**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

காஞ்சி சங்கராச்சாரியாருக்குப் பாரத ரத்னா!

>> Monday, December 2, 2013

குடிச்சிட்டு பூஜை பண்றான்... சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது.

"நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது" என்று காந்தியடிகள் சொன்னது, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பினாலும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கே.


காஞ்சி சங்கராச்சாரியாருக்குப் பாரத ரத்னா!
"நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது" என்று காந்தியடிகள் சொன்னது, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பினாலும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்கே.

சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, நூறு நிரபராதிகள் தண்டிக்கப்பட்டாலும் ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் இந்திய நீதிமன்றங்கள் மும்முரமாக செயல்படுகின்றனவோ என்று கருத வேண்டியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் என்பவர், காஞ்சிமட பீடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். முந்தைய பீடாதிபதி சந்திரசேகர சுவாமிகள், சங்கரமடத்தின் சொத்துகளை நிர்வகிக்கும் வாரிசுகளாக நியமித்தவர்களுள் சங்கரராமனும் ஒருவர். ஆகம விதிகளை ஜெயேந்திரர் மீறிய விசயத்தில் இவருக்கும் கருத்துமோதல்கள்முற்றி முன்பகை இருந்துள்ளது.

சங்கராச்சாரியார்களுக்கென வகுக்கப்பட்ட ஒழுக்கவிதிமுறைகளும், ஆகம வழிகாட்டல்களும் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரால் மீறப்பட்டபோதெல்லாம், சுட்டிக்காட்டியும் மடத்தில் நடக்கும் விதிமீறல்கள் குறிப்பாக இளம்பெண்கள் நடமாட்டம், நிதிமுறைகேடுகளை அவ்வப்போது புனைப்பெயர்களில் கடிதம் எழுதி அம்பலப்படுத்தி வந்துள்ளார் சங்கரராமன். சங்கராச்சாரியார் கடல்தாண்டக்கூடாது என்ற ஆகம விதிமுறைகளை மீறி ஜெயேந்திரர் சீனாவுக்குச் செல்ல முயன்றதையும் தடுத்துள்ளார். மட்டுமின்றி, மடத்தில் நடக்கும் பாலியல் முறைகேடுகளில் சங்கராச்சாரியார் நேரடியாகவே ஈடுபட்டிருப்பதையும் கண்டித்துள்ளார். இந்நிலையில்தான் சங்கரராமன், வரதராஜ பெருமாள்கோவில் வளாகத்தில் வைத்து வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

ஒரு கொலை விசாரணையில் நேரடி தடயங்கள் எதுவும் கிடைக்காதபோது, கொல்லப்பட்டவருக்கிருந்த எதிரிகள், முன்பகை, கொடுக்கல்-வாங்கல் ஆகியவை கணக்கில் எடுக்கப்படுவது இயல்பான நடைமுறை. இதன் அடிப்படையிலேயே எவ்வித நேரடி சாட்சியங்கள் ஏதும் இல்லாதபோதும்கூட, 14 வயது சிறுமி ஆருஷி கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய பெற்றோரையே குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயுள்தண்டனையும் விதித்தது. அவ்வகையில் சங்கரராமனுக்கும் ஜெயேந்திரருக்கும் இருந்த முன்பகைகளின் அடிப்படையிலும், மடம் குறித்து சங்கரராமன் ஜெயேந்திரருக்கு எதிராக எழுதிய கடிதங்களின் அடிப்படையிலும் கொலைக்கான முகாந்திரம் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதும் இருப்பதாகக் கருதப்பட்டு, 2004 தீபாவளியன்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கொலைக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்படும்போது பேணப்படும் அத்தனை சட்டநடைமுறைகளும் மீறப்பட்டு, நீதிமன்றத்திற்குப் பதிலாக நீதிபதியே சங்கராச்சாரியாரின் வீட்டிற்கு வந்தும், விடுமுறை தினத்தன்று விசாரித்ததும் இந்த வழக்கில்தான் நடந்தேறியது. மட்டுமின்றி சிறையில் மலம் கழிக்க வாழை இலை, வாய்க்கு ருசியாக சமைக்க மடத்தின் ஆஸ்தான சமையல்காரர்கள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் ஓரிரு நாட்கள் சிறையிலிருந்து ராஜமரியாதையுடன் பிணையில் வெளிவந்தனர் சங்கராச்சாரியார்கள்.

அதன்பிறகு, வழக்கை இழுத்தடிப்பதிலாகட்டும், வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடன் தொலைபேசியில் நேரடியாகவே பேரம் பேசுவதிலாகட்டும் எல்லாவற்றிலும் கைதேர்ந்த அரசியல்வாதிகளுக்கேயுரிய சாதுரிய அணுகுமுறைகளைக் கையாண்டதோடு, வழக்கு தமிழகத்தில் நடந்தால் நீதி கிடைக்காது எனக்கூறி பாண்டிச்சேரிக்கு மாற்றக்கோரி குற்றம் சாட்டப்பட்டவருக்காக எவ்வளவு வளைந்து கொடுக்கமுடியுமோ சட்டம் அவ்வளவு வளைந்து கொடுத்து, 128 சாட்சிகளில் 81 பேரின் சாட்சியங்கள் ஏற்கப்பட்டு, எட்டாண்டுகள் இடைவெளிக்குள் அத்தனைபேரும் பிறழ் சாட்சியங்களாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டு பாண்டிச்சேரி நீதிமன்றம் மனுநீதி மன்றமாகவே திகழ்ந்துள்ளது.

இது ஒருப்பக்கமிருக்க,

இந்துக்களுக்காகவே பிறப்பெடுத்துள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் பாஜக பரிவாரங்கள் மட்டுமின்றி கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்று வசனமெழுதிய கருணாநிதியும், அவதூறு வழக்குகளுக்காகவே அவதாரமெடுத்துள்ள ஜெயலலிதா உள்ளிட்ட எவருமே சங்கராச்சாரியார்கள் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்துசொல்லவில்லை. காரணம் ஏற்காடு இடைத்தேர்தலில் கிடைக்கும் 2% உயர்சாதி வாக்குகள் குறைந்துவிடக்கூடாதே என்ற கவலை!

இவர்கள் தவிர ஏனைய அரசியல்வாதிகளுக்குச் சிவாஜி சிலையில் காக்கா எச்சமிடுவது குறித்த கவலை! இந்து என்றால் திருடன் என்றதற்கும், ராமர் எந்தக்கல்லூரியில் இஞ்சினியர் பட்டம் பெற்றார் என்றதற்கும் நாக்கை அறுக்கச்சொன்ன பரிவாரங்கள் மட்டும் சங்கராச்சாரியார்களின் விடுவிப்புக்கு ஆனந்தக்கூத்தாடியும், வழக்கு தொடுத்த ஜெயலலிதா மடத்திற்குச் சென்று மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கொக்கரிக்கின்றனர்.
சங்கராச்சாரியார்கள் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டது இந்து மதத்திற்கும், துறவிகளுக்கும் கிடைத்த வெற்றி என்கிறார் ராம.கோபாலன்! சங்கரராமன் என்ன பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டிவந்தவரா? அல்லது இந்தியன் முஜாஹிதீன் காஞ்சிபுரம் பகுதி பொறுப்பளாரா? அவரும் இந்துதானே என்கின்றனர் சாமான்யர்கள்!

இந்திய சட்டங்களில் நீதி கிடைக்காது என்பதை உலகுக்கு உணர்த்திய சங்கராச்சாரியார்களுக்குப் பாரத ரத்னா வழங்குவதே இந்து தர்மப்படி சரியானதாகும்! -எழில் பிரகாசம்-

Source:http://www.inneram.com/opinions/readers/3697-barath-ratna-for-kanji-sankarasariyar.html

சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்!
சங்கரராமன்.... ஒரு செய்தியாளனாக என்னால் மறக்க முடியாத நபர், நண்பர். காஞ்சிபுரத்தில் நான் இருந்த நாட்களில் தினசரி காலையும் மாலையும் என்னை தவறாமல் சந்திக்க வந்து விடுவார். அவருடன் ஒரு மெல்லிய துண்டு போர்த்திக் கொண்டு அவரது மகன் கொழுக் மொழுக்கென்று வந்து நிற்பான். சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற நண்பர்தான் சங்கரராமனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் முறைகேடுகள் பற்றி துல்லியமாக புள்ளிவிவரம் தருவார் சங்கரராமன். எந்தக் கோயிலில் என்ன விசேஷம், அதன் வரலாறு, இப்போதுள்ள நிலைமை என எனக்குத் தேவையான விவரங்களை தினமும் தருவது அவர் வழக்கம். முடிந்தவரை தமிழகத்தின் அனைத்து கோயில்கள் பற்றியும் எனக்குப் புத்தகங்கள் தந்திருக்கிறார்... ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் எழுதிய கோயில் கட்டுரைகளை இப்போது தொகுத்தாலும் தனிப் புத்தகம் தேறும். அதற்கான பெருமை சங்கரராமனுக்குத்தான்!

ஒரு முறை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை என்ற தகவலை ஆதாரங்களோடு தந்தார். 'குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே' என குமுறினார். அதை படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினோம். சில தினங்களில் வரதராஜருக்கு வரவேண்டியவற்றில் ஓரளவுக்காவது வர ஆரம்பித்ததை மகிழ்ச்சியோடு சொல்லி, அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான 'படி இட்லி' - புதினா சட்னியை கொடுத்துவிட்டுப் போனார்!

இந்தக் கோயிலில் நடந்த இன்னொரு அக்கிரமம்... கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை. அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.

சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே புதிதாக வந்த என்னிடம்தான் அவர் சங்கர மடத்து சமாச்சாரங்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்வார்.

அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சங்கரராமன் சொன்ன பின்னணி பயங்கர ஷாக்கான சமாச்சாரம்!

ஜெயேந்திரரைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க - தங்க காணிக்கைகள் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரர் வைத்திருந்த பெயர் துஷ்டன்! நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் 'இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு', என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.

எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே பலரிடமும் சொன்னவர் சங்கர்ராமன். பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார். அதன் பிறகு அவரைப் பார்த்தாலே மற்ற நிருபர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். 'இதுக்கு வேற வேலயே இல்ல. கண்டுக்காதீங்க... இதுமேலயும் தப்பு இருக்கு,' என்றனர்.

ஒரு கட்டத்தில் சங்கரராமன் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை என்னால் செய்தியாக வெளியிட முடியவில்லை. காரணம், அலுவலகத்தில் பலரும் சங்கர மடத்தின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாக செயல்பட்டதுதான்.

இதனால் நானே கூட சில சந்தர்ப்பங்களில் சங்கரராமனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் அந்த மனிதர் புரிந்து பக்குவமாகத்தான் நடந்து கொண்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்... ஒருநாள் சங்கரராமன் வந்தார். 'சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா... குடிச்சிட்டு பூஜை பண்றான்... வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது... இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,' என்று வந்து நின்றார்.

"ஸாரி சங்கரராமன்... ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது," என்றேன். 'என்னண்ணா சொல்றேள்...' என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.

ஆனால் அவருடனான நட்பில் மாற்றமில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போனாலே போதும், எங்கிருந்தாலும் ஓடி வருவார்... ஒவ்வொரு பிரகாரம், சந்நிதிகளுக்கும் அழைத்துப் போய் கோயிலின் பெருமை சொல்வார். தவறாமல் படி இட்லி பிரசாதம் பெற்றுத் தருவார். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், கற்சங்கிலிகள் குறித்து அவர் தரும் விளக்கம் சிறப்பாக இருக்கும். கடைசியாக 2001-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் என்னைப் பார்க்க படி இட்லியோடு வந்திருந்தார் சங்கரராமன்.

பத்திரிகைகள் கைகொடுக்காத நிலையில், ஒரு நாள் தன்னுடைய சொந்த பெயரிலே 'எச்சரிக்கை' என்ற தலைப்பில் ஜெயந்திரர், விஜயேந்திரர், ரகு மற்றும் மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதை திருத்திக்கொள்ளும்படி கேட்டு ஜெயந்திரருக்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த நான்காவது நாள், சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன்!

இதையெல்லாம் விலாவாரியாக சொல்லக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரருக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்! தகவல்: சங்கர்

Source:http://www.inneram.com/thoughts/others-best/3702-sankararaman-and-sankaramadam.html

எல்லாத்தையும் கடவுள் பார்த்துண்டு இருக்கார்! என் பிள்ளைகளையும் கொல்லப்போவதாக மிரட்டினார்கள்! சங்கரராமன் மனைவி பரபரப்பு பேட்டி - ஜூனியர் விகடன்
3369 நாட்கள்... 24 குற்றவாளிகள்... 1873 பக்க குற்றப்பத்திரிகை... 189 அரசு தரப்பு சாட்சிகள்... என்ற பீடிகையோடு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்துள்ளது புதுவை நீதிமன்றம். தமிழகத்தில் நடந்தால் நியாயமான விசாரணை நடக்காது என்று வேறு மாநிலத்துக்கு மாற்ற ஜெயேந்திரர் வைத்த கோரிக்கையை ஏற்று சங்கரராமன் கொலை வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகள் நடந்தது வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சி.எஸ்.முருகன் கடந்த 27-ம் தேதி தீர்ப்பளித்தார்.

'சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் பிறழ் சாட்சியாக ஆனார்கள்’ என்று குறிப்பிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். ''சங்கரராமன் குடும்பத்தினரே சரியாக ஒத்துழைக்கவில்லை'' என்று அரசு வழக்கறிஞர் தேவதாஸ் சொல்லி இருக்கிறார். தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் காஞ்சிபுரத்தில் சங்கரராமன் குடும்பத்தினரைச் சந்திந்தோம். கண்ணீரோடு முடங்கிக்கிடந்த சங்கரராமனின் மனைவி பத்மா, சோகம் அப்பிய முகத்துடன் பேசினார். 'என் கணவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவர். பாவிகள் அவரைத் துள்ளத்துடிக்க அவர் வேலை செய்த கோயிலிலேயே வெட்டிக் கொன்னாங்க. கொலையில சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம்.

ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், 'சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்க’னு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க... இதையும் செய்திடுவாங்கங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு... என் பிள்ளை களையாவது காப்பாத்து வோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்லவேண்டியதாகிடுச்சி'' என்ற பத்மாவின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. துடைத்துக்கொண்டு தொடர்கிறார். ''போலீஸ்காரங்க அடையாள அணிவகுப்புக்கு தனி வேன்ல அழைச்சிட்டுப்போனாங்க. நீதிமன்றத்துல குற்றவாளிகளை சரியா நான் அடையாளம் காட்டினேன். உயிருக்கு பயந்துதான் இந்தக் காரியத்தைச் செய்தேன்.

அவ்வளவு அச்சுறுத்தல் இருந்த சூழலில், எங்களை மறுபடியும் தனி வேன்ல கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டிருக்கலாம். ஆனா, போலீஸ்காரங்க, சர்வசாதாரணமா பஸ்ல திரும்பிபோகச் சொன்னாங்க. எப்போ என்ன நடக்குமோன்னு பயந்துக்கிட்டுத்தான் பஸ் ஏறினேன்.

அன்னிக்கு நடுராத்திரி 12 மணிக்கு தன்னந்தனியா வீடுவந்து சேர்ந்தோம். அதுல இருந்து யாரையுமே நாங்க நம்பலை. யார் மேலயும் நம்பிக்கை வைக்கிற நிலையில நாங்க இல்லை. நாங்க யாரைப் பகைச்சிக்கிட்டோமோ அந்தப் பெரியவங்க எதையும் செய்யத் துணிந்தவங்க. குற்றவாளிகளை அடையாளம் காட்டிட்டு வந்த அன்றைக்கு எங்க உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு?

அநாதையாதானே இருக்கோம்? இனி நமக்கு யாரும் பாதுகாப்பில்லைனு முடிவுபண்ணித்தான் சாட்சியை மாத்திச் சொன்னோம். ஆனா, அந்த ஒரு காரணத்துக்காக எங்க ஒத்துழைப்பு இல்லைன்னு அரசு வக்கீல் சொல்லியிருக்கார். இது நியாயமா? அதுக்காக அவா அத்தனை பேரையும் விட்டுர்றதா?'' என்று கேட்ட பத்மா, எதையோ யோசித்தவராக இருந்தார்.

''கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார். அவா பெரிய இடம். அவாளை எதிர்த்துப் போராட எங்களிடம் தெம்பும் திராணியும் இல்லை. நான் ஜெயலலிதா அம்மாவைத்தான் நம்புறேன். வழக்கை இத்தோட விட்டுடாம மறுபடியும் அப்பீல் போக நடவடிக்கை எடுக்கணும். எத்தனை வருஷமானாலும் எங்களுக்கு நீதி கிடைக்கணும். இது முதல்வர் அம்மாவுக்கு கண்ணீரோட நான் வைக்கிற கோரிக்கை'' என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.

அம்மா பேசுவதை கலங்கிய நிலையில் கவனித்தபடி இருந்தார் அவரது மகன் ஆனந்த் சர்மா. 'குற்றம் நிரூபணம் ஆகாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலையில் இவர்களுக்குத் தொடர்பில்லை என்றால் சங்கரராமனை கொன்றது யார்? தன்னைத்தானே கத்தியால் வெட்டிக்கொண்டு செத்துப்போக என் தந்தை என்ன மனநோயாளியா?

2001-ல் சீனா செல்ல இருந்த ஜெயேந்திரரை, 'மடாதிபதிகள் கடல் கடந்து செல்லக்கூடாது’ என வழக்குப் போட்டுப் போகவிடாமல் என் தந்தை தடுத்தார். தொடர்ந்து மடத்தின் அட்டூழியங்களை வெளியில் சொன்னார். ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் முறைகேடான செயல்களைச் சொந்தப் பெயரிலும் புனைபெயர்களிலும் புகார்களாக எழுதினார். இதற்கு ஆதாரமான கடிதங்களை முக்கிய ஆதாரங்களாக காவல் துறையினர் எங்கள் வீட்டிலிருந்து கொண்டுசென்றனர்.

அதிலேயே என் தந்தைக்கும் ஜெயேந்திரர் தரப்புக்கும் இருந்த பகை வெளிப்படையாகத் தெரியும். உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலமாகவே இதைக் கூறியிருக்கிறேன். அடையாள அணிவகுப்பிலும் சரியான குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம். அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், புதுவை நீதிமன்றத்தில் முதல் விசாரணையின்போது உயிர் பயத்தினால் நாங்கள் சாட்சியத்தை மாற்றிச்சொல்ல வேண்டியதானது. ஏற்கெனவே கொலைபாதகம் செய்த அவர்களின் மிரட்டலுக்கு எங்களைப் போன்ற சாமான்யன் பயப்படாமல் இருக்க முடியுமா? ஆண்டவன் நீதிமன்றத்தில் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை உண்டு'' என்றார் விரக்தியும் வேதனையும் கலந்த குரலில்.

சங்கரராமனின் மருமகன் கண்ணனிடம் பேசினோம். 'இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. போதிய ஆதாரங்கள் இருந்தும் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.'' என்று சொன்னார்.- எஸ்.கிருபாகரன்- JUNIOR VIKATAN

Source: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=89864

சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதியின் லீலைகள்


வேலைக்கு போகும் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று சொன்ன சங்கராச்சாரி யோக்கியதை தெரியுமா? காஞ்சி காம கோடி ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என பிராமணர்களால் அழைக்கப்படும் ஜெயந்திரனின் வண்டவாளங்கள், தில்லுமுல்லுகள் சங்கர ராமன் கொலை விழக்கை விசாரிக்கும் போது தெரியவந்தது. சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணையின் போது சங்கராச்சாரியின் காம லீலைகள் வெளியாயின. சங்கராச்சாரியின் பாலியல் களியாட்டங்களை விசாரிக்க பெண் போலீஸாரைக் கொண்ட தனிப் படையும் அமைக்கப்பட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

தண்டத்தை போட்டு விட்டு ஓட்டம்:

1986 இல் ஜெயெந்திரன் தண்டத்தை போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கெட்ராமன் என்பவரின் பெண்ணை இழுத்து கொண்டு ஓடினார். ஒரு மாததிற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது ஓடி போன இந்த ஓடுகாலி சங்கராசாரியை , சிபிஐ கொண்டு தேடி கண்டு பிடித்தனர். பின்னர் தலைகாவிரிக்கு போய் அந்த பெண்ணை பிரித்து வந்த தகவல்கள மிகவும் ஆச்சரியமானவை. அந்த கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரனை நியமித்தது சங்கரமடம். இது தான் இரண்டு சங்கராச்சாரிகள் இருப்பதன் ரகசியம்.

பெண் எழுத்தாளரை விருப்பத்துக்கு இணங்கும்படி வற்புறுத்திய ஜெயந்திரன்:

பிரபலமான பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.

அப்போது நிருபர்களுக்கு அணுராதா ரமணன் கொடுத்த பேட்டி:

1992 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர் தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றி பேசினார். நான் தலை குனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாறிபோட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

அவர் என்னிடம் மிக ஆபாசமாக பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.

அப்போது ஒரு வார பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதே போல போலீசில் புகார் கொடுக்க முடியாத படி அவர்கள் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள்.

சொர்ணமால்யாவுடன் குஜால்:

தினபூமியில் (5.12.04) அன்று வெளிவந்த செய்தி.

"காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்புவைத்திருந்த நடிகைகளில் சொர்ணமால்யா முக்கியமானவர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் சொர்ணமால்யாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால், திடீரென்று தன் கணவரிடமிருந்து சொர்ணமால்யா விவாகரத்துக் கோரினார். இந்த விவகாரம் சங்கர மடத்திலும் வைத்து பஞ்சாயத்து செய்யப்பட்டது. சங்கர மடத்துடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கணவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய சொர்ணமால்யா முடிவெடுத்தார்.

சொர்ணமால்யா தன் கணவரை பிரிந்து விடுவதற்கு ஜெயேந்திரரே ஆலோசனை வழங்கினார். இந்தச் சூழ்நிலையில் காண்ட்ராக்டர் ரவி சுப்ரமணியம் மூலம் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு ஒன்றை ஜெயேந்திரரே வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சொர்ணமால்யா அடிக்கடி சங்கர மடத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதேபோல சங்கர மடப்புள்ளிகளும் சென்னையில் உள்ள சொர்ணமால்யாவின் வீட்டுக்கே தேடிச் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சொர்ணமால்யாவுக்கும் சங்கர மடத்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து பரபரப்பான தகவல்களை அவரின் கணவரே காவல்துறையிடம் கூறினார்.

ரவி சுப்பிரமணியம் வாக்குமூலம்:

ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்த ரவி சுப்பிரமணியம் கூறிய அதிர்ச்சிகரமான தகவல்கள்:

லீலாவுடன் அரட்டை:

நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டில் எனக்கும்மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர் விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும்நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின்அறிமுகம் கிடைத்தது.

சரஸ்வதியிடம் தகாத செயல்:

1995ம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்தகல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்கவைக்கப்பட்டோம்.

பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம்கூறினார்.

இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்துசரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில்ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கராகல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார்.

அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ. 1.6 கோடி செலவிட திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித்தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

மதிய நேரத்தில் பெண்களுடன்:

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்பு இருந்தது. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன்அவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

பிரேமா:

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியாரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

பத்மா-ரேவதி:

மருத்துவமனையின் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன். மடத்துக்குச்சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர்.

புளு பிலிம்:

இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரைஇதெல்லாம் நடக்கும்.

2000ம் ஆண்டில் ஒருநாள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ஜெயேந்திரர் இருந்தார். அநத நேரத்தில் ஒரு மிகப் பெரியதொழிலதிபரின் மனைவி ஜெயேந்திரரை சந்திக்க வந்துவிட்டார். அவர் மிகப் பெரிய இடம் என்பதால் அனுமதி இல்லாமலேயேஜெயேந்திரரின் அறைக்குள் நுழைய வந்துவிட்டார்.

அரைகுறை ஆடையுடன் இளம்பெண்:

இதனால் பக்கத்து அறையில் இருந்த என்னை அவரசமாக அழைத்த ஜெயேந்திரர், அந்த ஆந்திரா பெண்ணின் கணவரைப் போலநடிக்குமாறு கூறினார். ஜெயேந்திரின் அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த இளம் பெண்ணின் அருகில் அவரதுகணவர் போல நடித்தேன். தொழிலதிபரின் மனைவி வந்துவிட்டுப் போகும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

இங்கு குறிப்பிட்டவை வெகு சிலவே. தட்ஸ்தமிழ், தினபூமி நாளிதழ்களில் வந்த துண்டு செய்திகளை கொண்டு தொகுத்துள்ளேன். ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களின் பழைய பதிப்புகளை புரட்டி பார்த்தால் தான் சங்கராச்சாரி ஜெயந்திரனின் உண்மையான முகம் தெரியும்.

நன்றி: தட்ஸ்தமிழ், தினபூமி

SOURCE: → http://suunapaana.blogspot.in/2009/08/blog-post.html
***********************



***********************


***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<


**************************

1 comments:

அருணா செல்வம் December 3, 2013 at 8:46 AM  

புதுவைக்கு நீதியும் வீதியும் அழகு என்பார்கள்.
இன்று இரண்டுமே அசிங்காமாகி விட்டிருக்கிறது.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP