**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

இந்துத்துவ சாமியாரினியின் 38 பேர் உயிரிழந்த குண்டு வைப்புக்கு ராணுவத்தினரின் உதவி அம்பலம்.

>> Sunday, October 26, 2008

38 பேர் உயிரிழந்த 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் முடமாகி நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.

இவர் இந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்தவர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். சைக்கிள்களில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டது.

சைக்கிள்கள் சாதாரண மக்களின் வாகனம் என்பதிலிருந்து அது பயங்கரவாதிகளின் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

மலேகன் நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.

குண்டுவெடிப்பு-2 ராணுவ வீரர்களுக்கு தொடர்பு!
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2008
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் கைதாதியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு மேஜர் உள்பட இரு முன்னாள் ராணுவத்தினரும் பிடிபட்டுள்ளனர்.

மாலேகானில் கடந்த மாதம் 29ம் தேதி சிமி அலுவலகம் முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள். 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது.

அதில் ஒருவர் பலியானார்.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத்திருப்பது தெரிந்தது. டைமர் கருவி பொருத் தப்பட்டிருந்த அந்த வெடி குண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டிருந்தது.

தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக போலீசார் சியாம் சாகு, திலீப்நாசர், சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் மூன்று பேரும் பெண் துறவி பிரக்யா தாகூர் என்பவருக்கு நெருக்கமானவர்கள்.

இவர் இந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்தவர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் இந்து ஜாகிரண் மஞ்ச்சில் இணைந்த பின்னர் துறவியானார்.

பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ராமஜென்மபூமி போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தேமாதரம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அதற்கு குஜராத் அரசு நிதியுதவி அளித்ததால், குஜராத் மாநிலம் சூரத்திற்கு இடம் மாறினார் பிரக்யா.

மாலேகான் குண்டுவெடிப்பில் சிக்கிய மோட்டார் சைக்கிள் இவரது பெயரில்தான் பதிவாகியிருந்தது. இதையடுத்தே இவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.

சிமி இயக்கத்தினரை பழிக்குப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமியார் உள்ளிட்ட குழு நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதை தொர்ந்து பெண் சாமியார் பிரக்யாவை போலீசார் கைது செய்தனர். இது சங் பரிவார் அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவத்தினருக்கு தொடர்பு:இதற்கிடையே இந்த வழக்கில் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்களும் கைதாகியுள்ளனர். இருவரும் தற்போது இந்து ராணுவப் பயிற்சிக் கழகம் என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்கள்.

இந்த பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் பெயர் பிரபாகர் குல்கர்னி மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றியவர். 2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஆவர்.

வெடிகுண்டு தயாரிக்க இவர்கள் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை சேகரித்து அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கைதான பெண் சாமியார் உள்பட 2 ராணுவ அதிகாரிகளையும் போலீசார் விசாரணைக்காக மும்பை கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவர்களிடம் தீவிர விசாரணையில் நடத்தியதில் குண்டு வெடிப்பில் இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ராணுவ அதிகாரிகள் குல்கர்னியும், உபாத்யேயும் நாசிக் அருகே ராணுவ பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த பயிற்சி மையத்தை இந்து ராணுவ கல்வி கழகம் நடத்தி வந்தது.அதில் வெடிகுண்டுகள் தயாரித்தல், வெடிகுண்டு களை கையாள்வது குறித்து இரு அதிகாரிகளும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். மற்றும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தனர்.

இதற்கிடையே மாலேகானில் 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
http://thatstamil.oneindia.in/news/2008/10/26/india-2-ex-armymen-including-a-major-involved-in-malegoan.html
************************************************
படிக்கவும்:
மாலேகான் குண்டு வெடிப்பு. ஹிந்துத்துவ சதி அம்பலம் .

மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருகிறது.

குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.

சூரத் வெடிகுண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் காரணம். பூரி சங்கராச்சாரியார்

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!

மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP