**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

400 வயது குரானை விற்க முயன்றவர் கைது.

>> Saturday, March 10, 2007

400 வயது குரானை விற்க முயன்றவர் கைது.

மார்ச் 08, 2007 பெங்களூர்:

ஒளரங்கசீப் காலத்து, 400 ஆண்டு பழமையான திருக்குரானை விற்க முயன்ற நபரை பெங்களூர் போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூர், எம்.ஜி. சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பழமை வாய்ந்த பொருட்களை விற்க முயற்சி நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது அந்த ஹோட்டல் முன்பு நின்று கொண்டிருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சுகுமார் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் தெரிந்ததால் அவரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவரிடமிருந்து 400 ஆண்டு கால பழமை வாய்ந்த திருக்குரான், தஞ்சை மகாராஜா சரபோஜி வரைந்த ஓவியம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த திருக்குரான் முகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தைச் சேர்ந்தது. அவரது கையொப்பமும் இந்த குரானில் உள்ளது. மொத்தம் 15 கிலோ, 39.9 செமீ நீளம், 20 செமீ அகலம் கொண்ட இந்த குரான் நூல், மலர்களின் வாசனையுடன், எளிதில் தீப்பிடிக்காத வண்ணம் நுட்பமாக தயாரிக்கப்பட்டதாகும்.

இந்த குரானின் சர்வதேச மதிப்பு ரூ. 5 கோடியாகும்.

அதேபோல தஞ்சாவூர் ஓவியத்தின் மதிப்பு ரூ. 10 லட்சமாகும். சுகுமாரைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP