**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மத்தியஅரசு ப்ளஸ் மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.!

>> Monday, September 2, 2013

புத்தகயாவில் காவி பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகளை வேண்டுமென்றே முஸ்லிம்களை அடையாளப்படுத்திய மத்திய அரசும் ஊடகங்களும்.

காவி பயங்கரவாதிகளால் நட‌க்கும் ஒவ்வொரு குண்டு வெடிப்பின்போதும் சில முஸ்லிம்களை அடையாளப்படுத்துவதற்காக கற்பனையாக ம‌த்திய அரசால் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட இந்திய முஜாஹிதீன். மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தவே உருவாக்கப்பட்ட இந்திய முஜாஹிதீன்.

இந்திய முஜாஹிதீன் என்ற ஊடகங்களின் படைப்பு உண்மையிலே உள்ளதா?

பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

Indian Mujahideen created by Paid Indian Media - Justice Katju


*******
புத்தகயாவில் குண்டு வெடிப்பு செய்த இந்து குரு கைது.

Hindu guru arrested for Bodh Gaya attack


India's National Investigation Agency (NIA) believe he was involved in 7 July attacks against one of Buddhism's holiest sites. This puts Muslims in the clear.

New Delhi (AsiaNews/Agencies) - This morning, India's National Investigation Agency (NIA) arrested Arup Brahmachari, a Hindu priest, for his involvement in the attack on 7 July against Bodh Gaya's Mahabodhi temple, a Buddhist religious complex in the state of Bihar.

After weeks of investigation, the federal anti-terrorism agency tracked down the guru, who went on the run after the attack. During this period, the NIA questioned several suspects, including temple officials.

On 7 July, nine blasts hit the temple complex at Bodh Gaya, home of the Bodhi tree under which, according to Buddhist tradition, Siddhartha Gautama attained enlightenment. Two monks were injured in the attack, one from Myanmar.

Initially, Indian authorities believed the attack to be the work of Muslims due to ethnic-religious tensions in Myanmar between the Buddhist majority and the Muslim minority. Currently, about 500 Burmese monks are studying in India, 200 in Bodh Gaya alone.

Ref: http://www.asianews.it/news-en/Hindu-guru-arrested-for-Bodh-Gaya-attack-28744.html

இந்த செய்தி ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

உண்மை இப்படியிருக்க…..

ஊடகங்கள் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த வேண்டுமென்றே இந்து பயங்கரவாதிகள் நடத்திய‌ ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் சில முஸ்லிம்களை அடையாளப்படுத்துவதற்காக உண்மைகளை திரித்து மக்களின் மனதில் நச்சு விதையை விதைக்கின்றன. கீழ்க்கண்டவாறு

புத்தகயாவை இந்தியன் முஜாஹிதீன் தாக்கக்கூடும்: அக்டோபரிலேயே எச்சரித்ததாம் டெல்லி போலீஸ்.

புது டெல்லி, ஜூலை. 8 -

பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி கோவிலில் நேற்று காலை 9 குண்டுகள் வெடித்தன. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

மகாபோதி கோவிலை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தாக்கக்கூடும் என்று டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவு பீகாரின் டி.ஜி.பி. மற்றும் கயா மாவட்ட எஸ்.பி. ஆகியோரை கடந்த அக்டோபர் மாதமே எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த விசாரணையின்போது அதற்கு காரணமான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் மகாபோதி கோவிலை தாக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தான் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான உபைத் உர் ரஹ்மானின் வீட்டில் கடந்த ஆண்டு ஒரு கூட்டம் நடந்துள்ளது.

அப்போதே மகாபோதி கோவிலை தாக்கும் திட்டத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் துணை நிறுவனரான ரியாஸ் பத்கல் ஒப்புதல் அளித்துள்ளார்.

Ref: http://www.thinaboomi.com
********


இந்தியன் முஜாஹிதீனுக்குப் பெயர் சூட்டியவர் யார்?

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைமையகம் எங்கே இருக்கிறது? அதன் தலைவர் யார்? செயலாளர் யார்? அதன் உள்கட்டமைப்பு எப்படிப்பட்டது? அதன் அமைப்பு விதிகள் என்னென்ன?

பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

மேலுள்ள விடியோ காண்க.

"மார்க்கண்டேயர் கட்ஜு: அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது ஊடகங்கள். ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் குண்டு வைத்தது இந்தியன் முஜாஹிதின் அல்லது ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல்ஜிஹாத் அமைப்பு என ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரை சேனல்கள் சொல்கின்றன.

அதற்கு ஆதாரமாக எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் வந்தது என்கிறார்கள். எஸ்.எம்.எஸ், இ.மெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி கூட அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக தொலைக் காட்சிகளில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரித்து முஸ்லிம்கள் எல்லாருமே குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என ஒரு மதத்தையே ஒட்டு மொத்த கொடூரகாரர்களாக மாதிரி சித்தரிக்கின்றன ஊடகங்கள். எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

ஊடகங்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாகவோ, தகவல் உண்மையா என்பதை சரி பார்க்காமல் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுகிறது என்று நான் நினைக்கவில்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த ஊடகங்கள் வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது."

குண்டு வெடித்த சிறிது நேரத்திலேயே எஸ்.எம்.எஸ். வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக ஊடகங்கள் சித்தரிப்பதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?"

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் கூற்றில் உண்மை இல்லாமலில்லை.

தீவிரவாதச் செயல்கள் என்றாலே அதை செய்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன இந்திய ஊடகங்கள். இதில் மிக முனைப்புடன் செயல்படுபவர்களில் ஒருவர் ஹிந்து நாளிதழின் பிரவீன் சுவாமி.

இந்தியன் முஜாஹிதீன் என்ற முகவரியில்லாத அமைப்புப் பற்றி எல்லா புள்ளிவிவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் அவர்.

சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் யாசின் பட்கல் என்பவரைப்பற்றி இந்திய முஜாஹிதீன் அமைப்பின் தலைவர், கமாண்டர், ஃபவுண்டர், கோ ஃபவுண்டர் என பலவித பதவிகளை சூட்டியே அல்லாமல் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில்லை.

பிரவீன் சுவாமியும் யாசின் பட்கலின் சரித்திரத்தை புட்டுப் புட்டு வைக்கும் விதத்தில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அப்படியானால் இ.மு. அமைப்பைப் பற்றியும் யாசினுக்கும் அந்த அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் பிரவின் சுவாமிக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்தானே?

இது பற்றி பிரவின் சுவாமி அளித்த பேட்டியை இந்த காணொளியில் கண்டு களியுங்கள்.

Does INDIAN MUJAHIDEEN really exist..???!!


பேட்டியின் எழுத்து வடிவம்:

கேள்வி: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைமையகம் எங்கே இருக்கிறது? அதன் தலைவர் யார்? செயலாளர் யார்? அதன் உள்கட்டமைப்பு எப்படிப் பட்டது? அதன் அமைப்பு விதிகள் என்னென்ன?

பிரவீன் சுவாமி: அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளையும், உரையாடல்கள் மூலம் தெரியவந்த தகவல்களையும் வைத்துப் பார்த்தால் அவர்கள் ஒரு நிறுவன அமைப்பாக எக்காலமும் இருந்ததில்லை என்று தெரிகிறது.

கே: அதன் தலைவர்கள் யாவர்?

பி.சு: அதன் தலைவர்கள் என சில பெயர்கள் சொல்லப் படுகின்றன. நானறிந்தவரையில் (அந்த அமைப்பின் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்காக) தேர்தல் எதுவும் நடத்தப்பட்டிருக்கவில்லை.

கே: அப்படியென்றால் அது ஒரு பெயரும் சில நபர்களும் மட்டும்தானா?

பி.சு: ஆம். மற்றவர்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அவர்கள் இந்தப் பெயரை உபயோகிக்கிறார்கள். ஒரு நல்ல அடையாளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அக்குழுவினரைக் குறிப்பதற்கு நாம் இந்தப் பெயரை உபயோகிக்கிறோம்.

கே: அவர்கள் இந்தப் பெயரை ஏதாவது ஆவனங்களில் பயன்படுத்தியிருக்கிறார்களா?

பி.சு: பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் செய்தித்தாள் அலுவலகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் அறிக்கைகளில்...

கே: இவை மட்டும்தான் ஆதாரங்களா?

பி.சு: பல்வேறு ஒப்புதல் வாக்குமூலங்களிலும், நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட அறிக்கைகளிலும் கூட.. அதறான விசாரணைகள் இன்னும் நடந்துக் கொண்டிருக்கின்றன.

கே: 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற பெயரைப் பற்றி நான் குறிப்பாகக் கேட்கிறேன். மின்னஞ்சல் தவிர்த்து வேறு எந்த ஆவனங்களிலாவது நீங்கள் இந்தப் பெயரை பார்த்திருக்கிறீர்களா?

பி.சு: யாருடைய ஆவனங்கள்?

கே: உதாரணமாக அறிக்கைகள், பதிப்பிக்கட்ட அமைப்பு விதிகள் போன்றவை..

பி.சு: நான் அறிந்தவரை அமைப்பு விதிகள் என்று எதுவும் இல்லை. ஆனால் மின்னஞ்சல்களில் பல பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் இருக்கும். அவற்றில் தாங்கள் ஏன் இந்தக் காரியங்களைச் செய்கிறோம் என்பதை விளக்கமாக விவரித்திருப்பார்கள்.

கே: உதாரணமாக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பிற்குப் பிறகு குருஅல்ஹிந்த்ஜெய்ப்பூர் என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்ததே..!

பி.சு: ஆம். அவர்கள் புனைப்பெயர்களால் தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். இது பொதுவாக நடப்பதுதானே?

இந்தப் பேட்டியை கவனமாகப் பார்த்தீர்களென்றால் பிரவீன் சுவாமி கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தெளிவாகப் புலப்படும்.

அது 'இந்தியன் முஜாஹிதீன் என எந்த அமைப்பும் கிடையாது.

போலி முகவரிகளிலிருந்து அனுப்பப்பட்ட சில மின்னஞ்சல்களைத் தவிர்த்து வேறு எந்த ஆவனங்களிலும் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற இப்பெயர் பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின்போதும் சில முஸ்லிம்களை அடையாளப்படுத்துவதற்காக பிரவீன் சுவாமி போன்ற ஊடகத்தினர் தான் இப்பெயரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.'

இப்போது திரு. மார்க்கண்டேய கட்ஜுவின் குற்றச்சாட்டை நினைவுகூர்ந்து பாருங்கள்:

எஸ்.எம்.எஸ், இ.மெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி கூட அனுப்பியிருக்கலாம்.

ஊடகங்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாகவோ, தகவல் உண்மையா என்பதை சரி பார்க்காமல் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுகிறது என்று நான் நினைக்கவில்லை.

மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த ஊடகங்கள் வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

-இப்னு பஷீர்

நன்றி Ref: http://www.inneram.com/article/readers/1585-indian-mujahideen-name.html
**********


தற்போது என்ன நடக்கிறது?

சமீபத்தில் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பின் நிறுவனர் என்ற பெயரில் யாசின் பட்கல் என்ற இளைஞனை அதுவும் நேபாளில் வைத்து கைது செய்துள்ளது காவல் துறை. இந்த கைது பற்றி யாசினின் தந்தை சொல்வதைப் பார்ப்போம்.

யாசின் 1983-ம் ஆண்டு பத்கல் கிராமத்தில் பிறந்து அங்கேயே 10-ம் வகுப்பு வரை படித்தான். ஆனால் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் சென்ற யாசின் திரும்பி வரும்போது, 2007-ம் ஆண்டு திடீரென்று காணாமல் போய்விட்டான். இதுக்குறித்து துபாய் போலீஸிடம் முறையிட்டோம். நாங்களும் யாஸினை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் பயன் இல்லை.

அதன் பிறகு யாசின் தான் புனே குண்டுவெடிப்பை நிகழ்த்தினான் என்றும் அவன் இந்திய முஜாஹிதீனின் நிறுவனர்களில் ஒருவன் எனவும் உளவுத்துறை கதைகளை பரப்பி வந்தது.’

என அவர் தெரிவித்துள்ளார். இனி அடுத்து ஒரு செய்தி வந்துள்ளது. அதையும் பார்ப்போம்...

இந்திய உளவுத்துறையால் கைது செய்ததாக கூறப்படும் யாஸீன் பட்கல் என்ற நபர் உண்மையில் யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறியதாவது; ‘யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்திபாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர் தாம் யாஸீன் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.’ என குறிப்பிட்டார்.

அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

10-வது வகுப்பு கூட வெற்றிப் பெறாத முஹம்மது அஹ்மத் சித்திபாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று உளவுத்துறையும் ஊடகங்களும் கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

-http://newindia.tv/tn/india/141-crime/1800-2013-08-31-03-09-02

இதில் உளவுத் துறை எந்த அளவு தனது கைவரிசையைக் காட்டியுள்ளது என்பது தெரியும். ஓய்வு பெற்ற முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி திரு மார்க்கண்டேய காட்ஜூ 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பே உளவுத் துறை உருவாக்கிய ஒன்று என்று சில மாதங்களுக்கு முன்பு உண்மையை போட்டு உடைத்தார்.

தற்போது உளவுத் துறையால் உருவாக்கிய இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு ஒரு நிறுவனரையும் நமது உளவுத் துறையே ஏற்படுததியுள்ளது.

இந்த விசாரணை மட்டும் பொது மக்கள் முன்னிலையில் திறந்த வெளியில் நடைபெறுமானால் கண்டிப்பாக உளவுத் துறையின் கருப்பு ஆடுகளின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும்.

ஆனால் ஆளும் வர்க்கத்தோடு கை கோர்த்து செயல்படும் உளவுத் துறையை மாட்டி விட ஆளும் வர்க்கமும் மசியாது. ஏனெனில் நாட்டில் நிர்வாகத்தில் அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்ப இவர்களுக்கு உளவுத் துறை பல வகைகளில் உதவி வருகிறது.

நாட்டின் நாணய மதிப்பு அதள பாதாளத்துக்கு செல்கிறது. அரசால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

மக்களின் கொந்தளிப்பு ஒரு பக்கம். திடீரென்று ஒருநாள் 'இந்தியன் முஜாஹிதீன்' நிறுவனர் கைது' என்ற செய்தி தலைப்புகளில் வரவே அனைவரும் நாட்டின் பண வீக்கத்தை மறந்து விட்டோம். எல்லோரும் யாசின் பட்கலைப் பற்றியே தற்போது பேசிக் கொண்டிருக்கிறோம்.

இது தான் நமது அரசாங்கங்கள் செய்து வரும் ராஜதந்திரங்கள்.

முன்பு பிஜேபி ஆட்சியில் இதே போன்று அரசை நோக்கி மக்களின் கோபம் திரும்பிய போது என்றோ சரண்டரான அப்சல் குருவை வைத்து நாடாளு மன்ற தாக்குதல் நாடகம் நடத்தப்பட்டது. அன்றும் இதே போல் அனைத்தையும் மறந்து அப்சல் குருவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.

இது தொடர்கதை....


இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் ராணுவ ரகசியங்களை தவிர்த்து மற்ற அனைத்து வழக்குகளையும் பொது அரங்கில் வைத்து விசாரிக்க வேண்டும்.

அன்றுதான் அப்சல் குரு, அஜ்மல் கசாப், யாசின் பட்கல் போன்ற உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுவது நிற்கும். இவர்கள் போய் சேர்ந்து விட்டார்கள். ஆனால் இந்த அநியாயங்களை அரங்கேற்றியவர்கள் அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு ராஜ நடை நடந்து நம் கண் முன்னேயே வருகிறார்கள்.

இதுதான் இந்திய ஜனநாயகம்.....

நன்றி: சுவனப்பிரியன்.
http://suvanappiriyan.blogspot.sg/2013/08/blog-post_31.html

********


இதையும் படியுங்கள்.

முஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு. அதிர்ச்சி தகவல்

1 comments:

UNMAIKAL September 2, 2013 at 1:08 PM  

முதலில் இதை படித்துவிட்டு

>>>> தன் வீட்டிற்கே பெட்ரோல் குண்டு - இது பாஜகவினர் ஸ்டைல் <<<<<

பின் இதை படியுங்கள்

.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...
வேறு மதத்தவர்கள் மேல பழிபோட்டு போலீஸ் பாதுகாப்பு பெற முயற்சி செய்துள்ளான்.......


தல நீ .சிங்கம்டா.......

திண்டுக்கல் பிஜேபி பிரமுகரே..... நீ உண்மையிலே சிங்கம்டா....
சிங்கம்ன்னு சொன்னா என் பிரண்டு ஒருத்தன் கேப்பான் .......

"மச்சி அவனோட தாத்தா சிங்கம் வளர்த்தாரா ....இல்ல அவுங்க அம்மா காட்டுக்குள்ள போயிட்டு வந்தாங்களா ????"

(ங்கொய்யாலே இதுக்கு அர்த்தம் புரிச்சவன் புரிஞ்சுக்கோ புரியாதவன் நாண்டுக்கிட்டு செத்துப்போ ....)

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்..........

தான் தனித்து பிரபலமாக மிக கேவலமான நாயிகள் மோடி, அத்வானி செய்த அதே சீப் பப்ளிசிடியை தான் இவன் செயதுள்ளான் .....

ஹா,ஹா,ஹா.... பின்னாடி இவன் மிகப்பெரிய பிஜேபி தலைவனா வருவான்.....ங்கொய்யாலே மோடிக்கே வைப்பான் ஆப்பு ...

அத்வானிக்கு ரத யாத்திரை , மோடிக்கு குஜராத் கலவரம்.....இவனுக்கு பெட்ரோல் பாம்........ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே

அதேபோல் அவனே அவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி...அதுவும் அவன் நிறைமாத கர்பிணி மனைவியின் மீது......... வேறு மதத்தவர்கள் மேல பழிபோட்டு போலீஸ் பாதுகாப்பு பெற முயற்சி செய்துள்ளான்.......

இதுல இந்த பத்திரிகை ஊடக நாய்கள் ...... BJP வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுன்னு முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியா போட்ட நாயிகள்...... உண்மையை 4 வது பக்கத்தில் சும்மா சின்னதா போட்டு இருக்கானுக..........

பஸ்ட்டு இந்த மீடியா நாதாரிகள்தான் முதல் தீவிர வாதிகள்......

Posted by மங்குனி அமைச்சர் at 2:55 PM

THANKS TO :
1 comment: http://manguniamaicher.blogspot.com

Anonymous said...

dated 29/08/2013...maalaimalar


பா.ஜனதா தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.

There is no updated news about this matter in today's paper.
August 31, 2013 at 11:38 PM

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP