**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

குருதி நாற்றம் அடிக்கும் நாடு!

>> Saturday, June 28, 2008

அமெரிக்கா, மனித சமூகம் கண்டதிலேயே மிகவும் கொடூரமான ஆக்ரமிப்பு சக்தியாகும்.


"உலகின் அதிகுரூரமான ஆக்ரமிப்பு நாட்டின் அதிபர்..." என்ற மிகக் கடுமையான இந்த வாசகம்.

ஏதோ ஒரு முஸ்லிமின் நாவிலிருந்து வெளியானவை என நீங்கள் கருதினால், உங்கள் எண்ணம் தவறானது.

இந்தக் கடுமையான வாசகத்தின் சொந்தக்காரர் ஒரு முஸ்லிமல்லர்; அவர் ஒரு கிறிஸ்தவர்; அதுவும் பிரபலமான ஒரு பேராயர் என்றால் நம்பவா போகின்றீர்கள். ஆம், நம்பித்தான் ஆக வேண்டும்.

இங்கிலாந்திலிருந்து வெளியாகும் மாதாந்திர இதழ் ஒன்றிற்கு அளித்த நேர்முகத்தில் கான்டர்பரி பேராயர் டாக்டர் ரொவான் வில்லியம்ஸ் போர் வெறியன் ஜார்ஜ்புஷ்ஷிற்கு எதிராகப் பயன்படுத்திய வாசகங்களே மேற்கண்டவை. 'US is the world's imperialist' என்ற தலைப்பில் இந்நேர்முகம் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

நவீன உலகை உருவாக்குதல் என்ற குறிக்கோளுடன் முன்னிறங்கிய அமெரிக்காவின் செயல்பாடுகள் உலகை மிகவும் மோசமான பயங்கரவாதத்திலும் தீவிரவாதத்திலும் கொண்டு சென்று விட்டுள்ளது எனவும் ரொவான் வில்லியம்ஸ் அதில் தெரிவித்தார். உலகை முழுவதும் சுட்டெரிக்கக் கூடிய அமெரிக்காவின் மோகம் நல்லதல்ல என்றும் மனிதகுலத்திற்கே அது அவமானமானது என்றும் அவர் தெரிவித்தார்.

ரொவானின் இக்கருத்துகள் மேற்குலகில் பெரிய சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. தீவிரவாதிகள் மட்டுமே தங்களையும் தங்களின் செயல்பாடுகளையும் எதிர்க்கின்றனர் என்ற புஷ்ஷின் அபிப்பிராயங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அடியாகவே பிஷப்பின் இவ்வார்த்தைகள் அமைந்துள்ளன.

போரைக் குறித்து எழுதும் பிரபல எழுத்தாளரான ராபர்ட் ஃபிஸ்க், புஷ் சமீபத்தில் நடத்திய அரபு நாடுகளுக்கிடையிலான சுற்றுப்பயணத்தைக் குறித்து எழுதிய ஓர் கட்டுரையில் (தி இன்டிபென்டன்ட், 2008 ஜனவரி 16), கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"அரபு நாடுகளினூடாக சுற்றுப்பயணம் நடத்தும் வேளையில் விலை உயர்ந்த பட்டுமெத்தைகளில் புஷ் துயில் கொண்டார். சுகமான நித்திரையையும் அவர் அனுபவித்தார். ஆனால், அதே வேளையில் மத்திய ஆசியா, இரத்தக் களரியிலும் கண்ணீரிலும் துயில் கொண்டிருந்தது.

உலகின் சமாதானத்தைத் தகர்க்க கச்சைக்கட்டி இறங்கியுள்ள இம்மனிதர், மத்திய ஆசியாவில் சுற்றுப்பயணம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையிலேயே லெபனானில் அமெரிக்க தூதரகம் குண்டுக்கு இரையானது.

இதில் நான்கு நிரபராதிகள் கொல்லப்பட்டனர். இந்த இரத்தப் பிசாசினைக் கணட மகிழ்ச்சியில் சியோனிய தீவிரவாதிகள் 18 பாலஸ்தீனியரைச் சுட்டுக் கொன்றனர். அக்கிரமக்காரர்களுக்கு இதனைவிட உற்சாகம் அளிக்கக்கூடிய மற்றொரு சாத்தான் இவ்வுலகில் வேறு ஏதேனுமுண்டோ?"

நாகரீகம் மற்றும் வர்க்கரீதியில் தங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களைச் சாதாரணமானவர்கள் என்று கருதும் ஒருவிதத் தலைக்கனம் அமெரிக்க மனங்களைப் பொசுக்கிக் கொண்டிருக்கின்றது என கான்டர்பரி பேராயர் கூறுகிறார்.

புஷ்ஷை வரவேற்பதற்கு அரபு நாடுகள் காண்பித்த ஆர்வம் அவரை வியப்பிலாழ்த்தியது.

இராக்கிலும் பாலஸ்தீனிலும் தங்கள் முஸ்லிம் சகோதரர்களைக் கொடூரமாகக் கொன்றொழிக்கவும் நரகவேதனையை அனுபவிக்கவும் செய்த ஒரு மனிதனுக்குத் தங்களிடையே உயர்ந்த மதிப்பளிப்பதற்கு இவர்களுக்கு எவ்விதம் மனம் வந்தது? எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

ஒரு கிறிஸ்தவ விசுவாசிக்கு இருக்கும் விவரம், அரபு நாடுகளின் எந்த ஓர் ஆட்சியாளருக்கும் உருவாகாததை நினைத்து வெட்கப்படாமல் வேறென்ன செய்ய முடியும்?

ராபர்ட் ஃபிஸ்க் கூறுகிறார்: "இராக் போருக்கு முன்னர் புஷ் அடிக்கடி பிரசங்கம் செய்துக் கொண்டிருந்த நவீன மத்திய ஆசியா ஆலோசனையைக் குறித்துத் தற்பொழுது எதுவுமே வாயைத் திறப்பதில்லை.

ஏகாதிபத்தியங்களைக் குறித்தும் சித்திரவதைச் சிறைச்சாலைகளையும் அமெரிக்க இரகசியப் புலனாய்வுத்துறையினர் செயல்படும் பழைய மத்திய ஆசியாவைக் குறித்து மட்டுமே அவர் தற்பொழுது பேசிக்கொண்டிருக்கின்றார்.

இராக் யுத்தத்தில் இந்த நபர் தோற்றதற்கான தெளிவான ஆதரமல்லவா இது?"

அக்கிரமம் மற்றும் ஆக்ரமிப்பினுடைய வரலாற்றை மட்டுமே கூறக்கூடிய ஒரு நாடு தான் அமெரிக்கா. ஏதாவது ஒரு கொலைக்கு உத்தரவிடாத ஒரு அதிபர் கூட அந்நாட்டை ஆண்டதில்லை. ஜார்ஜ் வாஷிங்டன் முதல் துவங்குகின்றது இரத்தத்தில் புரண்ட அந்த நாட்டின் சரித்திரம்.

"அமெரிக்காவைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி" என்ற பெயரில் முனீர் அல் அகஸ் என்ற சிரிய எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். எப்படிப்பட்ட ஒரு மனிதனின் இதயமும் உறைந்து விடக்குடிய அதிர்ச்சியளிக்கக் கூடிய விவரங்கள் அதில் உள்ளன.

"ஆதிவாசிகள் வசித்துக் கொண்டிருந்த அமெரிக்காவினை ஐரோப்பியர் ஆக்ரமித்து முதன் முதலாக அங்குக் குடியேறினர். அந்தப் பூமியின் யதார்த்த உடமையாளர்களான சிவப்பு இந்தியர்களுடன் சமரசம் செய்து அங்கு வாழ்ந்து கொள்வதற்குப் பதிலாக, அவர்களைக் கொன்றொழித்து அங்கு தங்களின் வாழ்க்கைத் துவங்கிய அமெரிக்கர்கள், தங்களின் அதே மனோபாவத்தையே பிலிப்பைன்ஸ், கொரியா, பலஸ்தீன் முதல் ஆப்கான் மற்றும் ஈராக்கிலும் தொடர்ந்து கொண்டு வருகின்றனர்".

அகாஸின் ஆய்வுபடி இதுவரை 112 மில்லியன் ஆதிவாசிகள் அமெரிக்கக் குடியேற்றக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டு பிறக்கும் வேளையில் அமெரிக்காவில் வெறும் 4 மில்லியன் ஆதிவாசிகளே விஞ்சியிருந்தனர்.

ஒரு நாட்டினுள் ஆக்ரமித்து நுழைந்து அந்த நாட்டின் குடிமக்களை இதுபோன்று கொடூரமாகக் கொன்றொழித்த ஒரு சமூகத்தை உலகில் வேறு எங்காவது பார்க்க முடியுமா?

அது தான் அமெரிக்கா. இரத்தக்கறையைப் பார்க்காமல் ஒருநாள் கூட அவர்களால் நிம்மதியாகத் தூங்க இயலாது.

அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்டின் அறிக்கை ஒன்று இதற்கான ஆதாரமாகும்: "சிவப்பு இந்தியக்காரர்களுக்கு மேய்வதற்கும் வேட்டையாடுவதற்கும் சிறிது நிலம் நாம் அனுமதித்துக் கொடுத்தால் அதன் அர்த்தம், காட்டுமிராண்டிகளும் நாகரீகமில்லாத்தவருமான ஒரு கூட்டத்திற்கு ஒரு கண்டம் முழுவதும் தயாராக்கிக் கொடுத்ததற்கு ஒப்பானதாகும்.

அதனால் அவர்களைக் கொன்றொழித்தல் அல்லாமல் மற்றொரு வழி நம் முன்னிலையில் இல்லை.

" இவ்வறிக்கை வெளியிட்ட தியோடர் ரூஸ்வெல்ட், 1906 ஆம் வருடத்திய உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற நபர் என்பதையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒருவரின் மனநிலையே இப்படி எனில், சமாதானத்திற்காக ஒரு சிறிய துரும்பு கூட பெற்றிராத மற்ற அமெரிக்கர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

ஒரு சமூகத்தைக் கொலை செய்யத் துணிந்தவர் அதனை இருந்த இருப்பில் ஒரேயடியாகச் செய்து முடித்தால் அதனைக் கொலையிலும் ஒருவித மரியாதை கலந்த கொலை என அழைக்கலாம். ஆனால் அவ்வாறு இல்லாமல் அச்சமூகத்தைச் சிறிது சிறிதாகச் சித்ரவதைச் செய்துக் கொல்வதை எவ்வாறு அழைப்பது?

பிரெஞ்ச் இந்தியக்காரர்களுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் சிவப்பு இந்தியக்காரர்களுக்கு எதிராக நடத்திய யுத்தம் மனித சிந்தனைக்கே எட்டாத அளவில் கொடூரமான முறையில் அது இருந்தது. அரசு அங்கீகாரமும் இதற்குக் கிடைத்திருந்தது.

கொடூரமானவர்கள் கூட செய்வதற்குத் தயங்கக்கூடிய அந்த முறை கீழ்கண்ட முறைகளில் இருந்தது: "பரிசோதனை கூடங்களில் வைத்து, பரிசீலனை பெற்றவர்கள் ஆடைகளிலும் மற்ற அணியப் பயன்படுத்தும் விதவிதமான ஆடைகளிலும் நோய் உருவாக்கும் கிருமிகளைப் படர வைப்பர். இந்தத் துணிமணிகளை அமெரிக்கப்படையினர் ஆதிவாசிகளுக்கு உபயோகப்படுத்தக் கொடுப்பர். இதன் பலன் மிகக்கொடூரமானதாக இருக்கும். இதன் பலனாக நான்கு சிவப்பு இந்திய கோத்ரங்களில் இந்நோய் படர்ந்தது. குழந்தைகள் உட்பட ஒரு மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டனர்.

"நடுங்கவைக்கும் மற்றொரு கதையையும் முனீர் அகாஸ் தனது ஆய்வு புத்தகத்தின் மூலன் வெளிப்படுத்துகின்றார். "1975 ல் ஜெரார்ட் ஃபோர்ட் அமெரிக்க அதிபராக இருந்தக் காலத்தில் வெள்ளை மாளிகையினுள் ஒரு நீச்சல் குளம் தயார் செய்வதற்காக கட்டிடத்தின் அடித்தளத்தைத் தோண்டியிருக்கின்றனர்.

அங்கு, சிவப்பு இந்தியக் கோத்திரமான "கோனாய்"களின் வசிப்பிடங்களும் "நெகின் ஷ்ட்டென்க" நகரத்தின் இடிபாடுகளும் அவர்கள் அங்கே கண்டுள்ளனர். அமெரிக்கப்படை 1623 ல் கொன்றொழித்த ஒரு சமூகத்தின் உடல்களுக்கு மேலே தான் இன்றைய உலகக் காவல்காரனின் ஆட்சிபீடம் நிலைகொண்டுள்ளது என்பது இதன் சாரம்.

அமெரிக்க வெள்ளை மிருகங்களின் கொடூரங்களுக்கு இதனை விட மற்றொரு ஆதாரம் தேவையா?கொலைகளின் ஆவணப் புத்தகம் இதுவரை 216 முறை அமெரிக்கப்படை மற்ற நாடுகளின் நிலங்களை ஆக்ரமித்துள்ளனர்.

இது அங்கீகரிக்கப்பட்ட அரசு கணக்குப்படியாகும். பல்வேறு நாட்டின் அதிபர்களையும் தலைவர்களையும் கொல்வதற்காக சி.ஐ.ஏ முதல் மற்ற உளவாளிகள் வரை நடத்திய மறைமுக செயல்திட்டங்களையும் இத்துடன் கூட்டினால் எண்ணிக்கை இதனைவிட இரு மடங்காகும்.

கூட்டு நாசம் விளைவிக்கும் குண்டுகளை 23 நாடுகளின் மீது பிரயோகித்துள்ளது அமெரிக்கா. ஹிரோஷிமா முதல் பாக்தாத் வரை எண்ணற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை அமெரிக்கப்படைகள், எதிர் நடவடிக்கை என்ற பெயரில் தகர்த்துள்ளது.

உலகம் முழுக்க அமெரிக்கா நடத்திய பயங்கர ஆக்ரமிப்புகளின் பட்டியலைச் சாதாரணமாக விவரிக்க இயலாது. பட்டியலில் அடக்கும் எண்ணிக்கைக்கும் விவரங்களுக்கும் மேலாக எழுத்தில் வடிக்க இயலா இரத்தக்கறை படிந்ததாகும் அது.

நிகராகுவா, பெரு போன்ற நாடுகளுக்கு எதிராக நடத்திய யுத்தங்கள், மெக்ஸிகன் பூமி (தற்போதைய டெக்ஸாஸ்), பனாமா கால்வாய், நிகராகுவாவின் கிரேடவுன் போன்றவற்றை ஆக்ரமித்துக் கையகப்படுத்தியமை, உருகுவே, ஹோண்டுராஸ், கொலம்பியா போன்றவற்றிற்கு எதிராக நடத்திய அக்கிரமங்கள்,

ஹெய்த்தி, சிலி, ஹோண்டுராஸ், சால்வடோர் போன்ற நாடுகளுக்கு எதிராக நடத்திய ஆக்ரமிப்புகள், கியூபாவைத் தகர்ப்பதற்காக நடத்திய முயற்சிகள், கடலிடுக்கில் அமைந்துள்ள குவாண்டனமோவைக் கையகப்படுத்துவதற்காகக் கூறிய அநியாயமான சந்தர்ப்பவாதங்கள்,

லெபனான், சோமாலியா, சூடான், லிபியா, ஈராக், அஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளைத் தகர்த்து இல்லாமல் ஆக்குவதற்காக நடத்தப்பட்ட அநியாயமான யுத்தங்கள்.... பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

அமெரிக்கா, மனித சமூகம் கண்டதிலேயே மிகவும் கொடூரமான ஆக்ரமிப்பு சக்தியாகும்.

அமெரிக்காவில் குடியேறி வசிப்பதற்காக அங்குள்ள யதார்த்தக் குடிமக்களான ஆதிவாசி சிவப்பு இந்தியர்களை அழித்தொழித்து, அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தனர்.

அதற்குப் பின் தங்கள் அரசுக்கு அடிமை வேலை செய்வதற்காக ஆப்ரிக்க நாடுகளை ஆக்ரமித்து அங்கிருந்து பாவப்பட்ட அப்பாவி மக்களை(கறுப்பின மக்கள்) சரக்குக் கப்பல்களில் மூச்சு முட்டும் அளவில் நிரப்பி அமெரிக்கத் துறைமுகங்களில் கொண்டு வந்து இறக்கினர்.அவர்களை வைத்து நரகத்தை விட மோசமான அளவில் வேலை செய்வித்தனர்.

இதோ தற்பொழுது எண்ணெய் சொத்துக்களைக் கையகப்படுத்தும் இலட்சியத்துடன் அரபு நாடுகளை ஒவ்வொன்றாகத் தகர்த்துக் கொண்டிருக்கின்றது.

சியோனிஸ தீவிரவாதத்திற்குத் தேவையான இஸ்ரேல் எனும் ஆக்ரமிப்பு பூமியை நிலைநிறுத்துவதற்காக அப்பாவி ஃபலஸ்தீனியர்களைக் கருவறுக்கும் யூத சியோனிஸ தீவிரவாதத்திற்குத் துணை நிற்கின்ரது.இப்படிப்பட்ட படு மோசமான இரத்தப்பாரம்பரியம் கொண்ட நாட்டிற்கு சமாதானத்தைக் குறித்துப் பேச என்ன தகுதி உள்ளது?. >நன்றி: தேஜஸ், 16 மே 2008. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=935&Itemid=177 <
*****************************************
மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம் ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள் பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

>> Friday, June 27, 2008

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நிகழ்ந்த தியேட்டர் குண்டுவெடிப்பு சதி தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் வாஷி பகுதியில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், தானேயில் உள்ள கத்காரி ரங்கயாதன் ஆடிட்டோரியத்திலும் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக உடனடியாக செய்தி வெளியிட்ட சில 'முந்திரிக் கொட்டை' பத்திரிகைகள் வழக்கம்போல் முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் விதமாகவும், நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் விதமாகவும் இவர்களே சிறப்பு புலனாய்வு செய்து கண்டுபிடித்ததைப் போன்றும் விஷமச் செய்திகளை வெளியிட்டன. காவல்துறையினரும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதைப் போன்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதே சந்தேகக் கண் கொண்டு பார்த்ததாக தகவல்கள் பரவின.

பின்னர், மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையினரின் தீவிர புலனாய்வுக் குப் பின், நாட்டின் பழம்பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்து செயல்பட்ட தகவல்கள் அம்பலமாயின.
இதனைத் தொடர்ந்து நான்கு சங்பரிவார் பயங்கரவாதிகள் தீவிரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப் பட்டனர்.

1. மங்கேஷ் தினகர் நிகாம்2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி3. சந்தோஷ் ஆங்ரே4. விக்ரம் பவேஎன்ற நால்வரும் கைது செய்யப் பட்டனர்.

முதலில் இவர்கள் பஜ்ரங்தள் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் கூறினர். ஆனால் தற்போது ஜனஜாகுருதி சமிதி மற்றும் சந்தன் சந்த்ஸா என்ற தீவிர இந்துத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என பிடிபட்ட பயங்கரவாதிகள் வாக்கு மூலம் அளித்தனர்.

பொதுவாகவே பிடிபட்ட உடன் தங்களது தாய் இயக்கத்தை காட்டிக் கொடுக்காமல் ஏதாவது ஒரு பெயரைச் சொல்வதே இவர்களது வழக்கம். இது கோட்சே காலத்திலிருந்தே தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கம். அந்த பாணியையே இப்போதும் சங் பயங்கர வாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

குண்டுவெடிப்புச் சதியில் ஈடுபட்ட சங்பரிவார் பயங்கரவாதிகளை தீவிரமாக விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் கள் வெளிவந்ததைத் தொடர்ந்து பயங்கரவாத குற்றவாளிகளின் வீட்டில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

பயங்கரவாதிகள் வீடுகள் அமைந் திருக்கும் ராய்காட் மாவட்டம் வர்சாகிரா மம் மற்றும் பென் கிராமத்தில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிக்கியவை:

1. அம்மோனியம் நைட்ரேட் பவுடர் (பாக்கெட் பாக்கெட்டாக)2. 20 டெட்டனேட்டர்கள்3. ஏராளமான ஜெலட்டின் குச்சிகள்4. டைமர்கள்5. வோல்டேஜ் மீட்டர்கள்6. இரண்டு ரேடியோ சர்க்யூட்கள்7. ரிமோட் கண்ட்ரோல்கள்8. ரிவால்வர்கள்9. 92 தோட்டாக்கள்
சங்பரிவார் பயங்கரவாதிகள் முழுமை யாக அம்பலப்படுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.தேசத் துரோகிகள் தண்டிக்கப்படுவார்களா?-அபூசாலிஹ்tmmkonline
****************************
மானம் காக்கும் தீர்மானம்... ''வணிக நிறுவனங்களில் பெண்களைக் கவர்ச்சிப் பொருளாகவும் விளம்பரப் பொருளாகவும்................

இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம் ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள் பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது வெட்கக்கேடானதாகவும், தீயவழியாகவும் இருக்கிறது (அல்குர்ஆன் 17:32)

>> Thursday, June 26, 2008

திருப்பதியில் விபசார அழகிகள் நடமாட்டமா?
எய்ட்ஸ் தடுப்பு அதிகாரியின் கருத்துக்கு அனைத்து கட்சிகள் கண்டனம்
திருப்பதி, ஜுன்.21- திருப்பதியில் விபசார அழகிகள் நடமாட்டம் இருப்பதாக ஆந்திர எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதிர்ச்சி தகவல்

திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில், இந்துக்களின் உலகப் பிரசித்த பெற்ற புனிதக் கோவிலாக திகழ்கிறது. இந்தியாவிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டுச் செல்கிறார்கள்.

இந்த நிலையில், திருமலையில் விபசார அழகிகள் நடமாட்டம் இருப்பதாக ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு இயக்குனர் ஆர்.வி.சந்திரவதன் வெளியிட்ட தகவல் பக்தர்களிடையே, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி சந்திரவதன் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

25 செக்ஸ் மையங்கள்

திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபசார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதம் திருப்பதியில் 7,604 ஆண்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 268 பேருக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

மேற்கண்டவாறு சந்திரவதன் கூறினார்.

திருப்பதி நகரில் மட்டும் 3 ஆயிரத்து 500 அழகிகள் விபசார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக திருப்பதிக்கும், திருமலைக்கும் வரும் பக்தர்களிடம் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் இடம் பெயர்ந்து வேலைபார்க்கும் கட்டிடத் தொழிலாளர்கள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.

அதிகாரிகள் விளக்கம்

எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி வெளியிட்ட தகவலும் அது தொடர்பான புள்ளி விவரங்களும் ஆந்திர மாநில டி.வி.சேனல்களில் நேற்று பரபரப்புச் செய்தியாக ஒளிபரப்பானது. சில சேனல்கள் கூடுதல் தகவல்களைச் சேகரித்து வெளியிட்டன. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். மனம் குமுறிய அவர்களது கேள்விக் கணைகள் திருப்பதி தேவஸ்தானத்தை நோக்கி பாய்ந்தன.
News by thinathanthi.
------------------------------------------------------



விபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது வெட்கக்கேடானதாகவும், தீயவழியாகவும் இருக்கிறது (அல்குர்ஆன் 17:32)
________________________________________

ஒரு காலத்தில் ஊரின் ஒதுங்குப் புறத்தில் மையிருளில் நடந்து வந்த விபச்சாரம் இன்று உலகின் மையப்பகுதிகளுக்கு சுடர் விடும் சூரிய ஒளியில் பகிரங்கமாக நடக்கும் காலம் வந்து விட்டது, இது மேலும் பல்கிப் பெருகி பிரசித்திப் பெற்ற தேவஸ்தானங்களின் அருகிலும் நெருங்கி விட்டது.

சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே விபச்சார அழகிகள் நடமாட்டம் என்று மேல்படி தகவலை ஊடகச் செய்தியின் வாயிலாக அறிந்தோம்.

மேற்கானும் தகவலை அறிந்த பக்த கோடிகள் புள்ளி விபரங்களுடன் தகவல் அளித்த எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து தகவலை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

இந்தியாவின் முக்கிய நகரங்களின் மையப்பகுதிகளில் போர்டு வைத்து விபச்சாரம் நடத்தும் செய்தி அறிந்து கொதித்தெழாத பக்தகோடிகள் ஏழுமலையான் கோயில் அருகே மட்டும் விபச்சார அழகிகள் நடமாடும் செய்தி அறிந்து கொதித்தெழுந்தது ஏன் ?

ஏழுமலையான் ஆலயம் இருக்கும் இடம் மட்டும் தான் புனித இடமா ? ஏழுமலையான் ஆலயத்தி;றகு வெளியில் உள்ள இடங்கள் புனிதத்துவம் வாய்ந்ததில்லையா ?

அவ்வாறெனில் இந்திய மண்ணை வணங்குகிறோம் எனும் வந்தே மாதரம் கோஷம் ஏன் ?

இந்திய மண்ணை வணங்குவதாக கூறுவது உண்மை என்றால் மண்ணின் எந்த மூளையில் விபச்சாரம் நடந்தாலும் பக்த கோடிகள் கொதித்தெழ வேண்டும் !

மண்ணை வணங்குவதாக கூறும் 'வந்தே மாதரம் கோஷம்" மாற்று மதத்தவர்களிடம் திணிப்பதற்காக மட்டும் தான் என்பதை மேல்படி சம்பவம் பட்டவர்த்தனமாக பறைசாற்றுகின்றது.

தாய் மண்ணிலிருந்து விபச்சாரம் முற்றிலுமாக துடைத்தெறியப் படவேண்டுமென்றால் ?

புரட்டுங்கள் பெருமானாரின் வாழ்க்கைப் பக்கங்களை !

அகிலம் போற்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஏக இறைவன் ஒருவனே என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளும் முன் மக்கமா நகரம் விபச்சாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தீமைகளால் சூழப்பட்டிருந்து.

ஆண்கள், பெண்கள் நிர்வாணமாக இரண்டரக் கலந்து புனித ஆலயத்தை வலம் வந்தார்கள். இன்று சகோதரத்துவத்தையும், ஏகத்துவத்தையும் பறைசாற்றக்கூடிய புனித கஃபா அமைந்துள்ள மக்கா நகரம். அன்று தீமையின் பிறப்பிடமாகத் திகழ்ந்தது

அண்ணலார் அவர்களுடைய ஏகத்துவப் பிரச்சாரம் தீமையில் மூழ்கித் திளைத்திருந்த மக்களை சென்றடைந்தப் பின் அவர்களை தலைகீழாகப் புரட்டி எடுத்து மக்காவும், மதீனாவும் அறிவின் ஊற்றுக் கண்களாக மாறிக் கொண்டது.

நகரத்தில் புறையோடிப் போயிருந்த தீமைகளை களைவதற்கு பெருமானார் அவர்கள் மண்ணின் மைந்தர்களுக்கு இறைநம்பிக்கையை ஊட்டி மனமாற்றத்தை ஏற்படுத்தினார்கள் அதனால் அவர்கள் சிறந்த சமுதாயமாக மாற்;றப்பட்டார்கள் !

அண்ணலார் அவர்கள் அந்த மக்களிடத்தில் இறைநம்பிக்கையை ஊட்டுவதற்கு முன் அவர்களிடமும் இறைநம்பிக்கை இருந்தது, அவர்கள் நாஸ்திகர்களாக இருக்கவில்லை அது எவ்வாறான இறைநம்பிக்கை என்றால் ? இன்றை இந்திய பக்தகோடிகளிடம் இருப்பது போன்ற (பலதெய்வ ) இறை நம்பிக்கையாக இருந்தது.

இவர்களுக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்
அவர்கள் உலகில் என்ன மாதிரியான மோசடியில் ஈடுபட்டு பொருளீட்டி சுகபோக வாழ்க்கையை அனுபவித்தாலும் அந்த குற்றத்திற்காக இறைவனிடத்தில் சிபாரிசு செய்து மன்னிப்பை பெற்றுத்தருவதற்கு மறைந்து சென்ற நல்லடியார்களும், இறைத்தூதர்களும் பொறுப்பேற்பார்கள் என்ற தவறான இறைநம்பிக்கை இருந்ததால் தாராளமாக தீமைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வந்தார்கள்.

இவர்கள் உலகில் என்ன மாதிரியான மோசடியில் ஈடுபட்டு பொருளீட்டி சுகபோக வாழ்க்கையை அனுபவித்தாலும் அந்த குற்றத்தை மறுபிறவியில் அனுபவித்து கழுவி தூய்மைபடுத்திக்கொள்ளலாம் என்ற தவறான இறைநம்பிக்கை இருந்ததால் தாராளமாக தீமைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வந்தார்கள்.

இறைநம்பிக்கை இருந்தது, தீமைகள் மாறவில்லை.
இறைநம்பிக்கையாளரிடத்தில் தீமை இருக்கக் கூடாது
தீமை இருந்தால் அவரிடத்தில் இறைநம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.


பெருமானார் அவர்கள் அந்த மக்களிடத்தில் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் மக்களிடத்தில் தீமைகள் பலதை சுட்டிக்காட்டி இன்னவற்றை செய்யக் கூடாது என்று முடிக்கையில் மீறினால் இறைநம்பிக்கையாளனாக மாட்டான் என்றுக்கூறி முடிப்பார்கள். அதேப்போன்று நன்மையானவற்றை செய்யத் தூண்டும் காரியத்தைக் கூறி முடிக்கையில் செயல்படுத்த வில்லை என்றால் இறைநம்பிக்கையாளனாக மாட்டான் என்றுக் கூறி முடிப்பார்கள்.

ஏகஇறைவன் ஒருவனே, அவரவர் குற்றத்திற்கு அவரவரே பொறுப்பாவார்; என்று சிந்திக்கத் தூண்டும் அறவுரைகளை அவர்களுடைய மனங்களில் ஆழமாக விதைத்தால் அது நற்செயல்களை வளரச் செய்து தீமைகளை வேறோடு சாய்த்தது.

எந்தளவுக்கென்றால் ?

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்; (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்தால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.

மக்கள் அணி அணியாக வந்து இறைத்தூதர் அவர்களிடத்தில் இனிவரும் காலங்களில் தீமைகளை செய்;ய மாட்டோம் என்று மேற்கானும் விதம் பட்டியலிட்டுக் கூறி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். அமைந்தது.

'புதியதோர் உலகம் படைப்போம்" என்றுக் கூறி அதை ஏட்டளவில் எழுதி வைத்திருப்பவர்களை பார்த்து வருகிறோம். அதை செயலளவில் கொண்டு வந்து சரித்திரம் படைத்தவர்கள் உலகில் பெருமானார்(ஸல்) அவர்களைத் தவிற வேரெவரும் இல்லை என்று அடித்துக் கூறமுடியும்.

எந்தளவுக்கு என்று சொன்னால் ? அவர்களில் ஒருசிலர் மேல்படி தீமைகளில் எதையாவது செய்து விட்டால் கூட அதைத் தாமே முன்வந்துக் கூறி இஸ்லாமிய குற்றவியல் தண்டனையைப் பெற்றுக் கொண்டு உலகில் தங்களை தூய்மை படுத்திக் கொண்ட வரலாறு அவர்களுக்கு உண்டு.

உலகம் தோன்றியது முதல் இன்று வரை இதுபோன்று மக்களுடைய மனங்களை தலைகீழாகப் புரட்டி அவர்களைக் கொண்டு புதியதோர் உலகு படைத்த சாதனை பெருமானாரைத் தவிற வேறு எந்த சரித்திர நாயகனுக்கும் இன்றுவரை கிடையாது.

இந்திய தந்தை அண்ணல் காந்தி அடிகள் சரித்திர நாயகர் முஹம்மது நபி பற்றிக் கூறுகிறார்.

இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான், அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல.
- Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi

சரித்திர நாயகர் முஹம்மது நபி பற்றி வரலாற்று ஆசிரியர் லாமர்டின் கூறுகிறார்:
சமயக் கொள்கை இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, இறைவனின் ஒருமை, மற்றொன்று இறைவனின் ஸ்தூலப் பொருளற்ற தன்மை. முந்தியது இறைவன் என்றால் என்னவென்று உரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. ஒன்று தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது. மற்றொன்று பிரச்சார துணையால் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது.
தத்துவப் போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப்பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒருகொள்கை வழி நாகரிகத்தை உருவாக்கியளித்த மாமேதை ஒரே ஆன்மீக தலைமையின் பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தான் முஹம்மது (ஸல்) அவர்கள்.
- Lamartine, Historie de la Turquie, Paris 1854, vol II, pp. 2760277

தேவஸ்தானம் மற்றுமல்லாமல் இந்திய மண்ணில் எந்த ஒரு இடத்திலும் விபச்சாரம் தலை தூக்காமல் இருக்க வேண்டுமெனில் பலதெய்வ நம்பிக்கையை துடைத்துதெறிந்து விட்டு ஓறிரை நம்பிக்கையை விதையுங்கள். மண்ணின் மைந்தர்களுடைய மனங்களில் மாற்றம் ஏற்படாதவரை மண்ணில் புரையோடிப் போயுள்ள தீமைகளை களையவே முடியாது .

இன்றும் இந்திய பாடப் புத்தகங்களில் பாரதியார் எழுதிய '' புதியதோர் உலகம் படைப்போம் கெட்டப் போரிடும் உலகத்தை வேறோடு சாய்ப்போம் "' என்றுக் கூறிய தத்துவத்தை பாடுவதோடு நிருத்திடாமல் புதியதோர் உலகு படைக்க புரட்சி மிக்க சமுதாயத்தை ஏகஇறைவன் ஒருவனே! என்ற அடிப்படையில் உருவாக்குங்கள்.

ஏகஇறைவன் ஒருவனை மட்டும் ஏற்றுக்கொண்டோம், திருட மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம், அநியாயமாக எவருடைய உயிரையும் கொலை செய்ய மாட்டோம் என்று மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளாதவரை இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் எந்த மூளையிலும் விபச்சாரம் கடவுள் ஆலயம் வரை நெருங்குவைதை எவராலும் தடுக்க முடியாது.

60:12. நபியே!(முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம், திருட மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம் எங்கள் குழந்தைகளை கொல்ல மாட்டோம் நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூறமாட்டோம் நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம் என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 60:12

> அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.<

மேலும் படிக்க... Read more...

சர்வ நோய் நிவாரணி.? உஷார்!! அலாவுதீனின் அற்புத விளக்கு. மந்திர மெஷின். மேஜிக் படுக்கை.

கடை விரித்தோம்; கொள்வாரில்லை; கட்டி விட்டோம்' என்பதெல்லாம் அந்தக் காலம்.

அதையே கொஞ்சம் மாற்றி, `கடை விரித்தோம்; கொள்வார் அதிகம்; கல்லா கட்டி விட்டோம்' என்பது இந்தக் காலம்.

இதில் சந்தேகம் இருப்பவர்கள் ஒரு நடை வேலூர் வந்து `செராஜெம்' என்ற நிறுவனத்தைப் பார்த்து விட்டுச் செல்லலாம்.

உலகில் உள்ள அத்தனை நோய்களையும் தீர்த்து வைக்கும் அதிசய இயந்திரம் ஒன்றை வைத்து அழகாகக் காசு பார்க்கிறது அந்த நிறுவனம்.

ஒரு சின்ன ஸ்டெபிலைசர் அளவு மெஷின்தான் அது. அதை வைத்துக் கொண்டு அந்த நிறுவனம் செய்யும் அலப்பரைக்கு அப்படியொரு கூட்டம் கூடுகிறது. உடலில் எந்த நோயாக இருந்தாலும் சரி, எந்தவித மருந்து, மாத்திரையோ, ஊசியோ இல்லாமல் அந்த குட்டி மெஷின் குணப் படுத்துகிறதாம்.

பக்கவிளைவுகளும் கிடையாதாம். தென்கொரிய நாட்டின் தயாரிப்பான அந்த மெஷினின் விலை அதிகமில்லை. நாற்பத்தொன்பதாயிரத்து ஐநூறு ரூபாய்தான்.

ஏதோ அலாவுதீனின் அற்புத விளக்கைப் பார்த்ததுபோல அந்த செராஜெம் நிறுவனம் நடத்தும் சிகிச்சைக்கு செமையான கூட்டம். இந்தத் தகவல் நம் காதுகளுக்கும் எட்ட, ஒரு சுபயோக சுபதினத்தில், வேலூர் கஸ்பாவுக்குப் போகும் வழியில் ஆயுதப்பிரிவு போலீஸ் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் அந்த செராஜெம் நிறுவன வாசலில் நாம் ஆஜரானோம்.

வாசலில் கட்டுக்கடங்காத கூட்டம். அங்கே அழகிய இளம்பெண் ஒருவர் நோயாளிகளின் பெயர்களைக் கேட்டு சீட்டு எழுதிக் கொடுத்தபடி இருந்தார். நாம் அங்கு நின்ற அகமது, ரிஸ்வானா என்ற இரண்டு பேரிடம் முதலில் பேசினோம்.``எனக்கு தண்டுவடப் பிரச்னை என்று வந்தேன். சிகிச்சை பெற்ற பிறகு இப்போது பரவாயில்லை.

இரண்டு வயதுக் குழந்தை முதல் நூறு வயதுப் பெரியவர்கள் வரை இந்த சிகிச்சையை எடுக்கலாமாம். சர்க்கரை வியாதி கூட தீருகிறது என்கிறார்கள். எங்களுக்கு இந்த சிகிச்சையில் நம்பிக்கை வந்திருக்கிறது'' என்றனர்.

நித்தியானந்தம் என்பவரிடம் பேசினோம். ``முதலில் பத்து நாள் இலவச சிகிச்சை என்று விளம்பரப்படுத்தினார்கள். கூட்டம் வந்து குவிந்ததும் மூன்றாம் நாளே இலவசத்தை நிறுத்தி பணம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். ரேஷன் கார்டு, போட்டோவுடன் வந்து எழுநூறு ரூபாய் கட்டி உறுப்பினராகச் சொல்கிறார்கள்.

அப்படி பணம் கட்டிச் சேர்ந்தால் இங்கே இவர்கள் பயிற்சி கொடுத்து வைத்திருக்கும் அழகழகான இளம்பெண்கள், நம் பக்கத்தில் வந்து ஒட்டி உரசாத குறையாக இந்த மெஷினின் மகாத்மியங்களைப் பற்றி விளக்குவார்கள்.

`இங்கே தினமும் ஒருமுறை சிகிச்சை எடுத்து பெரிய பலன் எதுவும் வந்து விடாது. மெஷினை விலைக்கு வாங்கி வீட்டிற்குக் கொண்டு போய் மூன்று வேளை பயன்படுத்தச் சொல்கிறார்கள். மூன்று வகை மெஷின்களை விற்கிறார்கள். அவற்றின் மொத்த விலை அறுபதாயிரம் ரூபாய்.

இந்த கம்பெனி வாசலில் இவர்களே ஆட்களை நிறுத்தி, `அந்த நோய் குணமாகி விட்டது, இந்த நோய் குணமாகி விட்டது' என்று பேச வைக்கிறார்கள். நான் 20 நாட்களாக சிகிச்சை எடுத்தும் ஹெர்னியா, கழுத்துக் கட்டி எதுவும் குணமாகவில்லை. `சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதற்கான மாத்திரைகளைச் சாப்பிட்டுக் கொண்டே சிகிச்சை எடுக்க வேண்டும்' என்று இவர்கள் சொல்வதுதான் நெருடுகிறது.

இந்த மெஷின் எல்லா நோய்களையும் தீர்ப்பது நிஜம் என்றால் அப்புறம் டாக்டர் எதற்கு? ஆஸ்பத்திரி எதற்கு?'' என்றார் அவர்.

விடிவெள்ளி ஆறுமுகம் என்பவரிடம் பேசியபோது, ``பழைய ஆயா காலத்து ஒத்தடத்தைத்தான் இந்த மெஷின் மூலம் செய்கிறார்கள். நான் ஒன்பது மாதம் ட்ரீட்மெண்ட் எடுத்தும் எந்தப் புண்ணியமும் இல்லை. அதுபற்றி அதிருப்தி தெரிவித்தால் சிகிச்சை தராமல் துரத்தி விடுகிறார்கள்'' என்றார் அவர்.

செராஜெம் நிறுவனத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரிடம் பேசியபோது, அந்த அதிசய மெஷினின் கல்யாண குணங்களை அடுக்கினார் அவர். ``அக்குபிரஷர் டிவைஸ் இது. நைன்பால் புரோஜெக்டர் சிஸ்டம் மூலம் நோய்களைக் குணப்படுத்துகிறோம்.

இந்த மெஷினுக்குள் ஜெம் கற்கள் இருக்கிறது. அதன்கீழ் ஒரு லைட்டை எரியவிட்டதும் கற்கள் சூடாகி கதிர்கள் வருகிறது. இதன்மூலம் அக்குபிரஷர், அக்குபங்சர், தெர்மல் மசாஜ் எல்லாம் கிடைக்கிறது. மனிதனின் ஸ்பைனல்கார்ட் எனப்படும் முதுகுத்தண்டுவடத்தில் இருந்துதான் கண், காது மூக்கு, கிட்னி, வயிறு,பாதம் போன்ற எல்லா பகுதிகளுக்கும் நரம்புகளும், ரத்தமும் செல்கிறது. எனவே, முதுகுத்தண்டில் இந்த சிகிச்சையைத் தருகிறோம்.

தென்கொரியா, சீனா, ஜப்பானில் இந்த சிகிச்சை முறை ரொம்பவும் பிரபலம். வேலூரில் இரண்டு இடங்களிலும், சென்னையில் 25 இடங்களிலும் சிகிச்சை தருகிறோம். கலைஞரும், ஆற்காடு வீராசாமியும் கூட இந்த மெஷினைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்'' என்று ஒரு போடு போட்டார் அவர்.

இந்த அதிசய மெஷின் பற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை செயலாளர் டாக்டர் ரவிசங்கரிடம் கருத்துக் கேட்டோம்.

`` `மேஜிக் ரெமடி ஆக்ட்' என்ற பெயரில் வித்தை காண்பித்து வைத்தியம் பார்ப்பதைத் தடுக்க மத்திய அரசு சட்டமே போட்டிருக்கிறது.

அறிவியல்ரீதியாக ஒரு மருத்துவமுறையை ஐந்து ஆண்டு, பத்தாண்டு காலம் ஆராய்ந்து அதன் முன்னேற்றம், பின்விளைவு, பக்க விளைவுகளைப் பார்த்த பிறகுதான் அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க முடியும். அந்த மெஷின் சிகிச்சை பிசியோதெரபியைச் சேர்ந்ததுதான்.

எந்த இடத்திலாவது அந்த வைத்தியத்தை நிரூபித்ததற்கு அத்தாட்சி இருக்கிறதா?

அதுமட்டுமல்ல. அந்த மெஷினை வாங்கிப் போய் வீட்டில் தினமும் பயன்படுத்த வேண்டும் என்பது வேறு நெருடுகிறது. ரூ. 49,500 கொடுத்து அதை வாங்குவதற்குப் பதில் மக்கள் நல்ல மாத்திரைகளைச் சாப்பிட்டு குணமாகிக் கொள்ளலாமே.

ஒருவருக்குக் கால் வலி என்றால் அதை அமுக்கி விட்டால் தாற்காலிகமாக வலி தீரும். அதைத்தான் இந்த மெஷின் செய்வதாகத் தெரிகிறது. இதெல்லாம் மக்களை ஏமாற்றுகிற விஷயம். இதுபற்றி டிரக் கண்ட்ரோல் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு அமைப்பு எல்லாம் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுகாதாரத்துறையும் அக்கறை கொள்ள வேண்டும்'' என்றார் அவர்.

இந்த நிறுவனத்தை நடத்தும் ஷெரீப் என்பவரிடம் பேசினோம். `இளம் பெண்களை வைத்து ஆண் வாடிக்கையாளர்களைக் கவர்வதாகச் சொல்லப்படுவது பற்றி நாம் கேட்டபோது, ``அதெல்லாம் கிடையாது. ஆண் வாடிக்கையாளர்களின் பக்கத்தில்கூட இளம் பெண்களை அனுப்புவதில்லை!'' என்று எரிந்து விழுந்தார் அவர். >>ம.பா. கெஜராஜ் kumudam reporter<<
***************************************
பக்கவாதம். பாதிப்புகள். அறிகுறிகள்.

புனித இறைவசனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். !!! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க.?

இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம் ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள் பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

பக்கவாதம். பாதிப்புகள். அறிகுறிகள்.

>> Wednesday, June 25, 2008

உடலில் ஏதேனும் ஒரு பகுதியே அல்லது கை, கால்களே செயலிழந்து போவதை பக்கவாதம் என்கிறோம். பக்கவாத நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை என்ற போதிலும் படுத்த படுக்கையாகின்றனர் என்பதுதான் சோகம். மனிதனின் மூளையில் ஏற்படும் பாதிப்புகள்தான் பக்கவாதத்திற்கு மூலக் காரணமாக அமைகிறது என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்படும் போது மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பது தடைபடுகிறது.

அப்போது அந்த மூளைப் பாகம் இயக்கும் உடல் பகுதி செயலிழந்து போகிறது. இதனை ஐசெமிக் ஸ்ட்ரேக் என்கிறார்கள்.

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்படும்போது உண்டாகும் பக்கவாதத்தை ஹெமராஜிக் ஸ்ட்ரேக் என்கிறார்கள். இது உயிரையும் பறித்துவிடக்கூடியது.தற்காலிகமாக உண்டாகும் பக்கவாதத்தை 24 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து குணமாக்காவிடில் அது ஐசெமிக் ஸ்ட்ரேக் ஆகிவிடும்.

பக்கவாதத்திற்கு பல அறிகுறிகள் உள்ளன.

பக்கவாதம் வருவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் இதற்கான அறிகுறிகள் தெரிந்து விடும். அப்பேதே அவர்களை மருத்துவமனைக்குக் கெண்டு வந்தால் அவர்களை பெரிய பாதிப்பில் இருந்து காப்பாற்றி விடலாம் என்றும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

அது என்ன அறிகுறிகள்... நமது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் நடுக்கம், மரத்துவிடும்தன்மை பேன்றவைதான் அவை என்கின்றனர்.
அதாவது ஒருவருக்கு திடீரென கைகள் மரத்துவிடுவது போன்றே, கால்களில் நடுக்கம் மற்றும் நடக்க முடியாதத் தன்மை, வாய் குழறுதல், பக்கத்தில் நிற்பவர்களை சரியாக அடையாளம் காண முடியாதத் தன்மை, ஞாபக சக்தி குறைதல், கண் பார்வை மங்குதல் போன்ற பல அறிகுறிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே தெரிந்து விடும்.

அந்த சமயத்தில் அவர்களை நாமே பரிசோதிக்கலாம். அதாவது அவர்களிடம் சத்தமாக சிரிக்க சொல்லுங்கள், 1 நிமிடம் ஏதாவது பேசச் சொல்லுங்கள், இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்லுங்கள்.

இதில் ஏதாவது ஒன்றில் அவர்களுக்கு பிரச்சினை இருந்தாலும் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

தற்போது மற்றொரு அறிகுறியும் இருக்கலாம். அதாவது அவரது நாக்கை நீட்டச் சொன்னால் அது ஏதாவது ஒரு பக்கமாக மட்டுமே நீளும். நேராக நீட்ட முடியாமல் போவதும் உண்டு.

இதுவும் பக்கவாதத்திற்கான அறிகுறி தான். எனவே பக்கவாதம் பற்றிய சந்தேகம் எழுந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கெள்வது சிறந்தது. பக்கவாதத்தை குணமாக்க மாத்திரைகளும், அறுவை சிகிச்சை முறைகளும் உள்ளன. செயலிழந்த பகுதிகளுக்குக் கொடுக்கப்படும் தொடர் பயிற்சிகளும் பக்கவாதத்தை குணப்படுத்த உதவும்.
>>HEALTH ARTICLE
------------------------------

புனித இறைவசனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். !!! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க.?

இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம் ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள் பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

புனித இறைவசனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். !!! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க.?

>> Tuesday, June 24, 2008

உலகம் முடியும் காலம்வரை புனித குர்ஆன் சத்தியமாக இறைவேதமே !

"வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம், அதை பூமிக்கடியில் தங்கவைத்தோம், அதைப்போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையோன். " திருக்குர்ஆன் 23:18.

பூமியின் மேல்பரப்பில் சில இடங்களில் மாத்திரம் விதிவிலக்காக நீர் நின்று கொள்ளும் அவ்வாறு நின்று கொள்வதையே நாம் கன்மாய்களாக, குளங்களாக பாவித்துக் கொள்கிறோம். இதுவும் மனித சமுதாய தேவையை முன்னிருத்தியே இறைவன் ஏற்படுத்தி இருக்கின்றான்.

புனித இறைவசனம் நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல்l

நிலத்துக்கடியில் தேங்கி நிற்கும் நீர் எதன் வழியாக நிலத்துக்கடியில் செலுத்தப் படுகிறது என்பதை கண்டறிய நீண்டகாலம் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு நிலத்தடி நீரின் தன்மைகளை கீழ்கானுமாறு உலகுக்கு அறிவித்தார்கள் .

• மழையிலிருந்து விழக்கூடிய நீரே நிலத்துக்கடியில் தேங்கி நிற்கிறது என்ற அறிய தகவலை முதன் முதலில் 15ம் நூற்றாண்டில் 1580ல் Bernard Palyssi (பெர்னார்ட் பாலிஸ்ஸி) என்ற புவியியல் ஆராய்ச்சியாளர் உலகுக்கு அறிவித்தார்.

• அதற்கடுத்து 17வது நூற்றாண்டில் ( E.Mariotte , P.Perrault ) என்ற அறிஞர்கள் இணைந்து நிலத்தடி நீர் பற்றி மீண்டும்; ஓர் ஆய்வை மேற்கொண்டு இறுதியில் அவர்களும் பெர்னார்ட் பாலிஸியுடைய கருத்தையே கூறினார்கள்.
14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த படிப்பறிவில்லாத உம்மி முஹம்மது நபியால் (ஸல்) நிலத்தடி நீர் பற்றின துல்லியமான தகவலை எவ்வாறு தரமுடிந்தது ?

இறைவன் அருளியதை பெற்று உலகுக்கு அறிவித்தார்கள் என்பதை தவிர வேறென்ன கூறமுடியும் !

திட்டவட்டமாக குர்ஆன் இறைவேதம் தான் என்பதை அலசுவதற்கு இது ஒருப் பெரிய ஆதாரமாகும்.

காரணம் மேற்கானும் ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீரின் தன்மைகளைக் கூறுவதற்கு முன் கடல் நீரே சுழல் காற்றின் மூலம் கடலின் அடியிலிருந்து பூமிக்கு செலுத்தப்படுகிறது என்று அனைத்து தரப்பு மக்களும் நம்பி வந்தனர் இது கிருஸ்துடைய பிறப்புக்கு முன் தோன்றி கிருஸ்துக்குப் பின் 15 நூற்றாண்டுகள் இதே நம்பிக்கை உலகம் முழுவதுமுள்ள மக்களிடம் நிலவிக் கொண்டிருந்தது.

இதற்கு மத்திய காலகட்டத்தில் தான் குர்ஆன் மேல்படி நம்பிக்கைக்கு மாறான கருத்தை கூறியது.

புனித குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் சுயமாக இயற்றப்பட்டிருந்தால் உலகம் முழுவதும் மக்களிடம் புழக்கத்தில் இருந்த கருத்தையே பிரதிபலித்திருந்திருப்பார்கள்.

குர்ஆன் ஏகப் பரம்பொருள் அல்லாஹ்வுடைய வார்த்தைகள் என்பதால் தான் மொத்த மக்களுடைய கருத்தும் கடல் நீர் தான் நிலத்தடி நீர் என்று கூறுகையில் குர்ஆனுடைய கூற்று மாத்திரம் நிலத்தடி நீர், மழையிலிருந்து பெறப்பட்டவை என்று வித்தியாசமான கருத்தை முழங்கியது.

அறிவியல் வளர்ச்சி அடைந்து அறிவியல் கூறும் தகவல்களை மக்கள் முற்றும் முழுதுமாக ஏற்றுக்கொண்ட காலத்தில் குர்ஆனுடைய கூற்றை 15ம், 17ம் நூற்றாண்டு புவிவியியல் ஆராய்ச்சியாளர்கள் மெய்ப் படுத்தினார்கள் என்பதுடன் இன்றுவரையிலும் அதே கருத்து உலகின் மொத்த மக்களுடைய கருத்தாகவும் இருந்து வருவதுடன் உலகம் முடியும் காலம்வரை அதே கருத்து நீடிக்கும் புனித குர்ஆன் சத்தியமாக இறைவேதமே !

இதை சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்து தங்களுடைய வாழ்க்கையை பரிசுத்து குர்ஆன் கூறும் கூற்றின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள முன்வருவார்களா? >> அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.<<
******************************
கெடுதல் செய்யும் உங்கள் வீட்டு குண்டு பல்புகளை சி.எப். எல். பல்புகளாக உடன் மாற்றுங்கள்.

இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம் ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள் பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

கெடுதல் செய்யும் உங்கள் வீட்டு குண்டு பல்புகளை சி.எப். எல். பல்புகளாக உடன் மாற்றுங்கள்.

கெடுதல் செய்யும் குண்டு பல்புகள். குளிர்ச்சியான ஒளியை வீசும் சி.எப்.எல் பல்பே மின் சிக்கனம்.. லாபம்

ஒரே நேரத்தில் உலகத்துக்கு உங்களுக்கும் கெடுதல் செய்யும் வேலையை ஒரு பொருள் செய்கிறது என்றால்.. நிச்சயம் அது நம்மூரின் குண்டு பல்பாகத்தான் இருக்கும்.
ஆம்.
எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஒளியைப் பரப்பியபடி, அருகே நிற்பவரை வியர்வையில் நனைய வைக்கும் வெப்பத்தை உமிழும் குண்டு பல்பை இனியும் பயன்படுத்த வேண்டுமா?

இந்தக் கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி அரசே இப்போது கேட்கத் தொடங்கி விட்டது. இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் சி.எப்.எல். பல்ப். காம்பாக்ட் ப்ளோரோ சென்ட் லைட் என்பது அதன் விரிவாக்கம். சுருக்கமாகச் சொன்னால் 10 குண்டு பல்புக்கு ஒரு சிஎப்எல் சமம் எதில்?
சுற்றுச்சூழல் பாதுகாப்பில், உலக வெப்பமயமாதலை தடுப்பதில்.நம் நாட்டில் சிஎப்எல் பல்புகள் 1995-க்குப் பிறகே வெளிச்சத்துக்கு வந்தன.
அது வரை சுவிட்சைப் போட்டு விட்டுக் காத்திருந்தால் மினுக் மினுக் என்று ஒரு வழியாக `கொய்ங் என்ற ரீங்கார சத்தத்துடன் எரியத் தொடங்கும் குழல் விளக்குதான் (டியூப் லைட்) குண்டு பல்புக்கு ஒரே போட்டியாளர். அதே புளோ ரோசென்ட் தொழில் நுட்பத்தைக் கொண்டு கையடக்க அளவில், விரும்பும் டிசைன்களில் வந்து விட்டது.

குண்டு பல்ப் மங்கலான மஞ்சள் நிற உடலுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வெளிச்சத்தைத் தரும். அதற்கு ஆகும் மின் செலவு அதிகம். அதாவது 60 வாட் அதே அளவு வெளிச்சத்தை வெண்மை நிறத்தில், குளிர்ச்சியாக வெறும் 24 வாட் மின்சக்தியில் சிஎப்எல் தரும்.
நாலடி, இரண்டடி நீள டியூப் லைட்டுக்கு பிரேம், பிட்டிங், சோக், ஸ்டார்ட்டர் என்று பட்டாளமே தேவை. ஆனால் சிஎப்எல் பல்பை சாதாரண குண்டு பல்புக்கான ஹோல்டரில் மாட்டி சுவிட்சைப் போட்டால் போதும்.
மின் சிக்கனத்தைப் பொறுத்தவரை குண்டு பல்பை விட சிஎப்எல், பல்ப் 66 சதவிகித சிக்கனம் தரும்.

குண்டு பல்ப் எரியும்போது வெளியிடும் வெப்பத்துடன் ஒப்பிட்டால், சிஎப்எல் பல்ப் 90 சதவிகிதம் குறைவாக வெளியிடும்.

குண்டு பல்பை மாற்றும் போது தொட்டால் சுடுவதில் 10-ல் ஒரு பங்கு தான் சிஎப்எல் பல்ப் சுடும். நீடித்த உழைப்பிலும் சிஎப்எல் பல்புக்கு கிட்டே நெருங்க குண்டு பல்பால் முடியாது.

6 மாதம் முதல் அதிகபட்சம் ஓராண்டு வரை மட்டுமே குண்டு பல்பின் டங்ஸ்டன் உங்களுக்காக உருகி எரியும். பிறகு, கண்ணை மூடி விடும்.
சிஎப்.எல் பல்ப் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் வரை குளிர்ச்சியான ஒளியை வீசும்.

இவ்வளவு நன்மைகள் இருந்தும் சிஎப்எல் பல்புகள் வீடுகளை இன்னும் வெகுவாக அலங்கரிக்கவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம் அவற்றின் விலைதான். குண்டு பல்ப் ரூ.15 முதல் கிடைக்கிறது.
தரமான, கம்பெனி தயாரிப்பு சி.எப்எல். பல்பின் குறைந்தபட்ச விலை ரூ.150.
எனினும் வாடிக்கையாளருக்கும் ஒரு கணக்கைத் தெரிவிக்க தயாரிப்பாளர்கள் தவறவில்லை. அது, ரூ.15-க்கு குண்டு பல்ப் வாங்கினால் 6 மாதத்துக்கு ஒன்று என 5 ஆண்டுகளில் ரூ.150 செலவாகும்.

அதுவே, ஒரு முறை ரூ.150-க்கு சிஎப்எல் பல்ப் வாங்கினால், 5 ஆண்டுகளுக்கு மேல் உழைப்பதுடன், மின்சார செலவை குண்டு பல்பைவிட 66 சதவிகிதம் குறைக்கும்.

எனவே, உடனடி செலவைப் பார்க்காமல் நீண்ட கால அடிப்படையில் கணக்கிட்டால் சிஎப்எல் பல்பே லாபம் என்கின்றனர் அவர்கள்.

இத்தனை சிறப்பான சிஎப்எல் பல்பில் ஒரே ஒரு சிறிய குறையும் இருக்கிறது. பல்பில் இருக்கும் பாதரசம், மனித உடலுக்கு தீங்கானது. அது பல்பில் குறைந்த அளவே இருந்தாலும், பல்பின் வாழ் நாள் முடிந்ததும் அது உடைந்து பாதரசம் வெளியேறாமல் பத்திரமாக அப்புறப்படுத்துவது நல்லது.
******************************
இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்து இஸ்லாத்தை தானே மனமுவந்து தழுவிய தமிழ் பெண்மணி!!!
****************************************
இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம்
ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க
சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்து இஸ்லாத்தை தானே மனமுவந்து தழுவிய தமிழ் பெண்மணி!!!

>> Sunday, June 22, 2008

அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர்.

இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக் கவனம் பெற்றன.

அந்த நூல்கள் அவருள் பிரளயத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!

நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்ட உதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள்.

தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.

சென்னை டெபுடி கமிஷ்னர் காமினியின் அழைப்பின் பேரில் த.மு.மு.க வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.

இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியுடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம். -ஆசிரியர். tmmkonline.

அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக் கூற முடியாதவை.

உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது.

இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா!


நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விடவில்லை.

இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.

என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு.


யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை.

கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன்.

இதில் எந்த ஒரு உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன்.

உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள்.


மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா அழாதீங்கம்மா!

ப்ளீஸ்... மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.

அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.
இப்படிக்கு..
ரஜிதா (எ) ஹமிதா
http://www.tmmkonline.org/news/999846.htm

மேலும் படிக்க... Read more...

இந்துமத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டுமாம்!பயங்கரவாதி பால்தாக்கரேவை கைது செய்!

>> Thursday, June 19, 2008

இந்துமத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டுமாம்!
பால்தாக்கரே சொல்கிறார்

மும்பை, ஜூன் 19- தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க இந்து மத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டும் என்று பால்தாக்கரே கூறியுள்ளார்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தனது கட்சி பத்திரி கையில் தலையங்கம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:இந்துத்துவா ஆதரவாளர்கள் குண்டு வைத்திருப்பது, இதயத்தை தொடுவதாக உள்ளது. ஆனால் இந்துக்களை காயப்படுத்த குண்டு வைக்கப் பட்டிருப்பதால் கவலையாக உள்ளது.

இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.நாடக அரங்கத்தில் குண்டு வைப்பதற்கு பதிலாக, வங்காள தேசத்தில் இருந்து ஊடுருவியவர்களும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் தளம் அமைத்துச் செயல்படும் பகுதிகளில் குண்டு வைத்தால் நன்றாக இருக்கும்.

இந்து அமைப்புகள் புரட்சி ஏற்படுத்த வேண்டும். ஆனால் இப்படி தேவையின்றி, நாடக அரங்கங்களில் குண்டு வைத்தால், புரட்சியை உருவாக்க முடியாது.

இந்தியாவில் முகலாயர்கள் புகுந்தபோது, அவர்களுக்கு எதிராக வாளை உயர்த்தும் துணிச்சல், மராட்டிய மன்னர் சிவாஜிக்கு இருந்தது. அதனால் தான் அப்போது இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.இந்து தீவிரவாதம் மூலம் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்து மதம் நீடிக்க வேண்டுமானால், நாட்டை பாதுகாக்க வேண்டுமானால், இந்து மத தற்கொலை படை உருவாக்கப்பட வேண்டும் என பால்தாக்கரே கூறியுள்ளார்.

காங்கிரசு கண்டனம்- யாராக இருந்தாலும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்; சட்டத்தைக்கையில் எடுத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கைக் குலைப்பதை அனுமதிக்க முடியாது என்று காங்கிரசுக் கட்சி கூறியுள்ளது.

சிவசேனாக் கட்சித் தலைவரின் கருத்தைக் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராசன் வன்மையாகக் கண்டித்துள்ளார். இதே மாதிரியான கண்டனத்தை பா.ஜ. கட்சித் தலைவர் வெங்கய்ய நாயுடும் தெரிவித்துள்ளார்.பத்திரிகை அறிக்கை
--------------------------------

பயங்கரவாதி பால்தாக்கரேவை கைது செய்!மத்திய அரசுக்கு தமுமுக வலியுறுத்தல்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

இந்து தற்கொலைப்படை அமைக்க வேண்டுமென்றும், இந்துத்துவாவினர் வெடிகுண்டு வைப்பதும், வெடிகுண்டு செய்வதும், நெஞ்சை தொடுகிறது என்று பயங்கரவாத கருத்துகளை வெளியிட்டுள்ள பால்தாக்கரேவை இன்னும் கைது செய்யாமல் இருப்பது இந்த தேசத்திற்கு இழிவாகும்.

எங்கெல்லாம் குண்டுகள் வைக்க வேண்டுமென்று தனது பயங்கரவாத படைக்கு பால்தாக்கரே வெளிப்படையாகவே ஆணையிட்டுள்ளார்.

இதற்கு பிறகும் அவர் மீது எந்த சட்டமும் பாயாமல் இருப்பது அரசின் கையாளாகத் தனத்தைக் காட்டுகிறது.

பால் தாக்கரே உடனடியாக கைது செய்து மும்பை கலவர வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளுக்கும் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். இது போன்ற பயங்கரவாத பேச்சுக்களை அனுமதிப்பது ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஊறு விளைவிப்பதாகும்.

மகராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் சிவசேனாவினர் வெடிக்குண்டுகள் தயாரித்த போது அவை வெடித்து சிலர் இறந்தனர், சிலர் படுகாயமடைந்தனர்.

இதற்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்பதை ஜோடிக்கும் வகையில் அவ்விடத்தில் முஸ்லிம்கள் அணியும் உடைகள், தொப்பி, ஒட்டு தாடி, ஆகியற்றையும் சிவசேனாவினர் விட்டுச் சென்றனர்.

தற்போது பால்தாக்கரேவின் இந்தப் பேச்சைப் பார்க்கும் பொழுது மகராஷ்டிர மாநிலம் மாலேகான், ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜித், மற்றும் ஜெய்பூர் குண்டுவெடிப்புகளுக்கும் சிவசேனாவிற்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.

விரும்பத்தகாத விளைவுகளுக்கு பால்தாக்கரே தன் பேச்சின் மூலம் விதை போட்டுள்ளார். பால்தாக்கரேயின் இந்த கண்டனத்திற்குரிய பேச்சிற்காக அவர் உடனே கைது செய்யப்பட வேண்டுமென தமுமுக வலியுறுத்துகிறது.

இல்லையேல் மக்கள் சக்தியை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும் என அரசை தமுமுக எச்சரிக்கிறது >>tmmkonline.

மேலும் படிக்க... Read more...

இந்தியா-இஸ்ரேல்.. உறவும் வரலாறும்...

>> Wednesday, June 18, 2008

இஸ்ரேல், சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு நாடு என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

ஐரோப்பா முழுவதும் நாடற்ற நாடோடிகளாக திரிந்த யூதர்கள், 'தாய்நாடு' என்று புழுகிக் கொண்டு பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தனர்.

ஆதியில் யாகூப் நபியின் வழித் தோன்றல்களாக, மிகுந்த பாலஸ்தீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளில் இறைநம்பிக்கை, வேதகோட்பாடு, இறைவிசுவாசம், சமய நெறிமுறைகளில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்தவர்கள்.

மூசா நபியின் காலத்திற்குப் பின்னர் தௌராத் வேதத்தை நம்பிக்கை கொண்டவர்களாகவும், ஈஸா நபியின் காலத்தில் இன்ஜீல் வேதத்தை நம்பிக்கை கொண்டவர்களாகவும் வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு சத்தியமார்க்கமான இஸ்லாத்தை நேசித்து பின்பற்றி விசுவாசிகளாக தொடர்ந்து வந்தனர்.

அந்தக் காலக்கட்டத்தில் இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் யூதர்களின் முன்னோர்கள் ஐரோப்பிய நாடுகளில் அனைத்து உரிமைகளையும் அனுபவித்து தான் வந்தனர்.

பாலஸ்தீனத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாக வாழ்ந்து வந்த பூர்வீக இஸ்ரேலியர்களை விரட்டி விட்டு, பாலஸ்தீனத்தை கைப்பற்ற ரோமில் இருந்து போப்கள் தொடர்ந்து சதி செய்து வந்தனர்.

யூதர்களை அழைத்து பாலஸ்தீனம் உங்கள் 'தந்தை யர் தேசம்' முஸ்லிம்களை விரட்டி விட்டு குடியேறுங்கள் என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இதற்கு பலமுறை சிலுவைப் போர்கள் நடந்துள்ளன. சலாஹுத்தீன் அய்யூபி என்ற முஸ்லிம் ஆட்சியாளர் காலத்தில் கி.பி 10ம் நூற்றாண்டில் சிலுவைப் போர் வீரர்கள் விரட்டப்பட்டு பாலஸ்தீன பூமி முஸ்லிம்களால் மீட்கப்பட்டது.

தொடர்ந்து ஏறத்தாழ 1000 ஆண்டுகள் முஸ்லிம்களின் பூமியாகவே பாலஸ்தீனம் நீடித்து வந்துள்ளது. ஆனாலும் ஆக்கிரமிப்பாளர்களின் சதியோசனை மட்டும் முற்றுப்பெறவில்லை. முதல் உலகப் போரில் மிகப்பெரிய முஸ்லிம் சாம்ராஜ்யமான உதுமானிய பேரரசு தோல்வி கண்டது.

துருக்கியை தலைமையகமாக கொண்டது உதுமானிய பேரரசு. அந்த பேரரசுக்குச் சொந்தமான பகுதிகளை ரஷ்யா உள்பட ஐரோப்பிய சக்திகள் பங்கிட்டுக் கொண்டன. பாலஸ்தீனம் பிரிட்டனிடம் சிக்கியது. பாலஸ்தீனத்தில் ஆட்சி அதிகாரத்தை, பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக பிரிட்டன் மாறியது.

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படையினர் யூதர்களை கொன்று வந்தனர். இந்தச் சம்பவம் யூதர்களுக்கு உலகளவில் இரக்கமனத்தை ஈட்டிக் கொடுத்தது.

நாடற்ற யூதர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போது, முடிவில் அதற்கு ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்யலாம் என்று தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட ஒரு அந்தரங்க சதி பாலஸ்தீனத்தை தேர்வு செய்ய தூண்டியது.

1948ல் பிரிட்டன் யூதர்களுக்கான ஒரு நாடாக இஸ்ரேலை அறிவித்தது. மேற்கத்திய நாடுகள் அமெரிக்கா முதலியன அதை ஒப்புக் கொண்டன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கண்டித்தன.

ரஷ்யாவின் கண்டிப்பு போலியானது.

அதேநேரம், காந்தி, நேரு போன்றோர் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடு அதை ஏற்க முடியாது என்று அறிக்கை விட்டனர்.

ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் காந்தியம் மறைந்து மக்கிப்போன வரலாறு அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது இஸ்ரேல் மீதான இந்தியாவின் நேசமும்.

அரபு முஸ்லிம் நாடுகளுடன் நட்புறவையும், வர்த்தக உறவையும் நீட்டித்து வரும் இந்திய அரசாங்கங்கள் அவ்வப்போது, இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கூறவும் தயங்கியதில்லை. ஆனால் 1950ம் ஆண்டே இந்தியா, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ள தகவலை இந்திய வெளியுறவுத் துறை வெளிப்படுத்தியுள்ளது.

1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இந்த ஆண்டு 60ம் ஆண்டு விழாவை கொண்டாடி இருக்கிறது. இதனையொட்டி இந்திய அரசாங்கம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

மே 8ம் தேதி வெளியான டெக்கான் க்ரோனிக்கல் என்ற நாளேட்டின் 8ம் பக்கத்தில் அது குறித்த ஒரு செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான தூதரகம் தில்லியில் திறக்கப்பட்டது.

1992ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி டெல்அவிவில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம் மராவ் அதற்கு காரணமாக இருந்தார்.

இச்சம்பவத்தினால் இஸ்ரேலோடு இந்தியா உறவு கொள்ள நரசிம்மராவ் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் இந்தியா இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளது. இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியன், காந்தியை உயர்வாக மதித்தார். இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்த கையோடு, யூத நிறுவனம், மும்பையில், குடியேற்ற அலுவலகத்தை திறந்தது.

தொடர்ந்தது, உடனடியாக அந்த குடியேற்ற அலுவலகம் வர்த்தக அலுவல கமாகவும், பின்னர் தூதரகமாகவும் மாற்றப்பட்டது. 1950க்கும்-1960க்கும் இடையில் அங்கொன்றும் இங்கொன்று மாக அரசு ஒப்பந்தங்கள் இந்திய - இஸ்ரேலுக்கிடையே தொடர்ந்தன.

இதனிடையே, இந்திய முன்னாள் அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் இஸ்ரேல் விஜயம் செய்துள்ளார். அதேபோல் இஸ்ரேலிய அமைச்சர் ஈகல் அலோன், மாஷி ஷாரேட் மற்றும் கிடியோன் ரஃபேல் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.

அரசியல் ரீதியான உறவுகளை இஸ்ரேலோடு, இந்தியா தொடர முடிவெடுத்தபோது 1992 பிப்ரவரியில் புதுதில்லியில் இஸ்ரேல் தூதரகத்தை திறந்தது. 1992 மே 15ல் இந்தியா இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் தூதரகத்தை திறந்தது, அதிலிருந்து இருநாடுகளுக்கிடையிலான உறவு பரந்தளவில் தீவிர வளர்ச்சி கண்டு வருகிறது''.

(தகவல்: வெளியுறவு அமைச்சகம், இந்திய அரசாங்கம்) என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

1950ல் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. பஞ்சசீலக் கொள்கை, அணி சேரா கொள்கைகளின் பிதாமகன் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட நேரு, மிகப்பெரிய சோஸலிச கொள்கை வாதியாகவும் உலக நாட்டுத் தலைவர்களால் மதிக்கப்பட்டார்.

அவரது காலத்திலேயே இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

அரபு நாடுகளுடனான உறவு சிதைவுறாமலிருக்க இந்தியா இந்த ரகசியத்தை இத்தனை காலம் மறைத்து வந்துள்ளது போலும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இந்தியல-இஸ்ரேல் உறவு குறித்து, இது ஒரு பழமையான உறவு என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அந்த உண்மை இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.

ஐ.நா சபையே இன்றுவரை இஸ்ரேலை ஒரு உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளவில்லை. இஸ்ரேலை ஒரு இனவெறி தேசமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா சபையில் அரபு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அதேநேரம் அமெரிக்க சக்தி, தனது பல்வேறு சதிவேலைகளால், இஸ்ரேலை அங்கீகரிக்கும் திசைக்கு அரபு நாடுகளை தள்ளிச் செல்கிறது.

சர்வதேச வர்த்தக கழகத்தில் சவூதி அரேபியா உறுப்பு நாடாக இணைந்த போது, அமெரிக்கா ஒரு நெருக்கடி கொடுத்தது. அதே வர்த்தகக்கழகத்தில் இஸ்ரேலும் உறுப்பு நாடு. சர்வதேச வர்த்தகக் கழகத்தில் இணையும் எந்த ஒரு நாடும், இஸ்ரேலோடு வர்த்தக உறவை ஏற்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தது. சவூதி அரசாங்கம் அதற்கும் பணிந்தது. ஆயுத வல்லரசுகள் இப்போது உலக அளவில் பொருளாதார வல்லரசுகளாக வளர்ந்து வருகின்றன.

சர்வதேச வர்த்தகக் கழகம் போன்ற உலக நிறுவனங்களை புறக்கணித்து விட்டு பொருளாதாரப் போட்டியை தொடர முடியாது. இதன் காரணமாக அரபு நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேலோடு புன்முறுவல் காட்டத் தொடங்குகின்றன.

ஜோர்டான், எகிப்து நாடுகள் ஏற்கெனவே இஸ்ரேலோடு அரசியல் பூர்வமான உறவுகளை கடைப் பிடிக்கின்றன. இவ்வாறு முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலோடு உள்ள வீராப்பை குறைத்துக் கொள்ள முன்வந்த போது, இந்தியா இதுவரை கனத்த சுமையோடு மூடிமறைத்த, கமுக்கமாக இஸ்ரேலோடு கொண்டிருந்த உறவை தடார் என்று போட்டுடைத்துள்ளது.
மட்டுமல்ல, இந்திய பாசிச சக்திகள் இந்திய முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய மாண்புகளுக் கும் எதிராக மேற்கொள்ளும் சதி வேலைகளுக்கு, இதன் அப்பனான இஸ்ரேலின் யோசனையை ஏற்க முன் வந்துள்ளது.

சென்னையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸிஸ் கொய்த்தியர் என்ற யூதர் ஒளரங்கசீப் குறித்து போலியான ஓவியக் கண்காட்சி நடத்தியதும் இதன் ஒரு பகுதிதான்.

உலகளாவிய அளவில் இஸ்லாமிய நெறியை ஒழித்துக்கட்ட விரிக்கப்பட்ட சர்வதேச வலையை இந்திய எல்லை வரை விரித்து கட்ட ஒரு புதிய அல்ல மிகப் பழைய ஒரு பாதையைத் தான் திறந்துவிட்டிருக்கிறது.

இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமோஃபோபியா போன்ற சாத்தியமற்ற திரிபு வாதங்களை, கற்பிதங்களாக இந்திய ஊடகங்கள் வார்த்துக் கொடுத்ததும் இந்த இந்தோ - இஸ்ரேல் உறவுதான்.

இதே நாடுகள் இடையிலான வர்த்தக உறவு இதுவரை 3.3 பில்லியன் டாலர் களை தொட்டுள்ளது. தாராள வர்த்தகத்தினை இருநாடுகளும் துவங்க இருக்கின்றன. சொத்து வர்த்தகம், விவசாயம் ஆகியவற்றில் இந்தியாவில் இஸ்ரேல் முதலீடு செய்துள்ளது.

அதே போல் இந்தியாவும் இஸ்ரேலில் முதலீடு செய்திருக்கிறது. இரு நாட்டு முதலீடுகளும் நிலையாக வளர்ந்து வருகிறது. உதாரணமாக, இந்தியாவுக்கு, ஒன்பது லட்சம் ஆலிவ் மரக் கன்றுகளை இஸ்ரேல் கொடுத்துள்ளது.

சொட்டுநீர்ப் பாசனத்திலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. சமீபமாக, இஸ்ரேல் உலகின் வேறெந்த பாகத்தையும்விட மிக அதிக அளவில் இந்தியாவில் விவசாய வளர்ச்சியை தொடங்கியுள்ளது.

கழிவு நீர் மேலாண்மை, தோட்டக்கலை ஆகியவற் றில் கூட்டுறவு திட்டங்களுக்கு பல மில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் பல துறைகளுக்கும் இந்த ஒப்பந்தம் விரிவடைகிறது. உயர் தொழில் நுட்பம், பாதுகாப்புதுறை ஆகிய வற்றிலும் இருநாட்டு உறவுகள் வளர்ச்சிய டைந்து வருகின்றன.

இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆசியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களில் மிகப் பெரியது. உலகின் பெரிய தூதரகங்களில் ஒன்று.

இஸ்ரேல், பொருளாதார வளர்ச்சியில் கடந்த சில ஆண்டுகளில் 5 சதவீதத்தை தாண்டியுள் ளது. இஸ்ரேலின் மக்கள் தொகை 70 லட்சத்து 30 ஆயிரம். தனிமனித வருமானம் ஆண்டுக்கு 22,000 டாலர். இது மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சராசரியை விடவும் கூடுதலாகும் என இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் மார்க் ஸாபர் மே-8 டெக்கான் குரோனிக்கல் நாளிதழில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த யாசிர் அரஃபாத்துக்கு (பாலஸ்தீன விடுதலை வீரர்) பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

பாலஸ்தீன விடுதலைக்கு இந்தியா தனது ஆதரவை தருவதாக பல்வேறு காலகட்டங்களில் உறுதி அளித்திருக்கிறது.

பாலுக்கு பூனை காவல் இருப்பதுபோல் இந்தியா பாலஸ்தீன விடுலைக்கு ஆதரவு தந்து வருவது சத்தியமாக பொய் சத்தியமே.

அரஃபாத்துக்கு விருதுடன் அல்வாவும் கொடுத்ததை அரஃபாத் அறிந்தார். நாளைய வரலாறும் அறியும். -> இறைநேசன் > tmmkonline.
******************************************

இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம்
ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க
சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம்

மேலும் படிக்க... Read more...

ஐய்யய்யோ!!! கரன்சி (ரூபாய்) நோட்டு மூலம் தொற்று நோய்!

மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை

தொற்றுக் கிருமிகளை கண்டுபிடித்து உடனுக்குடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க புது வழிகளை கையாள மருத்துவ வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர். ரூபாய் நோட்டு மூலமும் கண்டுபிடிக்கலாம் என்று கூறியுள்ளனர். லண்டனில் இருந்து வெளிவரும் ஆன்லைன் மருத்துவ இதழான, 'நியூ சயின்டிஸ்ட்" என்ற இதழில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

தொற்றுக்கிருமிகள் எப்படி பரவுகின்றன என்று லண்டன் பல்கலைக்கழக குயின்மேரி கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர் குவாங்காங் ரென் ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் சில வித்தியாசமான தகவல்களை கூறியுள்ளார் தன் ஆய்வுக் குறிப்பில்...

தொற்றுக் கிருமிகள் என்பது பல வழிகளிலும் மனிதர்களை தொற்ற முடியும். காற்று மூலம் பரவும் தொற்றுக் கிருமிகள் குறைவுதான் என்றாலும், சில வானிலை பருவ காலங்களில் இப்படிக் காற்று மூலம் பரவும் தொற்றுக் கிருமிகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

சில இடங்களில் தொடர்பு ஏற்படுவதன் மூலம் கூட தொற்றுக் கிருமிகள் தொற்ற வாய்ப்புண்டு. குறிப்பாக சொன்னால், வங்கிகள் அளிக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்துகூட தொற்றுக் கிருமிகள் வர வாய்ப்புண்டு. அதனால் அவற்றில் வைரஸ் தாக்குதலை தடுக்கும் 'ஆன்ட்டி வைரஸ் கோட்டிங்" தருவது முக்கியம். அப்படி தந்தால் தொற்றுக்கிருமிகளை தடுக்க ஓரளவு முடியும்
.
இத்தோடு தானியங்கி 'வெண்டிங் மிஷின்கள்" எங்கும் வந்துவிட்டன. ரயில் டிக்கெட் முதல் காண்டம்கள் வரை தானியங்கி 'வெண்டிங் மிஷினில்" இருந்துதான் நாம் பெற்றுக் கொள்கிறோம்.

இவற்றில் கிருமிகளைத் தடுக்க வெண்டிங் மிஷின்' பட்டன் பகுதியில் ஆன்டி வைரஸ் கோட்டிங்" தரலாம்.

அதுபோலத்தான் அலுவலகங்களில் பயன்படுத்தும் பேக்ஸ் பேப்பர்களும் அதன்மூலமும் இப்படி தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. அதனால் அதிலும் இந்தத் தடுப்பு முறையை பயன்படுத்தலாம்.

மெட்டல் கோட்டிங், மெட்டல் ஆக்சைடு, செராமிக் நானோ பார்ட்டிக்கல்ஸ் போன்ற ரசாயன கலவைமூலம் 'ஆன்டி வைரஸ் கோட்டிங்" முறையை நடைமுறைப்படுத்தலாம்.

காற்றுமூலம் பரவும் தொற்றுக் கிருமிகளைத் தடுக்கவும், "நானோ மெட்டிரியல்" மூலம் புதுமுறைகளை நாம் கையாள வேண்டும். நானோ டெக்னாலஜி மூலம் பல வகையில் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.
**********************************

தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...

இந்து
இஸ்லாம்
ஒளரங்கசீப்
கம்ப்யூட்டர்
கிறிஸ்தவம்
சிந்திக்க
சிரியுங்கள்
திப்பு சுல்தான்
தெரிந்து கொள்ளுங்கள்
பிற மதம்
பைபிள்
மருத்துவம்
விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...

>> Tuesday, June 17, 2008

உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது.
ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.

இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.

120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.

நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

சுத்தமான தேனா என்பதை அறிய...


தேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.




படிக்க: --- . மருத்துவம்

மேலும் படிக்க... Read more...

மன அழுத்தம் ஏன்?

>> Monday, June 16, 2008

குடும்பத்தில் யாருடனாவது கத்த்த்தி..., சண்டை போட்ட படபடப்பில் சிலர் மூச்சு வாங்க அவசர அவசரமாக தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து காலி செய்வதைப் பார்த்திருப்பீர்கள். தண்ணீர் பருகினால் தணியுமா பதற்றம்?

ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும்.

`மனசே சரியில்லை' என்று புலம்புபவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறார்கள். மனஅழுத்தப் பிரச்னை குறித்து உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வை நடத்தியது. அதில் தெரியவந்த உண்மைகள்...
அமெரிக்கர்களை செயல்பட முடியாமல் முடக்கிப் போடுவதில் மனஅழுத்தத்திற்குத்தான் முதலிடம்.

ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால், இதயநோய், மூளை செயலிழப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமானவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மனஅழுத்தம்தான்.

ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள் எவை?

நாள் முழுக்க மனசே சரியில்லை என்கிறீர்களா?
அதிக நேரம் தூங்குகிறீர்களா?
உடலில் சக்தி இல்லாமல் மயக்கம் வருவது போல் உணர்கிறீர்களா?
உங்கள் மேல் உங்களுக்கே மதிப்பு இல்லையா?
எதிலும் கவனம் செலுத்த முடியவில்லையா?
முடிவெடுக்க இயலவில்லையா?
தன்னம்பிக்கை இல்லாமல் உதவிக்கு யாரும் வரமாட்டேன் என்கிறார்களே என்று நினைக்கிறீர்களா?
வெறுமையை உணர்கிறீர்களா?

இந்தக் கேள்விகளில் ஏதாவது இரண்டிற்கு நீங்கள் `ஆம்' என்று பதில் சொன்னால், உங்களுக்கு மனஅழுத்த பாதிப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

ஏதாவது ஒன்றைப் பற்றி மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கை, அவனது உணர்ச்சிகள் மனஅழுத்தத்தை உண்டுபண்ணக் கூடும் என்பது உண்மைதான். அதே நேரம், மூளையின் ரசாயன சமநிலையில் மாற்றம் காரணமாகவும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

மனஅழுத்தத்தை உண்டாக்கும் மூளை ரசாயன சமநிலை வேறுபாட்டை உணவுப் பழக்கத்தை மாற்றுவதால் சரிசெய்ய இயலும்.

ஒரு மாதம், நிறைய தண்ணீர் குடித்துப் பழகவேண்டும். அதே நேரம் குளிர்பானங்களை மறந்துவிட வேண்டும். சுவை, நிறம் மற்றும் வாசனைக்காக குளிர்பானங்களில் ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மூளையின் ரசாயன சமநிலையைப் பாதித்து மனஅழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை.

முழுத் திறனுடன் மூளை செயல்பட நீர்ச்சத்து அவசியம். மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை மின்சாரத்தைப் போல, நரம்பு மண்டலம் உடல் முழுவதும் கடத்திச் செல்கிறது. நீர்ச்சத்துக் குறைந்தால், மூளை மற்றும் நரம்புகளால் இயங்கும் உடலின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.

எனவே, தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் கூடுதலாக நீர் அருந்தவேண்டும்.

குளிர்பானங்களைப் போல பாக்கெட் உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டும். பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நைட்ரைட், நெட்ரேட் சல்ஃபைட் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் இவற்றில் சேர்க்கப்படுகின்றன.

இந்த ரசாயனங்களின் செயல்பாடு மூளைப்பகுதியில் குறிப்பிட்ட அளவு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும். நன்மை எதுவும் தராத இவற்றை தவிர்த்தால், மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்.

`சாப்பாட்டில் காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ளவேண்டும்' என்று சொன்னால் சிலர் முகம் சுளிப்பார்கள். உண்மையில், காய்கறி மற்றும் பழங்களில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறையவே உள்ளன.

இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை.

எனவே, உணவில் காய்கறிகள் கட்டாயம் இருக்கவேண்டும். சமைத்த காய்கறிகளைவிட, இயற்கையாகக் கிடைக்கும் நிலையிலேயே உட்கொண்டால் மிக நல்லது.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்த்து மற்ற காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

மூளையின் செயல்பாட்டுத் திறனுக்கு கொழுப்பு அமிலங்களும் முக்கியத் தேவை. ஒமேகா-3, கொழுப்பு அமிலம் உள்ள சார்டின், சால்மன் போன்ற மீன் வகைகளை சாப்பிடலாம். அதிகமாக மீன் சாப்பிட முடியவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது மீன் எண்ணெய் மற்றும் அது அடங்கிய மாத்திரைகள்.

ஆக, இயற்கையான மற்றும் சத்தான உணவு உண்டால் உடலை நலமாக வைத்துக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் சீர் குலைந்தால் மன அழுத்தத்தால் மனிதன் பாதிக்கப்படுவான். ஆரோக்கியம் தரும் உணவும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் மன அழுத்தத்தைத் தவிர்த்து, நிம்மதியைத் தரும் என்பது உறுதி. >>சுகன் kumudamhealth
********************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

சோற்றுக்கும் வருமோ பஞ்சம்.?

>> Sunday, June 15, 2008

இன்னும் பத்து ஆண்டுகளில் உலகம் கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கும் என்று பொருளாதார நிபுணர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் எச்சரித்து வருகிறார்கள்.

நட்சத்திரங்களைப் பிடிக்க நைலான் வலை வீசுவது போல, உணவுப் பொருட்களுக்காக மக்கள் ஆங்காங்கே படையெடுப்புக்களை நடத்துவார்கள்.

நைலான் வலையால் நட்சத்திரங்களை எப்படிப் பிடிக்க முடியாதோ, அதே போல உணவுப் பஞ்சத்திற்கு படையெடுப்புக்கள் பரிகாரமாக இருக்காது. அராஜகம்தான் அமர்க்களமாக இருக்கும்.

உணவுத் தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம் என்று அமெரிக்கா ஓர் அற்புதமான கருத்தைச் சொன்னது.`இந்தியாவும் சீனமும் பொருளாதாரத்துறையில் முன்னேறி விட்டன.

அந்த நாட்டு மக்கள் இப்போதெல்லாம் நன்கு சாப்பிடுகிறார்கள். அதுதான் உலக உணவுத் தட்டுப்பாட்டிற்குக்காரணம்' என்று முதலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறினார். இதனை ஏதோ நகைச்சுவைக் கருத்து என்றுதான் நம்பினோம். ஆனால், அடுத்து அம்மணியின் கருத்தையே அமெரிக்க ஜனாதிபதி புஷ் வழிமொழிந்தார்.

இந்த வக்கிரவாதத்திற்கு, இந்திய அரசு பதில் சொல்லியிருக்க வேண்டும். வாயே திறக்கவில்லை.ஒருவேளை அதனையே மன்மோகன் சிங்ஆசீர்வாதமாக எடுத்துக் கொண்டாரோ என்னவோ?

ஆனால், ரோம் நகரில் நடந்த உணவுப் பிரச்னை தொடர்பான சர்வதேச மாநாடு அமெரிக்க வாதத்திற்கு எதிர்ப்பாட்டு பாடியிருக்கிறது. உணவுப் பஞ்சம் வருவதற்கு அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகளின் குண்டு மனிதர்கள் மேலும் தின்று கொழுப்பதுதான் காரணம் என்று கூறியிருக்கிறது.

உலக அளவில் உணவுப் பஞ்சம் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. காரணம், மேற்கு நாடுகளின் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றிக் கொண்டனர். உணவுக்காக அவர்கள் அதிக அளவில் செலவு செய்கின்றனர் என்று அந்த மாநாடு சுட்டிக் காட்டியிருக்கிறது.

அந்த மாநாடு இன்னொரு கருத்தையும் சிந்தனைக்கு விருந்தாகப் படைத்திருக்கிறது. மேற்கு நாடுகளில் ஒரு பக்கம் மக்கள் உண்டு கொழுக்கும்போது, இன்னொரு பக்கம் ஏழை நாடுகளில் லட்சோபலட்சம் மக்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பட்டினிப் பட்டாளம் பெருகுவதற்குக் காரணம், மேற்கு நாடுகளின் உணவுப் பழக்கம்தான் என்று அந்த மாநாடு சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதேசமயத்தில்,மேற்கு நாடுகளிலும் ஏழை எளிய மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் பட்டினிப் பட்டாளத்தில் அணிவகுப்பவர்கள்தான் என்பதனை அந்த மாநாடு காணத் தவறி விட்டது.

அமெரிக்க அதிபர் புஷ்ஷின் வாதப்படி இந்திய மக்கள் அனைவருமா பொருளாதார முன்னேற்றம் கண்டு வளமான வாழ்வு பெற்று விட்டனர்?

இங்கேயும் ஆண்டிற்கு ஆண்டு வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்படுகிறவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. இந்திய அரசின் இன்றைய பொருளாதாரத் திட்டங்கள் ஒரு பக்கம், புதிய புதிய கோடீசுவரர்களை உருவாக்குகிறது.வளர்ச்சியின் பலன்களை அவர்கள்தான் அனுபவிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், பட்டணங்களில் விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடிய நிலைமை மாறி நடுத்தர,சிறிய விவசாயிகளும் நிலங்களை இழந்து நகரங்களில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.சமுதாய ஏற்றத்தாழ்வு வெகுவேகமாக விரிவடைந்து வருகிறது.

எறும்புகள் ஏறி இமயமலை தேய்வதில்லை. சமுதாயத்தின் ஒரு பிரிவினர் உண்டு கொழுப்பதே உணவுப் பஞ்சத்திற்குக் காரணம் என்பதனை ஏற்பதற்கு இல்லை. ஆனால், உணவுப் பஞ்சத்தை செயற்கையாக உருவாக்குபவர்கள் வாதத்திற்கு நிற்காத இத்தகைய காரணங்களை எடுத்து விடுகிறார்கள்.

அமெரிக்காவிலும் இதர மேற்கு நாடுகளிலும் இன்றைக்கு விவசாயம் என்பது ஆண்டிப்பண்டார நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. உணவு உற்பத்தி வெகுவேகமாகக் குறைந்து வருகிறது. விளைநிலங்களில் எரிபொருள் தேவைக்கான வித்துக்கள் அறுவடை செய்யப்படுகின்றன. அதனைத்தான் பயோ டீசல் உற்பத்தி என்று குறிப்பிடுகிறார்கள்.

சுருங்கச் சொன்னால், உணவு உற்பத்தி முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் அபாயத்தை ரோம் நகரில் நடந்த உணவுப் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஒரு பக்கம், உணவுதானிய உற்பத்தி வெகுவாகக் குறைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம்,உணவு தானியங்களே பயோ டீசலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

`பயோ டீசலுக்கு உணவு தானியங்களைப் பயன்படுத்துவது அதிகரித்தால் உறுதியாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்' என்று இந்திய விவசாய அமைச்சர் சரத்பவார் ரோம் மாநாட்டில் எச்சரித்தார்.

ஒருகாலத்தில் அமெரிக்கா அபரிமிதமான விளைச்சல் கண்டது. விலை ஏற்றத்தைத் தடுக்க கோதுமையைக் கடலில் கொட்டியது. விவசாயம் செய்யாமல் தரிசாகப் போட்டால் அதற்கு மானியம் அளித்தது. ஆனால் இன்றைக்கு அதே அமெரிக்காவில் உணவுத் தட்டுப்பாடு வரும் என்று எச்சரிக்கிறார்கள்.

இன்றைக்கு இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து சாமானிய மக்களுக்கு வாழ்வளிப்பது கைத்தறித் தொழில்தான். நூல் விலை ஏற்றம் அதன் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. ஆடை உற்பத்தியாளர்கள் அபாயச் சங்கு ஊதிவிட்டனர்.

நூல் விலை ஏற்றத்திற்கு என்ன காரணம்?இந்தியப் பருத்தி அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. என்ன காரணம்? பருத்தி உற்பத்தியின் பரப்பளவை அமெரிக்கா சரிபாதியாகக் குறைத்து விட்டது. அதனைவிட பயோ டீசல் உற்பத்திக்காக பயிர் செய்வது ரொம்ப லாபம் என்று முடிவு கட்டி விட்டது. அதே சமயத்தில், பருத்தியும் தேவை. அதனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது. இங்கே நூல் விலை மேகமண்டலத்திற்கு மேலே உயர்ந்து விட்டது.

உணவு தானிய உற்பத்தியைக் குறைத்தாலோ, எரிபொருளாக அதனை எரித்தாலோ உணவுப் பஞ்சம் வரும் என்பது அமெரிக்காவிற்குத் தெரியாதா? தெரிந்துதான் உலகை உணவுப் பஞ்சத்தில் ஊஞ்சலாட்ட விரும்புகிறது. அதன் வழியையே பிரிட்டன், பிரான்சு போன்ற மேற்கு நாடுகளும் தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. உலகிற்கே இதுதான் வழியென்றால் இன்னும் பத்து ஆண்டுகளில் மக்களிடம் பை நிறையப் பணம் இருக்கும். ஆனால் கைநிறைய உணவு கிடைக்காது.

கடந்த 2006-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குப்படி,ஆயுதங்கள் வாங்குவதற்காக பல நாடுகள் ஆண்டிற்கு 12லட்சம் கோடி ரூபாய்செலவிட்டன. ஆனால், விவசாய உற்பத்திக்காகச் செலவிடுவது பாதியாகக் குறைந்து விட்டது. இதனை ஐ.நா. உணவு அமைப்புத் தலைவர்ஜாக்கஸ் ட்யூப் ரோம் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். உணவுத் தட்டுப்பாடு உலக அளவில் பெரும் பிரச்னையாக உருவாகும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். இந்த நிலை உருவானால், அதற்கு அமெரிக்காவும் இதர மேலை நாடுகளும்தான் பொறுப்பு என்பதனை ரோம் மாநாடு சுட்டிக் காட்டியிருக்கிறது.

சென்ற ஆண்டு உணவுத் தட்டுப்பாடு இந்தியாவை எட்டிப் பார்த்தது. `அரசே கொள்முதல் செய்யக் கூடாது. சேமிக்கக் கிடங்குகள் கட்டக் கூடாது. அப்படிச் சேமித்தால் எலிகள் மேய்ந்து விடும். எதற்கு இந்த வீண் தொல்லை? நெல், கோதுமையை தனியார் கொள்முதல் செய்ய அனுமதியுங்கள்தட்டுப்பாடு ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள்' என்பது உலக வங்கியின் உபதேசம்.ஆமாம். எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தச் சொன்னது.

இந்த உபதேசத்தை அதன் சீடர்கள் செயல்படுத்தத்தானே செய்வர்? எனவே, சென்ற ஆண்டு தனியார் தாராளமாகக் கொள்முதல் செய்து குவிக்க, அரசின் உணவுக் கிடங்குகள் அநாதைகளாகக் கிடந்தன. உணவுத் தட்டுப்பாடு வந்தது.வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதிசெய்தனர்.

அதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த மண்ணிலேயே தேவையான அளவிற்கு கோதுமை விளைந்து கொட்டும்போது எதற்காகஇறக்குமதி செய்கிறீர்கள் என்று கண்டனக் கணைகள் பாய்ந்தன. இறக்குமதி என்று நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்தப் போவதாகஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் எச்சரித்தார்.

இந்த ஆண்டு நமது விவசாய அமைச்சர் சரத்பவார் விழித்துக் கொண்டார். ஓர் ஆண்டிற்குத் தேவையான கோதுமையைக் கொள்முதல் செய்து விட்டார். செயற்கைப் பஞ்ச சூத்திரதாரிகள் திருதிருவென்று திருட்டு முழி முழிக்கிறார்கள். > SOLAI - KUMUDAM.COM
***************************
பெட்ரோல் விலையேற்றம்: திவாலாகும் உலகம்!
****************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP