்கப்படவில்லை?

கருணை மனு நிராகரிப்பு மீதான நீதித்துறை மறுபரிசீலனையும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.

தூக்கிலிடப்படும் செய்தியை அப்சல் குரு குடும்பத்திற்கு பிப்ரவரி 6ஆம் தேதியே ஸ்பீட் போஸ்டில் அனுப்பிவிட்டோம், என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

ஆனால் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் உறையில் உள்ள ஸ்டாம்பில் பிப்ரவரி 8ஆம் தேதி என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது.

அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காதது மிகப்பெரிய மோசடியாகும்.

இந்த விவகாரத்தில் அனைத்து சட்ட நடைமுறைகளும் புறந்தள்ளப்பட்டுள்ளது.

அவருக்கு தூக்கு தண்டனை அளித்தது முழுதும் அரசியல் தீர்மானமே.

சட்டம் ஒழுங்கு என்று கூறப்படுவது ஒரு சாக்குப் போக்குதான்.

காங்கிரஸ் கயவர்களுக்கு சமாதி கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

தொடர்ந்து, முஸ்லிம் விரோதப்போக்கை கடைப்பிடித்து வரும் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் தக்க பாடம் கற்பிப்பது நிச்சயம்.


TNTJ வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபோன்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP