**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புனித இறைவசனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். !!! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க.?

>> Tuesday, June 24, 2008

உலகம் முடியும் காலம்வரை புனித குர்ஆன் சத்தியமாக இறைவேதமே !

"வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம், அதை பூமிக்கடியில் தங்கவைத்தோம், அதைப்போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையோன். " திருக்குர்ஆன் 23:18.

பூமியின் மேல்பரப்பில் சில இடங்களில் மாத்திரம் விதிவிலக்காக நீர் நின்று கொள்ளும் அவ்வாறு நின்று கொள்வதையே நாம் கன்மாய்களாக, குளங்களாக பாவித்துக் கொள்கிறோம். இதுவும் மனித சமுதாய தேவையை முன்னிருத்தியே இறைவன் ஏற்படுத்தி இருக்கின்றான்.

புனித இறைவசனம் நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல்l

நிலத்துக்கடியில் தேங்கி நிற்கும் நீர் எதன் வழியாக நிலத்துக்கடியில் செலுத்தப் படுகிறது என்பதை கண்டறிய நீண்டகாலம் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு நிலத்தடி நீரின் தன்மைகளை கீழ்கானுமாறு உலகுக்கு அறிவித்தார்கள் .

• மழையிலிருந்து விழக்கூடிய நீரே நிலத்துக்கடியில் தேங்கி நிற்கிறது என்ற அறிய தகவலை முதன் முதலில் 15ம் நூற்றாண்டில் 1580ல் Bernard Palyssi (பெர்னார்ட் பாலிஸ்ஸி) என்ற புவியியல் ஆராய்ச்சியாளர் உலகுக்கு அறிவித்தார்.

• அதற்கடுத்து 17வது நூற்றாண்டில் ( E.Mariotte , P.Perrault ) என்ற அறிஞர்கள் இணைந்து நிலத்தடி நீர் பற்றி மீண்டும்; ஓர் ஆய்வை மேற்கொண்டு இறுதியில் அவர்களும் பெர்னார்ட் பாலிஸியுடைய கருத்தையே கூறினார்கள்.
14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த படிப்பறிவில்லாத உம்மி முஹம்மது நபியால் (ஸல்) நிலத்தடி நீர் பற்றின துல்லியமான தகவலை எவ்வாறு தரமுடிந்தது ?

இறைவன் அருளியதை பெற்று உலகுக்கு அறிவித்தார்கள் என்பதை தவிர வேறென்ன கூறமுடியும் !

திட்டவட்டமாக குர்ஆன் இறைவேதம் தான் என்பதை அலசுவதற்கு இது ஒருப் பெரிய ஆதாரமாகும்.

காரணம் மேற்கானும் ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீரின் தன்மைகளைக் கூறுவதற்கு முன் கடல் நீரே சுழல் காற்றின் மூலம் கடலின் அடியிலிருந்து பூமிக்கு செலுத்தப்படுகிறது என்று அனைத்து தரப்பு மக்களும் நம்பி வந்தனர் இது கிருஸ்துடைய பிறப்புக்கு முன் தோன்றி கிருஸ்துக்குப் பின் 15 நூற்றாண்டுகள் இதே நம்பிக்கை உலகம் முழுவதுமுள்ள மக்களிடம் நிலவிக் கொண்டிருந்தது.

இதற்கு மத்திய காலகட்டத்தில் தான் குர்ஆன் மேல்படி நம்பிக்கைக்கு மாறான கருத்தை கூறியது.

புனித குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் சுயமாக இயற்றப்பட்டிருந்தால் உலகம் முழுவதும் மக்களிடம் புழக்கத்தில் இருந்த கருத்தையே பிரதிபலித்திருந்திருப்பார்கள்.

குர்ஆன் ஏகப் பரம்பொருள் அல்லாஹ்வுடைய வார்த்தைகள் என்பதால் தான் மொத்த மக்களுடைய கருத்தும் கடல் நீர் தான் நிலத்தடி நீர் என்று கூறுகையில் குர்ஆனுடைய கூற்று மாத்திரம் நிலத்தடி நீர், மழையிலிருந்து பெறப்பட்டவை என்று வித்தியாசமான கருத்தை முழங்கியது.

அறிவியல் வளர்ச்சி அடைந்து அறிவியல் கூறும் தகவல்களை மக்கள் முற்றும் முழுதுமாக ஏற்றுக்கொண்ட காலத்தில் குர்ஆனுடைய கூற்றை 15ம், 17ம் நூற்றாண்டு புவிவியியல் ஆராய்ச்சியாளர்கள் மெய்ப் படுத்தினார்கள் என்பதுடன் இன்றுவரையிலும் அதே கருத்து உலகின் மொத்த மக்களுடைய கருத்தாகவும் இருந்து வருவதுடன் உலகம் முடியும் காலம்வரை அதே கருத்து நீடிக்கும் புனித குர்ஆன் சத்தியமாக இறைவேதமே !

இதை சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்து தங்களுடைய வாழ்க்கையை பரிசுத்து குர்ஆன் கூறும் கூற்றின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள முன்வருவார்களா? >> அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.<<
******************************
கெடுதல் செய்யும் உங்கள் வீட்டு குண்டு பல்புகளை சி.எப். எல். பல்புகளாக உடன் மாற்றுங்கள்.

இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம் ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள் பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

கெடுதல் செய்யும் உங்கள் வீட்டு குண்டு பல்புகளை சி.எப். எல். பல்புகளாக உடன் மாற்றுங்கள்.

கெடுதல் செய்யும் குண்டு பல்புகள். குளிர்ச்சியான ஒளியை வீசும் சி.எப்.எல் பல்பே மின் சிக்கனம்.. லாபம்

ஒரே நேரத்தில் உலகத்துக்கு உங்களுக்கும் கெடுதல் செய்யும் வேலையை ஒரு பொருள் செய்கிறது என்றால்.. நிச்சயம் அது நம்மூரின் குண்டு பல்பாகத்தான் இருக்கும்.
ஆம்.
எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஒளியைப் பரப்பியபடி, அருகே நிற்பவரை வியர்வையில் நனைய வைக்கும் வெப்பத்தை உமிழும் குண்டு பல்பை இனியும் பயன்படுத்த வேண்டுமா?

இந்தக் கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி அரசே இப்போது கேட்கத் தொடங்கி விட்டது. இந்தக் கேள்விக்கு விடையாக வந்திருப்பதுதான் சி.எப்.எல். பல்ப். காம்பாக்ட் ப்ளோரோ சென்ட் லைட் என்பது அதன் விரிவாக்கம். சுருக்கமாகச் சொன்னால் 10 குண்டு பல்புக்கு ஒரு சிஎப்எல் சமம் எதில்?
சுற்றுச்சூழல் பாதுகாப்பில், உலக வெப்பமயமாதலை தடுப்பதில்.நம் நாட்டில் சிஎப்எல் பல்புகள் 1995-க்குப் பிறகே வெளிச்சத்துக்கு வந்தன.
அது வரை சுவிட்சைப் போட்டு விட்டுக் காத்திருந்தால் மினுக் மினுக் என்று ஒரு வழியாக `கொய்ங் என்ற ரீங்கார சத்தத்துடன் எரியத் தொடங்கும் குழல் விளக்குதான் (டியூப் லைட்) குண்டு பல்புக்கு ஒரே போட்டியாளர். அதே புளோ ரோசென்ட் தொழில் நுட்பத்தைக் கொண்டு கையடக்க அளவில், விரும்பும் டிசைன்களில் வந்து விட்டது.

குண்டு பல்ப் மங்கலான மஞ்சள் நிற உடலுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வெளிச்சத்தைத் தரும். அதற்கு ஆகும் மின் செலவு அதிகம். அதாவது 60 வாட் அதே அளவு வெளிச்சத்தை வெண்மை நிறத்தில், குளிர்ச்சியாக வெறும் 24 வாட் மின்சக்தியில் சிஎப்எல் தரும்.
நாலடி, இரண்டடி நீள டியூப் லைட்டுக்கு பிரேம், பிட்டிங், சோக், ஸ்டார்ட்டர் என்று பட்டாளமே தேவை. ஆனால் சிஎப்எல் பல்பை சாதாரண குண்டு பல்புக்கான ஹோல்டரில் மாட்டி சுவிட்சைப் போட்டால் போதும்.
மின் சிக்கனத்தைப் பொறுத்தவரை குண்டு பல்பை விட சிஎப்எல், பல்ப் 66 சதவிகித சிக்கனம் தரும்.

குண்டு பல்ப் எரியும்போது வெளியிடும் வெப்பத்துடன் ஒப்பிட்டால், சிஎப்எல் பல்ப் 90 சதவிகிதம் குறைவாக வெளியிடும்.

குண்டு பல்பை மாற்றும் போது தொட்டால் சுடுவதில் 10-ல் ஒரு பங்கு தான் சிஎப்எல் பல்ப் சுடும். நீடித்த உழைப்பிலும் சிஎப்எல் பல்புக்கு கிட்டே நெருங்க குண்டு பல்பால் முடியாது.

6 மாதம் முதல் அதிகபட்சம் ஓராண்டு வரை மட்டுமே குண்டு பல்பின் டங்ஸ்டன் உங்களுக்காக உருகி எரியும். பிறகு, கண்ணை மூடி விடும்.
சிஎப்.எல் பல்ப் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் வரை குளிர்ச்சியான ஒளியை வீசும்.

இவ்வளவு நன்மைகள் இருந்தும் சிஎப்எல் பல்புகள் வீடுகளை இன்னும் வெகுவாக அலங்கரிக்கவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம் அவற்றின் விலைதான். குண்டு பல்ப் ரூ.15 முதல் கிடைக்கிறது.
தரமான, கம்பெனி தயாரிப்பு சி.எப்எல். பல்பின் குறைந்தபட்ச விலை ரூ.150.
எனினும் வாடிக்கையாளருக்கும் ஒரு கணக்கைத் தெரிவிக்க தயாரிப்பாளர்கள் தவறவில்லை. அது, ரூ.15-க்கு குண்டு பல்ப் வாங்கினால் 6 மாதத்துக்கு ஒன்று என 5 ஆண்டுகளில் ரூ.150 செலவாகும்.

அதுவே, ஒரு முறை ரூ.150-க்கு சிஎப்எல் பல்ப் வாங்கினால், 5 ஆண்டுகளுக்கு மேல் உழைப்பதுடன், மின்சார செலவை குண்டு பல்பைவிட 66 சதவிகிதம் குறைக்கும்.

எனவே, உடனடி செலவைப் பார்க்காமல் நீண்ட கால அடிப்படையில் கணக்கிட்டால் சிஎப்எல் பல்பே லாபம் என்கின்றனர் அவர்கள்.

இத்தனை சிறப்பான சிஎப்எல் பல்பில் ஒரே ஒரு சிறிய குறையும் இருக்கிறது. பல்பில் இருக்கும் பாதரசம், மனித உடலுக்கு தீங்கானது. அது பல்பில் குறைந்த அளவே இருந்தாலும், பல்பின் வாழ் நாள் முடிந்ததும் அது உடைந்து பாதரசம் வெளியேறாமல் பத்திரமாக அப்புறப்படுத்துவது நல்லது.
******************************
இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்து இஸ்லாத்தை தானே மனமுவந்து தழுவிய தமிழ் பெண்மணி!!!
****************************************
இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம்
ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க
சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்து இஸ்லாத்தை தானே மனமுவந்து தழுவிய தமிழ் பெண்மணி!!!

>> Sunday, June 22, 2008

அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர்.

இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக் கவனம் பெற்றன.

அந்த நூல்கள் அவருள் பிரளயத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!

நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்ட உதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள்.

தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.

சென்னை டெபுடி கமிஷ்னர் காமினியின் அழைப்பின் பேரில் த.மு.மு.க வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.

இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியுடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம். -ஆசிரியர். tmmkonline.

அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக் கூற முடியாதவை.

உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது.

இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா!


நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விடவில்லை.

இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.

என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு.


யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை.

கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன்.

இதில் எந்த ஒரு உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன்.

உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள்.


மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா அழாதீங்கம்மா!

ப்ளீஸ்... மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.

அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.
இப்படிக்கு..
ரஜிதா (எ) ஹமிதா
http://www.tmmkonline.org/news/999846.htm

மேலும் படிக்க... Read more...

இந்துமத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டுமாம்!பயங்கரவாதி பால்தாக்கரேவை கைது செய்!

>> Thursday, June 19, 2008

இந்துமத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டுமாம்!
பால்தாக்கரே சொல்கிறார்

மும்பை, ஜூன் 19- தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க இந்து மத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டும் என்று பால்தாக்கரே கூறியுள்ளார்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தனது கட்சி பத்திரி கையில் தலையங்கம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:இந்துத்துவா ஆதரவாளர்கள் குண்டு வைத்திருப்பது, இதயத்தை தொடுவதாக உள்ளது. ஆனால் இந்துக்களை காயப்படுத்த குண்டு வைக்கப் பட்டிருப்பதால் கவலையாக உள்ளது.

இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.நாடக அரங்கத்தில் குண்டு வைப்பதற்கு பதிலாக, வங்காள தேசத்தில் இருந்து ஊடுருவியவர்களும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் தளம் அமைத்துச் செயல்படும் பகுதிகளில் குண்டு வைத்தால் நன்றாக இருக்கும்.

இந்து அமைப்புகள் புரட்சி ஏற்படுத்த வேண்டும். ஆனால் இப்படி தேவையின்றி, நாடக அரங்கங்களில் குண்டு வைத்தால், புரட்சியை உருவாக்க முடியாது.

இந்தியாவில் முகலாயர்கள் புகுந்தபோது, அவர்களுக்கு எதிராக வாளை உயர்த்தும் துணிச்சல், மராட்டிய மன்னர் சிவாஜிக்கு இருந்தது. அதனால் தான் அப்போது இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.இந்து தீவிரவாதம் மூலம் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்து மதம் நீடிக்க வேண்டுமானால், நாட்டை பாதுகாக்க வேண்டுமானால், இந்து மத தற்கொலை படை உருவாக்கப்பட வேண்டும் என பால்தாக்கரே கூறியுள்ளார்.

காங்கிரசு கண்டனம்- யாராக இருந்தாலும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்; சட்டத்தைக்கையில் எடுத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கைக் குலைப்பதை அனுமதிக்க முடியாது என்று காங்கிரசுக் கட்சி கூறியுள்ளது.

சிவசேனாக் கட்சித் தலைவரின் கருத்தைக் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராசன் வன்மையாகக் கண்டித்துள்ளார். இதே மாதிரியான கண்டனத்தை பா.ஜ. கட்சித் தலைவர் வெங்கய்ய நாயுடும் தெரிவித்துள்ளார்.பத்திரிகை அறிக்கை
--------------------------------

பயங்கரவாதி பால்தாக்கரேவை கைது செய்!மத்திய அரசுக்கு தமுமுக வலியுறுத்தல்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

இந்து தற்கொலைப்படை அமைக்க வேண்டுமென்றும், இந்துத்துவாவினர் வெடிகுண்டு வைப்பதும், வெடிகுண்டு செய்வதும், நெஞ்சை தொடுகிறது என்று பயங்கரவாத கருத்துகளை வெளியிட்டுள்ள பால்தாக்கரேவை இன்னும் கைது செய்யாமல் இருப்பது இந்த தேசத்திற்கு இழிவாகும்.

எங்கெல்லாம் குண்டுகள் வைக்க வேண்டுமென்று தனது பயங்கரவாத படைக்கு பால்தாக்கரே வெளிப்படையாகவே ஆணையிட்டுள்ளார்.

இதற்கு பிறகும் அவர் மீது எந்த சட்டமும் பாயாமல் இருப்பது அரசின் கையாளாகத் தனத்தைக் காட்டுகிறது.

பால் தாக்கரே உடனடியாக கைது செய்து மும்பை கலவர வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளுக்கும் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். இது போன்ற பயங்கரவாத பேச்சுக்களை அனுமதிப்பது ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஊறு விளைவிப்பதாகும்.

மகராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் சிவசேனாவினர் வெடிக்குண்டுகள் தயாரித்த போது அவை வெடித்து சிலர் இறந்தனர், சிலர் படுகாயமடைந்தனர்.

இதற்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்பதை ஜோடிக்கும் வகையில் அவ்விடத்தில் முஸ்லிம்கள் அணியும் உடைகள், தொப்பி, ஒட்டு தாடி, ஆகியற்றையும் சிவசேனாவினர் விட்டுச் சென்றனர்.

தற்போது பால்தாக்கரேவின் இந்தப் பேச்சைப் பார்க்கும் பொழுது மகராஷ்டிர மாநிலம் மாலேகான், ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜித், மற்றும் ஜெய்பூர் குண்டுவெடிப்புகளுக்கும் சிவசேனாவிற்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.

விரும்பத்தகாத விளைவுகளுக்கு பால்தாக்கரே தன் பேச்சின் மூலம் விதை போட்டுள்ளார். பால்தாக்கரேயின் இந்த கண்டனத்திற்குரிய பேச்சிற்காக அவர் உடனே கைது செய்யப்பட வேண்டுமென தமுமுக வலியுறுத்துகிறது.

இல்லையேல் மக்கள் சக்தியை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும் என அரசை தமுமுக எச்சரிக்கிறது >>tmmkonline.

மேலும் படிக்க... Read more...

இந்தியா-இஸ்ரேல்.. உறவும் வரலாறும்...

>> Wednesday, June 18, 2008

இஸ்ரேல், சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு நாடு என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

ஐரோப்பா முழுவதும் நாடற்ற நாடோடிகளாக திரிந்த யூதர்கள், 'தாய்நாடு' என்று புழுகிக் கொண்டு பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தனர்.

ஆதியில் யாகூப் நபியின் வழித் தோன்றல்களாக, மிகுந்த பாலஸ்தீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளில் இறைநம்பிக்கை, வேதகோட்பாடு, இறைவிசுவாசம், சமய நெறிமுறைகளில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்தவர்கள்.

மூசா நபியின் காலத்திற்குப் பின்னர் தௌராத் வேதத்தை நம்பிக்கை கொண்டவர்களாகவும், ஈஸா நபியின் காலத்தில் இன்ஜீல் வேதத்தை நம்பிக்கை கொண்டவர்களாகவும் வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு சத்தியமார்க்கமான இஸ்லாத்தை நேசித்து பின்பற்றி விசுவாசிகளாக தொடர்ந்து வந்தனர்.

அந்தக் காலக்கட்டத்தில் இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் யூதர்களின் முன்னோர்கள் ஐரோப்பிய நாடுகளில் அனைத்து உரிமைகளையும் அனுபவித்து தான் வந்தனர்.

பாலஸ்தீனத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாக வாழ்ந்து வந்த பூர்வீக இஸ்ரேலியர்களை விரட்டி விட்டு, பாலஸ்தீனத்தை கைப்பற்ற ரோமில் இருந்து போப்கள் தொடர்ந்து சதி செய்து வந்தனர்.

யூதர்களை அழைத்து பாலஸ்தீனம் உங்கள் 'தந்தை யர் தேசம்' முஸ்லிம்களை விரட்டி விட்டு குடியேறுங்கள் என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இதற்கு பலமுறை சிலுவைப் போர்கள் நடந்துள்ளன. சலாஹுத்தீன் அய்யூபி என்ற முஸ்லிம் ஆட்சியாளர் காலத்தில் கி.பி 10ம் நூற்றாண்டில் சிலுவைப் போர் வீரர்கள் விரட்டப்பட்டு பாலஸ்தீன பூமி முஸ்லிம்களால் மீட்கப்பட்டது.

தொடர்ந்து ஏறத்தாழ 1000 ஆண்டுகள் முஸ்லிம்களின் பூமியாகவே பாலஸ்தீனம் நீடித்து வந்துள்ளது. ஆனாலும் ஆக்கிரமிப்பாளர்களின் சதியோசனை மட்டும் முற்றுப்பெறவில்லை. முதல் உலகப் போரில் மிகப்பெரிய முஸ்லிம் சாம்ராஜ்யமான உதுமானிய பேரரசு தோல்வி கண்டது.

துருக்கியை தலைமையகமாக கொண்டது உதுமானிய பேரரசு. அந்த பேரரசுக்குச் சொந்தமான பகுதிகளை ரஷ்யா உள்பட ஐரோப்பிய சக்திகள் பங்கிட்டுக் கொண்டன. பாலஸ்தீனம் பிரிட்டனிடம் சிக்கியது. பாலஸ்தீனத்தில் ஆட்சி அதிகாரத்தை, பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக பிரிட்டன் மாறியது.

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படையினர் யூதர்களை கொன்று வந்தனர். இந்தச் சம்பவம் யூதர்களுக்கு உலகளவில் இரக்கமனத்தை ஈட்டிக் கொடுத்தது.

நாடற்ற யூதர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போது, முடிவில் அதற்கு ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்யலாம் என்று தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட ஒரு அந்தரங்க சதி பாலஸ்தீனத்தை தேர்வு செய்ய தூண்டியது.

1948ல் பிரிட்டன் யூதர்களுக்கான ஒரு நாடாக இஸ்ரேலை அறிவித்தது. மேற்கத்திய நாடுகள் அமெரிக்கா முதலியன அதை ஒப்புக் கொண்டன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கண்டித்தன.

ரஷ்யாவின் கண்டிப்பு போலியானது.

அதேநேரம், காந்தி, நேரு போன்றோர் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடு அதை ஏற்க முடியாது என்று அறிக்கை விட்டனர்.

ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் காந்தியம் மறைந்து மக்கிப்போன வரலாறு அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது இஸ்ரேல் மீதான இந்தியாவின் நேசமும்.

அரபு முஸ்லிம் நாடுகளுடன் நட்புறவையும், வர்த்தக உறவையும் நீட்டித்து வரும் இந்திய அரசாங்கங்கள் அவ்வப்போது, இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கூறவும் தயங்கியதில்லை. ஆனால் 1950ம் ஆண்டே இந்தியா, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ள தகவலை இந்திய வெளியுறவுத் துறை வெளிப்படுத்தியுள்ளது.

1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இந்த ஆண்டு 60ம் ஆண்டு விழாவை கொண்டாடி இருக்கிறது. இதனையொட்டி இந்திய அரசாங்கம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

மே 8ம் தேதி வெளியான டெக்கான் க்ரோனிக்கல் என்ற நாளேட்டின் 8ம் பக்கத்தில் அது குறித்த ஒரு செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான தூதரகம் தில்லியில் திறக்கப்பட்டது.

1992ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி டெல்அவிவில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம் மராவ் அதற்கு காரணமாக இருந்தார்.

இச்சம்பவத்தினால் இஸ்ரேலோடு இந்தியா உறவு கொள்ள நரசிம்மராவ் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் இந்தியா இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளது. இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியன், காந்தியை உயர்வாக மதித்தார். இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்த கையோடு, யூத நிறுவனம், மும்பையில், குடியேற்ற அலுவலகத்தை திறந்தது.

தொடர்ந்தது, உடனடியாக அந்த குடியேற்ற அலுவலகம் வர்த்தக அலுவல கமாகவும், பின்னர் தூதரகமாகவும் மாற்றப்பட்டது. 1950க்கும்-1960க்கும் இடையில் அங்கொன்றும் இங்கொன்று மாக அரசு ஒப்பந்தங்கள் இந்திய - இஸ்ரேலுக்கிடையே தொடர்ந்தன.

இதனிடையே, இந்திய முன்னாள் அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் இஸ்ரேல் விஜயம் செய்துள்ளார். அதேபோல் இஸ்ரேலிய அமைச்சர் ஈகல் அலோன், மாஷி ஷாரேட் மற்றும் கிடியோன் ரஃபேல் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.

அரசியல் ரீதியான உறவுகளை இஸ்ரேலோடு, இந்தியா தொடர முடிவெடுத்தபோது 1992 பிப்ரவரியில் புதுதில்லியில் இஸ்ரேல் தூதரகத்தை திறந்தது. 1992 மே 15ல் இந்தியா இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் தூதரகத்தை திறந்தது, அதிலிருந்து இருநாடுகளுக்கிடையிலான உறவு பரந்தளவில் தீவிர வளர்ச்சி கண்டு வருகிறது''.

(தகவல்: வெளியுறவு அமைச்சகம், இந்திய அரசாங்கம்) என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

1950ல் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. பஞ்சசீலக் கொள்கை, அணி சேரா கொள்கைகளின் பிதாமகன் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட நேரு, மிகப்பெரிய சோஸலிச கொள்கை வாதியாகவும் உலக நாட்டுத் தலைவர்களால் மதிக்கப்பட்டார்.

அவரது காலத்திலேயே இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

அரபு நாடுகளுடனான உறவு சிதைவுறாமலிருக்க இந்தியா இந்த ரகசியத்தை இத்தனை காலம் மறைத்து வந்துள்ளது போலும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இந்தியல-இஸ்ரேல் உறவு குறித்து, இது ஒரு பழமையான உறவு என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அந்த உண்மை இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.

ஐ.நா சபையே இன்றுவரை இஸ்ரேலை ஒரு உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளவில்லை. இஸ்ரேலை ஒரு இனவெறி தேசமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா சபையில் அரபு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அதேநேரம் அமெரிக்க சக்தி, தனது பல்வேறு சதிவேலைகளால், இஸ்ரேலை அங்கீகரிக்கும் திசைக்கு அரபு நாடுகளை தள்ளிச் செல்கிறது.

சர்வதேச வர்த்தக கழகத்தில் சவூதி அரேபியா உறுப்பு நாடாக இணைந்த போது, அமெரிக்கா ஒரு நெருக்கடி கொடுத்தது. அதே வர்த்தகக்கழகத்தில் இஸ்ரேலும் உறுப்பு நாடு. சர்வதேச வர்த்தகக் கழகத்தில் இணையும் எந்த ஒரு நாடும், இஸ்ரேலோடு வர்த்தக உறவை ஏற்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தது. சவூதி அரசாங்கம் அதற்கும் பணிந்தது. ஆயுத வல்லரசுகள் இப்போது உலக அளவில் பொருளாதார வல்லரசுகளாக வளர்ந்து வருகின்றன.

சர்வதேச வர்த்தகக் கழகம் போன்ற உலக நிறுவனங்களை புறக்கணித்து விட்டு பொருளாதாரப் போட்டியை தொடர முடியாது. இதன் காரணமாக அரபு நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேலோடு புன்முறுவல் காட்டத் தொடங்குகின்றன.

ஜோர்டான், எகிப்து நாடுகள் ஏற்கெனவே இஸ்ரேலோடு அரசியல் பூர்வமான உறவுகளை கடைப் பிடிக்கின்றன. இவ்வாறு முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலோடு உள்ள வீராப்பை குறைத்துக் கொள்ள முன்வந்த போது, இந்தியா இதுவரை கனத்த சுமையோடு மூடிமறைத்த, கமுக்கமாக இஸ்ரேலோடு கொண்டிருந்த உறவை தடார் என்று போட்டுடைத்துள்ளது.
மட்டுமல்ல, இந்திய பாசிச சக்திகள் இந்திய முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய மாண்புகளுக் கும் எதிராக மேற்கொள்ளும் சதி வேலைகளுக்கு, இதன் அப்பனான இஸ்ரேலின் யோசனையை ஏற்க முன் வந்துள்ளது.

சென்னையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸிஸ் கொய்த்தியர் என்ற யூதர் ஒளரங்கசீப் குறித்து போலியான ஓவியக் கண்காட்சி நடத்தியதும் இதன் ஒரு பகுதிதான்.

உலகளாவிய அளவில் இஸ்லாமிய நெறியை ஒழித்துக்கட்ட விரிக்கப்பட்ட சர்வதேச வலையை இந்திய எல்லை வரை விரித்து கட்ட ஒரு புதிய அல்ல மிகப் பழைய ஒரு பாதையைத் தான் திறந்துவிட்டிருக்கிறது.

இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமோஃபோபியா போன்ற சாத்தியமற்ற திரிபு வாதங்களை, கற்பிதங்களாக இந்திய ஊடகங்கள் வார்த்துக் கொடுத்ததும் இந்த இந்தோ - இஸ்ரேல் உறவுதான்.

இதே நாடுகள் இடையிலான வர்த்தக உறவு இதுவரை 3.3 பில்லியன் டாலர் களை தொட்டுள்ளது. தாராள வர்த்தகத்தினை இருநாடுகளும் துவங்க இருக்கின்றன. சொத்து வர்த்தகம், விவசாயம் ஆகியவற்றில் இந்தியாவில் இஸ்ரேல் முதலீடு செய்துள்ளது.

அதே போல் இந்தியாவும் இஸ்ரேலில் முதலீடு செய்திருக்கிறது. இரு நாட்டு முதலீடுகளும் நிலையாக வளர்ந்து வருகிறது. உதாரணமாக, இந்தியாவுக்கு, ஒன்பது லட்சம் ஆலிவ் மரக் கன்றுகளை இஸ்ரேல் கொடுத்துள்ளது.

சொட்டுநீர்ப் பாசனத்திலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. சமீபமாக, இஸ்ரேல் உலகின் வேறெந்த பாகத்தையும்விட மிக அதிக அளவில் இந்தியாவில் விவசாய வளர்ச்சியை தொடங்கியுள்ளது.

கழிவு நீர் மேலாண்மை, தோட்டக்கலை ஆகியவற் றில் கூட்டுறவு திட்டங்களுக்கு பல மில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் பல துறைகளுக்கும் இந்த ஒப்பந்தம் விரிவடைகிறது. உயர் தொழில் நுட்பம், பாதுகாப்புதுறை ஆகிய வற்றிலும் இருநாட்டு உறவுகள் வளர்ச்சிய டைந்து வருகின்றன.

இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆசியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களில் மிகப் பெரியது. உலகின் பெரிய தூதரகங்களில் ஒன்று.

இஸ்ரேல், பொருளாதார வளர்ச்சியில் கடந்த சில ஆண்டுகளில் 5 சதவீதத்தை தாண்டியுள் ளது. இஸ்ரேலின் மக்கள் தொகை 70 லட்சத்து 30 ஆயிரம். தனிமனித வருமானம் ஆண்டுக்கு 22,000 டாலர். இது மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சராசரியை விடவும் கூடுதலாகும் என இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் மார்க் ஸாபர் மே-8 டெக்கான் குரோனிக்கல் நாளிதழில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த யாசிர் அரஃபாத்துக்கு (பாலஸ்தீன விடுதலை வீரர்) பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

பாலஸ்தீன விடுதலைக்கு இந்தியா தனது ஆதரவை தருவதாக பல்வேறு காலகட்டங்களில் உறுதி அளித்திருக்கிறது.

பாலுக்கு பூனை காவல் இருப்பதுபோல் இந்தியா பாலஸ்தீன விடுலைக்கு ஆதரவு தந்து வருவது சத்தியமாக பொய் சத்தியமே.

அரஃபாத்துக்கு விருதுடன் அல்வாவும் கொடுத்ததை அரஃபாத் அறிந்தார். நாளைய வரலாறும் அறியும். -> இறைநேசன் > tmmkonline.
******************************************

இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம்
ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க
சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம்

மேலும் படிக்க... Read more...

ஐய்யய்யோ!!! கரன்சி (ரூபாய்) நோட்டு மூலம் தொற்று நோய்!

மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை

தொற்றுக் கிருமிகளை கண்டுபிடித்து உடனுக்குடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க புது வழிகளை கையாள மருத்துவ வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர். ரூபாய் நோட்டு மூலமும் கண்டுபிடிக்கலாம் என்று கூறியுள்ளனர். லண்டனில் இருந்து வெளிவரும் ஆன்லைன் மருத்துவ இதழான, 'நியூ சயின்டிஸ்ட்" என்ற இதழில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

தொற்றுக்கிருமிகள் எப்படி பரவுகின்றன என்று லண்டன் பல்கலைக்கழக குயின்மேரி கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர் குவாங்காங் ரென் ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் சில வித்தியாசமான தகவல்களை கூறியுள்ளார் தன் ஆய்வுக் குறிப்பில்...

தொற்றுக் கிருமிகள் என்பது பல வழிகளிலும் மனிதர்களை தொற்ற முடியும். காற்று மூலம் பரவும் தொற்றுக் கிருமிகள் குறைவுதான் என்றாலும், சில வானிலை பருவ காலங்களில் இப்படிக் காற்று மூலம் பரவும் தொற்றுக் கிருமிகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

சில இடங்களில் தொடர்பு ஏற்படுவதன் மூலம் கூட தொற்றுக் கிருமிகள் தொற்ற வாய்ப்புண்டு. குறிப்பாக சொன்னால், வங்கிகள் அளிக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்துகூட தொற்றுக் கிருமிகள் வர வாய்ப்புண்டு. அதனால் அவற்றில் வைரஸ் தாக்குதலை தடுக்கும் 'ஆன்ட்டி வைரஸ் கோட்டிங்" தருவது முக்கியம். அப்படி தந்தால் தொற்றுக்கிருமிகளை தடுக்க ஓரளவு முடியும்
.
இத்தோடு தானியங்கி 'வெண்டிங் மிஷின்கள்" எங்கும் வந்துவிட்டன. ரயில் டிக்கெட் முதல் காண்டம்கள் வரை தானியங்கி 'வெண்டிங் மிஷினில்" இருந்துதான் நாம் பெற்றுக் கொள்கிறோம்.

இவற்றில் கிருமிகளைத் தடுக்க வெண்டிங் மிஷின்' பட்டன் பகுதியில் ஆன்டி வைரஸ் கோட்டிங்" தரலாம்.

அதுபோலத்தான் அலுவலகங்களில் பயன்படுத்தும் பேக்ஸ் பேப்பர்களும் அதன்மூலமும் இப்படி தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. அதனால் அதிலும் இந்தத் தடுப்பு முறையை பயன்படுத்தலாம்.

மெட்டல் கோட்டிங், மெட்டல் ஆக்சைடு, செராமிக் நானோ பார்ட்டிக்கல்ஸ் போன்ற ரசாயன கலவைமூலம் 'ஆன்டி வைரஸ் கோட்டிங்" முறையை நடைமுறைப்படுத்தலாம்.

காற்றுமூலம் பரவும் தொற்றுக் கிருமிகளைத் தடுக்கவும், "நானோ மெட்டிரியல்" மூலம் புதுமுறைகளை நாம் கையாள வேண்டும். நானோ டெக்னாலஜி மூலம் பல வகையில் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.
**********************************

தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...

இந்து
இஸ்லாம்
ஒளரங்கசீப்
கம்ப்யூட்டர்
கிறிஸ்தவம்
சிந்திக்க
சிரியுங்கள்
திப்பு சுல்தான்
தெரிந்து கொள்ளுங்கள்
பிற மதம்
பைபிள்
மருத்துவம்
விடுதலை.காம்

மேலும் படிக்க... Read more...

தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...

>> Tuesday, June 17, 2008

உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது.
ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.

இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.

120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.

நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

சுத்தமான தேனா என்பதை அறிய...


தேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.




படிக்க: --- . மருத்துவம்

மேலும் படிக்க... Read more...

மன அழுத்தம் ஏன்?

>> Monday, June 16, 2008

குடும்பத்தில் யாருடனாவது கத்த்த்தி..., சண்டை போட்ட படபடப்பில் சிலர் மூச்சு வாங்க அவசர அவசரமாக தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து காலி செய்வதைப் பார்த்திருப்பீர்கள். தண்ணீர் பருகினால் தணியுமா பதற்றம்?

ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும்.

`மனசே சரியில்லை' என்று புலம்புபவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறார்கள். மனஅழுத்தப் பிரச்னை குறித்து உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வை நடத்தியது. அதில் தெரியவந்த உண்மைகள்...
அமெரிக்கர்களை செயல்பட முடியாமல் முடக்கிப் போடுவதில் மனஅழுத்தத்திற்குத்தான் முதலிடம்.

ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால், இதயநோய், மூளை செயலிழப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமானவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மனஅழுத்தம்தான்.

ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள் எவை?

நாள் முழுக்க மனசே சரியில்லை என்கிறீர்களா?
அதிக நேரம் தூங்குகிறீர்களா?
உடலில் சக்தி இல்லாமல் மயக்கம் வருவது போல் உணர்கிறீர்களா?
உங்கள் மேல் உங்களுக்கே மதிப்பு இல்லையா?
எதிலும் கவனம் செலுத்த முடியவில்லையா?
முடிவெடுக்க இயலவில்லையா?
தன்னம்பிக்கை இல்லாமல் உதவிக்கு யாரும் வரமாட்டேன் என்கிறார்களே என்று நினைக்கிறீர்களா?
வெறுமையை உணர்கிறீர்களா?

இந்தக் கேள்விகளில் ஏதாவது இரண்டிற்கு நீங்கள் `ஆம்' என்று பதில் சொன்னால், உங்களுக்கு மனஅழுத்த பாதிப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

ஏதாவது ஒன்றைப் பற்றி மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கை, அவனது உணர்ச்சிகள் மனஅழுத்தத்தை உண்டுபண்ணக் கூடும் என்பது உண்மைதான். அதே நேரம், மூளையின் ரசாயன சமநிலையில் மாற்றம் காரணமாகவும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

மனஅழுத்தத்தை உண்டாக்கும் மூளை ரசாயன சமநிலை வேறுபாட்டை உணவுப் பழக்கத்தை மாற்றுவதால் சரிசெய்ய இயலும்.

ஒரு மாதம், நிறைய தண்ணீர் குடித்துப் பழகவேண்டும். அதே நேரம் குளிர்பானங்களை மறந்துவிட வேண்டும். சுவை, நிறம் மற்றும் வாசனைக்காக குளிர்பானங்களில் ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மூளையின் ரசாயன சமநிலையைப் பாதித்து மனஅழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை.

முழுத் திறனுடன் மூளை செயல்பட நீர்ச்சத்து அவசியம். மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை மின்சாரத்தைப் போல, நரம்பு மண்டலம் உடல் முழுவதும் கடத்திச் செல்கிறது. நீர்ச்சத்துக் குறைந்தால், மூளை மற்றும் நரம்புகளால் இயங்கும் உடலின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.

எனவே, தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் கூடுதலாக நீர் அருந்தவேண்டும்.

குளிர்பானங்களைப் போல பாக்கெட் உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டும். பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நைட்ரைட், நெட்ரேட் சல்ஃபைட் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் இவற்றில் சேர்க்கப்படுகின்றன.

இந்த ரசாயனங்களின் செயல்பாடு மூளைப்பகுதியில் குறிப்பிட்ட அளவு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும். நன்மை எதுவும் தராத இவற்றை தவிர்த்தால், மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்.

`சாப்பாட்டில் காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ளவேண்டும்' என்று சொன்னால் சிலர் முகம் சுளிப்பார்கள். உண்மையில், காய்கறி மற்றும் பழங்களில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறையவே உள்ளன.

இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை.

எனவே, உணவில் காய்கறிகள் கட்டாயம் இருக்கவேண்டும். சமைத்த காய்கறிகளைவிட, இயற்கையாகக் கிடைக்கும் நிலையிலேயே உட்கொண்டால் மிக நல்லது.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்த்து மற்ற காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

மூளையின் செயல்பாட்டுத் திறனுக்கு கொழுப்பு அமிலங்களும் முக்கியத் தேவை. ஒமேகா-3, கொழுப்பு அமிலம் உள்ள சார்டின், சால்மன் போன்ற மீன் வகைகளை சாப்பிடலாம். அதிகமாக மீன் சாப்பிட முடியவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது மீன் எண்ணெய் மற்றும் அது அடங்கிய மாத்திரைகள்.

ஆக, இயற்கையான மற்றும் சத்தான உணவு உண்டால் உடலை நலமாக வைத்துக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் சீர் குலைந்தால் மன அழுத்தத்தால் மனிதன் பாதிக்கப்படுவான். ஆரோக்கியம் தரும் உணவும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் மன அழுத்தத்தைத் தவிர்த்து, நிம்மதியைத் தரும் என்பது உறுதி. >>சுகன் kumudamhealth
********************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

சோற்றுக்கும் வருமோ பஞ்சம்.?

>> Sunday, June 15, 2008

இன்னும் பத்து ஆண்டுகளில் உலகம் கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கும் என்று பொருளாதார நிபுணர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் எச்சரித்து வருகிறார்கள்.

நட்சத்திரங்களைப் பிடிக்க நைலான் வலை வீசுவது போல, உணவுப் பொருட்களுக்காக மக்கள் ஆங்காங்கே படையெடுப்புக்களை நடத்துவார்கள்.

நைலான் வலையால் நட்சத்திரங்களை எப்படிப் பிடிக்க முடியாதோ, அதே போல உணவுப் பஞ்சத்திற்கு படையெடுப்புக்கள் பரிகாரமாக இருக்காது. அராஜகம்தான் அமர்க்களமாக இருக்கும்.

உணவுத் தட்டுப்பாட்டிற்கு என்ன காரணம் என்று அமெரிக்கா ஓர் அற்புதமான கருத்தைச் சொன்னது.`இந்தியாவும் சீனமும் பொருளாதாரத்துறையில் முன்னேறி விட்டன.

அந்த நாட்டு மக்கள் இப்போதெல்லாம் நன்கு சாப்பிடுகிறார்கள். அதுதான் உலக உணவுத் தட்டுப்பாட்டிற்குக்காரணம்' என்று முதலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறினார். இதனை ஏதோ நகைச்சுவைக் கருத்து என்றுதான் நம்பினோம். ஆனால், அடுத்து அம்மணியின் கருத்தையே அமெரிக்க ஜனாதிபதி புஷ் வழிமொழிந்தார்.

இந்த வக்கிரவாதத்திற்கு, இந்திய அரசு பதில் சொல்லியிருக்க வேண்டும். வாயே திறக்கவில்லை.ஒருவேளை அதனையே மன்மோகன் சிங்ஆசீர்வாதமாக எடுத்துக் கொண்டாரோ என்னவோ?

ஆனால், ரோம் நகரில் நடந்த உணவுப் பிரச்னை தொடர்பான சர்வதேச மாநாடு அமெரிக்க வாதத்திற்கு எதிர்ப்பாட்டு பாடியிருக்கிறது. உணவுப் பஞ்சம் வருவதற்கு அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகளின் குண்டு மனிதர்கள் மேலும் தின்று கொழுப்பதுதான் காரணம் என்று கூறியிருக்கிறது.

உலக அளவில் உணவுப் பஞ்சம் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. காரணம், மேற்கு நாடுகளின் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றிக் கொண்டனர். உணவுக்காக அவர்கள் அதிக அளவில் செலவு செய்கின்றனர் என்று அந்த மாநாடு சுட்டிக் காட்டியிருக்கிறது.

அந்த மாநாடு இன்னொரு கருத்தையும் சிந்தனைக்கு விருந்தாகப் படைத்திருக்கிறது. மேற்கு நாடுகளில் ஒரு பக்கம் மக்கள் உண்டு கொழுக்கும்போது, இன்னொரு பக்கம் ஏழை நாடுகளில் லட்சோபலட்சம் மக்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பட்டினிப் பட்டாளம் பெருகுவதற்குக் காரணம், மேற்கு நாடுகளின் உணவுப் பழக்கம்தான் என்று அந்த மாநாடு சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதேசமயத்தில்,மேற்கு நாடுகளிலும் ஏழை எளிய மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் பட்டினிப் பட்டாளத்தில் அணிவகுப்பவர்கள்தான் என்பதனை அந்த மாநாடு காணத் தவறி விட்டது.

அமெரிக்க அதிபர் புஷ்ஷின் வாதப்படி இந்திய மக்கள் அனைவருமா பொருளாதார முன்னேற்றம் கண்டு வளமான வாழ்வு பெற்று விட்டனர்?

இங்கேயும் ஆண்டிற்கு ஆண்டு வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்படுகிறவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. இந்திய அரசின் இன்றைய பொருளாதாரத் திட்டங்கள் ஒரு பக்கம், புதிய புதிய கோடீசுவரர்களை உருவாக்குகிறது.வளர்ச்சியின் பலன்களை அவர்கள்தான் அனுபவிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், பட்டணங்களில் விவசாயத் தொழிலாளர்கள் வேலை தேடிய நிலைமை மாறி நடுத்தர,சிறிய விவசாயிகளும் நிலங்களை இழந்து நகரங்களில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.சமுதாய ஏற்றத்தாழ்வு வெகுவேகமாக விரிவடைந்து வருகிறது.

எறும்புகள் ஏறி இமயமலை தேய்வதில்லை. சமுதாயத்தின் ஒரு பிரிவினர் உண்டு கொழுப்பதே உணவுப் பஞ்சத்திற்குக் காரணம் என்பதனை ஏற்பதற்கு இல்லை. ஆனால், உணவுப் பஞ்சத்தை செயற்கையாக உருவாக்குபவர்கள் வாதத்திற்கு நிற்காத இத்தகைய காரணங்களை எடுத்து விடுகிறார்கள்.

அமெரிக்காவிலும் இதர மேற்கு நாடுகளிலும் இன்றைக்கு விவசாயம் என்பது ஆண்டிப்பண்டார நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. உணவு உற்பத்தி வெகுவேகமாகக் குறைந்து வருகிறது. விளைநிலங்களில் எரிபொருள் தேவைக்கான வித்துக்கள் அறுவடை செய்யப்படுகின்றன. அதனைத்தான் பயோ டீசல் உற்பத்தி என்று குறிப்பிடுகிறார்கள்.

சுருங்கச் சொன்னால், உணவு உற்பத்தி முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் அபாயத்தை ரோம் நகரில் நடந்த உணவுப் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஒரு பக்கம், உணவுதானிய உற்பத்தி வெகுவாகக் குறைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம்,உணவு தானியங்களே பயோ டீசலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

`பயோ டீசலுக்கு உணவு தானியங்களைப் பயன்படுத்துவது அதிகரித்தால் உறுதியாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்' என்று இந்திய விவசாய அமைச்சர் சரத்பவார் ரோம் மாநாட்டில் எச்சரித்தார்.

ஒருகாலத்தில் அமெரிக்கா அபரிமிதமான விளைச்சல் கண்டது. விலை ஏற்றத்தைத் தடுக்க கோதுமையைக் கடலில் கொட்டியது. விவசாயம் செய்யாமல் தரிசாகப் போட்டால் அதற்கு மானியம் அளித்தது. ஆனால் இன்றைக்கு அதே அமெரிக்காவில் உணவுத் தட்டுப்பாடு வரும் என்று எச்சரிக்கிறார்கள்.

இன்றைக்கு இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து சாமானிய மக்களுக்கு வாழ்வளிப்பது கைத்தறித் தொழில்தான். நூல் விலை ஏற்றம் அதன் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. ஆடை உற்பத்தியாளர்கள் அபாயச் சங்கு ஊதிவிட்டனர்.

நூல் விலை ஏற்றத்திற்கு என்ன காரணம்?இந்தியப் பருத்தி அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. என்ன காரணம்? பருத்தி உற்பத்தியின் பரப்பளவை அமெரிக்கா சரிபாதியாகக் குறைத்து விட்டது. அதனைவிட பயோ டீசல் உற்பத்திக்காக பயிர் செய்வது ரொம்ப லாபம் என்று முடிவு கட்டி விட்டது. அதே சமயத்தில், பருத்தியும் தேவை. அதனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது. இங்கே நூல் விலை மேகமண்டலத்திற்கு மேலே உயர்ந்து விட்டது.

உணவு தானிய உற்பத்தியைக் குறைத்தாலோ, எரிபொருளாக அதனை எரித்தாலோ உணவுப் பஞ்சம் வரும் என்பது அமெரிக்காவிற்குத் தெரியாதா? தெரிந்துதான் உலகை உணவுப் பஞ்சத்தில் ஊஞ்சலாட்ட விரும்புகிறது. அதன் வழியையே பிரிட்டன், பிரான்சு போன்ற மேற்கு நாடுகளும் தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. உலகிற்கே இதுதான் வழியென்றால் இன்னும் பத்து ஆண்டுகளில் மக்களிடம் பை நிறையப் பணம் இருக்கும். ஆனால் கைநிறைய உணவு கிடைக்காது.

கடந்த 2006-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குப்படி,ஆயுதங்கள் வாங்குவதற்காக பல நாடுகள் ஆண்டிற்கு 12லட்சம் கோடி ரூபாய்செலவிட்டன. ஆனால், விவசாய உற்பத்திக்காகச் செலவிடுவது பாதியாகக் குறைந்து விட்டது. இதனை ஐ.நா. உணவு அமைப்புத் தலைவர்ஜாக்கஸ் ட்யூப் ரோம் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். உணவுத் தட்டுப்பாடு உலக அளவில் பெரும் பிரச்னையாக உருவாகும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். இந்த நிலை உருவானால், அதற்கு அமெரிக்காவும் இதர மேலை நாடுகளும்தான் பொறுப்பு என்பதனை ரோம் மாநாடு சுட்டிக் காட்டியிருக்கிறது.

சென்ற ஆண்டு உணவுத் தட்டுப்பாடு இந்தியாவை எட்டிப் பார்த்தது. `அரசே கொள்முதல் செய்யக் கூடாது. சேமிக்கக் கிடங்குகள் கட்டக் கூடாது. அப்படிச் சேமித்தால் எலிகள் மேய்ந்து விடும். எதற்கு இந்த வீண் தொல்லை? நெல், கோதுமையை தனியார் கொள்முதல் செய்ய அனுமதியுங்கள்தட்டுப்பாடு ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள்' என்பது உலக வங்கியின் உபதேசம்.ஆமாம். எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தச் சொன்னது.

இந்த உபதேசத்தை அதன் சீடர்கள் செயல்படுத்தத்தானே செய்வர்? எனவே, சென்ற ஆண்டு தனியார் தாராளமாகக் கொள்முதல் செய்து குவிக்க, அரசின் உணவுக் கிடங்குகள் அநாதைகளாகக் கிடந்தன. உணவுத் தட்டுப்பாடு வந்தது.வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதிசெய்தனர்.

அதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த மண்ணிலேயே தேவையான அளவிற்கு கோதுமை விளைந்து கொட்டும்போது எதற்காகஇறக்குமதி செய்கிறீர்கள் என்று கண்டனக் கணைகள் பாய்ந்தன. இறக்குமதி என்று நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்தப் போவதாகஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் எச்சரித்தார்.

இந்த ஆண்டு நமது விவசாய அமைச்சர் சரத்பவார் விழித்துக் கொண்டார். ஓர் ஆண்டிற்குத் தேவையான கோதுமையைக் கொள்முதல் செய்து விட்டார். செயற்கைப் பஞ்ச சூத்திரதாரிகள் திருதிருவென்று திருட்டு முழி முழிக்கிறார்கள். > SOLAI - KUMUDAM.COM
***************************
பெட்ரோல் விலையேற்றம்: திவாலாகும் உலகம்!
****************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!

>> Thursday, June 12, 2008

மகாராஷ்ட்ர மாநிலம் தானே மாவட்டத்தில் நவி மும்பைப் பகுதியில் கலையரங்கில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு சங் பரிவார் இயக்கத்தின் துணை இயக்கங்களில் ஒன்றான பஜ்ரங்தள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக மகா ராஷ்ட்ரா மாநில உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் பழம்பெரும் பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் சக்திகளுக்கும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு சதிச் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த அறுபதாண்டு காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் நவி மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும் மேற்படியாளர்களின் கை வரிசை இருப்பதாக மகராஷ்ட்ரா உளவுத்துறை போலிசார் கூறியுள்ளனர்.

Aamhi Pachpute என்ற மராத்தி நாடகம் சஞ்சய் பவார் என்பவரால் இயக்கப்பட்டது. இந்த நாடகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவி மும்பையில் காத்கரி ரங்யா தன் கலையரங்கில் திரையிடப்பட்ட போது கடும் வன் முறையில் இறங்கிய பஜ்ரங்தளத்தினர் அந்த நாடகத்தை தடுத்து நிறுத்தினர்.

அதே கலையரங்கில் தற்போது குண்டு வெடித்துள்ளது.இந்த குண்டு வெடிப்புகளின் பிண்ணயில் பஜ் ரங்தளம் இருப்பதாக 'தானே' காவல் துறை இணை ஆணையர் மதுகர் ஷிண்டே சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.

நான்டெட், தென்காசி போன்ற இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட சங்கும்பலே இந்த சதிச் செயலையும் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில் நவி மும்பை குண்டு வெடிப்புகளில் பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பு பின்னணியில் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல! >tmmkonline
*******************************************
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP