**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

நின்று கொண்டே இருப்பவரா? படியுங்கள்

>> Monday, December 31, 2007

மனித இதயம் இடது, வலது என இரண்டு பகுதிகளைக் கொண்டது. சுத்த இரத்தத்தை இடது பக்க இதயம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தக் குழாய்கள் மூலம் அனுப்புகிறது. இக்குழாய்கள் ஆர்ட்டரிகள் எனப்படும் (


தமனிகள்).வலது பக்க இதயத்துக்கு அசுத்த ரத்தம் சிரைகள் மூலம் கொண்டு வரப்பட்டு நுரையீரலுக்கு அனுப்பப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. இந்தச் சுத்த ரத்தம் நுரையீரல்களிலிருந்து இதயத்தின் இடது பக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டு உடலில் பாகங்களுக்குத் தமனிகள் மூலம் அனுப்பப்படும்.இந்தச் சுழற்சி எல்லாருக்கும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

மனித உடம்பின் கால்களில் தமனிகளும் சிரைகளும் இருக்கின்றன. தூய ரத்தமும் தூய்மையற்ற ரத்தமும் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. கால்களில் தோலுக்கு நெருக்கமாக சிறப்பு சிரைகள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. ஒரு வழிப் பாதையாக ரத்தம் ஓடும் வகையில் தடுப்பான்கள் (வால்வுகள்) உள்ளன. அசுத்த ரத்தம் இதயத்தின் வலது பக்கத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் அப்படிச் செல்லும் வகை யில் தடுப்பான்கள் அமைந்துள்ளன.

எதிர்ப் பக்கத்தில் ரத்த ஓட்டம் தடுக்கப்பட்டுள்ளது.நீண்ட நேரம் நின்று கொண்டே இருக்கும் போக் குவரத்துக் காவலர்கள், பேருந்து நடத்துனர்கள், இயந்திரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்க்கு இந்தச் சிரைகள் பழுதுபட்டு விடுகின்றன

பாதிக்கப்பட்டவுடன் ரத்த செல்லும் பாதை மாறி எதிர்த் திசையில் ரத்த ஓட்டம் நிகழ் கிறது.இதயத்தின் வலது பகுதிக்குச் செல்ல வேண்டிய அசுத்த ரத்தம் இந்தச் சிறப்பு சிரைகளுக்குள் சென்று விடுகிறது.

தொடர்ந்து சென்று அங்கேயே தங்கி, சிரைகள் புடைத்தும், விரிந்தும் கால்களில்தெரிகின் றன. இந்த வகைப் பாதிப்புக்கு சுருள் சிரை என்று பெயர்.50 முதல் 55 விழுக்காடு வரை பெண்களுக்கும் 40 முதல் 45 விழுக்காடு வரை ஆண்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.

தொடர்ந்து நின்று கொண்டேயிருந்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வலி ஏற்படும். பகலிலும் மாலையிலும் இரவிலும் அதிகத் துன்பம் தரும்.

காலையில் சுமாராக இருக்கும்.இதனால் கால்களில் தோல் கறுப்பாகவும், புள்ளிகள் நிறைந்ததாகவும் மாறி விடும். அரிப்பு ஏற்பட்டுப் புண்களும் ஏற்படும். ஆனாலும் ஆபத்தற்ற நிலைதான்.இதைக் குணப்படுத்திட மருந்து எதுவும் கிடையாது. அறுவைச் சிகிச்சை மூலமோ, லேசர் சிகிச்சை மூலமே பாதிக்கப்பட்டப் பகுதிகளை அப்புறப்படுத்தலாம்.

SOURCE: INTERNET. .மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

மணலால் கயிறுதான் திரிக்க முடியாது. கண்ணாடி தயாரிக்கலாம்!

மணலால் கயிறுதான் திரிக்க முடியாது. கண்ணாடி தயாரிக்கலாம்!
கண்ணாடி ஒரு விந்தையான பொருள். எந்த வடிவத்திலும் அதைத் தயாரிக்கலாம் என்பதே விந்தைதானே!

இது மணலால் செய்யப்படுகிறது என்பது தெரியுமா? கிறிஸ்டலின் சிலிகா எனும் பொருள் நூற்றுக்கு நூறு அடங்கிய மணலால்தான் கண்ணாடி தயாரிக்கப்படுகிறது. இந்த வகை மணல் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கிடைக்கிறது. மணலால் கயிறுதான் திரிக்க முடியாது கண்ணாடி தயாரிக்கலாம்!

மெசபடாமியாவில்தான் முதன் முதலில் கண்ணாடி தயாரிக்கப்பட்டது. கண்ணாடியால் ஆன சிறுமணிகள் (மணிமாலையில் உள்ளவை) முத்திரைகள் கட்டடங்களை அழகுபட அமைக்கும் அலங்காரப் பொருள்கள் கண்ணாடியால் செய்யப்பட்டன.

கிறித்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே இவை செய்யப்பட்டன. இதே கால கட்டத்தில் அமெரிக்காவின் பூர்வகுடிகள் கண்ணாடியைத் தயாரித்திருக்கிறார்கள்.

கண்ணாடியின் இயற்கையான நிறம் பச்சை, நீலம் கலந்த பச்சை மட்டுமே!

மணலில் மறைந்து கலந்துள்ள இரும்புக் சத்தினால் விளைந்த வண்ணம் இது! கண்ணாடி தயாரிப்பாளர்கள் பல வண்ணங்களில் தயாரிக்கின்றார்கள் உலோகக் கலவையையும் கனிமப் பொருள்களையும் சேர்த்துச் செய்வதால் சிவப்பு, பச்சை, நீலம் போன்ற வண்ணங்கள் கிடைக்கின்றன.

எகிப்து நாட்டில் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பே கண்ணாடி பயன்படத் தொடங்கியது. நீலமணிகள் கண்ணாடியால் உருவாக்கப்பட்டன. மந்திர சக்தி உடையவை எனப் பிரச்சாரம் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டன.

ரோம நாகரிக காலத்திலும், °கான்டி நேவியன் நாடுகளிலும் (நார்வே, சுவீடன் போன்ற) பிரிட்டிஷ் தீவுகளிலும் சீனாவிலும்கூட கண்ணாடிகள் உருவாக்கப்பட்டன. வெனிஸ் நகரத்தின் அருகில் டார்செல்லோ தீவில் ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் கண்ணாடிப் பொருள்கள் செய்யப்பட்டன.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதிய தொழில் நுட்பம் புகுந்தது. வெள்ளைக் கூழாங் கற்களையும் எரித்த செடி,கொடிகளையும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சோடா கண்ணாடி வடக்கு அய்ரோப்பிய நாடுகளில் உருவானது.

நடுக்கடல் நாடுகளில் தயாரிக்கப்படும் (போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, பிரான்சு போன்றவை) கண்ணாடிகளைவிட வட அய்ரோப்பிய நாட்டுக் கண்ணாடிகள் வேறுபட்டு இருக்கின்றன.

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடங்களில் கண்ணாடி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வண்ணக் கண்ணாடி-கள் ஒரு பக்கம் இருந்தாலும் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட கண்ணாடிகள் சாளரங்களில் பயன்படுத்தப்படத் தொடங்கின. இவை கட்டடங்களின் அழகைப் பெரிதும் கூட்டுகின்றன. சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம் ஒரு எடுத்துக்காட்டு. இது போலப் பல கட்டடங்களைக் காட்ட முடியும்.

நம் நாட்டவர், எந்தக் காலத்தில் கண்ணாடி செய்யக் கற்றுக் கொண்டனர்?
SOURCE: INTERNET. மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP