**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அரசின், பத்திரிக்கைகளின் அதிர்ச்சியான விஷவண்ட‌வாளங்கள்.

>> Friday, April 26, 2013

விஷத்தை விதைக்கும் ஓரவஞ்ச ஊடகங்களும் போலீஸும்.

பத்திரிக்கைகளும் போலீஸாரும் பிண்ணும் கேடுகெட்ட விஷ சதிவலைகள்.

அப்பாவிகளை பயங்கரவாதிகளாக‌ உருவாக்கும் போலீஸும் ஊடகங்களும்.

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் போலீஸ் பயங்கரவாதம்:வெட்ட வெளிச்சமான ஓரவஞ்சனை!

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு:கண்ணூரில் நடந்தது என்ன?



படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.


கோழிக்கோடு: கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் ‘ஆரோக்கியமான தேசம்!ஆரோக்கியமான சமூகம்!’ என்ற பிரச்சாரத்திற்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களை ஆயுத பயிற்சி மேற்கொள்கின்றார்கள் என்று அவதூறாக சித்தரித்து அவர்கள் மீது UAPA(சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து கைதுச் செய்தது கேரள மாநில போலீஸ்.

பின்னர் இக்கைது படலத்தின் பின்னணியில் நேற்று மாநிலத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்களில் சோதனை என்ற பெயரில் அரசின் பாரபட்சமான போக்கும், போலீஸின் வஞ்சகமும் அரங்கேறியது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகம் கோழிக்கோட்டில் யூனிட்டி ஹவுஸில் இயங்கி வருகிறது.

இங்கு நேற்று காலை 11.00 மணியளவில் ஆயுதங்கள் சேகரித்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது என்று கூறி மாநகர போலீஸ் கமிஷனரின் தலைமையில் போலீஸார் சோதனையிட வந்தனர்.

ஒன்றரை மணிநேரம் தீவிரமாக சோதனையிட்ட பிறகும் எந்த சட்டவிரோத பொருட்களும் சிக்கவில்லை.

இறுதியாக சட்டவிரோதமாக எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று எழுதி கொடுத்துவிட்டு போலீஸ் திரும்பிச் சென்றது.

போலீஸ் ரெய்டு செய்தியை கேள்விப்பட்டு கைரளி போன்ற தொலைக்காட்சிசேனல்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் யூனிட்டி ஆஃபீஸ் நோக்கி படையெடுத்து வந்தபோதிலும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மாநிலத்தில் உள்ள இதர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்களிலும் இதே காட்சிதான் அரங்கேறின. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் சம்பவத்தை போலீஸை மேற்கோள்காட்டி முக்கிய செய்தியாக மாற்றிய ஊடகங்கள் கூட அங்கு 2 வாள்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டதாக கூறின.

ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் ஏதோ ஆயுதக்குவியலை கைப்பற்றியதைப் போன்ற பிரம்மையை போலீஸ் உருவாக்கியது.

உண்மை நிலமை நிலவரம் இப்படியிருக்க‌……

பத்திரிக்கைகளும் போலீஸாரும் இதை கேடுகெட்ட விஷமத்தனமாக‌ இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக‌ சதி வலை பிண்ணி எவ்வாறு ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கி அப்பாவிகளை இல்லாத பயங்கரவாதிகளாக உருவகப்படுத்தி நாட்டில் இனக்கலவரங்களை உருவாக்க கங்கணம் கட்டி கொண்டு திரிகின்றன என்பது வெட்ட வெளிச்சம்.

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு பற்றி பத்திரிக்கைகளில் வந்தது என்ன?

படங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்

இவைகளை படிக்கும்போது இது போன்ற ஊடக தாக்குதல்கள் தற்செயலாய் ஏற்பட்டது அல்ல இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக‌ சதி வலை பின்னப்படுவதை உணரலாம்.

எல்லா ஊடகங்களும் இப்படித்தான் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது என்றாலும் ஊடகங்களில் சில பிரிவுகள் இருக்கின்றது, அவை சங்கப்பரிவார சித்தாந்தத்தை நோக்கி சரிந்திருக்கும் ஊடகங்களாக இருக்கின்றன.

இத்தகைய மீடியாக்கள் முஸ்லிம்கள் மீதும், இந்திய முஸ்லிம்களின் வலிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடும் இயக்கங்கள் மீதும் காழ்புணர்ச்சியோடு செயல்படுகின்றனர்.

முஸ்லிம் சமூகத்தின் அப்பாவி இளைஞர்கள் எவ்வாரெல்லாம் திவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டதையும், பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்.

அதேவேளையில் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும், பாசிச சங்பரிவார்களின் மையங்களிலும் உயிர்சேதங்களையும், பெரும் சேதங்களையும் விளைவித்த சம்பவங்களை எல்லாம் ஏதோ சாதாரண பட்டாசு வெடித்த செய்தியாக சித்தரிப்பதே கேரள போலீஸின் வழக்கமாகும்.

2011-ஆம் ஆண்டு பெப்ருவரி 26-ஆம் தேதி நாதாபுரத்தில் உள்ள நரிக்கோட்டரியில் வெடிக்குண்டு தயாரிக்கும்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஐந்து முஸ்லிம் லீக்கைச் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக எவர் மீது கறுப்புச் சட்டங்கள் பாய்ந்ததாகவோ, தேசிய புலனாய்வு ஏஜன்சி ஓடி வந்ததாகவோ எந்த செய்தியும் இல்லை.

2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி மட்டன்னூரில் வெடிப்பொருட்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் காரன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டான். ஆனால் இதனை ஒரு சாதாரண வழக்கு போலவே போலீசும், ஊடகங்களும் கையாண்டன.

2013 ஜனவரி 4-ஆம் தேதி தலச்சேரி மேலூரில் சி.பி.எம்(மார்க்சிஸ்ட்) கட்சியின் கீழ் இயங்கும் க்ளப் ஒன்றில் மிகவும் சக்தி வாய்ந்த நான்கு ஐஸ்க்ரீம் குண்டுவெடிகளை கைப்பற்றியபோதும் ஊடகங்கள் கற்பனை கதைகளை உலாவவிடவில்லை.

2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி மாஹியில் வெடிக்குண்டை தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவரின் கைவிரல் துண்டானது.

2011-ஆம் ஆண்டு தர்மடம் சிரக்குனியில் வெடிக்குண்டை தயாரிக்கும்போது குண்டுவெடித்து சி.பி.எம் உறுப்பினர் ஒருவரின் கை துண்டானது.

2012 -ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி பெருந்தாறு என்ற இடத்தில் வெடிக்குண்டை தயாரிக்கும் போது காயமடைந்த ஆர்.எஸ்.எஸ்காரனின் இருகைகளும் காயமடைந்ததன் விளைவாக துண்டிக்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி நாதாபுரம் கருவான்கண்டியில் சி.பி.எம் உறுப்பினர் ஒருவருக்கு வெடிக்குண்டை தயாரிக்கும்போது கடுமையான காயம் ஏற்பட்டது.

2008-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி பானூர் வடக்கு பொய்லூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுத தயாரிப்பு மையத்தில் இருந்து மிகவும் சக்தி வாய்ந்த 125 ஆர்சனிக் சல்ஃபேட் வெடிக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

கேரளாவில் மிகப்பெரிய ஆயுதவேட்டையாக இது அமைந்தது. ஆனால், போலீஸ் சாதாரண வழக்கையே இச்சம்பவத்தில் பதிவுச் செய்தது.

1 comments:

VANJOOR April 26, 2013 at 2:42 PM  

போலீஸ் நடவடிக்கையின் பின்னணியில் உயர் மட்ட சதி! – பாப்புலர் ஃப்ரண்ட்!

26 Apr 2013

கோழிக்கோடு:கேரள மாநிலம் கண்ணூரில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 21 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைது செய்ததை தொடர்ந்து அரங்கேறும் போலீஸின் நடவடிக்கைகள் ஓரவஞ்சனையும், ஜனநாயக விரோத செயலாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக உயர்மட்ட அளவில் நடக்கும் சதித் திட்டத்தின் அண்மை உதாரணம் தான் போலீஸ் நடவடிக்கை மூலம் வெட்ட வெளிச்சமானதாக கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் கே.ஸாதாத் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கூறியது: மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்து பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைதுச் செய்து அழைத்து சென்ற பிறகு அங்கிருந்து கைப்பற்றியதாக கூறி சில ஆயுதங்களை காட்சிக்கு வைத்த தேச சதித்திட்டத்திற்கான முக்கிய ஆதாரம் ஆகும்.

கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சி.பி.எம்(மார்க்சிஸ்ட் கட்சி) மையங்களில் இருந்து பெருமளவிலான வெடிப்பொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றிய வேளைகளில் போலீசும், ஊடகங்களும் காண்பிக்காத வரம்புகடந்த ஆர்வமும், வேகத்தையும் அச்சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் கண்ணூர் நாராத் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைது செய்த மிகவும் சாதாரணமானதொரு சம்பவத்தில் வெளிப்படுத்துவது ஏராளமான சந்தேகங்களை எழுப்புகிறது.

கண்ணூரில் சில கட்சி மற்றும் அமைப்புகளின் அலுவலகங்களில் இருந்து வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் கைப்பற்றிய போது அந்த கட்சி மற்றும் அமைப்புகளின் மாநில தலைமையங்கள், அலுவலகங்கள், கீழ் மட்ட அலுவலகங்களில் சோதனை நடந்ததாக வரலாறு இல்லை.

ஆனால், கண்ணூர் நாராத் சம்பவத்தின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில கமிட்டி அலுவலகம் முதல் உள்ளூர் அலுவலகங்கள் வரை சோதனை நடத்தி பீதிவயப்படுத்தி வருகிறது போலீஸ்.

கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக பாரபட்சமான முறையில் ஏற்கனவே போலீஸ் கடைப்பிடித்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியே நாராத் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் கைதும், கடுமையான பிரிவுகளை சுமத்திய போலீசின் நடவடிக்கையுமாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தினத்தை கொண்டாடுவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட வேளையில் கண்ணூரில் மட்டும் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

சி.பி.எம்., ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்ற முடக்கு வாதத்தை கூறி மாவட்ட போலீஸ் தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தார்.

கண்ணூர் நாராத் பகுதியில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மீது யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்து ஜாமீன் மறுப்பதற்கான சதித்திட்டம் நடைபெற்று வருகிறது.

யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்திற்கு எதிராக வலுவான பிரச்சாரத்தை நடத்தி வரும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக அதே கறுப்புச் சட்டத்தை உபயோகப்படுத்தி பலவீனப்படுத்துவதற்கான முயற்சியே இந்நடவடிக்கை.

யு.ஏ.பி.ஏ சட்டத்திற்கு காங்கிரஸ், முஸ்லிம்லீக், சி.பி.எம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில் கேரளாவில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக அச்சட்டத்தை பிரயோகிப்பதற்கான முயற்சி மாறுபாடாக உள்ளது.

மே 3-ஆம் தேதி யு.ஏ.பி.ஏ சட்டத்திற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிரச்சாரத்தை துவக்க இருக்கும் வேளையில் கண்ணூர் நாராத் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை இதே சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான சதி நடக்கிறது. இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் கே.ஸாதாத், துணைத் தலைவர் பி.அப்துல் ஹமீத், பொருளாளர் கே.ஹெச்.நாஸர், மாநில செயற்குழு உறுப்பினர் பி.நூருல் அமீன் ஆகியோர் பங்கேற்றனர்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP