**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

'உமர்தம்பி'யை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகரிக்க.

>> Tuesday, May 4, 2010


தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை, தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய உமர் தம்பி அவர்களது பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.

கொலோனில் நடைபெற்ற உத்தமம் தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற யான் அங்கு சென்றிருந்தேன். தமிழ்மண நிர்வாகிகளில் ஓருவரான திரு நா. கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் வலைவாசல், திரட்டிகள், மற்றும் விக்கிபீடியா அரங்கிற்கு உமர் தம்பி அவர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள்.

ஐரோப்பாவில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில், நமக்கு அறிமுகமானவர், பழகியவர், தமிழ் தட்டச்சு, தமிழ் இணைய நுட்பங்களை கற்றுத்தந்தவரது பெயரை அரங்கிற்கு சூட்டியதை கண்டு அளவிலாத மகிழ்ச்சியடைந்தேன்.-- மாஹிர், சென்னை.

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?

உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:

www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி

http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17
http://www.pudhucherry.com/pages/umar.html
http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131

www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html

http://www.islamkalvi.com/portal/?p=77

http://ezilnila.com/archives/803
http://ezilnila.com/2009/07/umarthambi/

http://tamilnirubar.org/?p=9958

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm

http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm

http://www.tmpolitics.net/reader/

http://www.desikan.com/blogcms/?item=theene-eot

குழுமங்கள்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0

http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633

http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one

http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e
வலைப்பூக்கள்:

http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html

http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html

http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html

http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html


நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்

http://www.pudhucherry.com/text/THENEE.eot

http://www.pudhucherry.com/text/VAIGAIU0.eot

உமர் ஒருங்குறி எழுதி

(AWC Phonetic Tamil Unicode Writer)

http://www.pudhucherry.com/pages/UmarUni.html

உமர் ஓடை எழுதி

http://www.pudhucherry.com/pages/umarrss.html

ஓரளவு மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேட்ல்களுக்கு உதவியாக இருக்கும்.

நன்றி சகோதரர். அதிரைக்காரன்http://vettippechu.blogspot.com/2010/04/blog-post.html
------------------------

தமிழ்மணம் தளத்தில் உமர்தம்பி புகைப்படத்துடன் இந்த வலைப்பதிவை முதல் பக்கத்தில் வருமாறு செய்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி.

கொலோனில் நடைபெற்ற உத்தமம் தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்ற யான் அங்கு சென்றிருந்தேன். தமிழ்மண நிர்வாகிகளில் ஓருவரான திரு நா. கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் வலைவாசல், திரட்டிகள், மற்றும் விக்கிபீடியா அரங்கிற்கு உமர் தம்பி அவர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள்.

ஐரோப்பாவில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில், நமக்கு அறிமுகமானவர், பழகியவர், தமிழ் தட்டச்சு, தமிழ் இணைய நுட்பங்களை கற்றுத்தந்தவரது பெயரை அரங்கிற்கு சூட்டியதை கண்டு அளவிலாத மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ் இணைய வளர்ச்சியில் தமிழ்மணத்தின் அர்ப்பணிப்பு (தமிழூற்று என்ற திரட்டி உருவாக்கி, நிர்வகித்த அடிப்படையில் அனுபவபூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் உணர்ந்தது) போன்று அன்றைய தமிழ் இணைய வலைப்பக்கங்களில் இருந்த யுனிகோடு பிரச்சினைக்கு தேனீ என்னும் ஓருங்குறி எழுத்துரு உருவாக்கி தந்தார்.

தமிழ் வலைப்பதிவுகள் ஒருங்குறி பிரச்சினையின்றி சரிவர தெரிய தமிழ் சமூகத்திற்கு உதவியவர்.

அன்றைய கட்டத்தில் தேனீ இயங்கு எழுத்துரு (thenee.eot) 90 சதவீத வலைப்பதிவுகளில், தமிழ் இணையதளங்களில் பங்காற்றியதாக பிரபல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். (உமர் தம்பி, thenee.eot என்று தேடுபொறிகளில் தேடுக)

தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை, தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய உமர் தம்பி அவர்களது பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.

உமர்தம்பி அவர்களுடன் நெருங்கிப் பழகிய தமிழ் கணிமையாளர்கள், உத்தமம் குழுவினர் இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாஹிர், சென்னை

5 comments:

தாஜுதீன் (THAJUDEEN ) May 4, 2010 at 10:59 PM  

அதிரை உமர்தம்பிக்காக ஆதரவு குரல் தரும் தங்களுக்கு மிக்க நன்றி.உமருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது நம் நம்பிக்கை. இன்ஸா அல்லாஹ்

Adirai Media May 5, 2010 at 3:04 AM  

அதிரை உம‌ர்த்த‌ம்பி காக்காவின் சேவையையும் ,அவ‌ர‌து பெய்ரில் விருது வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்ற‌ கோரிக்க‌யையும் த‌ன‌து இணைய‌த்தின் வாயிலாக‌ உர‌க்க‌ சொன்ன‌ உங்க‌ள் உய‌ரிய‌ என்ன‌த்துக்கு இணைய‌த்த‌மிழ் ஆர்வ‌ல‌ர்க‌ளின் நெஞ்சார்ந்த‌ ந‌ன்றி .

சசிகுமார் May 5, 2010 at 12:51 PM  

கண்டிப்பாக அவரின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous June 15, 2010 at 5:13 PM  

அதிரைகும் அதிரை வாழ் மக்களுக்கும் மகிழ்சிகரமான செய்தி உமர் தம்பி அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

Shameed June 15, 2010 at 5:16 PM  

அதிரைகும் அதிரை வாழ் மக்களுக்கும் மகிழ்சிகரமான செய்தி உமர் தம்பி அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP