**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அட ஆன்டிபயாடிக்கில் இத்தனை பிரச்னை இருக்கிறதா?

>> Thursday, February 15, 2007

அட ஆன்டிபயாடிக்கில் இத்தனை பிரச்னை இருக்கிறதா?

நமக்கு என்ன பிரச்னை என்றாலும் சாப்பிடும் மருந்துகளின் லிஸ்டில் எப்படியும் ஒரு ஆன்டிபயாடிக் மருந்து வந்துவிடும்.

காய்ச்சல், மூக்குச்சளி, தொண்டைப்புண், லேசான வெட்டுக்காயம் என சின்ன விஷயங்களில் இருந்து பெரிய ஆபரேஷன், மூளைக் காய்ச்சல் என பெரிய பெரிய நோய்களுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சட் சட்டென்று பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுக்க நோய்க்கிருமிகளத் தாக்கி அழித்து பல மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்றி வைப்பதாகக் கருதப்படும்

இந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் பாகாப்பானதா? அபாயம் எதுவும் இல்லையா?

இந்த ஆன்டிபயாடிக் மருந்துகள், 1900லிருந்தான் மருத்துவ உலகை ஆட்சி செய்ய ஆரம்பித்தன. பல பெரிய பெரிய நோய்களில் உலக மக்கள் தத்தளித்தபோது, கடவுளின் கரம் போல் வந்து கண்ணீர் துடைத்த கதைகள் பல ஆன்டிபயாடிக் மருந்களுக்கு உண்டு. அப்போதிலிருந்து மருத்துவர்கள் இவற்றை எதற்கெடுத்தாலும் நம்ப ஆரம்பித்தார்கள்.

சாதாரண மூக்குச் சளி, FLU புளு போன்ற காய்ச்சல் வருவதற்குக் காரணம், வைரஸ்கள் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியாக்களை மட்டுமே தாக்கி அழிக்கக் கூடியவை. ஆனால், இந்த நிலைகளுக்குக் கூட மருத்துவர்கள் ஒரு ஆன்டிபயாடிக்கை எழுதி விடுகிறார்கள். காரணம், கூடவே என்ன இருந்தாலும் ஆன்டிபயாடிக் பார்த்துக்கொள்ளும் என்று ஏறக்குறைய அனைத்து மருத்துவர்களுமே நம்புகிறார்கள்.

ஆனால், இவை எந்தத் தேவையற்ற விளைவுகளயும் ஏற்படுத்துவது இல்லையா? என்றால், இல்லை. ஏற்படுத்துகின்றன என்பதுதான் உண்மை.

சிலருக்கு அலர்ஜி, நம் உடம்பில் நண்பனாக வாழுகிற பாக்டீரியாக்களயும் தாக்கி அழித்து வருகிறது கண்மூடித்தனம், அடிக்கடி பயன்படுத்துவதால் சில அடங்காத கிருமிகள் ஆன்டிபயாடிகால் சாகாமல் அதைச் சாப்பிட்டு உயிர் வாழத் தொடங்குகிற நிலை, தேவையில்லாமல் நம் உடலின் நோய் எதிர்க்கிற சிஸ்டத்தை இயங்கவிடாமல் தடுப்பது, இவை எல்லாம் தவிர மொத்தமாக உடலுக்குள் ஒரு சோர்வையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதை க்ரானிக் பெட்டிக் சின்ட்ரோம் என்கிறார்கள்.

அட ஆன்டிபயாடிக்கில் இத்தனை பிரச்னை இருக்கிறதா? என்ன செய்வது என்கிறீர்களா?

தடுப்பு நடவடிக்ககைளும், தேவையில்லாமல் எடுத்ததற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் தான் நல்ல வழி.

நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளே நுழையாமல் இருக்க உதவும் தடுப்பு நடவடிக்கைகள்.

சுத்தம்.

அடிக்கடி கைகள கழுவிக் கொள்வது.

நல்ல தண்ணீர்.

வைட்டமின்கள் நிறைந்த நல்ல உணவு (காய்கறிகள், பழங்கள்).

எளிய உடற்பயிற்சிகள்.

சரி. நோய் தொற்றி விட்ட. என்ன செய்வது?

சாப்பாட்டை குறையுங்கள்.

நிறைய திரவ உணவுகள எடுத்துக் கொள்ளுங்கள்.

நல்ல ஓய்வு.

வீட்டை நல்ல கிருமி நாசினி போட்டுத் துடைப்பது.

இதையெல்லாம் தாண்டிய பிறகுதான் ஆன்டிபயாடிக்கிற்குச் செல்லலாம்.

முதலில் கேட்க, பழக சிரமமாக இருக்கும். ஆனால், மருந்துகள் எப்போதுமே உடலுக்கு நஞ்சு, கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள்.

நோய்க் கிருமிகள் பற்றிய இரண்டு ஆய்வுக் கோட்பாடுகள்.

டாக்டர் பாஸ்டர்:

நோய்க்கு காரணம் கிருமிகள்.

டாக்டர் பாச்சம்ப்:

நோய்க்கு காரணம் உடல் எதிர்ப்பு சக்தி குறைவதுதான்.

அலோபதி முதல் கோட்பாட்டையும், மற்ற மருத்துவ முறைகள் இரண்டாவது கோட்பாட்டையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால், டாக்டர் பாஸ்டர் மரணமடையும் போது சொன்னார்.

எல்லாம் உடல் எதிர்ப்பு சக்திதான், கிருமிகள் NOTHING.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP