**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ராட்டினத்தில் சுற்றுவது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை, ஏன்?

>> Thursday, March 22, 2007

ராட்டினத்தில் சுற்றுவது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை, ஏன்? காதுக்கும், அதற்கும் சம்பந்தமுண்டா?

''நம் உடம்பின் ஒவ்வொரு அசைவும் தடுமாற்றம் இல்லாமல் இருக்கவேண்டும் என்றால், உடம்பானது தனது சமநிலையைப் பராமரிக்க வேண்டும். அந்த வேலையைச் செய்வதற்கு உடம்பில் பல்வேறு அமைப்புகள், செயல்பாடுகள் உள்ளன. அதில் காதுக்கு முக்கியமான பங்கு உண்டு.

பொதுவாக நாம் ராட்டினத்தில் சுற்றும்பொழுது உடம்பின் சமநிலை சீர்குலையும். சந்தோஷமும் அதுதான். சங்கடமும் அதுதான். நாம் ராட்டினத்தில் இருந்து இறங்கிய பின்பும் அந்த நிலை தொடரும். மீண்டும் உடம்பு தன்னை சமநிலைக்குக் கொண்டு வர சிறிது நேரம் எடுத்துக்துகொள்ளும். அது உடம்பைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலருக்கு சீக்கிரம் சரியாகிவிடும். சிலருக்கு வாந்தி, மயக்கம்னு வந்து பின் சமநிலை ஏற்படும். இது ஒன்றும் ஆபத்தானதல்ல.

ஆனால், இதயநோய் உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்துப் பகுதியில் பிரச்னை உள்ளவர்கள் ராட்டினத்தில் ஏறக்கூடாது.

குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாகச் சுத்தவே கூடாது''

உலகம் சுத்துது. நாமும் சுத்திகிட்டேதான் இருக்கோம்... யூத்தெல்லாம் ஜோடியா சுத்தறாங்க. பெரியவங்கல்லாம் பிரச்னையோடு சுத்தறாங்க. பத்தாக்குறைக்கு டி.வி., சினிமான்னு காதுல பூ வேறு சுத்தறாங்க. இதுக்கு மத்தியில ராட்டினமா? குழந்தைகளும், இளசுகளும் சுற்றட்டும்...
SOURCE: INTERNET.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP