**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அப்பா, ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய்?

>> Sunday, May 27, 2007

அப்பா, ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய்? கடையிலிருந்து மதியம் களைப்பாய் திரும்பிய தந்தையிடம் மகன் கேட்ட கேள்வி இது.

இது என்ன வெட்டிக்கேள்வி! எரிச்சலுற்றார் தந்தை.

கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்...

அரைமணிநேரம் கடையில் உக்காந்தா நூறு ரூபாய் சம்பாதிச்சுடுவேன். இது மாதிரி தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டு என் டைமை வேஸ்ட் பண்ணாதே மறுபடியும் கோபித்தார் தந்தை.

அப்பா, எனக்கு ஒரு ஐம்பது ரூபாய் கொடுங்களேன்!

தந்தைக்குக் கோபம் தலைக்கு ஏறியது.

பேசாம போய்விளயாடு. உனக்கு எதுக்குப் பணம்? நச்சரிக்காதே! இரண்டாவது படிக்கும் மகனை விரட்டியடித்தார்.

அடிபட்ட பார்வையுடன் மகன் விலகினான்.

இரவு வந்த. மகனைக் காயப்படுத்திவிட்டோமே என்ற உணர்வுடன் வீடு வந்தார் தந்தை. ஏதோ விளயாட்டுப் பொருள் வாங்க அவனுக்கு ஐம்பது ரூபாய் தேவை. அதற்குப் போய் கோபப்பட்டு விட்டோமே என்ற வருத்தம் அவருக்கு.

படுத்திருந்த மகனை எழுப்பினார். இந்தா உனக்கு என்று ஐம்பது ரூபாய் நோட்டு அவனிடம் நீட்டினார். மகன் முகத்தில் அத்தனை சந்தோஷம். சட்டென்று தன் தலையணைக்கடியிலிருந்து இன்னொரு ஐம்பது ரூபாயை எடுத்தான் அவன். இரண்டையும் சேர்த்து அப்பாவிடம் கொடுத்தான்.

இந்தாப்பா நூறு ரூபாய், என் கூட அரை மணிநேரம் விளயாடறீங்களா?
என்று ஆர்வத்துடன் கேட்டான். SOURCE:>> INTERNET.
----------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP