**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அமெரிக்காவின் பேரழிவுப் போர்கள்

>> Sunday, February 4, 2007

அமெரிக்காவின் பேரழிவுப் போர்கள்
அமெரிக்காவின் நேரெதிர் சொல் கம்யூனிசம். கம்யூனிசம் முழுதும் வேண்டாம், சாயல் இருந்தாலே போதும். அமெரிக்கா அழித்து விடும். சோவியத் ரஷ்யாவை 'சர்வதேச பயங்கரவாத நாடு' என்றே அமெரிக்கா அழைத்தது. இப்போது அந்தப் பயங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

1960 தொடங்கி 80 வரை இடைப்பட்ட 20 ஆண்டுகளில் மட்டும் 40 ஆட்சிக்கவிழ்ப்புகளை சி.அய்.ஏ. முடித்துள்ளது. ஒரு நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஆட்சியை அமெரிக்காவால் எளிதில் சிதைக்க முடிகிறதென்றால் அதற்குப் பெயரென்ன? அந்தப் பெயருக்குப் பொருள்தான் என்ன? 1948-54 இடையிலான 6 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட கம்யூனிச எதிர்ப்பு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஓடின.

வியத்நாம், கொரியப் போர்களில் பலப்பல இலட்சம் மக்களைக் கொன்று குவித்தவர்கள், இன்றைக்கு ஆப்கானிஸ்தான், ஈராக் மக்களை அழித்து வருபவர்கள், நடப்பில் லெபனான், பாலஸ்தீனர்களை அழித்துக் கொண்டிருப்பவர்கள் என்றுதான் அடங்குவார்கள்? வியத்நாம், கொரியா, சூடான், கிரெனடா, ஈக்வடார், ஈரான், நிகரகுவா, ஹெய்ட்டி, மடகாஸ்கர், கினியா-பிஸாவ், ஜைரே, கென்யா, கானா, காங்கோ, பெனின், டான்சானியா, மாரிசியஸ், ஜிம்பாவே, மொசாம்பிக், ஜாம்பியா, எத்யோப்பியா, நமீபியா, அங்கோலா, லிபியா, ஜோர்டான், சிரியா, பிலிப்பைன்ஸ், கியூபா, ஈராக், ஆப்னானிஸ்தான், பாலஸ்தீனம், லெபனான்... என இவர்கள் குடித்த இரத்தங்கள் தான் கொஞ்ச நஞ்சமல்ல. இன்னுமா தாகம் தீரவில்ல?

1931இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கால்வின் கூலிட்ஜ் சொன்னார், 'போர்தான் அமெரிக்காவின் பிரதான பிசினஸ். போரைக்கூட நாங்கள் நல்ல பிசினஸாக மாற்றிக் கொண்டோம்' என்றார்.

எல்சால்வடாரில் 'உண்மை மற்றும் நல்லிணக்க கமிசன்' மேற்கண்ட புலனாய்வில், உலகின் மனித உரிமை மீறல்கள் 93 விழுக்காடு அமெரிக்காவின் சி.அய்.ஏ.வில்தான் நிகழ்கிறது என்று கூறியது. 93 என்னா... நூறே நடந்தாலும் என்ன செய்யமுடியும்?
அமெரிக்காவின் கள்ளக் குழந்தை இஸ்ரேல்
இருபது நாடுகளை உள்ளடக்கியது அரபு நாடுகள். இவர்கள் அராபியர்கள். வௌ;வேறு நாடுகளில் பிரிந்து, கலந்து வசித்தாலும் இவர்களுக்கான மொழி, கலாச்சாரம், பண்பாடுகள் யாவும் ஒன்றே.

இந்த நாடுகளில்தான் எண்ணெய் வளம் குவிந்துள்ளது. உலகத் தேவைகள் மூச்சாக இருப்பது இந்தப் பெட்ரோலியப் பொருள்தாம். இந்த மூச்சுக்காற்றை அராபியர்களிடம் கொடுத்துவிட்டு (அது அவர்களுக்குச் சொந்தமாகவே இருந்தாலும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க அமெரிக்கா என்ன....! (எதையாவது பூர்த்தி செய்து கொள்ளுங்கள்)

எண்ணெய் வளம் முழுக்க அபகரித்து, அரபு நாடுகளையும் கட்டுக்கள் கொண்டு வர வேண்டும். என்ன செய்யலாம்? சி.அய்.ஏ.வின் கீழ் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. கச்சிதமாக அவர்கள் காரியம் முடித்தார்கள். எப்போது தெரியுமா?

1948இல். என்ன செய்தார்கள் தெரியுமா? பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையும், ஜோர்டான் நாட்டின் ஒரு பகுதியையும் அவர்களிடமிருந்து பிடுங்கி, ஒன்றாக இணைத்து, யூதர்களை அங்கு அமர்த்தி, 'இஸ்ரேல்' எனப் பெயரிட்டு 'ஹேப்பி பர்த் டே டு யு' எனப் பாடிவிட்டார்கள். அன்றிலிருந்து நடந்து வரும் ஒவ்வொன்றையும்தான் உலகச் செய்திகளில் பார்த்து வருகிறோமே!
தீர்வுதான் என்ன?
அமெரிக்க மக்கள் தொகை 28 கோடி. இவர்கள்தான் உலகின் 600 கோடி மக்களுக்கும் ஆட்சியாளர்கள். உலக நாடுகளுக்கு சட்டதிட்டங்களை, கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள். உலகின் ஒவ்வொரு நாட்டுக் குடிமகனின் பொருளியலையும் நிர்ணயிப்பவர்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பு, அந்நிய முதலீடு, அமெரிக்க எதிர்ப்பு போன்றவை ஏதோ கம்யூனிசம் சார்ந்தது என யாரும் கருதக்கூடாது. அது பிழையாகிவிடும்.

நம் ஒவ்வொருவரின் தனி மனித உரிமைகளையும் அமெரிக்கா பறிக்கிறது; அமெரிக்கா பறிக்கிறது; நம் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அமெரிக்கா பாதித்திருக்கிறது! அய்.நா. தலைமைக்கு மாற்றாக அமெரிக்கத் தலைமை வலுவாக முன்னெடுக்கிறது. இவ்வுலகை ஆளப்பிறந்தவர்கள் நாங்கள் தான் என ஆட்டம் போட்ட ரோம், கிரேக்க சாம்ராஜ்யங்களும், 17ஆம் நூற்-றாண்டுகளுக்குப் பிந்தைய பிரெஞ்சு, பிரிட்டிஷ், டச்சு, பெல்ஜியம், ஸ்பானிஷ் போன்றவைகளும் சுருங்கி, சுருங்கி ஒரு வட்டத்திற்குள் வந்துவிட்டன. அதேபோல, 'எங்கள் ராஜ்யங்கள் முடிவில்லாதது,' எனப் பறைசாற்றி வந்த பைசான்டைன், ஒட்டாமன், ருஷ்யன், மங்கோலியர், முகலாய ராஜ்யங்களும் காணாமல் போனதுடன், வரலாற்றில் கருப்புக் கோடிட்டு பதிவு செய்யப்பட்டுவிட்டன.

இன்றைக்கு டாலர் தேசமான அமெரிக்கா அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது. வரலாறும் கறுப்பு வண்ணம் தீட்டி, அமெரிக்க முடிவை தன் நெஞ்சில் ஏற்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. ஈராக் போரில் 700 கோடி டாலர் செலவழித்து, 19000 கோடி டாலர் ஈன்றது அமெரிக்கா. எத்தனை மனிதன் செத்தான் என்பதல்ல எவ்வளவு டாலர் குவிந்தது என்பது அமெரிக்காவின் ஒரே கணக்கு.

இன்றைக்கு அமெரிக்காவில் அச்சடிக்கப்படும் டாலரில் சரிபாதிக்கும் மேல் உலகச் சந்தையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது பெரிய பலமாக அமெரிக்காவுக்கு இருந்தது.

22 நாடுகளுக் கொண்ட அய்ரோப்பா 'யூரோ' எனும் நாணயம் வெளியிட்டது. இப்-போது டாலருக்குச் சமமாக, டாலரை விட மதிப்பாய் வளர்கிறது. உலகச் சந்தையில் டாலர் இருந்த இடம் யூரோவாக மாறிவருகிறது. இந்த யூரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களுடனான வணிகம் இனி யூரோவில்தான் இருக்கவேண்டும் என முழங்கிய முதல் 'ஹீரோ' சதாம் உசேன். அதனால்தான் அமெரிக்கா அவரை 'ஜீரோ'வாக்க முயல்கிறது. ஆக டாலரை ஒழிப்பதும், அமெரிக்காவை எதிர்ப்பதுமே உலக அமைதிக்கான ஒரே வழியென பொருளியல், சமூகவியல், அரசியல், இன்னபிற நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. ஏறத்தாழ 600 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் மனிதாபிமானம், என்பது 'அணு' அளவைவிட மோசமாகிப் போனது. ஏதாவது ஒன்றிரண்டு நிகழ்வுகளை வைத்து மட்டும் 'மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை' என நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொண்டால்தான் உண்டு. அதற்குக் கூட நம்மை உயிரோடு வைத்திருக்குமா அமெரிக்கா?

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP