**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கோபத்திற்கு மருந்து!

>> Friday, February 2, 2007

கோபத்திற்கு மருந்து!

சரிவர ஒரு வேலையை முடிக்க, அதை நீயே செய்.
மனிதர்களைவிட மரங்களே நேராய் நிமிர்ந்து வளர்கின்றது
வீழ்ந்து கிடப்பதே வெட்கம். வீழ்வது வெட்கமல்ல.

கோபத்திற்குச் சிறந்த மருந்து தாமதித்தல்

மரணம் வருமுன்னே ஒரு கோழை பலமுறை இறந்து விடுகிறான்.

வாய் பொய் பேசலாம். முகம் பொய் பேசாது.

சகோதரர்களாக இருங்கள்; ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யும் குற்றத்திற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை மட்டும் காரணமல்ல.

உண்மையைச் சொல்வதுதான் உலகிலேயே மிகப் பெரிய நகைச்சுவை.

மிகவும் அபாயகரமான சமயங்கள் வெற்றியின் போதே வரும்.

உண்மையான விமர்சனம்
நீ இல்லாத இடத்தில் உன்னைப்பற்றி பேசப்படுவதே விமர்சனம்.
எல்லாம் வேடிக்கைதான்... உனக்கு நடக்காதவரை.

நெருங்கிப் பழகும்போது வெகு சிலரே மதிப்பிற்குரியவர்கள்.
நாவில் எலும்புகள் இல்லை. ஆனால் அது எலும்புகளை நொறுக்கும்
.
புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் பிடிவாதம் பிடிப்பான்

எல்லோரிடமும் கற்பவனே சிறந்த அறிவாளி.
இரண்டு முயல்களை விரட்டினால் ஒன்றைக்கூட பிடிக்க முடியாது
.
தன்னம்பிக்கை இழந்தவன் எல்லாமே இழக்கிறான்.
ஒப்பிட்டுப் பார்க்கும்போது எதிரியும் நண்பனாகிறான்.
பேராசை முடிகிறபோது மகிழ்ச்சி தொடங்குகிறது.


மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP