**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

VIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!ஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்

>> Wednesday, November 26, 2008

ஊடகங்களில் இதன் துணைத் தலைப்பு, வழக்கமான
பாகிஸ்த்தானின் ஐ.எஸ்.ஐ சதித் திட்டம் அம்பலம்" என்றோ நம் நாட்டின் காவல்துறை குற்றம் சுமத்தி விட்டு, ஆதாரங்களைத் தேடிப் பல்லாண்டு காலம் அல்லாடும் அமைப்பான "சிமியின் சதி தவிடுபொடி" என்றோ
அண்மையில் 'உருவாக்கப் பட்டு' அடிக்கடி ஊடகங்களில் உலா வரும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளின் கோரமுகம்" என்றோ இருக்கப் போவதில்லை.
************************************************************************************* நம்ம நட்டுல எங்க குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே காவல்துறையினர் இது இந்த தீவிரவாத அமைப்பின் வேலையாக இருக்கலாம். ( அவங்களுக்குத்தான் ஏகப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் மட்டும் தெரியுமே)
ஆனாலும் ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்திச்சு. அது இப்ப உண்மையாகி வருது.
CARTOON - COMMENTS --நன்றி: குமுதம்.காம்

*******************************************************************************
"ஆர். எஸ். எஸின் பொதுச் செயலாளர் மோகன் பகவத்தையும் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரையும் ஒழித்துக் கட்டுவதற்குத் திட்டமிருந்தது.

அவ்விருவரையும் கொன்று விட்டு, முஸ்லிம் அமைப்புகள் ஆர். எஸ். எஸ். தலைவர்களைக் கொலை செய்து விட்டனர் என்று திசை திருப்புவதற்கும் திட்டம் வகுத்திருந்தோம்" என்று மலேகோன் குண்டு வெடிப்பை நடத்தி, தற்போது மகாராஷ்டிர அரசின் தீவிரவாதத் தடுப்புப் படை(ATS)யினரது விசாரணையின் கீழுள்ள பயங்கரவாதிகள் தெரிவித்தனர்.

கொலைச் சதித் திட்ட ஆதாரங்களை, கடந்த வெள்ளிக்கிழமை (21.11.2008) எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியைச் சத்தித்துப் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் M.K. நாராயணனும் நுட்புலத்துறை(ஐ.பி)த் தலைவர் P.C. ஹல்தாரும் அத்வானியிடம் காட்டியுள்ளனர்.

அதையடுத்து, கடந்த சனிக்கிழமை (22.11.2008) அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸின் இணைப் பொதுச் செயலாளர் மதன் தாஸ் தேவி, "இரு தலைவர்களைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப் பட்ட செய்தி உறுதியானதுதான்" என்று கூறியுள்ளார்.

"இந்துத் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸின் தலைவர்களை, இந்துத் தீவிரவாதிகளே கொல்ல முயன்ற காரணம் என்ன?" என்ற கேள்வி ஒன்று எழுவதைத் தவிர்க்கவியலாது.

இந்தக் கேள்விக்கு விடை ATS வசம் தற்போது தோண்டப் பட்டுக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்குச் சொந்தமான மடிக்கணினிகளில் இருக்கிறது.

ஆர். எஸ். எஸ். பொதுச் செயலாளர் மோகன் பகவத்தும் அதன் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரும் 'போதிய அளவு' தீவிரமாகச் செயல்படவில்லை என்ற ஒரு குற்றமும் முஸ்லிம்கள் விஷயத்தில் அவ்விருவரும் மென்மையாக நடந்து கொண்டதாக இன்னொரு குற்றமும் அதில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தற்போது ATSயின் பிடியிலுள்ள சுதாகர் திவேதி (எ) தயானந்த் பாண்டே (எ) அம்ரிதானந்த் தேவ் தீர்த் மகாராஜுக்குச் சொந்தமான மடிக்கணினியில் காவல்துறைக்குத் தேவையான பாண்டேயின் 'இரகசிய சந்திப்புகள்' குறித்து நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் கடந்த ஜனவரி 26இல் ஃபரிதாபாத்தில் நடைபெற்ற ஆசிரமச் சந்திப்பும் போபாலில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற சத்திப்பும் மாலேகான் குண்டு வெடிப்புக்குச் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 'மிக முக்கிய'ச் சந்திப்பும் பாண்டேயின் மடிக்கணினியில் பதிவு செய்யப் பட்டுள்ளன.





மாலேகோன் குண்டுவெடிப்பில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், CLICK..ஒப்புக் கொண்ட போதேகுண்டு வெடிப்பின் பின்னணியில் வேறு சில முக்கியப் புள்ளிகள் இருக்கக் கூடும் என்ற ஐயம் எழுந்தது. மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்குக்காகத் தேடப் பட்டு வரும் இன்னொரு முக்கியக் குற்றவாளியான ராம்ஜி என்பவனைப் பற்றிய விபரங்களோடு இன்னும் சில முக்கியப் புள்ளிகளைப் பற்றிய விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கலாம்http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1105&Itemid=51
---------------------------------
குண்டு வெடிப்பில் தொகாடியாவுக்கு தொடர்பு!
சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு கெடுதல் விளைவிக்கும் செயலை நாளும் இழைத்து வரும் சங் பரிவார் கும்பலின் சதிச் செயல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தாங்கள் சுத்த யோக்கியர்கள் போலும் தேசப் பற்றுக்கே நாங்கள்தான் சான்றி தழ் வழங்குவோம் என்றும் தருக்குடன் கூறிக் கொண்டிருந்தவர்கள், தங்களைத் தவிர மற்றவர்கள் மீது சந்தேகம் தோன்றும் வண்ணம் துவேஷக் கதைகளை பரப்பி வந்தனர்.

அப்பாவி இந்துக்களை ஏமாற்றுவதையே கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து வந்தனர். அதனால் நாடெங்கும் பெரும் வன்முறைகளை நிகழ்த்தினர். வன்முறைகளில் நாட்டின் பெரு மைக்கு சான்றாக விளங்கிய முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றிய அந்த சமூகம் குற்றப் பரம்பரையினர் போல் நடத்தப்பட்டனர்.

ஊடகங்களும் கூட இந்த பாரபட்ச போக்கை கவனம் பிசகாது கடைப்பிடித்தன.

சத்தியம் ஒருநாள் வென்றே தீரும் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப கால நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

செப்டம்பர் 29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு சதிச் செயல் தொடர்பாக சங் பரிவார் சதிகாரர்கள் வகையாய் மாட்டிக்கொண்டனர்.

பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்ற பழமொழிக்கேற்ப சங் பயங்கரவாதிகள் தொடர்ந்து சதிச் செயல் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில தீவிரவாத தடுப்புப் படையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.

காலகாலமாக பரப்பப்பட்ட கட்டுக் கதைகள் அம்பலமாயின.

சங் பரிவார் சதிகாரர்கள் இந்நாட்டையும் மக்களையும் எந்த அளவு ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெளிவானது. இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போனது.

இவர்கள் தங்களது பிற்போக்குத் தனமான மதவெறியை, இழிவான முறையில் பரப்பினர்.

சாமியார்கள் பயங்கரவாத சாமியார்களாக மாறினர். ராணுவத்திலும் கூட பயங்கரவாத நச்சு சிந்தனைகள் ஊடுருவின. உத்வேகம் பெற்றன. ஓய்வு பெற்ற உபாத்யாய்கள், சமீர் குல்கர்னிகள் போதாதென்று பணியிலிருக்கும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹிதுகள் அப்பாவிகளை குண்டு வைத்து கொலை செய்து நாட்டையே அவமானத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

சங்பரிவார் சதிவலைகள் தொடர்ந்து வரும் நிலையில் விடிந்தால் எந்த சங் கும்பல் தலைவன் சிக்குவானோ என்று மக்கள் தினமும் ஆவலாய் எழுகின்றனர்.

பெண் சாமியார் பிரக்யாசிங் போன்றவர்கள் அப்பாவி மக்களின் ஆன்மீக பலவீனங்களை பயன்படுத்தி தீவிர வாதத்தை வளர்த்தனர்.

இந்நிலையில் இதுவரை பெரிய முதலைகள் சிக்காத நிலையே நீடித்தது. சில்லறை தேவதைகள் மட்டுமே பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஒரு காவி முதலை, திரிசூலம் தூக்கும் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனும் மாலேகான் சதி வழக்கில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.

மதவெறி கூட்டங்களில் திரிசூலங்களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றாவது முனை சமாதானம் பேசும் ஹிந்துக்களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!) தற்போது மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் என்றும் முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்ய கொள்ளை கொள்ளையாய் பணம் அள்ளிக் கொடுத்தவர் என்றும் தீவிரவாத தடுப்புப்படை இவரைப்பற்றி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து தொகாடியாவை தூக்கில் போடு என இந்தியாவெங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்http://www.tmmk.info/news/999564.htm
---------------------------------------
'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்?

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP