**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சுகம்?--நிச்சயம் வெளியேயில்லை. துக்கம்?--நிச்சயம் உள்ளுக்குள்தான் இருக்கிறது.

>> Friday, May 11, 2007

கண்ணிருந்தும் குருடு?--மோகம். காதிருந்தும் செவிடு?--வேகம்.

நாவிருந்தும் ஊமை?--மந்தம். எதுவுமில்லாமல் ஆனந்தம்?--ஞானம்.

சுகம்?--நிச்சயம் வெளியேயில்லை.
துக்கம்?--நிச்சயம் உள்ளுக்குள்தான் இருக்கிறது.

துக்கமில்லா ஆனந்த சுகம் பெறுவது எப்படி?
துக்கத்தையும், சுகத்தையும் விழிப்புணர்வால் தோண்டினால் அங்கேயே காத்துக் கொண்டிருக்கும் ஆனந்தம் பீறிட்டுக் கிளம்பும்.

நீதி?--அது ஒரு பெரிய அநீதி. அப்படியா! நீதி, ஒழுக்கம் என்ற ஆயுதங்களப் பயன்படுத்தி மற்றவர்களை ஒடுக்குவது, கட்டுப்படுத்துவது எனும் அநீதியை உருவாக்கிவிட்டது இந்த சமுதாயம்.

அப்படியென்றால் ஒழுக்கம் தவறா? ஒழுக்கம் பொதுப்படையானது அல்ல. அது தனிமனிதனுக்கான. ஒழுக்கம் ஒருவரின் சுதந்திரத்தை பறிக்கக் கூடாது. அது அவரின் சுதந்திரத்தை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒழுக்கம் சரி.

மன்னிப்பு?----வெறுமனே வாயிலிருந்து வந்தால், அது மற்றவர்களின் இறுமாப்பிற்கு நீங்கள் போடும் மருந்து.---இதயத்திலிருந்து வந்தால், அதுவே உங்களின் இறுமாப்பினை அழிக்கும் மருந்து.

கனிவு?--பணிவு கலந்தது. பணிவு?--கனிவு கலந்தது.

தைரியம்?--பயப்பட வேண்டியதற்கு பயப்பட வேண்டிய ஞானத்தை உள்ளடக்கியது. தேவையில்லாத தயக்கத்தைத் தாண்டும் துணிவையும் உள்ளடக்கியது.

பற்று?--நிம்மதியை உறிஞ்சும் அட்டை.

வெற்றி?--இளைப்பாற விரும்பாதவர்கள் செய்யும் வேலை.--SOURCE: internet
-------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP