**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

டென்ஷன்-படபடப்பு மன இறுக்கம்

>> Wednesday, January 31, 2007

டென்ஷன்-படபடப்பு மன இறுக்கம்

மருந்து மாத்திரயில்லாமல் டென்ஷன் - படபடப்பு - மன இறுக்கம் - அமைதியின்மையிலிருந்து விடுபட வாழ்க்கை முறையை எப்படி மாற்றிக் கொள்வது ?

வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினரோடு சுற்றுலா தலங்களுக்கோ வெளியிடங்களுக்கோ சென்று வாருங்கள்.. இயல்பாகவே புதிய இடம் புதிய மனிதர்கள் புதிய அனுபவம் மனதிற்கு இதமான விஷயம்.

நிஜத்தில் வாழ பழகுங்கள் நேற்று நடந்தவைகளையோ நாளை நடக்க இருப்பவகளையோ நினத்து மனதிற்குள் படபடப்பை கூட்டிக் கொள்ளாதீர்கள். இப்போ இந்த நிமிடம் தான் நிஜம் என்கிற மனநிலையோடு இந்த நிமிடத்தை ரசிக்கப் பழகுங்கள் மனசு ரம்மியமாகும்
.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வேலைக்கு புறப்படும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தாமதமாக புறப்படுவதால் ஒவ்வொரு நிமிடமும் தேவையில்லாமல் டென்ஷன் அதிகரிக்கும். அதனால் தேவையில்லாத வியாதிகளுக்கு நீங்கள் அனுமதி கொடுத்துவிடுவீர்கள்.

வாட்ச் கட்டுவதை இரத்தக் கொதிப்பு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. அடிக்கடி நேரம் பார்த்து டென்ஷன் ஆவதை இது தவிர்க்கும்.

நல்ல காற்றோட்டமான வெளிச்சமான வீடுகளை தேர்ந்தெடுங்கள். நாம் வாழும் வீடு கூட சில சமயங்களில் தேவையில்லாமல் மனது இறுக்கத்தை தரும்.

இரத்தக்கொதிப்பு சர்க்கரை வந்த பிறகு முறையான உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அதே போல தவறாமல் பரிசோதனைய மேற்கொள்ளுங்கள்.

திருமணமானவர்கள் என்றால் முறையான செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுங்கள். உடலுறவின் போது பீட்டா எண்டார்பீன் உடலுக்குள் சுரப்பதால் மன இறுக்கம் குறையும் உடல் உற்சாகமடையும்.

எரிச்சலான விஷயங்களிலும் எரிச்சலூட்டும் மனிதர்களிடமிருநது;ம் விலகி இருங்கள். அது உங்கள் மனதை இறுக்கத்திலிருந்து விலக்கி வைக்கும்
.
கர்ப்பிணி பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்களால் மன இறுக்கம் மன அழுத்தம் உண்டாகலாம். அதற்கு சுயமாக மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது

.prozac. zoloft. paxil போன்ற மருந்களை கர்ப்பகாலத்தின் நடுப்பகுதியில் பயன்படுத்தினால் கருவில் உள்ள குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு உண்டாகும் வாய்ப்புள்ளது பல்மனரி ஹெபர் டென்சன் என்பது இந்த வியாதியின் பெயர்.

இந்த நோய் ஆயிரத்தில் ஒன்று அல்ல இரண்டு குழந்தைக்கு மட்டுமே வரும் ஆனாலும் இது மிகக் கொடிய தன்மையுள்ளது. இந்நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பத்தில் ஒன்று இறந்துவிடுமாம். மிதமான பாதிப்பு ஏற்பட்டால் காது கேட்கும் திறன் பாதிப்பு மூளைத் திறன் பாதிப்பு போன்ற ஆபத்துக்கள் உருவாகும்.

அதனால் முறையான மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகள் மட்டுமே கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்த வேண்டும் என்கிறது ஒரு இணய தளச் செய்தி.

மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

மேலும் படிக்க... Read more...

ஆனந்தத்தைக் கூலியாகப் பெற....

>> Tuesday, January 30, 2007

கரீம் :: ''ஜூனியர் டைப்பிஸ்டா உன்ன அப்பாய்ன்ட் பண்ணியிருக்கேன்மா... துவக்கத்தில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் தரேன். மூணு மாசம் கழித்து, 150 ரூபாய் தரேன். அப்புறம் எப்போதிலிருந்து வேலைக்கு வரமா?''

ஜமீலா: : ''மூணு மாசம் கழித்து வரேன்.''

எல்லோருக்கும் சிம்மாசனத்தில் சும்மா அமர ஆசை.
உழைக்காமல் ஊதியம் பெறவே மனமும் ஆர்வங்காட்டும்.


வெளியுலக வியாபாரத்தில்..... குறைவாக உழைத்து நிறைய சாதிப்பவர் சாதனையாளர்.

ஆனால், இதே செயலை உள்ளுலகில் செய்தால் அவர் வேதனயாளர்.

ஆனந்தத்தைக் கூலியாகப் பெற நீங்கள் படிப்படியாக முன்னேறியாக வேண்டும். நேரடியாக ஆனந்தத்தில் குதித்துவிட முடியாது.

மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

மேலும் படிக்க... Read more...

குஜராத்தி வியாபார ஸ்டைல்

>> Sunday, January 28, 2007

குடும்ப பாசத்தில் குஜராத்தி வியாபாரம்.

எந்த ஒரு விஷயத்திற்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. அணுகுமுறை என்று வைத்துக் கொள்ளலாம்.

குஜராத்திகள் இதில் ஒரு தனி இலக்கணத்தையே உண்டு பண்ணி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் மற்றவர்களைவிட வியாபாரத்தில் வெற்றிகரமாக விளங்குகறார்கள்.

என் கேள்விக்கென்ன பதில்?

ஒருவன் ஒரு காரியம் செய்கிறான் என்றால், குஜராத்திக்காரன் சிந்தனையில் இரண்டு கேள்விகள் உருவாகும்.

``அவன் ஏன் அந்தக் காரியத்தைச் செய்கிறான். அதனால் நமக்கென்ன பயன்?’’

ஒரு குஜராத்திக்காரர் கடைக்கு வியாபாரத்திற்குப் போனால், அவர் தெரிந்து கொள்ள விரும்பும் பதில்கள் நான்கு.
``அந்தப் பொருள் எவ்வளவு அதிகமாகக் கிடைக்கும்? எவ்வளவு தரமானதாகக் கிடைக்கும்? விலை எவ்வளவு மலிவாக இருக்கும்? இந்தப் பொருளைக் கடனில் வாங்க முடியுமா?’’

மேலே கண்டபடி மற்றவர்களின் கடைக்குப் போகும்போது கேட்பவர்கள் இவர்களே (குஜராத்திகள்) வியாபாரம் செய்யும்போது வரும் வாடிக்கையாளர்களைக் கவனிக்கும் விதம் இருக்கிறதே அதற்கு ஈடு இணை இல்லை

ஆகா! இதுவல்லவா வியாபாரம்?
ஆமதாபாத்தில் ஒரு துணிக்கடை முதலாளி குஜராத்தி கல்லாப் பெட்டியின் முன் அமர்ந்திருக்கிறார். கடையின் உள்ளே நாலைந்து பையன்கள். வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ``சும்மா உள்ளே போய் பார்க்கலாம்’’ என்ற எண்ணத்தில் உள்ளே நுழைகிறார்.

இவர் உள்ளே நுழைந்ததும் கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளி கடைப் பையனிடம் உரத்த குரலில் சொன்னார்: ``டேய்! என் சகோதரர் வந்திருக்கிறார். போய் சீக்கிரம் காபி வாங்கி வா’’ ``அடடே! அதெல்லாம் வேண்டாங்க! நான் சும்மா... என்று வந்தவர் சொல்லிக் கொண்டிருந்தபோது கடைக்காரர் குறிப்பிட்டார். `அப்போ காபி வேணாமா! பரவாயில்லை. `டேய்! கூல் டிரிங் வாங்கி வா’’ சொல்லி முடிப்பதற்குள் கடைப் பையன் வாங்கிவரப் பறந்தே விட்டான்.

வந்தவரும் வேறு வழியின்றி உள்ளே சென்று துணிகளைப் பார்க்கத் தொடங்கினார். வந்தவரின் கண் போன பக்கமெல்லாம் பேண்ட், சர்ட் துணிகளை எடுத்துப் போட்டார்கள் பையன்கள்.

சும்மா பார்க்க வந்தவருக்கு வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம். அப்படி ஓர் உபச்சாரம். அன்புச் சிறையில் அகப்பட்டு விட்ட கைதிபோல ஆகிவிட்டார்.

துணிகளை எடுத்துக் கொண்டு அவர் பில் கொடுக்க வந்தபோது ``என் பாபிக்கு (அண்ணிக்கு) ஏதேனும் வாங்கலையோ?’’ பாசம் ததும்ப குஜராத்தி முதலாளி கேட்டார்.

அவர் அண்ணி முறை கொண்டாடியது துணி வாங்கியவரின் மனைவியை. இவருக்கும் வாங்கும் ஆசை ஏற்பட்டது. ``ஏதாவது லேட்டஸ்ட் டிசைன் இருக்கிறதா?’’ என்று இழுத்தார்.

``உங்க பாபிக்கு (அதாவது முதலாளியின் மனைவிக்கு) ஒரு லேட்டஸ்ட் டிசைன் வாங்கி வச்சிருக்கேன். அதை என் அண்ணி எடுத்துக்கட்டும். நான் வேறு வாங்கிக்கறேன்’’ என்று எடுத்துக்காட்டிய முதலாளி அதை விற்றும் விட்டார்.

வேடிக்கை பார்க்க வந்தவர் வெளியே வந்தபோது அவர் கையில் ஒரு பெரிய பார்சல்.

இப்படி குடும்பப் பாசம் காட்டியே வியாபாரத்தில் வெற்றி பெற்று வருபவர்கள் குஜராத்திகள்.

(நன்றி: தமிழ் தொழில் உலகம் சனவரி 2007

மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

மேலும் படிக்க... Read more...

முந்திரிக் கொட்டை மனிதர்கள்!

>> Thursday, January 25, 2007

விசித்திரமான முந்திரிக் கொட்டை மனிதர்கள்!

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்று நினைக்கும் நல்லவர்கள் பலர் உண்டு.
அதுபோலவே, மற்றவர்களுக்கு உதவி செய்தால், அவர்களும், உலகமும் நம்மை நல்லவர்கள் என்று எண்ணி புகழைத் தங்கள் தலைமீது கொட்டும் என எண்ணி அதற்காக நல்லவர்கள் பாத்திரங்களை சிறப்பாக ஏற்று ந(டி)டப்பவர்களும் உண்டு.

தான் ஒரு உலக அறிவுக்களஞ்சியம்; தனது அனுபவம் எவருக்கும் இல்லை. எனவே, எவருக்கும் எப்போதும் அறிவுரையை இலவசமாக வாரி வழங்கிடும் வள்ளல் ஆகலாம் என்ற எண்ணத்துடன் `அறிவுரைச் சந்தை’ நடத்துவோர் பலருண்டு!

எவர்க்கும் உதவுமுன், அவர்கள் ஏன் நம்மை நாடி வந்தார்கள் என்பதைக் கொஞ்சம் நின்று நிதானித்துத் தெளிவு பெறவேண்டும் நாம்.

தங்களது மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தின் சுமையை இறக்கி வைக்க சுமை தாங்கிகளைத் தேடி சற்று இளைப்பாறி விட்டுச் செல்லும் வழிப் போக்கர்களையும் வாழ்க்கையில் நாம் சந்தித்துக் கொண்டிருப்பவர்களே!

`உலகம் பலவிதம்; அதில் இவர் ஒருவிதம்’ என்று புரிந்துகொள்ளும் பட்டறிவு நமக்கு இருந்தால், தராதரத்தை எடை போட்டுப் பார்த்து, செயதக்க செய்து, செயத்தகாமையை செய்யாமல் விட்டு நன்கு நிம்மதியுடன் வாழலாம்!

ஆனால், நம்மில் பலருக்கும் உள்ள சுபாவம், எவர் எந்தப் பிரச்சினை என்று வந்து சொல்லத் தொடங்கினால், உடனே பிரச்சினைக்குத் தீர்வு காணும் மாமருத்துவராக தம்மை எண்ணிக் கொண்டு அறிவுரைகளை அடை மழைபோல் பொழிய ஆரம்பித்துவிடுவார்கள்.

வந்த அவர் தனது பிரச்சினையை, மனதின் சுமையைக் கொட்டிவிட எண்ணி எந்தக் குப்பைத் தொட்டி அழகானது என்று வண்ணத்தைப் பார்த்து - எண்ணத்தைப் பார்க்காமல் கொட்டிவிட்டுச் செல்ல வந்தாரே தவிர, விடை, விளக்கம், தீர்வு காண வரவில்லை என்பதை ஏனோ பலரும் புரிந்துகொள்ள மறுத்து அறிவுரைகளால், வாட்டி வதைத்து விடுகின்றனர்.

இன்னும் சில மேதாவிகளோ, சொல்ல வந்தவர், என்ன சொல்லுகிறார் என்பதைப் பற்றிக்கூட கவலைப்படாது, இவரே இடை விடாமல் பேசிக்கொண்டே இருப்பார்;

`நான் தான் அப்போதே சொன்னேனே’’, ``எனக்கு இப்படித்தான் நடக்கும் என்று முன்கூட்டியே தெரியுமே’’, ``இப்படி அது நடக்காமல் வேறு எப்படிங்க நடக்கும்?’’ -

பிரச்சினையைக் கூற வந்தவர் என்ன கூறுகிறார் என்பதைப் பற்றியே கவலைப்படாது சளசளவென்று பேசி, சொல்ல வந்ததையே சொல்லவிடாமல், முந்திக் கொள்ளும் முந்திரிக் கொட்டை மனிதர்கள் பலர் உண்டு.

நாம் அவர்களில் ஒருவராகிவிடக் கூடாது என்பதை உணரவேண்டும்.

``உலகின் உண்மைப் பிரச்சினைகள் என்னவென்பதை நாம் தெரிந்து வைத்துள்ளவர்களாகவே இருப்பது நல்லது
.
அப்படித் தெரிந்துகொள்வதில் மனதை அழுத்தமாக வைத்து புரிந்துகொண்டால், யாருக்கு எப்படி உதவுவது; யாருக்கு உதவி செய்யவேண்டி யதில்லை என்பதைத்தானே ஒவ்வொருவம் அறிந்துகொள்ள முடியும்’’

`நான் சாப்பிட்ட மருந்து மூலம் குணம் அடைந்துவிட்டேன்; அதனால் நீங்கள் அதையே சாப்பிடுங்கள்’ என்று அவசரப்பட்டு அதிகப் பிரசங்கித்தனமாகச் சொல்லக் கூடாது!

மற்றவர் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு சொல்லாதீர்கள்; உங்கள் பிரச்சினைகளுக்கே உங்களால் எளிதில் விடை காண முடியாத நிலையில், ஏன் இந்த அதிகப்பிரசங்கித்தனம்?

எனவே, காது கொடுத்து கேளுங்கள் பொறுமையாக; தீர்வை தேவைப்பட்டால் மெல்ல ஆய்ந்து தேர்ந்து பல கோணங்களில் எடுத் துரையுங்கள் - அது அவர்களுக்கும் நல்லது, நமக்கும் நல்லது!

மேலும் படிக்க... Read more...

கர்ப்பிணிப் பானை.

>> Tuesday, January 23, 2007

ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை கடனாகக் கேட்டார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரர் அவநம்பிக்கையுடன் கொடுக்க மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார்.அடுத்த நாள் காலையில், ‘உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது. நேற்று பிரசவ வேதனை கண்டு இதை ஈன்றெடுத்தது’ எனச் சொல்லி பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையை பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்தார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை விநோதமாக பட்டாலும் வரவை விட வேண்டாமென்று சும்மா இருந்து விட்டார்.அடுத்த வாரமும் அதே போல் பெரிய பானையை கடன் வாங்கி மறுநாள் காலை பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப் பானையை புதிய குழந்தை பிறந்திருக்கிறது என பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்தார் முல்லா.

அதற்கடுத்த வாரம் முல்லா பானையை கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையை கொடுத்தார் பக்கத்து வீட்டுக்காரர்.அடுத்த நாள் வந்தது.முல்லா பானையைத் திருப்பி கொடுக்கவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் கவலையடைந்தார்.இரண்டு நாட்கள் கழித்து முல்லாவிடம் போய் பானையை திருப்பிக் கேட்டார் அவர்.

“நண்பரே! அது நடக்காது ஏனென்றால் உங்கள் பானை மகப்பேறின் போது மரித்து விட்டது’, என்றார் முல்லா.பக்கத்து வீட்டுக்காரருக்கு கடுங்கோபம் வந்து விட்டது. ‘முட்டாளே! யாரை முட்டாளென்று நீ நினைக்கிறாய். பானை பிரசவத்தில் இறக்காது என்று நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்’ என்று கத்தினார்.‘நண்பரே! பானை கர்ப்பமாகும். அதற்கு பிரசவ வேதனை வரும் என்பது நாம் நமக்குள்ளே முன்னமே ஏற்படுத்திக் கொண்ட விஷயந்தானே. உங்களிடம் அதன் இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறதே’ குறுகிய காலத்தில் மூன்று பிரசவத்திற்குப் பின் உங்கள் பானை உயிரோடில்லாமல் போனது உங்கள் துரதிர்ஷ்டம். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அதை நன்கு போஜித்திருக்க வேண்டும்’ என்று அமைதியாகச் சொன்னார் முல்லா.

இந்த கதைக்குள்ளே புதைந்திருக்கும் ' நீதி ' ?

மேலும் படிக்க... Read more...

சிரியுங்கள் - சிந்தியுங்கள்

பஸ் பயணத்தின்போது, பக்கத்து சீட்காரர் நம் மீது தூங்கி விழுந்து தொல்லை தராமல் இருக்க என்ன வழி?

அந்தத் திருத்த முடியாத ஜென்மங்களைத் தண்டிக்க என்னுடய டெக்னிக்கச் சொல்லட்டுமா? நல்ல தூக்கத்தில் ஆழ்ந்து, நம் மீது டுபுக் டுபுக் என்று பலமுறை விழும் வரை பொறுமை காட்ட வேண்டும். பிறகு, நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்து, அந்தத் தொங்குத் தலையான் நம் மீது ஹை ஸ்பீடில் தலையச் சாய்க்கும் போது, சரேலென்று எழுந்து விட வேண்டும். தொம் என்று விழுந்து, சில சமயம் சீட் கம்பியில் மோதி, வாயில் ஜொள் வழிய அசட்டுச் சிரிப்பு சிரிப்பார் பாருங்கள். ஆஹா, அந்த சுகமே தனி. (கொஞ்ச நேரத்தில் மறுபடி தொங்கலை ஆரம்பித்துவிடுவார் என்பது தொடர்கதை.)
---------------------
மின்னல் சிரிப்பு“மின்னல் அடிக்கும்போதெல்லாம் சர்தார்ஜிகள் சிரிப்பது ஏன்?”“தங்களை யாரோ போட்டோ எடுப்பதாக அவர்கள் நினைப்பதுதான்”
---------------------------
சர்தார்ஜியின் பேக்ஸ்
“ஒரு ஃபேக்ஸ் சர்தார்ஜியிடம் இருந்து வந்திருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?”“சர்தார்ஜி அனுப்பியிருந்தால், அதில் ஸ்டாம்ப் ஒட்டிய அடையாளம் இருக்கும்”
-----------------------------
சர்தார்ஜியின் லீவ் லெட்டர்
‘என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. அவளைப் பார்த்துக் கொள்ள கணவர்கள் என்று வேறு யாரும் இல்லாததால் எனக்கு விடுப்பு வேண்டும்’
------------------------
இரண்டு சர்தார்ஜிகள்
சர்தார்ஜி 1: நேத்து ராத்திரி உங்க வீட்டு ஜன்னல் திறந்திருந்துச்சு. அது வழியா நீயும் உன் பொண்டாட்டியும் செஞ்சதையெல்லாம் பார்த்துட்டேன்சர்தார்ஜி 2: முட்டாள்! நல்லா ஏமாந்தே. நேத்து ராத்திரி நான் வீட்டிலேயே இல்லை, தெரியுமா!

-----------------------
குட்டி சர்தார்ஜியின் வேண்டுதல்
சர்தார்ஜியின் மகன்:- கடவுளே, எப்படியாவது நியூயார்க்கை பஞ்சாபின் தலைநகரமா மாத்திரு...அப்பா சர்தார்ஜி:- ஏண்டா அப்படி வேண்டுறே?சர்தார்ஜியின் மகன்:- ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன்

-----------------------
ஜார்ஜ் புஷ்ஷின் கேள்விநேரம்

ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்புஉரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார்.

ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.“உன் பெயர் என்ன?”“டேவிட்”“கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?’“3 கேள்விகள் கேட்கப்போகிறேன்.

ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே?”அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார்.

இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும்வகுப்புக்குவந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார்.

வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.“ராபர்ட்”“உன் கேள்விகள் என்ன?”“5 கேள்விகள் கேட்கப் போகிறேன்.

ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே? வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது? முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?”
-----------------------------

பன்றி ஜார்ஜ்

புஷ் ஜார்ஜ் புஷ் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்தை நோக்கி காரில் விரைந்து கொண்டிருந்தார். கார் ஒரு பன்றிப் பண்னையை நெருங்கும்போது, வெள்ளைப் பன்றி ஒன்று எதிர்பாராத விதமாக காரில் அடிபட்டு இறந்துவிட்டது. ஜார்ஜ் புஷ் டிரைவரிடம், “உள்ளே சென்று நடந்ததை பண்ணை உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உடனே வா” என்று பணித்தார். அவ்வாறே உள்ளே சென்ற டிரைவர் திரும்பி வரும்போது, கை நிறைய பணமும், நிறைய பரிசுப் பொருட்களும் கொண்டுவந்தார்.

“அவரது பன்றியைக் கொன்றதற்காக அவர் கோபிக்கவில்லையா? அவர் பரிசு தருமளவிற்கு என்ன சமாதானம் கூறினாய்?” என்று கேட்டார்.

அதற்கு டிரைவர் சொன்ன பதில்: “நான் ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர். அந்தப் பன்றியை (ஜார்ஜ் புஷ்ஷை) இப்போதுதான் கார் ஓட்டி கொன்றேன் எனக் கூறினேன்.”
-------------------------------

ஜார்ஜ் புஷ்சுக்கு கூட அவ்வளவு பாதுகாப்பு இல்லை. ஆனால், தமிழகத்தில் தான் சிலர் (ஜெயலலிதா?) பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை விட்டு விலகி நிற்கின்றனர். இது வெட்கக்கேடானது. ஆனால், எனக்கு ஏ.கே47 தேவையில்லை. மக்களே என் காவலர்கள் " (சசியின் கணவர் நடராஜன்) ---------------------------
வெட்டி(ள்ளி)த் திரை விமர்சனம்

“நீ ஆம்பளையா?”னு கேட்டுட்டா கோபத்தில் நிரூபிக்கிறேன் பேர்வழினு பொண்ணைக் கெடுத்துப்புட்டு, “ஆடத் தெரியுமான்னா ஆடிக்காட்டலாம்; பாடத் தெரியுமான்னா பாடிக் காட்டலாம்; ஆம்பளையான்னு கேட்டுட்டா. அதான் செஞ்சு காமிச்சுட்டு வர்றேன்’னு வீரவசனம் பேசுற பயலுகளைப் பிடிச்சு முதல்ல “குடும்ப வன்முறை” சீச்சீ... குடும்பமே இல்லை... “பாலியல் வன்முறை” சட்டத்தில உள்ள பிடிச்சுப் போடுறதை விட்டுட்டு ஹீரோவாக் காட்டினா, நாட்டில அப்புறம் கற்பழிப்பு, ஈவ் டீசிங் நடக்காமல் வேறென்ன நடக்கும்?
----------------------------
மெட்ராஸ் சிட்டியில ரத்த தானம் செய்யும் பழக்கம் உண்டா?

யாரைப் பாத்து இன்னா வார்த்தை கேட்டுப்புட்ட நைனா? பிளட்டு குடுக்காம இந்த மெட்ராஸ் சிட்டியில ஒரு சோமாரி லிவிங் ஆக முடியுமா? புரியாத கொயந்த பைய்யனா கீறியே? தெனோம் ராவு ஆறு மணி அடிச்சியாங்காட்டியும் இங்க பிளட்டு டொனேசனு ஷ்டார்ட் ஆயுடும் கண்ணு. கூவம் காவா ஏரியா கொசுங்கோ சும்மா சால்பேட்ட ரவுடிங்கோ கணுக்கா வூட்டுக்குள்ளார பூந்கினு, லிட்டரு கணக்குல ரத்தத்தை உறிஞ்சிக்கினு போய்க்கினே இருக்கும். அஆங்! நீ மல்லாக்கா பட்த்துக்கினு ரத்ததான தியாகி போல அப்பீட் ஆவணும் தெர்ஞ்சுகினியா?
---------------------------
கேள்வி: திமுக கதை முடியப் போகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளாரே? பதில்: பாவம், ஆல மரத்தடிக்கு வந்து அரசியல் ஜோதிடராகி விட்டார்! அவரே, அவர் பார்த்த ஜோதிடமே அவரைக் கைவிட்டு விட்ட பிறகு ஏன் இந்த துர் ஆசை! ஆசை வெட்கமறியாது!!

மேலும் படிக்க... Read more...

சதாம் உசேனுக்கு சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரை காஜாமொய்தீன்.


சதாம் உசேனுக்கு சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரை காஜாமொய்தீன்.

மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க.சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன்

'மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...' கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்!

சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனயில் தனது சமயல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார்.

''நான் சதாம் மாளிகையில் சமயல்காரராகச் சேர்ந்த முதல் நாள் சமயலறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் என்னிடம் காலை மதியம் இரவுக்கான மெனுக்களை ஆர்டர் கொடுத்தார். தினமும் இப்படி... நானும் அவற்றைச் செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன். அவரை நான் அரண்மனை மானேஜர் என்று நினத்திருந்தேன். எனக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால் உடன் பணிபுரிபவர்களிடம் கை ஜாடை மூலம் பேசிக்கொள்வேன். வேலையில் சேர்ந்து பதினைந்து நாட்கள் கழிந்த பிறகு ஓரளவிற்கு அவர்கள் மொழியைத் தெரிந்துகொண்டு 'தினமும் எனக்கு சமயல் ஆர்டர் கொடுக்கிறாரே... அவர்தான் மானேஜரா? என்றேன்.

'இல்லை அவர்தான் சதாம்' என்று பதில் வந்தவுடன் வியந்தேன்.

சதாமிற்கு இந்திய மக்கள் என்றால் உயிர். இந்திராகாந்தியை தன்னுடய சகோதரி என்றுதான் கூறுவார். இந்திரா சுடப்பட்டு இறந்தவுடன் ஈராக்கில் பணியாற்றிக்கொண்டிருந்த அத்தனை சீக்கியர்களையும் தன்னுடைய சிஸ்டரைக் கொன்றவர்கள் என்று குற்றம்சாட்டி சிறையில் வைத்துவிட்டார். பிறகு இந்திய தூதரகம் தலையிட்டு சுட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்திய பிறகு பத்து நாட்கள் கழித்து அனைவரயும் விடுவித்தார்.

அவருக்கும் நம்ம ஊர் சமையல் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ரசம் என்றால் உயிர். விதவிதமான ரசம் செய்வேன். சாதத்தில் ஊற்றி விரும்பிச் சாப்பிடுவார்.

டீயில் சர்க்கரை போட்டுக்கொள்ளமாட்டார். அதற்குப் பதில் தேன் ஊற்றிச் சாப்பிடுவார். மதியம் சாதம் சிக்கன் ஃப்ரை காய்கறிகள்... இரவு 9 மணிக்கு ஃப்ரூட் சாலட் ரொட்டி சிக்கன் ஃப்ரை சாப்பிடுவார். பிரியாணி என்றால் அவருக்கு உயிர். அவருக்கு நான் 40 வகையான பிரியாணிகளைச் செய்து கொடுத்து அவர் பாராட்டைப் பெற்றிருக்கிறேன்.

ஒரு நாள் சதாம் என்னிடம் 'நான் டெல்லியில் சிஸ்டர் இந்திராகாந்தியச் சந்தித்தேன். அப்போது நடந்த அந்த விருந்தில், முக்கோண வடிவில் ஒரு ஸ்நாக் கொடுத்து இருந்தார்கள். அது ரொம்ப நல்லா இருந்தது. அதைச் செய்து தர முடியுமா?' என்று கேட்டார். அது என்னவென்று புரியாமல் குழம்பி ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டேன். அது வேறொன்றுமில்ல. நம்ம சமோசாதான்!

ஒரு நாள் இருநூறு சமோசா செய்து கொடுத்து அனுப்பினேன். அவரது உறவினர்கள் அனவரும் அதைச் சாப்பிட்டு அசந்து விட்டார்கள்.

சதாம் உசேன் அரண்மனயில் எந்தச் சமையல்காரரயும் ஆறுமாதத்திற்கு மேல் வைத்திருக்கமாட்டார்கள். காரணம் சதாமின் எதிரிகள் எப்படியாவது சமையல்காரரை ப்ரயின்வாஷ் செய்து பண ஆசைகாட்டி, உணவில் ஸ்லோபாய்சன் கலக்கச் செய்துவிடுவார்கள் என்பதால்தான்.

ஒரு நாள் அரண்மனயிலிருந்து சமையலுக்கு வேண்டிய காய்கறிகள் வாங்க கடைவீதிக்குச் சென்றேன். நான் அரண்மனை காரில் போய் இறங்கியவுடன் சிலர் என்னிடம் வந்து 'எப்படியாவது சதாம் சாப்பாட்டில் ஸ்லோபாய்சன் கலந்துவிடு. உனக்குப் பலகோடி பணம் தருகிறோம்' என்றார்கள். நான் அதை முழுமயாக மறுத்து அவர்களக் கடுமையாக எச்சரித்தேன். அவர்கள் மிரட்ட 'என் உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டேன்' என்று கூறிவிட்டு காரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பிவிட்டேன்.

கொஞ்ச நேரத்தில் சதாம் என்ன அழைப்பதாகக் கூறினார்கள். நான் சென்றேன். என்னை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

'ரொம்ப நன்றி மொய்தீன் என்று அவர் சொன்னபோது, எனக்கு ஒன்றும் புரியவில்ல. பிறகுதான் தெரிந்தது என சட்டையில் மைக்ரோசிப் டேப் மாட்டிவிட்டு இருக்கிறார்கள் என்று. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் மீது அவருக்கு அபார நம்பிக்கை!

வளைகுடா போரின்போது சதாம் என்னிடம் 'மொய்தீன் நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பி விடுங்கள். உங்களை நம்பி குடும்பத்தினர் நிறையப்பேர் இருப்பார்கள். தயவு செய்து கிளம்புங்கள்' என்றார். நான் மறுத்தேன். ஆனால் அவர்விடவில்லை. 'நான் எனது நாட்டிற்கும் மண்ணிற்கும் உயிரைவிடலாம். நீங்கள் விடக்கூடாது. கிளம்புங்கள்..!' என்று வற்புறுத்தினார்.

'அரண்மனையில் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுதது;ச் செல்லுங்கள் தூக்கிச்செல்ல முடியாவிட்டால் ஒரு லாரியில் ஏற்றி அனுப்புகிறேன்' என்று கூறி அப்படியே செய்தார்.

நான் கிளம்புவதற்கு முன் ஒரு பெரிய பண்டலைக் கொடுத்து 'எந்தக் காரணம் கொண்டும் விமானத்தில் இதைப் பிரிக்கக் கூடாது. உங்கள் வீட்டுக்குப் போய்த்தான் பிரிக்க வேண்டும்' என்றார்.

எனக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து பாக்தாத்திலிருந்து மும்பை கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றார்கள்.

வீட்டிற்கு வந்து சதாம் கொடுத்த பண்டலை பிரித்துப் பார்த்தேன். உள்ளே அமெரிக்க டாலர்கள்...'' கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொள்கிறார் காஜாமொய்தீன்.
kumudam

மேலும் படிக்க... Read more...

DO'AH

>> Saturday, January 20, 2007


ASSALAMU ALAIKKU.W.R.B
READERS CAN SAVE THIS
AND CAN PRINTED OUT.

மேலும் படிக்க... Read more...

மெகா குரான்

>> Wednesday, January 17, 2007


பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்துகிறது அளவு எட்டுக்கு எட்டு அடி. எளிதில் தூக்க முடியாது எடை அதிகம். அதனால் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற வேட்கை வருகிறது.

அப்படியென்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது. அந்தப் புத்தகம்... புனித... 'குரான்.' இந்த மெகா குரானை தனது குடும்பத்தினரின் கையால் எழுதச் செய்திருக்கிறார் ராஜா ஷெரீப். வழக்கறிஞர். கோயம்புத்தூர்காரர்.

''அரை அங்குலம் ஒரு அங்குல குரான் இருப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் மிகப் பெரிய குரானை கையால் எழுதினால். என்ன என்ற எண்ணம். எனது எண்ணத்தைக குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர். சாதாரண போர்டில் எழுதினால் பிற்காலத்தில் எழுத்துக்கள் அழிந்து போகக்கூடும். அதனால் 'ஸ்பெஷலாக 'சிந்தட்டிக் 'பிளாஸ்டிக்'கை மும்பயிலிருந்து வரவழைத்தேன்.

பேப்பரின் உயரமும் அகலமும் பெரிது. எளிதில் மடங்கிவிடும். எழுத முடியாது. அதனால் நான் பேப்பரைப் பிடித்க்கொள்ள என அம்மா ஹாஜரா எழுவார். அம்மா சோர்ந்து போனால் அப்பா ஹனிபா எழுவார். இப்படி நானும் என குடும்ப உறுப்பினர்களும் மாற்றி மாற்றி எழுவோம்.

இந்தப் பணியை நான் ஆரம்பித்த போது என மனவி கர்ப்பமாக இருந்தாள். அதனால் வேண்டாமென்று சொன்னேன். அவள் கேட்கவில்லை. என மகன் பேப்பரப் பிடித்துக் கொள்ள அவள் உட்கார்ந்தபடி எழுதுவாள்.

ஒவ்வொரு எழுத்தை எழுதும் போதும் அதனை உச்சரித்துக் கொண்டே எழுதுவாள். இதன் மூலம் 'குரான்' வசனங்கள் வயிற்றிலிருக்கும் குழந்தையின் செவிகளில் இறங்கும் என்பது அவளது கணிப்பு. அதனால் 'டெலிவரி'க்கு இருபது நாட்களுக்கு முன்பு வரையில் இந்தக் குரானில் அரேபிய எழுத்துக்கள அவள் எழுதி வந்தாள்.

எனது குழந்தை அகில் அகமது பிறந்த பிறகும் குரான் எழுவதை அவள் விடவில்ல. குழந்தைய மடியில் வைத்து ஒருக்களித்தவாறு நின்றுகொண்டு அவன் கையில் 'பிரஷ்ஷக் கொடுத்து எழுதச் செய்வாள். அவளது ஈடுபாடு எனக்கு வியப்பைத் தந்தது!' என்று ஒருவித நெகிழ்ச்சியுடன் சொல்லும் ராஜாஷெரீப்' இந்த மெகா குரான் எழுவதற்குத் தூண்டுகோலாகவும் உதவியாகவும் இருந்த என்னோட இந்து மத நண்பர்கள்தான்!' என்று நன்றியோடு நினைவு கூர்கிறார்.

இந்த மெகா குரானில் மொத்தம் அறுநூற்றுப் பத்து பக்கங்கள். பக்கங்களை எளிதில் புரட்டிப் பார்க்கும்படி 'ஸ்பைரல் பைண்டிங்' செய்திருக்கிறார். எடை இருநூற்று ஐம்பது கிலோ. குரானை வைப்பதற்கென்றே 'ரேகால்' (பலகையால் செய்யப்பட்ட சிறிய மேடை) ஒன்றையும் வைத்திருக்கிறார்.

மெகா குரான் எழுதியது பற்றி ராஜா ஷெரீப்பின் மனவி யாஸ்மின் 'குரானில் இருக்கும் ஒரு எழுத்தை கையால் எழுதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் என்கிறது. புனித குரான். அதனால்தான் நான் கர்ப்பமாக இருக்கும்போதே இந்தக் குரானில் கையால் எழுதினேன்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்னு சொல்வாங்க. இங்கே எனது கணவர் வெற்றிக்குப் பின்னால் அவரது அம்மா ஹாஜராபீவி இருக்காங்க!'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார்.

சரி. இந்தக் குரானை என்ன செய்வதாக உத்தேசம்?

'புனித குரான் அரேபிய மண்ணில் மெக்கா நகரில் இஸ்லாமியர்களுக்காக இறைவனால் அருளப்பட்டது என்கிறது வரலாறு. அதனால் தமிழக முஸ்லிம் மக்கள் சார்பில் இந்த மெகா குரானை புனித மெக்கா நகருக்கு இலவசமாகக் கொடுத்துவிடப் போகிறோம்!' உறுதியான குரலில் கோரஸாகச் சொல்கிறார்கள் கணவன் மனவி இருவரும்.

KUMUDAM.

மேலும் படிக்க... Read more...

முஹமது நபி (ஸல் ) அவர்கள் பயன்படுத்திய பாத அணிகள், எழுதிய கடிதம் மற்றும் அரிய புகைப்படங்கள்.

>> Tuesday, January 16, 2007

முஹமது நபி (S.A.W) அவர்களுடைய பாத சுவடு

FOOT PRINT OF PROPHET MUHAMMED S.A.W


>br />
LEATHER SANDALS OF PROPHET MUHAMMED S.A.W -

(Topkapi Museum, Istanbul - Turkey)

முஹமது நபி (S.A.W )அவர்களுடைய பாத அணி



முஹமது நபி (ஸல் ) அவர்களுடைய பாத‌ அணி


LEATHER SANDALS OF PROPHET MUHAMMED S.A.W
-Topkapi Museum, Istanbul - Turkey)



=======================================


முஹமது நபி (ஸல் ) அவர்களுடைய பல் உள்ள பேழை



முஹமது நபி (ஸல் ) அவர்களுடைய
பல் அடங்கிய பேழை


முஹமது நபி (ஸல் ) அவர்களுடைய தலைமுடி தாடி முடி
அடங்கிய கண்ணாடி குப்பிகள்.


முஹமது நபி (ஸல் )அவர்கள் எகிப்தின் அரசனையும் அவன் தன் குடிமக்களையும் இஸ்லாத்தின்பால் அழைத்து கைப்பட எழுதிய கடிதம்

Prophet Muhammed's (S.A.W) letter to Muqauqis, Cheif of Copts of Egypt.-Topkapi Museum, Istanbul - Turkey)


br />
2002 JUNE ல் நான் என‌து குடும்பத்துடன்
துருக்கி தேச இஸ்தான்புல் நகரத்தில் உள்ள
TOPKAPI PALACE ISLAM MUSUEM .
அரும்பொருளகத்தில் மேற்கண்டவைகளையும்
முஹமது நபி (ஸல் ) அவர்கள்,மற்றும் சஹபாக்கள், முஹமது நபி (ஸல் ) அவர்களின் மறைவிற்கு பிந்திய இஸ்லாமிய ஆட்சியாள‌ர்கள் கையாண்ட பலவிதமான பொருட்களையும்
கண்டுகளித்து புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் மீறி எடுக்கப்பட்ட வீடியோவின் சில காட்சிகள் தான் இவை. ----
வாஞ்ஜுர்

--------------------------------

மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

மேலும் படிக்க... Read more...

சீதனப்பேய்

>> Monday, January 15, 2007

சமுதாய சீர்கேடு - சீதனப்பேய்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.

அல்லாஹ்வைப் புகழ்ந்து, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக ஆரம்பம்செய்கின்றேன்.

சீதனக் குறள்

வாங்கும் கையைவிட கொடுக்கும்கை மேலோங்குமே அக்காலம் இச் சமுதாயத்தின் பொற்காலம்.

சீதனம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது நம் தாய்மார்கள் தான். ஒரு வீட்டிற்கு மருமகளாய் வந்து, வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மாமியாராய் இருக்கும் நம் தாய்மார்கள் கொஞ்சம் சிந்தனை செய்து பார்த்தால் இந்த சீதனப்பேயை நம் சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக விரட்டிவிடலாம். எங்கிருந்தோ வந்த இந்த பேய் நம்சமுதாயத்தையும் ஆட்டிபடைப்பது இரத்தக்கண்ணீர் வடிக்கக்கூடிய விசயம்தான். இந்த சீதனப்பேயால் வீடுகளில், தெருக்களில், ஊர்களில், நாட்டில் மற்றும் சமுதாயத்தில் எத்தனை எத்தனை பிரச்சனைகள். இவைகள் கணக்கிடப்பட்டால் எண்ணிலடங்கா.

சீதனம் வாங்க கூறும் காரணங்கள் பல அதில் இதுவும் சில...

பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்தவுடன் அவள் அவ்வீட்டில் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை காலமெல்லாம் செய்யவேண்டிய பொறுப்பு அவளின் கணவனுக்கு இருப்பதால் அதற்காகும் செலவுகளை முதலிலேயே வசூல்செய்துவிடுவது.
பிள்ளையை படிக்கவைத்து அவன் நல்லதொழிலில் இருப்பதால் அவனுடைய சிறுவயது படிப்புசெலவு முதல் கல்யாண நாள் வரையில் அவனுக்காக செலவுசெய்த பணத்தை பொற்றோர்கள் பெற்றுக்கொண்டு அவனை அப்பெண்ணிற்கு விற்றுவிடுவது.

மாப்பிள்ளைக்கு எந்த குறையும் இல்லையென பறைசாட்டுவதற்காக, சீதனம் வாங்காமல் திருமணம் செய்தால் மாப்பிள்ளைக்கு ஏதோ குறையுள்ளது என ஊர்மக்கள் பேசுவார்கள் என்ற சாக்குப்போக்கான காரணத்தால். இன்னும் இதுபோல் பல காரணங்கள் உள்ளன.

பெண்களின் நிலை

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னிருந்தும் இதுநாள் வரையிலும் இஸ்லாத்தைத் தவிர பிறமதங்கள் அனைத்திலும் பெண்களின் நிலை கண்ணியக்குறைவாகவே இருந்துவருகின்றது. இஸ்லாம் மட்டும் தான் கண்ணியக்குறைவாக கருதப்பட்டு வந்த பெண்களுக்கு உரிய சரியான அந்தஸ்தை வழங்கி அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் என்ற சிறப்போடு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கி மேல்நிலைக்கு கொண்டு வந்தது. பெண்களுக்கு செத்துரிமை வழங்கியது இஸ்லாம் தான். நம்நாடுகளில் ஆரம்ப காலத்தில் மாற்று சமுதாயத்தவர்களிடம் காணப்பட்ட, கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறும் இழிய கொள்கையை தகர்தெரிந்தது இஸ்லாம் ஆகும். கணவனை இழந்த பெண்களுக்கு இத்தா என்ற ஒரு முறையை ஏற்படுத்தி அந்த காலம் முடிந்தபிறகு மீண்டும் அப்பெண்கள் வேறு ஒருவரை மணந்துகொள்வதற்கு உரிமையளித்தது இஸ்லாம் தான். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழியின் தீங்கை தகர்த்தெரிந்து, தக்க காரணங்களுடன் பெண்களும் தங்கள் கணவன்மார்களை விட்டுப் பிரிய அனுமதி வழங்கியது இஸ்லாம் ஆகும். இதுபோல என்னற்ற பல உரிமைகளை பெண்களுக்கு வழங்கியது இஸ்லாம் ஆகும். ஆனால் இன்றைய நம்சமுதாயத்தில் சீதனப்பேயின் கொடுமையாலும் மார்க்கத்தில் இல்லாத சம்பிரதாயங்களாலும் பெண்ணைப் பெற்றுவிட்டால் சந்தோசப்படும் பெற்றோர்களை விட பெண்ணையல்லவா பெற்றுவிட்டோம் என துக்கப்படும் பெற்றோர்கள் தான் அதிகம். பெண் என்றால் செலவும் ஆண் என்றால் வரவும் என பிள்ளைகள் பிறக்கும்பொழுதே கணக்குப்போட்டு பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள நம் பெற்றோர்கள். ஐந்து பெண்களைப் பெற்று கட்டிக்கொடுத்துவிட்டால் அரசனாக உள்ளவன்கூட ஆண்டியாகிவிடுவான் என்று வழக்குச்சொல் உள்ளது.

இக்காலத்தில் ஒரு பெண்ணை கரைசேர்ப்பதற்குள்ளே தந்தை ஓட்டான்டியாகிவிடுமளவுக்கு சீதனம் மற்றுமுள்ள கல்யாண செலவுகள் மார்க்கத்தில் இல்லாத சம்பிரதாயங்களால் செய்யப்படுகின்றன. இது கண்டிப்பாக நம்சமுதாயத்தில் களையப்படவேண்டும்.

சீதனம் மற்றும் மற்ற சடங்குகளால் பெண்ணைப் பெற்றவர்களின் நிலை

பணக்காரர்களுக்கு சீதனம், சீர் மற்றும் சீராட்டு என்பது போன்றவை பொதுவாக பணம் கைமாறல் போல் தான் ஆகிவிட்டது. ஒருவருடைய பணம் அடுத்தவருக்கு கைமாறுகிறது. அவர்களுக்கு பணத்திற்கு மேல் பணம் சேர்ந்துவிடுகிறது. பணகஷ்டம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறவர்கள் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழை வர்க்கத்தினரும் தான்.

நடுத்தர வர்க்கத்தினரின் நிலை

பெண்ணை எப்படியும் விரைவில் கரையேற்றிக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் மாப்பிள்ளை அமைந்தவுடன் அவர்கள் கேட்கும் சீதனத்திற்கு ஒப்புக்கொண்டு பண ஏற்பாடிற்காக தன்னிடம் இருக்கும் நிலங்களையும் சிலர் விற்றுவிடுகின்றனர். சிலர் பெண்ணிற்கெற்றே சிறுவயதில் அவளுடைய பெயரில் ஒரு தொகையை வங்கியில் வைப்பு நிதியில் டெபாசிட் செய்துவிடுகிறார்கள். அந்த பிள்ளை வளர்ந்து திருமணம் செய்துகொடுக்கும் நேரத்தில் வட்டியுடன் சேர்த்து வந்த அந்த தொகையை எடுத்து திருமணசெலவிற்கு செலவுசெய்துவிடுகிறார்கள். இஸ்லாத்தில் வட்டி முற்றிலுமாக ஹராமாக இருந்தும் வேறுவழி இல்லாமல் இந்த வழியை தேர்ந்தெடுக்கிறார்கள். தன்குடும்பங்களில் இருக்கும் செல்வந்தர்களிடம் பணம் கடனாகக் கேட்டு அவர்கள் கேட்கும் தொகையை (தனவந்தர்கள்) இல்லையென்று சொல்லுவதைவிட இந்த வழி நல்லதாகத் தெரிவதால் இதனை தேர்ந்தேடுக்கிறார்கள். இந்த அவலநிலை சீதனம் கொடுக்கவேண்டும் என்ற கொடுமையால் ஏற்படுவதாகும்.

ஏழை வர்க்கத்தினரின் நிலை

இவர்களின் நிலையும் மிகவும் மேசமாகவே உள்ளது. சீதனப்பணத்தை கொடுப்பதற்காக பள்ளிவாசலில் அத்தாட்சி கடிதங்கள் பெற்றுக்கொண்டும், ஊர்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்களுடைய வீடுகளுக்கும் கடைகளுக்கும் சென்று மகளின் கல்யாண விபரத்தைக் கூறி பணத்தொகையை சேகரிக்கிறார்கள். இதற்காக இவர்கள் படும் கஷ்டம் மிகவும் கொடுமையானது. இந்த நிலைமையும் நம்சமுதாயத்தில் முற்றிலுமாக களையப்படவேண்டும்.

சமுதாயத்தில் நம்மிடத்திலே ஊறிவிட்ட இந்த சீதனப்பேயை எப்படி விரட்டுவது

தாய்மார்கள் முதலில் சிந்திக்கவேண்டும், தான் மருமகளாக ஒரு வீட்டிற்கு செல்வதற்காக தன்னுடைய பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதனை கொஞ்சம் சிந்தித்து உணர்ந்து, நாம் ஏன் நமக்கு வரும் மருமகளின் பெற்றோர்களுக்கு கஷ்டம் கொடுக்கவேண்டும், நம்முடைய பிள்ளை நன்றாக சம்பாதித்து நம்முடைய குடும்ப பொறுப்புகளை சரியான முறையில் நடத்திச்செல்வான் என்ற உறுதியான முடிவை எடுத்து சீதனம் சீராட்டு இல்லாமல் எளிமையான முறையில் தன்னுடைய ஆண்பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க ஏற்பாடு செய்யவேண்டும். நம் தாய்மார்கள் இத்தகைய முடியவை உறுதியாக எடுத்துவிட்டாலே போதும் இன்ஷாஅல்லாஹ் விரைவில் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். நம் தாய்மார்கள் எடுக்கும் இத்தகைய முடிவிற்கு அவர்களின் கணவர்மார்கள் கண்டிப்பாக எந்த ஆசேபனையும் சொல்லப்போவது இல்லை. எல்லோருக்கும் தெரிந்தவிசயம் தான் அவர்களின் கடிவாளம் இவர்கள் கையில். சிலவீடுகளில் கணவர்மார்களின் ஆட்சிஇருந்தாலும் பிள்ளைக்கு சீதனம் சீராட்டு வேண்டாம் என்ற விசயத்தை அவர்களுக்கு வழியுறுத்தும்பொழுது எந்த கல்மனம் உடைய கணவர்மார்களும் சம்மதிக்கவேச் செய்வார்கள். ஆகவே சீதன ஒழிப்பிற்கு முதல் அஸ்திவாரம் நம் தாய்மார்கள் தான். அவர்கள் உறுதியாக இருந்தால் இந்த சீதன சீர்கேட்டை இன்ஷாஅல்லாஹ் நம்சமுதாயத்திலிருந்து அகற்றி விடலாம்.

சிலர் என்னுடைய பிள்ளைக்கு சீதனம் எதுவும் வேண்டாம். பெண் இத்தனை பவுன்நகை போட்டுவந்தால் போதும் எனக்கூறுகிறார்கள். அந்த நகையும் அவள் கழுத்தில் அணிந்து கொள்வதற்குத் தான், நாங்கள் அதனை எதுவும் செய்யமாட்டோம் எனவும் கூறுகிறார்கள். நம்முடைய தாய்மார்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகொள் என்னவெற்றால், பெண்ணின் அழகிற்கு அவளின் புன்னகை ஒன்றே போதுமே பொன்நகை எதற்கு? என்பதுதான். கட்டாயமாக இத்தனை பவுன்நகை போட்டுத்தான் வரவேண்டும் என்ற கட்டளை பெண்ணைப் பெற்றவர்களுக்கு இட வேண்டாமே, உங்கள் தகுதிக்குத்தக்கவாறு அவள் போட்டுவந்தால் போதும் என்று நீங்கள் கூறலாமே.

சீதனம் வாங்குவதால் சமுதாயத்தில் ஏற்படும் பாதக விளைவுகள்

முதலில் பொருளாதாரச் சுமை பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஏற்படுகின்றது. இதனால் அவர்களின் குடும்பத்தில் அவளை கரையோற்றவேண்டும் அதற்காக தனியாக சேமிக்கவேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் அதிகம் காணப்படுகின்றது. சராசரி வருமானம் உள்ளவர்கள் அதிகமாக சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பலவழிகளில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அல்லாஹ் ஏவிய ஹலால், ஹராம் பார்ப்பது மிகவும் அரிதாகிவிடுகின்றது. வியாபாரம், தொழில்துறைகளில் நேர்மை மாறிவிடுகின்றது. வட்டி, இலஞ்சம் போன்றவை வாழ்வில் அன்றாட நிகழ்வுகளாகிவிடுகின்றன. இதனால் சமுதாயத்தின் ஒட்டுமொத்த பெருளாதார வளர்ச்சியில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுவருகின்றது. இந்த நிலை நம்சமுதாயத்தில் களையப்படவேண்டும்.

சீதனம் கொடுத்து வீட்டிற்கு வந்தவளின் அதிகாரம் வீட்டில் பரவலாகவே காணப்படுகின்றது. கணவனை மதிக்காத நிலையும் ஏற்படுகின்றது. முதல் எதிரியாக மாமியார் மாறிவிடுகின்றாள். சில மாதங்களில் மாமியார் மருமகள் சண்டைகள் முற்றி தனிக்குடித்தனத்திற்கு வழிவகுக்கப்படுகின்றது. அங்கு அவனுடைய நிலைமையை வருணிக்கவே தேவையில்லை. கணவனை அடக்கிஆளும் பொக்கு அதிகரித்துவிடுகின்றது.

பெண்ணிடத்தில், தான் அதிக பணம்கொடுத்து வந்தவள் என்ற ஒரு மமதை அவளை அறியாமலே ஏற்பட்டுவிடுகின்றது. இதனால் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் நற்செயல் அங்கு தடை செய்யப்படுகின்றது. கணவன்மார்கள் மனநிம்மதி வேண்டுமென்பதற்க்காக மட்டும் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடியவர்களாக ஆகிவிடுகின்றனர். தொழுகை, திக்ரு, திருகுர்ஆன் திலாவத் மற்றும் தாஃலிம் போன்ற அமல்கள் அவளிடத்தில் குறைந்து கவனங்கள் அனைத்தும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலேயே செல்கின்றது. குடும்பபொறுப்புகள் குறைய ஆரம்பித்துவிடுகின்றது. சின்னத்திரை நிகழ்ச்சிகளைப் பார்த்து அழும் அவர்கள் குடும்பநிலையை பற்றியும், தன்னிடம் தீனுடைய வாழ்க்கை இல்லாமல் உள்ளதே என்பதைப் பற்றியும் அழுவதுகிடையாது. இதனால் தீனுடைய சூழ்நிலை வீடுகளில் இருந்து எடுபட ஆரம்பித்துவிடுகின்றன. இது மிகவும் கைசேதப்படவேண்டிய விசயமாகும்.

மஹர்

திருமண ஒப்பந்தத்தின் பொழுது மணமகளாகும் பெண்ணுக்கு அவளின் கற்புக்குப் பரிசாக மணமகனால் கொடுக்கப்படுவது மஹராகும்.

மஹரைப்பற்றி அல்லாஹ் தன் திருமறையில் அருளுகின்றான்.

(நீங்கள் மணந்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்ச்சியாக நீங்கள் கொடுத்து விடுங்கள்; பிறகு அதிலிருந்து ஏதேனும் உங்களுக்கு அவர்கள் மனமாற விட்டுக் கொடுத்தால், அதனை மங்கல மானதாக, தாராளமாக நீங்கள் புசியுங்கள். ( 4 : 4)


பெண்ணிற்கு மஹர் தொகையை கொடுத்து திருமணம் செய்யவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருக்கும்பொழுது, பிற சமுதாயத்தில் காணப்படுகின்ற பழக்கத்தை நம்சமுதாயத்திலும் ஏற்படுத்தி அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாய் பெண்ணிடத்தில் சீதனம் என்ற பெயரில் பெரும்தொகைகளை கேட்டு வாங்குவது எவ்விதத்தில் நியாயமாகும். சீதனம் என்ற செயலுக்கு மாறாக மஹர் தெகையை நம்முடைய சக்திக்குத்தகுந்தவாறு மணப்பெண்ணிற்கு அதிகமாகக் கொடுத்து திருமணம் முடிப்போமாக.

மஹர் கொடுத்து திருமணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

முதலில் அல்லாஹ்வுடைய கட்டளையை ஏற்று நடக்கக்கூடிய பாக்கியம் கிடைக்கின்றது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றிய நன்மை கிடைக்கின்றது. கணவன் மனைவிக்குள் பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. அவர்களுக்குள் விட்டுக்கொடுக்கும் தன்மை வளர்கின்றது. முக்கியமாக பெண்ணைப்பெற்றோர்கள் நிம்மதிபெருமூச்சு விடுகிறார்கள். பெண்ணை திருமணம்செய்து கொடுக்கும் பொழுது பொருளாதாரச் சுமை அவர்களுக்கு அதிகம் ஏற்படுவதில்லை. கௌரவமான நிலையில் குடும்ப வாழ்க்கை செல்ல வழிவகுக்கப்படுகின்றது.

மாமியார் மருமகள் உறவு தாய் மகள் உறவுபோல் ஆகிவிடுகின்றது. கணவன்மார்களின் செயலறிந்து நடக்கக்கூடிய சூழ்நிலை பெண்களுக்கு உண்டாகின்றது. பெண், கணவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவளாக ஆகிவிடுவாள். வீட்டில் தீனுடைய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் தீன்தாரிகளாக வளர முயற்சிசெய்வாள். குடும்பப்பெறுப்புகளை நல்லமுறையில் நிறைவேற்றுவாள். பெண்கள் இச்சமுதாயத்தின் கண்கள் என்ற மொழிக்கு உரியவளாகிவிடுவாள்.

மணமகன்களின் பங்கு

படிப்பு முடித்து பெண்ணிடம் சீதனம் வாங்கி தொழில்துறை வைத்து முன்னேறுவோம் என்று இல்லாமல், நம்முடைய செந்தகாலில் நின்று, அல்லாஹ் ஏவிய ஹலாலான வழியில் பொருளீட்டுவது நம்மீது கட்டாயக்கடமையாக இருக்கின்றது. இரணம் என்பது அல்லாஹ் நிர்ணயித்த ஒன்றாகும். யாருக்கு எந்தமுறையில் வழங்கவேண்டும் என்பதை அந்த அல்லாஹ் ஒருவனே அறிவான். உலகம் இயங்குவதற்காக மனிதர்களின் பொருளாதார நிலைமைகளில் ஏற்றத்தாழ்வுகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். நமக்கென்றுள்ள இரணம் நம்மை அடைந்தேதீரும். நாம் செய்யவேண்டியது ஹலாலான முறையில் பொருளீட்டுவதற்கான வழியை தேர்ந்தெடுத்து உழைக்கவேண்டும். அதில் பரக்கத்திற்காகவும் துஆச் செய்து வரவேண்டும். வரும் வருமானம் சிறிதாக அல்லது அதிகமானதாக இருந்தாலும் பரக்கத்துடன் இருந்தால் அது நமக்கு உண்மையிலேயே மிகுந்த நன்மைபயக்கும். எனவே மாப்பிள்ளைமார்கள், சீதனம் என்ற கொடிய பேயை வாங்காமலே நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவேன் என்ற உறுதிப்பாட்டை எடுத்து உழைத்தால் இன்ஷாஅல்லாஹ் பரக்கத் பொருந்திய வருமானத்தை அடைந்துகொள்ளலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்சமுதாயத்தில் ஊன்றிவிட்ட இந்த சீதனப்பேயை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதற்கு நம்சமுதாயமக்கள் அனைவர்களுக்கும் உதவிசெய்வானாக. ஆமீன்.


சமுதாய நல சிந்தனையுள்ள நாம் அனைவர்களும் சிந்தித்து சீதனப்பேயின் தீமைகளை உணர்ந்து அதனை நம்சமுதாயத்திலிருந்து விரட்ட ஒன்றுபடுவோம். அல்லாஹ் உதவிசெய்வானாக. ஆமீன்.

இவண்
இஸ்லாமிய ஊழியன்,
க. சே. செய்யது அஹமது கனி
சவுதி அரேபியா.

மேலும் படிக்க... Read more...

அளவைச் சுவடுகள்

இன்றைக்கு நமக்கு விஞ்ஞான பூர்வமான அளவுகள் கிடைத்துள்ளன. இந்த அளவுகள் கண்டுபிடிப்பதற்கு முன் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அளவுகள் நடைமுறையில் இருந்தன. உதாரணமாக இன்றைய நமது நீட்டல் அளவு மீட்டர் என்பதாகும் பழந்தமிழகத்தில் தச்சுமுளம் எனற அளவு நடைமுறையில் இருந்தது. தச்சாசாரிகள் இந்த அளவையை அதிகமாகப் பயன்படுத்தியதால், தச்சுமுளம் என்று அந்த அளவுக்குப் பெயர் வந்தது.‘இந்தத் தச்சு மளமும் கண்டுபிடிப்பதற்கு முன், பழந்தமிழர்கள் எந்த மாதிரியான அளவை வைத்திருந்தார்கள்...?’ என்று ஒரு பெரியவரிடம் கேட்டேன்.அந்தப் பெரியவர் சொன்னார்; ‘‘அளக்க என்று அளவுகோல் தேடி, அந்தக் காலத்து மக்கள் எங்கும் போகவில்லை. அந்தக்காலத்தில் அளவு கோல்களை கையில் வைத்துக் கொண்டே அலைய முடியுமா என்ன? எனவே அவவனவன் உடம்பும், உடம்பின் உறுப்புகளுமே, அளவுகோல்களாகப் பயன்பட்டன’’ என்றார்.‘‘அதெப்படி உடம்பை வைத்து அளக்க முடியும்?’’ என்று கேட்டேன்.பெரியவர் சிரித்துக் கொண்டே, ‘தம்பி அந்தக் கிணற்றில் எவ்வளவு தண்ணீர்? இருக்கிறது என்று ஒருவர் கேட்டால், கிராமத்து மக்கள், அந்தக் கிணற்றில் கரண்டக்கால் அளவு தண்ணீர் கிடக்கு, அல்லது முட்டளவு தண்ணீர் கிடக்கு அல்லது இடுப்பளவு தண்ணீர் கிடக்கு அல்லது மார்பளவு தண்ணீர் கிடக்கு அல்லது கழுத்தளவு தண்ணீர் கிடக்கு அல்லது ஓராளம் உயரத்திற்குத் தண்ணீர் கிடக்கிறது அல்லது இரண்டாளம் உயரத்திற்குத் தண்ணீர் கிடக்கிறது என்று கூறிவார்கள்.. இப்படி கிணற்றில் கிடக்கிற தண்ணீரின் அளவை, நீர்நிலைகளில் கிடக்கிற தண்ணீரின் அளவைத் தன் உடம்பை வைத்தே அளந்தார்கள். பண்டை மக்கள். உயரத்தை அல்லது ஆழத்தை அளக்க, அளவுகோல் தேடி எங்கும் அலைய வில்லை. தன் உடம்பை வைத்தே, தனக்கான நீட்டல் அளவைக் கணித்துக் கொண்டான்.நீட்டல் அளவை உடம்பில் அளந்தார்கள் என்பது சரி, உடல் உறுப்பால் அளந்தார்கள் என்று கூறினீர்களே.. அது எப்படி?’ என்று அந்தப் பெரியவரிடம் கேட்டேன்.பெரியவர் சிரித்துக் கொண்டே ‘‘தம்பி....’’ என்று இழுத்தபடி மிக நுட்பமான நீட்டல் அளவை, அந்தக் காலத்து மக்கள் ஒரு ‘மயிர் கனம்’ என்று கூறுவார்கள். அதைவிட சற்று பெரிய அளவை ஒரு நூல்கனம் என்று சொல்வார்கள். கிராமத்தான் கட்டியிருந்த வேட்டியில் நூல் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நூலுக்கு அடுத்து ஒரு விரல் கடை என்று கூறுவார்கள். இந்த விரல் கடையிலும் சுண்டு விரல் தண்டிக்கு, பெருவிரல் தண்டிக்கு என்று இரண்டு விதமான அளவைச் சொல்வார்கள். ஒரு விரல் கடை, இரண்டு விரல்கடை, மூன்று விரல் கடை, பிறகு நான்கு விரல் கடை என்று நீட்டல் அளவைச் சொல்வார்கள். ஐந்துவிரல்கள் மனிதனுக்கு இருந்தாலும் ஐந்து விரல் கடைஅளவு என்று கூறுவதில்லை!நான்கு விரல் கடைக்குப் பிறகு ஜாண்தான் பெரிய அளவு. ஒரு ஜாண் என்பது நான்கு விரல் கடையின் மூன்று பங்காகும். யார் கையாளாலும் இந்த அளவு அதாவது மூன்று, முறை வைக்கும் நான்கு விரல் கடை என்பது ஒரு ஜாண் என்ற அளவுக்குச் சரியாகத்தான் இருக்கும்.ஜாணுக்கும் பிறகு முளம்தான் பெரிய அளவு. மூன்று ஜாண் சேர்ந்தால் ஒரு முளம். இரண்டு கைகளையும் நெட்டுக்கு நீட்டினால் ஒரு ‘கைப்பாகம்’ என்ற அளவாகும். மூன்று முளங்கள் சேர்ந்தால் ஒரு கைப்பாகம் ஆகும். இந்த நுட்பம் இயற்கையாகவே மனித உடலுக்கு வாய்த்துள்ளது. இதைக் கண்டறிந்து பழங்காலத்து மனிதர்கள் தன் அளவிற்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உடம்பில் உள்ள விரல்கள், கைகள் போன்றே காலாலும் பழங்காலத்தவர்கள் தங்கள் அளவுகளை, அளந்திருக்கிறார்கள்.ஒரு ‘பாதம்’ இரு பாதம் என்று நீளங்களைத் தன் பாதம் கொண்டே அளந்துள்ளார்கள், பாதங்களுக்குப் பிறகு, ‘எட்டு’ என்று ஒரு அளவு உள்ளது. நிற்கிற நிலையில் வலதுகாலைத் திரையில் ஊன்றிக் கொண்டு இயல்பாக ஒரு எட்டு எடுத்து இடது காலை வைக்கும் தூரத்தைத் தான் ‘ஒரு எட்டு’’ என்ற அளவாகக் கூறுகின்றார்கள்.இந்த எட்டையே முடிந்த வரை இரு காலையும் அகட்டி வைத்துக் கொண்டால் அதற்கு ‘ஒரு கவுடுதூக்கு’ என்று பெயர். மூன்று பாதம் ஒரு எட்டாகவும், மூன்று எட்டு ஒரு கவுடுதாக்காகவும் இருக்கும். இந்த அளவின் நுட்பத்தையும் உணர்ந்துதான் பழங்காலத்து மக்கள், காலின் மூலம், கால் பாதத்தின் மூலம் தங்கள் அளவுகளை அமைத்திருக்கிறார்கள்.உடம்பையும் கையையும் சேர்த்து ‘‘ஒரு கை எடுப்பு உயரம்’’ என்றும் ஒரு அளவை சொல்கிறார்கள். பருமனைக் குறிக்கவும் அந்தக் காலத்தில் மனிதர்கள் தன் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.மிக நுட்பமான பொருளைப் பற்றிப் பேசும்போது ‘‘கண்ணுக்குள்ள போட்டு எடுத்திரலாம்’’ என்று கண்ணை மையமாக வைத்துக் கூறினார்கள். அதைவிட சற்று பருமனான பொருளை ஒரு சிட்டிகை என்று கூறினார்கள். பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து ஒட்டிப் பிடித்துக் கொண்டு எடுக்கும் ‘பொடி’ போன்றவைகளைச் சிட்டிகை என்று கூறினார்கள்.உள்ளங்கையைக் குவித்து அதில் நெல்மணி போன்றவற்றை நிரப்பி, ஒரு கையளவு அல்லது ‘ஒரு சதங்கை’ என்றார்கள். இரண்டு கையையும் சேர்த்து நெல்மணிகளை அள்ளி ‘இருகை அளவு’ என்றார்கள். சோற்றை உள்ளங்கையில் வைத்து உருட்டி ஒரு ‘கவளம்’ என்றார்கள். ஒரு ‘வாய்ச் சோறு’ என்றும் ஒரு அளவைக் கூறினார்கள்.இவைதவிர, சில பொருள்களின் அளவைப் பற்றிக் கூறும்போது, மணிக்கை தண்டி, கணுக்கால் தண்டி, தொடைத் தண்டி என்று பொருளின் பருமனுக்குத் தக்கபடி தன் உடல்உறுப்புகளைக் கொண்டு அளவுகளைக் குறித்தார்கள்.மரத்தின் அளவுகளைக் கூறும்போது ஒரு ஆள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்கு, இரண்டு ஆள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்குப் பெரியது என்று கூறுகிறார்கள். இங்கும் கைகளே அளவு கோலாகப் பயன்படுகிறது, என்று அந்தப் பெரியவர் கூறினார்.இப்படி ஆதிகாலத்தில் மனிதர்கள் தன் உடம்பையும், தன் உடம்பின் உறுப்புகளையும் மட்டுமே அளவுகோல்களாகக் கொண்டு தனக்குத் தேவையான அளவுகளை அளந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.இவைதவிர, கற்பனை நயத்துடன் சில அளவுகளை உடல் உறுப்புகளை மையமாகக் கொண்டு கூறுகிறார்கள். உதாரணமாக ஒரு மெகா ‘அளவுக்கு வாய் ரொம்ப நீளம்’ என்று கூறினார். அவள் அதிகமாகப் பேசுபவள் என்று நாம் புரிந்துகொள்கிறோம். இங்கு ‘வாய்’ என்பது குறியீடாக நின்று பேச்சைக் குறிக்கிறது. அதேபோல், ஒருவன் அவனுக்கு ‘நாக்கு ரொம்ப நீளம்’ என்று கூறினால், ‘அவன் மிகவும் ருசியாகச் சாப்பிட ஆசைப்படுவான்’ என்று புரிந்து கொள்கிறோம். அந்தத் தொடரில் நாக்கு என்ற சொல் ருசியைக் குறித்து வந்தது. இப்படி மனிதனின் உடலும் உடல் உறுப்புகளும் பழங்காலத்தில் அளவுகோல்களாகவும் பயன்பட்டுள்ளன.

மேலும் படிக்க... Read more...

புறத் தோற்றம் - இறை நம்பிக்கை

ஹார்வர்ட் பல்கலக்கழகத் தலவர் எரிச்சலில் இருந்தார். காரணம் அவர் எதிரே அமர்ந்திருந்த வயதான தம்பதி. பரிதாபமான உடைகளோடு உள்ளே வந்து அமர்ந்த அவர்களை அவருக்குப் பிடிக்கவில்ல.

''உங்களுக்கு என்ன வேணும்? டக்குனு சொல்லுங்க. எனக்கு நேரம் அதிகமில்லை.''

''எங்களோட பையன் உங்க ஹார்வர்ட் பல்கலக்கழகத்துல ஒரு வருஷம் படிச்சான். போன மாசம் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான். அவனுக்கு இந்தப் பல்கலக்கழகம் ரொம்பப் பிடிக்கும். அதனால, அவன் நினவா பல்கலக்கழகத்துல...'' என்று பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, குறுக்கே புகுந்தார் தலைவர்.

''என்ன, சிலை வக்கணும்னு சொல்றீங்களா? அதெல்லாம் முடியாது''

''சிலை இல்லை... ஏதாவது கட்டடம் கட்டிக் கொடுக்கலாம்னு பார்க்கிறோம்''

ஏளனமாய்ச் சிரித்தார் தலைவர்.

''என்ன கட்டடமா? ஒரு கட்டடம் கட்ட எவ்வளவு ஆகும் தெரியுமா? இங்க இருக்கிற கட்டடங்களோட மதிப்பு தெரியுமா? ஒரு கோடி டாலர்கள். உங்களால அதெல்லாம் முடியாது''

இப்படி அவர் சொன்னதும், அந்தத் தம்பதி அவர்களுக்குள் கிசுகிசுப்பாய்ப் பேசிக் கொண்டார்கள்.

''என்ன மலைப்பாய் இருக்கிறதா?'' என்று கேட்டார் தலைவர்.

''இல்லை... ஒரு கோடி டாலர்கள்தான் ஆகும் என்றால், என் மகன் பெயரில் ஒரு பல்கலக்கழகமே உருவாக்கலாம்னு நினக்கிறோம்'' என்றார்கள்.

தலைவருக்கு அதிர்ச்சி. அவர்கள் உடையப் பார்த்து, அவர் எடை போட்டு விட்டார். வந்தவர்கள் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களான, ஸ்டான்ஃபோர்டு தம்பதியினர். இப்படி உருவானதுதான், இன்று உலகம் முழுவம் பிரசித்திப் பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கைலக்கழகம்.

நீதி: புறத் தோற்றம் எப்போதும் உண்மை சொல்லாது
===========================
இறை நம்பிக்கை மிக்க சிறுவன்

அவன்; இறை நம்பிக்கை மிக்க சிறுவன். வீட்டில் அவனை அப்படித்தான் வளர்த்தார்கள்.அவனுக்கு கால்பந்தாட்டம் என்றால் உயிர். நன்றாக விளயாடுவான். பெரிய கால்பந்தாட்ட வீரனாக வரவேண்டும் என்பது அவனது ஆசை.பள்ளி அணிக்கு வீரர்கள தேர்வு செய்யும் போட்டிகள் நடந்கொண்டிருந்தன. இவனும் விளையாடிக் கொண்டிருந்தான்.எதிரணியினர், வேகமாய்ப் பந்தை அடித்துக் கொண்டு வந்தார்கள். இவன் பந்தைத் தடுத்தாக வேண்டும். தடுக்காவிடில், பந்து கோலுக்குள் போய்விடும். இவன் சட்டென்று நின்றான். கைகளைக ஏந்தி இறைவனிடம் வேண்டினான், வேண்டிக்கொண்டே நின்றான். 'இறைவா பந்தைத் தடுத்து நிறுத்து' என்று. இவனுடய அணியினர் எல்லோரும் 'பந்தைத் தடு, தடு' என்று கூச்சலிட்டார்கள். ஆனால், இவன் பந்தைத் தடுக்காமல் வேண்டிக் கொண்டே நின்றான்.எதிரணியினர் வேகமாகப் பந்தைத் தட்டிக் கொண்டே போய் கோல் அடித்து விட்டனர்.அப்போதான் அவனுக்குப் புரிந்தது. இறைவனிடம் பிரார்த்தன செய்து கொண்டே பந்தைத் தடுக்க முயன்றிருந்தால் தடுத்திருக்கலாம் என்று.

மேலும் படிக்க... Read more...

தாய்-தந்தை உறவைப் பொறுத்தே

>> Sunday, January 14, 2007

தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும்..

பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே, குறிப்பிட்ட குழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால் புதிதாக நடந்த ஆய்வு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தெரிவித்துள்ளது..

அப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி, அன்னியோன்யமாக நடந்து கொண்டால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை பெறுகிறார்கள். பிற்பாடு அவர்கள் சமுதாயத்துடன் இணை;ந்து பழகுவதற்கும், மன நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு.குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான பெற்றோர் எந்த குறையும் வைப்பதில்லை.

ஆனால் தங்களுக்கிடையே ஏற்படு;ம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளுக்காக ஆவேசமாக மோதிக் கொள்கிறார்கள். குழந்தைகள் கண் எதிரில் இதுபோல நடந்து கொள்வதால், அவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்;. சண்டை- சச்சரவுகளின் போது பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகள் கூட அவர்களை காயப்படுத்தும்.

இத்தகைய சூழ்நிலையை சந்திக்கும் குழந்தைகள் பெற்றோர் மீதான மதிப்பை குறைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். ,இதனால் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து, தங்கள் மனம் போன போக்கிலேயே நடக்கத் தொடங்குவர். தாங்கள் செய்வதுதான் சரி என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பிக்கும். இது கெட்ட சகவாசம், கெட்ட பழக்கங்களுக்கு அடி கோலும்.

தாய்- தந்தை ,இடையிலான வெறுப்பு, முடிவுக்கு வராத கோப- தாபங்கள் ஆகியவை குழந்தைகளைத்தான் பாதிக்கும். சண்டைக்கோழிகள் போல மல்லுக்கு நிற்கும் பெரும்பாலான பெற்றோர், தாங்கள் சண்டை போட்டுக் கொண்டால், அது குழந்தைகளின் மென்மையான உள்ளத்தை காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கிறார்கள்.

குழந்தைகள் வளர்ந்த பிறகுதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறானது. அனைத்து வகையான உணர்வுகளும் குழந்தைப் பருவத்திலேயே முளை விட தொடங்கி விடும். அம்மாவை அப்பா அடிக்கும் போதும் அல்லது ஆவேசமாக திட்டும்போதும், கைக்குழந்தைகள் வீறிட்டு அழுவது ,இதனால்தான். இந்நிலையில் அவர்கள் வளர வளர உணர்வுகளும் வளர்ந்து தெளிவடையும் என்பதால், தாய்- தந்தை ,இடையிலான பிணக்கு, அவர்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். ஒழுக்கமான நெறிகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் வழி தவறிச் செல்வதற்கு இதுதான் காரணம். இதனால் பெற்றோர்களே!!! உங்களுக்கு இடையில் தகராறு- சண்டை சச்சரவு இருந்தால் தாரளமாக வெளிப்படுத்தலாம். ஆனால் குழந்தைகள் அங்கே இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்.

மேலும் படிக்க... Read more...

புகை பிடித்தால் நாய் கடிக்காது

புகை பிடித்தால் நாய் கடிக்காது .

மதுரையிலிருந்து ஒருத்தர் குதிரை வண்டி நெறய சிகரெட்டுகளை ஏத்திக்கிட்டு வந்து அதிரையில் பெட்டிக்கடை வச்சார். ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினால் ஒரு தீப்பெட்டி இலவசங்கற ஆஃபரோட கடை நடத்தினார். பெரும்பாலான கடைகளில் அமுல் டப்பாக்குள்ள சிம்னி விளக்கும் பற்றவைக்க கட் பண்ணிய சிகரெட் அட்டைகளுமோ அல்லது நீண்ட கயிற்றின் நுனியில் கொள்ளி வைத்தோ இருந்ததால், அந்த ஆஃபர் யாரையும் கவரவில்லை.

மதுரைக்காரர் என்னென்னமோ செஞ்சு பார்த்தார் யாரும் சிகரெட் வாங்குவதா இல்லை. தன் வியாபார யுக்தியை மாற்றி மறுநாள் விளம்பரம் செய்தார். கூட்டம் அலை மோதியது விளம்பர வாசகம் இதுதான்:

1) இந்த சிகரெட் பிடிப்பவரை நாய் கடிக்காது.
2) இந்த சிகரெட் பிடிப்பவர் இருக்கும் வீட்டிற்கு திருடன் வரமாட்டான்.
3) இந்த சிகரெட் பிடிப்பவருக்கு பெண் குழந்தையே பிறக்காது.
4) இந்த சிகரெட் பிடிப்பவருக்கு முதுமையே வராது.

அவ்வளவுதான் போங்க. வியாபாரம் வெளுத்து வாங்கியது. மதுரைக்காரருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கல்லா பெட்டி நிரம்பி வழிந்தது. இவ்வாறாக மதுரைக்காரரின் சிகரெட் வியாபாரம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.

இதை பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்த, கொஞ்சம் விபரம் அறிந்த ஒருத்தர் மெதுவாக மதுரைக்காரரின் வாயைக் கிளறினார்.

அதிரைக்காரர்: என்ன மதுரைக்காரரே. இப்படி பொய் சொல்லி எங்க ஊரு மக்களை ஏமாற்றலாமா?

மதுரைக்காரர்: என்ன தம்பீ இப்டி சொல்லிப்புட்டிய. நான் உண்மையத்தானே சொல்லி விக்கிறேன்.

அதிரைக்காரர்: உங்க சிகரெட் பிடிப்பவரை நாய் கடிக்காதுங்கறீங்களேஃ

மதுரைக்காரர்: ஆமா. நெசந்தேன். சிகரெட் பிடிச்சா உடல் இளைச்சுடும். நடக்க கஷ்டமா இருக்கும். அதனால கைத்தடி துணையோடுதான் நடக்கனும். கையில கம்பு வச்சிருந்தா நாயி கடிக்காதுதானே?

அதிரைக்காரர்: ஓஹோ. அப்ப திருடன் வரமாட்டாங்கறது பீலாதானே?

மதுரைக்காரர்: நெசமாத்தேன் தம்பி. சிகரெட் அடிச்சா இருமல் வரும். இரவில் தூங்க முடியாது. ஒரே லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருப்பாங்க. திருடன் வரும்போது இருமல் சத்தம் கேட்டா வீட்டுக்காரங்க விழிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு வேற தெருவுக்கு போயிடுவாந்தானே?

அதிரைக்காரர்: (மனதுக்குள்: எமகாதகங்கப்பா இந்த மதுரைக்காரங்க!) ஆமா, பெண் பிள்ளை பிறக்காதுங்கிரீங்களே. அது எப்படி?

மதுரைக்காரர்: என்னா தம்பி ஒன்னும் வெளங்காதப் புள்ளையா இருக்கீங்க. சிகரெட் பிடிச்சா சரியா குடும்பம் நடத்த முடியாது. இவங்களுக்கு இல்லறத்தில் எந்தக் குழந்தையுமே பிறக்காது.

அதிரைக்காரர்: ச்சே உங்களைப் போயி தப்பா நெனெச்சுட்டேன். முதுமை வராதுன்னியலே....

மதுரைக்காரர்: ஆமா தம்பி. சிகரெட் பிடிச்சா இளவயதிலேயே கான்சர் வந்து செத்துடுவாங்க. அப்ப எப்ப்டி முதுமை வரும்?

ஆகவே, மக்களே மதுரையிலிருந்து மட்டுமில்லை எந்த ஊரிலிருந்து வந்து சிகரெட் விற்றாலும் தயவு செய்து புகை பிடிக்காதீர்கள்.

COURTSEY: "ADHIRAI"

மேலும் படிக்க... Read more...

மன்மத பெல்ட் - வயாக்ரா ஏன்? எங்கே தவறு?

மன்மத பெல்ட் - இடுப்பில் கட்டினால் இன்பம் நூறு வகை.

''எப்படியெப்படியெல்லாம் ஏமாத்தி பில் போடுறாங்கய்யா?'' என்று ஒரு படத்தில் புலம்புவார் நடிகர் வடிவேலு.

இப்போது புதிதாக ஒரு வசீகர மோசடிதான் மன்மத பெல்ட். இடுப்பில் இதக் கட்டிக்கொண்டால் இன்பத்துக்குக் குறையே இருக்காது என்று ஏமாந்து ஆயிரக்கணக்கில் அழுதுவிட்டு அசந்து போய் கிடக்கிறார்கள் பலர்.
பாதிக்கப்பட்டவர்கள் என்ன அவ்வளவு லேசில் மூச்சு விடுவார்களா? 'திருடனுக்குத் தேள் கொட்டிய, கதையாக யாரும் இதுபற்றி வாய்திறக்கவே மறுத்தார்கள்.

ஆனால், மன்மத பெல்ட் கும்பல் பற்றி அறிந்து வைத்திருந்த பன்னீர் செல்வம் என்பவர், நம்மிடம் அது பற்றிப் பேச முன்வந்தார். மன்மத பெல்ட் பற்றிக் கேட்டபோ, ''இதை நான் வெளியே சொல்வதன் மூலம் இன்னும் நிறையப்பேர் அந்த மோசடிக் கும்பலிடம் ஏமாறுவது தவிர்க்கப்படுமே'' என்ற பொ அக்கறையோடு பேசத் தொடங்கினார்.

அவர் சொன்ன ஒரு ஃபிளாஸ்ஷ்பேக் இதோ... ''சில மாதங்களுக்கு முன் நானும், வங்கி அதிகாரி ஒருவரும் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். திருமங்கலம் பஸ்ஸ்டாண்டுக்கு கொஞ்சம் தள்ளி, இளநீர் குடிக்கக் நிறுத்தினோம். காரில் இருந்தபடியே நாங்கள் இளநீர் வாங்கிக் குடித்தபோது, அங்கே ரொம்ப டீஸன்டாக உடையணிந்த நான்குபேர் இளநீர் குடிச்சிட்டிருந்தாங்க.
திடீர்னு அவங்க என்னப் பார்த்து, 'சார்! கீழே மூன்று நூறு ரூபாய் நோட்டு விழுந்து கிடக்கிறது. இது உங்களோடதா?' என்றார்கள். 'பணம் என்னுடயது இல்ல' என்றேன். 'அப்ப உங்க பணமா?' என்று பேங்க் அதிகாரியைக் கேட்டனர். அவரும் மறுத்தார்.

உடனே அவர்கள் இளநீர்க்காரரிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து, 'யாராவது வந்து பணத்தைத் தேடினா அவங்ககிட்டே கொடுங்க. இல்லே போலீஸில் கொடுத்திருங்க' என்றனர்.
அந்தச் சத்திய சந்தர்களின் அணுகுமுறை என்னப் பிரமிக்க வத்தது. மெல்ல பேச்சுக் கொடுத்தேன். அவர்கள் தங்களைப் பற்றி அளந்து விட்டார்கள். சந்தடிசாக்கில் என மொபல் நம்பரை வாங்கிக் கொண்டார்கள். 'நாங்க என்ன பிஸினஸ் பண்றோம்னு நீங்க கேட்கவே இல்லயே?' என்று எனக்கு வாய்த்தூண்டில் போட்டார்கள்.

அப்போ அவர்கள் எடுத்துவிட்டதுதான் மன்மத பெல்ட். 'வெளிநாட்டில் இருந்து மூலிகை அடைக்கப்பட்ட மன்மத பெல்டi;ட வாங்கி இங்கே விற்கிறோம். அறுபதுவயக்காரர் ஒருவர், இதக் கட்டிக்கொண்டால் இருபது வயதுக்குரிய இளமை வந்து விடும். அப்புறமென்ன... வகைவகையான இன்பம்தான்!

இந்த மன்மத பெல்ட்டுக்கு ஏகக் கிராக்கி. சப்ளை செய்ய முடியாத அளவுக்கு ஏக டிமாண்ட். வட மாநிலங்களில் எங்கள் மன்மத பெல்டi;டக் கட்டாத அரசியல்வாதிகளை, விரல்விட்டே எண்ணி விடலாம். இதன் விலை இரண்டு லட்சம் தான். இதை விற்றுக் கொடுத்தால் உங்களுக்குக் கூட கணிசமான கமிஸன் தருவோம்!' என்றனர்.
ஆனாலும் மன்மத பெல்டi;ட இவர்கள் பலரிடம் அமோகமாக விற்றிருக்கிறார்கள். இவர்கள் விட்ட புரூடாவை நம்பி பல வி.ஐ.பி.க்கள், அரசு உயரதிகாரிகள் இந்த பெல்டi;ட வாங்கி ஏமாந்திருக்கிறார்கள். பள்ளித் தலைமையாசிரியர் ஒருவர் கூட ஏமாந்தவர் லிஸ்ட்டில் உண்டு.

அந்த பெல்ட்டால், பைசா பிரயோஜனம் இலi;ல என்று பலருக்கு வாங்கிய பிறகுதான் தெரிந்திருக்கிற.து சிலருக்கு முன்பை விட நிலமை மோசமாகப் போய், 'உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா' நிலமை.

மன்மத பெல்ட் எப்படியிருக்கும்? அதைத் தெரிந்து கொள்ள நமக்கும் ஆவல் பீறிட்ட.து அதைப் பார்த்ததாகக் கூறப்படும் புண்ணியாத்மாக்கள் சிலரப் பார்த்து கேள்விகளால் கிண்டினோம். அவர்கள் மூச்சு விடவே மறுத்தார்கள்.

ஒருவர் மட்டும் சலிப்புடன், ''அந்தக் கருமாந்திரத்தை என்ன சொல்ல? அது சாதாரண பெல்ட் போலத்தான் இருக்குமாம். சரியா சொல்லப் போனால், மூன்று அங்குல அகலத்தில், நாற்பத்தந்து அங்குல நீளத்தில் பாம்புபோல கொஞ்சம் தடிமனாக இருக்கும். உள்ளுக்குள் மூலிகை அடைத்திருப்பதாகச் சொல்வார்கள்.

'இதை பயபக்தியுடன் இடுப்பில் கட்டிக் கொண்டு, இஸ்ட தெய்வத்த வேண்டிக்குங்க. (இது வேறா?) உடனே சுரீர்னு ஒரு சூடு பரவும். அப்ப பெல்ட் வேலை செய்ய ஆரம்பிச்சிட்டுன்னு அர்த்தம்'னு விற்பவங்க சொல்றாங்க. சங்கோஜத்டன் வாங்கிய பலர், சங்கடத்தில் இருக்காங்க. இன்னும் கூட மன்மத பெல்ட்டுக்கு மதுரை பகுதியில் அமோக வரவேற்பு இருக்கு!'' என்றார் அவர்.

மன்மத பெல்ட்டின் விலை இரண்டு லட்ச ரூபாய் என்றாலும், அதிகாரி ஒருவர் இருபத்தந்தாயிரம் ரூபாய்க்கு அதை பேரம் பேசி வாங்கியிருக்கிறார். 'எஃபெக்டப் பார்த்து விட்டு மற்றவங்களுக்கும் சொல்லுங்க!' என்று சொல்லியிருக்கிறார்கள் மன்மத பெல்ட் பார்ட்டிகள். வந்தவரைக்கும் லாபம் என்று வெறும் பத்தாயிரத்க்துகுக் கூட இந்த மன்மத பெல்டட விற்றிருக்கிறார்கள்.

கடன் வாங்கி இந்த பெல்ட்டை வாங்கியிருக்கிறார் விவசாயி ஒருவர். 'உடலுறவுக்கு எத்தனை மணிநேரம் முன் இதை இடுப்பில் கட்ட வேண்டும்? நாம் கட்ட வேண்டுமா அல்லது நம் பார்ட்னருக்குக் கட்டி விடலாமா? அதிக நேரம் கட்டியிருந்தால் ஆபத்தில்லயே?' என்று அப்பாவித்தனமாக அவர்களிடம் கேள்விகளைக் கேட்டிருக்கிறார். 'பதினந்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, அவரது தலையில் பெல்டi;டக் கட்டியிருக்கிறது ஃபிராடு கும்பல்.

இந்த ஃபிராடு கும்பல் மதுரையில் தங்கியிருந்து, வாடரக கார்மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள எட்டுப்பட்டி கிராமங்களிலும் வேடர்டயாடுகிறார்களாம். காரின் டிரவருக்கு டிப்ஸாக மட்டும் ஆயிரம் ரூபாய வெட்டுவதால் அவர், இந்த லட்சியப்பயணம் பற்றி மூச்சே விடுவதில்ல. பெல்ட் வாங்கி ஏமாந்தவர்களும் புகார் தருவதில்ல. இதனால் டி.வி. மெகாசீரியல் போல இந்த மோசடி நீண்டு வருகிறது.

மோசடிக் கும்பலிடம் மன்மத பெல்ட் தவிர, வேறுசில சமாசாரங்களும் உள்ளன. அதில் ஒன்று, காசு கொட்ட வக்கும் அதிசயக் கலசம். 'கோயில் கோபுரங்களில் இடிமின்னல் தாக்காமல் இருக்க கலசங்களில் வரகு தானியம் அடத்து வத்திருப்பார்களே! அந்தக் கலசம் மீது இடி மின்னல் தாக்கினால் வில உயர்ந்த உலோகமாக மாறிவிடும். அணுகுண்டு அளவுக்கு அதற்கு சக்தி வந்து விடும். வெளிநாடுகளில் அந்தக் கலசங்கள் பல கோடி ரூபாய்க்கு விலை போகும். அதை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் கொட்டும்' என்றும் இந்த கும்பல் அளக்கிறது.

ஏமாந்தவர்களின் தலயில் பல லட்சத்க்கு கோயில் கலசத்தக் கட்டிவிட்டு இந்தக் கும்பல் பறந்துவிடும்.
வைர பிஸினஸூம் இந்தக் கும்பலிடம் உண்டு.
'எங்களிடம் உள்ள வைரத்தை ஓர் அறையில் வைத்து லைட்டுகளை அணத்து விட்டால், நைட்லேம்ப் அளவுக்கு அந்த வைரம் பளிச்சிடும்!' என்றும் அந்த மோசடிக் கும்பல் கதையளந்து' போலி வைரங்கள விற்பண்டு.

'கலசம், வைரம் போன்றவற்றை வெளிநாட்டில் விற்க பேங்க்கில் ஒரு முன் தொகை கட்டணும். அதற்குச் சில கோடி செலவாகும். நீங்களும் எங்களோடு சேருங்கள்' என்று கூறி பணம் கறப்பது இந்தக் கும்பலுக்கு கை வந்த கலை...
'நீங்கள் ஐந்து லட்சம் டெபாசிட் செய்தால் போதும். கலசம், வைரம் விற்ற பிறகு ஒரு 'சி' (கோடி) வரர உங்களுக்கு கமிஸன் கிடக்கும்!' என்றும் இந்தக்கும்பல் கரடி விடுவதுண்டு. இவர்களிடம் ஏமாந்த ஒருவர் இப்போது மதுரை டவுன் ஹால் 'ரோட்டில்' ஒன் 'சி' (ஒரு கோடி) வரப்போகுது' எனச் சொல்லியவாறே பத்தியம் பிடித்து அதலகிறாராம். கந்து வட்டிக்குப் பணம் வாங்கி, இந்த மோசடிக் கும்பலிடம் கொடுத்து ஒருவர் ஏமாந்திருக்கிறார்.
KUMUDAM REPORTER
.--------------------------------------
திருமணமான ஒரே ஆண்டில் வயாக்ரா தேடி அலைகின்றோம்! ஏன்? எங்கே தவறு?

காதல் கெமிஸ்ட்ரிக்கு ஊக்கமும் உரமும் அளிப்பவை காய்கறி கனிகள். எனவே 'காதல் கெமிஸ்ட்ரி' வெற்றிபெற முதலில் காய்கறி கனிகளைக் காதலிப்போம்!
காதல் கெமிஸ்ட்ரியில் நம்மைவிட நம முன்னோர்கள் ரொம்ப ரொம்ப அனுபவசாலிகள். வெறும் காய்கறிகீரை கனிகளைச் சாப்பிட்டே உடம்பை 'கல்' போல் பராமரித்தவர்கள் காதல்_கெமிஸ்ட்ரியிலும் வல்லுநர்களாகவே இருந்துள்ளனர்.

குப்பக்கீரைகளையும் அவலையும் உளுந்தையும் சாப்பிட்டே 27 குழந்தகளைப் பெற்றதாக சான்று பகர்கின்றன. ஆனால் இன்றோ...? திருமணமான ஒரே ஆண்டில் வயாக்ரா தேடி அலைகின்றோம்! ஏன்? எங்கே தவறு?

இன்றயை தலமுறயினரிடயே ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய்விட்ட உணவு வகை காய்கறி கீரைகனிகள்.

'காதல் கெமிஸ்ட்ரியின் அரிச்சுவடி முருங்கக்கீரையில் மட்டுமில்லீங்க! முருங்கப்பூ முருங்கைக்காய் முருங்கைப்பிசின் ஆகியவற்றிலும் உள்ளது.
வாரம் 2 நாள் முருங்கைப்பிஞ்சு துவரம்பருப்பு பூண்டு சீரகம் வெந்தயம் மிளகு வெங்காயம் சேர்த்துப் பொரியல் செய்து விதை காய் முழுதும் சக்கையாக மென்று சாறை விழுங்கி சககையத் துப்பி விடவும்.

அதேபோல் முருங்கப்பூவை சேகரித்;து தினசரி 1 ஸ்பூன் எடுத்து இரவு படுக்கும்போது பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம். இதனால் விந்தணுக்கள் பெருகி மகப்பேறு வாய்க்கும்.
முற்றிய முருங்கை மரத்தின் படi;டயில் பிசின் தோன்றும். அதைச் சேகரித்துப் பொடி செய்து 4 ஸ்பூன் எடுத்துப் பாலில் சேர்த்துப் பருக இல்லற சுகம் நிலக்கும் நீடிக்கும்.
இறுதியாக ஓர் எச்சரிக்கை! 50 வயக்கு மேல் முருங்கைக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். காரணம் முருங்கைக்காய் முருஙi;கக்கீரை வாய்வு கோளாறுகளை சிலசமயம் உண்டாக்கும். அதனைத் தாங்கும் சக்தி 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இல்லாமயால ;நெஞ்சு எரிச்சல் வயிறு புரட்டல் உண்டாகக்கூடும். எனவே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் முருங்கைக்காய் முருங்கைக் கீரையத் தவிர்ப்பது நல்ல.து

இல்லற இன்பம் நீடிக்க, தினசரி வெங்காயப் பச்சடியை மோரில் கலந்து பகல் உணவில் சேர்க்கலாம்.
வாழைப்பழம் விந்துவை பெருக்கி மூலத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. வாழைப்பழம் குளிர்ச்சியான பழம். உடம்பு உஸ்ணம் இருப்பவர்கள் தினமும் இரவில் படுக்க போகும் முன்பு வாழைப் பழம் ஒன்று சாப்பிடுவது மிகுந்த நன்மையை தரும்.

புதுமண தம்பதிகள்- ஒன்றுக்கும் மேற்பட்ட வாழைப்பழம் சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடம்பும் சூடேறாமல் இருக்கும்..

மேலும் பதிவுகளுக்கு
VANJOOR

மேலும் படிக்க... Read more...

குள்ள குதிரைகள்?...குட்டிக் குதிரைகளை பார்த்திருப்பீர்கள். அதென்ன குள்ள குதிரைகள்?...

குட்டிக் குதிரைகளை பார்த்திருப்பீர்கள். அதென்ன குள்ள குதிரைகள்?...

குதிரைகள் சராசரியாக 6 அடி உயரம் (தோள்பட்டையளவு) வரை வளரும். நல்ல கலப்பினக் குதிரைகள் 7 முதல் 7 1/2 அடி உயரம் இருப்பதுண்டு. ஆனால் இந்தக் குள்ளக் குதிரைகளோ இரண்டு அடி உயரமே இருக்கின்றன.

மேற்கத்திய நாடுகள் பலவற்றில் இந்தக் குள்ளக் குதிரைகளை இன விருத்தி செய்கின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த 60 ஆண்டுகளாக குள்ளக் குதிரைகள் இனவிருத்தி செய்யப்படுகிறது.

முதன் முதலில் ஆராய்ச்சிக்காகத்தான் இந்த குள்ளக் குதிரைகளை உருவாக்கினார்கள்;. ஆனால் காலப்போக்கில் இந்தக் குதிரைகளை வைத்து பந்தயங்களை நடத்த ஆரம்பித்து விட்டார்கள்;.

அண்மைக் காலமாக குள்ளக் குதிரைகளை பார்வையற்றோருக்கு உதவும் வகையில் பயிற்சி யளித்து அவற்றை விற்பனை செய்கிறார்கள்.

சரி, இந்த குள்ளக்குதிரைகள் எப்படி உதவு கின்றன?

பார்வையற்றவர்களை கடை வீதிக்கு அழைத்துச் செல்லும். கடைகளில் வாங்கிய சிறு அளவிலான பொருட்களை சுமந்து செல்லும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது பார்வையற்றவர் காலிங் பெல்லை அழுத்துவதற்கும் இந்தக் குள்ளக் குதிரைகள் கால்களால் கதவுகளைத் தட்டிவிடும். இது போன்ற மொத்தம் 23 கட்டளைகளை திறம்பட ஏற்றுச் செய்யும்.

2000-ல் ஜெனிவா (SWITZERLAND )விலிருந்து பாரிஸ் வழியாக ட்ரெயினில் லண்டனுக்கு பயணித்த பொழுது வழியில் ஆங்காங்கே இந்த குள்ள குதிரைகளை மந்தை மந்தையாக‌ கண்டு நானும் எனது குடும்பத்தினரும் மகிழ்ந்து வியந்தோம். --வாஞ்ஜூர்
----------------------------------
முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது குர்ஆன் திரிப்புத் திரைப்படம் மூலமாக.
-------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

மேலும் படிக்க... Read more...

''அடடே! நீங்களா.... சொல்லுங்க சொல்லுங்க...

>> Saturday, January 13, 2007

படித்ததுசுகபோகியாய் வாழும் ஒரு கோடீஸ்வரர் ஞானியிடம் கேட்டார்.''மது மாது மாடமாளிக என சுகத்திலேயே வாழ்ந்கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் ஆனந்தம் எனக்குத் தேவையா? அதற்குக் கஷ்டப்பட்டு தியானம் செய்ய வேண்டுமா? தேவையேயில்லயே!'' என அலட்சியமாய்ப் பேசினார்.

''நான் சொல்லும் ஆனந்தம் உனக்குத்தான் நிச்சயம் தேவை'' என்றார் ஞானி உறுதியான குரலில். ''ஏன்!'' என ஆச்சரியமாய்க் கேட்ட கோடீஸ்வரரிடம்''நீ ஒரு பிச்சக்காரன்'' என்றார் ஞானி.பதிலின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அந்தக் கோடீஸ்வரர் ''என்ன? நான் பிச்சக்காரனா!'' எனக் கேட்டார்.

ஞானி''ஆம். சுகத்தை நீ அனுபவிக்க மதுவிடமும் மாதுவிடமும் பிச்சயெடுக்க வேண்டியிருக்கும். இவையில்லாமல் உன்னால் ஆனந்தமாயிருக்க முடியுமா? சொல்லப்பா...'' எனக் கேட்டதற்கு''முடியாது'' என அவர் தலயசத்தார்.பிச்சக்காரராய் வாழும் கோடீஸ்வரர் நிஜ கோடீஸ்வரராய் மாற முடிவெடுத்தார்.
-------------------
குருவிடம் வந்தான் ஒருவன்.''குருவே வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது'' என்றான்.''ஏன்?'' என்று கேட்டார் குரு.''எங்கும் சண்ட சச்சரவு. மனதில் நிம்மதி இல்ல. சந்தோஷமில்ல. உற்சாகமில்ல. என்ன செய்வது?''குரு அவன ஒரு மாட்டுக் கொட்டடிக்கு அழத்துச் சென்றார். அங்கே ஒரேதுர்நாற்றம். அவன் மூக்கைப் பிடித்துக்கொண்டான்.

''குருவே இந்த இடத்த விட்டு சீக்கிரம் கிளம்பவேண்டும் நாறுகிறது'' என்றான்.அவர்கள் சற்று தொலவு வந்தார்கள். அங்கே அவன் மேல் வாசனத் திரவியங்களப் பூசினார் குரு.''வா இப்போ மாட்டுக் கொட்டகைக்குப் போகலாம்'' என்று மீண்டும் அழத்துச் சென்றார்.''இப்போ நாற்றம் தெரிகிறதா?'' என்று கேட்டார்.அவனுக்குத் தெரியவில்ல. அவன் பூசியிருந்த வாசனத் திரவியங்களால் அந்த இடமே மணமாயிருந்தது.''சந்தோஷமும் உற்சாகமும் இப்படித்தான். நம்மிடம் இல்லயென்றால் மற்றவர்களிடமும் இருக்கா.து

''நீதி: நாம் மாறவில்லயென்றால் சூழ்நிலகள் மாறாது.
--------------------
ட்ரிங்... ட்ரிங்...'''அடடே! நீங்களா.... சொல்லுங்க சொல்லுங்க... நம்மகிட்ட சொல்லிட்டீங்க, கவலயை விடுங்க. ஜமாய்ச்சிடலாம். மூக்கு மேல் விரல் வைக்கிற மாதிரி பிரமாதமா பண்ணிடுவோம்...''எனத் தொலைபேசியை வத்த மறு வினாடி, ''சரியான சாவுகிராக்கி, ஏற்கெனவே தலைக்கு மேல ஆயிரம் வேலையிருக்கு, இதுல இது வேற...''இப்படி மற்றவரிடம் உங்களின் கஷ்டத்தை மறைத்து... நீங்கள் விரும்பாததற்குக் கூட தலையாட்டுபவரா நீங்கள்?

விருப்பமில்லா வேலகள இழுத்துப்போட்டுக் கொண்டு செய்தால்... அந்த நிமிடம் அடுத்தவருக்கு சொர்க்கம், உங்களுக்கு நரகம்.உங்களால் இயலாத காரியததை 'இயலாது' என இதயம் திறந்து மற்றவருக்குத் தெரிவிப்பது புத்திசாலிக்கு அழகு.அல்ல, எடுத்துக் கொண்ட வேலையில் விருப்பத்தை அரும்பச் செய்து... உங்களின் புத்தி, சக்தி அனைத்தையும் பிரயோகித்து அச்செயல அருமையாய்ச் செய்வது அழகு. அப்படிச் செய்வதே ஒரு தியானம்தான்.--------------------------------
நோயற்ற நிலை ஆரோக்கியம் அல்ல. ஆரோக்கியம் என்பது, உங்கள் உயிரையும் உணர்வையும் ஜிகுஜிகுவென உற்சாகத்திலிருக்கச் செய்யும் ரம்யமான உணர்வு.என்றைக்கு உங்கள் உடலிலிருந் இந்த ரம்யமான உணர்வு மறைய ஆரம்பித்ததோ, அன்றே ஆரோக்கியம் பறந்து விட்ட.துஆனந்தத்தை அள்ளித்தரும் எந்தச் செயலைச் செய்தாலும்... நன்றாய்ச் செய்யுங்கள்... அது ஆரோக்கியத்தை உங்கள் உடல் நோக்கி ஈர்க்கும் நுட்பம்.
-------------------------------
எது நல்லது எனத் தெரியாமல்; ஞானிகளின் நன்னெறிகளை ஒருவர் கடைப்பிடிக்க ஆரம்பிப்பது, தன் கழுத்தை தானே நெரிப்பதற்கு சமம்.காரணம்... உங்களுக்கு ''இது நல்லது?'' எனத் தோன்றும் சிறு வட்டத்திற்குள்ளிருந்து மட்டுமே ; ஞானிகளின் நன்னெறிகளை கடைப்பிடிப்பீர்கள். இது தொடர்ந்தால் பித்தனாகத்தான் மாற வேண்டும். ஞானி ஆக முடியாது.எது நல்லது? என எல்லாக் கோணத்திலும் ஆராயுங்கள்... விரியும் பதில்களச் சேகரித்தால் வரும் தெளிவு மட்டுமே ஆனந்த வாழ்வு தரவல்லது.
-----------------------------------
நீதி: பிள்ளகள் நல்லவர்களாயிருக்க பெற்றோர்கள்தான் வழிகாட்டி.

கண்காட்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. பெரியவர்களுக்கு ஐந்து ரூபாயாகவும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மூன்று ரூபாயாகவும் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தன் மகனுடன் ஒருவர் வந்தார். அவர் மகன் ஒல்லியாக, பார்க்க மிகச் சிறியவனாகத் தெரிந்தான்.''இரண்டு பெரியவங்க, டிக்கெட் கொடுங்க?'' என்று, பத்து ரூபாய் தாளை நீட்டினார்.''பையனுக்கு பத்து வயசாயிடுச்சா? பார்த்தா சின்னப் பையனா இருக்கிறானே!'' என்றார், நுழவுச் சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தவர்.''பார்ப்பதற்குத்தான் அப்படித் தெரிகிறான். ஆனால் பத்து வயதாகிவிட்டது'' என்றார், தந்தை.''நீங்கள் சொல்லாவிட்டால் எனக்குத் தெரிந்திருக்கா. மூன்று ரூபாய் டிக்கெட்டிலேயே அவனை உள்ளே அழத்துச் சென்றிருக்கலாம்''.''உங்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால், என் மகனுக்கு நான் இரண்டு ரூபாய் காசுக்காகப் பொய் சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும். இந்த இரண்டு ரூபாய் பொய், அவனை வேறு வழியில் திருப்பி விடும்'' என்றார் தந்தை..
=================
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக, ஈமெயில் முகவரி கேட்டார்கள்.'ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே' என்றான் துடைக்க வந்தவன். 'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!' என்று அவனை அனுப்பி விட்டார்கள்.வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க, 'ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...?' என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.'அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைதது;க் கொண்டிருப்பேன்' என்றார் வியாபாரி
====================

அந்த ஊரையே இரண்டு பணக்காரர்கள் கலக்கிக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். அநியாய வட்டிக்குப் பணம் கொடுத் வஞ்சனை பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வைத்துததான் ஊரில் சட்டம். மக்களும் அவர்களுக்கு பயந்து நடந்து கொண்டிருந்தார்கள். அந்த இருவருக்கும் எப்போதும் எல்லா விஷயங்களிலும் போட்டி.ஒருநாள் இருவருக்குள்ளும் ஒரு வாக்குவாதம். யார் மரணமடந்தால் அஞ்சலி செலுத்த நிறைய கூட்டம் வரும் என்று. அதற்காக ஒரு திட்டம் போட்டார்கள். இருவருமே இறந்து விட்டதாக ஒரு பொய்ச் செய்தி பரப்பி அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் அந்தத் திட்டம். திடீரென்று ஒரு நாள் காலை அவர்கள் இறந்து விட்டார்கள் என்று செய்தி பரவியது.இரண்டு பணக்காரர்களும், எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்க்க வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள்.கூட்டம் சேர்ந்தது. அஞ்சலி செலுத்த அல்ல. கடைவீதிகளில் அவர்கள் இறப்பை சந்தோஷமாக கொண்டாட மக்கள் கூடினர். இதைக் கண்ட பணக்காரர்களுக்கு அதிர்ச்சி. அவர்களுடய பணப் பெருமை அன்றோடு முடிவுக்கு வந்தது.
===================

அலுவலக லைபரரியில், பெண்கள் இதழை புரட்டிக் கொண்டிருந்தபோது, சட்டென அப்துலுக்கு 'யோசனை' மின்னியது.பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து, தன்னம்பிக்கையில்லாமல் இருக்கும் மனைவிக்கு, இந்த இதழ்களையெல்லாம். வாங்கிபோட்டால் படித்து 'உலகம்'புரிந்து கொள்வாளே?வாங்கிக் கொண்டு போனான்.''ஆமினா... இதெல்லாம் பெண்களுக்காக வரும் பத்திரிக்கைகள். இதையெல்லாம் நல்லாபடி! சொசைட்டியில, எப்படி இருக்கணுமுன்னு தெரிஞ்சுக்கலாம்..!''நாட்கள் ஓடின.மழைக்கால மாலiநேரத்தில், ஆமினாள் கேட்டாள்.''என்னங்க 'பஜ்ஜி' செய், தரட்டுமா?''''தாயேன்..'' என்றான்.''அப்போ, கிச்சனுக்கு வந்து வாழக்காய், வெங்காயம் இதையெல்லாம் நறுக்கித்தாங்க...''அப்துல் 'அறிவு கண்ணை' திறந்தான்.''ஆணும் பெண்ணும் சமம்தானே? ரெண்டு பேரும் வேலயை பிரிச்சுப்போம். புத்தகத்துல இப்படித்தான் போட்டிருக்கு'' என்றாள்.அப்துலுக்கு 'பூமராங்' தாக்குதல் புரிந்தது.
----------------
திருமணமான பெண்களுக்கு திருமதி. திருமணமான ஆண்களுக்கு? திருதிரு..
----------------------
ஒருநாள் என்னுடய பேத்தி பானுவை, அவள் ஆசைப்பட்டதால் எனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன். இரண்டாம் வகுப்பு படிப்பவள் அவள். நான் அசிஸ்டண்ட் டைரக்டர்.வழக்கம் போலவே பிஸியாக டைட் ஷெட்யூல் இருந்தது. பானு எதிரில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதியம் வீட்டில் நுழைந்ததும், உடைமாற்றிக் களைப்போடு சோபாவில் அமர்ந்தேன். பானுவைக் கேட்டேன்.''என்ன பானு... ஆபீஸ் பாத்தியா? நன்னாவுக்கு எவ்வளோ வேலை... டென்ஷன் பார்த்தியா? வீட்டிலே உன் நன்னி ரொம்ப வேலைன்னு அலுத்துக்கிறாங்களே... நான் கஷ்டப்படறதை நன்னிகிட்டே சொல்லு.''''என்ன நன்னா கஷ்டப்படறே நீ? ஜில்லுன்னு ஏ.சி.யிலே உட்கார்ந்திருக்கே... போன் பேசறே... கையெழுத்து போடறே... வர்றவங்ககிட்டே பேசறே... லிப்ஃட்லே போய்ப் போய் வர்றே! இது கஷ்டமான வேலயா? நன்னி எவ்வளோ கஷ்டப்படறாங்க. வீட்டைப் பெருக்கறாங்க... சமையல் செய்யறாங்க... பாத்திரம் கழுவுறாங்க... துணி துவைக்கறாங்க... கடைக்குப் போய் வர்றாங்க... என்ன, தம்பியை குளிப்பாட்டறங்க... இவ்வளவா நீ கஷ்டப்படறே? சொல்லு?''அதிர்நதுபோனேன். அடுத்த நாளிலிருந்து... பானு கூறியதை நினைக்க நினைக்க... அலுவலக வேலையெல்லாம் மிகச் சுலபமாக இருந்தது எனக்கு.

மேலும் படிக்க... Read more...

ஆங்கிலத்தில் சுவராஸ்யமாக கடி ( தம் )

ஆங்கிலத்தில் சுவராஸ்யமாக கடி ( தம் )
These are some of the extracts of leave applications given to different organisation. Pls go through.

1. An employee applied for leave as follows:Since I have to go to my village to sell my land along with my wife, please sanction me one-week leave.
(நான் என்னுடைய கிராமத்துக்கு சென்று நிலத்துடன் என்னுடைய மனைவியையும் விற்க இருப்பதால்....)

2. From an employee who was performing the "mudi irakkum" ceremony of his year son:"as I want to shave my son's head, please leave me for two days.."
(என்னுடைய மகனுக்கு நான் மொட்டை அடிக்கவேண்டியிருப்பதால்..., என்னை இரண்டு நாள் விடுவிக்கவும்.)

3. Leave-letter from an employee who was performing his daughter's wedding: "as I am marrying my daughter, please grant a week's leave.."
(நான் என்னுடைய மகளை திருமணம் செய்வதால்....)

4. Letter toAdministration dept:"As my mother-in-law has expired and I am only one responsible for it, please grant me 10 days leave."
(...நான் தான் குற்றவாளி....)

5. Another employee applied for half day leave as follows:"Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not return, please grant me half day casual leave"
(நான் இடுகாட்டுக்கு 10 மணிக்கு செல்லயிருக்கிறேன், திரும்ப வராமல் போகலாம்....)

6. An incident of a leave letter"I am suffering from fever, please declare one day holiday.
"நான் ஜுரத்தில் வாடுவதால், ஒருநாள் விடுமுறை அறிவிக்கவேண்டும்.

7. A leave letter to the headmaster:"As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"
நான் இந்த பள்ளியில் படிப்பதால். எனக்கு தலைவலி. ....

8. Another leave letter written to the headmaster:"As my headache is paining, please grant me leave for the day."...
தலைவலி வலிப்பதால்...

9. Covering note:"I am enclosed herewith...
"'நான் இத்துடன் உள்ளடக்கப்பட்டு இருக்கிறேன்'

10. Another one:"Dear Sir: with reference to the above, please refer to my below...
"'அன்புள்ள ஐயா மேற்குறிப்பிட்டவைகளுக்கு என்னுடைய அடியில்...............'

11. Actual letter written for application of leave:"My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".....
நான் என் மனைவிக்கு ஒரே கணவன் ஆகையால்...

12. Letter writing: -"I am in well here and hope you are also in the same well." நான் இங்கே நலம் (WELL) நீயும் அதே கிணற்றில் (WELL) இருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன்.

13. A candidate's job application:"This has reference to your advertisement calling for a ' Typist and an Accountant - Male or Female'... As I am both(!! )for the past several years and I can handle both with good experience, I am applying for the post."
(...நான் ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பதால்...)

மேலும் படிக்க... Read more...

நிதானம். தந்திரம். அறிவுக்கு விளம்பரம்.

அறிவுக்கு விளம்பரம்.

மனிதன் வெறுப்பு கொள்வது அதிசயமல்ல. அவன் எதையாவது வெறுத்துதான் தீர வேண்டும்
.
கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான்.

விழுவது இயற்கை; எழுவதே வாழ்க்கை.

நடுக்கடலில் கப்பல் மாலுமிக்குத்தான் சொந்தம்.

அடுத்த வீட்டுக்காரனுடன் நட்பாயிரு. அதற்காக இடையில் உள்ள சுவற்றை எடுத்துவிடாதே.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.

பிறர் தவறுகளில் இருந்து கற்பவன் புத்திசாலி.பள்ளியில் போய் முட்டுவதால் படிப்பு வருவதில்லை.முடியுமானால் பிறரைவிட அறிவாளியாய் இரு. ஆனால் அவர்களிடம் மட்டும் கூறாதே.

தோல்வி என்பது அடுத்த செயலுக்கான எச்சரிக்கை.அவதூறை அடக்குவதற்கு அதை அலட்சியம் செய்வதே நல்லது.

பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.வயதில் இளைஞனாக அறிவில் முதியவனாய் இரு.எதை நீ இழந்தாலும் உனக்கு எதிர்காலம் இருக்கிறது.தற்பெருமை மடமையின் மிகத் தெளிவான அடையாளம்.
======================
நான் ஏன் இரண்டும்கெட்டானாய் வாழ்கிறேன்?

சிலநேரம் வாழ விரும்புகிறேன், சிலநேரம் வாழ்வையே வெறுக்கிறேன் ஏன்?இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.எது? ஆசைகள்.ஆசைகளா? ஆம்.ஆசைகள் நிறவேறும்போது, வாழ்க்கையில் விருப்பங்கொள்வீர்கள்.அவை நிறவேறாதபோது, வெறுப்புக் கொள்வீர்கள்.

==========================
1.ஒருபோதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்ய மாட்டான்.
2.எல்லா விசயங்களிலும் நல்ல அம்சத்தைக் காண முயலவேண்டும்.
3.ரோஜா செடியிலே முள் இருப்பதை நினைத்து வருத்தப்படாதே, முள் செடியில் மலர் இருக்கிறதே என்று சந்தோசப்படு.
4.உண்மையான செல்வம் பணமன்று; குணம்.
5.செல்வமும் சரி, சாமர்த்தியமும் சரி, முறையாக உபயோகித்தால்தான் பெருமை தரும்.
6.வாழ்க்கையில் மிக முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம் எப்படி வாழ்வது என்பதே.
7.கற்பது கடினம், கற்றதை மறப்பது அதைவிட கடினம்.
8 கொள்கையில் நம்பிக்கை வேண்டியதுதான். ஆனால், அது குருட்டுத்தனமாய் இருக்கக் கூடாது.
9.பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகமாகி தங்கி விடாமல் பார்த்துக் கொள்.
10.யாராவது குறை கூறி னால், அது உண்மையாய் இருப்பின் திருந்தி விடு; பொய்யானால் நகைத்துவிடு.
11.உண்மை ஒரு தீவத்தி, அருகில் செல்ல பயந்து, கண்களைச் சிமிட்டிக் கொண்டே அதை கடந்து செல்கிறோம்.
12.உண்மை மனிதனுக்குச் சொந்தம், பிழை அவனுடைய காலத்துக்கு சொந்தம்.
13.எதை நாம் அறியவில்லையோ, அது நம்முடைய தவறு.
14.உன் கடமையைச் செய்ய முற்படு. அப்போதே உன் தகுதியை அறிந்து கொள்வாய்
15.முட்டாள் எல்லா விசயத்திற்கும் சிரிப்பான்.
16.வறுமையினால் பெரிய துன்பமுமில்லை; செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை
17.எதிரியின் கர்வத்தை மாற்ற, நாம் பயன்படுத்தக் கூடிய மருந்து அன்பு ஒன்று தான்.
18.தன்னம்பிக்கை ஒன்று-தான் மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மருந்து.
19.முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு. ஆனால், அதை அவர்களி டம் கூறாதே.
20.ஏளனம் என்பது கீழ்மக்கள் உள்ளத்தில் எழுகிற நச்சுப் புகை.
===================
தந்திரம்.

21.உண்மையை மறுப்பதற்கோ, பொய்மையை நிலைநாட்டுவதற்கோ தந்திரம் செய்வது. இது தடை செய்யப்பட்டதாகும்.
22.உண்மையை நிலைநாட்டுவதற்கோ, பொய்மையை அழிப்பதற்கோ தந்திரம் செய்வது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
23.வெறுக்கப்பட்ட செயலில் இருந்து தப்பிப்பதற்காக தந்திரம் செய்வது. இதுவும் அனுமதிக்கப்பட்டதாகும்.
24.விரும்பத் தகுந்த செயலைக் கைவிடுவதற்காக தந்திரம் செய்வது. இது வெறுக்கப்பட்டதாகும.
=============================
நிதானம்

வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் நாம் பல விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயப்படுவது கோழைத்தனம்.
புத்திசாலிகள் பிரச்சினைகளை எதிர்கால வாய்ப்பாக மாற்றி கொள்கிறார்கள்.பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என மண்டையை போட்டு புரட்டிக் கொண்டிருப்பதைவிட புதிதாக என்ன செய்யலாம் என்று சிந்திப்பது புதிய வாய்ப்பை உருவாக்கி கொள்ள வசதியாக இருக்கும்.
ஒவ்வொரு வழியிலும் பிரச்சினைகளை சமாளிக்க புதிய வழிகளை கண்டுபிடிப்பது இன்றைய உலகில் மிகவும் அவசியம் ஆகிறது.
முதலில் செய்ய வேண்டியது என்ன? அவை முக்கியத்துவம் வாய்ந்ததா? அதே நேரத்தில் அது அவசியமானதா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிலர் எப்போதும் எதிலும் அவசரம் காட்டுவார்கள். ஆனால் அவர்கள் முக்கியமான வேலையை மறந்து விடுவார்கள். ஒவ்வொரு பிரச்சினையையும் வரிசையாக சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். திட்டமிட்டு எந்த ஒரு வேலையையும் செய்தால்தான் அதில் வெற்றி பெற முடியும். எதையும் அவசரப்பட்டு செய்யக் கூடாது. நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

உணர்ச்சி வசப்படுகிறவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சிறிய விஷயங்களில்கூட நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்துவது, மரியாதையுடன் நடந்து கொள்வது போன்றவை நமக்கு மற்றவர்களிடம் நல்ல மதிப்பை தரும்

. நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது நிச்சயம் கவனம் தேவை. நல்ல நண்பர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் சந்திக்கும் அனைவரையும் நண்பர்களாக தேர்ந்தெடுக்க கூடாது. விரோதி என்று தெரிந்த பின்னர் அவருடன் எந்த உறவும் வைத்துக் கொள்ள கூடாது.

எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டோம் எனில் அதை எளிய முறையில் முடித்துவிட முடியும்.நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ வேண்டும்.வாழ்க்கையை தெரிந்து கொண்டவர்கள் மிக மிகக் குறைவு.பிரச்சினைகள் - சிக்கல்கள் - தடைகள் - தோல்விகள் வரும்போது மனம் தளர்வடைகிறது. தடுமாறுகிறது. அந்த நேரத்தில் ஏன் இப்படி ஆனது? இனி செய்ய வேண்டியது என்ன? என்பதை ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து செயல்பட்டால் நம் பிரச்சினை சூரிய ஒளிப்பட்ட பனித்துளிபோல் கரைந்து போகும்.

ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சாதனைத்திறன், தலைமைப்பண்பு போன்ற குணங்கள் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

மேலும் படிக்க... Read more...

மெட்ராஸ்_ஐ வந்தால்

‘"மெட்ராஸ்ஐ என்பது ஓர் தொற்று நோய். கண்ஜெங்ட்டிவ்வட் டிஷ்யூவில், அதாவது கருவிழியைச் சுற்றியுள்ள வெள்ளைப் படலத்தின் மீது மெல்லியதாக படிந்திருக்கும் (கண்ணுக்குத் தெரியாத) நுண்ணிய பகுதியில் வைரஸ் கிருமிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால்தான் கண்கள் சிவக்கின்றன. கண் அரிப்பு ஏற்பட்டு, எரிச்சல் உருவாகிறது கண்ணில் அழுக்கு வந்துசேருகிறது.

மெட்ராஸ்_ஐக்கு ஏன் அப்படி ஒரு பெயர் வந்தது என்பதே சுவாரஸ்யமான விஷயம். எழும்பூர் கண் மருத்துவமன 150 ஆண்டு காலப் பழம வாய்ந்த. உலகத்திலேயே இரண்டாவது கண் மருத்துவமன சென்னயில்தான் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட எழும்பூர் கண் மருத்துவமணையில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, அடினோ என்கிற வைரஸ் கிருமிகளால்தான் இந்தக் கண் நோய் வருகிறது என்று கண்டுபிடித்தார்கள். அதனாலேதான் இந்த நோய்க்கு மெட்ராஸ்_ஐ என்று பெயர் வைத்தார்கள்.

பொதுவாக, தட்பவெப்ப நிலை மாறும்போது, இந்த நோய் அதிகம் வரும். உதாரணமாக, மழைக் காலத்தின் ஆரம்பத்தில் அல்லது முடிவில் மெட்ராஸ்_ஐ நிறைய பேருக்கு வரலாம். அல்லது வெயில் காலத்தில் (வெயில் காலம் மாம்பழ சீஸன் என்பதால் ஈக்கள் மூலம் இந்த நோய் எளிதாகப் பரவும்) பலருக்கும் வரலாம்.

ஆனால் இப்போது சுற்றுச்சூழல் மிகுந்த அளவில் மாசுபடுவதால் வருஷம் பூராவும் யாரோ ஒருவருக்கு மெட்ராஸ்_ஐ சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது.

அடினோ கிருமிகள் தண்ணீர் மூலம் வெகுவேகமாகப் பரவும். இந்தக் கிருமியால் காற்றின் மூலம் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது என்றாலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மிக அருகில் சென்றால் அவர்கள் தும்மும்போது, அவர்களுடய மூக்கிலிருந்து புறப்படும் வைரஸ் கிருமி காற்றின் மூலம் நம்மையும் வந்து தாக்க வாய்ப்புண்டு.

மெட்ராஸ்_ஐ வந்தவர்களப் பார்த்தாலே நமக்கும் அந்த நோய் வந்விடாது. மெட்ராஸ்_ஐ வந்தவர்களுடய கண்ணத் தொட்டு, அதே கையால் உங்கள் கண்ணையும் நேரடியாகத் தொட்டால் நிச்சயம் மெட்ராஸ்_ஐ வரும்.

அல்லது மெட்ராஸ்_ஐ வந்தவர்கள் பயன்படுத்திய கர்ச்சீப், தலயணை போன்ற பொருட்களை நாமும் பயன்படுத்தினால் நமக்கும் அந்த நோய் வரும்.

ஏர்கண்டிஷன் ரூமில், லிப்ட்டில், காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் இந்தக் கிருமிகள் வேகமாகப் பரவும்.

மெட்ராஸ்_ஐ வந்தவர்கள் யாராக இருந்தாலும், ஒரு மூன்று நாளைக்கு எங்கும் போகாமல், வீட்டில் தனியாக இருப்பது நல்லது.

மெட்ராஸ்_ஐ வந்தால் கண்ணில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதனால் கண் வீக்கம், எரிச்சல் போன்ற வேறு சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, மெட்ராஸ்_ஐ வந்தால் மெடிக்கல் ஷாப்பில் ஏதாவது ஒரு மருந்தை நீங்களே வாங்கிப் போடாமல், ஒரு நல்ல கண் டாக்டரை அணுகி, மருத்துவம் செய்துகொள்ளுங்கள்.

மெட்ராஸ் ஐ வந்தால், கண்ணுக்குள் ஒரு சொட்டு எலுமிச்சை சாறுவிட்டால், கொஞ்ச நேரம் எரிச்சல் இருந்தாலும் உடனே மெட்ராஸ் ஐ போய்விடும். தாய்ப்பால் ஒன்றிரண்டு சொட்டு விட்டாலும் குணமாகிவிடும் என்று வைத்தியம் சொல்கிறார்களே... செய்து பார்க்கலாமா?’’

தாய்ப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருக்கிறது. எனவே அதை கண்ணில் விட்டால் நோய் தீரும் என்று நம பெரியவர்கள் சொன்னது ஓரளவுக்கு உண்மதான். ஆனால் இப்போது சக்திவாய்ந்த மருந்துகள் வந்துவிட்டதால், கண்ணில் தாய்ப்பால் ஊற்ற வேண்டிய அவசியம் இல்ல.

இதே போல எலுமிச்சம் பழச்சாறு ஒரு சொட்டு கண்ணில் ஊற்றினால், அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் அங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் நோய் குறைய வாய்ப்புண்டு.

ஆனால், இப்படிச் செய்வதன் மூலம் கண்கள் வீங்கிவிடும். மெட்ராஸ்_ஐ குறைவதற்குப் பதிலாக கண் பார்வை போய்விடும் அளவுக்கு பல பிரச்னகள் வந்து சேர்ந்துவிடும்.

இப்படி செய்வதற்குப் பதிலாக, சுடுதண்ணீரால் மூன்று முறை கண்ணைக் கழுவினால் போதும். சோப்பு போட்டும் கழுவலாம்’’

மேலும் படிக்க... Read more...

அசட்டுத் தத்துவங்கள்

அசட்டுத் தத்துவங்கள்

என்ஜீனியரிங் காலேஜ்லே படிச்சா நீங்க என்ஜீனியர் ஆக முடியும். ஆனா பிரெசிடென்சி காலேஜ்லே படிச்சா பிரெசிடென்ட் ஆக முடியாது.

பஸ் ஸ்டாப்புலே நின்னா பஸ் வரும்.ஆனால்புல்ஸ்டாப்புலே நின்னா புல் வருமா?ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் நினைச்சா மெக்கானிக் ஆக முடியும். ஆனால் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியரால்சாப்ட்வேர்ஆகமுடியாது.

கீ போர்டுலே கீயைப்பார்க்க முடியும்.ஆனால் மதர்போர்டுலே மதரைப் பார்க்கமுடியாது.

நீங்க படிச்சு எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம். ஆனால் டெத் சர்டிபிகேட்டைமட்டும்வாங்க முடியாது.
----------------
அரசியல்வாதிகளின் பொய்

ஒரு தடவை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானது. கிராமத்து ஆள் ஒருவர் இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அடக்கம் செய்தார். சில நாட்கள் கழித்துவிபத்துகுறித்து விசாரிக்க வந்த காவல் துறையினர், கிராமத்து ஆளை கண்டுபிடித்து கேள்விகள் கேட்டனர்.‘இறந்து விட்டார்கள் என்பதை உறுதிபடுத்திவிட்டுதான் அவர்களை புதைத்தாயா?’‘இல்லை. நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்று சிலர் கூறினார்கள். ஆனால்நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரியுமே! எப்போதும் பொய் சொல்பவர்கள்தானே என்று அவர்களையும் சேர்த்து புதைத்துவிட்டேன்’
------------
அப்ப வேலை இல்லையா..?

“அப்பா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை”“
அப்ப நீங்க படிச்சா வேலை இல்லையா..?”
------------
மணப்பெண்ணின் உடை

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லேகவுன் போட்டுருக்கு?''

வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு''

அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'
-----------------'
வேலிக்கு மேலே தலநீட்டும் என் கிளகள வெட்டும் தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நீளும் என் வேர்கள நீ என்ன செய்வாய்?
--------------------------
'மேல் நாட்டு நாகரீகம் இந்தியாவில் ஊடுருவக் கூடாது என்று சொல்லும் பாஜகவின் பெண் முதல்வர் வசுந்தரா ராஜே பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜும்தாரை கட்டி அணைத்துஉதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்துள்ளார். ஆணோ பெண்ணோ பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்வது தவறு
'(காங்கிரஸ் எம்எல்ஏ காயத்ரி தேவி)

மேலும் படிக்க... Read more...

மருத்துவ உலகின் ராணி கற்றாழை

நோய்கள விரட்ட உதவும் பல மருந்துகளுடன் சேர்க்கப் பயன்படும் மூலிகை, கற்றாழைக்கு குறிப்பிட்ட இடமுண்டு. நம் ஊரில் சாதாரணமாக முள் வேலிகளில் வளர்ந் வரும் கற்றாழகளின் அளப்பரிய மருத்துவ குணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் :

கற்றாழை உலகம் பூராவும் 17ம் நூற்றாண்டு முதல் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.சோற்றுக் கற்றாழயின் மருத்துவ குணங்களப் பற்றிச் சிலவற்றைத் தெரிந்கொண்டு, எளிய முறையில் பயன்படுத்தினால் பல நன்மைகளப் பெறலாம்.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தீராத வயிற்றுப் புண்களுக்கு... சிறுநீர் குழாய்களிலும், பிறப்பு உறுப்புக்களிலுமுள்ள நோய்களை சோற்றுக் கற்றாழை நன்கு செயல்பட்டு முழுமையாக நிவர்த்தி செய்யும். வயிற்றின் சூட்டைத் தணிக்கும். வாய்வுத் தொல்லைகளை நீக்கும். நீடித்த மலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது. கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழையை அரைக்கிலோ எடுத்துக்கொண்டு, இதில் விளக்கெண்ணெய் ஒரு கிலோவும், பனங்கற்கண்டு அரைக்கிலோவும், வெள்ளை வெங்காயச் சாறு கால்கிலோவும் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வைதது அடுப்பில் சிறு தீயாக எரிக்க வேண்டும். சாறுகள் சுண்டியபின் இந்த நெயi;ய எடுதது;வதை;துக் கொண்டு, நோயாளிகள் ஒரு தேக்கரண்டி வீதம், காலை, மாலை சாப்பிட்டு வந்தால், தீராத வயிற்று வலியும், வயிற்றுப் புண்ணும், சூன்மக் கட்டிகளும் நிவர்த்தியாகும்.
செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.

இந்த மருந்து பால்வினை நோய்களில் ஒன்றான கனோரியா நோயை முழுமையாகக் குணமாக்கிவிடும். கனோரியாவை நீக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கயானது. வெட்டை நோய்கள் குணமாக....கனோரியா நோயினால் ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, நிறம் மாறிய சிறுநீர் வெளியேறுதல். இந்திரிய ஒழுக்கு, அரையாப்பு, ஜனன உறுப்பில் உள்ளுக்கும், வெளியிலும் புண் ஏற்பட்ட நிலை, சீழ் பிடித்தல், வெள்ளை வெடi;ட நோய்கள் ஆகியன பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.

சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்து, இதில் சிறிது படிக்காரத்தூளைத் தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும். இதில் வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத் தூள் சேர்தது; சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம், மேக நோயால் ஏற்பட்ட வெட்ட நோய் நீங்கிவிடும்.கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை ஒரு கப் சேகரம் செயது; கொண்டு, இதில் சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கிச் சேர்தது; விளக்கெண்ணெய் 300 கிராம், பனங்கற்கண்டு 300 கிராம் இவை யாவையும் ஒன்று சேர்த்து, அடுப்பில் வைதது; சிறு தீயாக லேகிய பதம் வரும் வரை எரிதது; எடுத்துக்கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான வயிற்று வலியும், வயிற்றுப் புண்களும் குணமாகும்.சிறுநீர் எளிதில் வெளியேற....கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத் துண்டுகள நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும். மடல் துண்டுகள் ஐந்து தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை, காலையில் ஒருவேள சாப்பிட வேண்டும். மூன்று நாள் உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்று விடும். இதே முறையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கழுவிச் சுத்தம் செய்த கற்றாழைத் துண்டு ஒரு கப் எடுததுக் கொண்டு, இதில் சின்ன வெங்காயம் சுட்டுப்பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்குக் குதறயாமல் சேர்த்துக் கொண்டு, இதத கற்றாதழச் சோற்றில் கலந்து, கடுக்காய் பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து, எல்லாவற்தறயும் ஒன்றாக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடி வத்தால், கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும். இந்தத் தண்ணீதர வடிகட்டிச் சாப்பிட்டால் அதர மணி நேரத்தில் சிறுநீர்க்கட்டு நீங்கிவிடும். தாராளமாக சிறுநீர் வெளியேறிவிடும்.

புண்கள் ஆற....கழுவி எடுத்த கற்றாதழச்சோறு 25 - 50 கிராம் பசும் பாலில் கலந்து காதல, மாதல சாப்பிட்டு வந்தால் பத்து தினங்களில் மூலச் சூடு தணியும். சொறி, அரிப்பு நீங்கும். விந்து உற்பத்தி அதிகரிக்கும். பால்விதன நோயான சொருக்கு நோய் வந்தவர்களின் ஆண் உறுப்பில் புண்கள் உண்டாகும். இதனால் வீக்கமும், புண்ணும் இருக்கும். கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும்போது இப்படிச் செய்து கொள்ளலாம். இவ்வாறு சில தினங்கள் கட்டி வந்தால், புண்கள் ஆறிவிடும். வீக்கம் வடிந்விடும்.

பெண்களின் வெள்ளை நோய் குணமாக....பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டியளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரவு கூரைமேல் வைத்து எடுத்தால், மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ள நோய் குணமாகும்.

தாம்பத்திய உறவு மேம்பட....சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்க்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.கூந்தல் வளர....சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.கண்களில் அடிபட்டால்....கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். குளிர்ச்சி தரும் குளியலுக்கு....மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

அழகு சாதனப் பொருளில் கற்றாழை முக்கியப் பொருளாகச் சேர்த்து தயாரிக்கப்படும் ஜெல் சருமத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. சருமத்தின் ஈரப் பசையப் பாகாக்கிற.து சரும நோய்களுக்குச் சிறந்த மருந்தாகிறது. கற்றாழை மடல் சாறு பயன்படுத்தப்படுவதால், சூரிய வெப்பமாக்குதல் குறைகிறது. எக்ஸ்ரே கதிர் வீச்சின் கடுமையத் தடுத்து பாகாப்பு அளிக்கிற.து மொத்தத்தில் மருத்துவ உலகின் ராணியாக கற்றாழை வலம் வருகிற.து

மேலும் படிக்க... Read more...

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில்...

கேள்வி: அன்று காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில் என்ற பச்சை குத்தப்பட்ட பெயர்; இன்றோ அய்யா சிலையை உடைத்த காலிகள் உடலில் `கருப்புச் சட்டை’. இது எதைக் காட்டுகிறது?

பதில்: ஆர்.எஸ்எஸ் பார்ப்பன புத்தி மோசடியைக் காட்டுகிறது!

கேள்வி: பத்து வயது, பன்னிரெண்டு வயது மாணவர்கள்கூட கொலையாளிகளாக ஆவது எப்படி?

பதில்: சின்னத் திரை, பெரிய திரையின் அலங்கோல, ஆபாச அருவருக்கத் தக்க காட்சிகளின் தூண்டுதலான வக்கிரச் செயல்கள்!

கேள்வி: வறுமை தாண்டவமாடும் நாட்டில் கோயில் உண்டியலில் கோடி கோடியாக பணம் நிரம்புவது எப்படி? பதில்: அதனால்தான் வறுமை! பணத்தில் மட்டுமல்ல; புத்தியிலும் தான்! வறுமையை ஒழிக்க இயலாத வளமை! - viduthalai.
=======================
காந்தியாரை ஒரு MUSLIM கொன்று விட்டான் என்ற ஒரு தவறான விஷம பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டார்கள்

தமிழர் தலைவர் தர்க்கரீதியான பேச்சு

சிறீரங்கம் டிச. 20- பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் முன் புத்தியில்லை. சிறீரங்கநாதரிடம் மனு கொடுக்காமல் ஏன் ராமனிடம் கொடுத்தீர்கள்? ஏன் உச்சநீதி மன்றத்திற்கு ஓடி மனு போட்டீர்கள். உங்களுக்கு கொஞ்சம்கூட புத்தி இல்லையே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவார்ந்த முறையிலே கேள்வி எழுப்பி விளக்கவுரையாற்றினார்.
காந்தியார் கொல்லப்பட்டார். நாதுராம் வினாயக் கோட்சே என்ற மராத்திய பார்ப்பனன் காந்தியாரைச் சுட்டுக் கொன்றான். என்ன நடந்தது? மிகப் பெரிய விஷம பிரச்சாரத்தை அன்றைக்குத் தொடங்கினார்கள். 1948 ஜனவரி 3010ஆம் தேதி காந்தியார் கொல்லப்பட்ட சம்பவ செய்தி வெளியே வருகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே திரளுகிறார்கள். அந்த நேரத்திலே சொல்லுகின்றார்கள். காந்தியாரை ஒரு MUSLIM கொன்று விட்-டான் என்ற ஒரு தவறான விஷம பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டார்கள். காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் R.S.S.காரன். அவன் கையிலே ISLAMIYAR என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தான். அதுமட்டுமல்ல இசுலாமியர்களின்மீது பழிபோட சுன்னத் செய்திருந்தான் அவன். பிறகுதான் தந்தை பெரியார் அவர்-ள் வானொலி மூலமாக மக்களுக்கு தெளிவு படுத்தினார். காந்தியை சுட்டுக் கொன்றவன் இசுலாமியர் அல்ல. தயவு செய்து எங்கேயும் மதக் கலவரங்கள் வரக்கூடாது என்று சொன்னார்.

அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஓமந்தூரார் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை அழைத்து வானொலியில் பேச வைத்ததன் மூலமாக மக்களிடத்திலே மதக் கலவரம் ஏற்படாமல் தடுத்தார். அந்த காலத்திலே எங்களுடைய தலைவர்களை வானொலி அழைக்காது. பெரியார்தான் அமைதி காக்கவேண்-டும் என்று மக்களுக்கு வேண்-டுகோள் விடுத்தார். காந்தியாரை சுட்டது யார் என்று உறுதியாக இன்னும் தெரியாத நிலையில் நீங்கள் பதற்றப்படக்கூடாது' என்று சொன்னார்.

இசுலாமியர்கள் வாழக்கூடிய வாணியம்பாடியிலே ஈரோட்டிலே கலவரம் நடந்தபோது மதக் கலவரங்களில் ஈடுபடக் கூடாது. மக்கள் ஒவ்வொரு வரும் கைகோத்து வாழவேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார். அதற்குப் பிறகு காந்தியாரைச் சுட்டுக்கொன்றது கோட்சே என்ற மராத்திய பார்ப்பனன் என்ற தகவல் வெளியானது. தந்தை பெரியார் அவர்கள் எழுதினார்கள் துப்பாக்கிப் பிடித்த கைக்குப் பின்னாலே என்ன சதி என்பதைத்தான் பார்க்கவேண்டுமே தவிர வன்முறை கூடாது. எந்த பார்ப்பனர்க்கும் யாரும் தீங்கு செய்துவிடக் கூடாது என்று தந்தை பெரியார் அவர்கள் வேண்டுகோள் விடுத்து அமைதி காத்தார்.
இந்த பொறுப்புணர்ச்சி வேறு எந்த தலைவருக்காவது உண்டா? வேறு இயக்கத்திற்கு உண்டா? அதே பொறுப்புணர்ச்சி இன்றைக்கும் பெரியாருடைய தொண்டர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது (பலத்த கைதட்டல்).

மொரார்ஜி எழுதியிருக்கிறாரே அதன் காரணமாகத்தான் நாங்கள் கட்டுண்டோம் என்ற நிலையிலே இருக்கின்றோம். அன்றைய காலக்கட்டத்திலே உள்துறை அமைச்சராக இருந்தவர் மொரார்ஜி தேசாய் அவர்கள். அவர் தன்னுடைய சுய சரிதையிலே எழுதியிருக்கின்றார். காந்தியார் அவர்கள் சுடப்பட்ட செய்தி கேட்டவுடன் அன்றைய பம்பாய் மாநிலத்தில் பல பகுதிகளில் அக்ரகாரங்கள் சூறையாடப்பட்டன. மராத்திய பார்ப்பனர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை மொரார்ஜி தேசாய் அவர்கள் ஆதாரப்பூர்வமாக எழுதியிருந்தார்கள்.ஆனால் தமிழ்நாட்டிலே அதுபோன்ற கலவரங்கள் நடைபெற்றதா? கிடையாது. எதற்காக இதை சொல்லுகின்றோம். நாங்கள் மனித நேயத்தை மறக்காதவர்கள்.
========================
கொள்ளை அடித்துக் கட்டிய கோவில்கள்

இந்த சிறீரங்கத்தில் புனிதம் கெட்டுவிட்டது புனிதம் கெட்டுவிட்டது என்று சொல்லுகிறார்களே அந்த செய்திக்கு நான் வருகிறேன். மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் "பௌத்தமும் தமிழும்'' என்ற நூலிலே ஒரு செய்தி சொல்லுகின்றார். கி.பி. எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கையாழ்வார் நாகப்பட்டினத்துப் பவுத்த விகார் ஒன்றில்முழுவதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச் சிலையைக் கவர்ந்து கொண்டு போய் அப்பொன்னைக் கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது குருபரம்பரைப் பிரபாவம்' முதலிய வைணவ நூல்களினால் தெரிய வருகிறது'' என்று சொல்லியிருக்கின்றார்திருமங்கை ஆழ்வார் என்பது ஒரு கொள்ளையன் ஆகும். நாகப்பட்டினத்தில் இருந்த பொன் புத்த விகாரத்தை எடுத்துவந்து அதை உருக்கி அந்த பணத்தில் கட்-டப்பட்டதுதான் திருவரங்கத்து கோயில் மதிற் சுவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதை எழுதியவர்கள் யார் நாத்திகர்களா? என்ன இந்த நகரத்தில் புனிதம் கெட்டுவிட்டது இது என்ன இந்து ராஷ்டிரமா? அதைத்தான் நீதிமன்றத்திலே நீதிபதிகள் கேட்டார்கள்.

சிறீரங்கத்தில் பெரியார் சிலையை வைக்கக்கூடாது என்று சொல்லுகின்றாயே அந்த சிறீரங்கம் இந்து மக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்றா? என்று நீதிபதிகள் நீதிமன்றத்திலே கேட்டார்களே. உலகத்திலேயே இந்து நாடு என்ற ஒரேஒரு நாடு தான் இருந்தது. அதுதான் நேப்பாளம். ஆனால்அந்த இந்து நாடும் மாறிவிட்டது. இப்பொழுது அதற்கும் இடம் கிடையாது.நீதிமன்றத்தில் பல செய்திகளை வெளியே கொண்டு வருவோம் நீதிமன்றத்திலே இதுபற்றி வழக்கு வந்தால் பல்வேறு விளக்கங்களை நாங்கள் ஆதாரப்பூர்வமாக அளிக்க இருக்கின்றோம். எனவே இன்னும் வழக்கு இருக்கின்றது என்றெல்லாம் நீங்கள் கனவு காண வேண்டாம்.

சரித்திரத்தில் முழுவதுமாகத் தெரிந்தவர்கள் நாங்கள். இந்த திருவரங்கத்திலே பார்ப்பனர்கள் அல்லாத தமிழர்கள் வசிப்பவர்கள் 65 சதவிகிதம் பேர். நான் யாரையும் புண்படுத்துவதற்காக சங்கடப்படுத்துவதற்காக சொல்லவில்லை. உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லுகின்றேன். இது புனிதமான நகரமா?இதுதான் மிகவும் முக்கிய-மான கேள்வி. சிறீரங்கம் புனிதமான நகரம் என்று கமிட்டிப் போட்டு முடிவு செய்திருக்கி-றீர்களா? இவர்கள்தான் ரொ-பவும் புனிதத்தைக் காக்கக்-கூடியவர்கள். இந்த ஊரில் எல்லோருக்கும் உரிமை உண்டா இல்லையா? நான் ஒரு கணக்கெடுத்து சொல்லுகின்றேன். இந்த ஊரில் கறிக்கடை எத்தனை இருக்கின்றது என்று தெரியுமா? மட்டன் STALL 20 கடைகளுக்கு மேல் இருக்கின்றன.இதைப் பார்த்து யாராவது மனம் புண்படுகிறது என்று சொல்வார்களா? மீன் கடைகள் 12. கோழி வறுவல் செய்கின்ற கடைகள் 9. மாட்டுக் கறி கடைகள் 5. அவரவர்கள் அவரவர்களுக்கு வேண்டிய உணவை வாங்கிச் சாப்பிடுகின்றார்கள். சைவ உணவு சாப்பிடுகின்ற-வர்கள் இவைகளை எல்லாம் வாங்கக் கூடாது என்று சொல்லமுடியுமா?வைஷ்ண சம்பிரதாயத்திலே ஆழமான நம்பிக்கை உள்ளவர்கள் வெங்காயம் சாப்பிட-மாட்டார்கள். வெங்காயத்தைக் கண்டாலே ஒதுக்கிவைத்து விடுவார்கள். புராணத்தினுடைய தாத்திரியம் வெங்காயத்தை குறுக்கே வெட்டினால் அது விஷ்ணுவினுடைய சங்கு சக்கரத்தைப்போல இருக்-கிறதாம். எதற்காக வெங்காயத்தை ஒதுக்குகிறார்களோ அது அவர்களுடைய உரிமை. அது சாப்பிடுபவர்களின் உரிமை. இன்று மாலை பத்திரிகையில் ஒரு செய்தியைப் பார்த்தேன். ராமர் படத்தை எடுத்து ஊர்வலமாக போக முயற்சித்தோம். காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. ராமரை ஒரு மண்டபத்திற்குள் கொண்டு வைத்து அவர்களுடைய கோரிக்கை மனுவை ராமரே உங்களிடத்-திலே வைக்கின்றோம் என்று சொல்லி வைத்துவிட்டார்கள். விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்தவர்களும் மற்றவர்-களும். அப்புறம் ஏன் உச்சநீதி-மன்றத்திற்கு சென்று மனு போடுகின்றீர்கள்? அங்கே என்ன JUSTICE ராமன் இருக்கின்றார்களா? JUSTICE விபீஷணன் இருக்கிறாரா?இந்த ஒன்றைத்தானய்யா அவர்கள் புத்திசாலித்தனமாக செய்திருக்கிறார்கள். ஏன் ராமனிடம் கோரிக்கை மனுவை வைத்தார்கள்? ரெங்கநாதரை எழுப்பிப் பார்த்தார்கள். அவர் எழுந்திருக்கவில்லை. அதனால் மனுவை கொண்டுபோய் ராமரிடம் கொடுத்தார்கள். இந்த செய்தி பத்திரிகையிலே வந்திருக்கிறது. எங்களைப் பார்த்து கேட்கிறார்கள்.

நீங்கள் பெரியார் சிலையை மசூதிக்கு முன்னாலே கொண்டு போய் வைப்பீர்களா? சர்சுக்கு முன்னாலே கொண்டு போய் வைப்பீர்களா? என்று கேட்கிறார்கள். இது ஒரு மடத்தமான கேள்வி. தஞ்சாவூரில் மசூதிக்குப் பக்கத்தில்தான் பெரியார் சிலை இருக்கிறது. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லமுடியும்.
VIDUTHALAI 21.12.06
====================
பாபர் மசூதியை இடித்த வன்முறையாளர்கள் நீங்கள்தானே!

மனம் புண்படுகிறது என்று பேசுகிறீர்களே, நீங்கள் பாபர் மசூதியை இடித்தீர்களே, அப்பொழுது எவ்வளவு பேருடைய மனம் புண்பட்டி-ருக்கிறது தெரியுமா உங்களுக்கு? மனம் புண்படுகிறது என்று பேசினால் என்ன அர்த்தம். மனம் என்பது உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? என்று பார்ப்பனர்களையும், அவர்களது கூலிகளையும் பார்த்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் காட்டமாக சாட்டையடி கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP