**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கலைஞர் வைக்கும் வெடிகுண்டு. நடத்துங்கடா உங்கள் நாடகத்தை.

>> Monday, May 5, 2014

ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்!

நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்

யாரையோ திருப்திப்படுத்த கலைஞர் இப்போதே அச்சாரம் போட்டு வைக்கிறார்?

ரத்த வெறிப் பிடித்து அலையும் ஊடகங்கள்!

மு.க. அடங்குவது எப்போது?

இலங்கையின் கண்டியைச் சேர்ந்த துணி வியாபாரியான ஜாஹீர் ஹுஸைன் என்பவரை, சில நாட்களுக்கு முன்னர் காவல் துறையினர் திருவல்லிக்கேணியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவர் மீது இன்னும் ச்சார்ஜ் ஷீட்டே வெளிவரவில்லை.

அந்த கண்டி ஜாஹிர் ஹுஸைனை "பாகிஸ்தான் தீவிரவாதி - ஐ எஸ் ஐ உளவாளி" என்று குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்தி, மு.க. செய்தி வாசிக்கிறார்.

ஜாஹிர் ஹுஸைன் தீவிரவாதியா இல்லையா என்பது விசாரணையில் / நீதிமன்றத்தில் வெளிவரும்; நடந்த குண்டுவெடிப்பு முஸ்லிம்கள் செய்ததுதான் என்ற முடிவுக்கு மு.க. எதன் அடிப்படையில் வந்தார்?

இது வழக்கைத் திசை திருப்பும் வேலையில்லையா?

யாரையோ திருப்திப்படுத்த இப்போதே அச்சாரம் போட்டு வைக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

1967 கால முஸ்லிம்கள் அல்லர் இப்போது! ஒவ்வொரு அரசியல்வியாதியின் ஒவ்வொரு சலனத்தையுமே புரிந்துகொள்ளும் பக்குவம் எங்களுக்கு வந்துவிட்டது. இனியும் நீண்ட நாட்களுக்குக் குல்லா போட்டுக்கொண்டு நோன்புக் கஞ்சி குடிக்கும் ஸீன் எடுபடாது.

அதேவேளை, இதே கருணாநிதிதான் கோவை கலவரங்களின்போது, முதன்முதலாகச் சட்டமன்றத்தில் "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தவர் என்பதையும் தமிழக முஸ்லிம்கள் மறந்துவிடவில்லை. இவர் இப்போது தொடங்கி வைத்த 'பாகிஸ்தான் உளவாளி', 'ஐ எஸ் ஐ தீவிரவாதி' ஆகிய இரு சொற்களையும் வைத்துக் கொண்டு, விண்டோ ஜர்னலிஸக் கில்லாடி ஊடகங்கள் இரு நாட்களாக ஆடிய ஆட்டத்துக்கு இன்று ஆப்பு அடிக்கப்பட்டு விட்டது.

"குண்டு வெடிப்பதற்கு சில விநாடிகள் முன்பு ரயிலில் இருந்து இறங்கி ஒருவர் ஓடுகிறார். அவர் மீது சந்தேகம் இருக்கிறது. அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாட்னாவில் சமீபத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு போலவே சென்னையிலும் நடந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஜாஹீர் ஹுஸைனுக்கும் செண்ட்ரல் ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை" என்று விளக்கி, சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் ஊடகங்களுக்கு பலமாக ஆப்பு அடித்துள்ளார்.

செண்ட்ரல் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புப் பற்றிக் கிடைத்துள்ள ஒரேயோர் உருப்படியான தகவல் என்னவென்றால், இந்த குண்டுகளும், பாட்னா ரயில் நிலையத்தில் வெடித்த குண்டுகளும் மோடி பாட்னாவில் பேசும்போது வெடித்த குண்டுகளும் ஒரே மாதிரியான வேதிப் பொருட்களால் தயார் செய்யப்பட்ட பாட்னா குண்டுகள் என்பதே அது.

பாட்னா குண்டு வெடிப்பை ஏற்பாடு செய்தவர்கள் யாவர் என்பது எல்லாருக்கும் தெரியும்; மோடிக்கும் தெரியும். அதனால்தான் குண்டு வெடிப்புக்குப் பின்னர் அதே மேடையில் பேசிய 'துணிச்சல்கார' மோடி, தான் பேசுவதற்குச் சற்று முன்னர் வெடித்த குண்டு வெடிப்பைப் பற்றி ஒரு வார்த்தையையும் தன் பேச்சில் குறிப்பிடவேயில்லை.

ஆனால், ஆந்திராவில் மோடி பேசுவதற்காக வரும்போது ஆந்திர எல்லையில் வெடித்திருக்க வேண்டிய இந்த குண்டு வெடிப்பை மையப் படுத்தி, பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கௌஹாத்தி எக்ஸ்ப்ரஸ் உரிய நேரத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்து, உரிய நேரத்தில் புறப்பட்டு, ஆந்திர எல்லையில் குண்டு வெடித்திருந்தால் அதனால் இலாபமடைய இருந்தவர்கள் யாவர் என்பது வெள்ளிடை மலை.

நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் "எல்லை தாண்டிய பயங்கரவாதம்", "ஐ எஸ் ஐ சதி", "முஸ்லிம் தீவிரவாதம்" என்று திசை திருப்பும் செயலை அத்வானி செய்து கொண்டிருந்தார். அனைத்து குண்டு வெடிப்புகளும் எங்களின் (சங் பரிவாரின்) கைங்கரியங்கள்தாம் என்று சுவாமி அசீமானந்தா பெருமையோடு வெளிச்சம் போட்ட பின்னர் அத்வானி அடங்கிவிட்டார்.

SOURCE: http://www.satyamargam.com/editorial/2338-twin-blast-in-chennai-central-station.html

 ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! - ஆளூர் ஷாநவாஸ்

'ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம்' என அறிக்கை விட்டுள்ளார் கலைஞர்.

ஜாகிர் உசேன் பாகிஸ்தான் உளவாளியா தீவிரவாதியா என்பதை யார் முடிவு செய்வது? காவல்துறை ஒருவரை கைது செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர் தீவிரவாதிதான் என்ற முடிவுக்கு வரலாமா?

ஏற்கெனவே காவல்துறை அதிரை தமீம் அன்சாரியை தீவிரவாதி என்றுதான் கைது செய்தது. பின்னர் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக்கி காவல்துறை கைது செய்தது. பின்னர் அது உளவுத்துறையின் சதி என அம்பலமானது.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞரை காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர் குற்றமற்றவராக வெளிவந்துள்ளார்.

அப்துல்நாசர் மதானி, குணங்குடி ஹனீபா, தடா ரஹீம், ஆயிஷா என எத்தனையோ பேரை அன்றைய தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்தது. பல ஆண்டுகள் சிறையில் வாடிய பின், அவர்களை நிரபராதிகள் என சொல்லி நீதிமன்றம் விடுவித்தது.

எனவே, காவல்துறை ஒருவரை தீவிரவாதி என சொல்வதும், ஊடகங்கள் அதைப் பரபரப்பாக்குவதும், பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாகி வரும்போது, உண்மை நிலையை உணராமல் கலைஞர் இப்படி அவசர அறிக்கை விடலாமா?

ஜாகிர் உசேனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்பதைவிட, தயாநிதி மாறனிடம் முழு விசாரணை நடத்தியிருந்தால் 2ஜி யையே தவிர்த்திருக்கலாம் என்று சொல்வதே சரியானது.

சொல்வீர்களா? -ஆளூர் ஷாநவாஸ்

________________________________________

சென்டிரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாக கலைஞர் வெளியிட்ட அறிக்கை குறித்து நான் எழுதிய மேற்கண்ட பதிவை பார்த்து தி.மு.க நண்பர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜாகீர் உசேனை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது; அப்படியெனில் நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்களா?' என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

கூடங்குளம் போராட்டக் குழுவினரை அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என அரசும் காவல்துறையும் ஊடகங்களும் சொன்னபோது அதைக் கடுமையாக எதிர்த்துள்ளேன். தலித் மக்களை சமூக விரோதிகளாக சித்தரித்து பா.ம.க.வினர் பரப்புரை செய்தபோதும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளேன். அப்போதெல்லாம் சமூக ஆர்வலனாகத் தெரிந்த நான், இப்போது முஸ்லிம்களுக்காக பேசும்போது அடிப்படைவாதியாகத் தெரிவது ஏன்?

தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை இங்கே எந்த முஸ்லிமும் ஆதரிப்பதில்லை. அவர்களுக்குச் சமூகத்தில் எந்த அங்கீகாரமும் தரப்படுவதில்லை. அல்-காய்தாவோ, அல்-உம்மாவோ எவரையும் முஸ்லிம்கள் நேசிப்பதில்லை. குற்றம் செய்தவர்கள் என்பது நிரூபிக்கப் பட்டால் அவர்களிடமிருந்து இறுதிவரை முஸ்லிம் சமூகம் விலகியே நிற்கிறது. ஆனால், முஸ்லிம்களின் இந்த அணுகுமுறை மற்றவர்களிடம் இருக்கிறதா?

கோவை குண்டுவெடிப்பில் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களுக்காக இங்குள்ள எந்த முஸ்லிம் அமைப்பாவது வாதிடுகிறதா?

அவர்கள் குற்றமே செய்யவில்லை என்று சப்பைக் கட்டு கட்டுகிறதா?

அவர்களின் படத்தைப் போட்டு தியாகிகளாகக் கொண்டாடுகிறதா?

இல்லையே.

ஆனால், காந்தியைக் கொன்ற கோட்சேயை இந்துத்துவவாதிகள் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே.

பாபர் மஸ்ஜிதை இடித்தப் பயங்கரவாதிகளை ‘கரசேவகர்கள்’ என்ற அடைமொழியுடன் அழைக்கிறார்களே.

கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி என்று ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்ட பால்தாக்கரே மறைந்தபோது, உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு தியாகி ஆக்கப்பட்டாரே.

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளியென லிபரகான் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட அத்வானி இன்றும் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறாரே.

மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்ற பிறகும் மோடியால் பிரதமர் வேட்பாளர் ஆக முடிகிறதே.

அவர்தான் இந்தியாவை மீட்க வந்த மீட்பர் என்று பலரால் வாதிட முடிகிறதே. இவையெல்லாம் ஒரு முஸ்லிம் குற்றவாளிக்கு இந்த மண்ணில் சாத்தியமா?

எனவே, முஸ்லிம் குற்றவாளியும், இந்துக் குற்றவாளியும் இங்கே ஒரே அளவுகோல் கொண்டு அளக்கப்படுவதில்லை எனும்போது, முஸ்லிம்கள் கொந்தளிப்பதில் என்ன பிழை இருக்க முடியும்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், 'சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்' என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் 'ஜூவி' அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.

ஜாகிர் உசேன் குற்றவாளியா இல்லையா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது என்பதே என் வாதம். அவர் குற்றவாளி என்று நிரூபணமானால் அவருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் அதை நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. ஆனால், கைது செய்யப்பட்ட அன்றே அவர் குறித்த அனைத்து தகவலையும் நம்பி ஒரு முடிவுக்கு வரலாமா என்பதே நம் கேள்வி.

ஏற்கெனவே, மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் காவல்துறை சொன்னது பொய் என்று ஸ்டாலின் அவர்கள் அம்பலப்படுத்தி உள்ளார். இந்துத்துவ தலைவர்கள் படுகொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன் குழுவினரே குற்றவாளிகள் என காவல்துறை சொன்னதை கலைஞரே கேள்வி எழுப்பி உள்ளார். போலீஸ் பக்ருதீனை காவல்துறையும் ஊடகங்களும் தீவிரவாதி என சொல்லிக் கொண்டிருந்த போதுதான் கலைஞர், போலீஸ் பக்ருதீன் தரப்பு நியாயத்தை கேள்வியாக முன்வைத்தார். அப்படி கேள்வி எழுப்பியதற்காக கலைஞர் தீவீரவாத ஆதரவாளர் ஆகிவிடுவாரா?

இப்போது, ரயில் நிலைய குண்டு வெடிப்புக்கும் ஜாகீர் உசேனுக்கும் தொடர்பில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாட்னாவில் மோடி கூட்டத்தில் வெடித்த அதே வகை குண்டுதான் இங்கும் வெடித்துள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. பாட்னா வெடிப்பில் இந்துத்துவ சக்திகளின் சதிவலையே அம்பலமானது. எனவே இதுவும் அதன் தொடர்ச்சிதான் எனும்போது சந்தேகம் யாரை நோக்கி வரவேண்டும்?

முஸ்லிம்கள் மீதான வெறுப்பை பற்றவைப்பதன் மூலம் முஸ்லிம் அல்லாத பெரும்பான்மை வாக்குகளை ஒருங்கிணைப்பதே மோடியின் திட்டம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் துணிந்துள்ளனர். எனவே, ஆந்திராவுக்கு மோடி வரும்போது, ஆந்திராவை கடந்துவரும் ரயிலில் குண்டு வெடிக்கிறது என்றால் சந்தேகம் முஸ்லிம் மீதா வரவேண்டும்?

இந்த நேரத்தில் குண்டு வெடித்தால் அந்த லாபம் மோடிக்கா, முஸ்லிமுக்கா என்பதைக் கூடவா சிந்திக்கமாட்டீர்கள்?

குண்டுவெடிப்பு குறித்து கவர் ஸ்டோரி எழுதியிருக்கும் ஜூனியர் விகடன், 'சிக்கிய ஜாகீர், சிதறிய ரயில்' என்று தலைப்பிட்டுள்ளது. மோடியை பிரதமராக்கத் துடிக்கும் 'ஜூவி' அவ்வாறு எழுதியதில் எமக்கு வியப்போ, ஆத்திரமோ, வருத்தமோ துளியும் இல்லை. ஆனால், மோடி அல்லாத மதசார்பற்ற ஒருவர் பிரதமராக வேண்டும் என்று முழங்குகிற கலைஞர் அப்படி ஒரு அறிக்கை தந்ததே எமக்கு பெருத்த ஏமாற்றம்.

தி.மு.க நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

_ ஆளூர் ஷாநவாஸ்

************

ரத்த வெறிப் பிடித்து அலையும் ஊடகங்கள்!

நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும், முதலில் ஊடகங்கள் அங்கே ரத்தக் கறை இருக்கிறதா என்றுதான் தேடி அலைகின்றன. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பின்போது, தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக காட்டப்பட்ட ரத்தக்கறை இன்னமும் அப்படியே மனதில் நிற்கிறது.

இப்போது சென்னையில், குறிப்பாக தந்தி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ரத்தம் படிந்த தரையை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஊடக தர்மம் என்பது என்ன? மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவதற்கு பதிலாக, தொடர்ச்சியாக அச்சத்தையே உண்டு பண்ணுகிறது இவர்களின் காட்சியமைப்புகள். உடனடியாக தந்தி தொலைக்காட்சி இதனை நிறுத்த வேண்டும்.

தவிர, இன்னமும் குண்டு வெடிப்பிற்கான காரணமோ, யார் செய்திருப்பார்கள் என்கிற தகவலோ தெரியாமல், தொடர்ச்சியாக யார் செய்திருக்க கூடும் என்கிற கணிப்பை அழுத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, பா.ஜ.க தமிழ்நாடு தலைவர், பொன். ராதாக்ருஷ்ணன் நேராக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு மட்டும், அமைதியாக இருந்தால் எப்படி? தமிழ்நாட்டில்தான், இந்த அளவிற்கு மோடி எதிர்ப்பலை வீசுகிறது, உடனே அந்த எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நோக்கி திருப்பிவிடும் போக்கைத்தான், ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் ஊடகங்கள் ஆற்றும் பணி முக்கியமானது. அதனை கொஞ்சம் பொறுப்புணர்வுடன் செய்தால், காலம் அவர்களை கனிவுடன் நோக்கும். - தமிழ் ஸ்டுடியோ அருண்

________________________________________

மதுரையில் சில வாரங்களுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் கைதானது - மூன்று இந்துக்கள்! ஆனால், எந்த நாளிதழும் எந்த செய்தித் தொலைக்காட்சியும் "மூன்று இந்து தீவிரவாதிகள்" கைது என்று சொல்லவேயில்லை!

இதுவே கைதாயிருந்தது ஒரே ஒரு முஸ்லீம் நபராக இருந்திருந்தால் கூட "முஸ்லீம் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்" என்று செய்தி வரும் இந்நாட்டில்!

எங்கு குண்டு வெடித்தாலும் உடனே காவல்துறையினர், அப்பாவி முஸ்லீம் சகோதரர்களை விசாரணை என்ற பெயரில் மிகுந்த துன்பத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாக்குகின்றனர்!

ஒரு குண்டு வெடித்தால் உடனே "யாரோ முஸ்லீம் தீவிரவாதி குண்டு வச்சுட்டான்" என்று பொத்தம் பொதுவாய் எதுவுமே தெரியாமல் பொது மக்களை நம்ப வைத்திருப்பது தான் இந்துத்தவ மற்றும் காவித் தீவிரவாதிகளின் வெற்றி! அனைத்து ஊடகங்களும் இப்போது இதற்கு சிறிதும் கூச்சமே இன்றி உடன் போகின்றன!

"முஸ்லீம் என்றாலே அவர்கள் ஏதோ அரேபியா நாட்டில் இருந்து வந்தவர்கள்; இந்நாட்டை சேர்ந்தவர்களே இல்லை என்றும் அவர்கள் அனைவரையுமே தீவிரவாதிகள்" என்று பார்க்கும் குறுகிய மனப்பான்மை தான் இங்கு பெரும்பாலானோருக்கு இருக்கிறது!

ஒரு குண்டு வெடித்தால் பள்ளி - கல்லூரிகளில் உடன் பயிலும் முஸ்லீம் மாணவர்களை ஏளனமாக கேலி பேசுவது; அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் முஸ்லீம் சகோதரர்களை மனம் நோகும் வகையில் பகடி செய்வது - இதில் எல்லாம் பல பார்ப்பன நாய்களுக்கும் மேல்தட்டு மேல்சாதி வெறி பிடித்த மிருகங்களுக்கும் இந்துத்வா வெறி பிடித்த காட்டுமிராண்டிகளுக்கும் அப்படி ஒரு பேரானந்தம்!

ஆனால், ரம்ஜான் பக்ரீத் பண்டிகைகள் அன்று மட்டும் சிறிதும் வெட்கமே இன்றி "பாய், பிரியாணி கொண்டு வாங்க" என்று பல் இளித்துக் கொண்டு கேட்பது, தெரியாதவராய் இருந்தாலும் "முஸ்லீம் கல்யாணத்துல பிரியாணி நல்லாயிருக்கும்" என்று அற்பமாய் அலைவது - இது தான் இந்த இந்து மத வெறி பிடித்த கொள்கைவாதிகளின் லட்சணம்!

இந்த நாட்டில் உங்களைப் போன்ற ஆரிய வந்தேறிகளும், இந்து மத வெறி பிடித்த ரத்தக் காட்டேரிகளும் இருக்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதை விட பல மடங்கு இந்நாட்டின் மைந்தர்கள் தான் இஸ்லாமியர்களும்! நீங்கள் வைக்கும் குண்டுகளுக்கும் நீங்கள் செய்யும் பயங்கரவாத செயல்களுக்கும் எத்தனையோ அப்பாவி இஸ்லாமியர்கள் பலி ஆகியுள்ளனர்; இன்னமும் ஆகின்றனர்! உங்கள் குடுமியை இப்படியே வளர விட்டுக் கொண்டு எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்!

தீவிரவாதம் என்ற ஒன்று உருவாவதே அந்த அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் தான்! அரசாங்கத்தின் மேல் அதிருப்தி வருவதால் தான்; நாட்டின் கொடுமைகள், அநீதிகளுக்கு நியாயம் கிடைக்காத போது தான் எந்த ஒரு தீவிரவாதமும் உருவாகிறது! தீவிரவாதம் என்பதற்கும் பயங்கரவாதம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது!

இந்த நாட்டின் பன்முகத்தன்மையை குலைக்க முற்படாமல் இந்துத்வா வெறியை காட்டாமல் இருந்தால் எந்த தீவிரவாதமும் வெளியே வரவே வராது! பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்னால் இந்நாட்டில் குண்டுகள் வெடித்தது இல்லையே, ஏன்?! சிந்திக்க வேண்டாமா?!

காவித் தீவிரவாதிகளின் ஊடக பயங்கரவாதமும், காவிக் கறை படிந்த காவல்துறையும், காவித் துணியால் கண்களை மூடிய நீதி தேவதையும் மேலும் மேலும் ஒரு சில ஆரிய வெறியர்களின் இந்துத்வா கொள்கைகளுக்காக அப்பாவி இஸ்லாமியர்களை வதைத்து வந்தால், காவித் தீவிரவாதத்தை மறைத்து இஸ்லாமியத் தீவிரவாதம் என்று மறைத்துக் கொண்டே வந்தால் என்னைப் போல் இந்நாட்டின் பன்முகத்தன்மை மேலும் மனித நேயம் மேலும் மனிதம் மேலும் பற்றும் நேசமும் கொண்டவர்கள் நிச்சயம் பெரும் திரளாக கிளம்பி பெரும் புரட்சி வெடிக்கும்; அது தான் இந்நாட்டை திருத்த தேவை என்றால்!

எங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் எழுத்தே ஆயுதம்; எங்கள் சொல்லே போர்வாள்; எங்கள் செயல்களே பெரும் புரட்சியாய் வெடிக்கும்!

நீதி தேவதை மீண்டும் சாதி,மத,இன,மொழி பாராமல் கருப்புத் துணி கட்டிக் கொண்டு இந்நாட்டில் நீதி வழங்கும் வரை ஓயமாட்டோம்! - - குமரகுருபாலன் சந்திரன்

SOURCE:http://www.satyamargam.com/news/news-and-views/2339-media-s-responsibility-to-our-society.html

நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அதைச் செய்தது ஒரு இஸ்லாமியர் என்று வதந்தி பரவிக் கொண்டிருந்த நேரம். அங்கே பிர்லா இல்லத்திற்கு வந்த மவுண்ட்பேட்டன் துரை கூடியிருந்த கூட்டத்திடம், "நீங்கள் நினைப்பதுபோல, காந்தியை கொன்றது இஸ்லாமியரில்லை. கொன்றவர் ஒரு ஹிந்து" என்று அறிவித்து, பெரும் கலவரம் உருவாவதை தடுத்தார்.

நீங்கள் இப்பொழுது தானே இங்கு வந்தீர்கள், என்ன நடந்தது யார் சுட்டது என்று தெரிந்துக் கொள்வதற்கு முன்னரே இப்படி ஹிந்து என்று சொன்னீர்களே என்று நேருவும் படேலும் மவுண்ட்பேட்டனிடம் கேட்க, அதற்கு மவுண்ட் பேட்டன் சொன்னது, "நான் அவ்வாறு சொல்லாதிருந்தால் இங்கு பெரும் கலவரம் உண்டாகியிருக்கும், கொன்றது யார் என்று எனக்குத் தெரியாது!"

இது தான் ஒரு தலைமைக்கு உண்டான பண்பு. சரி அப்படியே காலச் சக்கரத்தை சுழற்றுவோம்.

13 டிசம்பர் 2001. பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. தாக்குதல் சம்பவம் முடிந்த உடனே, அந்த இடத்தை பார்வையிட வந்தார் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எல் கே அத்வானி.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி: "இந்தத் தாக்குதலை செய்தது யார்""

அத்வானி பதில்: "செய்தது பாகிஸ்தானியர்கள் தான்"


 "எப்படிச் சொல்கிறீர்கள்?"

அத்வானி பதில்: "அவர்கள் பார்ப்பதற்கு பாகிஸ்தானியர்கள் போல இருந்தனர், அதனால் அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான்"

அது என்னங்க அடையாளம்? பாகிஸ்தானியர்கள் போல இருப்பதற்கு? குல்லாவும் தாடியுமா?

இதுதான் நாட்டின் உள்துறை அமைச்சர் அளவிலிருந்து கடைக் கோடி பாமரன் வரை இவர்கள் பரப்பி வரும் வன்மம்!

வெள்ளைக்காரன் பொய் சொல்வானா சொல்ல மாட்டானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நம்ம நாட்டுகாரனைப் போல அரசியல் செய்ய மாட்டான் என்பதை என்னால் அடித்துச் சொல்ல முடியும்!

நீங்களும் உங்க சாக்கடை அரசியலும்! - கிஷோர் K சுவாமி


________________________________________

பயங்கரவாதச் செயல்கள் செய்பவர்கள், அவர்களுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்த நாட்டிற்கும், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதமானவர்களே!

பொதுமக்களின் உயிர்களைப் பறிக்கவோ, ஊனப்படுத்தவோ எந்தக் கொம்பனுக்கும் உரிமையில்லை. சென்னை ரயில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எத்தனை முனையிலிருந்து வேண்டுமானாலும் துப்பு துலக்குங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள்.

ஆனால் அதற்குமுன், குண்டு வைப்பவன் மட்டும்தான் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதி என்றாலே ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள்தான் என்றும் திணிக்கப்பட்டுள்ள பொதுப் புத்தியை முதலில் கழற்றி எறியவேண்டும். மனிதத் தன்மையற்ற மிருகங்களால் அப்பாவிகள் கொல்லப்படுவது போலவே, தேடுதல் வேட்டை என்ற பெயரிலோ, ஃபைலை மூடவேண்டும் என்ற அவசரத்திலோ எந்தவொரு அப்பாவியும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது, உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது! - வெண்புறா சரவணன்


"ISI" அப்பாவி ஜாகிர் ஹுசைன் : சிறையில் சந்தித்த 'மதமுமுக' ஒருங்கிணைப்பாளர் பேட்டி !

சும்மா விடாது அப்பாவியின் சாபம் ; விரைவில் வெளுக்கும் போலீசின் சாயம் !!

'ISI' உளவாளி என பட்டம் சுமத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர் ஜாகிர் ஹுசைன், ISI தரச்சான்று பெற்ற அப்பாவி என்கிறார், மறுமலர்ச்சி தமுமுக ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான ஜைனுலாபிதீன்.

இன்று (03/05) காலை 11 மணியளவில் ஜாகிர் ஹுசைனை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், மறுப்பு பக்கத்துக்கு தொலைபேசியில் அளித்த பேட்டி:-

இலங்கை கண்டியை சேர்ந்த முஹம்மத் நுவைர் என்பவரின் மகனான ஜாகிர் ஹுசைன், கடந்த 1994 முதல் தமிழகத்துக்கு வியாபார நிமித்தமாக அடிக்கடி வந்து செல்பவர்.

இந்தியப் பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் செல்வதும், அங்கிருந்து சில சாதனங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் சிறு வணிகர், அவர்.

40 வயதுடைய ஜாகிர் ஹுசைனுக்கு, மனைவியும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர், தற்போது அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

தன் மீது என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது கூட தெரியாமல், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஜாகிர் ஹுசைன்.

மீடியாக்களால் மிகப்பெரும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அவர், இந்த சதியிலிருந்து வெளியேறுவதற்கான வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்.

அடிக்கடி தமிழக தலைநகர் சென்னைக்கு வியாபார நிமித்தமாக அவர் வந்து சென்றாலும், எப்போதும் மண்ணடியில் உள்ள ஒயிட் பேலஸில் தங்குவது தான் வழக்கம்.

கடைசியாக ஏப்ரல் 10 ந்தேதியன்று சென்னை வந்து சென்ற அவர், மீண்டும் 18 ந்தேதி சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படும் அவர் தன்னிடமிருந்த 'பிசினஸ் விசா' உள்ளிட்ட ஆவணங்களுடன், தற்போது செல்லத்தக்க வகையில் உள்ள பாஸ்போர்ட் மற்றும், காலாவதியான பாஸ்போர்ட் என அனைத்தையும் காண்பிக்கிறார்.

அவரிடமிருந்த ஆவணங்களை சரிப்பார்த்து பெற்றுக் கொண்ட போலீசார், குற்ற முகாந்திரம் ஏதும் இல்லாத காரணத்தினால், அவரை விசாரணை வளையத்தில் வைத்திருப்பதாக சொல்லி அனுப்பி விடுகின்றனர்.

8 நாட்கள், சென்னையில் வியாபார நிமித்தமாக சுதந்திரமாக சுற்றித்திரிந்த அவரை 26 ந்தேதி மாலை 'மெட்ராஸ் யுனிவெர்சிட்டி' அருகில் சுற்றி வளைத்து கைது செய்கின்றனர்.

அதைதொடர்ந்து 29 ந்தேதி வரை சட்டவிரோத காவலில் வைத்து விசாரணை என்ற பெயரால் அடித்து துன்புறுத்தியுள்ள போலீஸ், வெற்றுத்தாள்கள் சிலவற்றிலும் எழுதப்பட்ட சில காகிதங்களிலும் கட்டாய கையொப்பம் வாங்கிக் கொண்டு,13 வது மாஜிஸ்டிரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி ரிமாண்ட் செய்கின்றனர்.

மாஜிஸ்டிரேட் கேட்டால், மோசடி வழக்கு என சொல்ல சொல்லி வற்புறுத்தியுள்ளது காவல்துறை.

இன்று (03/05) காலை 11 மணியளவில் ஜாகிர் ஹுசைனை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஜைனுலாப்தீன்:

இன்று சனிக்கிழமை என்பதால், இவர் மீது என்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தன்னால் உறுதிப் படுத்த முடியவில்லை என்றார்.

திங்கள் கிழமைக்குப் பிறகு தான் அதன் விவரங்கள் தெரிய வரும் என்று சொன்ன வழக்கறிஞர் ஜைனுலாப்தீன், கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றார்.

ஒருவர், ஒரே நேரத்தில் ISI க்காக உளவு வேலைப் பார்த்துக் கொண்டே, கள்ள நோட்டுக்களையும் புழக்கத்தில் விட்டு மாட்டிக் கொள்வாரா என்பது தான் நம்முடைய கேள்வி.

SOURCE: https://www.facebook.com/maruppu.in

நடத்துங்கடா உங்கள் நாடகத்தை!

சிதம்பரத்தில் ஒரு வீட்டில் நாட்டு வெடுகுண்டு வெடித்தது தயாரிப்பின் பொழுது ...

இதில் திண்டுக்கலை சேர்ந்த பிரபல ரவுடி கடும் காயம் ...

மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு தப்பி ஓட்டம் ..!

மேலும் வீட்டை சோதனை செய்ததில் கை துப்பாக்கிகள் டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டெடுக்க பட்டுள்ளது ..!

》》》》

கவனிக்க வேண்டும்> ரவுடியாம் வெடிகுண்டாம் துப்பாக்கியாம் ..!

தாடி வைத்த காரணத்தால் இலங்கை தமிழன் ஜாகிர் பாக்கிஸ்தான் உளவாளி என்று கைது ...

இதில் அவருக்கு பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்பு உள்ளது என்றும் ...

இந்தியாவை சீர்குலைக்க வந்தவர் என்றும் பழைய முதல்வர் வரை வதந்தி ..

அனைவருக்கும் இஸ்லாமியன் என்றால் இனிக்குது போலும் ..!

குண்டு தயாரிப்பில் தோல்வியடைந்தவன் ரவுடி என்பதோடு செய்தி நிற்கிறது ..!

இதுவே இஸ்லாமியனாக இருந்திருந்தால் ?

முருங்கக்காய் கூட ஜெலட்டின் குச்சிகள் !

நடத்துங்கடா உங்கள் நாடகத்தை!

________________________________________

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP