**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

>> Thursday, December 29, 2011

மறக்கமுடியாத பதிவுகள்:

ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்).

திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல

சமுதாய துரோக வரலாறு.

காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும்

புலி பயங்கரவாதம்.

"ஹார்ஹே முல்க் மில்கே மாஸ்
கே முழ்கி ஹுதாயெ மாஸ்”

" ஒவ்வொரு நாடும் எனது நாடே அந்த நாடும் இறைவனின் நாடே" - அல்லாமா இக்பால்


இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் தமிழர்களோடு ஒட்டி வாழ ஆசை இல்லையா? எம் அன்பிற்குரிய சகோதர்கள் மாத்திரம் தம்மைத் தாமே இஸ்லாமியர்கள் எனப் பிரித்துக் காட்டுவது ஏன்?




1990 ஆகஸ்ட் 3ஆம் திகதி இன்றைக்கு 21 வருடங்களுக்கு முன்பு வழமை போல காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இஷா தொழுகையை பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்தனர்.

நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் மீரா ஜூம்ஆ பள்ளி மற்றும் ஹூசைனியா பள்ளிவாசல்களிலும் நூற்றுக்கணக்கானோர் தொழுது கொண்டிருந்தனர். மறுபுறம் தமிழ்ப்புலிகளில் ஆயுததாரிகள் முப்பதுக்கும் மேற்பட்டோர் காத்தான்குடிக்குள் ஊடுறுவி அங்கு இரண்டாக பிரிந்து ஒரு குழு மீராப்பள்ளி நோக்கியும் மற்றது ஹூசைனியாப் பள்ளி நோக்கியும் சென்றது.

தொழுகையின் சில ரக்கத்துகள் தொழுது முடிக்கப்பட்ட போது பள்ளிவாசல்கள் சுற்றிவளைக்கப்பட்டன. தொழுகையாளிகள் கிப்லாவை முன்னோக்கி அமைதியுடன் தொழுதுகொண்டிருந்த போது வீரப்பெண்மணிகள் பெற்றெடுத்த தமிழீழ மறவர்களின் துப்பாக்கிகள் சீறின. கைக்குண்டுகள் வீசப்பட்டன.

தொழுகையாளிகள் பின்வரிசையிலிருந்து ஒவ்வொருவராக கீழே விழுந்தனர். இறுதியாக முன்னால் நின்ற இமாம்களும் குண்டடிபட்டு விழும்வரை மாவீரர்களின் துப்பாக்கிகள் சீறிக்கொண்டேயிருந்தன...

பின்னால் நின்று தாக்கியதால் என்ன நடக்கிறதென திரும்பிப்பார்க்காமல் தொழுதுகொண்டிருந்தனர் அவர்கள். இதனால் பள்ளிகளில் தொழுதுகொண்டிருந்த அத்தனை பேரும் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கபட்டனர்.

ஒவ்வொருவரும் தமது உடலில் குண்டடி படும் போது தாக்குதல் தம் மீது மேற்கொள்ளப்படுவதையுணர்ந்தனர். இந்த படுபாதக தாக்குதல்களினால் 104 முஸ்லிம்கள் வயோதிபர் சிறுவர் வாலிபர் என்ற பாகுபாடில்லாமல் கொல்லப்பட்டனர்.

உலக வரலாற்றில் கோழைத்தனமான முதலாவது படுகொலை நிகழ்வின் வடுக்கல் இன்றும் அப்பள்ளிவாசல்களில் காணப்படகின்றன. இலங்கை முஸ்லிம்களின் மனதிலும் நீங்காத வடுவாக அது காணப்படுகின்றது.

LTTE Genocide of sri lanka muslims -Kattankudy Mosque Genocide- 1990.


முஸ்லிம்கள் தமிழீழத்துக்கு பிரேரிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளியேற்றும் புலிகளின் திட்டத்தின் ஓரங்கமாகவே இப்படுகொலை இடம்பெற்றது.

ஆனால் காத்தான்குடி (கஹ்தான் குடி) ஈழப்போராட்டம் ஆயுத வடிவம் பெற்ற காலத்திலிருந்தே பல இழப்புகளை சந்தித்துள்ளது. 1985 ஆம் ஆண்டு தொடக்கம் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பல்வேறு ஆயுதக்குழுக்களாலும் வேட்டையாடப்பட்டுள்ளனர்.

தாம் கேற்கும் அதே உரிமையை தமது சிறுபாண்மைக்கு வழங்க மறுத்த மமதையின் வெளிப்பாடுகளே வடக்கு கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளாகும்.

1985-19 பேர் 1986- 7 பேர் 1987 – 84 பேர் 1990- 160 பேர் 1991- 32 பேருமாக மொத்தமாக 302 இக்கு மேற்பட்ட முஸ்லிம்களை காத்தான்குடியில் மட்டும் ஈழப்போராட்டம் வேட்டையாடியுள்ளது. இது அல்லாமல் ஏராவூரில் 122 முஸ்லிம்கள் 1990 ஆகஸ்ட் 11 அன்று கொல்லப்பட்டனர்.

முஸ்லிம்களை இவ்வாறு கொன்றொழித்ததன் பின்னால் பல திட்டங்கள் இருந்த போதிலும் யூதர்களை ஒத்த கொள்கையை புலிகளியக்கம் கொண்டிருந்தது பிரதான காரணம் வகிக்கின்றது.

அப்பாவிகளை சிறுவர் பாலகர் பெண்கள் வயோதிபர் என்ற பாகுபாடில்லாமல் வெட்டியும் சுட்டும் வெளியேற்றியும் சித்திரவதை செய்யும் தன்மை யூதர்களுக்கு மட்டுமே உரித்தானது.

யூதர்களின் வழியில் உலகின் பல பாகங்களில் அலைந்து திரிந்து இந்தியாவின் தமிழ் நாட்டைப்பிடித்து பிறகு அங்கிருந்து இலங்கையின் வடக்கு கிழக்கை பிடித்தவர்களிடம் என்ன தன்மையை மனிதர்கள் எதிர்பார்க்க முடியும்.

யூதர்களை நம்ப வேண்டாம் என்பதாக அல் குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.

மூஸா நபியின் முழு சரித்திரமுமே நமக்கு எச்சரிக்கைக்காக கூறப்பட்டுள்ளது. இன்று சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இணக்கப்பாடு பற்றி பேசுகின்றனர். யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயினும் காபிர்களாயினும் அவர்கள் முஸ்லிம்களை தங்கள் பக்கம் சாய்க்காத வரையில் திருப்தி பெற மாட்டார்கள். இந்த விடயம் ஒரு எச்சரிக்கையாகவே நமக்கு கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் என்பன இந்த இணக்கப்பாடு விடயத்தில் கவனமாக நடக்கவேண்டியுள்ளது.

ஆண்டாண்டு காலமாக சிங்களவர் முஸ்லிம்களுடன் இணங்கிப்போகும் வேளையில் தமிழர்கள் முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்டே வந்துள்ளார்கள்.

சிங்கள மன்னர்கள் முஸ்லிமகளுக்கு காணிகளை வழங்கினார்கள். தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களை வெளியேற்றி அவர்களின் சொத்துக்களை கைப்பற்றினார்கள். இவற்றையெல்லாம் நாம் கண்கூடாக கண்டுகொண்டு அரசியல் நலனுக்காக சமூகத்தை அடகு வைக்கமுடியாது.

எம்மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் குறிப்பாக யூதர்கள் இந்துக்கள் கிறிஸ்தவாகள் விடயத்தில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்காதவரையில் நாம் அவர்களை நம்பக்கூடாது என்பது தான் படைத்தவனின் கட்டளை.

கொழும்பு தமிழர்களை பலிகொடுத்தாவது வடக்கு கிழக்கில் தமிழீழத்தை கட்டியெழுப்ப புலிகள் எண்ணம் கொண்டனர். சில முஸ்லிம்களை கொன்று எதுவும் நடக்கவில்லையாததால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்களை காத்தான்குடி பள்ளிவாசல்களில் படுகொலை செய்தனர்.

1990 ஆகஸ்ட் 3ல் இரவு இஷா தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களின் மீரா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் ஹூஸைனியா மஸ்ஜித் ஆகிய இரண்டு பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 104 பேர் கொல்லப்பட்டு 90 பேர் காயமடைந்திருந்தனர்.

தமது திட்டம் நிறைவேறாததால் ஏமாற்றமடைந்த புலிகள் 1990 ஆகஸ்ட் 11ம் நாளன்று ஏராவூரில் தாக்குதல் நடத்தி 122 முஸ்லிம் ஆண், பெண், வயோதிபர், சிறுவர்கள், கருவிலுள்ள சிசுக்களையும் கொன்றிருந்தனர்.

புலிகளாலும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களாலும் காலத்துக்கு காலம் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கைகளை இனிப்பார்ப்போம்.

1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து முஸ்லிம் மக்கள் சிலரை கொன்றனர்.

1987 இல் மார்கழி 30ம் திகதி காத்தான்குடியில் 28 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

6.1.88 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடி எல்லையில் 60 குடியிருப்புகள் எரிக்கப்பட்டன.

19.3.88 வீரகேசரி செய்திப்படி நிந்தவூரில் 7 பேரை கடத்திச் சென்றனர்.

1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

1988 கார்த்திகை மாதம் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம் பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை செய்தனர். தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர்.

2.2.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய கிரனைட் குண்டு வெடித்ததில், இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர்.

7.3.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையைச் சேர்ந்த 600 தமிழர்கள், தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தனித்தனியான உதவி அரசாங்கப்பிரிவுகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

11.4.89 வீரகேசரி செய்திப்படி கிண்ணியாவில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

4.12.89 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடியில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

10.12.89 வீரகேசரி செய்திப்படி 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

1.2.90 வீரகேசரி செய்திப்படி புலிகள் காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனம் செய்து, வீடுவீடாக சோதனை செய்தனர். 30 பேரை கைது செய்தனர்.

அத்துடன் சம்மாந்துறையில் மாகாணசபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்முனையைச் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். இதை அடுத்து காத்தான்குடியிலும், கல்முனையிலும் கடைகள் மூடப்பட்டன.

முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் குழு உறுப்பினர் மருதூர் கனி கடத்தப்பட்டார்.

இவர்களை விடுவிக்கக் கோரி கல்முனையில் புலிகளின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள் மேல், புலிகள் சுட்டதில் 17 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களை வைத்தியசாலை கொண்டு சென்ற நிலையில், அங்கு வந்த புலிகள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தபின், ஐவரை சுட்டுக் கொன்றதுடன், வைத்தியர் உட்பட 10 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.

7.2.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் கனிபா என்பவரிடம் பணம் தரும்படி கோரி மறுத்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

10.7.90 வீரகேசரி செய்திப்படி ஏறாவூரில் இரண்டு முஸ்லிம் மக்களை கடத்தி சென்றனர்.

1990 யூன் 11 க்கு பின்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் தொடங்கிய முதல் இரண்டு மாதத்தில் 300 பேர் அளவில் புலிகளால் கொல்லப்பட்டனர். அத்துடன் கிழக்கில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்;கள் தமிழ் தேசிய போராட்டம் தொடங்கிய பின் புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களால் கொல்லப்பட்டனர்.

1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம் ஹஜ் பயணிகளை கடத்திக் கொன்றனர். மொத்தமாக அங்கு 150 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏறாவூரில் 62 பேரை கடத்தினர்.

31.7.1990 வீரகேசரி செய்திப்படி அனுராதபுர மாவட்ட உடுப்பலாவ சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பின் கிணற்றில் போடப்பட்டனர்

1.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்று வயல்களில் வேலை செய்து விட்டு வந்த 17 முஸ்லிம்கள் கடத்தப்பட்ட பின் கொல்லப்பட்டனர்.

1.8.90 வீரகேசரி செய்திப்படி கந்தாளாயில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

3.8.1990 திகதி காத்தான்குடி பள்ளிவாசலில் 104 முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் போது பின்னாலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 86 முஸ்லிம்கள் காயமடைந்திருந்தனர். தமிழர்களை தலைகுனிய வைத்த இந்த தாக்குதலை புலிகள் அமைப்பின் கரிகாலன், நியுட்டன், அலெக்ஸ், ரஞ்சித் அப்பா ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.

3.8.1990 வீரகேசரி செய்திப்படி மஜீத்புரம் பகுதி வயலில் இருந்து திரும்பிய 7 முஸ்லீம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சம்மாந்துறையில் முஸ்லிம் தந்தையும் மகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

7.8.90 வீரகேசரி செய்திப்படி அம்பாறையில் 18 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர். அக்கரைப்பற்றில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 10ம் திகதிக்கு முன்னர் அம்பறையை விட்டு முஸ்லிம்;கள் வெளியேறிவிட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் போடப்பட்டது.

11.8.90 ஏறவூரில் 120 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கோளைத் தாக்குதலையும் புலிகள் இயக்க உறுப்பினர்களான கரிகாலன், நியூட்டன், ரஞ்சித் ஆகியோர் முன்னின்று செய்தனர்.

13.8.90 வீரகேசரி செய்திப்படி செங்கலடியில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 200 தமிழர் மற்றும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி ஏறாவூரில் 4 முஸ்லிம் கிராமங்கள் மேல் நடத்திய தாக்குதலில், 119 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயம் அடைந்தனர்.

13.8.90 ஐலண்ட் செய்திப்படி சம்மாந்துறையில் 6 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

15.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

1.9.1990 காத்தான்குடியில் மூன்று கிராமத்தில் 5 பள்ளிவாசல் மற்றும் 55 வீடுகள் எரிக்கப்பட்டன.

16.9.90 புனாவை என்ற கிராமத்தில் 7 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
25.9.90 வீரகேசரி செய்திப்படி கல்முனை கடலில் வைத்து மூன்று முஸ்லிம் மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

3.10.90 வீரகேசரி செய்திப்படி மருதமுனையில் இரண்டு முஸ்லிங்கள் கடத்தப்பட்டனர்.

1990 ஐப்பசி மாதம் 18 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வந்த 85 000 ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் பகல்கொள்ளையிட்ட பின்பு புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

15.11.90 வீரகேசரி செய்திப்படி மன்னாரில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பிய போது, புலிகள் சுட்டதில் ஒருவர் மரணம். ஆறு பேர் காயம் அடைந்தனர்.

1992.4.29 இல் அழிஞ்சிப் பொத்தனையில் 57 முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

1992.10.15 பொலநறுவ பள்ளியகொடல்ல அஹமட்புரம் பொலநறுவ பிரதேசங்களில் மொத்தம் 171 முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

August 04, 2011.... AL-IHZAN Local News
-அப்துல்லாஹ்-

SOURCE:http://ihzannetwork.blogspot.com/2011/08/blog-post_1489.html

புலி பயங்கரவாதம்

மறக்கமுடியாத பதிவுகள்:

தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு 1990 ஆண்டு ஒக்டோபர் என்பது மறக்கமுடியாத ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பல பயங்கர படுகொலைகளை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும். இந்த ஆண்டோடு பத்தொன்பது ஆண்டுகள் பறந்தோடிவிட்டன.

கிழக்கே காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள்

ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஐம்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் சென்ற புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை துடிக்கப்பதைக்க சுட்டுகொன்றது. புலித்தலமையின் நேரடி உத்தரவின்பேரில் இந்தக்கொடூரம் அரங்கேறியது. இது 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி இந்தக்கொடூரம் அரங்கேற்றப்பட்டது.

சரியாக ஒருகிழமைக்கு பின்னர் அதாவது அதே வருடம் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் பிச்சிநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர்.

ஏறாவூர் மட்டக்கிழப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் உள்ளது. மட்டகிழப்பு –
பொலநறுவை வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் சென்ற புலிபயங்கரவாதிகள் நடத்திய ஈனத்தனமான இனச்சுத்திகரிப்பில் 45 ஆண்கள் 28பெண்கள் 31 பிள்ளைகள் பலி எடுக்கப்பட்டார்கள்.
இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள்

இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள்


இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது, இங்கு பெண்களும் சிறுவர்களும் அணிந்திருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டன.
இச்சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் கிழக்கில் அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லீம் கிராமம் ஒன்றுக்குள் புகுந்த புலிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் ஆகஸ்ட் 13திகதி நடைபெற்றது.

அம்பாறை முள்ளியன் காடு என்ற கிராமத்தில் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வயலில் வேலைசெய்துகொண்டிருந்து 17 முஸ்லிம்களை புலிகள் சுட்டுக்கொன்றனர்.
மறுநாள் ஆறாந்திகதியும் அம்பாறை வயல்வெளியொன்றில் வைத்து 33 முஸ்லீம் விவசாயிகள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதேவருடம் ஜூலை மாதம் முப்பதாந்திகதி புலிகளால் அக்கரைப்பற்று நகரத்தில் 14 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு மட்டும் சும்மார் ஐந்நூற்றுக்கு மேட்பட்ட முஸ்லீம்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

1990 க்கு முன்னரும் பின்னரும் பல ஆயிரம் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லபட்டனர் . இது கிழக்கில் மட்டும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.

அதேவருடம் வடமாகாணத்தின் யாழப்பாணம் முல்லைதீவு வவுனியா மன்னார் கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலச்சதுகும் அதிகமான முஸ்லீம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.

இந்த நடவடிக்கைக்கு முன்னர் வடக்கில் இஸ்லாமிய துடிப்புள்ள பல வாலிபர்கள் புலிகளால் கடத்தபட்டனர்

யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் பல முஸ்லிம் வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் , கடத்தப்பட்டு கானாமல் போனார்கள்

இதன் பின்னர் அக்டோபர் மாதம் 22ஆம்திகதி வட புல முஸ்லிம்கள் . உடமைகள் எல்லாம் அபகரிகப்பட்டு தமது தாய் மண்ணை விட்டு வெறும்கையோடு விரட்டப்பட்டனர்.

யாழ்பாண முஸ்லீம் மக்ளுக்கு வெறும் இரண்டு மணித்தியால அவகாசமே வழங்கப்படது. ஏனைய மாவட்ட முஸ்லீம்களுக்கு ஒரு நாள் தொடக்கம் 48 மணித்தியால் அவகாசம் வழங்கப்பட்டது.

யாழ்பாண முஸ்லீம் மக்களை விரட்டி வெளியேற்றும் நோக்கோடு 35 முஸ்லீம் வர்தகர்களை புலிப்பயங்கரவாதிகள் கடத்திசென்றனர்.

இவர்களில் புலிகளுக்கு இலச்சக்கணக்கில் கப்பம் வழங்கிய 18 முஸ்லீம் வர்தகர்கள் சிலமாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஏனையோர் சித்திரவதை செய்து கொல்லபட்டனர்

சித்திரவதை செய்து கொல்லபட்டவர்களில் “கெளுறு” என்ற பிரபல வர்தகர் மிக வயதானவர் இவர் தலை கீழாக கட்டப்பட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டார்

ஏணையோர் பற்றிய தகவல்கள் கொல்லபட்டனர் என்பதை தவிர வேரு எதுவும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. வடமாகாண அன்றைய மொத்த சனத்தொகையில் ஐந்து சதவீதமாக இருந்த முஸ்லீம் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.

விரட்டப்பட்டமை ஓர் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும்.

புலிப்பயங்கரவாதிகள் என்னென்ன எந்தவகையான பயங்கரவாத செயல்களை செய்தாலும் அவைகள் எல்லாம் தமிழீழ போராட்டமாகும். அதனால்தான் தமிழீழ போராட்டத்தை உலகம் ஒரு பயங்கரவாத போராட்டமாக அங்கீகரித்துள்ளது.
ஒருபாரிய கொடுரத்துக்கு வடக்கு-கிழக்கு வாழ் முஸ்லீம் மக்கள் முகம்கொடுத்து பத்தொன்பது வருடங்கள் ஓடிவிட்டன. வடக்கை விட்டு விரட்டப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் பதினேழு பாரிய அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மன்னாரிலிருந்து விரட்டப்பட்டு புத்தளம் அகதி முகாமில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம் அகதிகளின் அவலங்கள் சொல்லமுடியாதவைகள். கிழக்கு முஸ்லீம்கங்கள் பறிகொடுத்து விவசாயக்காணிகள் வாழ்நிலங்கள் மாட்டுப்பட்டிகள் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டவர்களின் கைகளிலேயே இன்னமும் இருக்கின்றன.

வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீகளில் எண்பது சதவீதமானவர்கள் இன்னமும் தமது தாய் மண்ணுக்கு திரும்பவில்லை.
SOURCE: http://lankamuslim.org/tamil-terrorism/

>>> பாகம் 2.*புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.



>>> பாகம் 3. புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.


மேலும் படிக்க... Read more...

தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!!

>> Monday, December 12, 2011

தினமலர் மக்கள் விரோத பார்ப்பனியப் பத்திரிகை, தினமும் மலத்தை தள்ளுகிற பத்திரிகை என்பது ஊரறிந்த ஒன்று.

ஆனால் தினமணி என்றால் நடுநிலைமையான பத்திரிகை என்று பல மிடில் கிளாஸ் மாதவன்கள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல என்பதற்கு சமீபத்திய சான்று.


பின்னர் அந்த நூலகம் கட்டியதில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பாசிச ஜெயாவே யோசிக்காத கோணத்திலெல்லாம் எடுத்துக் கொடுத்து நத்திப் பிழைப்பதில் இந்த மாமா பலே கில்லாடி.

அப்பேற்பட்ட வைத்தி மாமா 12.11.2011 தினமணி தலையங்கத்தில் “ஏனிந்த பயம்” என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

மாலத்தீவில் மன்மோகன் சிங்கும், பாக் பிரதமர் கிலானியும் சமீபத்தில் சந்தித்து “புதிய உறவு, புதிய இணக்கம்” என்பது போல டெம்பிளேட் டைப் ராஜதந்திர வார்த்தைகளை உதிர்த்தார்கள்.

இதெல்லாம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் சடங்கு சந்திப்புகள்.
இதைப் போய் புதிய அத்தியாயம் என்றெல்லாம் பாராட்டுகிறார் வைத்தி மாமா.

தொட்டதுக்கெல்லாம் பாக்கை கரித்து கொட்டும் இந்துமதவெறியர்களின் கோயபல்சான தினமணி இப்படி எழுதியிருப்பது ஆச்சிரியமாயிருக்கிறதே என்று சிலர் நினைக்கலாம். இல்லை அதன் பிறகு வருகிறது மேட்டர்.

பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் ” கசாப் குற்றவாளிதான், நீங்கள் தூக்கில் போடலாம்” என்று பேசியிருப்பதை குறிப்படுகிறார் வைத்தி.

இது உண்மையிலேயே பேசப்பட்ட வார்த்தையா, இல்லை வெறும் நடிப்பா என்று எகத்தாளம் வேறு. இருந்தும் பாக்குடன் ஒத்து வாழ்வதுதான் சாலச்சிறந்தது என்று சாணக்கியத்தனமான பாசங்கு வேறு.

இதே போல் சம்ஜூத்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிற்கு காரணாமான குற்றவாளிகளை தூக்கில் போடுமாறு வைத்தி மாமா கோரவில்லை.

என்ன இருந்தாலும் பாகிஸ்தானியின் உயிருக்கு மதிப்பில்லை அல்லவா?

பாகிஸ்தானை பகடி செய்தவாறே இந்தியா பாக் உறவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் மாமா பிறகு நைசாக தனது மதவெறியை சொருகுகிறார்.

அதாவது கடந்த ஒரு மாதத்தில் பாக்கில் உள்ள சிறுபான்மை மக்களான இந்துக்களை தாக்கி மூன்று சம்பவங்கள் நடந்திருக்கின்றனவாம்.

முதலாவதாக சிந்து மாகாணத்தில் உள்ள சிக்கர்பூர் அருகே இந்து மதத்தைச் சேர்ந்த நான்கு மருத்துவர்கள் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனராம்.

இதற்கு அமெரிக்காவே கண்டனம் தெரிவித்தாலும் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறதாம். கேட்டால், “இறந்தவர்கள் இந்தியர்கள் அல்ல; பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தானில் யாரோ பாகிஸ்தானியர் சுட்டு இறந்ததற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்கிற பதிலை முன்வைக்கிறதாம் இந்திய வெளிவிவகாரத் துறை.

இதற்காக இந்தியாவை ஆவேசமாகக் கண்டிக்கிறார் வைத்தி மாமா.

பாக்கில் கொல்லப்பட்ட நான்கு மருத்துவர்களுக்காக இந்தியா கண்டிக்கவில்லை என்பதை தந்திரமாக மதச்சாயம் பூசி மடைமாற்றுகிறார் வைத்தி மாமா.

முதலில் பாக்கில் சிறுபான்மை இந்துக்களை விட பெரும்பான்மை முசுலீம் மக்கள்தான் அன்றாடம் மசூதியில், கடைத்தெருவில், லாகூரில், கராச்சியில், எல்லைப்புற மாகாணங்களில் பல பத்துக் கணக்கில் கொல்லப்படுகின்றனர்.

அமெரிக்காவின் கைப்பிள்ளையாய் காலம் கழித்து, பழமைவாதிகளை வளர்த்து விட்ட திருப்பணிக்கு பாகிஸ்தான் விலைமதிப்பற்ற மக்கள் உயிரை பயங்கரவாதத்திற்கு பலி கொடுத்து வருகிறது. இது தனிக் கதை.

ஆனால் இதை ஒட்டு மொத்த சூழ்நிலையில் வைத்துப் பார்க்காமல் நைசாக நான்று இந்து மருத்துவர்கள் மட்டும் கொல்லப்பட்டதாக காட்ட வேண்டிய அவசியம் என்ன?

இதுதான் பார்ப்பனிய நரித்தந்திரம். கண்டிப்பதாக இருந்தால் இந்திய அரசு, பாக்கில் கொல்லப்படும் அனைத்து மக்களுக்காவும் பேசுவதாகத்தானே கோர வேண்டும்?

மனித உயிரில் முசுலீம் உயிரை விட இந்து உயிர் உசத்தி என்பதுதான் வைத்தி மாமாவின் கருத்து.

இதன் மூலம் மறைமுகமாக இந்தியா ஒரு இந்து நாடு, உலகில் இந்துக்கள் எங்கே கொல்ப்பட்டலும் சீறி எழவேண்டிய நாடு என்பதாக வாசக மனதில் நஞ்சை தடவுகிறார்.

இது கூடப்பரவாயில்லை, இதற்கு அனுபந்தமாக வைத்தி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

அதன்படி, “இந்தியாவில் ஏதாவது ஒரு இஸ்லாமியரை நிலத்தகராறில் ஒரு இந்து தாக்கியதாக இருந்தாலும் கூட அதை மத ரதீயான தாக்குதலாக பாகிஸ்தான் வர்ணிக்கும் போது, நியாயமான ஒன்றுக்குக்கூட நாம் கண்டனம் தெரிவிக்க பயப்படுகிறோமே, ஏன்?”

என்று நரித்தனமாக கேட்கிறார் வைத்தி.

இதன் மூலம் இந்தியாவில் இசுலாமியர்கள் யாரும் சல்லிசாக கொல்லப்படவில்லை என்பதோடு அதை பாகிஸ்தான்தான் மிகைப்படுத்துவதாக உறுமுகிறார் நமது வைத்தி.

வட இந்தியாவில் இசுலாமிய மக்கள் கொல்லப்படாத நகரங்களோ, கலவரங்களோ இருக்கிறதா?

இசுலாமிய மக்கள் காக்கை குருவிகள் போல கொல்லப்படும் இந்தியாவில் அப்படி ஒன்று இல்லை என்பதாக சித்தரிப்பதற்கு எத்தனை வன்மம் வேண்டும்?

இந்திய அரசு எந்த இந்தியர்களுக்காக கவலைப்படுகிறது? வளைகுடாவிலும், மலேசியாவிலும் ஏழை இந்தியர்கள், தாக்கப்படும்போது கண்டித்திருக்கிறதா?

இல்லை வைத்தி உள்ளிட்ட ஊடக முதலாளிகள்தான் அதற்காக இந்திய அரசைக் கண்டித்திருக்கின்றனரா?

தாக்கப்பட்ட ஏழை இந்தியர்களில் ‘இந்துக்கள்’ இல்லையா?

ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட பணக்கார இந்துக்களுக்கு குரல் கொடுக்கும் வைத்தி வைகையறாக்கள் இப்போது பாகிஸ்தான் இந்துக்களுக்காக குரல் கொடுப்பது
பச்சையான முதலைக் கண்ணீரில்லையா?

அதுவும் இசுலாமிய வெறுப்பை வளர்த்து இந்து ராஷ்டிரம் அமைக்க முயலும் இந்துமதவெறியர்களின் நலனுக்கான ‘கண்ணீர்’ எனும் போது வைத்தியின் மாமாவின் சகுனி வேலையை புரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் குறித்து தினமணியின் அடுத்த கவலையைப் பார்க்கலாம்.

அமெரிக்க அரசின் ஆய்வுக்குழு ஒன்று தனது அறிக்கையில், பாகிஸ்தான் பள்ளிப் பாடநூல்களில், இந்து மதம், கிறிஸ்தவ மதம் இரண்டையும் பற்றித் தவறான, மத துவேஷத்தை ஏற்படுத்துகிற தகவல்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறதாம்.

பாகிஸ்தானில் 2 விழுக்காடு இந்துக்கள், 1 விழுக்காடு கிறிஸ்துவர்கள், அதே அளவு சீக்கியர்கள் வசித்தாலும், பாகிஸ்தானின் வளர்ச்சிக்கும் கலாசாரத்துக்கும் இவர்களது பங்களிப்பு பற்றி பாடநூல்களில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கை சொல்கிறதாம்.

முசுலீம்களை அழித்து விட்டு இந்து ராஷ்டிரத்தை தோற்றுவிப்பதற்கு கூட இந்துமதவெறியர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது போலும்.

இந்தியாவில் கிறித்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்கிறார்கள், பண்பாட்டை சிதைக்கிறார்கள் என்று கூப்பாடு போடுபவர்கள், அமெரிக்கா என்றதும் அது கிறித்தவ அமெரிக்கதான் என்றாலும் அடக்கி வாசிப்பதன் காரணம் ஏகாதிபத்திய விசுவாசிகளாக இருப்பதுதான்.

விசுவ இந்து பரிஷத் தலைவர் பாபர் மசூதி இடித்த சமயத்தில் பில் கிளிண்டனை முசுலீம்களை ஒழிக்க வந்த கிருஷ்ண பரமாத்மா என்று வாழ்த்தி எழுதிய கடிதம் அதற்கோர் ஆதாரம்.

முதலில் வரலாறு, பண்பாடு குறித்த நேர்மை எதுவும் அமெரிக்காவில் இல்லை.

இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனின் பங்கை முழுவதும் இருட்டடிப்பு செய்துதான் அங்கு கற்றுக் கொடுக்கிறார்கள். ஹாலிவுட் படமாகவும் எடுக்கிறார்கள்.

உலகப்போர் தொடர்பான அருங்காட்சியகத்தில் கூட ரசியா என்ற பெயரைக்கூட பார்க்க முடியாது.

இப்பேற்பட்ட உலகரவுடியிடம்தான் வைத்தி மாமா தனக்கான ஆதரவை கண்டெடுக்கிறார்.

பாகிஸ்தானின் இந்து மத துவேஷத்திற்கு வைத்தி மாமா காட்டும் ஆதாரம் என்ன?

அங்குள்ள பாடநூல்களில் “கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்கிற மதம் இந்து மதம்” என்று தவறாக இருக்கிறதாம்.

இது குறித்து அங்குள்ள இந்துச் சிறுபான்மையினர் குரல் கொடுக்க முடியவில்லையாம்.

என்னதான் பாரதப்பண்பாட்டை காக்க வைத்தி மாமா சீன் போட முயன்றாலும் இந்து மதத்தின் ‘பேசிக் நாலட்ச்’ கூட தெரியாத அசட்டு மாமாவாக இருக்கிறாரே?

வேதத்தை ஏற்றுக் கொண்டு கடவுளை மட்டும் ஏற்காதவன் நாஸ்திகன்; வேதத்தையும், கடவுளையும் ஏற்றுக்கொள்பவன் ஆஸ்திகன்.

வேதத்தையும், கடவுளையும் ஒருசேர ஏற்காதவர்கள்தான் சாருவாகனர்கள் போன்றோர்.

நாம் நடைமுறையில் பயன்படுத்தும் நாத்திகம் என்ற சொல்லும் அப்படி இரண்டையும் மறுப்பவர்களைக் குறிக்கின்றன என்றாலும் பார்ப்பனிய இந்து மதத்தின் அளவு கோலின் படி நாஸ்திகன் என்றால் மேலே சொன்ன பொருள்தான்.

அதன்படி பாகிஸ்தானின் பாட நூல்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான்.

பாய்கள் இந்துமதத்தை சரியாக புரிந்து வைத்திருக்கும்போது, அம்பிகள் இப்படி அசட்டு பிசட்டு அம்மாஞ்சிகளாய் இருக்கிறார்களே?

வைத்தி மாமா தமிழகச் சூழலில் வளர்ந்தவர் என்பதால் இந்துமதவெறியர்கள் கட்டோடு வெறுக்கும் பெரியார், திரவிட இயக்கங்களின் நாத்திகம் என்ற சொல் அவரையும் வதைத்திருக்கும்.

அந்த வெறுப்பை பாகிஸ்தானுக்கும் நாடு கடத்துகிறார்.

எனினும் இந்த முட்டாள்தனத்தை வெறும் அறியாமை என்று பார்ப்பதை விட அவரது சகுனியாட்டத்தின் பரிமாணமாகவே புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால்தான் இந்த பாடநூல் விவகாரத்தை அமெரிக்கா கண்டிக்கும்போது இந்து மதத்தின் தாயகமான இந்தியா கண்டிக்கவில்லை என்று சகுனி வருத்தப்படுகிறார்.

அந்தப்படிக்கு இந்துமதத்தின் தாயகமான இந்தியாவில் இந்து மதத்தை விமரிசிக்கும் அம்பேத்கார்,பெரியார், கம்யூனிஸ்ட்டுகளை ஏன் நாடு கடத்தவில்லை என்றும் அவரது கேள்வியை நாம் புரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான மூன்றாவது தாக்குதலாக வைத்தி மாமா குறிப்பிடுவதை பார்க்கலாம்.

“பெஷாவர் நகருக்கு அருகே கோரக்நாத் கோயில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி தினத்தன்று திறக்கப்பட்டு, நூற்றுக்கணக்கில் இந்துக்கள் கூடி வழிபட்டனர்.

ஆனால், அன்றைய தினமே பூட்டிச் சாவியை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

இக்கோயில் யாருக்குச் சொந்தம் என்பதில் சீக்கியர்-இந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் அரசு தலையிட்டு பூட்டி விட்டது.

சரி, புதிய கோயிலைக் கட்டிக்கொள்ளலாம் என்றால் அதுபற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாத நிலைமை.”

உப்பு பெறாத விசயங்களைக்கூட எப்படி லென்ஸ் வைத்து தேடி ஊதிப்பெருக்குகிறார்கள்?

இதில் பாகிஸ்தான் அரசு என்ன தவறு செய்தது?

ஒரு கோவிலை இரண்டு தரப்பினர் தங்களுக்கு சொந்தம் என்று அடித்துக் கொள்ளும் போது எந்த அரசும் இதைத்தானே செய்திருக்க முடியும்?

கோவிலுக்கு சொந்தம் யார் என்று தீர்ப்பு வரும் வரைக்கும் இதுதானே நியதி?

சீக்கிய மதம் இந்து மதத்தின் உட்பிரிவுதான் என்று ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தமது ஷாகாக்களில் பெருமையுடன் பீற்றித்திரிவார்கள்.

ஆனால் அதை மறுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கியர்கள் போராடிய போது ஆர்.எஸ்.எஸ் தனது பெருமையை வாபஸ் வாங்கிக் கொண்டு மன்னிப்பு கேட்டது.

இருப்பினும் புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம் அனைத்தும் இந்து மதத்தின் கிளைகள் என்பதுதான் அவர்களது பெரியண்ணன் சிந்தனை.

குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் இது இந்துக் கோவில் என்றுதான் வைத்தி வாதிடுகிறாரே ஒழிய உரிமையில் போட்டி போடும் சீக்கியரை அவர் இந்துவாக கருதவில்லை.

கணக்கு காட்ட மட்டும் சீக்கியர்கள் இந்துக்கள் என்பதுதான் அவர்களது செயல்தந்திரம்.

போகட்டும். நீதிமன்றத் தாவா பிரச்சினையில் இருக்கும் ஒரு சொத்து விவகாரத்தைக்கூட பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பூதாகரமாக காட்டுவது எத்தனை அயோக்கியத்தனம்?

இது தினமணி மட்டுமல்ல, இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் பரப்பி வரும் விசமப் பிரச்சாரம்தான்.

இந்த மூன்று விசயங்களையும் குறிப்பிட்டு பாகிஸ்தானில் இந்துக்கள் அல்லும் பகலும் தாக்கப்படுவதாக வைத்தி மாமா புனைந்திருக்கும் கதைகளின் யோக்கியதை இதுதான்.

இறுதியில் வைத்தி மாமா இந்தியா ஒரு இந்து தேசமாக இருந்தாலும் அப்படி அறிவித்துக் கொள்ளாமல் மதசார்பற்ற நாடு என்று அறிவித்துக் கொண்ட நாடு என்பதால் நம்மைப் போன்று பாகிஸ்தான் எனும் மதச்சார்பு உள்ள நாடை ஒப்பிடக்கூடாது என்கிறார். இது பெருந்தன்மை என்று வேறு பில்டப் கொடுக்கிறார்.

கடைசியில்,” இந்தியா மதச்சார்பற்ற நாடு என்கிற ஒரே காரணத்துக்காக, இதுபற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது, கேள்வி எழுப்பக்கூடாது என்பதை இந்தியாவில் வாழும் இஸ்லாமிய சகோதரனேகூட
ஏற்றுக்கொள்ள மாட்டான்.

நமது மத்திய அரசு மட்டும்தான் மௌனம் சாதிக்கும். இதற்குப் பெயர் முதுகெலும்பு இல்லாமையே தவிர, மதச்சார்பின்மை அல்ல!” என்று சாபம் கொடுக்கிறார்.

இதில் நாம் பேசக்கூடாது என்பதை இசுலாமிய சகோதரன் கூட ஏற்றக் கொள்ளமாட்டான் என்ற வாக்கியத்தை உற்று நோக்குங்கள்.

அந்த நாமில் இசுலாமிய மக்கள் இல்லை. எனில் அந்த நாம் யார்?

இந்துக்கள்தானே?

அதன்படி நாமென்றாலும், இந்தியா என்றாலும் இந்துக்களைத்தான் குறிக்கிறது என்பதை வைத்தி மாமா ஒப்புக்கொள்கிறார்.

இப்படி பச்சையாக இந்து நாடாக இருக்கும் போது மதச்சார்பற்ற எனும் நாகரிகப்பட்டம் எதற்கு வைத்தி சார்?

முதலில் இந்து மதம் என்பது ஒரு மதமில்லை.

அது சாதிகளை கட்டுக்கொப்பாக வைத்து நடத்தும் ஒரு கிரிமினல் நிறுவனம்.

மேலும், “இந்துக்கள்” என்ற பதத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திர – பஞ்சமர்கள் வரமாட்டார்கள்.

மீதியிருக்கும் சிறுபான்மை ‘மேல்’சாதியினர்தான் இந்துக்கள். இந்த இந்துக்களை எதிர்த்து சூத்திர பஞ்சம உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டத்தின் பலனாகத்தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது.

பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தில் வந்த உரிமையை இந்துக்களின் பெருந்தன்மை என்று பேசுவதற்கு காரணம் முசுலீமை எதிர்க்க சூத்திர பஞ்சம மக்களை இணைத்து கணக்கு காட்டும் தந்திரம்தான்.

ஆக, வைத்தி என்னதான் துள்ளிக்குதித்தாலும் இந்தியாவில் ‘இந்துக்கள்’ என்போர் சிறுபான்மைதான்.

இந்த சிறுபான்மைதான் இன்றுவரை இந்தியாவை ஆள்கிறது.

அந்தச் செருக்கில்தான் பாகிஸ்தான் வரை சென்று வைத்தி மாமா லென்சை வைத்து செய்திகளை ஊதிப்பெருக்கி துவேஷத்தை வளர்க்க முடிகிறது.

தினமணிதான் இந்து முன்னணி என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா?

ARTICLE SOURCE: தினமணிதான் இந்துமுன்னணி! – வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!
*****************

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

மாறாத‌ இஸ்லாமும்! மாறும் உல‌க‌மும்!! முல்லை பெரியாறும்!!! சிந்திக்க‌ !!!!

>> Thursday, December 8, 2011

முல்லை பெரியார் அணை விவகாரத்தின் விஷ வித்து என்ன?

தயவு செய்து பொறுமையுடன் காணொளியை முழுமையாக கேளுங்கள்.

எல்லா விசயங்களுமே மாறிக்கொண்டே இருக்க வேண்டும். மாற்றங்க‌ள் இருப்ப‌த‌னால் தான் உலகில் நாம் ப‌ல‌ முன்னேற்ற‌ங்க‌ளை பெற்றுக்கொள்ள‌ முடிகிற‌து

இஸ்லாம் ம‌ட்டும் மாறாம‌ல் இருப்ப‌தும், மாறவும் கூடாது. ஏன்?

மாற்றுவதற்கு அவசியம் எங்கே?

இஸ்லாம் ம‌ட்டும் மாறாது ஏன்?


ஆஸ்திக‌ர்க‌ளே, நாத்திக‌ர்க‌ளே, ப‌குத்தறிவாள‌ர்க‌ளே சிந்தியுங்க‌ள்.

முல்லை பெரியார் அணை விவகாரம் மற்றும் அதை போன்ற விவகாரங்கள் உருவாக விஷ வித்து என்ன?

தயவு செய்து பொறுமையுடன் காணொளியை முழுமையாக கேளுங்கள்.



மாறாத‌ இஸ்லாமும்!!! மாறும் உல‌க‌மும் !!!
.

திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள்.

>> Monday, November 28, 2011

இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

Massacre of more than 2000 Muslims by Hindu terrorists (Gujaraat 2002) 1/3


Massacre of more than 2000 Muslims by Hindu terrorists (Gujaraat 2002) 2/3



Massacre of more than 2000 Muslims by Hindu terrorists (Gujaraat 2002) 3/3


INDIA EXPOSED [Gujarat Massacre]: Hindu Terrorism Supported by Hindutva Fascists & Govt. 1/2



இதை நேரில் பார்த்த ஜாஹிரா ஷேக் என்ற இளம் பெண்ணும் அவளுக்காக வாதாட வந்த டீஸ்டா செதல்வாத் என்ற சமூகப் போராளியும் நாயை விடவும் கேவலமாக அரசு நிர்வாகத்தால் அலைக்கழிக்கப்பட்டனர்.

ஒருகட்டத்தில் டீஸ்டாவுக்கு எதிராகவே ஜாஹிரா வாக்குமூலம் கொடுக்கும் அளவுக்கு நரேந்திர மோடி அரசு கொடுமைப்படுத்தியது. இங்கேதான் வாய்கிழியும் அளவுக்கு ஜனநாயகம் பேசப்படுகின்றது.

வரலாற்றுச் சம்பவங்களை முன்பின்னாக அடுக்கி 'எடிட்' செய்வதன் மூலம் வரலாற்றைச் சிதைக்கும்-வரலாற்றைத் திரித்து எழுதும் இந்துத் துவா அஜெண்டா

அப்பாவி முஸ்லிம்களின் பிரதிநிதியாகப் பேசவைக்கும் போது,"ஒரு தீவிரவாதி நியாயம் பேசலாமா?" என்ற கேள்வி வைக்கும் உத்தி.

அன்றாடங் காய்ச்சிகளாக, அகதி முகாம்களில் இன்றும் விளிம்புநிலை வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் நியாயங்கள் பேசும்போது அடிபட்டுப் போகின்றன, முற்றாக ஒதுக்கித்தள்ளப்படுகின்றன.

"நீ ஒன்றும் பேசாதே, என்ன இருந்தாலும் நீ தீவிரவாதி" என்ற முத்திரை நெடுகிலும் குத்தப்படுகின்றது.

மாலேகான், ஹைதராபாத் மெக்கா மசூதி போன்ற இடங்களில் குண்டு வெடிக்கச்செய்தவர்கள் ராணுவ கர்னலான புரோஹித் என்பவனும், ஒரு பெண் சாமியாரும், இவர்கள் இணைந்து நடத்தும் ஒரு இந்துத்துவா தீவிரவாத ஆயுதப் பயிற்சிப்பள்ளியும். மும்பை போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்காரே பாரபட்சமின்றி இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டதால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலால் "துரோகி" என்று தூற்றப்பட்டு படாதபாடு படுத்தினர்.

2008 நவம்பர் 26 மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது அங்கே நடவடிக்கைக்காக சென்ற கார்காரே, தீவிரவாதிகளின் துப்பாக்கிக்கு பலியானார்

('துரோகி' என்று திட்டிய பா.ஜ.க. கும்பல் உடனடியாக 'கார்கரே ஒரு தியாகி' என்று பாடியது. அவரது மனைவிக்கு கோடி ரூபாய்களை சன்மானமாகத் தர மோடி முன்வந்தபோது கார்கரேயின் மனைவி துச்சமாக நிராகரித்தார்).

கார்காரேயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெரும் சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன.

"லவுகீக வாழ்வில் வேலைக்குப்போவது, கடைக்குப்போவது, சாப்பிடுவது, மலஜலம் கழிப்பது, துணி துவைப்பது" போன்ற அன்றாடக் கடமைகளைப் போலவே அல்லது அக்கடமைகளில் ஒன்றாகவே சமூகத்தை 'தூய்மை'ப்படுத்துவதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று போதிக்கின்றன.

கொலம்பஸ், ஹிட்லர், கோட்சே, அத்வானி, மோடி, ஜார்ஜ் புஷ்...என வரலாறு நெடுகிலும் 'தூய்மை' ப்படுத்தப் புறப்பட்டவர்கள் இப்படித்தான் பதட்டமின்றி இருந்தார்கள், இருக்கின்றார்கள்.

ஆயிரக்கணக்கான அரவாக் இன பழங்குடிகளைத் தீயில் இட்டு எரித்த கொலம்பசும், யூதர்களை லட்சக்கணக்கில் சாக டித்த ஹிட்லரும், அரபுப்பிராந்தியத்திலும் இராக்கிலும் ஆப்கனிலும் ஒரு நூற்றாண்டாக அமெரிக்காவும் அதன் சகாக்களும் இப்படித்தான் பதட்டம் ஏதுமின்றி மனிதப்படு கொலையை செய்துகொண்டே இருக்கிறார்கள்.

காந்தி யாரை சுட்டு வீழ்த்தியபோதும் கோட்சேயும் அவனது சகாக்களான வீரசவர்க்கார் கும்பலும் பதட்டமின்றி அமைதியாகத் தான் இருந்தார்கள்.

அயோத்தி, ஒரிசா, குஜராத், பிஹார், மும்பை, மாலேகான், ஹைதராபாத், ராஜஸ்தான், தென் காசி, குல்பர்க் சொசைட்டி ஆகிய இடங்களில் முஸ்லிம், கிறித்துவ மக்களை உயிரோடு கொளுத்தியும் குரல்வளைகளை அறுத்த போதும்,

முஸ்லிம்-கிறித்துவப் பெண்களை வல்லுறவு செய்தபோதும் நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்தபோதும் அவர்கள் பதட்டமின்றித்தான் இருந்தார்கள், நிதானமாக 'தூய்மை'ப்படுத்தினார்கள்.

ஸ்டெயின்ஸ் பாதிரி யாரையும் அவரது இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்துக் கொளுத்தி 'தூய்மை'ப்படுத்தியபோதும், சொராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜெஹான் போன்ற இசுலாமியக்குப்பைகளை போலி என்கவுன்டர்களில் சுட்டு வீழ்த்தியபோதும் பதட்டமின்றிதான் இருந்தார்கள்.

'வாட்டர்' படப்பிடிப்பின் போது மீராநாயரையும் அவரது குழுவினரையும் கங்கைக் கரையில் ஓடஓட விரட்டியபோதும் பதட்டம் இன்றிதான் இருந்தார்கள்.

மீராநாயரை விரட்டிவிட்டு, கங்கையிலும் காசியிலும் மொட்டை அடித்து தெருவில் அநாதைகளாகவும் விபச்சாரிகளாகவும் விரட்டப்பட்ட இந்து மதப்பெண்களின் 'புனித'த்தைக் காப்பாற்றினார்கள்.

குஜராத்தில் சாயாஜி பல்கலைக்கழக மாணவர் சந்திரசேகரையும், பேராசியர் பணிக்கரையும் விரட்டி அடித்து சிறையில் தள்ளியபோதும்,
கர்நாடகாவில் இளம்பெண்களை அடித்து நொறுக்கி அவமதித்து 'பாரதப் பண்பாட்டை'க் கட்டிக்காத்த போதும் பதட்டம் இன்றித்தான் இருந்தார்கள்.

ஆமிர்கானின் 'பானா' திரைப்படத்தை குஜராத்தில் திரையிட்ட அரங்குகளை எல்லாம் அடித்து நொறுக்கி குஜராத்தில் தடை செய்த போதும் பதட்டமின்றி அமைதியாகத்தான் இருந்தார்கள்.

காஷ்மீரில் முஸ்லீம் பெண்களை வல்லுறவுக்காளாக்கிய போதும், முஸ்லீம் சிறுவர்களை போலி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்து பதவி உயர்வு பெற்றபோதும் இந்திய ராணுவத்தினர் பதட்டமின்றி நிதானமாகத்தான் இருக்கின்றார்கள்.

பொடா, தடா, அடாபுடா போன்ற சட்டங்களின் கீழ் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை விசாரணை ஏதும் இன்றி வருடக்கணக்காய் சிறையில் அடைத்து மனநோயாளிகளாக்கிய போதும் கூட மாண்புமிகு நீதிமன்றங்கள் பதட்டம் ஏதுமின்றி அமைதியாகத்தான் இருக்கின்றன.

அரசு எந்திரமோ ஒரு நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ கூட கழன்றுவிடாமல் எப்போதும்போல் கழுவப்படாத சிமெண்டு கலவை மெசின் போல சுழன்றுகொண்டேதான் இருக்கின்றது.

கர்ப்பிணிப்பெண்ணின் பிறப்புறுப்பு வழியே கையை நுழைத்து கருப்பைக்குள் இருந்த கருவைக் கலைத்து கருவறுத்தார்கள் 'கருவறுத்தார்கள்' உண்மைதான்!

முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்களைத் தேடி, வயிற்றை சூலாயுதங்களால் கிழித்து, உள்ளே இருந்த சிசுக்களை தீயில் போட்டு வாட்டிய கொடுமையும் நடந்ததே!

எங்கே? குஜராத்தில்.

செய்தவர்கள் யார்? நரேந்திரமோடியும் போலிசும் சங்பரிவார் கும்பலும் தானே!

அல்-காய்தா, இராக், அமெரிக்கா, கத்திரிக்கா, புடலங்கா என்று பேசும் ஊடகங்களில் குஜராத்தில் இந்தக் கொடுமைக்காரர்களைப் பற்றி ஓர் இடத்திலும் குறிப்பாகவோ அடையாளத்தாலோ கூட உணர்த்தாதது ஏன்?

.ஆம், பதட்டம் ஏதும் இன்றி இந்துத்துவா தீவிரவாதிகள், முஸ்லிம், கிறித்துவர்களை நல்லபடியாகத்தான் 'தூய்மை'ப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

'இந்திய சமூகத்துக்கு தேவையில்லாத இஸ்லாமியர்களை, இடையூறு விளைவிப்பவை. இவர்களை அப்புறப்படுத்தி சமூகத்தைத் 'தூய்மை'ப்படுத்தும் கடமையை கோட்சேயைப் போல், மோடியைப் போல் நிதானமாக, பதட்டமின்றி செய்யவேண்டும்' என்ற இந்துத்துவா அரசியலை வெட்கம் ஏதுமின்றி 'பாஞ்ச ஜன்ய' சங்கு எடுத்து ஊதுகின்றனர்.

தனது வர்த்தக லாபங்களுக்காக உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும்,

வர்த்தக லாபங்களுக்காக இந்திய இஸ்லாமிய மக்களை திட்டமிட்டே 'தீவிரவாதி'களாக ஆக்கும் பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

இந்த அஜெண்டாவை செயல் படுத்தும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும்,

இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

பொதுவாக சமூகத்தில் சுத்தமானவர்கள், முற்போக்கானவர்கள் என்று 'அறியப்பட்ட' வர்களின் அசைவுகள், வார்த்தைகளை பொதுவெளியில் உள்ள சமூகம் எப்போதும் அவதானித்துக் கொண்டே இருக்கிறது.

அவர்கள் கூறும் வார்த்தைகளின் உள்ளே புகுந்து உண்மையைத் தேடுவதை விட்டுவிட்டு வார்த்தைகளையே உண்மை என நம்பிவிடுகின்றது.

"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்" என்ற ச.தமிழ்ச்செல்வனின் கவலையை இங்கே பதிவு செய்வது பொருத்தம்.

ஆக்கம்: இக்பால் சனி, 09 ஜனவரி 2010 05:36
THANKS TO SOURCE: keetru.com.
தொகுப்பு: வாஞ்ஜூர்.
***********

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது!

>> Thursday, November 17, 2011

தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.

”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக
பார்ப்பன வன்மத்துடன்
தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும்
எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.

கொஞ்சமாவது மனிதத் தன்மையோடு சிந்திக்க மாட்டானா
இந்த மானங்கெட்ட தினமலர்?
தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது
விடியோ காணவும்


மேலும் படிக்க... Read more...

முஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)ரின் முயற்ச்சி.

>> Wednesday, November 16, 2011

தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்
“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர். “
என்ற‌
தினமல(த்தின்)ரின் பொய்யான மற்றும் தவறான செய்திக்கு
மறுப்பு அறிக்கை
தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
பொய்யான மற்றும் தவறான வெளியிடும் தினமலர்.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP