புனித இறைவசனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். !!! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க.?
>> Tuesday, June 24, 2008
உலகம் முடியும் காலம்வரை புனித குர்ஆன் சத்தியமாக இறைவேதமே !
"வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம், அதை பூமிக்கடியில் தங்கவைத்தோம், அதைப்போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையோன். " திருக்குர்ஆன் 23:18.
பூமியின் மேல்பரப்பில் சில இடங்களில் மாத்திரம் விதிவிலக்காக நீர் நின்று கொள்ளும் அவ்வாறு நின்று கொள்வதையே நாம் கன்மாய்களாக, குளங்களாக பாவித்துக் கொள்கிறோம். இதுவும் மனித சமுதாய தேவையை முன்னிருத்தியே இறைவன் ஏற்படுத்தி இருக்கின்றான்.
புனித இறைவசனம் நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல்l
நிலத்துக்கடியில் தேங்கி நிற்கும் நீர் எதன் வழியாக நிலத்துக்கடியில் செலுத்தப் படுகிறது என்பதை கண்டறிய நீண்டகாலம் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு நிலத்தடி நீரின் தன்மைகளை கீழ்கானுமாறு உலகுக்கு அறிவித்தார்கள் .
• மழையிலிருந்து விழக்கூடிய நீரே நிலத்துக்கடியில் தேங்கி நிற்கிறது என்ற அறிய தகவலை முதன் முதலில் 15ம் நூற்றாண்டில் 1580ல் Bernard Palyssi (பெர்னார்ட் பாலிஸ்ஸி) என்ற புவியியல் ஆராய்ச்சியாளர் உலகுக்கு அறிவித்தார்.
• அதற்கடுத்து 17வது நூற்றாண்டில் ( E.Mariotte , P.Perrault ) என்ற அறிஞர்கள் இணைந்து நிலத்தடி நீர் பற்றி மீண்டும்; ஓர் ஆய்வை மேற்கொண்டு இறுதியில் அவர்களும் பெர்னார்ட் பாலிஸியுடைய கருத்தையே கூறினார்கள்.
14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த படிப்பறிவில்லாத உம்மி முஹம்மது நபியால் (ஸல்) நிலத்தடி நீர் பற்றின துல்லியமான தகவலை எவ்வாறு தரமுடிந்தது ?
இறைவன் அருளியதை பெற்று உலகுக்கு அறிவித்தார்கள் என்பதை தவிர வேறென்ன கூறமுடியும் !
திட்டவட்டமாக குர்ஆன் இறைவேதம் தான் என்பதை அலசுவதற்கு இது ஒருப் பெரிய ஆதாரமாகும்.
காரணம் மேற்கானும் ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீரின் தன்மைகளைக் கூறுவதற்கு முன் கடல் நீரே சுழல் காற்றின் மூலம் கடலின் அடியிலிருந்து பூமிக்கு செலுத்தப்படுகிறது என்று அனைத்து தரப்பு மக்களும் நம்பி வந்தனர் இது கிருஸ்துடைய பிறப்புக்கு முன் தோன்றி கிருஸ்துக்குப் பின் 15 நூற்றாண்டுகள் இதே நம்பிக்கை உலகம் முழுவதுமுள்ள மக்களிடம் நிலவிக் கொண்டிருந்தது.
இதற்கு மத்திய காலகட்டத்தில் தான் குர்ஆன் மேல்படி நம்பிக்கைக்கு மாறான கருத்தை கூறியது.
புனித குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் சுயமாக இயற்றப்பட்டிருந்தால் உலகம் முழுவதும் மக்களிடம் புழக்கத்தில் இருந்த கருத்தையே பிரதிபலித்திருந்திருப்பார்கள்.
குர்ஆன் ஏகப் பரம்பொருள் அல்லாஹ்வுடைய வார்த்தைகள் என்பதால் தான் மொத்த மக்களுடைய கருத்தும் கடல் நீர் தான் நிலத்தடி நீர் என்று கூறுகையில் குர்ஆனுடைய கூற்று மாத்திரம் நிலத்தடி நீர், மழையிலிருந்து பெறப்பட்டவை என்று வித்தியாசமான கருத்தை முழங்கியது.
அறிவியல் வளர்ச்சி அடைந்து அறிவியல் கூறும் தகவல்களை மக்கள் முற்றும் முழுதுமாக ஏற்றுக்கொண்ட காலத்தில் குர்ஆனுடைய கூற்றை 15ம், 17ம் நூற்றாண்டு புவிவியியல் ஆராய்ச்சியாளர்கள் மெய்ப் படுத்தினார்கள் என்பதுடன் இன்றுவரையிலும் அதே கருத்து உலகின் மொத்த மக்களுடைய கருத்தாகவும் இருந்து வருவதுடன் உலகம் முடியும் காலம்வரை அதே கருத்து நீடிக்கும் புனித குர்ஆன் சத்தியமாக இறைவேதமே !
இதை சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்து தங்களுடைய வாழ்க்கையை பரிசுத்து குர்ஆன் கூறும் கூற்றின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள முன்வருவார்களா? >> அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.<<
******************************
கெடுதல் செய்யும் உங்கள் வீட்டு குண்டு பல்புகளை சி.எப். எல். பல்புகளாக உடன் மாற்றுங்கள்.
இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம் ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள் பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்
ஒரே நேரத்தில் உலகத்துக்கு உங்களுக்கும் கெடுதல் செய்யும் வேலையை ஒரு பொருள் செய்கிறது என்றால்.. நிச்சயம் அது நம்மூரின் குண்டு பல்பாகத்தான் இருக்கும்.




