**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மத்திய அரசா? அதிர்ச்சிகள். !

>> Monday, March 4, 2013

1. ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது புலனாய்வு ஏஜன்சிகளா? 2. போனமாசம் செத்தவன் எப்படிடா உங்க நாட்டில் வந்து குண்டு வைப்பான்? 3. முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.

ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது புலனாய்வு ஏஜன்சிகளா?


புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை தவிர்க்கவே மத்திய அரசே திட்டமிட்டு நிகழ்த்தியது தான் ஹைதராபாத் இரட்டைக்குண்டுவெடிப்பு என்று சிவில் உரிமை அமைப்பான ரிஹாய் மஞ்ச் குற்றம் சாட்டியுள்ளது.

தீவிரவாதிகள் என்று பொய்க் குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக பாடுபடும் அமைப்புதான் ரிஹாய் மஞ்ச்.

தேசிய ஊடகங்கள் வலதுசாரிகளின் வளர்ப்பு மிருகங்களைப் போல செயல்படுவதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டுகிறது.

ரிஹாய் மஞ்சின் பொதுச் செயலாளரும் முன்னாள் போலீஸ் ஐ.ஜியுமான எஸ்.ஆர்.தரபுரி கூறியதாவது: “முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து ஹிந்துத்துவா சக்திகளின் ஆதரவைபெறுவதற்கான அரசியல் நாடகத்தை அரசு நடத்துகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் புதிய ‘சர்’ ஆவார்.

அஜ்மல் கஸாபையும், அப்ஸல் குருவையும் தூக்கிலிட்டதற்கு பழிவாங்கவே தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்கள் என்று ஷிண்டே கூறியது, பா.ஜ.கவை விட பெரிய ஹிந்துத்துவாவாதியாக மாறுவதற்கான முயற்சியாகும்.

கூடவே அப்ஸல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளை சமாளிக்கலாம்.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஜெய்ப்பூரில் கூறிய கருத்துக்களை வாபஸ் பெற்றதும், பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பை நிகழ்த்தியதும், ஹைதராபாத் குண்டுவெடிப்பு ஷிண்டேவின் கீழ் இயங்கும் உளவுத்துறை ஏஜன்சிகள்தாம் நிகழ்த்தியுள்ளன என்பதற்கான தெளிவான ஆதாரமாகும்.

இதன் மூலம் பல்வேறு குண்டுவெடிப்புகளில் சிக்கிய ஹிந்துத்துவா தீவிரவாதிகளை பாதுகாக்க முடியும்.

இதற்காகவே தீவிரவாதத்திற்கு எதிராக ஹிந்துத்துவா சக்திகள் ஹைதராபாத்தில் முழு அடைப்பை நடத்தினர்.” இவ்வாறு தரபுரி கூறினார்.

ரிஹாய் மஞ்சின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சுஹைப் கூறியது: இந்தியன் முஜாஹிதீன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உருவாக்கமாகும்.

அரசுகள் அரசியல் நெருக்கடியை சந்திக்கும்போது இந்தியன் முஜாஹிதீனை உபயோகித்து தப்பிக்க முயலுகின்றன.

ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே நான்கு இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்று கூறப்படுவோரின் வாக்குமூலங்கள் ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?

இது விசாரணையை திசை திருப்புவதற்கான முயற்சியா?

ஹைதராபாத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ள சூழலில் ஏன் அவர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படவில்லை?

இது சங்பரிவார் கொடுத்த அழுத்தமா?

அல்லது தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள் என்ற சங்பரிவாரின் கருத்தை தான் உள்துறை அமைச்சரும் பரப்புரைச் செய்கின்றாரா?

குண்டுவெடிப்பை நிகழ்த்தியபாணி இந்தியன் முஜாஹிதீனுடையது என்று கூறும் வேளையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும் இதே பாணியில் நடத்திய குண்டுவெடிப்புகளை ஏன் காணாதது போல் நடிக்கவேண்டும்?

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவித்த முஸ்லிம் இளைஞர்களை மீண்டும் வேட்டையாடுவது ஏன்?

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இயங்கவில்லை என்று கூறும்பொழுது தாடி வைத்த நபர்தாம் குண்டுவைத்தார் என்று எவ்வாறு கூறமுடிகிறது? உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

REF:http://www.thoothuonline.com/%e0%ae%b9%e0%af%88%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae-3/#sthash.HkBIL8z2.dpuf

போனமாசம் செத்தவன் எப்படிடா உங்க நாட்டில் வந்து குண்டு வைப்பான்.

இதோ... இந்த ஹைதராபாத் குண்டு வெடிப்பில் கூட...

முதன் முறையாக 'ஸ்லீப்பர் செல்கள்' வந்து விட்டனர். சினிமாவை சினிமாவாக பார்க்காத ஊடகங்கள் 'துப்பாக்கி' படத்தின் கதையை ஹைதராபாத் குண்டு வெடிப்பு செய்திகளில் ரீல் ஓட்டிக்காண்பிக்க ஆரம்பித்து விட்டனர்.

அந்த 'ஊடக துப்பாக்கியின்' முதல் ரீலே....... பிக் ஃப்ளாப்...! பாகிஸ்தானில் பயிற்சி பெற்று இங்கே ஹைதராபாத் வந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து குண்டு வைத்த ஓர் 'இந்தியன் முஜாஹிதீன் ஸ்லீப்பர் செல்' என்று ஒருவரின் புகைப்படத்தை முஸ்லிம் என்று சொல்லி போட்டார்கள். பல ஊடகங்களில் இந்த ஃபோட்டோ வர...

அய்யகோ... அந்தோ பரிதாபம்..!

அந்த நபர் பாகிஸ்தானின் ஓர் அரசியல் கட்சியின் தலைவர். சிந்து மாகாண சட்டமன்ற உறுப்பினர்..! ஆனால், இவர் சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பால் கராச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டு, பப்ளிக்காக அடக்கம் செய்யப்பட்டு விட்டவர்..!!!

"போனமாசம் எங்க நாட்டில் செத்து அடக்கப்பட்டவன், எப்படிடா உங்க நாட்டில் வந்து குண்டு வைப்பான்..? மயான குழியிலிருந்து எழுந்து வந்தா..?"

என்று அந்த கட்சியினர் கொந்தளிப்பு அடைய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவை மன்னிப்பு கேட்க சொல்ல, உடனே தவறு உணர்ந்து நாம் மன்னிப்பு கேட்டு..... எதற்கு நமக்கு இந்த அவமானம் ஊடகங்களே..?

New Delhi: An Indian News Channel on Monday night apologized over their blunder of referring Pakistani politician Manzar Imam to a terrorist, who was blamed for masterminding the attacks in Indian city of Hyderabad that claimed lives of almost 16 people and injured more than 100.

India TV used photo of Muttahida Qaumi Movement’s slain leader Manzar Imam instead of an alleged suspect behind the recent Hyderabad blasts.

The news channel was referring to a member of the Indian Mujahideen (IM), but mistakenly used Imam’s image.

Imam was killed by the Tehreek-e-Taliban Pakistan last month in Pakistan’s largest city Karachi.

Pakistan’s Interior Minister Rehman Malik on Monday demanded a formal apology from India to Pakistan for implicating a deceased member of the Sindh Assembly from Muttahida Qaumi Movement Manzar Imam in the recent bomb blasts in Hyderabad.

Ref:http://www.thenewstribe.com/2013/02/26/india-tv-apologises-over-implicating-slain-pakistani-politician-in-hyderabad-blasts/

Ref:http://pinnoottavaathi.blogspot.com/2013/02/blog-post_28.html

Ref:http://www.thenewstribe.com/2013/02/26/india-tv-apologises-over-implicating-slain-pakistani-politician-in-hyderabad-blasts/

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.


கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும், காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.

இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.

இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.

இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி, பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.

உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல; அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை. சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.

Ref SOURCE: http://www.vinavu.com/2012/07/30/supreme-court-state-terror/

முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.

1 comments:

வலையுகம் March 4, 2013 at 2:14 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்
நிறைய கேள்விகள் உங்கள் பதிவில் தொத்தி நிற்கிறது பதில் தான் ஆளும் வர்க்கத்திடமிருந்து வரவே வராது

பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் கைர

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP