**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புலிகள் செய்த‌ சிசுக்களின் கோரப் படுகொலைகள்.

>> Wednesday, February 20, 2013

புலிகளின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாண்டவத்தில் சிசுக்களின் கோரப் படுகொலை.

இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள்

இந்த பதிவு தமிழருக்கு எதிரான பதிவல்ல.புலிகளின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத முஸ்லீம் இன ஒழிப்பு தாண்டவத்தில் சிசுக்களின் கோரப் படுகொலைக்கு எதிரான பதிவே.

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் நடுநிலைவாதியா? அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா? எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான்

ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.

புலிகளின் ஊது குழல்களே! சீமான் அவர்களே! இதுதான் சர்வதேச யுத்த விதிகளின் படி நீங்கள் நடத்திய விடுதலைப் போரா? இவற்றையெல்லாம் புலிகளின் ஊதுகுழல்களால் மறுக்க முடியுமா?

அல்லது சர்வதேசத்திடம் பதியப் பட்டுள்ள இச் சம்பவங்களை அழிக்கத்தான் முடியுமா?

சீமான் அண்ணா? இவைகள் புலிகளின் தலைவரான உங்களின் அண்ணனால் செய்யப்படவில்லை என்றால்!! ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..

சீமான் மற்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் சகோதரர்களே…! இனச் சுத்திகரிப்பு என் பொருள்படும் சொல்லை நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரயோகிக்க உங்களுக்கோ அல்லது புலிகளுக்கோ தகுதியிருக்கிறதா?

இதுரை காலமும் புலிகள் தங்களுடன் வாழ்ந்த மக்கள் மீது செய்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் யாருக்கும் தெரியாதா?

2009 மே 18 ஆம் திகதி இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ”சூரியதேவன்” வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயதுச் சிறுவன் புதல்வர் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் படங்கள் காட்டுமிராண்டித்தனமான படுகொலை செய்துள்ளது என்று புலிப் பினாமிகள் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத தலைவன் ”சூரியதேவன்” இரண்டு சதாப்த காலமாக ஆடிய பயங்கரவாத தாண்டவத்தில் எத்தனை பிஞ்சுகள் சிதறிப் போயின,

எத்தனை குழந்தைகள் பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர்,

நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது.

”சிறீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்” என்று சனல் 4 வினால் காட்டப்பட்டு இருக்கின்ற பயங்கரவாதியின் மகன் 12 வயதுச் சிறுவன் விடயத்தில் அக்கறை கொள்ளும் மேற்கு சாதாரண பிஞ்சுகள் கொல்லப்பட்டதை பெரிதாக கருதியது கிடையாது .

ஏறாவூர் பிச்சிநகர் முஸ்லிம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் நடத்தியஇனச்சுத்திகரிப்பில் 31 பிஞ்சுகள் , 45 ஆண்கள் 28 பெண்கள் பலி எடுக்கப்பட்டார்கள்.

இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள்.

இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான் .

கிழக்கே ஆகஸ்ட் 1990 இரண்டு காத்தான்குடி பள்ளிவாசல்களுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள்.

அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யபட்டனர்.

ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை துடிக்கப் பதைக்க சுட்டுகொன்றார்கள்.

 எந்த மேற்கு ஊடகங்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏன் என்ற கேள்விக்கு நிறைய விடைகள் உண்டு இங்கு விடைகளை தவிரித்து சில விபரங்களை பார்ப்போம் .

காத்தான்குடி ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும், ஏறாவூர்  கிராமங்களுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் படுகொலை செய்த சிறுவர்களின் சில படங்கள் :
படங்கள் மீது கிளிக் செய்து பெரிதாக பார்க்க முடியும்:


அதேபோன்று 116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் இதில்  கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றோம்


ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்

ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்

எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்

ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்

எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்

எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்

ஏ. றிபாகா -(01 வயது) -பெண்

எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்

எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்

யூ. லாபிர் -(03 வயது)- ஆண்

எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்

ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்

எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்

எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்

எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்

எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்

எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்

எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்

எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்

எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்

எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )

எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)

எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)

ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்

ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்

எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)

எம். ஐ. ஜரூன் -(10 வயது)

எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)

எம். ஐ. அஸ்றப் -(11 வயது)

எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)

எம். கமர்தீன் -(12 வயது)

எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)

ஏ. எல். மக்கீன்-(12 வயது)

எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)

ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)

வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)

எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)

எம். எஸ். பைசல்-(13 வயது)

எம். பீ ஜவாத்- (13 வயது)

யூ. எல். எம். அனஸ்- (13 வயது)

ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)

எச். எம். பௌசர்-(14 வயது)

ஏ. ஜௌபர்- (14 வயது)

எம். எஸ். எம் சகூர் -(14 வயது)

ஏ. சமீம்- (14 வயது)

எம். இஸ்ஸதீன்- (15 வயது)

எம். எம். எம். பைசல் -(15 வயது)

எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்

எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்

எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்

எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்

எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்

எம். எல். சமீமா-(10 வயது)- பெண்

எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்

எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்

ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்

ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்

யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்

ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்

ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்



ஏ.அப்துல்லாஹ்

THANKS TO SOURCE: http://lankamuslim.org/2012/03/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/

THANKS TO SOURCE: http://muhasabanet.wordpress.com/2012/03/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/

சொடுக்கி பகுதி 1 புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. படியுங்கள்

சொடுக்கி  பாகம் 2. புலி பயங்கரவாதம். .புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமாட்டோம். படியுங்கள்

சொடுக்கி  பகுதி 3 புலி பயங்கரவாதம். .புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள்..  படியுங்கள்.
 
*************


4 comments:

UNMAIKAL February 20, 2013 at 12:47 PM  

புலிகள் செய்த‌ சிசு கோரப் படுகொலைகளின் புகைப்படங்கள் கருணாநிதியின் நெஞ்சை என்ன செய்தது?

'பாலச்சந்திரன் படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார் கருணாநிதி': ஸ்டாலின்


விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் புகைப்படத்தைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சியில் உறைந்து போனார் என்று கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இடி அமீன் கூட இந்தப் படத்தைப் பார்த்தால் அதிர்ச்சி அடைவான். அப்படி ஒரு கொடூர முடிவை சந்தித்துள்ளான் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன்.

உலகமே பதை பதைத்துப் போயுள்ள இந்தப் படங்களை லண்டனின் சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த கொடூரக் கொலைக்கு தமிழக அரசியல் தலைவர்கள், உலக மனித ஆர்வலர்கள் கடும் கண்டனமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை

இந்தக் கொடூரப் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாராம் திமுக தலைவர் கருணாநிதி.

, படத்தைப் பார்த்து தலைவர் அதிர்ச்சி அடைந்து விட்டார். பெரும் துயரத்தில் மூழ்கிப் போனார். அப்செட் ஆகி விட்டார். என்றார் ஸ்டாலின்.

Unknown February 20, 2013 at 1:09 PM  

ஈழம் விசயத்தில் சில போராளி குழுக்களை இந்திய உளவுப்பிரிவு தங்கள் வசப்படுத்திக்கொண்டு குழப்பம் விளைவித்தது, இலங்கையின் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, தமிழ் தலைவர்களை கொன்றது மற்றும் பல மக்கள் விரோதச் செயல்களின் பின்னணியில் இந்தியா உள்ளது. ஆனால் பழி மட்டும் புலிகள் சுமக்க வேண்டும்! என்ன கொடுமை!

VANJOOR February 20, 2013 at 1:22 PM  

புலிகளின் தலைவரான பிரபாகரனால் தமிழ் முஸ்லிம் இன ஒழிப்பு மற்றும் தமிழ் முஸ்லிம் சிசு படுகொலை செய்யப்படவில்லை என்றால்!!

ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்?……..

UNMAIKAL February 20, 2013 at 8:52 PM  

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

புலி உறுப்பினர்களை இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP