**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்.

>> Wednesday, March 31, 2010

தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.

பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

இதுதொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல் கலைக்கழக நோய் எதிர்ப்பு இயல்துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது. இதில் வெளியான தகவல்கள் வருமாறு:

மனிதனின் வாய்ப்பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் உள்ளன. இதில் நன்மை தரும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.

இவற்றில் தீமை தரும் நுண்ணுயிரிகள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது.

இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Porphyromonas Gingivalis) நுண்ணுயிரி ஆகும்.

தினமும் சுத்தமாக பல்துலக்குவதன் மூலமும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமும் இந்த நுண்ணுயிரி அழிக்கப்பட்டு விடுகிறது.

இது வாய்ப்பகுதியில் அதிகமாக இருந்தால்,அது ரத்தத்தில் கலந்து இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதை இந்த நுண்ணுயிரி தடுக்கவில்லை.

பல்வேறு வயது பிரிவு மற்றும் ஆரோக்கியமானவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களைக் கொண்டு இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஆய்வு ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளின் மூலம் பல புதிய தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

மேலும் படிக்க... Read more...

காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?

>> Tuesday, March 30, 2010

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது.

இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா?

நிச்சயம் முடியும். இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.

காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்: ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.

வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.

மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.

தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.

சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்: இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.

முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாாக சாப்பிட வேண்டும்.

எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.
========

இதையும் தவறாது படியுங்கள்.


நல வாழ்வுக்குச் சில "டிப்ஸ்". தவறாது படியுங்கள்.

மேலும் படிக்க... Read more...

அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்.

>> Monday, March 29, 2010

துபாய்க்கும் சிங்கப்ப்பூருக்கும் வேலை தேடிச் சென்று ஏமாந்து கொத்தடிமைகளாகும் நம்மூர் மக்களின் கதையைக் காட்டிலும் கொடியது இவர்கள‌து கதை.


படங்களின் மேல் க்ளிக் செய்து தோன்றும் திரையில் மீண்டும் படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.




THANKS TO : SAMARASAM.

மேலும் படிக்க... Read more...

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. அருமையான தகவல்.

>> Thursday, March 25, 2010

நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!

மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

இணையத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல்
1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.

10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.

ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.

நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.

மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு.
எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

THANKS: VIDUTHALAI.

மேலும் படிக்க... Read more...

காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.

>> Tuesday, March 23, 2010

காதை குடையிறதுதான் வேலை


காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது. தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது, "தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி" என்றாள்.



"என்ன நடந்தது" என விசாரித்தேன். "வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று" என்றாள்.

"காது கடித்தால் என்ன செய்வீர்கள்?" வினவினேன். "நெருப்புக்குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை" என்றான் கூட வந்த மகன்.

காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கக் குணமாயிற்று.

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான். நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது. காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது.

உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை. காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டுவிடும். இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.

காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை. காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.

காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும்போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.

காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும். ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது. இப்படிச் சுத்தம் செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்.

THANKS: Posted by டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
**********
க்ளிக் செய்து படியுங்கள்.

காது குடையலாமா? ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே பிரச்னைதான்

மேலும் படிக்க... Read more...

தினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விரட்டலாம்

>> Monday, March 22, 2010

கோவை தினகரன் நாளிதழ் சார்பில் ஸ்ரீராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்த மெடிஎக்ஸ்போ 2009 மருத்துவ கண்காட்சியில், காக்க காக்க இதயம் காக்க என்ற தலைப்பில் கே.ஜி. மருத்துவமனை இருதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரூக் பேசியதாவது:

இந்தியாவில் மாரடைப்பு நோய் விகிதாச்சாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது. முன்பு வயதானவர்களை தாக்கிய மாரடைப்பு நோய், இன்று வளம் வயதினரையும் தாக்குகிறது. நமது உணவு பழக்கவழக்க முறைகள்தான் இதற்கு காரணம்.

தாயின் வயிற்றில் குழந்தை உருவான ஆறாவது வாரத்தில் துடிக்க துவங்கும் தசைப்பகுதிதான் இருதயம். நமது உடலில் தொடர்ச்சியாக கடைசிவரை இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரே உறுப்பு இருதயம். இது, ஒருமுறை பழுதுபட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம்.

சர்க்கரை நோய், அதிக உடல் பருமன், கொழுப்பு சத்து, மது, புகை பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல், மனஅழுத்தம் ஆகியவை மாரடைப்பு உருவாக பிரதான காரணம். இப்பழக்கத்தை விட்டொழித்து இருதய நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். இவ்வாறு டாக்டர் பரூக் பேசினார்.

சர்க்கரை நோய் விழிப்புணர்வு பற்றி கோயம்புத்தூர் டயாபட்டீஸ் பவுண்டேசன் மருத்துவமனை தலைவர் டாக்டர் சேகர் பேசியதாவது:எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியம் அல்ல. நம் கடமையை நாமே திருப்திகரமாக செய்ய முடிந்தால் மட்டுமே அது ஆரோக்கியம்.

உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நம் உடலில் சர்க்கரை நோய் உருவாக நாம் சாப்பிடும் மாவு சத்துள்ள உணவு வகைகள்தான் காரணம். கார்போஹைட்ரேட் உணவுவகைகளை தவிர்த்து பழம், காய்கறி வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவு வகைகளை பிரிஜில் நாள் கணக்கில் வைத்து சாப்பிடக்கூடாது. அதிக கொழுப்பு சத்து உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது.

அரிசி சாதம் அளவை மூன்றில் ஒரு பங்காக குறைத்துக்கொள்ள வேண்டும். பருப்பு, கீரை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும்

தினம் 5 கி.மீ. தூரம் நடக்க வேண்டும். இது, இருதயத்தை வலிமைப்படுத்தும். தினமும் ஐந்து கி.மீ. தூரம் நடந்தால் நம் வாழ்நாள் 15 வருடம் கூடும். சர்க்கரை, இருதய நோயை விரட்டிவிடலாம்.
எந்த மருத்துவரும், மருத்துவமனையும் செய்யாத சாதனையை வாக்கிங் செய்யும். வாக்கிங் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முடிந்தவரை உடற்பயிற்சி செய்யலாம். உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி இவை இரண்டும் இருந்தால் 70 சதவீத நோயை விரட்டிவிடலாம். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இவ்வாறு டாக்டர் சேகர் பேசினார்.

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர் சதீஷ்குமார் உடல்பருமனுக்கான அறுவை சிகிச்சை முறைகள் குறித்து பேசியதாவது:

துரித உணவு பழக்கம், பரம்பரை கோளாறு, உடல்உழைப்பு குறைவு, உடற்பயிற்சி இன்மை காரணமாக இளவயதினருக்கும் உடல்பருமன் பிரச்னை காணப்படுகிறது. வயது, உயரம்த்திற்கு தகுந்த சராசரி எடை இருப்பது அவசியம். பித்தநீர் உணவுடன் சேர்ந்தால் கொழுப்பாக மாறி உடலில் சேர்கிறது. கை, கால் மற்றும் வெளிப்புற உடலில் உள்ள கொழுப்பைவிட வயிற்றில் உள்ள கொழுப்புதான் ஆபத்தானது.

அதிக கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்க சிறுகுடலில் 3 அடிக்கு மட்டும் பித்தநீர் சேருமாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையான போது சிறுகுடலை பழைய நிலைக்கு கொண்டுவரமுடியும். ஆனால் வயிற்று பகுதியை வெட்டி எடுக்கும் சிகிச்சையில் பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது.

அதிக உணவு உட்கொள்ளாது தடுக்க இரைப்பையில் கிளிப் மாட்டும் முறை முன்பு இருந்தது. புண்ணாகிவிடும் ஆபத்து நிறைய உள்ளதால் அந்த சிகிச்சை நடைமுறையில் அரிதாகவே நடக்கிறது. கொழுப்பு பகுதி களை நீக்கும் சிகிச்சை எண்டாஸ்கோபி முறையிலேயே செய்வதால் தழும்புகள் ஏற்படாது. காய்கறி, கீரை, பழங்கள் உண்பது, வாய்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தினமும் நடைபயிற்சி உடல்பருமன் நோயை தீர்க்கும்.

கே.எம்.சி.எச் மருத்துவமனை டாக்டர் குப்புராஜன் சிறுநீரக நலன் குறித்து பேசியதாவது: சிறுநீரகம் சீராக இயங்க போதிய தண்ணீர் அருந்துவதே சிறந்தவழி. சிறுநீரகம் தனது பணியை சிறப்பாக நிறைவேற்ற தண்ணீர்தான் முக்கிய காரணி. பழங்கள், கீரைகள், காய்கறிகள் என நார்ச்சத்து மிகுந்த உணவுகள் சிறுநீரகத்தின் பணிகளை சீராக்கும்.

உடலின் கழிவுகளை சுத்திகரிக்கும் முக்கிய பணியை செய்து உடல் இயக்கத்தை முழுமையாக்குவது சீறுநீரகம்தான். சிறிய அளவிலான சிறுநீரக கற்கள் வாழைத்தண்டை சாப்பிட்டால் குணமாகும். அதற்கும் வாழைத்தண்டு சாறுடன் போதுமான தண்ணீரும் சேர்ந்து அருந்துவதான் முழுமையான தீர்வாக அமையும். சிறுநீரக கோளாறுகளை எளிதில் கண்டறிந்து குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள், சரியான மருந்து மாத்திரைகள் உதவும்.

கோவை கிருஷ்ணா ஹெல்த் கேர் சென்டர் மருத்துவர் பாலகுமாரன் எலும்பு அறுவை சிசிச்சை குறித்து பேசியதாவது: நவீன வசதிகள், வாழ்க்கை முறை காரணமாக உடல் எலும்புகளுக்கு முழுமையான வேலை கொடுப்பதற்கு தவறிவிடுகிறோம். சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் குறைந்து வருகிறது. மேற்கத்திய கழிவறை உபயோகம் பெருகியதன் காரணமாக கால்மூட்டுகளுக்கு முழு வேலைகிடைப்பது இல்லை.

நிற்பது, அமர்வது, நடப்பது என எலும்புகளுக்கு முழுவேலை கொடுத்தாலே மூட்டுவலி வராது. மூட்டுக்கு முழுவேலை கொடுத்தால் வேதனை வராது. கை, கால், இடுப்பு எலும்புகளில் வலிஏற்படும் போது மூட்டு இணைப்புகளை இயல்பான நிலையில் இருக்கச்செய்தாலே பெரும்பாலான எலும்பு பிரச்னைகள் தீரும். வலியின் பிறப்பிடம் அறிந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய் தீரும்.

கைகளில் வலி என்றால் முதுகெலும்பு இணைப்புகளை சோதிக்கவேண்டும். கால்களில் வலி என்றால் இடுப்பு எலும்பு இணைப்புகளை சோதிக்க வேண்டும். எல்லா எலும்பு பிரச்னைகளுக்கும் அறுவை சிசிச்சை தேவைப்படாது. முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுகினால் நிரந்தர தீர்வு பெறமுடியும்.

கோவை தெலுங்குபாளையத்திலுள்ள பென்ஸ் வெக்கேசன் கிளப் நிர்வாக இயக்குனர் சரவணன், ‘உடலும் உள்ளமும்’ என்ற தலைப்பில் பேசுகையில்: ‘‘உடலும் உள்ளமும் பிரிக்க முடியா தவை, ஒன்றோடு ஒன்று இணைந்தவை. உடலும் உள்ளமும் நன்றாக இருக்க உடற்பயிற்சி மிக அவசியம். உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு உள்ளத்தை கவனிக்காவிட்டால் எந்த பயனும் இல்லை.

எனவே தினந்தோறும் உடலை பேணுவதோடு, உள்ளத்தில் நல்ல சிந் தனையை வளர்க்க வேண் டும். ஒவ்வொருவருக்கும் மனதில் தைரியம் இருக்க வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். குடும்பம் நன்றாக இருந்தால் தான் உள்ளம் நன்றாக இருக்கும். உள்ளம் நன்றாக இருந்தால் தான் குடும்பத்தை சிறப்பாக நடத்த முடியும்.

உடல் ஆரோக்யமாக இருக்க காலையில் உடற்பயிற்சி செய்யலாம், நீச்சல் அடிக்கலாம், புத்தகம் படிக்கலாம். வாழ்க்கையில் வெற்றி பெற பொறுமை மிக அவசியம். மன பலம் இருந்தால் உடல் பலம் தானாக வரும்’’ என்றார்.

THANKS TO : http://muthupetxpress.blogspot.com/2010/02/5.html

மேலும் படிக்க... Read more...

மருந்தா? மரணமா? உயிரோடு விளையாடும் போலிகள்' விலை கொடுத்து வாங்குவது.

>> Wednesday, March 17, 2010


‘போலிகள் புகாத பொருளே இல்லை’ என்று ஒரு வரியில் சொல்லும் அளவுக்கு உலகமே இன்றைக்கு போலிகளின் பிடியில் சிக்கியுள்ளது.

சோப்பு, ஷாம்பில் தொடங்கிய போலி, கடைசியில் கரன்சி வரை வந்து விட்டது. பார்த்து பழக்கப்பட்டு விட்டதாலோ என்னவோ, போலிகள் விஷயத்தில் யாரும் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.

விளைவு, ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடிக்கும் கதையாக, மருந்து மாத்திரைகளிலும் போலிகள் புகுந்து விட்டதுதான் வேதனை.

அதிலும் 2001ல் எடுத்த ஒரு இந்திய கணக்கெடுப்பு மயக்கத்தையே வரவழைக்கிறது. நாட்டின் மொத்த மருந்து உற்பத்தியில் (ரூ.22,887 கோடி) 18 சதவீதம் போலி மருந்துகள், அதாவது ரூ.4112 கோடியாம். இப்போதைய அதன் சந்தை மதிப்பு ரூ.2000 கோடியாக குறைந்து விட்டதாக சொல்வது ஆறுதலான விஷயமா என்ன?

‘உலக மருந்துப் பொருள் சந்தையில் 35 சதவீத போலித் தயாரிப்புகள் இந்தியாவில் இருந்துதான் வருகின்றன’ என்று உலக சுகாதார நிறுவனம், ஓங்கி குட்டியதற்கு பின்னர் தான் போலிகளை பற்றிய பயம் தொடங்கியது.

விழிப்புணர்வு பிறந்தது.

உலக மருந்து உற்பத்தியில் 8%, உலக மருந்து விற்பனைச் சந்தையில் 2%, மருந்து உற்பத்தியில் ஆண்டுக்கு 12.14% வளர்ச்சி, தினந்தோறும் 20 புதிய தயாரிப்புகள் என சாதனை படைத்த தேசம் இது.

அது மட்டுமா ஆண்டுக்கு ரூ.85000 கோடி மருந்து உற்பத்தியையும், அதில் ரூ.35000 கோடி ஏற்றுமதியையும் மேற்கொள்ளும் நாடு என்று புகழ் பாடும் நேரத்தில், ‘‘35% போலிகள்’’ என்ற குற்றப்பத்திரிகையும் வாசிக்கப்பட்டது.

அதன்பின்னர் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வுகளுக்கு பின்னர் தான் உண்மை தெரிந்தது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் 20% போலிகள் மற்றும் தரக்குறைவானவை. அதில் 60% மருந்துகள் சரியான உட்பொருட்கள் இல்லாதவை, 19% தவறான உட்பொருட்கள் கொண்டவை, 16% ஆபத்து தரக்கூடிய உட்பொருட்கள் கொண்டவை என்ற அதிர்ச்சியை நாடு உணர்ந்து.
அப்புறமென்ன... சட்டம் திருத்தப்பட்டது.

தண்டனைகள் அதிகமாக்கப்பட்டன. நாடெங்கும் சோதனைகள் துரிதம் பெற்றன. மாநிலங்கள் தோறும் ஆய்வகங்கள் திறக்கப்பட்டன. வழக்குகள் போடப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. ஆனாலும், போலி மருந்துகள் புழக்கத்தில் இருக்கின்றன.

பெரிய நிறுவனங்களின் பெயரில் போலி தயாரிப்புகள், முறையான மூலக்கூறுகள் இல்லாத மருந்து மாத்திரைகள், தடை செய்யப்பட்ட மருந்துகளின் தடையற்ற விற்பனை, காலாவதியானது தெரிந்தும் கல்லாவை நிரப்பும் வியாபார சிந்தனை... இப்படி போலி முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் பல முகங்களை கிழித்தெடுக்க தேவை என்ன மருந்தோ?

மாதவிடாய் மாத்திரையில் போலி

தமிழகத்தில் மருந்து, மாத்திரைகளை ஆய்வு செய்வதற்கு 74 ஆய்வாளர்கள் உள்ளனர். மாதாமாதம் இவர்கள் மருந்து விற்பனை கடைகளையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மாதத்திற்கு 7 சாம்பிள்கள் எடுக்க வேண்டும். டிஸ்பென்சரிகளிலும் சாம்பிள் எடுக்கலாம். அந்த சாம்பிள்களை பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி முடிவின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கின்றனர்.

அதிரடிச் சோதனைகளும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. அதெப்படி என்றால், ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் சோதனை. அதில் ஒரு குறிப்பிட்ட மருந்து மட்டுமே ஆய்வுக்கு எடுக்கப்படும். குறிப்பிட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த சோதனையில் போலிகள் கண்டுபிடிக்கப்படும்.

‘பிரிமோலட்&என்’ என்ற மாத்திரையில் போலிகள் புழங்குவதாக தகவல் வந்தது. பெண்கள் மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரை. போலியை உட்கொண்டால் குழந்தைப் பிறப்பே கேள்விக்குறியாகி விடும். தமிழ்நாடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. 4 நாளில் போலி மாத்திரைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்ப்டடன.

2009 ஏப்ரல் முதல் இதுவரை தமிழகத்தில் போலி மருந்துகள் தொடர்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 58 வழக்குகள் தரம் குறைவான மருந்துகள் பற்றியது. காலாவதியான மருந்துகளை விற்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக 120 கடைகள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளன.

‘ஆன்டி ப்ளூ’ எனற மாத்திரை பன்றிக்காய்ச்சலுக்கானது. இந்தியாவில் விற்க அனுமதியில்லை. வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தரப்பட்ட அனுமதியை பயன்படுத்தி கோவாவில் ஒரு கம்பெனி தயாரித்தது. அதை லோக்கல் மார்க்கெட்டில் விற்க முயற்சித்தது அம்பலமானது. தமிழகத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் அனுமதியில்லாமல் விற்கப்பட்ட ரூ.25 லட்சம் மருத்துவப் பொருட்கள் பிடிபட்டன. அறுவை சிகிச்சையின்போது தையல் போடுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அவை. தரம் குறைந்தவை. வடசென்னையில் இன்னொரு சோதனையில் போலி சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரத்த வங்கிகளில் சேமிக்கப்படும் ரத்தம் 2 முதல் 6 டிகிரி டெம்பரேச்சரில் பாதுகாக்க வேண்டும். ஸ்டோரேஜ் கன்டிஷன் மோசமாக இருந்த 5 ரத்த வங்கிகள் (சென்னை 2, கோவை 1, தஞ்சை 2) மூடப்பட்டன. ரத்ததான முகாம் மூலம் சேரிக்கப்பட்ட 150 பாட்டில் ரத்தத்தை சோதனை செய்யாமல் விற்ற, சென்னையை சேர்ந்த ஒரு ரத்த வங்கியும் மூடப்பட்டது.

ஏன்? என்னாச்சு?

2008ம் ஆண்டில் போலி மருந்துகளை ஒழிக்க அரசு ஒரு முடிவெடுத்தது. அதன்படி மாநிலங்கள் தோறும் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. தமிழகத்தில் அந்த பொறுப்பை பெட்காட் என்ற நுகர்வோர் அமைப்பு மேற்கொண்டது. 1800 சாம்பிள்கள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு சரி.

போலி மருந்து தயாரிப்புகள் தமிழகத்தில் இல்லை என்றும் வடமாநிலங்களில் இருந்து தான் வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. ஆந்திராவில் குண்டூரை மையமாக கொண்டு செயல்படுவதாகவும் ஒரு தகவல் உண்டு. மாதவிடாய் மாத்திரையில் போலிகளை தயாரித்து விற்ற கும்பலும் ஆந்திராவில் தான் ஐக்கியம் என்கிறது அதிகாரிகள் வட்டாரம். வழக்கு போட்டதோடு சரி.

புகாரின்படி கடைகளில், கம்பெனிகளில், மருத்துவமனைகளில் சாம்பிள் எடுக்கப்படுகிறது. போலியா என்பதை கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

17 மாநிலங்களில் ஆய்வகம் உள்ளது. அதில் 7 மட்டுமே எல்லா வகை மருந்துகளை சோதிக்கும் வசதி கொண்டவை. அரசுக்கு சொந்தமான இந்த ஆய்வகத்தில் சோதனை செய்து போலிதான் என்று அறிக்கை அனுப்பினாலும், சம்பந்தப்பட்ட கம்பெனிகள் ஏற்பதில்லை. விளைவு, கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசு ஆய்வகத்திற்கு (ஆய்வகங்களுக்கு அதுதான் உச்சநீதிமன்றம் மாதிரி) அனுப்பி வைப்பதோடு சரி.

போதைப் பொருள் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் கடுமையான சட்டங்கள் உள்ளன. அப்பாவிகளின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தயாரிப்பை தடுக்க, அதைவிட கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அடிக்கடி குரல் எழுப்புவதோடு சரி.

வெளிநாடுகளில் தடை இங்கு தாராளம்

அறுவை சிகிச்சைக்கு முன்பு மயக்க மருந்தாக தரப்படும் மார்பின் போன்றவை ஓபியம் என்ற போதைப்பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதற்கு தடை இருந்தாலும் பயன்பாட்டில் இருக்கிறது.

வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டவை இங்கு தாராளமாக விற்கப்படுகின்றன.

கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதற்காகதான் அந்த நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. மாத்திரை, மருந்துகள் தடை செய்யப்பட்டால் அவற்றின் உற்பத்தி நிறுத்தப்படும். ஆனால் கடைகளுக்கு வந்தவை விற்றுத்தீரும். சில தடையின் போது மாத்திரைகளை அப்புறப்படுத்த 3 மாதம் வரை அவகாசம் கொடுப்பார்கள். அந்த அவகாச நேரத்தில் விற்றுத் தீர்க்கும் அவலமும் உண்டு.

மருந்து தரும் தீங்குகள்...

தடை செய்யப்பட்ட மருந்துகள் தாராளமாக கிடைக்க காரணம், தடை உத்தரவில் உள்ள ஓட்டைகள். எடுத்துக்காட்டாக, அனால்ஜின் ரத்த நோய், ஈரல் நோயை உண்டாக்கக்கூடியது. இதை குடல்பிடிப்பு நீக்கி மருந்து தவிர மற்ற மருந்துகளுடன் இணைத்து தருவதற்குத்தான் தடை. தனியாக விற்கத் தடை இல்லை.

இதேபோலவே, பீனல்புடசோன், ஆக்சி பென்பூடசோன் மருந்தும் தனியாக விற்கத் தடை இல்லை. இந்த ஓட்டைதான் தடையை ஆரம்பத்திலேயே உடைத்து விடுகிறது என்பது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாதம்.

குழந்தைகளுக்கு என தயாரித்து விற்கப்படும் அனைத்து வடிவ லோபரமைடு, டைபீனாக்சிலேட், பெல்லடோனா மருந்துகள் தடை செய்யப்பட்டன. குடல் பாதிப்பு, உயிருக்கும் ஆபத்து என்பது காரணம். மிகவும் அரிதான நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு மட்டுமே இந்த மருந்தைக் கொடுக்கலாம்.

ஆனால், இதை சாதாரண வயிற்றுப்போக்குக்கும் கொடுக்கிறார்கள். பெரியவர்களுக்கே தரக்கூடாத இந்த மருந்துகளை குழந்தைகளுக்கும் தருகிறார்கள் என்பது வேதனையானது.

இந்த மருந்தின் திரவ வடிவம் மட்டும் தடை செய்யப்பட்டது, மாத்திரை வடிவம் தடை செய்யப்படவில்லை.

குழந்தைகளின் வயிற்றுப்போக்குக்குத் தரப்படும் உப்பு&சர்க்கரைக் கரைசலில் சேர்க்கை அளவு சரியாக இருப்பது அவசியம். அளவு மாறுபட்டால் பலன் இல்லை என்பது மட்டும் இல்லை,

பிரச்னைகளும் வரும். அளவு உறுதிப்படுத்தாத உப்பு&சர்க்கரைக் கரைசல் மருந்துகள் தடை செய்யப்பட்டன. கடைகளில் அதுபோன்ற கரைசல் மருந்துகள் உள்ளன.

சித்தா, ஆயுர்வேத, யுனானி மருந்துகளுடன் சேர்த்து எந்த அலோபதி மருந்து தருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் அலோபதி வல்லுநர்களே இதை பரிந்துரை செய்கின்றனர்.

தடைக்கு தடை எப்படி?

உயிர் காக்கும் மருந்துகளில் சில உயிர் வாங்கும் தரம் கொண்டவை. பக்கவிளைவுகள் மூலமாக உயிரை பறித்து விடும். அத்தகைய மருந்துகளை ஐரோப்பிய, வட அமெரிக்கா நாடுகளில் விற்க முடியாது. கடுமையான சட்டங்களும், தண்டனைகளும், சொத்து முழுவதும் விற்றால் கூட கட்ட முடியாத அளவிற்கு அபராதமும் அங்கு உண்டு.

நமது நாட்டிலும் தயாரிக்க, விற்பனை செய்ய 77 மருந்துகளை மத்திய மருந்து தரக் கட்டுபாட்டு நிறுவனம் தடை விதித்துள்ளது. தடை விதித்த பிறகு அந்த நிறுவனங்கள் அந்த மருந்தின் சிறப்பை சொல்லும் வகையில் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஊடகங்களில் செய்திக் கட்டுரைகள் வெளியிட வைக்கும்.

அதற்கு ஏற்ப மருத்துவமனைகளும் மருந்தின் சிறப்பைக் கூறும் கருத்தரங்குகள் நடத்தும். இவற்றையெல்லாம் ஆதாரமாக காட்டி மருந்து நிறுவனங்கள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை பெற்றுவிடும்.

காலாவதியான மாத்திரையா?

வழக்கமாக 10 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டையை வாங்கும் போதுதான் அதில் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒன்றிரண்டு வாங்கும்போது விவரங்கள் கிடைக்காமல் போகலாம். கடைக்காரரிடம் மாத்திரையை வெட்டி தரும் முன் தேதிகளை பார்க்க வேண்டும்.

காலாவதியான மாத்திரைகளை தயாரிப்பு நிறுவனங்கள் திரும்ப பெற்றுக் கொள்வதில்லை. சமீபகாலமாக ஒரு சில நிறுவனங்கள் காலாவதியான மருந்துகளை விற்றுத் தந்தால் ஒரு தொகையை கமிஷனாக தருகின்றன. சில நிறுவனங்கள் காலாவதியான மாத்திரையை திரும்ப வாங்கினாலும், குறைந்த தொகையை தான் திருப்பி தருகின்றன. நஷ்டத்தை சரிக்கட்ட சில கடைக்காரர்கள் காலாவதியான மாத்திரைகளை அப்பாவிகளின் தலையில் கட்டி விடுகின்றனர்.

தமிழகத்தில்...

தமிழகத்தில் 539 மருந்து தயாரிப்பு கம்பெனிகள் இருக்கின்றன. அதில் 5 கம்பெனிகள் அமெரிக்க அங்கீகாரம் பெற்றவை. தமிழகத்தில் ரூ.8000 கோடி அளவுக்கு மருந்து மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் ரூ.5000 கோடி வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்க நாடுகள் மற்றும் இலங்கைக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மருந்து தயாரிப்புக்கென பல விதிமுறைகள் உள்ளன. சட்டப்படியான அந்த விதிமுறைகளை பின்பற்றாத 89 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

தமிழ்நாட்டில் 259 ரத்த வங்கிகள் உள்ளன. தமிழக அரசு 84, தனியார் 163, இஎஸ்ஐ 2, மத்திய அரசு 10.
இந்தியாவில் 77 வகை மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதில் சில மருந்துகள் விற்கப்பட்டதாக இரண்டு வழக்குகள் மட்டுமே தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மருந்து உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு. 95% தேவைகளை உள்நாட்டு தயாரிப்பு மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் நாடு என்பதால் இறக்குமதி அதிகம் இல்லை. சமீபத்தில் சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த மருந்துகள் அனைத்தும் போலி எனத் தெரியவந்தது. கோடிக்கணக்கான மதிப்புடைய அவை அழிக்கப்பட்டன.

கவனிப்புக்கு பஞ்சமில்லை

என்னதான் புதுபுது மருந்துகளை சந்தையில் மருந்து நிறுவனங்கள் அறிமுகப்படுத்தினாலும், விளம்பரப்படுத்தினாலும் டாக்டர்கள் மனசு வைக்காவிட்டால் அவை வருவாய் தராது. எனவே மருந்து நிறுவனங்களின் முக்கிய இலக்கு டாக்டர்கள். அவர்களை திருப்திப்படுத்த பல்வேறு வழிகளை இந்த நிறுவனங்கள் கையாளுகின்றன. நட்சத்திர விடுதிகளில் விருந்து. விலை உயர்ந்த பரிசுகள், வெளிநாட்டில் சுற்றுலா என பல கவனிப்புகள். ஒருமுறை தங்கத்திலான டெலிபோனையே நினைவு பரிசுகளாக தந்திருக்கின்றனர்.

THANKS TO DINAKARAN.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP