**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தெரு நாய்களையும் விட்டுவைக்காத இஸ்லாமிய தீவிரவாதிகள்..???

>> Wednesday, May 29, 2013

“இசுலாமிய அமைப்பு மனிதர்களை வெட்டிக்கொல்ல நாய்களைக் கொண்டு பயிற்சி எடுக்கிறார்கள்” - எனும் ஊடக விபச்சாரம்.

ஊடகங்கள் சரியான செய்தியைத் தருகிறதா?

இந்தியாவைப் பிடித்த சாபக்கேடுகளில் முதல் இடம் பிடிப்பது ஊடகங்கள்...!!!

ஊடக விபச்சாரம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் கீழ்கண்ட உண்மை நிகழ்வைக் கண்டு தெளிவு கொள்ளலாம்..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலும் அதன் சுற்றுபகுதிகளிலும் சில மாதங்களுக்கு முன்பு வீதியில் அலைந்து திரியும் நாய்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்து காணப்பட்டது.

இந்த தெரு நாய்கள் காயம்பட்டு இறந்த நிகழ்வை ஊடகங்கள் எப்படி கொண்டாடி தீர்த்தன என்று தெரிந்து கொண்டால் ஊடகம் என்ற பெயரில் பத்திரிக்கைகள் நடத்தும் எழுத்து விபச்சாரத்தினைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளலாம்.

நாய்களின் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் வெட்டு காயங்கள் என்றும் இதன் பின்னணியில் தேச விரோத அமைப்புகளுக்குத் தொடர்புகள் இருக்கிறது என்றும் ஆயுத பயிற்சியின் போது நாய்களுக்குக் காயங்கள் ஏற்பட்டு அவைகள் இறந்திருக்கின்றன என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது.

காவல் துறை அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் தந்த தகவலின் அடிப்படையில் என்ற அடிக்கோட்டுடன் செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள்.(அதாவது பெயர் சொல்லாத விரும்பாத அதிகாரி தெரிவித்ததாவதுனு அடிச்சி உடுவானுங்க பாருங்க அதான் அது)

குறிப்பாக போப்புலர் பிரண்டை குறிவைத்து ஊடகங்கள் அவதூறு பிரச்சாரங்களை முன்வைத்தது.

நாய்களுக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பின்னணியில் இசுலாமிய அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்பதனை மத்திய உளவுபிரிவு உறுதி செய்து இருக்கிறது என்று ”மாத்ரு பூமி” போன்ற பிரபல பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டு இருந்தன.

அதாவது மனிதர்களை வெட்டிக்கொல்ல நாய்களைக் கொண்டு பயிற்சி எடுக்கிறார்கள் இசுலாமியர்கள் என்பதே ஊடகங்கள் சொல்ல வந்த செய்தி...!!!

ஆனால் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி உண்மை நிலையை அறிந்த போது இந்த எழுத்து விபச்சாரர்களின் முகமூடிகள் கிழிந்து தொங்கியது மட்டுமல்லாமல் இந்த ஊடக விபச்சாரர்களின் மேல் காறி துப்பவும் தோன்றுகிறது..

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி பெற்ற தகவல்கள்...!

மலப்புரம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் ஆட்சி துறை பிரிவு டி.எஸ்.பி யும் மக்கள் தகவல் தொடர்பு துறை அதிகாரியுமாகிய ஆர்.பிரதிப் குமார் கூறியதாவது...

* தெரு நாய்களுக்குக் காயங்கள் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னனியில் தீவிரவாத குழுக்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறாகும். இது குறித்த விசாரணையில் அது பொய் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

* பத்திரிக்கைகள் கூறியது போன்று பதினாறு வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாக கூறப்படுவதும் தவறாகும். வழக்குகள் ஏதும் பதியப்படவில்லை.

* மத்திய - மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், உளவுப்பிரிவு அமைப்புகளுக்கும் காவல் துறை பல்வேறு அறிக்கைகளை சமர்பித்து இருக்கிறது என்று பத்திரிக்கைகள் எழுதி இருந்தன....இது முற்றிலும் தவறாகும்.

இந்நிகழ்வு குறித்து உள்துறை அமைச்சகத்திற்கோ, உளவு பிரிவு அமைப்புகளுக்கோ, நீதிமன்றத்திற்கோ காவல் துறையின் சார்பாக ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

* நாய்களுக்குக் காயம் ஏற்பட்டது கன்னி மாசத்தில் நாய்கள் இன பெருக்கத்திற்காக இணை சேரும் போது நகங்கள் கொண்டு உண்டாகிய காயம் என்று இறந்த நாய்களின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.

* இது குறித்து குற்றப்பிரிவு காவல்துறை, குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அபிலாஷ் தலைமையில் விசாரணை செய்து நாய்கள் காயம் பட்டு இறந்ததன் பின்னணியில் ஒரு மர்மமும் இல்லை என்று உறுதி செய்து இருக்கிறார்கள்.

நாய்களின் உடம்பில் காயம் ஏற்பட்டதை இசுலாமிய தீவிரவாத செயல் என்று ஊடக விபசாரம் செய்து இசுலாமியர்களை தீவிரவாததோடு தொடர்புபடுத்தி எழுதிய பத்திரிக்கைகள்:

http://articles.timesofindia.indiatimes.com/2012-09-20/kozhikode/33976359_1_pet-dog-extremists-police-team

http://defenceforumindia.com/forum/politics-society/42069-killing-dogs-training-method-jihadis.html

http://indiatoday.intoday.in/story/stray-dogs-kerala-malabar-region-extremist-elements/1/228871.html

http://www.youtube.com/watch?v=EwCoc9KFOec

இன்று உண்மை வெளி வந்து இருக்கும் நிலையில் ஒரு பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை..

தேஜஸ் என்கிற மலையாள பத்திரிக்கை மட்டுமே உண்மை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

http://www.thejasnews.com/#9343

##இது தான் இந்திய ஊடக துறைகளின் சனநாயக கடமை ஆற்றும் லட்சணம்...?!


இவிங்களை சொல்லி குத்தமில்லை. இவிங்க பத்திரிக்கைகளையும் காசு கொடுத்து வாங்கி படிக்கிறாங்க பாரு அவிங்களை சொல்லணும்....இந்தியாவைப் பிடித்து உலுக்கும் சாபக்கேடுகளில் முதன்மை இடத்தை பிடிப்பது எழுத்து விபச்சாரம் என்பதனை மெய்பிக்கும் உண்மை நிகழ்வு இது.##

http://www.inneram.com/mediaview/media-opinions/is-it-medias-unbiased-10992.html

******************
"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"


ஒரு தெருவில் நாயொன்று படு வேகமாக ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு வந்தது.

அந்தப்பெண்னோ மிகப்பயந்தவளாக நாய் கடித்துவிடாமல் இருக்க தன்னை பாதுகாத்துகொள்ளும் நோக்கோடு மிக வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தாள்.

நாய் அவளை நெருங்கி கடித்து விடும் நிலையில் அவளை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில்

அந்த நொடி ஒரு மனிதன் சடாரென பாய்ந்து நாயை வேகமாக ஒரு உதை விட்டு அந்த பெண்ணை காப்பாற்றினான்.

பிறகு காப்பாற்றியவருக்கு நன்றியோடு விடைபெற்று அவ்விடத்தை நிம்மதியாக நடந்தாள்

அதை ஒரு பத்திரிக்கை நிருபர் நேரடியாக பார்த்து தனது கேமராவில் பதிவு செய்து கொண்டார்.

பின் அந்த மனிதனின் செயலை பாராட்டி "கண்டிப்பாக இதை நாளை பத்திரிக்கையில் பிரசுரிக்கிறேன்

தலைப்பு செய்தியே இது தான், 'லோக்கல் ஹீரோ வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்.'"

அந்த மனிதன்,"நன்றி, ஆனால் நான் உள்ளூர் இல்லை" என்றான்.

உடனே நிருபர்,"ஓ அப்படியா, சரி இந்த செய்தி எப்படி? 'அமெரிக்கர் வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்'"

திரும்பவும் அந்த மனிதன் , “இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் வந்திருக்கும் அப்துல் கறீம்” என்றார்.

மறு நாள் வந்த செய்தியின் தலைப்பு இப்படியிருந்தது..

"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"

2 comments:

Seeni May 29, 2013 at 6:24 PM  

nantri!

nalla thakaval..!

abdul May 30, 2013 at 2:37 AM  

thirunthve mattarkal

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP