**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அனாதை ஆசிரமத்தில் .......

>> Tuesday, February 20, 2007

போர் முனையிலிருந்த மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

''அம்மா, போர் முனையிலிருந் வீடு திரும்புகிறேன்'' என்றான் மகன். பெற்றோருக்கு மகிழ்ச்சி.

''ஆனால் அம்மா, என்னுடன் என் நண்பன் ஒருவனையும் அழைத்து வருகிறேன். அவனுக்கு, போரில் ஒரு காலும், கையும் போய்விட்டது. அவனுக்கு உறவினர்கள் யாருமில்ல. அதனால், அவனை நம் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ளலாம் என்று நினக்கிறேன். மகன் சொன்னதைக் கேட்டு தாய்க்கு அதிர்ச்சி.

''வேண்டாம்ப்பா. கை, கால் இழந்த ஆளை வைத்து சமாளிப்பது ரொம்பக் கஷ்டம். நம்ம வாழ்க்கை ரொம்ப சிக்கலாகிவிடும். அதனால், நீ மட்டும் வா'' என்று சொன்னாள் தாய்.

மகன் பதிலேதும் பேசாமல் போனை வைத்துவிட்டான். வீடு திரும்பவும் இல்லை. பெற்றோருக்குக் குழப்பம். மகனுக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தார்கள். அவனும், அவன் நண்பனும் ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. பெற்றோர் அங்கே சென்றார்கள்.

அங்கே... மகனுக்கும் அதே நிலை. அவனுக்கும் ஒரு காலும், கையும் இல்ல.

''என் நண்பனைப் பராமரிக்க கஷ்டம் என்றீர்கள். நானும் அப்படித்தான் இருக்கிறேன். அதனால் என்னயும் பார்த்துக் கொள்வதற்கு கஷ்டப்படுவீர்கள். உங்களுக்கு ஏன் கஷ்டம் என்று அனாதை இல்லத்தில் சேர்ந்துவிட்டோம்'' என்றான் மகன்.

பெற்றோர் கலங்கிவிட்டார்கள்.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP