சுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள்.
வருகையாளரே !! வருக !! வருக !! இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)
ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி
உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?
ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.
இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?
சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.
ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்
இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?
உலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.
இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.
உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற
உண்மை உணர்ந்தீரா?
தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,
நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?
உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.
பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.
ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '
என கூறுகிறார்.
இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.
தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."
தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.
தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.
நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.
**********
எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!!
மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……
அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.
ஓ மானுடனே! சிந்திப்பாயா ? உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள்.
பார்ப்பவை எல்லாம் நதியில் ஒரு துளிதான்.அகிலஉலக பிரஜைகளான முஸ்லீம்களே !
வெடிகுண்டு தயாரிக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அசம்பாவிதத்தில் குண்டு வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள கூத்துபறம்பு, செறுவாஞ்சேரியில் உள்ள அத்தியரக்கா என்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தினசரி பயிற்சி செய்யும்் ஒரு கோவிலின் பின்பக்கம் நேற்று காலை 7 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் மணடல செயற்குழு உறுப்பினர்களான ப்ரதீபன்(38), திலி என்ற திலீப்(35) ஆகிய இருவரும் இச்சம்பவத்தில் பலியாகினர்.
இதில் ப்ரதீபன், அஸ்னா என்ற பெண் குழந்தையைக் குண்டுவீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியாவார்.
நேற்றுக் காலை 7 மணியளவில் கோயிலின் பின்புறம் பயங்கரமான குண்டு வெடிக்கும் சப்தம் கேட்ட பொதுமக்கள், சம்பவ இடத்தில் சிதறிய நிலையில் கிடந்த உடல்களைக் கண்டனர். பக்கத்திலுள்ள கிணற்றில் தெறித்து விழுந்த நிலையில் ப்ரதீபனின் உடல் கிடந்தது. அவரின் இடுப்பின் கீழ்பாகம் முழுவதும் சிதைந்த நிலையில் இரு கால்களும் துண்டு துண்டாகக் கிடந்தன. திலீபின் உடல் முழுவதும் வெந்துபோன நிலையில் காணப்பட்டது. வெடித்த குண்டின் வீரியத் தாக்கத்தால் பக்கத்திலுள்ள தென்னை, பனை போன்றவை கருகியிருந்தன. ப்ரதீபன் குண்டு தயாரிப்பிலும் அதனைக் கையாள்வதிலும் மிகத் தேர்ச்சி பெற்றவன் என ஊர்மக்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் திருவிழாவிற்காகக் கொண்டு வந்த வெடிமருந்தைப் பாதுகாப்பாக வைப்பதற்கிடையில் ஏற்பட்ட கவனக்குறைவில் வெடிமருந்து வெடித்துச் சிதறியதனாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.எஸ் - பாஜக விளக்கம் கூறியுள்ளது. ஆனால், திருவிழாவிற்குப் பயன்படுத்தும் வெடிமருந்துகள் இவ்வளவு வீரியம் வாய்ந்தவை அல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். கடந்த இரவில் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கோவிலில் உற்சவம் நடந்திருந்தது. நள்ளிரவோடு உற்சவம் முடிந்திருந்தது. அதற்குப் பின்னர், குண்டு தயாரிப்பில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஈடுபட்ட வேளையிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.
சம்பவத்தில் இறந்தவர்களின் உடல் சின்னாபின்னமாகச் சிதறியிருக்கும் நிலையைப் பார்க்கும் பொழுதும் அப்பகுதியின் சூழலைப் பார்க்கும் பொழுதும் சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. சம்பவம் நடந்த உடனேயே காயமடைந்தவர்களை ஆர்.எஸ்.எஸ்ஸினர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளது தெரிவதாக காவல்துறை கூறியுள்ளது.
வழக்கம் போல், அனுமதியின்றி கைவசம் வைத்திருந்த வெடிபொருட்களைக் கவனமின்றி கையாண்டதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
செப்டம்பர் 2000 - த்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸினர் வீசிய குண்டில் அஸ்னா என்ற மாணவி உட்பட 3 பேருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. அப்பொழுது அஸ்னாவிற்கு 6 வயது. அன்று தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அஸ்னா, தனது வலது காலை இழந்திருந்தார்்.
அக்குண்டு வெடிப்பு வழக்கில் சென்ற வாரம், பிரதீபன் உட்பட 14 ஆர்.எஸ்.எஸ் - பாஜக தொண்டர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருந்தது. வரும் வெள்ளியன்று இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட இருந்த நிலையில் பிரதீப், குண்டு தயாரிக்கும் வேளையில் கொல்லப்பட்டுள்ளார். இவ்வழக்கில் சாட்சி கூறியவர்களைக் கொலை செய்வோம் என வெளிப்படையாக ப்ரதீபன் உட்பட ஆர்.எஸ்.எஸ்ஸினர் மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்டேட்ஸ்:
சம்பவ இடத்தில் காவல்துறை நடத்திய ரெய்டில் ஒரு பெட்டி நிறைய சக்தி வாய்ந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பரிசோதனை தொடர்ந்து வருகிறது.
தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.
நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.
அவசியம் கேளுங்கள்.
மற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.
அவசியம் கேளுங்கள்.
*************************
பொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா
பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது.
0 comments:
Post a Comment