**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

விஷரூபகமலை தாக்கும் மணிவண்ணன் அமீர் சீமான்.

>> Wednesday, March 6, 2013

விஸ்வரூபம்-மணிவண்னன் அதிரடி பேட்டி.

தாலிபான்களை தீவிரவாதி என்று சொல்ல நீ யார்?”-சீமான்.

விஸ்வரூபம் தவறான படம்தான்!- இது அமீர் பேச்சு!!

முஸ்லிம்களை இழிவுபடுத்தியுள்ளார். - மணிவண்னன்

விஸ்வரூபம் படத்தை எடுத்து கமல் முஸ்லிம்களை இழிவுபடுத்தியுள்ளார். - மணிவண்னன்

பேட்டியின் வீடியோ

முஸ்லிம் பெண்கள், மாணவர்களுக்கு அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்கர்கள் எந்த குழந்தையும் கொலை செய்ய வில்லை என கமல் படம் எடுத்துள்ளார்.

இது அமெரிக்க அரசியலாகும் என நடிகரும் இயக்குனருமான மணிவண்னன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

தாலிபான்களை தீவிரவாதி என்று சொல்ல நீ யார்?”-சீமான்

நாம் தமிழர் கட்சியின் சீமான் பேச்சு அனைவரையும் உணர்ச்சிமயமாக்கியது.

”எந்த மதத்தில்தான் தீவிரவாதம் இல்லை. குஜராத்தில் நடந்த கலவரம் எந்த மதத் தீவிரவாதம்?

கோத்ரா ரயில் எரிப்பு எந்த மதத் தீவிரவாதம்?

இந்திரா காந்தியைச் சுட்டது சீக்கிய மதத் தீவிரவாதம்.

காந்தியைச் சுட்டது இந்து மதத் தீவிரவாதம்.

ஒசாமா பின்லேடன் போய் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தது இஸ்லாமியத் தீவிரவாதம் என்றால், அதற்குப் பதிலாக ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் அடித்தது கிறிஸ்துவ மதத் தீவிரவாதம்.

தமிழனைக் கொன்றது பௌத்தத்தைத் தாங்கி நிற்கும் சிங்களத் தீவிரவாதம்.

குஜராத்தில் நடந்த கலவரத்தில் 3,000 பேர் கொன்றொழிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர், ‘நான் 300 பேரைக் கொன்றிருக்கிறேன்’ என்று பெருமிதத்தோடு முழங்குகிறார்.

கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி குழந்தையை வெளியில் எடுத்து வீசுகிறான். இதைப் பதிவுசெய்தால் எந்த மதத்தின் தீவிரவாதமாக வரும்?

இப்படி ஒரு படத்தை எடுக்க கருத்துச் சுதந்திரம் இருக்குமா?

பௌத்த சிங்களத் தீவிரவாதம் செய்ததை இன்று எல்லாத் தொலைக் காட்சியும் காட்டுகிறது. இதைப்பேச, பட மெடுக்க யாராவது உண்டா? படம் எடுத்தால், தணிக்கைத் துறை அனுமதிக்குமா? படத்தைத் திரையிட ஆள் உண்டா?

வஞ்சிக்கப்படுகிற சிறுபான்மை மக்களுக்கு எல்லாம் இது நடக்கும்.

சதாம் உசேனைக் கொல்ல நினைத்து உள்ளே புகுந்த அமெரிக்கா கொன்று குவித்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் இரண்டு லட்சம். இதைப்பேச யாரும் இல்லை. தாலிபன் தீவிரவாதியா, இல்லையா என்பதை அந்த மக்களிடம்தான் கேட்க வேண்டும்.

நீ இங்கிருந்து கருத்துச் சொல்ல முடியாது. தங்கள் மண்ணின், மக்களின் உயிருக்கான போராட்டம் இது என்று தலிபான்கள் சொல்லி விட்டனர். அதைத் தீவிரவாதம் என்று சொல்ல நீ யார்?

கமல்ஹாசனை எல்லோரும் பெரிதாக மதிக்கிறோம். பாபர் மசூதியை இடித்தபோது அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த முதல் கலைஞன் கமல்ஹாசன்தான். அன்றைக்கு இதே சமூகமக்கள் அவரைப் பெரிதாகக் கொண்டாடினர். ஆனால், ‘விஸ்வரூபம்’ போல படம் எடுத்ததில் சில சங்கடங்களும் இருக்கின்றன.

கமல் நஷ்டப்பட்டுப் போனேன் என்றவுடன், வீட்டுப் பத்திரம், கையெழுத்திட்ட வெற்றுக் காசோலை என்று லட்சக்கணக்கான பேர் அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனால், 554 மீனவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். அந்தத் தமிழச்சிகளுக்கு ஒற்றை ரூபா காசு யாரும் அனுப்பவில்லை.

காவிரியில் தண்ணீர் வராததால் இறந்த 19 விவசாயிகள் குடும்பங்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பினார்களா என்றால் இல்லை” என்றார் கொந்தளிப்பாக. மறுபடியும் பிரச்னை ஏற்படாமல் இருந்தால் சரி

நன்றி – ஜூனியர் விகடன்

தலிபான்களை தவறாகக் காட்டிய விஸ்வரூபம் தவறான படம்தான்!- இது அமீர் பேச்சு!!

Posted by: Shankar Updated: Wednesday, March 6, 2013, 11:44 [IST]

சென்னை: தன் நாட்டுக்காகப் போராடும் தலிபான்களைத் தவறாக சித்தரிக்கும் விஸ்வரூபம் தவறான படம்தான். விடுதலைப் புலிகளைப் போலத்தான் தலிபான்களும்... - இப்படிக் கூறியிருப்பவர் இயக்குநர் அமீர்! விஸ்வரூபம் படம் பல்வேறு பரபரப்புகளை, சர்ச்சைகளைக் கிளப்பி, ஒருவழியாக வெளியாகி ஓடி முடிக்கும் சூழலில், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் அமீர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், "விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள். எப்படி ஈழத்திற்காகப் போராடிய போராளிகளான பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் தவறாக சித்தரிச்சா என்ன வருமோ அதுதான் விஸ்வரூபம். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும் தீவிரவாதிகள் என்று காட்டக் கூடாது.

ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள். இப்போதுதான் அது பற்றிய விவாதத்தை வைத்திருக்க வேண்டும்.

யாரும் செய்யவில்லை. ஆக, விஸ்வரூபம் படத்தின் மூலம் தன் மண்ணுக்காகப் போராடும் தலிபான் போராளிகளை தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை," என்று கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/03/ameer-blasts-viswaroopam-portraying-talibans-bad-171014.html

சொடிக்கி படிக்கலாமே.
>>>>> PART 1. முதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். - <<<<<


>>>> PART 2. இந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்திய சுதந்திரம். <<<<<<


>>> PART 3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?.<<<<


0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP