**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

விபசார ஊடகங்கள்.

>> Monday, November 18, 2013

ஊடக விபசார விகடனை காறித்துப்புங்கள். செய்திகளை விஷமத்தனமாக‌ திரித்து இட்டுகட்டும் விபசார ஊடகங்களில் போட்டி போட்டுகொண்டு அலைவதில் விகடனும் தன் பங்கை குறைவில்லாமல் செய்து வருகிறது.


படமும் கீழே தமிழக‌ முஸ்லீம் சமூகத்தையே மோசமாக மக்கள் கருதும் வகையிலான வாசகங்களை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி எழுதி உள்ளதும் விகடனில் பிரசுரமானது.
''பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் இந்தியாவுடன் சைபர் வார் நடத்திக்கொண்டிருப்பது தனிக் கதை. அதே நேரம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இன்னார் ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு எதிராக செயல்படக் கூடும் என்று ரகசிய லிஸ்ட் தயாரித்திருக்கிறார்களாம்.

அதில் முதல் பெயர் மோடி. அடுத்த பெயர் ஜெயலலிதா.

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் மோடியைப் பற்றி செல்போனில் பேசியதை இடைமறித்துக் கேட்டிருக்கிறது இந்திய ராணுவ உளவுப் பிரிவு. தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக மாறிவிட்ட பாகிஸ்தான் நாட்டில், உலகமே தேடும் தீவிரவாதிகள் பலர் பதுங்கி இருக்கிறார்கள். ஆனால், அந்த நாட்டு அரசாங்கம், இல்லை என்று மறுக்கும். எனவே, அந்த நாட்டுக்கு டிமிக்கி கொடுத்து, துணிச்சலாக முதலில் பின்லேடனைக் கொன்றது அமெரிக்கா. இப்போது தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத்தை ஆளில்லா விமானம் அனுப்பி தாக்கிக்கொன்றுள்ளது. அதுமாதிரி அதிரடி நடவடிக்கை எடுக்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்குத் துணிவில்லை.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் நாட்டில் ஐ.எஸ்.ஐ. அரவணைப்பில் இருப்பதை ஆதாரத்துடன் உலக நாடுகளுக்கு இந்தியா காட்டி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

மோடி பிரதமரானால், முதல் அட்டாக்... தாவூத் மீதுதான் இருக்கும் என்பது பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், மோடியின் உயிருக்கு குறிவைத்து தீவிரவாதிகளை முடுக்கிவிட்டிருக்கிறது.

இதில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று தெரியுமா? ஐ.எஸ்.ஐ-யின் களம்... தமிழகம் என்பதுதான்!''

''தமிழகமா?''

''அத்வானி இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களுக்குப் போகிறார். அங்கெல்லாம் பெரியளவில் நடக்காத கொலை முயற்சி சம்பவங்கள், தமிழகத்தில்தானே நடந்தது. ஏன்?

இதற்கு உளவியலான ஒரு காரணம் சொல்கிறார்கள். 'ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு எதிர் விளைவான சம்பவங்கள் தமிழகத்தில் பெரிய அளவில் நடக்காது’ என்பதுதான்.

அதனால்தான் தீவிரவாதிகள் தமிழகத்தைத் தேர்வுசெய்வார்களாம்.

'தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது மோடி மீது தாக்குதல் முயற்சி நடக்கலாம். அதைப்போலவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது கடுங்கோபத்தில் இருப்பவர் ஜெயலலிதா. அகில இந்திய அளவில் அரசியலில் பிரவேசிக்கக் காத்திருக்கிறார்.

பி.ஜே.பி. ஆட்சி அமையாத பட்சத்தில் எதிர்க் கட்சியின் வேட்பாளராக பிரதமர் ஆகும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்குத்தான் உள்ளது என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் போடப்பட்டுள்ளதாம். 'இந்த இருவரையும் மத்திய அரசுக்கு வரவிடக் கூடாது’ என்பது அவர்களது திட்டம்.''

''இதையெல்லாம் மத்திய அரசு சீரியஸாக பார்க்காத மாதிரி அல்லவா தெரிகிறது?''

''இப்போது மோடி, ஜெயலலிதா இருவருக்கும் உயர் பாதுகாப்பு நிறைந்த 'இசட் ப்ளஸ் பாதுகாப்பை, தேசிய பாதுகாப்பு படையினர் தந்து வருகிறார்கள். இதற்கும் உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த 'சிறப்பு பாதுகாப்புக் குழு’ (எஸ்.பி.ஜி) உள்ளது. அதைத்தான் மோடிக்கு கேட்கிறது பி.ஜே.பி. அதைத் தர முடியாது என்று சொல்லி நிராகரித்துவிட்டது மத்திய அரசு.

மோடிக்கு கேட்டது என்ன ஆகிறது என்று பார்த்துவிட்டு, அடுத்து ஜெயலலிதாவுக்கும் கேட்கலாம் என்று நினைத்திருந்தனர் அ.தி.மு.க. தலைவர்கள். இப்போது அவர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.''

''இப்போது எஸ்.பி.ஜி. பாதுகாப்பு யாருக்காவது தந்திருக்கிறார்களா?''

''பிரதமர், முன்னாள் பிரதமர்கள், சோனியா மற்றும் அவரது குடும்பத்தினருக்குத்தான் இப்போது தந்திருக்கிறார்கள். இந்த வரிசையில் ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் பாதுகாப்பு கொடுத்தால்தான் ஐ.எஸ்.ஐ-யின் தாக்குதல் சதியை முறியடிக்க முடியும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.''

''மோடிக்கு எதிர்ப்பு இருக்கலாம். ஜெயலலிதா எந்த வகையில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றார்?''

''போலீஸ் சொடிக்கி படியுங்கள் பக்ரூதீன் கோஷ்டி யை பிடித்ததுதான். அவர்களை ப் பிடித்த போலீஸுக்கு வாரிவழங்கியதால் தீவிரவாதிகள் கடுங்கோபத்தில் இருக்கிறார்களாம். தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காகத்தான் பாகிஸ்தானில் இருந்து அ.தி.மு.க. வெப்சைட்டை முடக்கினார்கள்.


தமிழக அரசின் சில துறைகளின் வெப்சைட்டுகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

கொஞ்ச காலம், கொடநாடு மற்றும் சிறுதாவூர் பங்களா விசிட்களைத் தவிர்க்கச் சொல்லியிருக்கிறார்களாம் உளவுத் துறை அதிகாரிகள்.'' ''தமிழக போலீஸ் இதை ஸ்மெல் செய்திருக்குமே?''

''சட்டம்-ஒழுங்கு, உளவுப் பிரிவு... இரண்டிலும் புகுந்து விளையாடும் தமிழக டி.ஜி.பி-யான ராமானுஜம் போன வருடம் நவம்பரில் ரிட்டயர்டு ஆகி இருக்க வேண்டும். அவருக்கு இரண்டு ஆண்டுகள் பணி நீடிப்பு வழங்கினார் ஜெயலலிதா. இந்த மாதத்துடன் அவருக்கு ஒரு வருடம் முடிகிறது. 'போதும்... இத்துடன் விலகிக்கொள்கிறேன்’ என்று சொன்னாராம். அதை முதல்வர் ஏற்கவில்லையாம். 'இன்னும் ஓர் ஆண்டு இருக்கிறதே?' என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி தடுத்துவிட்டாராம்.

• நாடாளுமன்றத் தேர்தல் வரை அவரை அதே பதவியில் வைத்துக்கொள்ளவே முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறாராம். காரணம்... தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலிதான்'' என்ற கழுகார், - ஜூனியர் விகடன் 13 Nov, 2013

*************************


நடந்த உண்மை.
படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்


செய்திகளை விஷமத்தனமாக‌ திரித்து இட்டுகட்டி முஸ்லீம்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி மக்களின் மனதில் பதியச்செய்ய இந்துத்வாவின் கூலிப்படை விபசார ஊடகங்களில் போட்டி போட்டுகொண்டு அலைவதில் விகடனும் தன் பங்கை குறைவில்லாமல் செய்து வருகிறது.

அ.தி.மு.க இனையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லீம்கள் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட துடிக்கும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் கைக்கூலியாகி ஊதுகுழலாக செயல்படும் விகடன்.

காவி தீவிரவாதிகள் முஸ்லிம்களை சிக்க வைக்க எப்படி எல்லாம் திட்டம் தீட்டுகின்றனர்!

இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை உண்டு பண்ண இந்த அடிவருடி விபசார பத்திரிக்கைகள் எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா....

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா....

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்
 

என்னதான் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட முயற்சித்தாலும் பலிக்காது என்று கூறுகின்றனரோ இந்த இளம் பிஞ்சுகள்.


**************************


பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது
********************
தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.

நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.
***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<


**************************

1 comments:

Unknown November 18, 2013 at 1:54 PM  

இஸ்லாமிய சமுதாயம் தற்போது,யூத பயங்கரவாதிகள், காவி பயங்கரவாதிகளிடம் மட்டுமல்லாது, ஊடக பயங்கரவாதிகளின் தாக்குதல் போரையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்!

அவர்கள் உண்மையான குண்டை போட்டு நம்மை பழி சுமத்துவார்கள்!

இவர்கள் பொய் குண்டை போட்டு
நம்மை பழி சுமத்துவார்கள்!

ஊடக நாடக கபட வேஷதாரிகள்!

நல்ல பதிவு!

சத்தியம் வெல்லும்
அசத்தியம் அழியும்
அந்நாள் வரை
இந்நிலையே தொடரும்!

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP