**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

"மனித இயல்பு. காசு என்றதும் காது திறந்துகொள்கிறது'

>> Wednesday, March 7, 2007

"மனித இயல்பு. காசு என்றதும் காது திறந்துகொள்கிறது'

'விஷயம் காதில் இல்லை. மனிதர்கள் மனதில் இருக்கிறது'

பரபரப்பான கால வேளை. போக்குவரத்து சந்தடி சத்தம். இரண்டு நண்பர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

'ஏய்... எங்கேயோ பூனைக்குட்டி கத்துற சத்தம் கேக்குது பாரு...' என்று சுற்று முற்றும் பார்த்தான் ஒரு நண்பன்.

தூரத்தில் நடைபாதை ஓரத்தில் ஒரு கல்லிடுக்கில் பூனைக்குட்டி ஒன்று சிக்கியிருந்தது. நண்பன் போய் அந்தக் கல்லை நிமிர்த்தி பூனைக்குட்டியை வெளியே எடுத்துவிட்டான்.

அடுத்த நண்பனுக்கு ஆச்சரியம்.

'ரோட்டில் இத்தனை பேர் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களுக்கெல்லாம் பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை. ஆனால் உனக்கு மட்டும் கேட்டிருக்கிறது. உன் காது ரொம்ப சக்தி வாய்ந்ததுதான்' என்றான்.

'விஷயம் காதில் இல்லை. மனிதர்கள் மனதில் இருக்கிறது' என்றான் பூனைக் குட்டியைத் தூக்கிவிட்ட நண்பன்.

'எப்படி சொல்கிறாய்?'

'இப்போ பார்.' என்று சொல்லி தன் பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் சில்லறைக் காசுகளை நடைபாதையில் போட்டான். உடனே நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

'பார்த்தாயா? இதுதான் மனித இயல்பு. காசு என்றதும் காது திறந்துகொள்கிறது' என்றான் நண்பன்.
-------------------------
இணைய தளத்தில் படித்தது..

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP