**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா?

>> Wednesday, September 11, 2013

அண்ணா பிறந்த நாள்: அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா?

“இந்தியாவில் முஸ்லிமாக இருந்தால் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம்.

முஸ்லிம்கள் என்றால் அனைத்து விஷயத்திலும் பாரபட்சம் என்பதை மத்திய அரசும், மாநில அரசுகளும் உண்மைப்படுத்தி வருகின்றன.

Picture courtesey to :Imam Hasanul Banna- facebook.com


படத்தின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.


“இந்தியாவில் வாழும் முஸ்லிமாக இருந்தால் நீங்கள் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம். ஆளுங்கட்சி மதச்சார்பற்றது என்பது கூட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரவில்லை.” (இந்தியா டுடே வார இதழின் களஆய்வு அறிக்கை, டிசம்பர் 26, 2012)

இந்தியாவில் இன்று முஸ்லிம்களின் வாழ்வு நிலை மிகப் பெரும் போராட்டத்தின் ஊற்றாக மாறிக் கொண்டிருக்கின்றது. ஆம்! சுதந்திரத்திற்காக எவ்வளவோ தியாகங்கள் செய்து, ஆங்கிலேயர்களை விரட்டியடித்த ஒரு சமுதாயம் இன்று குற்றப் பின்னணியோடு வாழ்ந்து வருகிறது.

ஆனால், முஸ்லிம்கள் எந்தத் தவறையும் செய்ததாக ஒரு சிறு துரும்மையும் எடுத்து போட்டு விட முடியாது.

இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்ப்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வு நாம் மறந்துவிட முடியாது.

இந்த பயங்கரவாத செயல்களை செய்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல. ஆனாலும், இன்று முஸ்லிம்களுக்கு சுதந்திரம் இல்லை. அரசியல் தளத்தில் தன்னுடைய ஆளுமைத் தன்மையை பறை சாற்றி வந்த இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கினார்கள். இந்த பயங்கரவாத செயலை செய்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை. ஆனாலும், இங்கு முஸ்லிம்களுக்கு நீதி இல்லை.

இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்து கொன்ற பயங்கரவாத செயலை செய்தனர். இந்த பயங்கரவாத செயலை செய்ததிலும் முஸ்லிம்களுக்கு பங்கில்லை. ஆனாலும், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

இப்படி, இந்தியாவின் அரசியல் தலைவர்களையும், பிரதானமானவர்களையும் கொன்றொழித்தவர்கள் இன்று மதிக்கப்படுகிறார்கள். இந்த நாட்டின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்து, சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த வாரிசுகளின் நிலைமை இன்று சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றது. அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வதிலும் அரசு தன்னுடைய மனசாட்சியை திறக்க மறுக்கிறது.

சட்ட நூல்களின்படி ஆயுள் தண்டனை எனப்படுவது ஆயுள் முழுவதற்குமானதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதே சட்டத்தில்தான் பொது மன்னிப்பிற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. எந்த மனிதாபிமானத்தின் அடிப்படையில் சட்டம் பொது மன்னிப்பிற்கு வழிவகை செய்கிறதோ, அதே அடிப்படையில்தான் முஸ்லிம்களும் 7 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணைக் கைதிகளாக இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழா

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் வந்துவிட்டாலே, முஸ்லிம்களின் கோரிக்கையாக ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டங்களும், கோரிக்கைகளும் முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து தொடங்கி விடும். அரசிடம் விசாரணை கைதிகளாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கையாக இருக்கும்.

அதுபோல்தான் இந்த வருடமும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் விழாவை தமிழக அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் குடும்பங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை கைதிகளாக இன்றும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் என வருடா வருடம் அரசு நமக்கு கருணை காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தங்களுடைய கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் முறையிட்டு வருகின்றனர்.

ஆனால், ஒவ்வொரு வருடமும் அரசு தன்னுடைய பாரபட்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அது கடந்த தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி, நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி. இரண்டும் முஸ்லிம்களின் விஷயத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனவே தவிர, சிறிதும் மாற்றம் இல்லை.

தண்டனை வழங்குவது ஒருவனுக்காக இருந்தாலும், அந்த கஷ்டத்தை அனுபவிப்பது அவனுடைய ஒட்டுமொத்த குடும்பமும்தான் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களாக வாழ்வது என்பது கடினமான ஒன்று என்பதை தற்போது நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்வும் நிரூபித்து வருகின்றது. முஸ்லிம்கள் என்றால் அனைத்து விஷயத்திலும் பாரபட்சம் என்பதை மத்திய அரசும், மாநில அரசுகளும் உண்மைப்படுத்தி வருகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் பிரதானமாக சிறைகளில் இருப்பவர்களை நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. தவறு செய்து சிறையில் இருப்பவர்கள் அவர்கள் திருந்துவதற்கான ஒரு வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

அந்த அடிப்படையில் சிறைவாசிகளின் நடவடிக்கைகளில் மாற்றம், ஒழுக்கத்தில் முன்னேற்றம், தவறை உணர்ந்து ஒரு புதிய வாழ்க்கை முறையை எதிர்பார்த்தல், தன்னுடைய தவறை உணர்தல் என்ற அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், நாட்டில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள், நாட்டின் முக்கிய விசேஷமான நாட்களில் சிறைகளில் இருப்பவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம்.

அதே போன்றுதான் தமிழகத்திலும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாள் அன்று சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மற்ற மாநிலங்களில்…

மற்ற மாநிலங்களை எடுத்துக் கொண்டால், கேரளாவில் 7 ஆண்டுகளில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதையும், ஆந்திராவில் 5 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதையும், உத்திரப் பிரதேசத்தில் கான்சிராம் பிறந்த தினத்தை முன்னிட்டு 10,000த்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகளை மாயாவதி அரசு விடுதலை செய்ததையும், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்படுவதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, கர்நாடகாவில் 8 வருடம் சிறையில் கழித்த ஆண்களுக்கும், 4 வருடம் சிறையில் கழித்த பெண்களுக்கும் பொது மன்னிப்பின் மூலம் விடுதலை வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் அது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், அது என்னவோ முஸ்லிம்களுக்கு மட்டும் தன்னுடைய பங்களிப்பை மாநில அரசுகள் செய்ய மறுக்கிறது.

மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை

1997ம் ஆண்டு மதுரையில் பட்டப் பகலில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் லீலாவதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடைபெற்றபோது தி.மு.க. ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும், குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 2008 தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்பட்டார்கள். ஏனென்றால், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தி.மு.க.வின் தொண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடுதலையை எதிர்த்து பல்வேறு கட்சித் தலைவர்களும், கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன் போன்றோர் இந்த விடுதலையை கண்டித்து, அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார்.

இந்த விடுதலையின் போது இவர்களுடன் 1,405 ஆயுள் சிறைக்கைதிகள் தமிழகம் முழுவதும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இவர்களில் ஒருவர் கூட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிகள் இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.

அப்பொழுது கூட இந்த விடுதலையை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதில், அவர் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்களை தவிர, 7 ஆண்டுகள் கழிந்தவர்களை விடுதலை செய்வது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. அரசு இந்த விஷயத்தில் தன்னிச்சையாக செயல்பட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

2009ம் ஆண்டில் 10 பேர் விடுதலை

2009ம் ஆண்டிலும் அதே நிலைதான் தொடர்ந்தது. 10 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதிலும் முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லை. அப்போதும் முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்பார்ப்பை தமிழக அரசு மீது வைத்திருந்தனர். இதிலும் முஸ்லிம்கள் வழக்கம் போல் ஏமாந்து போயினர்.

2010ம் ஆண்டில் 13 பேர் விடுதலை 2010ம் ஆண்டு அதே தி.மு.க. ஆட்சியில் 5 வருடங்கள் கழிந்த சிறைக் கைதிகள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதிலும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. வழக்கம் போல் தி.மு.க. அரசு தன்னுடைய பாரபட்சத்தை வெளிப்படுத்தியது.

இதற்கெதிராக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் பல்வேறு சமூக தலைவர்களை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தின.

அ.தி.மு.க. பதவியேற்பு இப்படி தி.மு.க. அரசு முஸ்லிம்களுக்கு தன்னுடைய பாரபட்சத்தை காட்டியது. அடுத்து 2011ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. அ.தி.மு.க. அரசும் முஸ்லிம் சிறைவாசிகளின் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இது முஸ்லிம்களின் மத்தியில் மட்டுமின்றி அனைத்து சமூக மக்களிடமும் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இதே நிலை தொடர்ந்து விடாமல் வரக் கூடிய செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று தமிழக அரசு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விஷயத்தில் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தாங்கள் எப்பொழுதாவது விடுதலை செய்யப்படுவோமா… இல்லை சிறையிலேயே செத்து விடுவோமா என்று தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் நிகழ்வே நடந்து கொண்டிருக்கிறது.

சிறை இன்றைக்கு மன நோயாளிகளை அதிக அளவு உற்பத்தி செய்யக்கூடிய இடமாக மாறியிருக்கிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற நிலையை ஏற்படுத்தி விடாமல், சிறைவாசிகளின் விடுதலை விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும்.

தமிழக அரசின் அறிவிப்பை எதிர்பார்த்த வண்ணம் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்த விஷயத்தில் அரசு மனம் இரங்க வேண்டும். பல்லாண்டு காலமாக தங்கள் உறவை பிரிந்து வாடும் பெற்றோர்களை, மனைவிமார்களை, தந்தைகளின் முகங்களை காணத் துடிக்கும் பிஞ்சுக் குழந்தைகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த முறை தமிழக அரசு இவ்விடயத்தில் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். பெருமூச்சோடு எதிர்பார்க்கிறார்கள்.

நெல்லை சலீம் at: http://www.thoothuonline.com

************


இதையும் படியுங்கள்.
அப்பாவி முஸ்லிம்களை சுரண்டி கொடுமைபடுத்தும் காவல்துறை ‍‍- அ.மார்க்ஸ்
************


Picture courtesey to :Imam Hasanul Banna- facebook.com
படத்தின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.


0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP